ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தயாநிதிக்கு சங்கு ஊதிய, கனிமொழியின் வக்கீல்..

2 posters

Go down

தயாநிதிக்கு சங்கு ஊதிய, கனிமொழியின் வக்கீல்.. Empty தயாநிதிக்கு சங்கு ஊதிய, கனிமொழியின் வக்கீல்..

Post by muthu86 Mon Jul 11, 2011 1:22 am

நெட் டீல் படித்தது .....

புதுடில்லி, இந்தியா: தயாநிதி மாறனின் மத்திய அமைச்சர் பதவி, இன்னமும் சில நாட்கள் நீடித்திருக்கக்கூடும். அப்படி நீடிக்காமல், அவசர அவசரமாக கடந்த வியாழக் கிழமையே ‘மங்களம்’ பாடவேண்டி வந்ததற்கு சில காரணங்கள் உண்டு. அவற்றில் ஒன்று, கனிமொழியில் வக்கீல் எடுத்து வைத்த வாதம் என்று இப்போது தெரியவந்துள்ளது.

சி.பி.ஐ. தனி கோர்ட்டில் ஸ்பெக்ட்ரம் வழக்கு நடந்து வருகின்றது. இதில் கைதான யாருக்குமே ஜாமீன் வழங்கப்படவில்லை. ஆனால், அவர்களுக்கு எதிரான முழுமையான குற்றப் பத்திரிகையும் இன்னமும் தாக்கல் செய்யப்படவில்லை. வெறும் Preliminary அறிக்கை ஒன்றை வைத்தே சி.பி.ஐ. விளையாடிக் கொண்டிருந்தது.

இந்த விஷயத்தை கனிமொழியின் வக்கீல், அடிக்கடி நீதிபதிக்கு சுட்டிக்காட்டிக் கொண்டிருந்தார்.

அப்படியிருந்தும் சி.பி.ஐ. முழுமையான குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்யாத நிலையில், கடந்த 5-ம் தேதி சி.பி.ஐ.யை நீதிபதி சைனி பிலுபிலுவெனப் பிடித்துக் கொண்டார். “குற்றம் சாட்டப்பட்ட 14 பேரும் திகார் சிறையில் அடைக்கப்பட்டு இத்தனை நாட்கள் ஆகியும், ஏன் முழுமையான குற்றப் பத்திரிகையை நீங்கள் தாக்கல் செய்யவில்லை?” என்று கேட்டார் அவர்.

அதற்கு சி.பி.ஐ.யின் வக்கீல், “வேறு சில முக்கிய சம்பவங்களையும் நாம் குற்றப் பத்திரிகையில் இணைக்க வேண்டியுள்ளது. அதற்கான சாட்சியங்கள் தற்போது பதிவு செய்யப்பட்டு வருகின்றன. அதனால்தான் தாமதம்” என்றார்.

இந்தப் பதிலுடன் நீதிபதி திருப்தியடையவில்லை. சி.பி.ஐ.யின் வக்கீலைப் போட்டுக் குடைந்து தள்ளிவிட்டார்.

“நீங்கள் குற்றப் பத்திரிகையைத் தாமதிப்பதைப் பார்த்தால் வேறு உள்நோக்கம் இருப்பது போன்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. கைது செய்யப்பட்டுள்ள 14 பேரையும், தொடர்ந்து சிறையில் வைத்திருக்க வேண்டும் என்பதுதான் உங்களது விருப்பமா? அதற்காகத் தாமதம் செய்யப்படுகின்றதா?”

சமீபகாலமாக ‘டில்லி வாலா’வாகிவிட்ட கனிமொழி

“இல்லை. ஆவணங்கள் முழுமையடையவில்லை. புதிய தகவல்கள் சேர்க்கப்படவுள்ளன”

இந்த இடத்தில் குறுக்கிட்ட கனிமொழியின் வக்கீல், “எனது கட்சிக்காரருக்கு (கனிமொழி) அவரைக் கைது செய்வதற்கு என்ன காரணம் என்று ஆதாரம் காட்டும் சப்போர்ட்டிங் டாக்குமென்ட் ஏதும் வழங்கப்படவில்லை என்று ஞாபகப் படுத்துகிறேன்” என்று, கத்தி செருகினார்.

சி.பி.ஐ. வக்கீலின் பக்கமாகத் திரும்பிய நீதிபதி, “அந்த ஆவணங்கள் எங்கே?” என்றார். “ கைது செய்யப்பட்டவர்கள் பற்றிய ஆவணங்கள் சரியாக இருந்த காரணத்தால் அல்லவா அவர்களை கைது செய்தீர்கள்? அந்த ஆவணங்கள் எங்கே? குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அந்த ஆவணங்களை ஏன் இதுவரை நீங்கள் கொடுக்கவில்லை?”

“அந்த ஆவணங்களை ரிலீஸ் செய்தால், அதிலுள்ள விபரங்களை வைத்து சிலர் உஷாராகி விடுவார்கள் என்ற ப்ரீ-காஷனில்தான் அவை வழங்கப்படவில்லை”

“அந்த ‘சிலர்’ கைது செய்யப்பட்டு சிறையிலுள்ள 14 பேரில் இருக்கிறார்களா?”

இதற்கு பதில் சொல்ல சில விநாடிகள் எடுத்துக்கொண்ட சி.பி.ஐ. வக்கீல், “இல்லை. வெளியே இருக்கிறார்கள். அவர்கள் இன்னமும் கைது செய்யப்படவில்லை” என்றார்.

“அப்படியானால், அவர்கள் மீது ஏன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை?” என்று கேட்டார் நீதிபதி சைனி.

இதற்கு சி.பி.ஐ. வக்கீலிடமிருந்து பதிலில்லை.

சி.பி.ஐ. தனி கோர்ட்டுக்கு வெளியே மீடியாக்களின் துரத்தல்

அதையடுத்து நீதிபதியிடமிருந்து உஷ்ணமான வார்த்தைகள் வந்து விழுந்தன. “இது ஒரு விதிமுறைகளுக்கு உட்பட்ட சட்ட நடைமுறை. குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு சட்டப்படி வழங்கப்படவேண்டிய ஆவணங்கள் வழங்கப்பட வேண்டும். அல்லது அந்த ஆவணங்கள் ரெடியாகும் வரை அவர்களை சிறையில் வைத்திருக்க முடியாது. அதற்கு மேலும் நீங்கள் தாமதம் செய்தால், கோர்ட் கடுமையாக நடந்துகொள்ள வேண்டியிருக்கும். சி.பி.ஐ-க்கு அபராதம் விதிக்க வேண்டி வரும்!” என்றார்.

இதைக் கேட்ட சி.பி.ஐ. தரப்பு, ஆடிப்போனது. நிலைமை சிக்கலாகுவதைப் புரிந்துகொண்டு மறுநாளே புதிய ப்ரீலிமினரி டிராஃப்ட் ஒன்றைத் தாக்கல் செய்தது.

இப்படி, மறு நாள் சி.பி.ஐ.யால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிகையில், ‘வெளியே இருக்கும்’ நபர் ஒருவரின் பெயரும் பிரஸ்தாபிக்கப் பட்டிருந்தது.

அந்தப் பெயர்-

‘மத்திய அமைச்சர்’ தயாநிதி மாறன்!

சி.பி.ஐ.யின் இந்தக் குற்றப் பத்திரிகையில் தயாநிதி மாறனின் பெயர் இணைக்கப்பட்ட பின்னர்தான், தொடர்ந்தும் அவரை அமைச்சர் பதவியில் வைத்திருக்க முடியாத நிலை மத்திய அரசுக்கு ஏற்பட்டது. தயாநிதியின் பதவி பறிபோனது!

கனிமொழியில் வக்கீல் பிரஷர் கொடுக்காமல் இருந்திருந்தால், தயாநிதியின் பெயரை அவசர கதியில் உள்ளே கொண்டுவந்திருக்காது சி.பி.ஐ.! இன்னமும் சில நாட்களுக்காவது தயாநிதியின் அமைச்சர் பதவி நிலைத்திருக்கலாம்.

சரி. கனிமொழியின் வக்கீல் இந்த மூவை ஏன் செய்தார்? பிள்ளையார் பிடிக்கப் போய், குரங்காகிப் போனதா? அல்லது.. அல்லது.. வேண்டுமென்றே தயாநிதியின் பதவிக்கு சங்கு ஊதினாரா?
muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Back to top Go down

தயாநிதிக்கு சங்கு ஊதிய, கனிமொழியின் வக்கீல்.. Empty Re: தயாநிதிக்கு சங்கு ஊதிய, கனிமொழியின் வக்கீல்..

Post by kummachi Mon Jul 11, 2011 9:04 am

இனி உன்னாலே நான் கெட்டேன் என்னால் நீ கெட்டே கதைதான், ஒருத்தருக்கு ஒருத்தர் சங்கு ஊதிக்க வேண்டியதுதான்.


கும்மாச்சி
அன்பே சிவம்
kummachi
kummachi
பண்பாளர்


பதிவுகள் : 156
இணைந்தது : 24/05/2011

Back to top Go down

Back to top

- Similar topics
» ஊழலுக்கெதிரான இந்தியா! கனிமொழிக்கு ஜாமீன் மறுப்பு! தயாநிதிக்கு ஆப்பு!
» ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தயாநிதிக்கு பங்கு என சி.பி.ஐ.
» கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்..
» சி.பி.ஐ.,யிடம் சிவசங்கரன் பரபரப்பு வாக்குமூலம் : தயாநிதிக்கு முற்றுகிறது நெருக்கடி?
» சி.பி.ஐ.,யிடம் சிவசங்கரன் பரபரப்பு வாக்குமூலம் : தயாநிதிக்கு முற்றுகிறது நெருக்கடி?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum