Latest topics
» கருத்துப்படம் 02/10/2024by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
பகுத்தறிவு வேணும்!
Page 1 of 1
பகுத்தறிவு வேணும்!
பாண்டவர்களுக்கும், துரியோதனாதியர்களுக்கும் ஆசிரியராக துரோணச்சாரியார் இருந்தார். பாண்டவர்களே அறிவில் சிறந்து விளங்க, கவுரவர்கள் மூடர்களாக விளங்கினர். தன் மக்கள் மூடர்களாக இருப்பதை அறிந்து திருதராட்டினன் அரசன் வருந்தினான்.
துரோணாச்சாரியாரிடம் வந்த அவர், ""ஆசிரியரோ! நீங்கள் நடுநிலைமையுடன் நடந்து கொள்ளவில்லை. பாண்டவர்களுக்கு நன்றாகக் கல்வி கற்றுத் தருகிறீர்கள். என் மக்களுக்குச் சரியாகச் சொல்லி தருவது இல்லை. அதனால்தான் பாண்டவர்கள் அறிவாளிகளாகவும், என் மக்கள் மூடர்களாகவும் விளங்குகின்றனர். உங்களிடம் வஞ்சக எண்ணம் இல்லாவிட்டாலும், உங்களிடம் பயிலும் மாணவர்கள் அனைவரும் அறிவில் ஒரே அளவு உடையவர்களாக அல்லவா இருக்க வேண்டும்?'' என்று கோபத்துடன் கேட்டான்.
""அரசே! என்னிடம் வஞ்சகம், சூழ்ச்சி எதுவும் கிடையாது. மாணவர்கள் அனைவரையும் ஒரே நிலையில் வைத்துத்தான் பாடம் சொல்லித் தருகிறேன். அவரவர் இயல்புக்கு ஏற்ப கற்கின்றனர். இதற்கு நான் என்ன செய்ய முடியும்?'' என்றார்.
அவரின் கருத்தை அரசன் ஏற்றுக் கொள்ளவில்லை. தன் அருகில் இருந்த சீடன் ஒருவனை அழைத்த துரோணர், ""நீ உடனே ஓடிச் சென்று பாண்டவர்களிடமும், கவுரவர்களிடமும் நம் ஆசிரியரை ஓணான் தூக்கிச் சென்று விட்டது என்று சொல். அவர்கள் என்ன செய்கின்றனர் என்று பார்த்து வந்து சொல்,'' என்றார்.
கவுரவர்களிடம் சென்ற அவன், ""நம் ஆசிரியர் துரோணாச்சாரியாரை ஓணான் தூக்கிச் சென்று விட்டது.'' என்றான்.
இதைக் கேட்ட துரியோதனன் கோபத்துடன், ""நாம் ஆசிரியரைத் தூக்கிச் சென்ற ஓணான் இனத்தைச் சும்மா விடக் கூடாது. கண்ணில் படும் ஓணான்களை எல்லாம் கொல்வோம். "வாருங்கள்,' என்று தன் தம்பியர்களிடம் சொன்னான்.
""அண்ணா! அப்படியே செய்வோம்,'' என்று தம்பியர்களும் புறப்பட்டனர்.
எல்லாரும் சேர்ந்து ஓணான் வேட்டையில் இறங்கினர். பல ஓணான்கள் கொல்லப்பட்டன.
அங்கிருந்து புறப்பட்ட சீடன் பாண்டவர்களிடம் வந்தான். ""நம் ஆசிரியர் துரோணாச்சாரியாரை ஓணான் தூக்கிச் சென்று விட்டது,'' என்றான்.
இதைக் கேட்ட தருமன் சிரித்தான். ""நம் ஆசிரியர் எத்தகைய வல்லமை வாய்ந்தவர்? அவரை ஓணான் தூக்கிச் செல்ல முடியுமா? எதற்காக இந்த விளையாட்டு?'' என்று கேட்டான்.
தம்பிகளும் தருமனுடன் சேர்ந்து சிரித்தனர்.
துரோணாச்சாரியாரிடம் திரும்பி வந்த சீடன், நடந்ததை அப்படியே சொன்னான்.
அருகில் இருந்த திருதராட்டினனைப் பார்த்து, ""அரசே! நீங்களும் நடந்ததைக் கேட்டீர்கள் அல்லவா? உங்கள் மக்களுக்குப் பகுத்து அறியும் ஆற்றல் இல்லை. இருந்தால் என்னை ஓணான் தூக்கிச் சென்றது என்ற செய்தியை நம்புவார்களா? ஓணான் வேட்டையில் இறங்குவார்களா? பாண்டவர்களுக்குப் பகுத்து அறியும் ஆற்றல் உள்ளது. எதையும் உடனே புரிந்து கொள்கின்றனர். சிறந்த அறிவு பெற்றுள்ளனர்.'' என்றார் துரோணாச்சாரியார்.
ஆசிரியர் மீது எந்தத் தவறும் இல்லை என்பதை உணர்ந்தான் திருதராட்டினன். மூடர்களா இருக்கும் தன் மக்களை நினைத்து, வருத்தத்துடன் அங்கிருந்து சென்றார்.
சிறுவர் மலர்
துரோணாச்சாரியாரிடம் வந்த அவர், ""ஆசிரியரோ! நீங்கள் நடுநிலைமையுடன் நடந்து கொள்ளவில்லை. பாண்டவர்களுக்கு நன்றாகக் கல்வி கற்றுத் தருகிறீர்கள். என் மக்களுக்குச் சரியாகச் சொல்லி தருவது இல்லை. அதனால்தான் பாண்டவர்கள் அறிவாளிகளாகவும், என் மக்கள் மூடர்களாகவும் விளங்குகின்றனர். உங்களிடம் வஞ்சக எண்ணம் இல்லாவிட்டாலும், உங்களிடம் பயிலும் மாணவர்கள் அனைவரும் அறிவில் ஒரே அளவு உடையவர்களாக அல்லவா இருக்க வேண்டும்?'' என்று கோபத்துடன் கேட்டான்.
""அரசே! என்னிடம் வஞ்சகம், சூழ்ச்சி எதுவும் கிடையாது. மாணவர்கள் அனைவரையும் ஒரே நிலையில் வைத்துத்தான் பாடம் சொல்லித் தருகிறேன். அவரவர் இயல்புக்கு ஏற்ப கற்கின்றனர். இதற்கு நான் என்ன செய்ய முடியும்?'' என்றார்.
அவரின் கருத்தை அரசன் ஏற்றுக் கொள்ளவில்லை. தன் அருகில் இருந்த சீடன் ஒருவனை அழைத்த துரோணர், ""நீ உடனே ஓடிச் சென்று பாண்டவர்களிடமும், கவுரவர்களிடமும் நம் ஆசிரியரை ஓணான் தூக்கிச் சென்று விட்டது என்று சொல். அவர்கள் என்ன செய்கின்றனர் என்று பார்த்து வந்து சொல்,'' என்றார்.
கவுரவர்களிடம் சென்ற அவன், ""நம் ஆசிரியர் துரோணாச்சாரியாரை ஓணான் தூக்கிச் சென்று விட்டது.'' என்றான்.
இதைக் கேட்ட துரியோதனன் கோபத்துடன், ""நாம் ஆசிரியரைத் தூக்கிச் சென்ற ஓணான் இனத்தைச் சும்மா விடக் கூடாது. கண்ணில் படும் ஓணான்களை எல்லாம் கொல்வோம். "வாருங்கள்,' என்று தன் தம்பியர்களிடம் சொன்னான்.
""அண்ணா! அப்படியே செய்வோம்,'' என்று தம்பியர்களும் புறப்பட்டனர்.
எல்லாரும் சேர்ந்து ஓணான் வேட்டையில் இறங்கினர். பல ஓணான்கள் கொல்லப்பட்டன.
அங்கிருந்து புறப்பட்ட சீடன் பாண்டவர்களிடம் வந்தான். ""நம் ஆசிரியர் துரோணாச்சாரியாரை ஓணான் தூக்கிச் சென்று விட்டது,'' என்றான்.
இதைக் கேட்ட தருமன் சிரித்தான். ""நம் ஆசிரியர் எத்தகைய வல்லமை வாய்ந்தவர்? அவரை ஓணான் தூக்கிச் செல்ல முடியுமா? எதற்காக இந்த விளையாட்டு?'' என்று கேட்டான்.
தம்பிகளும் தருமனுடன் சேர்ந்து சிரித்தனர்.
துரோணாச்சாரியாரிடம் திரும்பி வந்த சீடன், நடந்ததை அப்படியே சொன்னான்.
அருகில் இருந்த திருதராட்டினனைப் பார்த்து, ""அரசே! நீங்களும் நடந்ததைக் கேட்டீர்கள் அல்லவா? உங்கள் மக்களுக்குப் பகுத்து அறியும் ஆற்றல் இல்லை. இருந்தால் என்னை ஓணான் தூக்கிச் சென்றது என்ற செய்தியை நம்புவார்களா? ஓணான் வேட்டையில் இறங்குவார்களா? பாண்டவர்களுக்குப் பகுத்து அறியும் ஆற்றல் உள்ளது. எதையும் உடனே புரிந்து கொள்கின்றனர். சிறந்த அறிவு பெற்றுள்ளனர்.'' என்றார் துரோணாச்சாரியார்.
ஆசிரியர் மீது எந்தத் தவறும் இல்லை என்பதை உணர்ந்தான் திருதராட்டினன். மூடர்களா இருக்கும் தன் மக்களை நினைத்து, வருத்தத்துடன் அங்கிருந்து சென்றார்.
சிறுவர் மலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» ஆத்த கடக்க வேணும் அக்கரைக்கு போக வேணும்...
» பக்தியும் வேணும்! காசும் வேணும்!
» பகுத்தறிவு
» பகுத்தறிவு
» ஆண்கள் ஏன் எப்போதும் சொல்வதைக் கேட்பதில்லை என்று தெரியுமா...? :)
» பக்தியும் வேணும்! காசும் வேணும்!
» பகுத்தறிவு
» பகுத்தறிவு
» ஆண்கள் ஏன் எப்போதும் சொல்வதைக் கேட்பதில்லை என்று தெரியுமா...? :)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|