புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடைவானம் கூப்பிடுதூரம் Poll_c10குடைவானம் கூப்பிடுதூரம் Poll_m10குடைவானம் கூப்பிடுதூரம் Poll_c10 
6 Posts - 46%
heezulia
குடைவானம் கூப்பிடுதூரம் Poll_c10குடைவானம் கூப்பிடுதூரம் Poll_m10குடைவானம் கூப்பிடுதூரம் Poll_c10 
3 Posts - 23%
Dr.S.Soundarapandian
குடைவானம் கூப்பிடுதூரம் Poll_c10குடைவானம் கூப்பிடுதூரம் Poll_m10குடைவானம் கூப்பிடுதூரம் Poll_c10 
2 Posts - 15%
Ammu Swarnalatha
குடைவானம் கூப்பிடுதூரம் Poll_c10குடைவானம் கூப்பிடுதூரம் Poll_m10குடைவானம் கூப்பிடுதூரம் Poll_c10 
1 Post - 8%
T.N.Balasubramanian
குடைவானம் கூப்பிடுதூரம் Poll_c10குடைவானம் கூப்பிடுதூரம் Poll_m10குடைவானம் கூப்பிடுதூரம் Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடைவானம் கூப்பிடுதூரம் Poll_c10குடைவானம் கூப்பிடுதூரம் Poll_m10குடைவானம் கூப்பிடுதூரம் Poll_c10 
372 Posts - 49%
heezulia
குடைவானம் கூப்பிடுதூரம் Poll_c10குடைவானம் கூப்பிடுதூரம் Poll_m10குடைவானம் கூப்பிடுதூரம் Poll_c10 
239 Posts - 32%
Dr.S.Soundarapandian
குடைவானம் கூப்பிடுதூரம் Poll_c10குடைவானம் கூப்பிடுதூரம் Poll_m10குடைவானம் கூப்பிடுதூரம் Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
குடைவானம் கூப்பிடுதூரம் Poll_c10குடைவானம் கூப்பிடுதூரம் Poll_m10குடைவானம் கூப்பிடுதூரம் Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
குடைவானம் கூப்பிடுதூரம் Poll_c10குடைவானம் கூப்பிடுதூரம் Poll_m10குடைவானம் கூப்பிடுதூரம் Poll_c10 
25 Posts - 3%
prajai
குடைவானம் கூப்பிடுதூரம் Poll_c10குடைவானம் கூப்பிடுதூரம் Poll_m10குடைவானம் கூப்பிடுதூரம் Poll_c10 
6 Posts - 1%
sugumaran
குடைவானம் கூப்பிடுதூரம் Poll_c10குடைவானம் கூப்பிடுதூரம் Poll_m10குடைவானம் கூப்பிடுதூரம் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
குடைவானம் கூப்பிடுதூரம் Poll_c10குடைவானம் கூப்பிடுதூரம் Poll_m10குடைவானம் கூப்பிடுதூரம் Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
குடைவானம் கூப்பிடுதூரம் Poll_c10குடைவானம் கூப்பிடுதூரம் Poll_m10குடைவானம் கூப்பிடுதூரம் Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
குடைவானம் கூப்பிடுதூரம் Poll_c10குடைவானம் கூப்பிடுதூரம் Poll_m10குடைவானம் கூப்பிடுதூரம் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடைவானம் கூப்பிடுதூரம்


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Jul 07, 2011 10:46 pm

இது ஒரு கவியரங்கத்தில் பங்குபற்ற எழுதிய கவிதை. முழுதாக் இங்கே!

பகுதி1

குடைவானம் கூப்பிடுதூரம்

சக்தி வணக்கம்

வெட்டும் மின்னல் வீசுங் காற்று
வேகும் அண்டச் சூரியனும்
கொட்டும் மழையும் கூடும் இடியும்
கோலம் தந்தாள் சக்தியவள்
தட்டும் புவியுள் முட்டும் போது
தடதட வென்றே நிலமதிர
சுட்டுச்சீறும் செந்தீ மலையின்
சீற்றம் செய்வாள் சக்தியவள்

வண்ணச் சோலை வாசத் தென்றல்
வந்தே கன்னம் வருடிவிட
எண்ணப் பூக்கள் விரியும் வேளை
இசையுங் கவிதை வடிவாக்கி
மண்ணில் என்னை எழுதச் செய்தாள்
மாதோர் சக்தி தாள்போற்றி
விண்ணைக் குடையாய் விரியச் செய்தாள்
வியந்தே நானும் கவிசெய்தேன்

அவைவணக்கம்

மடைகொள் வெள்ளம் திறந்தாற் போலும்
மாகவி சபையில் கவியோடித்
தடைக ளின்றிப் பெருகும்போது
தானும் குவளை நீர்கொண்டே
இடையில் வந்தான் இவனோ கவியென்
றெதையோ எண்ணிக் கரமேந்தி
குடைவான் எட்டித் தொடவே நின்றான்
கூப்பிடு தூரம் ஆகாதோ!

**குடைவானம் கூப்பிடுதூரம்**

காதலிளங் கன்னியவர் கண்ணசைவைக் காட்டிவிடக்
காளையர்க்கு மாமலையும் கடுகாம்!
மாதர்களின் புன்னகையில் மேகமும்வ ளைத்திடுவர்
மின்னலெனப் பாயுஞ்சக்தி வீச்சாம்!
நாதஒலி ஓமெனுமோங் காரயிசை கேட்கும்விரி
வானிடையே காணுமிறை தேவி
யாதுமவ ளானவளின் சக்தியருள் நீபெறவே
வானம்வரும் கூப்பிடுமோர் தூரம்

ஒதுமறை வேதஒலி வானெழுமோர் காலைதனில்
உள்ளமதில் தேவஇசை பாடி
மாதினையோர் பாகனருள் மூடிவிழி நாமும்தொழ
மேன்மையுறும் வாழ்வதனைப் போல
ஏதும்மனந் தான்முயல எட்டுவது கிட்டாதென்
றெண்ணிமனம் சோர்ந்தநிலை மாறி
யாதுமென தாகுமென வீரமனம் கொள்ளுகுடை
வானம்வரும் கூப்பிடவே ஓடி

1. விண்ணில்..
நிலவெழுந்து புவிதழுவும் நேரமதில் ஓரிரவு
நின்றிருந்தேன் வான்விரிப்பின் கீழே
பலதுயரம் பட்டதிலே பால்நிலவின் குளுமைபெறப்
பார்த்திருந்தேன் குவிமணலின் மேலே
உலவிவருந் தென்றல்தொட ஒளிவிழியால் தாரகைகள்
உலகமதைக் கண்சிமிட்டிக் காணும்
அலைகடலின் மீன்களென ஆயிரங்கள் கோடியென
அழகொளிர விண்மீன்கள் தோன்றும்

நேர்தெரியுந் தாரகைகள் நிர்மலவான் வீதியிலே
நிற்கும்விதம் கற்பனையைத் தூண்ட
போரெடுத்துப் பூமிகொள்ளப் பால்தெருவின் வாசிகள்தீப்
பந்தங்களைக் கொண்டதுபோற் கண்டேன்
தேரோட்டி மகன்தீண்டத் தேவி யவள் இடைமணிகள்
திமிறிநிலம் விழுந்தவிதம் போலும்
காரிகையர் ஊர்முழுதுங் கார்த்திகையின் தீபஒளி
ஏற்றியதாய் வானிருக்கக் கண்டேன்

ஒருகணமென் திகிலடையும் உள்ளமதி லோர்நினைவு
உருளுமிந்த புவிமடியில் நின்றே
பெருவிரியும் வானிடையில் புரண்டுருள ஓடுகிறேன்
புவியிழுத்த தாலுலகில் நின்றேன்
கருமையினுட் சுழல்புவியுங் கதியெடுத்த வேகமிடை
காந்தவிசை வலுவிழந்து போனால்
உருண்டகன்ற விண்ணிடையில் உதிருமொரு பூவெனவே
உலகிதைவிட் டுச்சி வானில் வீழ்வேன்

பொதுவிலெந்த பொருளுமின்றி பூமிவெறும் கல்லெனவே
பெரியதொரு வெடிவெடித்துப் போகும்
இதுவுமொரு அதிசயமே இயற்கையதன் தருமகுணம்
எமையிருத்தி உயிர்கொடுத்த தாகும்
புதுமைசிலர் பூமியையே பங்குவைத்து எல்லையிட்டு
பொருளெனவோர் விலைபேசி விற்பர்
இதைவிடப்பே ரரசுகளோ இதுஎமது பூமிஎன்று
எளியவரை இனமழியக் கொல்வர்

முதுமைவரை ஆடுமவர் முடிவுதனில் ஆவதென்ன
மோனஇருள் சூனியத்தில் தூக்கம்
கொதிகுழம்பு சீறுமொரு கோடிஒளிச் சூரியன்கள்
கூட்டமதில் ஆவிகலந் தேகும்
இதுவிருக்க ஒருபுறமாய், உண்மையில்நா மிருப்பதெது
இத்தரையிற் பாதமுள்ள போதும்
பொதுவினி லெம் மீதியுடல் பூமியுடன் வான்வழியே
பெரியதொரு வட்டமிட்டு ஓடும்

கடுகதியில் விரையுமொரு புகையிரதம் உலகமெனில்
காசுகொடா பயணிகளே நாமும்
நடுவழியில் இறங்குமொரு நாள்வரவும் எவரறியா
நழுவுமொரு விதிமுடியும் யாவும்
தொடுவதிவர் பாதம்நிலம், தேகமெதில் வான்வெளியில்
திரிவரிவர் கதிரவனைச் சுற்றி
விடுஒருசந் தேகமிலை விரல்தொடுமிவ் வானமதே
விரிந்ததெனில் கூப்பிடுமோர் தூரம்

உச்சிவானக் குடைவிரித்தும் உள்ளேநீல வண்ணமிட்டு
உண்மையிலே வைத்தவரை அறியேன்
நிச்சயமாம் பூமிதனை நம்முயிர்க்கு வாழ்வளித்து
நித்திரைக்கு தொட்டிலென ஆட்டி
அச்சினிலே தான்சுழன்று ஆடிப்புவி பாயுமொளி
ஆதவனைச் சுற்றிவரச் செய்தார்
உச்சகடு வேகமதில் ஓடுகிறோம் வான்வழியே
உடல்தொடுவான் கூப்பிடுமோர் தூரம்

ஆழவெளி விண்பரவி ஓடுகின்ற சீற்றமுடன்
ஓங்கியெரி வான்சுடர்கள் மோதி
வீழவெடித் தாயிரமாய் வேகமுடன் வான்சிதற
வீதியெங்குந் தூசெனவே மாறும்
வாழுமெங்கள் வையகமும் வண்ணபுயல் தீபறந்து
வந்துடலை வேகவைக்கு மென்றோ
சூழுங்குடை தான்விரித்துச் சுற்றிவளி வட்டமிட்டுச்
சுந்தரவாழ் வீந்தனளோ சக்தி!

பகுதி 2 ல் முடியும்

realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Fri Jul 08, 2011 12:46 am

kirikasan wrote:இது ஒரு கவியரங்கத்தில் பங்குபற்ற எழுதிய கவிதை. முழுதாக் இங்கே!

பகுதி1

குடைவானம் கூப்பிடுதூரம்

சக்தி வணக்கம்

வெட்டும் மின்னல் வீசுங் காற்று
வேகும் அண்டச் சூரியனும்
கொட்டும் மழையும் கூடும் இடியும்
கோலம் தந்தாள் சக்தியவள்
தட்டும் புவியுள் முட்டும் போது
தடதட வென்றே நிலமதிர
சுட்டுச்சீறும் செந்தீ மலையின்
சீற்றம் செய்வாள் சக்தியவள்

வண்ணச் சோலை வாசத் தென்றல்
வந்தே கன்னம் வருடிவிட
எண்ணப் பூக்கள் விரியும் வேளை
இசையுங் கவிதை வடிவாக்கி
மண்ணில் என்னை எழுதச் செய்தாள்
மாதோர் சக்தி தாள்போற்றி
விண்ணைக் குடையாய் விரியச் செய்தாள்
வியந்தே நானும் கவிசெய்தேன்

அவைவணக்கம்

மடைகொள் வெள்ளம் திறந்தாற் போலும்
மாகவி சபையில் கவியோடித்
தடைக ளின்றிப் பெருகும்போது
தானும் குவளை நீர்கொண்டே
இடையில் வந்தான் இவனோ கவியென்
றெதையோ எண்ணிக் கரமேந்தி
குடைவான் எட்டித் தொடவே நின்றான்
கூப்பிடு தூரம் ஆகாதோ!

**குடைவானம் கூப்பிடுதூரம்**

காதலிளங் கன்னியவர் கண்ணசைவைக் காட்டிவிடக்
காளையர்க்கு மாமலையும் கடுகாம்!
மாதர்களின் புன்னகையில் மேகமும்வ ளைத்திடுவர்
மின்னலெனப் பாயுஞ்சக்தி வீச்சாம்!
நாதஒலி ஓமெனுமோங் காரயிசை கேட்கும்விரி
வானிடையே காணுமிறை தேவி
யாதுமவ ளானவளின் சக்தியருள் நீபெறவே
வானம்வரும் கூப்பிடுமோர் தூரம்

ஒதுமறை வேதஒலி வானெழுமோர் காலைதனில்
உள்ளமதில் தேவஇசை பாடி
மாதினையோர் பாகனருள் மூடிவிழி நாமும்தொழ
மேன்மையுறும் வாழ்வதனைப் போல
ஏதும்மனந் தான்முயல எட்டுவது கிட்டாதென்
றெண்ணிமனம் சோர்ந்தநிலை மாறி
யாதுமென தாகுமென வீரமனம் கொள்ளுகுடை
வானம்வரும் கூப்பிடவே ஓடி

1. விண்ணில்..
நிலவெழுந்து புவிதழுவும் நேரமதில் ஓரிரவு
நின்றிருந்தேன் வான்விரிப்பின் கீழே
பலதுயரம் பட்டதிலே பால்நிலவின் குளுமைபெறப்
பார்த்திருந்தேன் குவிமணலின் மேலே
உலவிவருந் தென்றல்தொட ஒளிவிழியால் தாரகைகள்
உலகமதைக் கண்சிமிட்டிக் காணும்
அலைகடலின் மீன்களென ஆயிரங்கள் கோடியென
அழகொளிர விண்மீன்கள் தோன்றும்

நேர்தெரியுந் தாரகைகள் நிர்மலவான் வீதியிலே
நிற்கும்விதம் கற்பனையைத் தூண்ட
போரெடுத்துப் பூமிகொள்ளப் பால்தெருவின் வாசிகள்தீப்
பந்தங்களைக் கொண்டதுபோற் கண்டேன்
தேரோட்டி மகன்தீண்டத் தேவி யவள் இடைமணிகள்
திமிறிநிலம் விழுந்தவிதம் போலும்
காரிகையர் ஊர்முழுதுங் கார்த்திகையின் தீபஒளி
ஏற்றியதாய் வானிருக்கக் கண்டேன்

ஒருகணமென் திகிலடையும் உள்ளமதி லோர்நினைவு
உருளுமிந்த புவிமடியில் நின்றே
பெருவிரியும் வானிடையில் புரண்டுருள ஓடுகிறேன்
புவியிழுத்த தாலுலகில் நின்றேன்
கருமையினுட் சுழல்புவியுங் கதியெடுத்த வேகமிடை
காந்தவிசை வலுவிழந்து போனால்
உருண்டகன்ற விண்ணிடையில் உதிருமொரு பூவெனவே
உலகிதைவிட் டுச்சி வானில் வீழ்வேன்

பொதுவிலெந்த பொருளுமின்றி பூமிவெறும் கல்லெனவே
பெரியதொரு வெடிவெடித்துப் போகும்
இதுவுமொரு அதிசயமே இயற்கையதன் தருமகுணம்
எமையிருத்தி உயிர்கொடுத்த தாகும்
புதுமைசிலர் பூமியையே பங்குவைத்து எல்லையிட்டு
பொருளெனவோர் விலைபேசி விற்பர்
இதைவிடப்பே ரரசுகளோ இதுஎமது பூமிஎன்று
எளியவரை இனமழியக் கொல்வர்

முதுமைவரை ஆடுமவர் முடிவுதனில் ஆவதென்ன
மோனஇருள் சூனியத்தில் தூக்கம்
கொதிகுழம்பு சீறுமொரு கோடிஒளிச் சூரியன்கள்
கூட்டமதில் ஆவிகலந் தேகும்
இதுவிருக்க ஒருபுறமாய், உண்மையில்நா மிருப்பதெது
இத்தரையிற் பாதமுள்ள போதும்
பொதுவினி லெம் மீதியுடல் பூமியுடன் வான்வழியே
பெரியதொரு வட்டமிட்டு ஓடும்

கடுகதியில் விரையுமொரு புகையிரதம் உலகமெனில்
காசுகொடா பயணிகளே நாமும்
நடுவழியில் இறங்குமொரு நாள்வரவும் எவரறியா
நழுவுமொரு விதிமுடியும் யாவும்
தொடுவதிவர் பாதம்நிலம், தேகமெதில் வான்வெளியில்
திரிவரிவர் கதிரவனைச் சுற்றி
விடுஒருசந் தேகமிலை விரல்தொடுமிவ் வானமதே
விரிந்ததெனில் கூப்பிடுமோர் தூரம்

உச்சிவானக் குடைவிரித்தும் உள்ளேநீல வண்ணமிட்டு
உண்மையிலே வைத்தவரை அறியேன்
நிச்சயமாம் பூமிதனை நம்முயிர்க்கு வாழ்வளித்து
நித்திரைக்கு தொட்டிலென ஆட்டி
அச்சினிலே தான்சுழன்று ஆடிப்புவி பாயுமொளி
ஆதவனைச் சுற்றிவரச் செய்தார்
உச்சகடு வேகமதில் ஓடுகிறோம் வான்வழியே
உடல்தொடுவான் கூப்பிடுமோர் தூரம்

ஆழவெளி விண்பரவி ஓடுகின்ற சீற்றமுடன்
ஓங்கியெரி வான்சுடர்கள் மோதி
வீழவெடித் தாயிரமாய் வேகமுடன் வான்சிதற
வீதியெங்குந் தூசெனவே மாறும்
வாழுமெங்கள் வையகமும் வண்ணபுயல் தீபறந்து
வந்துடலை வேகவைக்கு மென்றோ
சூழுங்குடை தான்விரித்துச் சுற்றிவளி வட்டமிட்டுச்
சுந்தரவாழ் வீந்தனளோ சக்தி!

பகுதி 2 ல் முடியும்

தலைப்பின் ஆரம்பம் நானா சார்!

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Jul 08, 2011 1:58 am

realvampire wrote:
kirikasan wrote:இது ஒரு கவியரங்கத்தில் பங்குபற்ற எழுதிய கவிதை. முழுதாக் இங்கே!

பகுதி1

குடைவானம் கூப்பிடுதூரம்

சக்தி வணக்கம்

வெட்டும் மின்னல் வீசுங் காற்று
வேகும் அண்டச் சூரியனும்
கொட்டும் மழையும் கூடும் இடியும்
கோலம் தந்தாள் சக்தியவள்
தட்டும் புவியுள் முட்டும் போது
தடதட வென்றே நிலமதிர
சுட்டுச்சீறும் செந்தீ மலையின்
சீற்றம் செய்வாள் சக்தியவள்

பகுதி 2 ல் முடியும்

தலைப்பின் ஆரம்பம் நானா சார்!

உங்கள் கேள்வி சரியாக புரிந்து கொண்டேனோ தெரியவில்லை. இருந்தாலும் பதில்
நானும் நாத்திகன்தான். ஏன் இப்போதும் கூட நாத்திகன்தான். ஆனால் எமக்குமேலே ஒரு சக்தி இருக்கிறது இல்லையா? Power. அதன் கூறுகளாகத்தான் நாமுமிருக்கிறோம் அணுவிலிருந்து , எமதுடலின் இழையங்களின் சிறுதுணிக்கையிலிருந்து அண்டம் வரை பிரபஞ்சமெல்லாம்
கருவைச் சுற்றும் துணிக்கைகளாக ஒரே வடிவமாகவே உள்ளன.
(சுருக்கமாக கூறுகிறேன்)
எனவே நாம் அந்த Power ன் குழந்தைகள். அந்த இனம்தெரியாத சக்தியை எந்த உருவமில்லாத சக்தியை ஒரு பெண்ணாக உருவகித்த முன்னோர்களோடு நானும் கருத்தொருமித்து நானும் பெண்ணாக உருவகித்து வணங்குகிறேன். இருகரங்கள் கூப்புவதில்லை. இதயத்தால்மட்டும்.
விவாதிப்பின் மிக நீளும் இது ஒரு சிறுகோடு மட்டுமே!











realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Fri Jul 08, 2011 2:12 am

கருத்ட்டமைகு நன்றி சார்...


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக