Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே எனது லட்சியம் - ஜெயலலிதா
+4
ஸ்ரீஜா
ரஞ்சித்
ரபீக்
சிவா
8 posters
Page 1 of 1
இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே எனது லட்சியம் - ஜெயலலிதா
அனைத்து துறைகளிலும் இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே எனது லட்சியம். அது நிறைவேற அரசுடன் இணைந்து செயலாற்ற வாருங்கள் என்று தொழில் முதலீட்டாளர்களுக்கு இந்திய தொழில் கூட்டமைப்பு கூட்டத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அழைப்பு விடுத்துள்ளார்.
வாழ்க்கை தரம் உயர
இந்திய தொழில் கூட்டமைப்பின் தேசிய குழு கூட்டம் சென்னையில் நேற்று தொடங்கியது. முதல்-அமைச்சர் ஜெயலலிதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, குத்துவிளக்கு ஏற்றி கூட்டத்தை தொடங்கிவைத்தார். கூட்டத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
சாதாரண மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த வேண்டும் என்பது தான் எனது அரசின் பொருளாதார கொள்கையின் மைய நோக்கம். தொழில்துறையினராகிய நீங்களும் அரசும் இணைந்து சாதாரண மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும், நமது நாட்டை பொருளாதார ஆற்றல் மையமாக உருவாக்கவும் கடினமாக உழைக்க வேண்டியது அவசியம். தற்போதைய சூழ்நிலையில் வளர்ச்சி விகிதம் அதிகமாக இருந்தாலும் வறுமையும், வருமான ஏற்றத்தாழ்வும் இருப்பது பிரச்சினையாகத் தான் இருக்கிறது.
வறுமையை ஒழிப்பேன்
ஐ.நா. பொதுக்குழு வரையறுத்துள்ள வளர்ச்சி நோக்கங்களில் முக்கியமானது வறுமை ஒழிப்பு தான். 2001-ல் எனது அரசு ஆட்சியில் இருந்தபோது அந்த ஐ.நா. குழுவின் வளர்ச்சி நோக்கங்களை முக்கிய அம்சமாக கொண்டு பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. வறுமையை ஒழிக்க வேண்டும் என்ற எனது கனவை நிறைவேற்றும் வகையில் 15 அம்ச திட்டங்களை அறிவித்தேன். அதன் பயனாக வறுமை குறிப்பிடத்தக்க அளவு குறைந்தது. தமிழ்நாட்டில் வறுமையையும், வேலையில்லா திண்டாட்டத்தையும் முற்றிலுமாக ஒழிப்பது தான் எனது கனவு. இவை உள்பட ஐ.நா. குழுவின் வளர்ச்சி நோக்கங்களை 2015-க்குள் அடைய முடியும் என்று உறுதியாக நம்புகிறோம்.
எனது அரசு 1992-ம் ஆண்டு வெளியிட்ட தொழிற் கொள்கை, தமிழகத்தில் உற்பத்தி துறையின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டது. அதன் விளைவாக மோட்டார் வாகனத் தொழிலில் பெரும் புரட்சி ஏற்பட்டு, போர்டு, ஹூண்டாய், பிஎம்டபிள்ï போன்ற பன்னாட்டு கார் நிறுவனங்களை தமிழகம் ஈர்த்தது. இதுபோன்ற பெரிய வாகன நிறுவனங்கள் தொடங்கப்பட்டதன் காரணமாக ஏராளமான மோட்டார் வாகன உதிரிபாக தொழிற்சாலைகளும் வந்தன.
வெற்றிக்கு ஆதாரங்கள்
முதலீட்டுக்கு உகந்த சூழலை உருவாக்கும் விதத்திலும், தொழில்துறையை மேம்படுத்தும் வகையிலும் தொலைநோக்கிலான தொழிற் கொள்கையை எனது அரசு 2003-ம் ஆண்டு வெளியிட்டது. அதன்பயனாக மின்னணு (எலக்ட்ரானிக்ஸ்) துறையில் பெரும் புரட்சி ஏற்பட்டு நோகியா, பாக்ஸ்கான், ப்ளக்ஸ்ட்ரானிக்ஸ் போன்ற பல பன்னாட்டு நிறுவனங்களை தமிழ்நாடு ஈர்த்தது. மோட்டார் வாகன தொழில் மற்றும் மின்னணு சாதனங்கள், வன்பொருள் (ஹார்டுவேர்) உற்பத்தி ஆகியவற்றில் இந்தியாவிலேயே சென்னை தலைமையிடமாக உருவாகியிருக்கிறது. 1992 மற்றும் 2003-ம் ஆண்டுகளில் எனது தலைமையிலான அரசு வெளியிட்ட தொழிற்கொள்கைகளுக்கு கிடைத்த வெற்றிக்கு ஆதாரங்கள் தான் இவை.
தற்போதுள்ள சூழ்நிலையில் தமிழகத்தை முதலீட்டுக்கு உகந்த மாநிலமாக உருவாக்க வேண்டும் என்பது தான் எங்களது அரசின் முக்கிய பணி. நான் முதல்-அமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்து மிகப்பெரிய நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கு ஆர்வமாக உள்ளதை பார்க்கிறேன். முதலீட்டாளர்கள் மீண்டும் நம்பிக்கை வைத்து இங்கு முதலீடு செய்ய ஆர்வமாக இருப்பது பாராட்டுக்குரியது. நல்ல நிர்வாகம், சமூக நீதி, சீரான வளர்ச்சி ஆகியவற்றின் மூலம் மக்களின் நம்பிக்கையை புதுப்பித்துக் கொள்ள எங்களது அரசு உறுதி பூண்டுள்ளது.
மின்வெட்டு நீங்கும்
1991 மற்றும் 2001-ம் ஆண்டுகளில் தொழில் முதலீட்டு மேம்பாட்டுக்காக எனது அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அந்த நடவடிக்கைகள் இப்போதும் தொடரும். தற்போது தொழில் துறை சந்தித்து வரும் உள்கட்டமைப்பு குறைபாடுகள் உள்பட பல்வேறு சவால்களை எனது அரசு நன்கு அறியும். தொழில் துறையினர் துரதிர்ஷ்டவசமாக சமீபகாலமாக சந்தித்து வரும் மின்வெட்டு பிரச்சினைகளையும் நான் அறிவேன். 2001-2006ல் எனது ஆட்சி காலத்தில் தமிழகத்தில் தாராளமான அளவுக்கு மின்சாரம் இருந்தது. இந்த மின்வெட்டு பிரச்சினையை எனது அரசு போக்கும் என்று உங்களுக்கு உறுதி அளிக்கிறேன். இதற்காக போர்க்கால அடிப்படையில் நாங்கள் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். மிக விரைவில் மின்சாரம் உபரியாக உள்ள மாநிலமாக தமிழகத்தை மீண்டும் மாற்றுவோம்.
அறிவாற்றல், அபார திறமை மிக்க தொழிலாளர்களை கொண்ட மனிதவளம் தமிழ்நாட்டில் அதிகம் உள்ளது. புதிய நூற்றாண்டில் தமிழகம் அறிவுசார் பொருளாதார மையமாக உருவெடுக்கும். இன்றைய நவீன தொழில் துறைக்கு தேவையான பயிற்சி பெற்ற தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் மிகுதியாக உள்ளனர். இந்தியாவிலேயே தொழில்நுட்ப அறிவு மிக்க மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. குறைந்த ஊதியத்தில் பயிற்சி பெற்ற தொழிலாளர்கள், அமைதியான தொழில் உறவுகள் ஆகியவை தமிழ்நாட்டை தொழில் முதலீட்டுக்கு உகந்த மாநிலமாக உருவாக்கியுள்ளது.
உலகளவில் சென்னை
மோட்டார் வாகன தொழில் மற்றும் உதிரிபாக தொழிற்சாலைகள் தமிழகத்தை உற்பத்தி துறையில் முன்னணி மாநிலமாக திகழ வைத்துள்ளன. சைக்கிள் முதல் டாங்கிகள் வரை அதாவது மோட்டார் சைக்கிள், கார், டிராக்டர், ஜேசிபி, டிரக்குகள் மட்டுமின்றி ரெயில் பெட்டிகள் உள்பட அனைத்துவிதமான வாகனங்களும் சென்னையில் உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
உலக அளவில் மோட்டார் வாகன உற்பத்தியில் முதல் 5 பெரிய நகரங்களில் சென்னையும் ஒன்றாக திகழ்கிறது. சென்னை நகரை உலகத்திலேயே மிகப்பெரிய மோட்டார் வாகன உற்பத்தி மையமாக உருவாக்குவது தான் எனது கனவு.
சூரிய மின்சக்தி
தொழில்துறையினரின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் எனது அரசு ``தொலைநோக்கு திட்டம் - 2025'' (விஷன் டாக்குமென்ட் 2025) என்ற திட்டத்தை வெளியிட திட்டமிட்டுள்ளது. மின்சாரம், துறைமுகம், கப்பல் கட்டுதல் உள்ளிட்ட உள்கட்டமைப்பு மேம்பாட்டு துறையில் முதலீடுகளை மேம்படுத்த தேவையான, உறுதியான கொள்கைகள் இந்த தொலைநோக்கு திட்டத்தில் இடம்பெற்றிருக்கும். சூரிய மின்சக்தி உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்திற்கு இதில் அதிக முக்கியத்துவம் தரப்படும்.
இங்கு கூடியிருக்கும் தொழில் அதிபர்களுக்கு தமிழகத்தில் முதலீடு செய்ய வாருங்கள் என்று அழைப்பு விடுக்கிறேன். பொருளாதாரத்தை மேம்படுத்துதல், வாழ்க்கை தரத்தை உயர்த்துதல் ஆகியவை தான் தமிழக அரசின் நோக்கமாகும். அதற்கு நாம் அனைவரும் ஆற்றல்களை வாய்ப்புகளாக மாற்ற வேண்டும். வாய்ப்புகளை வளமாக மாற்ற வேண்டும். உங்கள் கனவுகளை நிறைவேற்றுவதற்கு தமிழக அரசு உறுதுணையாக இருக்கும்.
முதன்மை மாநிலமாக்க
பழைய, புதிய பொருளாதாரத்தில் வளர்ச்சியை காணக்கூடிய செயல்பாடு மிக்க பங்குதாரர்கள் அரசுக்கு தேவை. எங்களது அரசு தமிழகத்தை இந்தியாவிலேயே வளர்ச்சி மிக்க முன்மாதிரி மாநிலமாக்க உறுதி பூண்டுள்ளது. அனைத்து துறைகளிலும் இந்திய மாநிலங்களில் தமிழகம் முதல் இடத்தை பெற வேண்டும் என்ற எனது லட்சியத்தை நிறைவேற்ற அரசுடன் இணைந்து செயலாற்ற உங்கள் அனைவரையும் அழைக்கிறேன்.
இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.
முன்னதாக இந்திய தொழில் கூட்டமைப்பின் தலைவர் பி.முத்துராமன் வரவேற்றார். அடுத்த தலைவராக தேர்வு பெற்றுள்ள ஆதி கோத்ரெஜ் நன்றி கூறினார். இந்தியா முழுவதும் உள்ள தொழில் அதிபர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
தினதந்தி!
வாழ்க்கை தரம் உயர
இந்திய தொழில் கூட்டமைப்பின் தேசிய குழு கூட்டம் சென்னையில் நேற்று தொடங்கியது. முதல்-அமைச்சர் ஜெயலலிதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, குத்துவிளக்கு ஏற்றி கூட்டத்தை தொடங்கிவைத்தார். கூட்டத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
சாதாரண மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த வேண்டும் என்பது தான் எனது அரசின் பொருளாதார கொள்கையின் மைய நோக்கம். தொழில்துறையினராகிய நீங்களும் அரசும் இணைந்து சாதாரண மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும், நமது நாட்டை பொருளாதார ஆற்றல் மையமாக உருவாக்கவும் கடினமாக உழைக்க வேண்டியது அவசியம். தற்போதைய சூழ்நிலையில் வளர்ச்சி விகிதம் அதிகமாக இருந்தாலும் வறுமையும், வருமான ஏற்றத்தாழ்வும் இருப்பது பிரச்சினையாகத் தான் இருக்கிறது.
வறுமையை ஒழிப்பேன்
ஐ.நா. பொதுக்குழு வரையறுத்துள்ள வளர்ச்சி நோக்கங்களில் முக்கியமானது வறுமை ஒழிப்பு தான். 2001-ல் எனது அரசு ஆட்சியில் இருந்தபோது அந்த ஐ.நா. குழுவின் வளர்ச்சி நோக்கங்களை முக்கிய அம்சமாக கொண்டு பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. வறுமையை ஒழிக்க வேண்டும் என்ற எனது கனவை நிறைவேற்றும் வகையில் 15 அம்ச திட்டங்களை அறிவித்தேன். அதன் பயனாக வறுமை குறிப்பிடத்தக்க அளவு குறைந்தது. தமிழ்நாட்டில் வறுமையையும், வேலையில்லா திண்டாட்டத்தையும் முற்றிலுமாக ஒழிப்பது தான் எனது கனவு. இவை உள்பட ஐ.நா. குழுவின் வளர்ச்சி நோக்கங்களை 2015-க்குள் அடைய முடியும் என்று உறுதியாக நம்புகிறோம்.
எனது அரசு 1992-ம் ஆண்டு வெளியிட்ட தொழிற் கொள்கை, தமிழகத்தில் உற்பத்தி துறையின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டது. அதன் விளைவாக மோட்டார் வாகனத் தொழிலில் பெரும் புரட்சி ஏற்பட்டு, போர்டு, ஹூண்டாய், பிஎம்டபிள்ï போன்ற பன்னாட்டு கார் நிறுவனங்களை தமிழகம் ஈர்த்தது. இதுபோன்ற பெரிய வாகன நிறுவனங்கள் தொடங்கப்பட்டதன் காரணமாக ஏராளமான மோட்டார் வாகன உதிரிபாக தொழிற்சாலைகளும் வந்தன.
வெற்றிக்கு ஆதாரங்கள்
முதலீட்டுக்கு உகந்த சூழலை உருவாக்கும் விதத்திலும், தொழில்துறையை மேம்படுத்தும் வகையிலும் தொலைநோக்கிலான தொழிற் கொள்கையை எனது அரசு 2003-ம் ஆண்டு வெளியிட்டது. அதன்பயனாக மின்னணு (எலக்ட்ரானிக்ஸ்) துறையில் பெரும் புரட்சி ஏற்பட்டு நோகியா, பாக்ஸ்கான், ப்ளக்ஸ்ட்ரானிக்ஸ் போன்ற பல பன்னாட்டு நிறுவனங்களை தமிழ்நாடு ஈர்த்தது. மோட்டார் வாகன தொழில் மற்றும் மின்னணு சாதனங்கள், வன்பொருள் (ஹார்டுவேர்) உற்பத்தி ஆகியவற்றில் இந்தியாவிலேயே சென்னை தலைமையிடமாக உருவாகியிருக்கிறது. 1992 மற்றும் 2003-ம் ஆண்டுகளில் எனது தலைமையிலான அரசு வெளியிட்ட தொழிற்கொள்கைகளுக்கு கிடைத்த வெற்றிக்கு ஆதாரங்கள் தான் இவை.
தற்போதுள்ள சூழ்நிலையில் தமிழகத்தை முதலீட்டுக்கு உகந்த மாநிலமாக உருவாக்க வேண்டும் என்பது தான் எங்களது அரசின் முக்கிய பணி. நான் முதல்-அமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்து மிகப்பெரிய நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கு ஆர்வமாக உள்ளதை பார்க்கிறேன். முதலீட்டாளர்கள் மீண்டும் நம்பிக்கை வைத்து இங்கு முதலீடு செய்ய ஆர்வமாக இருப்பது பாராட்டுக்குரியது. நல்ல நிர்வாகம், சமூக நீதி, சீரான வளர்ச்சி ஆகியவற்றின் மூலம் மக்களின் நம்பிக்கையை புதுப்பித்துக் கொள்ள எங்களது அரசு உறுதி பூண்டுள்ளது.
மின்வெட்டு நீங்கும்
1991 மற்றும் 2001-ம் ஆண்டுகளில் தொழில் முதலீட்டு மேம்பாட்டுக்காக எனது அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அந்த நடவடிக்கைகள் இப்போதும் தொடரும். தற்போது தொழில் துறை சந்தித்து வரும் உள்கட்டமைப்பு குறைபாடுகள் உள்பட பல்வேறு சவால்களை எனது அரசு நன்கு அறியும். தொழில் துறையினர் துரதிர்ஷ்டவசமாக சமீபகாலமாக சந்தித்து வரும் மின்வெட்டு பிரச்சினைகளையும் நான் அறிவேன். 2001-2006ல் எனது ஆட்சி காலத்தில் தமிழகத்தில் தாராளமான அளவுக்கு மின்சாரம் இருந்தது. இந்த மின்வெட்டு பிரச்சினையை எனது அரசு போக்கும் என்று உங்களுக்கு உறுதி அளிக்கிறேன். இதற்காக போர்க்கால அடிப்படையில் நாங்கள் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். மிக விரைவில் மின்சாரம் உபரியாக உள்ள மாநிலமாக தமிழகத்தை மீண்டும் மாற்றுவோம்.
அறிவாற்றல், அபார திறமை மிக்க தொழிலாளர்களை கொண்ட மனிதவளம் தமிழ்நாட்டில் அதிகம் உள்ளது. புதிய நூற்றாண்டில் தமிழகம் அறிவுசார் பொருளாதார மையமாக உருவெடுக்கும். இன்றைய நவீன தொழில் துறைக்கு தேவையான பயிற்சி பெற்ற தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் மிகுதியாக உள்ளனர். இந்தியாவிலேயே தொழில்நுட்ப அறிவு மிக்க மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. குறைந்த ஊதியத்தில் பயிற்சி பெற்ற தொழிலாளர்கள், அமைதியான தொழில் உறவுகள் ஆகியவை தமிழ்நாட்டை தொழில் முதலீட்டுக்கு உகந்த மாநிலமாக உருவாக்கியுள்ளது.
உலகளவில் சென்னை
மோட்டார் வாகன தொழில் மற்றும் உதிரிபாக தொழிற்சாலைகள் தமிழகத்தை உற்பத்தி துறையில் முன்னணி மாநிலமாக திகழ வைத்துள்ளன. சைக்கிள் முதல் டாங்கிகள் வரை அதாவது மோட்டார் சைக்கிள், கார், டிராக்டர், ஜேசிபி, டிரக்குகள் மட்டுமின்றி ரெயில் பெட்டிகள் உள்பட அனைத்துவிதமான வாகனங்களும் சென்னையில் உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
உலக அளவில் மோட்டார் வாகன உற்பத்தியில் முதல் 5 பெரிய நகரங்களில் சென்னையும் ஒன்றாக திகழ்கிறது. சென்னை நகரை உலகத்திலேயே மிகப்பெரிய மோட்டார் வாகன உற்பத்தி மையமாக உருவாக்குவது தான் எனது கனவு.
சூரிய மின்சக்தி
தொழில்துறையினரின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் எனது அரசு ``தொலைநோக்கு திட்டம் - 2025'' (விஷன் டாக்குமென்ட் 2025) என்ற திட்டத்தை வெளியிட திட்டமிட்டுள்ளது. மின்சாரம், துறைமுகம், கப்பல் கட்டுதல் உள்ளிட்ட உள்கட்டமைப்பு மேம்பாட்டு துறையில் முதலீடுகளை மேம்படுத்த தேவையான, உறுதியான கொள்கைகள் இந்த தொலைநோக்கு திட்டத்தில் இடம்பெற்றிருக்கும். சூரிய மின்சக்தி உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்திற்கு இதில் அதிக முக்கியத்துவம் தரப்படும்.
இங்கு கூடியிருக்கும் தொழில் அதிபர்களுக்கு தமிழகத்தில் முதலீடு செய்ய வாருங்கள் என்று அழைப்பு விடுக்கிறேன். பொருளாதாரத்தை மேம்படுத்துதல், வாழ்க்கை தரத்தை உயர்த்துதல் ஆகியவை தான் தமிழக அரசின் நோக்கமாகும். அதற்கு நாம் அனைவரும் ஆற்றல்களை வாய்ப்புகளாக மாற்ற வேண்டும். வாய்ப்புகளை வளமாக மாற்ற வேண்டும். உங்கள் கனவுகளை நிறைவேற்றுவதற்கு தமிழக அரசு உறுதுணையாக இருக்கும்.
முதன்மை மாநிலமாக்க
பழைய, புதிய பொருளாதாரத்தில் வளர்ச்சியை காணக்கூடிய செயல்பாடு மிக்க பங்குதாரர்கள் அரசுக்கு தேவை. எங்களது அரசு தமிழகத்தை இந்தியாவிலேயே வளர்ச்சி மிக்க முன்மாதிரி மாநிலமாக்க உறுதி பூண்டுள்ளது. அனைத்து துறைகளிலும் இந்திய மாநிலங்களில் தமிழகம் முதல் இடத்தை பெற வேண்டும் என்ற எனது லட்சியத்தை நிறைவேற்ற அரசுடன் இணைந்து செயலாற்ற உங்கள் அனைவரையும் அழைக்கிறேன்.
இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.
முன்னதாக இந்திய தொழில் கூட்டமைப்பின் தலைவர் பி.முத்துராமன் வரவேற்றார். அடுத்த தலைவராக தேர்வு பெற்றுள்ள ஆதி கோத்ரெஜ் நன்றி கூறினார். இந்தியா முழுவதும் உள்ள தொழில் அதிபர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
தினதந்தி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே எனது லட்சியம் - ஜெயலலிதா
வாழ்த்துக்கள் அம்மா !!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே எனது லட்சியம் - ஜெயலலிதா
எப்படியே நாடு உருபட்டா சரி
ஸ்ரீஜா- மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011
Re: இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே எனது லட்சியம் - ஜெயலலிதா
எல்லாரும் இப்படிதான் சொல்றீங்க இன்னும் நாடு உருபடா வழியா காணோம்
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே எனது லட்சியம் - ஜெயலலிதா
நாட்டுக்கு உனைய மாதிரி ஒருத்தர் இருந்த எப்படி முன்னேறும் ரேவதி......ரேவதி wrote:எல்லாரும் இப்படிதான் சொல்றீங்க இன்னும் நாடு உருபடா வழியா காணோம்
திவ்யா- மகளிர் அணி
- பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011
Re: இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே எனது லட்சியம் - ஜெயலலிதா
திவ்யா wrote:நாட்டுக்கு உனைய மாதிரி ஒருத்தர் இருந்த எப்படி முன்னேறும் ரேவதி......ரேவதி wrote:எல்லாரும் இப்படிதான் சொல்றீங்க இன்னும் நாடு உருபடா வழியா காணோம்
ஓகே நான் அமெரிக்க போறேன்
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே எனது லட்சியம் - ஜெயலலிதா
சொன்னதா செஞ்சா sari.aappuram ungala yaarum asaichchukka mudiyaathu,asaichchukka mudiyaathu
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே எனது லட்சியம் - ஜெயலலிதா
ரேவதி wrote:எல்லாரும் இப்படிதான் சொல்றீங்க இன்னும் நாடு உருபடா வழியா காணோம்
தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை
- பாரதியார்-
Similar topics
» தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே லட்சியம்: முதல்வர்
» தமிழகத்தை சிறந்த மாநிலமாக மாற்றுவதே எனது கனவு: முதல்வர் ஜெயலலிதா
» அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியே அரசின் லட்சியம்: சுதந்திர தின விழாவில் முதல்வர் ஜெயலலிதா பேச்சு
» மாயாவதிக்காக எனது இதயம் உருகுகிறது:முதல்வர் ஜெயலலிதா
» எனது சொத்து மதிப்பு ரூ.51 கோடி: சட்டசபையில் ஜெயலலிதா தகவல்
» தமிழகத்தை சிறந்த மாநிலமாக மாற்றுவதே எனது கனவு: முதல்வர் ஜெயலலிதா
» அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியே அரசின் லட்சியம்: சுதந்திர தின விழாவில் முதல்வர் ஜெயலலிதா பேச்சு
» மாயாவதிக்காக எனது இதயம் உருகுகிறது:முதல்வர் ஜெயலலிதா
» எனது சொத்து மதிப்பு ரூ.51 கோடி: சட்டசபையில் ஜெயலலிதா தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|