புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எய்தவனிருக்க அம்பை நோவானேன் கலைஞரே!!!!!!! Poll_c10எய்தவனிருக்க அம்பை நோவானேன் கலைஞரே!!!!!!! Poll_m10எய்தவனிருக்க அம்பை நோவானேன் கலைஞரே!!!!!!! Poll_c10 
7 Posts - 64%
heezulia
எய்தவனிருக்க அம்பை நோவானேன் கலைஞரே!!!!!!! Poll_c10எய்தவனிருக்க அம்பை நோவானேன் கலைஞரே!!!!!!! Poll_m10எய்தவனிருக்க அம்பை நோவானேன் கலைஞரே!!!!!!! Poll_c10 
2 Posts - 18%
வேல்முருகன் காசி
எய்தவனிருக்க அம்பை நோவானேன் கலைஞரே!!!!!!! Poll_c10எய்தவனிருக்க அம்பை நோவானேன் கலைஞரே!!!!!!! Poll_m10எய்தவனிருக்க அம்பை நோவானேன் கலைஞரே!!!!!!! Poll_c10 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

எய்தவனிருக்க அம்பை நோவானேன் கலைஞரே!!!!!!!


   
   
spselvam
spselvam
பண்பாளர்

பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Postspselvam Fri Jul 08, 2011 10:28 pm

தனது பேரன் தயாநிதி மாறன் மத்திய அமைச்சரவையில் இருந்து விலகுவதற்குக் காரணம் ஊடகங்கள்தான் என்று நேரிடையாக குற்றஞ்சாற்றியுள்ளார் முன்னாள் முதல்வரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி.

சென்னையில் நேற்று மாலை செய்தியாளர்கள் சந்திப்பின்போது, தயாநிதி மாறன் பதவி விலகல் குறித்து கருத்து கேட்டதற்கு இவ்வாறு கருணாநிதி குற்றஞ்சாற்றியுள்ளார்.

“இன்றைய உலகில், குறிப்பாக இந்தியாவில் ஊடகங்கள் ராஜ்ஜியம்தான் நடக்கிறது. அவர்கள் நினைத்தால் யாரையும் இழிவுபடுத்த முடியும். அதற்கு தயாநிதி மாறன் விதிவிலக்கல்ல” என்று கூறி அருகிலிருந்த ஊடகவியலாளர்களை அழுத்தமாக நோகடித்துள்ளார்.

தனது பேரன் பதவி இழந்ததில் ஏற்பட்ட வலியைக் காட்ட இதழாளர்களை விட்டால் அவருக்கு அருகில் யார் இருக்கிறார்கள்? இதழாளர்கள் மீது கருணாநிதி பாய்வது இது முதல் முறை அல்ல என்பதால் இதழாளர்களும் பெரிதாக அதற்காக வருந்தவில்லை. அவர்களும் புன்னகைத்து விட்டு சென்றுவிட்டனர்.

ஆனால், கருணாநிதி கூறியதை இன்று காலை நாளிதழ்களில் படித்த மக்கள் யாராக இருந்தாலும், அவர்கள் தி.மு.க. தொண்டர்களாக இருந்தாலும், நிச்சயமாக சிரித்திருப்பார்கள். ஏனெனில் தயாநிதி மாறனை எந்த ஊடகமும் இழிவுபடுத்தவில்லை என்பதும், அவர் செய்த அதிகார துஷ்பிரயோகத்திற்கும், அதனால் அவருடைய சகோதரனின் நிறுவனத்திற்கு பெரும் பலன் ஏற்படுத்திக் கொடுத்ததற்காகவுமே அவர் பதவியை இழந்துள்ளார் என்பது செய்திகளை தொடர்ந்து படித்து வரும் சராசரி மக்கள் அறிவர்.

