ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடைவானம் கூப்பிடுதூரம்

2 posters

Go down

குடைவானம் கூப்பிடுதூரம் Empty குடைவானம் கூப்பிடுதூரம்

Post by kirikasan Thu Jul 07, 2011 10:46 pm

இது ஒரு கவியரங்கத்தில் பங்குபற்ற எழுதிய கவிதை. முழுதாக் இங்கே!

பகுதி1

குடைவானம் கூப்பிடுதூரம்

சக்தி வணக்கம்

வெட்டும் மின்னல் வீசுங் காற்று
வேகும் அண்டச் சூரியனும்
கொட்டும் மழையும் கூடும் இடியும்
கோலம் தந்தாள் சக்தியவள்
தட்டும் புவியுள் முட்டும் போது
தடதட வென்றே நிலமதிர
சுட்டுச்சீறும் செந்தீ மலையின்
சீற்றம் செய்வாள் சக்தியவள்

வண்ணச் சோலை வாசத் தென்றல்
வந்தே கன்னம் வருடிவிட
எண்ணப் பூக்கள் விரியும் வேளை
இசையுங் கவிதை வடிவாக்கி
மண்ணில் என்னை எழுதச் செய்தாள்
மாதோர் சக்தி தாள்போற்றி
விண்ணைக் குடையாய் விரியச் செய்தாள்
வியந்தே நானும் கவிசெய்தேன்

அவைவணக்கம்

மடைகொள் வெள்ளம் திறந்தாற் போலும்
மாகவி சபையில் கவியோடித்
தடைக ளின்றிப் பெருகும்போது
தானும் குவளை நீர்கொண்டே
இடையில் வந்தான் இவனோ கவியென்
றெதையோ எண்ணிக் கரமேந்தி
குடைவான் எட்டித் தொடவே நின்றான்
கூப்பிடு தூரம் ஆகாதோ!

**குடைவானம் கூப்பிடுதூரம்**

காதலிளங் கன்னியவர் கண்ணசைவைக் காட்டிவிடக்
காளையர்க்கு மாமலையும் கடுகாம்!
மாதர்களின் புன்னகையில் மேகமும்வ ளைத்திடுவர்
மின்னலெனப் பாயுஞ்சக்தி வீச்சாம்!
நாதஒலி ஓமெனுமோங் காரயிசை கேட்கும்விரி
வானிடையே காணுமிறை தேவி
யாதுமவ ளானவளின் சக்தியருள் நீபெறவே
வானம்வரும் கூப்பிடுமோர் தூரம்

ஒதுமறை வேதஒலி வானெழுமோர் காலைதனில்
உள்ளமதில் தேவஇசை பாடி
மாதினையோர் பாகனருள் மூடிவிழி நாமும்தொழ
மேன்மையுறும் வாழ்வதனைப் போல
ஏதும்மனந் தான்முயல எட்டுவது கிட்டாதென்
றெண்ணிமனம் சோர்ந்தநிலை மாறி
யாதுமென தாகுமென வீரமனம் கொள்ளுகுடை
வானம்வரும் கூப்பிடவே ஓடி

1. விண்ணில்..
நிலவெழுந்து புவிதழுவும் நேரமதில் ஓரிரவு
நின்றிருந்தேன் வான்விரிப்பின் கீழே
பலதுயரம் பட்டதிலே பால்நிலவின் குளுமைபெறப்
பார்த்திருந்தேன் குவிமணலின் மேலே
உலவிவருந் தென்றல்தொட ஒளிவிழியால் தாரகைகள்
உலகமதைக் கண்சிமிட்டிக் காணும்
அலைகடலின் மீன்களென ஆயிரங்கள் கோடியென
அழகொளிர விண்மீன்கள் தோன்றும்

நேர்தெரியுந் தாரகைகள் நிர்மலவான் வீதியிலே
நிற்கும்விதம் கற்பனையைத் தூண்ட
போரெடுத்துப் பூமிகொள்ளப் பால்தெருவின் வாசிகள்தீப்
பந்தங்களைக் கொண்டதுபோற் கண்டேன்
தேரோட்டி மகன்தீண்டத் தேவி யவள் இடைமணிகள்
திமிறிநிலம் விழுந்தவிதம் போலும்
காரிகையர் ஊர்முழுதுங் கார்த்திகையின் தீபஒளி
ஏற்றியதாய் வானிருக்கக் கண்டேன்

ஒருகணமென் திகிலடையும் உள்ளமதி லோர்நினைவு
உருளுமிந்த புவிமடியில் நின்றே
பெருவிரியும் வானிடையில் புரண்டுருள ஓடுகிறேன்
புவியிழுத்த தாலுலகில் நின்றேன்
கருமையினுட் சுழல்புவியுங் கதியெடுத்த வேகமிடை
காந்தவிசை வலுவிழந்து போனால்
உருண்டகன்ற விண்ணிடையில் உதிருமொரு பூவெனவே
உலகிதைவிட் டுச்சி வானில் வீழ்வேன்

பொதுவிலெந்த பொருளுமின்றி பூமிவெறும் கல்லெனவே
பெரியதொரு வெடிவெடித்துப் போகும்
இதுவுமொரு அதிசயமே இயற்கையதன் தருமகுணம்
எமையிருத்தி உயிர்கொடுத்த தாகும்
புதுமைசிலர் பூமியையே பங்குவைத்து எல்லையிட்டு
பொருளெனவோர் விலைபேசி விற்பர்
இதைவிடப்பே ரரசுகளோ இதுஎமது பூமிஎன்று
எளியவரை இனமழியக் கொல்வர்

முதுமைவரை ஆடுமவர் முடிவுதனில் ஆவதென்ன
மோனஇருள் சூனியத்தில் தூக்கம்
கொதிகுழம்பு சீறுமொரு கோடிஒளிச் சூரியன்கள்
கூட்டமதில் ஆவிகலந் தேகும்
இதுவிருக்க ஒருபுறமாய், உண்மையில்நா மிருப்பதெது
இத்தரையிற் பாதமுள்ள போதும்
பொதுவினி லெம் மீதியுடல் பூமியுடன் வான்வழியே
பெரியதொரு வட்டமிட்டு ஓடும்

கடுகதியில் விரையுமொரு புகையிரதம் உலகமெனில்
காசுகொடா பயணிகளே நாமும்
நடுவழியில் இறங்குமொரு நாள்வரவும் எவரறியா
நழுவுமொரு விதிமுடியும் யாவும்
தொடுவதிவர் பாதம்நிலம், தேகமெதில் வான்வெளியில்
திரிவரிவர் கதிரவனைச் சுற்றி
விடுஒருசந் தேகமிலை விரல்தொடுமிவ் வானமதே
விரிந்ததெனில் கூப்பிடுமோர் தூரம்

உச்சிவானக் குடைவிரித்தும் உள்ளேநீல வண்ணமிட்டு
உண்மையிலே வைத்தவரை அறியேன்
நிச்சயமாம் பூமிதனை நம்முயிர்க்கு வாழ்வளித்து
நித்திரைக்கு தொட்டிலென ஆட்டி
அச்சினிலே தான்சுழன்று ஆடிப்புவி பாயுமொளி
ஆதவனைச் சுற்றிவரச் செய்தார்
உச்சகடு வேகமதில் ஓடுகிறோம் வான்வழியே
உடல்தொடுவான் கூப்பிடுமோர் தூரம்

ஆழவெளி விண்பரவி ஓடுகின்ற சீற்றமுடன்
ஓங்கியெரி வான்சுடர்கள் மோதி
வீழவெடித் தாயிரமாய் வேகமுடன் வான்சிதற
வீதியெங்குந் தூசெனவே மாறும்
வாழுமெங்கள் வையகமும் வண்ணபுயல் தீபறந்து
வந்துடலை வேகவைக்கு மென்றோ
சூழுங்குடை தான்விரித்துச் சுற்றிவளி வட்டமிட்டுச்
சுந்தரவாழ் வீந்தனளோ சக்தி!

பகுதி 2 ல் முடியும்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

குடைவானம் கூப்பிடுதூரம் Empty Re: குடைவானம் கூப்பிடுதூரம்

Post by realvampire Fri Jul 08, 2011 12:46 am

kirikasan wrote:இது ஒரு கவியரங்கத்தில் பங்குபற்ற எழுதிய கவிதை. முழுதாக் இங்கே!

பகுதி1

குடைவானம் கூப்பிடுதூரம்

சக்தி வணக்கம்

வெட்டும் மின்னல் வீசுங் காற்று
வேகும் அண்டச் சூரியனும்
கொட்டும் மழையும் கூடும் இடியும்
கோலம் தந்தாள் சக்தியவள்
தட்டும் புவியுள் முட்டும் போது
தடதட வென்றே நிலமதிர
சுட்டுச்சீறும் செந்தீ மலையின்
சீற்றம் செய்வாள் சக்தியவள்

வண்ணச் சோலை வாசத் தென்றல்
வந்தே கன்னம் வருடிவிட
எண்ணப் பூக்கள் விரியும் வேளை
இசையுங் கவிதை வடிவாக்கி
மண்ணில் என்னை எழுதச் செய்தாள்
மாதோர் சக்தி தாள்போற்றி
விண்ணைக் குடையாய் விரியச் செய்தாள்
வியந்தே நானும் கவிசெய்தேன்

அவைவணக்கம்

மடைகொள் வெள்ளம் திறந்தாற் போலும்
மாகவி சபையில் கவியோடித்
தடைக ளின்றிப் பெருகும்போது
தானும் குவளை நீர்கொண்டே
இடையில் வந்தான் இவனோ கவியென்
றெதையோ எண்ணிக் கரமேந்தி
குடைவான் எட்டித் தொடவே நின்றான்
கூப்பிடு தூரம் ஆகாதோ!

**குடைவானம் கூப்பிடுதூரம்**

காதலிளங் கன்னியவர் கண்ணசைவைக் காட்டிவிடக்
காளையர்க்கு மாமலையும் கடுகாம்!
மாதர்களின் புன்னகையில் மேகமும்வ ளைத்திடுவர்
மின்னலெனப் பாயுஞ்சக்தி வீச்சாம்!
நாதஒலி ஓமெனுமோங் காரயிசை கேட்கும்விரி
வானிடையே காணுமிறை தேவி
யாதுமவ ளானவளின் சக்தியருள் நீபெறவே
வானம்வரும் கூப்பிடுமோர் தூரம்

ஒதுமறை வேதஒலி வானெழுமோர் காலைதனில்
உள்ளமதில் தேவஇசை பாடி
மாதினையோர் பாகனருள் மூடிவிழி நாமும்தொழ
மேன்மையுறும் வாழ்வதனைப் போல
ஏதும்மனந் தான்முயல எட்டுவது கிட்டாதென்
றெண்ணிமனம் சோர்ந்தநிலை மாறி
யாதுமென தாகுமென வீரமனம் கொள்ளுகுடை
வானம்வரும் கூப்பிடவே ஓடி

1. விண்ணில்..
நிலவெழுந்து புவிதழுவும் நேரமதில் ஓரிரவு
நின்றிருந்தேன் வான்விரிப்பின் கீழே
பலதுயரம் பட்டதிலே பால்நிலவின் குளுமைபெறப்
பார்த்திருந்தேன் குவிமணலின் மேலே
உலவிவருந் தென்றல்தொட ஒளிவிழியால் தாரகைகள்
உலகமதைக் கண்சிமிட்டிக் காணும்
அலைகடலின் மீன்களென ஆயிரங்கள் கோடியென
அழகொளிர விண்மீன்கள் தோன்றும்

நேர்தெரியுந் தாரகைகள் நிர்மலவான் வீதியிலே
நிற்கும்விதம் கற்பனையைத் தூண்ட
போரெடுத்துப் பூமிகொள்ளப் பால்தெருவின் வாசிகள்தீப்
பந்தங்களைக் கொண்டதுபோற் கண்டேன்
தேரோட்டி மகன்தீண்டத் தேவி யவள் இடைமணிகள்
திமிறிநிலம் விழுந்தவிதம் போலும்
காரிகையர் ஊர்முழுதுங் கார்த்திகையின் தீபஒளி
ஏற்றியதாய் வானிருக்கக் கண்டேன்

ஒருகணமென் திகிலடையும் உள்ளமதி லோர்நினைவு
உருளுமிந்த புவிமடியில் நின்றே
பெருவிரியும் வானிடையில் புரண்டுருள ஓடுகிறேன்
புவியிழுத்த தாலுலகில் நின்றேன்
கருமையினுட் சுழல்புவியுங் கதியெடுத்த வேகமிடை
காந்தவிசை வலுவிழந்து போனால்
உருண்டகன்ற விண்ணிடையில் உதிருமொரு பூவெனவே
உலகிதைவிட் டுச்சி வானில் வீழ்வேன்

பொதுவிலெந்த பொருளுமின்றி பூமிவெறும் கல்லெனவே
பெரியதொரு வெடிவெடித்துப் போகும்
இதுவுமொரு அதிசயமே இயற்கையதன் தருமகுணம்
எமையிருத்தி உயிர்கொடுத்த தாகும்
புதுமைசிலர் பூமியையே பங்குவைத்து எல்லையிட்டு
பொருளெனவோர் விலைபேசி விற்பர்
இதைவிடப்பே ரரசுகளோ இதுஎமது பூமிஎன்று
எளியவரை இனமழியக் கொல்வர்

முதுமைவரை ஆடுமவர் முடிவுதனில் ஆவதென்ன
மோனஇருள் சூனியத்தில் தூக்கம்
கொதிகுழம்பு சீறுமொரு கோடிஒளிச் சூரியன்கள்
கூட்டமதில் ஆவிகலந் தேகும்
இதுவிருக்க ஒருபுறமாய், உண்மையில்நா மிருப்பதெது
இத்தரையிற் பாதமுள்ள போதும்
பொதுவினி லெம் மீதியுடல் பூமியுடன் வான்வழியே
பெரியதொரு வட்டமிட்டு ஓடும்

கடுகதியில் விரையுமொரு புகையிரதம் உலகமெனில்
காசுகொடா பயணிகளே நாமும்
நடுவழியில் இறங்குமொரு நாள்வரவும் எவரறியா
நழுவுமொரு விதிமுடியும் யாவும்
தொடுவதிவர் பாதம்நிலம், தேகமெதில் வான்வெளியில்
திரிவரிவர் கதிரவனைச் சுற்றி
விடுஒருசந் தேகமிலை விரல்தொடுமிவ் வானமதே
விரிந்ததெனில் கூப்பிடுமோர் தூரம்

உச்சிவானக் குடைவிரித்தும் உள்ளேநீல வண்ணமிட்டு
உண்மையிலே வைத்தவரை அறியேன்
நிச்சயமாம் பூமிதனை நம்முயிர்க்கு வாழ்வளித்து
நித்திரைக்கு தொட்டிலென ஆட்டி
அச்சினிலே தான்சுழன்று ஆடிப்புவி பாயுமொளி
ஆதவனைச் சுற்றிவரச் செய்தார்
உச்சகடு வேகமதில் ஓடுகிறோம் வான்வழியே
உடல்தொடுவான் கூப்பிடுமோர் தூரம்

ஆழவெளி விண்பரவி ஓடுகின்ற சீற்றமுடன்
ஓங்கியெரி வான்சுடர்கள் மோதி
வீழவெடித் தாயிரமாய் வேகமுடன் வான்சிதற
வீதியெங்குந் தூசெனவே மாறும்
வாழுமெங்கள் வையகமும் வண்ணபுயல் தீபறந்து
வந்துடலை வேகவைக்கு மென்றோ
சூழுங்குடை தான்விரித்துச் சுற்றிவளி வட்டமிட்டுச்
சுந்தரவாழ் வீந்தனளோ சக்தி!

பகுதி 2 ல் முடியும்

தலைப்பின் ஆரம்பம் நானா சார்!
realvampire
realvampire
தளபதி

தளபதி

பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011

http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

குடைவானம் கூப்பிடுதூரம் Empty Re: குடைவானம் கூப்பிடுதூரம்

Post by kirikasan Fri Jul 08, 2011 1:58 am

realvampire wrote:
kirikasan wrote:இது ஒரு கவியரங்கத்தில் பங்குபற்ற எழுதிய கவிதை. முழுதாக் இங்கே!

பகுதி1

குடைவானம் கூப்பிடுதூரம்

சக்தி வணக்கம்

வெட்டும் மின்னல் வீசுங் காற்று
வேகும் அண்டச் சூரியனும்
கொட்டும் மழையும் கூடும் இடியும்
கோலம் தந்தாள் சக்தியவள்
தட்டும் புவியுள் முட்டும் போது
தடதட வென்றே நிலமதிர
சுட்டுச்சீறும் செந்தீ மலையின்
சீற்றம் செய்வாள் சக்தியவள்

பகுதி 2 ல் முடியும்

தலைப்பின் ஆரம்பம் நானா சார்!

உங்கள் கேள்வி சரியாக புரிந்து கொண்டேனோ தெரியவில்லை. இருந்தாலும் பதில்
நானும் நாத்திகன்தான். ஏன் இப்போதும் கூட நாத்திகன்தான். ஆனால் எமக்குமேலே ஒரு சக்தி இருக்கிறது இல்லையா? Power. அதன் கூறுகளாகத்தான் நாமுமிருக்கிறோம் அணுவிலிருந்து , எமதுடலின் இழையங்களின் சிறுதுணிக்கையிலிருந்து அண்டம் வரை பிரபஞ்சமெல்லாம்
கருவைச் சுற்றும் துணிக்கைகளாக ஒரே வடிவமாகவே உள்ளன.
(சுருக்கமாக கூறுகிறேன்)
எனவே நாம் அந்த Power ன் குழந்தைகள். அந்த இனம்தெரியாத சக்தியை எந்த உருவமில்லாத சக்தியை ஒரு பெண்ணாக உருவகித்த முன்னோர்களோடு நானும் கருத்தொருமித்து நானும் பெண்ணாக உருவகித்து வணங்குகிறேன். இருகரங்கள் கூப்புவதில்லை. இதயத்தால்மட்டும்.
விவாதிப்பின் மிக நீளும் இது ஒரு சிறுகோடு மட்டுமே!









kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

குடைவானம் கூப்பிடுதூரம் Empty Re: குடைவானம் கூப்பிடுதூரம்

Post by realvampire Fri Jul 08, 2011 2:12 am

கருத்ட்டமைகு நன்றி சார்...
realvampire
realvampire
தளபதி

தளபதி

பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011

http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

குடைவானம் கூப்பிடுதூரம் Empty Re: குடைவானம் கூப்பிடுதூரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum