Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறுby Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
prajai |
| |||
rajuselvam |
| |||
kavithasankar |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Guna.D |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு
+27
அதி
sinthiyarasu
கபாலி
T.PUSHPA
ராஜா
அ.இராஜ்திலக்
rameshnaga
Aathira
Dr.சுந்தரராஜ் தயாளன்
kitcha
கேசவன்
பிஜிராமன்
சரவணன்1
மகா பிரபு
தே.மு.தி.க
குடந்தை மணி
ஹாசிம்
கா.ந.கல்யாணசுந்தரம்
தாமு
கலைவேந்தன்
சிவா
அன்பு தளபதி
dsudhanandan
bala23
அசுரன்
மஞ்சுபாஷிணி
சதாசிவம்
31 posters
Page 9 of 10
Page 9 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு
First topic message reminder :
Nalla Tamil Arivom - purananuru
தமிழ் நூல்களில் பெரும் பிரிவு பதினெண் கீழ் கணக்கு நூல்கள், பதினெண் மேல் கணக்கு நூல்கள். கீழ் கணக்கு நூல்கள் வாழ்விற்கு தேவையான அறத்தையும் நீதி போதனையும் கூறுபவை ஆகும். மேல் கணக்கு நூல்கள் எட்டுத் தொகை, பத்து பாட்டு நூல்கள் ஆகும். எட்டுத் தொகை நூல்களுள் அறம், போர், வீரம் போன்ற புற வாழ்க்கை பற்றி கூறும் நூல் புற நானூறு. மொத்தம் நானூறு பாடல்களை கொண்டது.
தற்காலத்தில் நாம் ஒருவரிடம் உதவி கேட்டு, கேட்டது கிடைத்தால் அவரை பாராட்டுகிறோம். உதவியை மறுத்தாலோ, குறைத்து கொடுத்தோலோ அவரை பற்றி குறை கூறுவோம். அப்படி உதவியை தேடிப்போய் நமக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்றாலும் நாம் அவரை பழிக்கக்கூடாது என்பதை மிக அழகாக இந்த பாடல் உணர்த்துகிறது. தமிழின் இனிமையும், வாழ்வியல் உண்மையும் இந்த சங்கப் பாடல்கள் மிக அழகாக எடுத்து காட்டுகிறது.
பாடல் 1: அதனினும் உயர்ந்தது
பாடியவர் : கழைதின் யானையார்
பாடப்பட்டோன் : வல் வில் ஓரி
திணை : பாடாண் துறை : பரிசில்
ஈஎன இரத்தல் இழிந்தன்று, அதன் எதிர்
ஈயென் என்றல் அதனினும் இழிந்தன்று;
கொள் எனக் கொடுத்தல் உயர்தன்று, அதன் எதிர்
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்தன்று;
தெண்ணீர்ப் பரப்பின் இமிழ்திரைப் பெருங்கடல்
உண்ணார் ஆகுப, நீர் வேட்டோரே;
ஆவும் மாவும் சென்று உணக், கலங்கிச்,
சேறோடு பட்ட சிறுமையத்து ஆயினும்
உண்ணீர் மருங்கின் அதர்பல ஆகும்;
புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை
உள்ளிச் சென்றோர் பழியலர்; அதனாற்
புலவேன் வாழியர், ஓரி ; விசும்பின்
கருவி வானம் போல
வரையாது சுரக்கும் வள்ளியோய் ! நின்னே
பொருளுரை:
பிச்சை எடுப்பது இழிவான செயல் இல்லை, அதை விட
இழிவான செயல் பிச்சை இடாமல் இருப்பது
ஒருவனுக்கு கொடுத்தல் உயர்வான செயல் இல்லை, அதை விட
கொடுப்பதை வேண்டாம் என்று மறுத்தல் உயர்வானது
நுரை பொங்கும் கடல் நீர் மிகப் பெரியதாக இருந்தாலும்
தாகம் உள்ளவருக்கு குடிநீராகாது ; ஆனால்
பசுக்களும், மற்ற விலங்குகளும் சென்று நீர் அருந்தி
சேறு நிறைந்த சிறு குளம் ஆனாலும், மனிதர்கள்
தாகத்திற்கு அந்த குளத்து நீரையே அருந்துவர்.
அது போல் மிகப் பெரியவர் பலர் இருந்தாலும்
அவர்கள் கடல் நீரை போன்றவர்கள், எங்களின் துயர் துடைக்க மாட்டார்கள்,
நீ வறுமை அடைந்து வசதி குறைந்து இருந்தாலும்
பலன் எதிர் பார்க்காமல் கொடுக்கும் வானத்து மேகம் போல்
அள்ளி அள்ளி எங்களுக்கு வழங்குவாய்,
ஆனால் இன்று நீ வழங்காது இருப்பது எங்கள் குறையே,
நாங்கள் புறப்படும் வேளையில் பறவை செய்த சகுணங்கள் சரியில்லை,
எங்களின் நேரம் சரியில்லை.
கேட்டவர்க்கு கொடுக்கும் வள்ளல் ஓரியே, நீ நீடோடி வாழ்க
Nalla Tamil Arivom - purananuru
தமிழ் நூல்களில் பெரும் பிரிவு பதினெண் கீழ் கணக்கு நூல்கள், பதினெண் மேல் கணக்கு நூல்கள். கீழ் கணக்கு நூல்கள் வாழ்விற்கு தேவையான அறத்தையும் நீதி போதனையும் கூறுபவை ஆகும். மேல் கணக்கு நூல்கள் எட்டுத் தொகை, பத்து பாட்டு நூல்கள் ஆகும். எட்டுத் தொகை நூல்களுள் அறம், போர், வீரம் போன்ற புற வாழ்க்கை பற்றி கூறும் நூல் புற நானூறு. மொத்தம் நானூறு பாடல்களை கொண்டது.
தற்காலத்தில் நாம் ஒருவரிடம் உதவி கேட்டு, கேட்டது கிடைத்தால் அவரை பாராட்டுகிறோம். உதவியை மறுத்தாலோ, குறைத்து கொடுத்தோலோ அவரை பற்றி குறை கூறுவோம். அப்படி உதவியை தேடிப்போய் நமக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்றாலும் நாம் அவரை பழிக்கக்கூடாது என்பதை மிக அழகாக இந்த பாடல் உணர்த்துகிறது. தமிழின் இனிமையும், வாழ்வியல் உண்மையும் இந்த சங்கப் பாடல்கள் மிக அழகாக எடுத்து காட்டுகிறது.
பாடல் 1: அதனினும் உயர்ந்தது
பாடியவர் : கழைதின் யானையார்
பாடப்பட்டோன் : வல் வில் ஓரி
திணை : பாடாண் துறை : பரிசில்
ஈஎன இரத்தல் இழிந்தன்று, அதன் எதிர்
ஈயென் என்றல் அதனினும் இழிந்தன்று;
கொள் எனக் கொடுத்தல் உயர்தன்று, அதன் எதிர்
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்தன்று;
தெண்ணீர்ப் பரப்பின் இமிழ்திரைப் பெருங்கடல்
உண்ணார் ஆகுப, நீர் வேட்டோரே;
ஆவும் மாவும் சென்று உணக், கலங்கிச்,
சேறோடு பட்ட சிறுமையத்து ஆயினும்
உண்ணீர் மருங்கின் அதர்பல ஆகும்;
புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை
உள்ளிச் சென்றோர் பழியலர்; அதனாற்
புலவேன் வாழியர், ஓரி ; விசும்பின்
கருவி வானம் போல
வரையாது சுரக்கும் வள்ளியோய் ! நின்னே
பொருளுரை:
பிச்சை எடுப்பது இழிவான செயல் இல்லை, அதை விட
இழிவான செயல் பிச்சை இடாமல் இருப்பது
ஒருவனுக்கு கொடுத்தல் உயர்வான செயல் இல்லை, அதை விட
கொடுப்பதை வேண்டாம் என்று மறுத்தல் உயர்வானது
நுரை பொங்கும் கடல் நீர் மிகப் பெரியதாக இருந்தாலும்
தாகம் உள்ளவருக்கு குடிநீராகாது ; ஆனால்
பசுக்களும், மற்ற விலங்குகளும் சென்று நீர் அருந்தி
சேறு நிறைந்த சிறு குளம் ஆனாலும், மனிதர்கள்
தாகத்திற்கு அந்த குளத்து நீரையே அருந்துவர்.
அது போல் மிகப் பெரியவர் பலர் இருந்தாலும்
அவர்கள் கடல் நீரை போன்றவர்கள், எங்களின் துயர் துடைக்க மாட்டார்கள்,
நீ வறுமை அடைந்து வசதி குறைந்து இருந்தாலும்
பலன் எதிர் பார்க்காமல் கொடுக்கும் வானத்து மேகம் போல்
அள்ளி அள்ளி எங்களுக்கு வழங்குவாய்,
ஆனால் இன்று நீ வழங்காது இருப்பது எங்கள் குறையே,
நாங்கள் புறப்படும் வேளையில் பறவை செய்த சகுணங்கள் சரியில்லை,
எங்களின் நேரம் சரியில்லை.
கேட்டவர்க்கு கொடுக்கும் வள்ளல் ஓரியே, நீ நீடோடி வாழ்க
Last edited by சதாசிவம் on Sun May 27, 2012 7:52 am; edited 3 times in total
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு
அதி wrote:கடைசி பாடலுக்கான விளக்கம் மிக அருமை![]()
நன்றி அதி....படித்து பாராட்டிய உங்கள் மதிக்கு
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு
ஈடு செய்யா முடியா இழப்பு
வாழ்க்கையில் ஒவ்வொரு தருணமும் வித்தியாசமானது. ஒரு நேரம் மகிழ்ச்சி, ஒரு நேரம் துக்கம் என்று மாறி மாறி வருகிறது. நண்பர்களுடன் ஊர் சுற்றல், உறவுகளுடன் உரையாடல், உடன் வேலை பார்பபவருடன் அரட்டை என்று மகிழ்ச்சியின் ஒரு புறம் இருந்தாலும், நெருங்கியவரின் துன்பம், மருத்துவச் செய்தி நம்மை வலிக்கச் செய்கிறது. இயல்பில் இருந்து மாறச் செய்கிறது. இப்படி துன்பம் விளைவிக்கும் விஷயங்களில் உறவுகளின் மரணம் கொடுமையானது. மரணம் நிதர்சனம், தவிர்க்க முடியாது என்று தெரிந்து இருந்தாலும், நம் உறவுகளின் மரணத்தை நம்மால் ஏற்க முடியவில்லை.
இப்படி நெருக்கமாகப் பழகிய ஒருவரை இழந்து வருந்திப் பாடிய புறப் பாடல் இது.
கோப்பொருஞ்சோழனும் , பொத்தியாரும் சிறந்த நண்பர்கள். பிசிராந்தையாரும் சோழனுக்குச் சிறந்த நண்பர் ஆவார். இவர்கள் இருவரும் சந்தித்ததில்லை. சந்திக்காமலே நெருக்கமான நட்பு உடையவர்கள். ஆனால் பொத்தியாரும் சோழனும் நெருங்கிப் பழகியவர்கள். இவர்கள் இருவரையும் இணைத்து தான் பேச்சு வழங்கப்பட்டது. சோழன் வடக்கிருந்து உயிர் துறக்கும் வேலை வந்தது. காவிரி ஆறில் நடுவில் இருக்கும் ஒரு மண்மேட்டில் வடக்கிருக்கிறான். பொத்தியாரும் அவருடன் வடக்கிருந்து உயிர் துறக்க வருகிறார். ஆனால் பொத்தியார் மனைவி கருவுற்றிருப்பதால் குழந்தை பிறக்கும் வரை நீ வடக்கிருக்க முடியாது என்று கூறி பொத்தியாரை சோழன் விளக்கி விடுகிறார். தன் ஊரான உறையூருக்குச் சென்று திரும்பி சோழன் இல்லாத மூதூரின் நிலையைப் பார்த்து பொத்தியார் வருந்தி அழுதுப் பாடியப் பாடல் இது. ஒவ்வொரு மரணத்திலும் நினைவுக்கு வரும் பாடல் இது.
பாடல் 27: பெருஞ்சோறு பயந்த யானை (புறம் 220)
பாடியவர் : பொத்தியார்
பாடப்பட்டோன் : கோப்பொருஞ் சோழன்
திணை : பொதுவியல் துறை : கையறு நிலை
பெருஞ்சோறு பயந்து பல்யாண்டு புரந்த
பெருங்களி றிழந்த பைதற் பாகன்
அதுசேர்ந் தல்கிய வழுங்க லாலை
வெளில்பா ழாகக் கண்டுகலுழ்ந் தாங்குக்
கலங்கினே னல்லனோ யானே பொலந்தார்த்
தேர்வண் கிள்ளி போகிய
பேரிசை மூதூர் மன்றங் கண்டே.
பொருள் விளக்கம்
பொன்னால் ஆன மாலையை உடைய வன்மையான தேர் உடைய கிள்ளியே, நீ இல்லாமல் இருக்கும் புகழுடைய மூதூர் மன்றம் காணும் போது......நன்கு உணவு உண்டு, பல ஆண்டு காலம் உடன் வாழ்ந்த அழகான மிகப் பெரிய யானையை இழந்து துன்பப்படும் பாகன், அது தினமும் இருந்து விளையாடிய, உண்டு ,உறங்கிய இடத்தைப் பார்த்து, அது கட்டப்பட்டு கிடந்த கம்பம் ஒருவரும் இல்லாமல் வெற்றாக இருக்கும் நிலையைப் பார்த்து வருந்துவது போல் உன்னுடன் உயிர் இழக்கும் பாக்கியம் கிடைக்காமல் என்னை வருந்தச் செய்து விட்டாய். ஆடலும் பாடலும் கேளிக்கையும் மகிழ்ச்சியும் நிறைந்து இருந்த மூதூர் மன்றத்தின் அழகை யான் எங்குக் காண்பேன் !!!! உன் இழப்பை எது ஈடு செய்ய இயலும்.
பாடலின் சிறப்பு
பண்டைய நாட்களில் தமிழ் போர்ப் படையில் யானைகள் முக்கியப் பங்கு வகித்தது. ஏன் உலகிலேயே யானையை வைத்து போரிட்ட பெருமை இந்தியர்களுக்கு மட்டும் தான் உண்டு. உலகை வென்ற மாவீரன் அலக்சாந்தரும் இந்திய மன்னன் போரசின் யானைப் படையை கண்டு நடுங்கினான் என்றால் இதன் பலத்தை சொல்லி மிகையாகாது. இப்படி இருக்கும் யானைக்கு தீனிப் போட தனியாக பெரிய வயல் வெளிகள் வகுத்து அதில் இருந்து வரும் உணவுகளை யானைக் வழங்குவது மரபு , இவ்வயல்களுக்கு யானை மானியம் என்று பெயர். யானையை அடைத்து வைக்க பெரிய இடம் தேவைப்படுகிறது. இப்படி நாள்தோறும் உணவு எடுத்து, யானைக்கு வழங்கிய பாகன் அந்த யானையை இழந்து இருக்கும் நிலை தான் உறவுகளை இழந்து இருப்பவன் நிலை. யானை ஆளுமை செய்த இடத்தை நிரப்ப முடியாது. மிகப்பெரிய உருவம் இருக்கும் போது, யானை கொட்டகை முழுவதும் நிறைந்து இருக்கும். அது இல்லாமல் இருக்கும் போது தான், அந்த இடம் எவ்வளவு பெரிய வெற்றிடம் என்று கண்களுக்கு காட்சி அளிக்கும். நண்பனின் இழப்பு இப்படித் தான். இருக்கும் வரை பெரிதாகத் தெரிவதில்லை, இழந்த போது அதை நிரப்ப ஒன்றாலும் இயல முடிவதில்லை.
புறம் வளரும்
வாழ்க்கையில் ஒவ்வொரு தருணமும் வித்தியாசமானது. ஒரு நேரம் மகிழ்ச்சி, ஒரு நேரம் துக்கம் என்று மாறி மாறி வருகிறது. நண்பர்களுடன் ஊர் சுற்றல், உறவுகளுடன் உரையாடல், உடன் வேலை பார்பபவருடன் அரட்டை என்று மகிழ்ச்சியின் ஒரு புறம் இருந்தாலும், நெருங்கியவரின் துன்பம், மருத்துவச் செய்தி நம்மை வலிக்கச் செய்கிறது. இயல்பில் இருந்து மாறச் செய்கிறது. இப்படி துன்பம் விளைவிக்கும் விஷயங்களில் உறவுகளின் மரணம் கொடுமையானது. மரணம் நிதர்சனம், தவிர்க்க முடியாது என்று தெரிந்து இருந்தாலும், நம் உறவுகளின் மரணத்தை நம்மால் ஏற்க முடியவில்லை.
இப்படி நெருக்கமாகப் பழகிய ஒருவரை இழந்து வருந்திப் பாடிய புறப் பாடல் இது.
கோப்பொருஞ்சோழனும் , பொத்தியாரும் சிறந்த நண்பர்கள். பிசிராந்தையாரும் சோழனுக்குச் சிறந்த நண்பர் ஆவார். இவர்கள் இருவரும் சந்தித்ததில்லை. சந்திக்காமலே நெருக்கமான நட்பு உடையவர்கள். ஆனால் பொத்தியாரும் சோழனும் நெருங்கிப் பழகியவர்கள். இவர்கள் இருவரையும் இணைத்து தான் பேச்சு வழங்கப்பட்டது. சோழன் வடக்கிருந்து உயிர் துறக்கும் வேலை வந்தது. காவிரி ஆறில் நடுவில் இருக்கும் ஒரு மண்மேட்டில் வடக்கிருக்கிறான். பொத்தியாரும் அவருடன் வடக்கிருந்து உயிர் துறக்க வருகிறார். ஆனால் பொத்தியார் மனைவி கருவுற்றிருப்பதால் குழந்தை பிறக்கும் வரை நீ வடக்கிருக்க முடியாது என்று கூறி பொத்தியாரை சோழன் விளக்கி விடுகிறார். தன் ஊரான உறையூருக்குச் சென்று திரும்பி சோழன் இல்லாத மூதூரின் நிலையைப் பார்த்து பொத்தியார் வருந்தி அழுதுப் பாடியப் பாடல் இது. ஒவ்வொரு மரணத்திலும் நினைவுக்கு வரும் பாடல் இது.
பாடல் 27: பெருஞ்சோறு பயந்த யானை (புறம் 220)
பாடியவர் : பொத்தியார்
பாடப்பட்டோன் : கோப்பொருஞ் சோழன்
திணை : பொதுவியல் துறை : கையறு நிலை
பெருஞ்சோறு பயந்து பல்யாண்டு புரந்த
பெருங்களி றிழந்த பைதற் பாகன்
அதுசேர்ந் தல்கிய வழுங்க லாலை
வெளில்பா ழாகக் கண்டுகலுழ்ந் தாங்குக்
கலங்கினே னல்லனோ யானே பொலந்தார்த்
தேர்வண் கிள்ளி போகிய
பேரிசை மூதூர் மன்றங் கண்டே.
பொருள் விளக்கம்
பொன்னால் ஆன மாலையை உடைய வன்மையான தேர் உடைய கிள்ளியே, நீ இல்லாமல் இருக்கும் புகழுடைய மூதூர் மன்றம் காணும் போது......நன்கு உணவு உண்டு, பல ஆண்டு காலம் உடன் வாழ்ந்த அழகான மிகப் பெரிய யானையை இழந்து துன்பப்படும் பாகன், அது தினமும் இருந்து விளையாடிய, உண்டு ,உறங்கிய இடத்தைப் பார்த்து, அது கட்டப்பட்டு கிடந்த கம்பம் ஒருவரும் இல்லாமல் வெற்றாக இருக்கும் நிலையைப் பார்த்து வருந்துவது போல் உன்னுடன் உயிர் இழக்கும் பாக்கியம் கிடைக்காமல் என்னை வருந்தச் செய்து விட்டாய். ஆடலும் பாடலும் கேளிக்கையும் மகிழ்ச்சியும் நிறைந்து இருந்த மூதூர் மன்றத்தின் அழகை யான் எங்குக் காண்பேன் !!!! உன் இழப்பை எது ஈடு செய்ய இயலும்.
பாடலின் சிறப்பு
பண்டைய நாட்களில் தமிழ் போர்ப் படையில் யானைகள் முக்கியப் பங்கு வகித்தது. ஏன் உலகிலேயே யானையை வைத்து போரிட்ட பெருமை இந்தியர்களுக்கு மட்டும் தான் உண்டு. உலகை வென்ற மாவீரன் அலக்சாந்தரும் இந்திய மன்னன் போரசின் யானைப் படையை கண்டு நடுங்கினான் என்றால் இதன் பலத்தை சொல்லி மிகையாகாது. இப்படி இருக்கும் யானைக்கு தீனிப் போட தனியாக பெரிய வயல் வெளிகள் வகுத்து அதில் இருந்து வரும் உணவுகளை யானைக் வழங்குவது மரபு , இவ்வயல்களுக்கு யானை மானியம் என்று பெயர். யானையை அடைத்து வைக்க பெரிய இடம் தேவைப்படுகிறது. இப்படி நாள்தோறும் உணவு எடுத்து, யானைக்கு வழங்கிய பாகன் அந்த யானையை இழந்து இருக்கும் நிலை தான் உறவுகளை இழந்து இருப்பவன் நிலை. யானை ஆளுமை செய்த இடத்தை நிரப்ப முடியாது. மிகப்பெரிய உருவம் இருக்கும் போது, யானை கொட்டகை முழுவதும் நிறைந்து இருக்கும். அது இல்லாமல் இருக்கும் போது தான், அந்த இடம் எவ்வளவு பெரிய வெற்றிடம் என்று கண்களுக்கு காட்சி அளிக்கும். நண்பனின் இழப்பு இப்படித் தான். இருக்கும் வரை பெரிதாகத் தெரிவதில்லை, இழந்த போது அதை நிரப்ப ஒன்றாலும் இயல முடிவதில்லை.
புறம் வளரும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு
ஒழிக கூற்றம்
நமக்கு வேண்டப்பட்டவர்கள் இறக்கும் போது நமக்கு துன்பமும், இவருக்கு இந்த நிலை வந்துவிட்டதே என்று ஆற்றாமையும், தெய்வத்தின் மேல் கோபமும் வருகிறது. இப்படி ஒரு நிலையில் எழுந்த பாடல் இது. தன் முன் இறந்த சோழனின் நடுகல்லைப் பார்த்து பொத்தியார் வருந்திப் பாடிய பாடல் இது. நல்லவரைத் தான் மரணம் சீக்கிரம் அழைத்து விடுகிறது, நல்லவர் என்றும் பாராமல் சோழனை அழைத்துக் கொண்ட எம தர்மனை நாம் எல்லாரும் ஒன்று கூடி சபிப்போம், அவன் இது போல் ஒரு தவறை செய்யக் கூடாது என்று பாடும் புலவர்களை அழைக்கும் பாணியில் பாடப்பட்ட பாடல் இது.
பாடல் 28 : வைகம் வாரீர் (எண் : 221)
பாடியவர் : பொத்தியார்
பாடப்பட்டோன் : கோப்பொருஞ் சோழன்
திணை: பொதுவியல் துறை : கையறுநிலை
பாடுநர்க் கீத்த பல்புக ழன்னே
ஆடுநர்க் கீத்த பேரன் பினனே
அறவோர் புகழ்ந்த வாய்கோ லன்னே
திறவோர் புகழ்ந்த திண்ணன் பினனே
மகளிர் சாயன் மைந்தர்க்கு மைந்து
துகளறு கேள்வி யுயர்ந்தோர் புக்கில்
அனைய னென்னா தத்தக் கோனை
நினையாக் கூற்ற மின்னுயி ருய்த்தன்று
பைத லொக்கற் றழீஇ யதனை
வைகம் வம்மோ வாய்மொழிப் புலவீர்
நனந்தலை யுலக மரந்தை தூங்கக்
கெடுவி னல்லிசை சூடி
நடுக லாயினன் புரவல னெனவே
பொருள் விளக்கம்
பாடும் புலவர்களுக்கு மனமுவந்து அள்ளிக்கொடுக்கும் வள்ளல் என்ற புகழை உடையவனை, ஆடும் களைஞர்களுக்கு மகிழ்ந்து கொடுக்கும் அன்பு நிறைந்தவனை, அறம் நிறைந்தவர்கள் புகழும் சிறப்புடன் செங்கோல் ஆட்சி செய்யும் மன்னன் என்று பேர் எடுத்தவனை, சான்றோர் பலருக்கு நண்பனாக இருந்தவனை, பெண்களிடத்தில் மென்மையாக நடந்து கொண்டவனை, எதிரிகளிடம் கடுமையாக நடந்து கொண்டவனை, குற்றம் இல்லாத வேள்வி செய்யும் அந்தணர்களுக்கு புகலிடமாக இருந்தவனை இன்று மரணம் தழுவிக் கொண்டது. இத்தகைய சிறப்புடன் வாழ்ந்த நல்லவன் என்றும் பாராமல் தர்ம தேவன் அழைத்துச் சென்றான். சொன்ன சொல் பலிக்கும் பொய்யா மொழி உடைய புலவர்களே, வாருங்கள் அந்த கொடிய தர்ம தேவனை வையலாம், கெடுக அவன் ஆயுள். நீண்டு அகண்டு இருக்கும் இந்த உலகம், துன்பமில்லா புகழ் மாலை சூடி இன்று நடு கல் ஆனான் என் அருமை நண்பன் கோப்பெருஞ் சோழன்.
புறம் வளரும்
நமக்கு வேண்டப்பட்டவர்கள் இறக்கும் போது நமக்கு துன்பமும், இவருக்கு இந்த நிலை வந்துவிட்டதே என்று ஆற்றாமையும், தெய்வத்தின் மேல் கோபமும் வருகிறது. இப்படி ஒரு நிலையில் எழுந்த பாடல் இது. தன் முன் இறந்த சோழனின் நடுகல்லைப் பார்த்து பொத்தியார் வருந்திப் பாடிய பாடல் இது. நல்லவரைத் தான் மரணம் சீக்கிரம் அழைத்து விடுகிறது, நல்லவர் என்றும் பாராமல் சோழனை அழைத்துக் கொண்ட எம தர்மனை நாம் எல்லாரும் ஒன்று கூடி சபிப்போம், அவன் இது போல் ஒரு தவறை செய்யக் கூடாது என்று பாடும் புலவர்களை அழைக்கும் பாணியில் பாடப்பட்ட பாடல் இது.
பாடல் 28 : வைகம் வாரீர் (எண் : 221)
பாடியவர் : பொத்தியார்
பாடப்பட்டோன் : கோப்பொருஞ் சோழன்
திணை: பொதுவியல் துறை : கையறுநிலை
பாடுநர்க் கீத்த பல்புக ழன்னே
ஆடுநர்க் கீத்த பேரன் பினனே
அறவோர் புகழ்ந்த வாய்கோ லன்னே
திறவோர் புகழ்ந்த திண்ணன் பினனே
மகளிர் சாயன் மைந்தர்க்கு மைந்து
துகளறு கேள்வி யுயர்ந்தோர் புக்கில்
அனைய னென்னா தத்தக் கோனை
நினையாக் கூற்ற மின்னுயி ருய்த்தன்று
பைத லொக்கற் றழீஇ யதனை
வைகம் வம்மோ வாய்மொழிப் புலவீர்
நனந்தலை யுலக மரந்தை தூங்கக்
கெடுவி னல்லிசை சூடி
நடுக லாயினன் புரவல னெனவே
பொருள் விளக்கம்
பாடும் புலவர்களுக்கு மனமுவந்து அள்ளிக்கொடுக்கும் வள்ளல் என்ற புகழை உடையவனை, ஆடும் களைஞர்களுக்கு மகிழ்ந்து கொடுக்கும் அன்பு நிறைந்தவனை, அறம் நிறைந்தவர்கள் புகழும் சிறப்புடன் செங்கோல் ஆட்சி செய்யும் மன்னன் என்று பேர் எடுத்தவனை, சான்றோர் பலருக்கு நண்பனாக இருந்தவனை, பெண்களிடத்தில் மென்மையாக நடந்து கொண்டவனை, எதிரிகளிடம் கடுமையாக நடந்து கொண்டவனை, குற்றம் இல்லாத வேள்வி செய்யும் அந்தணர்களுக்கு புகலிடமாக இருந்தவனை இன்று மரணம் தழுவிக் கொண்டது. இத்தகைய சிறப்புடன் வாழ்ந்த நல்லவன் என்றும் பாராமல் தர்ம தேவன் அழைத்துச் சென்றான். சொன்ன சொல் பலிக்கும் பொய்யா மொழி உடைய புலவர்களே, வாருங்கள் அந்த கொடிய தர்ம தேவனை வையலாம், கெடுக அவன் ஆயுள். நீண்டு அகண்டு இருக்கும் இந்த உலகம், துன்பமில்லா புகழ் மாலை சூடி இன்று நடு கல் ஆனான் என் அருமை நண்பன் கோப்பெருஞ் சோழன்.
புறம் வளரும்
Last edited by சதாசிவம் on Sun Apr 22, 2012 2:21 pm; edited 1 time in total
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு
பாண்டிய மன்னன் மரணம் தழுவிய நிலை அவனது ஆராயாமல் எடுத்த முடிவின் விளைவு. நல்லரசன் நலம் தப்பிய செய்தி மனிதவள மேம்பாட்டுக்கு இங்கு ஊறு விளைவிக்கவில்லை. என்னிலையிலும் தன்னிலை மாறா மன்னனின் நிலைப்பாடு மனிதநேயத்தை வளர்க்கும் என சிலம்பின் வழி அறிகிறோம். தங்களின் இலக்கிய பணி எமக்கு நல்லதொரு சிந்தனையை தருகிறது. நன்றி சதாசிவம் அவர்களே.
Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு
கா.ந.கல்யாணசுந்தரம் wrote:பாண்டிய மன்னன் மரணம் தழுவிய நிலை அவனது ஆராயாமல் எடுத்த முடிவின் விளைவு. நல்லரசன் நலம் தப்பிய செய்தி மனிதவள மேம்பாட்டுக்கு இங்கு ஊறு விளைவிக்கவில்லை. என்னிலையிலும் தன்னிலை மாறா மன்னனின் நிலைப்பாடு மனிதநேயத்தை வளர்க்கும் என சிலம்பின் வழி அறிகிறோம். தங்களின் இலக்கிய பணி எமக்கு நல்லதொரு சிந்தனையை தருகிறது. நன்றி சதாசிவம் அவர்களே.
தமிழ்த் தாயின் பாதங்களை அலங்கரிப்பது சிலம்பு, ஊழ் வினை உறுத்து வந்து ஊட்டும், ஆதலால் எப்போதும் நன்மை செய்ய வேண்டும் என்று உலகுக்கு உணர்த்தும் அற்புத நூல் சிலம்பு.
தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி ஐயா,
![:நல்வரவு:](/users/1813/71/41/02/smiles/1194657695.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு
ஆற்றுமணலும் வாழ்நாளும்
தமிழன் அனைத்து தரப்பிலும் மென்மையானவனாகவும், மேன்மையானவனாகவும் நடந்து கொண்டு இருந்தான். போர் செய்யும் முன் யார் யாரை தும்பம் செய்யக்கூடாது, எவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கொள்கை வகுத்திருந்தான். சூறையாடல், பெண்களை கவர்திழுத்தல், அனைவரையும் கொல்லுதல் போன்ற இழிச் செயல்களை செய்யவில்லை. பல்லோர் வாழ பல யாகங்கள் செய்து , தெய்வ விழாக்கள் எடுத்து அனைவரும் இன்புற வாழ்வு நடத்தினான். இப்படி ஒரு சிறப்பை கூறும் அழகான புறப்பாடல் இது. இப்பாடலில் பாடப்பட்ட பாண்டிய மன்னன் பல யாகங்கள் செய்து பல் யாகக் குடுமி என்று பெயர் பெற்றவன்.
பாடல் 29: ஆற்றுமணலும் வாழ்நாளும்
பாடியவர் : நெட்டிமையார்
பாடப்பட்டோன் : பாண்டியன் பல் யாகச்சாலை முதுக்குடுமிப் பெருவழுதி
திணை : பாடாண் துறை : இயன்மொழி
ஆவு மானியற் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித்
தென்புல வாழ்நர்க் கருங்கட னிறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்
எம்மம்பு கடிவிடுது நும்மரண் சேர்மினென
அறத்தாறு நுவலும் பூட்கை மறத்திற்
கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும்
எங்கோ வாழிய குடுமி தங்கோச்
செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்த
முந்நீர் விழவி னெடியோன்
நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே.
பொருள் விளக்கம்
பசுக்களும், பேசு போன்று மென்மையான அந்தணர்களும், பெண்களும், பிணியால் அவதிப் படுவோரும், இறந்து தென்திசையில் இருக்கும் தர்ம லோகத்தில் வாழும் தங்கள் மூத்தோராயாகிய பித்ருகளுக்கு திதி செய்ய ஆண் பிள்ளை பெறாதவரும் உங்களுடைய பாதுகாப்பான இடத்தில் செல்லுங்கள், எங்களின் அம்பு புறப்படத் தயாராக உள்ளது என்று அறநெறியை மறவாது மறத்தைக் கடைபிடிக்கும் மன்னனின் கொல் யானையின் மீதிருக்கும் நெடிய கொடி வானத்தை நிழலால் மறைக்கும். இப்படி சிறப்புள்ள எங்களின் தலைவனே நீ வாழ்க. எங்களுடைய தலைவனாகிய நீ , சிவந்த நீர் போல் தள தளக்கும் பசும் பொன்னை வறியவருக்கு கொடுத்தாய், மூன்று நீர் சேரும் கடல் தெய்வத்துக்கு மக்கள் வாழ விழா எடுத்த உயர்ந்தவன் நீ. நல்ல ஆற்று நீரின் மணலின் எண்ணிக்கையை விட பலகாலம் நீ வாழ வேண்டும், பல்லாண்டு வாழ்க.
தொடரும்.
தமிழன் அனைத்து தரப்பிலும் மென்மையானவனாகவும், மேன்மையானவனாகவும் நடந்து கொண்டு இருந்தான். போர் செய்யும் முன் யார் யாரை தும்பம் செய்யக்கூடாது, எவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கொள்கை வகுத்திருந்தான். சூறையாடல், பெண்களை கவர்திழுத்தல், அனைவரையும் கொல்லுதல் போன்ற இழிச் செயல்களை செய்யவில்லை. பல்லோர் வாழ பல யாகங்கள் செய்து , தெய்வ விழாக்கள் எடுத்து அனைவரும் இன்புற வாழ்வு நடத்தினான். இப்படி ஒரு சிறப்பை கூறும் அழகான புறப்பாடல் இது. இப்பாடலில் பாடப்பட்ட பாண்டிய மன்னன் பல யாகங்கள் செய்து பல் யாகக் குடுமி என்று பெயர் பெற்றவன்.
பாடல் 29: ஆற்றுமணலும் வாழ்நாளும்
பாடியவர் : நெட்டிமையார்
பாடப்பட்டோன் : பாண்டியன் பல் யாகச்சாலை முதுக்குடுமிப் பெருவழுதி
திணை : பாடாண் துறை : இயன்மொழி
ஆவு மானியற் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித்
தென்புல வாழ்நர்க் கருங்கட னிறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்
எம்மம்பு கடிவிடுது நும்மரண் சேர்மினென
அறத்தாறு நுவலும் பூட்கை மறத்திற்
கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும்
எங்கோ வாழிய குடுமி தங்கோச்
செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்த
முந்நீர் விழவி னெடியோன்
நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே.
பொருள் விளக்கம்
பசுக்களும், பேசு போன்று மென்மையான அந்தணர்களும், பெண்களும், பிணியால் அவதிப் படுவோரும், இறந்து தென்திசையில் இருக்கும் தர்ம லோகத்தில் வாழும் தங்கள் மூத்தோராயாகிய பித்ருகளுக்கு திதி செய்ய ஆண் பிள்ளை பெறாதவரும் உங்களுடைய பாதுகாப்பான இடத்தில் செல்லுங்கள், எங்களின் அம்பு புறப்படத் தயாராக உள்ளது என்று அறநெறியை மறவாது மறத்தைக் கடைபிடிக்கும் மன்னனின் கொல் யானையின் மீதிருக்கும் நெடிய கொடி வானத்தை நிழலால் மறைக்கும். இப்படி சிறப்புள்ள எங்களின் தலைவனே நீ வாழ்க. எங்களுடைய தலைவனாகிய நீ , சிவந்த நீர் போல் தள தளக்கும் பசும் பொன்னை வறியவருக்கு கொடுத்தாய், மூன்று நீர் சேரும் கடல் தெய்வத்துக்கு மக்கள் வாழ விழா எடுத்த உயர்ந்தவன் நீ. நல்ல ஆற்று நீரின் மணலின் எண்ணிக்கையை விட பலகாலம் நீ வாழ வேண்டும், பல்லாண்டு வாழ்க.
தொடரும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு
சதாசிவம் wrote:
தமிழன் அனைத்து தரப்பிலும் மென்மையானவனாகவும், மேன்மையானவனாகவும் நடந்து கொண்டு இருந்தான்.
நல்ல பதிவு
பத்மநாபன்- பண்பாளர்
- பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012
Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு
பத்மநாபன் wrote:சதாசிவம் wrote:
தமிழன் அனைத்து தரப்பிலும் மென்மையானவனாகவும், மேன்மையானவனாகவும் நடந்து கொண்டு இருந்தான்.
நல்ல பதிவு
நன்றி பத்மநாபன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு
நல்லதொரு விளக்கம் புற நானுறுக்கு ...
ஆரூரன்- இளையநிலா
- பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012
Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு
மாவாராதே மாவாராதே
போர் பெருமை வாய்ந்தது, எனினும் துன்பம் நிறைந்தது. போருக்குச் செல்லும் வீரர்கள் அனைவரும் வீடு திரும்புவதில்லை. ஒரு சிலர் போரில் வீர மரணம் அடைந்து விடுகின்றனர். இப்படிச் சென்ற கணவன் வீடு திரும்பாததால் மனைவி புலம்பும் புலம்பலைப் பார்த்த புலவர் பாடிய பாடல் இது. இவர் பெயர் வெளியனார். இன்றைய மைசூர் சங்க காலத்தில் எருமையூர் என்று அழைக்கப்பட்டது. இப்பாடலைப் பாடிய புலவர் இந்த ஊரைச் சார்ந்தவர், ஆதலால் எருமை வெளியனார் என்று அழைக்கப்படுகிறார். குதிரை மீது செல்லும் போர்வீரனின் வீரத்தைப் பற்றியோ, அவனது குதிரைப் பற்றியோ பாடுவது குதிரைமறம் என்று அழைக்கப்படுகிறது. போருக்குச் செல்லும் போது தும்பை பூவைச் சூடிச் செல்வதால் இது தும்பைத்திணை ஆனது.
நம் தமிழ் பெண்கள் பலர் இன்றைக்கும் கணவன் பெயரை நேரடியாகப் பெயர் சொல்லி அழைக்காமல், தங்களின் பிள்ளையின் பெயரைச் சொல்லி அவர்களுடைய அப்பா என்றே விளிக்கின்றனர். இம்மரபு இப்பாடலிலும் வெளிப்பட்டுள்ளது. அழகிய காட்சியை நம் கண்முன் நிறுத்தும் சிறப்பானப் பாடலிது.
பாடல் 31: கூடல் பெரு மரம்
பாடியவர் : எருமை வெளியானார்
பாடப்பட்டோன் : பொதுவாகப் பாடியது
திணை : தும்பை துறை : குதிரை மறம்
மாவா ராதே மாவா ராதே
எல்லார் மாவும் வந்தன வெம்மிற்
புல்லுளைக் குடுமிப் புதல்வற் றந்த
செல்வ னூரு மாவா ராதே
இருபேர் யாற்ற வொரு பெருங் கூடல்
விலங்கிடு பெருமரம் போல
உலந்தன்று கொல்லவன் மலைந்த மாவே.
பொருள் விளக்கம்
குதிரை வரவில்லையே, குதிரை வரவில்லையே. போருக்குச் சென்ற அனைத்து வீரர்களின் குதிரையும் வந்துவிட்டதே, என்னுடைய இல்லத்தில் இருக்கும் சிறிய குடுமியை உடைய புதல்வனைத் தந்த செல்வன் (கணவன்) ஏறிச் சென்ற குதிரை மட்டும் இன்னும் வரவில்லையே. இரண்டு பெரிய ஆறு இணையும் கூடல் இடத்தில் விலங்குகளை கட்ட இருக்கும் மரம் ஆற்று வெள்ளத்தில் அடித்து சென்றது போல், அவனது குதிரை சாய்ந்து விட்டதா .
புறம் வளரும்
போர் பெருமை வாய்ந்தது, எனினும் துன்பம் நிறைந்தது. போருக்குச் செல்லும் வீரர்கள் அனைவரும் வீடு திரும்புவதில்லை. ஒரு சிலர் போரில் வீர மரணம் அடைந்து விடுகின்றனர். இப்படிச் சென்ற கணவன் வீடு திரும்பாததால் மனைவி புலம்பும் புலம்பலைப் பார்த்த புலவர் பாடிய பாடல் இது. இவர் பெயர் வெளியனார். இன்றைய மைசூர் சங்க காலத்தில் எருமையூர் என்று அழைக்கப்பட்டது. இப்பாடலைப் பாடிய புலவர் இந்த ஊரைச் சார்ந்தவர், ஆதலால் எருமை வெளியனார் என்று அழைக்கப்படுகிறார். குதிரை மீது செல்லும் போர்வீரனின் வீரத்தைப் பற்றியோ, அவனது குதிரைப் பற்றியோ பாடுவது குதிரைமறம் என்று அழைக்கப்படுகிறது. போருக்குச் செல்லும் போது தும்பை பூவைச் சூடிச் செல்வதால் இது தும்பைத்திணை ஆனது.
நம் தமிழ் பெண்கள் பலர் இன்றைக்கும் கணவன் பெயரை நேரடியாகப் பெயர் சொல்லி அழைக்காமல், தங்களின் பிள்ளையின் பெயரைச் சொல்லி அவர்களுடைய அப்பா என்றே விளிக்கின்றனர். இம்மரபு இப்பாடலிலும் வெளிப்பட்டுள்ளது. அழகிய காட்சியை நம் கண்முன் நிறுத்தும் சிறப்பானப் பாடலிது.
பாடல் 31: கூடல் பெரு மரம்
பாடியவர் : எருமை வெளியானார்
பாடப்பட்டோன் : பொதுவாகப் பாடியது
திணை : தும்பை துறை : குதிரை மறம்
மாவா ராதே மாவா ராதே
எல்லார் மாவும் வந்தன வெம்மிற்
புல்லுளைக் குடுமிப் புதல்வற் றந்த
செல்வ னூரு மாவா ராதே
இருபேர் யாற்ற வொரு பெருங் கூடல்
விலங்கிடு பெருமரம் போல
உலந்தன்று கொல்லவன் மலைந்த மாவே.
பொருள் விளக்கம்
குதிரை வரவில்லையே, குதிரை வரவில்லையே. போருக்குச் சென்ற அனைத்து வீரர்களின் குதிரையும் வந்துவிட்டதே, என்னுடைய இல்லத்தில் இருக்கும் சிறிய குடுமியை உடைய புதல்வனைத் தந்த செல்வன் (கணவன்) ஏறிச் சென்ற குதிரை மட்டும் இன்னும் வரவில்லையே. இரண்டு பெரிய ஆறு இணையும் கூடல் இடத்தில் விலங்குகளை கட்ட இருக்கும் மரம் ஆற்று வெள்ளத்தில் அடித்து சென்றது போல், அவனது குதிரை சாய்ந்து விட்டதா .
புறம் வளரும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Page 9 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தமிழ் விடு தூது – நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு
» ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு !
» நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு
» காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு
» நல்ல தமிழ் அறிவோம் -ஔவையாரின் நல்வழி தொடர் பதிவு -முடிந்தது
» ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு !
» நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு
» காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு
» நல்ல தமிழ் அறிவோம் -ஔவையாரின் நல்வழி தொடர் பதிவு -முடிந்தது
Page 9 of 10
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|