தயாநிதி மாறனின் திருவிளையாடல்கள் பற்றி ஊடகங்களில் செய்திகள் வரத் தொடங்கியது கடந்த 6 வாரங்களாகத்தான். ஆனால் அவரின் திருவினை என்பது 2004 முதல் 2007ஆம் ஆண்டு வரை தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த காலத்தோடு தொடர்புடையதாகும்.

FILE
சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட ஏர்செல் நிறுவனம் 2ஜி அலைபேசி சேவை நடத்தும் தகுதி பெற்றிருந்தும் அதற்கு அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ய மறுத்தது, தனது மலேசிய நண்பரின் நிறுவனத்திற்கு ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை விற்க நிர்பந்தம் கொடுத்து நிறைவேற்றியது, அதன் காரணமாக சந்தை விலையை விட குறைந்த விலைக்கு ஏர்செல் பங்குகளை மாக்சிஸ் நிறுவனத்திற்கு விற்றது, மாக்சிஸ் நிறுவனம் ஏர்செல் நிறுவனத்தை வாங்கிய பிறகு அந்நிறுவனம் முதலில் கேட்ட தொலைத் தொடர்பு வட்டங்களின் எண்ணிக்கைக்கும் அதிகமான வட்டங்களை - விதிமுறைகளுக்கு முரணாக ஒதுக்கீடு செய்து ‘ஊக்குவித்தது’, அதற்கு ஈடாக, மாக்சிஸ் நிறுவனம் கலாநிதி மாறனின் சன் நெட்வொர்க் நிறுவனத்தில் 599 கோடி ரூபாய் முதலீடு செய்தது போன்ற அனைத்தும் அன்றைக்கு ஊடகங்கள் எதற்கும் தெரியாமல் நடந்தேறிவிட்டது. ஆனால் இவை யாவும் கருணாநிதிக்குத் தெரியும், அப்போது அது கருணாநிதிக்கு இழி செயலாகத் தெரியவில்லை. ஏனெனில் வருவாய் வளம் கண்ணை மறைத்தது.

இப்போது கூட இந்தத் திருவிளையாடலை உலகத்தின் பார்வைக்குக் ஊடகங்கள் ஒன்றும் கொண்டு வரவில்லை. 2ஜி அலைக்கற்றை ஊழலின் நாயகன் என்று தன்னை ஊடகங்கள் உட்பட அனைவரும் வர்ணிப்பதை பொருக்க முடியாத தொலைத் தொடர்பு முன்னாள் அமைச்சர் ஆ.இராசா ஒரு உண்மையை கூறினார். “எந்த வழிமுறைகளை பின்பற்றி எனக்கு முன்னால் இருந்த அமைச்சர்கள் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை செய்தார்களோ அதே வழியைத்தான் நானும் கடைபிடித்தேன்” என்று கூறினார். அதுதான் தயாநிதி மாறனுக்கு வினையானது. முதலில் வரும் நிறுவனத்திற்கு முதலில் என்கிற வித்தையை பயன்படுத்தி, தனக்கு வேண்டிய நிறுவனங்களுக்கு அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டது எப்போது இருந்து தொடங்கியது என்று மத்திய புலனாய்வுக் கழகம் நோண்ட ஆரம்பித்தது. இரண்டு அமைச்சர்கள் அதற்கு பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள் ஆனார்கள். ஒருவர் அருண் ஷோரி, மற்றவர் தயாநிதி மாறன்.



இனியொரு விதி செய்வோம்
எய்தவனிருக்க அம்பை நோவானேன் கலைஞரே!!!!!!! Sஎய்தவனிருக்க அம்பை நோவானேன் கலைஞரே!!!!!!! Emptyஎய்தவனிருக்க அம்பை நோவானேன் கலைஞரே!!!!!!! Pஎய்தவனிருக்க அம்பை நோவானேன் கலைஞரே!!!!!!! Emptyஎய்தவனிருக்க அம்பை நோவானேன் கலைஞரே!!!!!!! Sஎய்தவனிருக்க அம்பை நோவானேன் கலைஞரே!!!!!!! Eஎய்தவனிருக்க அம்பை நோவானேன் கலைஞரே!!!!!!! Lஎய்தவனிருக்க அம்பை நோவானேன் கலைஞரே!!!!!!! Vஎய்தவனிருக்க அம்பை நோவானேன் கலைஞரே!!!!!!! Aஎய்தவனிருக்க அம்பை நோவானேன் கலைஞரே!!!!!!! M
spselvam
spselvam
பண்பாளர்

பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Postspselvam Fri Jul 08, 2011 10:29 pm

தனது காலத்தில் எவ்வாறு, எந்தெந்த நிறுவனங்களுக்கு அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டது என்பதை ம.பு.க. அலுவலகத்திற்கு, அப்போது இருந்த தொலைத் தொடர்புச் செயலரையும் அழைத்துக் கொண்டு வந்து முழுமையாக விளக்கிவிட்டு சென்றுவிட்டார் அருண் ஷோரி. ஆனால் தயாநிதி மாறனுக்கு அந்தத் துணிவு இல்லை. எனவே அவர் காலத்தில் நடந்த ஒதுக்கீடுகளை ம.பு.க. நோண்டியது, உண்மையைக் கண்டறிந்தது. அதில்தான் தனது இல்லத்தில் இருந்து சன் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு பல இணைப்புகளை தயாநிதி கொடுத்திருப்பதும், ஏர்செல் நிறுவனத்தை மிரட்டி விற்க வைத்ததும் தெரியவந்தது.

இந்த நிலையில்தான் தயாநிதி மாறனின் ஊழல் விவகாரத்தை ஊடகங்கள் வெளியிட்டன. இதில் ஊடகங்களின் தவறு என்ன இருக்கிறது? ஊழல் செய்தது தயாநிதி, அதற்கான பலன் பதவி இழப்பு என்றால், அதற்கு ஊடகங்களைக் குறைகூறுவது எதற்காக?

தலைவரின் ஆதங்கம் வேறு? அவர் கூறிய வார்த்தைகளை மீண்டும் நினைவுபடுத்துங்கள். “ஊடகங்கள் நினைத்தால்” என்று அவர் கூறுவதற்குக் காரணம், தனது கட்சியினரின் ஊழலை மட்டுமே இந்த ஊடகங்கள் பெரிதுபடுத்துகின்றனவே” என்பது அவருடைய ஆதங்கம். “நாட்டில் யாரும் செய்யாத ஊழலையா நாங்கள் செய்துவிட்டோம், அவர்களையெல்லாம் விட்டுவிடுகிறீர்கள், எங்களை மட்டும் பெரிதாக போடுகிறீர்களே, ஏன்?” என்பது அவருடைய வார்த்தைகளில் தொக்கி நிற்கும் பொருளாகும்.

இதற்கு ஊடகங்கள் என்ன முடியும் தலைவரே? உங்கள் கட்சி ஆட்களை காலி செய்ய முற்படும் மைய சக்திகள் தரும் தகவல்களையல்லவா பெற்று ஊடகங்கள் ‘ஆதாரமாக’ வெளியிட்டு, உங்கள் மானத்தை வாங்குகின்றன. ஆதாரத்தை அள்ளித்தரும் அந்த சக்திகளை நீங்கள் கண்டு கொள்ளாதது ஏன்? நீரா ராடியா உரையாடல்களை பதிவை செய்தது யார்? எந்தத் துறை? வெளியிட்டது யார்? எந்தத் துறை? இதை ஊடகங்களால் இன்று வரை கண்டுபிடிக்க முடியவில்லை. உங்களுக்கும் தெரியாதா தலைவரே?

ஆனால், உங்களுக்கு நெருங்கிய அவர்கள் கசியவிடும் ஆதாரத்தைக் கொண்டு நாட்டு மக்களுக்கு உண்மையை தெரிவிப்பதா குற்றம்? கசியவிட்ட அவர்களையல்லவா நீங்கள் காய வேண்டும்? வெளியில் சொன்ன ஊடகங்களை காய்வது சரியாகுமா? நானும் பத்திரிக்கையாளன்தான் என்று பெருமையோடு மார்தட்டிக்கொள்ளும் உங்களுக்குத் தெரியாதா இந்த உண்மையெல்லாம்?

கேள்வியும் நானே, பதிலும் நானே, ஆண்டியும் நானே, போண்டியும் நானே என்று என்னவெல்லாம் எழுதியிருப்பீர்கள்? அந்த ரேஞ்சுக்கு ஊடகங்கள் வர முடியுமா தலைவரே? ஆதாரங்களை கசியவிட்டு நீங்கள் பன்னாத அரசியலா?

எனவே ஊடகங்கள் வெளியிடும் ஆதாரங்கள் யாவும் உங்களுக்கு நெருக்கமான சக்திகளிடமிருந்துதான் வருகின்றன, அதுவும் நீங்கள் அறிந்ததே! ஆனால் ஊழலுக்கு நீங்கள் உறுதியாக துணை நிற்பதுபோல், உங்களுக்கு ஊடகங்களும் துணை நி்ற்க வேண்டும் என்று எதிர்பார்பார்த்தால் நியாயமா தலைவா? நீங்களே பல முறை பயன்படுத்திய புராண உதாரணத்தை நினைவூட்டுகிறோம்: “எய்தவனிருக்க அம்பை நோவானேன்?”

எய்தவனை அறியாதவரா நீங்கள்? உங்களின் நேரம் இன்றைக்கு சிக்கலாக இருக்கிறது, அதை மறைக்க அம்புகளை நோகின்றீர்கள், இதனை அம்புகளும் புரிந்தே புன்னகைக்கின்றன.

இந்தியாவி்ல ஊடகங்கள் ராஜ்ஜியம் நடக்கிறது என்று வேறு புலம்பியுள்ளீர்கள். உங்களையே நீங்கள் ஒரு கணம் மறந்துவிட்டீர்கள் தலைவரே. தங்களுடைய குடும்பத்தினர்தானே தமிழ்நாட்டில் ஊடக சாம்ராஜ்யத்தையே நடத்தி வருகிறார்களே? என்ன செய்வது அவர்களால் மட்டுமே உங்களை காபாற்றிவிட முடியுமா? மக்களோடு நின்றிருந்தால் மக்கள் காப்பாற்றுவார்கள், நீங்கள் தம்மக்களோடு மட்டுமே நின்றீர்கள், இன்று தவிக்கின்றீர்கள். இதற்கு ஊடகங்களால் என்ன செய்ய முடியும்? உங்கள் நிலையை எண்ணி ஒரு சொட்டு கண்ணீர்தான் விட முடியும்.
நன்றி:தமிழ் வெப்துனியா



இனியொரு விதி செய்வோம்
எய்தவனிருக்க அம்பை நோவானேன் கலைஞரே!!!!!!! Sஎய்தவனிருக்க அம்பை நோவானேன் கலைஞரே!!!!!!! Emptyஎய்தவனிருக்க அம்பை நோவானேன் கலைஞரே!!!!!!! Pஎய்தவனிருக்க அம்பை நோவானேன் கலைஞரே!!!!!!! Emptyஎய்தவனிருக்க அம்பை நோவானேன் கலைஞரே!!!!!!! Sஎய்தவனிருக்க அம்பை நோவானேன் கலைஞரே!!!!!!! Eஎய்தவனிருக்க அம்பை நோவானேன் கலைஞரே!!!!!!! Lஎய்தவனிருக்க அம்பை நோவானேன் கலைஞரே!!!!!!! Vஎய்தவனிருக்க அம்பை நோவானேன் கலைஞரே!!!!!!! Aஎய்தவனிருக்க அம்பை நோவானேன் கலைஞரே!!!!!!! M

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக