புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரூ. 1 லட்சம் கோடியைத் தாண்டும் பத்மநாப சுவாமி கோவில் ரகசிய செல்வம்: கடவுள் சொத்தா, மக்கள் சொத்தா? I_vote_lcapரூ. 1 லட்சம் கோடியைத் தாண்டும் பத்மநாப சுவாமி கோவில் ரகசிய செல்வம்: கடவுள் சொத்தா, மக்கள் சொத்தா? I_voting_barரூ. 1 லட்சம் கோடியைத் தாண்டும் பத்மநாப சுவாமி கோவில் ரகசிய செல்வம்: கடவுள் சொத்தா, மக்கள் சொத்தா? I_vote_rcap 
30 Posts - 83%
heezulia
ரூ. 1 லட்சம் கோடியைத் தாண்டும் பத்மநாப சுவாமி கோவில் ரகசிய செல்வம்: கடவுள் சொத்தா, மக்கள் சொத்தா? I_vote_lcapரூ. 1 லட்சம் கோடியைத் தாண்டும் பத்மநாப சுவாமி கோவில் ரகசிய செல்வம்: கடவுள் சொத்தா, மக்கள் சொத்தா? I_voting_barரூ. 1 லட்சம் கோடியைத் தாண்டும் பத்மநாப சுவாமி கோவில் ரகசிய செல்வம்: கடவுள் சொத்தா, மக்கள் சொத்தா? I_vote_rcap 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
ரூ. 1 லட்சம் கோடியைத் தாண்டும் பத்மநாப சுவாமி கோவில் ரகசிய செல்வம்: கடவுள் சொத்தா, மக்கள் சொத்தா? I_vote_lcapரூ. 1 லட்சம் கோடியைத் தாண்டும் பத்மநாப சுவாமி கோவில் ரகசிய செல்வம்: கடவுள் சொத்தா, மக்கள் சொத்தா? I_voting_barரூ. 1 லட்சம் கோடியைத் தாண்டும் பத்மநாப சுவாமி கோவில் ரகசிய செல்வம்: கடவுள் சொத்தா, மக்கள் சொத்தா? I_vote_rcap 
2 Posts - 6%
mohamed nizamudeen
ரூ. 1 லட்சம் கோடியைத் தாண்டும் பத்மநாப சுவாமி கோவில் ரகசிய செல்வம்: கடவுள் சொத்தா, மக்கள் சொத்தா? I_vote_lcapரூ. 1 லட்சம் கோடியைத் தாண்டும் பத்மநாப சுவாமி கோவில் ரகசிய செல்வம்: கடவுள் சொத்தா, மக்கள் சொத்தா? I_voting_barரூ. 1 லட்சம் கோடியைத் தாண்டும் பத்மநாப சுவாமி கோவில் ரகசிய செல்வம்: கடவுள் சொத்தா, மக்கள் சொத்தா? I_vote_rcap 
1 Post - 3%
dhilipdsp
ரூ. 1 லட்சம் கோடியைத் தாண்டும் பத்மநாப சுவாமி கோவில் ரகசிய செல்வம்: கடவுள் சொத்தா, மக்கள் சொத்தா? I_vote_lcapரூ. 1 லட்சம் கோடியைத் தாண்டும் பத்மநாப சுவாமி கோவில் ரகசிய செல்வம்: கடவுள் சொத்தா, மக்கள் சொத்தா? I_voting_barரூ. 1 லட்சம் கோடியைத் தாண்டும் பத்மநாப சுவாமி கோவில் ரகசிய செல்வம்: கடவுள் சொத்தா, மக்கள் சொத்தா? I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ரூ. 1 லட்சம் கோடியைத் தாண்டும் பத்மநாப சுவாமி கோவில் ரகசிய செல்வம்: கடவுள் சொத்தா, மக்கள் சொத்தா?


   
   

Page 1 of 2 1, 2  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Jul 05, 2011 7:15 pm

ரூ. 1 லட்சம் கோடியைத் தாண்டும் பத்மநாப சுவாமி கோவில் ரகசிய செல்வம்: கடவுள் சொத்தா, மக்கள் சொத்தா? Ma2sp




"மன்னன் என்றால் பேராசை. பாவங்கள்தான் அவனது பிரதம மந்திரி.
பொய்களின் வித்தகன்தான் காசாளன். திட்டங்கள் வகுப்பதற்கு ’பாலியல்
உந்துசக்தியே’ மீண்டும் மீண்டும் கலந்தாலோசிக்கப்படுகிறது. முட்டாள்
பூசாரிகள் ஏமாற்று வித்தைகள் மூலமும் தந்திரமான வாதங்கள் மூலமும் செல்வம்
சேர்க்கிறார்கள். இருளில் தவிக்கும் ஒன்றுமறியாத பொது மக்கள் (விவசாயிகள்,
கலைஞர்கள்) மீண்டும் மீண்டும் சுரண்டப்படுகிறார்கள், லஞ்சம் கொடுக்க
நிர்பந்திக்கப்படுகிறார்கள்."

குருநானக், குரு கிரந்த சாகேப் (சோம்நாத் கோவில் மீண்டும் மீண்டும்
கொள்ளையடிக்கப்பட்ட காலக் கட்டத்தில் இன்றைய வட இந்திய பகுதிகளில் நிலவிய
அரசியல்-சமூக சூழல் குறித்த கருத்து).




திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் பல காலமாக பூட்டி வைக்கப்பட்டிருந்த
நிலவரையிலிருந்து குவியும் பொக்கிஷங்களின் மதிப்பு, ஸ்பெக்ட்ரம் ஊழலில்
நாடு அடைந்ததாக கணிக்கப்படும் நஷ்டத்திற்கு இணையான தொகையாக இருக்கும் போல்
தெரிகிறது. இந்த இணைய இதழுக்கான கட்டுரை எழுதப்படும் சமயத்திலேயே அதன்
மதிப்பு ரூ. 1 லட்சம் கோடியைத் தாண்டி வளர்ந்துகொண்டிருந்தது. வைரங்கள்,
தங்க நகைகள், தங்க நாணயங்களின் மேலோட்டமான இந்த மதிப்பைவிட அவற்றின் நிஜமான மதிப்பு இரு மடங்கு இருக்கும் என கணிக்கப்படுகிறது.


அந்தக் கோவிலில் கண்டுபிடிக்கப்பட்டவை அனைத்தும் கோவிலின் சொத்து என்பதால்
அதை எதன் பொருட்டும் கைவைக்கக்கூடாது; அவை கடவுள் பத்மநாப சுவாமிக்குச்
சொந்தமானவை என்று பக்திமிகுதியில் சொல்பவர்களின் குரலில் தெரியும்
உறுதியைப் பார்க்கும் போது இது ஒரு பிரச்சனைக்குரிய தலைப்பு என்பதை எளிதாக
புரிந்துகொள்ள முடிகிறது. திருப்பதி ஏழுமலையானைவிட திருவனந்தபுரம்
பத்மநாபசுவாமி பணக்காரராகிவிட்டார் என்று எழுதும் பத்திரிகைகள் இத்தகைய
மேலோட்டமான பார்வைக்கும் கடும் சர்ச்சைகளுக்கும் தூபம் போடுகின்றன.


மன்னராட்சிக் காலத்தில் கோவில்கள், குறிப்பாக தென்னிந்திய கோவில்கள்,
வெறும் ஆன்மீக மையமாக இருந்ததில்லை என்பதை ஏராளமான ஆய்வாளர்கள்
எழுதியிருக்கிறார்கள். அது செல்வத்தின், அதிகாரத்தின் மையமாகவும்
இருந்திருக்கிறது. மன்னராட்சிக் காலத்தில் மக்களை கசக்கிப் பிழிந்து
வாங்கப்பட்ட வரிப் பணத்தால் பிரம்மாண்டமாக கட்டப்பட்ட கோவில்கள்
அரசாங்கத்தின் கஜானாவாகவும் இருந்திருக்கின்றன. தற்போதைய குஜராத்தில் உள்ள
சோம்நாத் கோவிலை கஜினி முகமது கொள்ளையடித்தது செல்வத்தை களவாடுவதற்காக
மட்டுமல்ல என்ற பார்வை உள்ளது. அன்றைய இந்திய மன்னர்கள் மீண்டும் வலுப் பெற
விடாமல் நிலைகுலையச் செய்வதும் கஜினி முகமதுவின் நோக்கம் என்று
கூறப்படுகிறது. தங்க நாணயங்களே முக்கியமான பண்ட மாற்றுப் பொருளாக இருந்த
காலக் கட்ட்த்தில் ஒரு கோவிலைக் கொள்ளையடிப்பது என்பது இன்றைய ரிசர்வ்
வங்கியை வழித்துத் துடைத்து அள்ளிச் செல்வதற்குச் சமம்.


உங்கள் யூகம் சரிதான். திருவனந்தபுரத்தின் பத்மநாப சுவாமி கோவிலிலிருந்து
எடுத்த பொக்கிஷங்களில் கணிசமானவை இந்திய ரிசர்வ் வங்கியில் சேர்ப்பிக்க
வேண்டியவையாக இருக்கலாம். திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர்கள்
விவசாயிகளிடமும் கலைஞர்களிடமும் பெற்ற வரியிலிருந்து உருவாக்கப்பட்டவையே
அந்த கணிசமான பொக்கிஷங்கள். அவற்றில் சில கோவிலுக்கு தானமாக
கொடுக்கப்பட்டிருக்கலாம். ஆனால் கணிசமான வைரங்களும் நகைகளும் மன்னரின்
சொத்துக்களாக அங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கக்கூடும்.


இன்றைய கன்னியாகுமரி மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு தமிழக பகுதிகளை ஒரு
காலத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானம் கட்டுப்படுத்தியுள்ளது. பத்மநாபசுவாமி
கோவிலிலிருந்து கிடைக்கும் சொத்துக்களில் நமது மூதாதைய தமிழர்களின் வரிப்
பணமும் அடங்கியிருக்கலாம். "ஆண்களின் தாடி, மீசைக்கும், பெண்களின் மார்பக
வளர்ச்சிக்கும்" அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானம் வரி வசூலித்தது என்று
அகிலத் திரட்டு நூலில் (அய்யா வைகுண்டர்) குறிப்பிடப்படுகிறது. " "அடிப்படை
உரிமைகள், சொந்த நிலங்கள், உணர்வுகள் எல்லாமே பறிக்கப்பட்ட இவர்களுக்கு
(இன்றைய குமரி மாவட்ட பிற்படுத்தப்பட்ட தமிழர்கள்) கொடுக்கப்பட்ட மிகக்
குறைந்த கூலியும் ‘வரி’ என்ற பெயரில் அடக்குமுறையை பிரயோகப்படுத்தி
பிடுங்கப்பட்டது" என்று திருவிதாங்கூர் ஆட்சி நிர்வாகம் பற்றி
குறிப்பிடப்படுகிறது.


திருப்பதிக்கு கிடைக்கும் செல்வத்தையும் திருவனந்தபுரம் பத்மநாப சுவாமியின்
வசமிருந்த சொத்துக்களையும் ஒப்பிடும் அபத்தம்தான் இந்தச் சொத்துக்கள்
யாருக்கு என்ற குழப்பத்தையும் ஏற்படுத்துகிறது. திருப்பதிக்கு வருவது
பக்தர்கள் தங்கள் சொந்தப் பணத்திலிருந்து, சொந்த விருப்பத்தின் பேரில்
கொடுத்தது. திருப்பதியில் குவியும் இவ்வளவு நிதியையும் பொருளையும்கூட
எடுத்து கல்விக்கும் இன்ன பிற பொதுக் காரியங்களுக்கும் செலவிட வேண்டும்
என்று கூறுகிறவர்கள் உண்டு. ஆனால் எவ்வாறு ஒரு தனிநபர் தனது செல்வத்தை
எவ்வாறு செலவிட வேண்டும் என்று சமூகம் நிர்பந்திக்க முடியாதோ, அதே போல தனி
நபர்கள் குவிக்கும் இவ்வளவு பெரிய செல்வத்தையும் சமூகம் தனதாக்கிக்கொள்ள
முடியாது. கிட்டத்தட்ட 10 கோடி பேர் சேரியில் வசிக்கும் ஒரு தேசத்தில்,
33,000 கோடி ரூபாய் ஒரு கோவிலில் உறங்கிக்கொண்டிருப்பது இந்த தேசத்தின்
மனிதாபிமான மதிப்பீடுகளை இழிந்து கூறும் முரண்பாடு என்றாலும்கூட அந்தப்
பணத்தின் மீது சமூகம் நேரடியாக கைவைக்க முடியாது. ஆனால் பத்மநாபசுவாமி
கோவிலில் சொத்துக்கள் மக்கள் கொடுத்தது அல்ல. பொது மக்களின் நிதியைக்
கையாளும் பொறுப்பைக் கொண்டிருந்த ஒரு மன்னனுக்குச் சொந்தமானவை அவை.
திருவிதாங்கூர் சமஸ்தானம் இந்திய குடியரசுடன் இணைக்கப்பட்டுவிட்டதால் அந்த
பொக்கிஷங்கள் இந்திய அரசாங்கத்தின் ஒரு பகுதியாகவே இருக்க முடியும்.


ஒன்றைக் கொடுத்துவிட்டு அதற்கான "பரிசாக மதப் பற்றாளர்கள் பாவ மன்னிப்பை
(கடவுளிடம்) கோருகிறார்கள். தங்களின் தாராள உள்ளத்தை அதிலேயே
வீணடித்துவிடுகிறார்கள்" என்று மத நம்பிக்கையாளர்கள் பற்றி 15ஆம்
நூற்றாண்டில் குருநானக் முன்வைத்த வாதம் 21ஆம் நூறாண்டிலும் மாறாமல்
தொடர்வது இந்த தேசம் சமூக-அரசியல் மறுமலர்ச்சிப் பாதையில் நத்தை
வேகத்திலேயே முன்னேறுகிறது என்பதைக் காட்டுகிறது.


மதம் மனிதர்களை மதம் பிடிக்கச் செய்வது என்பதால் கேரள அரசு சட்டப்படி,
நியாயப்படி தனக்கு உரிய சொத்தின் மீது கைவைக்கத் தயங்குகிறது. ஆனால் அரசின்
கைகளில் இந்த சொத்துக்கள் விரைவாக சென்று சேராவிட்டால் நம்
சமூகத்திற்குள்ளேயே இருக்கும் கஜினி முகமதுகள் காலப் போக்கில் இந்த பொதுச்
சொத்துக்களை தங்களின் தனிச் சொத்துக்களாக்கிவிடுவார்கள்.


உயிரோசை

நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Tue Jul 05, 2011 7:53 pm

கட்டுரை நிறைய கேள்விகளையே - பதில் தெரியாத கேள்விகளையே எழுப்பி உள்ளது.

அரசியல் சார்பற்ற, மத சார்பற்ற சமூக பிரக்ஞையோடு செயல்பட்டாலே தீர்வு ஒன்று காணலாம்.

இல்லையேல் அதிகபச்சமாக சில கல்வி நிறுவனங்கள், மருத்துவ மையங்கள் நிறுவப் பெற்று மற்ற பொக்கிஷங்கள் மக்கள் காண்பதர்க்காகவும், கோவிலின் கஜானாவிலும் அடைக்கப் படும் - ஒரு பிரயோஜனமும் இல்லாமல்.

வரும் நாட்களில், வருடங்களில் அறிய வருவோம்...



நட்புடன் - வெங்கட்
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Tue Jul 05, 2011 8:13 pm

அதில்லப்பா இந்த வெள்ளைக்காரன் எவ்வளவு சொத்துக்களை கொண்டுபோயிருப்பான் ? கடவுளே கடவுளே


கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Jul 06, 2011 5:17 am

kannan3536 wrote:அதில்லப்பா இந்த வெள்ளைக்காரன் எவ்வளவு சொத்துக்களை கொண்டுபோயிருப்பான் ? கடவுளே கடவுளே
ரூ. 1 லட்சம் கோடியைத் தாண்டும் பத்மநாப சுவாமி கோவில் ரகசிய செல்வம்: கடவுள் சொத்தா, மக்கள் சொத்தா? 359383

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Jul 06, 2011 9:32 am

அதிர்ச்சி அதிர்ச்சி



ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Wed Jul 06, 2011 9:57 am

கடவுளால் காப்பாற்றப்பட்ட மக்கள் சொத்து

தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Wed Jul 06, 2011 9:59 am


"மன்னன் என்றால் பேராசை. பாவங்கள்தான் அவனது பிரதம மந்திரி.
பொய்களின் வித்தகன்தான் காசாளன். திட்டங்கள் வகுப்பதற்கு ’பாலியல்
உந்துசக்தியே’ மீண்டும் மீண்டும் கலந்தாலோசிக்கப்படுகிறது. முட்டாள்
பூசாரிகள் ஏமாற்று வித்தைகள் மூலமும் தந்திரமான வாதங்கள் மூலமும் செல்வம்
சேர்க்கிறார்கள். இருளில் தவிக்கும் ஒன்றுமறியாத பொது மக்கள் (விவசாயிகள்,
கலைஞர்கள்) மீண்டும் மீண்டும் சுரண்டப்படுகிறார்கள், லஞ்சம் கொடுக்க
நிர்பந்திக்கப்படுகிறார்கள்."


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Fri Sep 06, 2013 10:47 pm

மக்களாட்சிக் காலத்தில் சுவிஸ் வங்கிகளில் சேர்ந்துள்ள கருப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்து நாட்டின் வளர்ச்சிக்குச் செலவிட வேண்டும் எனும் கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது. அதே போல் மன்னராட்சிக் காலத்தில் கோயில்களில் சேர்க்கப்பட்டுள்ள இது போன்ற "கருப்புச் செல்வங்களை"யும் கைப்பற்றி மக்கள் நலத்திட்டங்களுக்குச் செலவிட வேண்டும்.
கோயில்கள், ஆசிரமங்கள் போன்ற மத நிறுவனங்களின் சொத்துக்கள் வரைமுறைக்குட்படுத்தப்பட வேண்டும். தற்போது சிக்கியுள்ள செல்வங்களையும் இனி சிக்கப் போகும் சொத்துக்களையும் அரசின் கருவூலத்துக்குப் போய்ச் சேரும் வகையில் புதிய கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும். இல்லையென்றால் கணக்கில் வராத கருப்பு பணம் கோயில்களிலும் ஆசிரமங்களிலும் நகைகளாகக் குவிவது இன்னும் பெருகும்.
ஒரு பவுன் தங்கம் வாங்க முடியாமல் கல்யாணக் கனவுகளைத் தள்ளிவைத்துக் காத்திருக்கும் ஏராளமான பேரிளம் பெண்களைக் கொண்ட நாட்டில் பத்மநாபசுவாமி சிலைக்கு இத்தனை அலங்காரம் தேவையா? இந்த செல்வங்கள் முழுவதும் தங்கள் வசமே இருக்க வேண்டும் என்று கோயில் நிர்வாகம் கூறி வருகிறது. ஒரு கோயிலுக்கு எதற்கு இத்தனை சொத்துக்கள்? தங்க நகைகளுடன் மட்டுமே பக்தர்களுக்குக் காட்சி தருவேன் என்று அடம்பிடிக்கும் எந்தக் கடவுளும் கருணையுள்ளவராக இருக்க முடியாது.

நன்றி: கீற்று

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Sep 07, 2013 11:18 am

நன்றி அன்பு மலர் அந்த காலத்தில் மன்னர்கள் இது போல இந்து கோவில்களில் பொக்கிஷங்களை பாதுகாத்ததற்கு பஞ்சம் ஏற்படும் காலங்களில் குடிமக்களை காப்பதற்கு தான்.

இப்போ அரசியல் நாய்கள் சுரண்டி சுரண்டி நாட்டில் பற்றாக்குறையையும் பஞ்சத்தையும் உண்டாக்கிவிட்டு கோவிலில் கை வைக்க பார்க்கிறார்கள்.

முதலில் இவர்கள் சுரண்டி சேமித்து வைத்ததை பிடுங்கி நாட்டு நாளப்பணி திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும், பிறகு கோவிலை பற்றி பேசலாம்.

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Sat Sep 07, 2013 11:23 am

( தங்க நகைகளுடன் மட்டுமே பக்தர்களுக்குக் காட்சி தருவேன் என்று அடம்பிடிக்கும் எந்தக் கடவுளும் கருணையுள்ளவராக இருக்க முடியாது.)


ஆனால் அரசியல்வாதிகளும் , அதிகாரிகளும் ஆட்டய போட்டுருவாங்களே ........

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக