புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு
Page 7 of 10 •
Page 7 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
First topic message reminder :
Nalla Tamil Arivom - purananuru
தமிழ் நூல்களில் பெரும் பிரிவு பதினெண் கீழ் கணக்கு நூல்கள், பதினெண் மேல் கணக்கு நூல்கள். கீழ் கணக்கு நூல்கள் வாழ்விற்கு தேவையான அறத்தையும் நீதி போதனையும் கூறுபவை ஆகும். மேல் கணக்கு நூல்கள் எட்டுத் தொகை, பத்து பாட்டு நூல்கள் ஆகும். எட்டுத் தொகை நூல்களுள் அறம், போர், வீரம் போன்ற புற வாழ்க்கை பற்றி கூறும் நூல் புற நானூறு. மொத்தம் நானூறு பாடல்களை கொண்டது.
தற்காலத்தில் நாம் ஒருவரிடம் உதவி கேட்டு, கேட்டது கிடைத்தால் அவரை பாராட்டுகிறோம். உதவியை மறுத்தாலோ, குறைத்து கொடுத்தோலோ அவரை பற்றி குறை கூறுவோம். அப்படி உதவியை தேடிப்போய் நமக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்றாலும் நாம் அவரை பழிக்கக்கூடாது என்பதை மிக அழகாக இந்த பாடல் உணர்த்துகிறது. தமிழின் இனிமையும், வாழ்வியல் உண்மையும் இந்த சங்கப் பாடல்கள் மிக அழகாக எடுத்து காட்டுகிறது.
பாடல் 1: அதனினும் உயர்ந்தது
பாடியவர் : கழைதின் யானையார்
பாடப்பட்டோன் : வல் வில் ஓரி
திணை : பாடாண் துறை : பரிசில்
ஈஎன இரத்தல் இழிந்தன்று, அதன் எதிர்
ஈயென் என்றல் அதனினும் இழிந்தன்று;
கொள் எனக் கொடுத்தல் உயர்தன்று, அதன் எதிர்
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்தன்று;
தெண்ணீர்ப் பரப்பின் இமிழ்திரைப் பெருங்கடல்
உண்ணார் ஆகுப, நீர் வேட்டோரே;
ஆவும் மாவும் சென்று உணக், கலங்கிச்,
சேறோடு பட்ட சிறுமையத்து ஆயினும்
உண்ணீர் மருங்கின் அதர்பல ஆகும்;
புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை
உள்ளிச் சென்றோர் பழியலர்; அதனாற்
புலவேன் வாழியர், ஓரி ; விசும்பின்
கருவி வானம் போல
வரையாது சுரக்கும் வள்ளியோய் ! நின்னே
பொருளுரை:
பிச்சை எடுப்பது இழிவான செயல் இல்லை, அதை விட
இழிவான செயல் பிச்சை இடாமல் இருப்பது
ஒருவனுக்கு கொடுத்தல் உயர்வான செயல் இல்லை, அதை விட
கொடுப்பதை வேண்டாம் என்று மறுத்தல் உயர்வானது
நுரை பொங்கும் கடல் நீர் மிகப் பெரியதாக இருந்தாலும்
தாகம் உள்ளவருக்கு குடிநீராகாது ; ஆனால்
பசுக்களும், மற்ற விலங்குகளும் சென்று நீர் அருந்தி
சேறு நிறைந்த சிறு குளம் ஆனாலும், மனிதர்கள்
தாகத்திற்கு அந்த குளத்து நீரையே அருந்துவர்.
அது போல் மிகப் பெரியவர் பலர் இருந்தாலும்
அவர்கள் கடல் நீரை போன்றவர்கள், எங்களின் துயர் துடைக்க மாட்டார்கள்,
நீ வறுமை அடைந்து வசதி குறைந்து இருந்தாலும்
பலன் எதிர் பார்க்காமல் கொடுக்கும் வானத்து மேகம் போல்
அள்ளி அள்ளி எங்களுக்கு வழங்குவாய்,
ஆனால் இன்று நீ வழங்காது இருப்பது எங்கள் குறையே,
நாங்கள் புறப்படும் வேளையில் பறவை செய்த சகுணங்கள் சரியில்லை,
எங்களின் நேரம் சரியில்லை.
கேட்டவர்க்கு கொடுக்கும் வள்ளல் ஓரியே, நீ நீடோடி வாழ்க
Nalla Tamil Arivom - purananuru
தமிழ் நூல்களில் பெரும் பிரிவு பதினெண் கீழ் கணக்கு நூல்கள், பதினெண் மேல் கணக்கு நூல்கள். கீழ் கணக்கு நூல்கள் வாழ்விற்கு தேவையான அறத்தையும் நீதி போதனையும் கூறுபவை ஆகும். மேல் கணக்கு நூல்கள் எட்டுத் தொகை, பத்து பாட்டு நூல்கள் ஆகும். எட்டுத் தொகை நூல்களுள் அறம், போர், வீரம் போன்ற புற வாழ்க்கை பற்றி கூறும் நூல் புற நானூறு. மொத்தம் நானூறு பாடல்களை கொண்டது.
தற்காலத்தில் நாம் ஒருவரிடம் உதவி கேட்டு, கேட்டது கிடைத்தால் அவரை பாராட்டுகிறோம். உதவியை மறுத்தாலோ, குறைத்து கொடுத்தோலோ அவரை பற்றி குறை கூறுவோம். அப்படி உதவியை தேடிப்போய் நமக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்றாலும் நாம் அவரை பழிக்கக்கூடாது என்பதை மிக அழகாக இந்த பாடல் உணர்த்துகிறது. தமிழின் இனிமையும், வாழ்வியல் உண்மையும் இந்த சங்கப் பாடல்கள் மிக அழகாக எடுத்து காட்டுகிறது.
பாடல் 1: அதனினும் உயர்ந்தது
பாடியவர் : கழைதின் யானையார்
பாடப்பட்டோன் : வல் வில் ஓரி
திணை : பாடாண் துறை : பரிசில்
ஈஎன இரத்தல் இழிந்தன்று, அதன் எதிர்
ஈயென் என்றல் அதனினும் இழிந்தன்று;
கொள் எனக் கொடுத்தல் உயர்தன்று, அதன் எதிர்
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்தன்று;
தெண்ணீர்ப் பரப்பின் இமிழ்திரைப் பெருங்கடல்
உண்ணார் ஆகுப, நீர் வேட்டோரே;
ஆவும் மாவும் சென்று உணக், கலங்கிச்,
சேறோடு பட்ட சிறுமையத்து ஆயினும்
உண்ணீர் மருங்கின் அதர்பல ஆகும்;
புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை
உள்ளிச் சென்றோர் பழியலர்; அதனாற்
புலவேன் வாழியர், ஓரி ; விசும்பின்
கருவி வானம் போல
வரையாது சுரக்கும் வள்ளியோய் ! நின்னே
பொருளுரை:
பிச்சை எடுப்பது இழிவான செயல் இல்லை, அதை விட
இழிவான செயல் பிச்சை இடாமல் இருப்பது
ஒருவனுக்கு கொடுத்தல் உயர்வான செயல் இல்லை, அதை விட
கொடுப்பதை வேண்டாம் என்று மறுத்தல் உயர்வானது
நுரை பொங்கும் கடல் நீர் மிகப் பெரியதாக இருந்தாலும்
தாகம் உள்ளவருக்கு குடிநீராகாது ; ஆனால்
பசுக்களும், மற்ற விலங்குகளும் சென்று நீர் அருந்தி
சேறு நிறைந்த சிறு குளம் ஆனாலும், மனிதர்கள்
தாகத்திற்கு அந்த குளத்து நீரையே அருந்துவர்.
அது போல் மிகப் பெரியவர் பலர் இருந்தாலும்
அவர்கள் கடல் நீரை போன்றவர்கள், எங்களின் துயர் துடைக்க மாட்டார்கள்,
நீ வறுமை அடைந்து வசதி குறைந்து இருந்தாலும்
பலன் எதிர் பார்க்காமல் கொடுக்கும் வானத்து மேகம் போல்
அள்ளி அள்ளி எங்களுக்கு வழங்குவாய்,
ஆனால் இன்று நீ வழங்காது இருப்பது எங்கள் குறையே,
நாங்கள் புறப்படும் வேளையில் பறவை செய்த சகுணங்கள் சரியில்லை,
எங்களின் நேரம் சரியில்லை.
கேட்டவர்க்கு கொடுக்கும் வள்ளல் ஓரியே, நீ நீடோடி வாழ்க
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
யாருக்கு முதல் மரியாதை
போரில் ஆண்கள் அனைவரும் தான் ஈடுபடுகின்றனர். இப்படி ஈடுபடுபவர்கள் அனைவருக்கும் ஒரே மரியாதை தான் கிடைக்கிறதா. இல்லை என்று தான் சொல்ல வேண்டும். தமிழ் பாடல்கள் வாயிலாக பார்க்கும் போதும், இன்றுள்ள தலைவர்கள் போல் இல்லாது, அன்றைய மன்னர்கள் வீரத்துடன் நேரடியாக பேரில் பங்கு பெற்றனர். இப்படி பங்கு பெரும் மன்னனின் உயிர் மிகவும் மதிப்பு மிக்கதாக இருந்தது. போரில் ஈடுபடும் மன்னனைக் காக்க தனி மெய்க் காவல் படை வீரர்கள் இருந்தனர். இவர்கள் வழிவழியாக (பரம்பரை பரம்பரையாக) மன்னனின் உயிர் காக்கும் பணியில் ஈடுபட்டு இவர்கள் உயிர் இழந்து மன்னனின் உயிரை காப்பாறி உள்ளனர். பொன்னியின் செல்வனிலும் கல்கி வேளாளப்படை பற்றிய குறிப்புகளைச் சொல்கிறார். இவர்களுக்கு அரசனிடமும், அரண்மனையிலும் தனி மரியாதை இருந்ததாக கூறப்படுகிறது. உயிரைத் துச்சமாக மதித்து மன்னனின் உயிரை காப்பதாலும், இவர்களில் பெரும்பாலும் அற்ப ஆயுளில் போரில் இறந்து விடுவதாலும் இந்த சலுகைகள் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இப்படி உள்ள வீரனுக்கு முதல் மரியாதை, முதல் சலுகைகளை மன்னன் வழங்கினான், வழங்க வேண்டும் என்பதை இந்த புறப் பாடல் நமக்கு எடுத்துக் கூறுகிறது.
பாடல் 22: மறப்புகழ் நிறைந்தோன் (பாடல் 290)
பாடியவர் :ஔவையார்
பாடப்பட்டோன் பற்றிய குறிப்பு பாடலில் இல்லை
திணை : கரந்தை துறை : குடிநிலை உரைத்தல்
இவற்கு ஈத்து உண்மதி, கள்ளே; சினப் போர்
இனக் களிற்று யானை, இயல் தேர்க் குருசில்!
நுந்தை தந்தைக்கு இவன் தந்தை தந்தை,
எடுத்து எறி ஞாட்பின் இமையான், தச்சன்
அடுத்து எறி குறட்டின், நின்று மாய்ந்தனனே;
மறப் புகழ் நிறைந்த மைந்தினோன் இவனும்,
உறைப்புழி ஓலை போல,
மறைக்குவன் பெரும! நிற் குறித்து வரு வேலே
பொருள் விளக்கம்
முதலில் இவனுக்கு கள்ளை கொடு, குடித்து மகிழட்டும். அன்று நடந்த பெரும் சேதத்தை விளைவித்த போரில், ஆண் யானை மேல் இருந்த ஒருவன் அழகான தேரில் அமர்ந்து இருந்த உன் பாட்டன் மேல் (தந்தையின் தந்தை) எறிந்த அம்புகளை எறியும் போது , இந்த வீரனின் பாட்டன் (தந்தையின் தந்தை) கண் இமைக்காமல் தச்சனின் ஆரச் சக்கரக் குடம் (கேடயம்) போல் தடுத்து உயிர் விட்டான். அந்த புகழ் நிறைந்த வீரப் பரம்பரையில் வந்த மறக் குடியில் பிறந்த வீரன் இவன்.
பனை ஓலையில் செய்யப்பட்ட குடை மழையைத் தடுப்பது போல் இவன் உன் மேல் பகைவர் பொழியும் வேல்களைத் தடுப்பான். உனக்கு இவன் மெய்க்காப்பாலனாக இருப்பான். குடி மரபு இது. இவனுக்கு முதலில் சிறப்பு செய்க. கள் வார்த்துக் கொடு, இவனே முதல் மரியாதைக்குரியவன்.
இப்படி மன்னன் கொடுக்கும் கள்ளுக்கா இவன் ஆசைபடுகிறான். இப்படி உள்ள வீரன் ஆசைப்படுவது என்ன, அடுத்த பாடலில் காண்போம்.
புறம் வளரும்
போரில் ஆண்கள் அனைவரும் தான் ஈடுபடுகின்றனர். இப்படி ஈடுபடுபவர்கள் அனைவருக்கும் ஒரே மரியாதை தான் கிடைக்கிறதா. இல்லை என்று தான் சொல்ல வேண்டும். தமிழ் பாடல்கள் வாயிலாக பார்க்கும் போதும், இன்றுள்ள தலைவர்கள் போல் இல்லாது, அன்றைய மன்னர்கள் வீரத்துடன் நேரடியாக பேரில் பங்கு பெற்றனர். இப்படி பங்கு பெரும் மன்னனின் உயிர் மிகவும் மதிப்பு மிக்கதாக இருந்தது. போரில் ஈடுபடும் மன்னனைக் காக்க தனி மெய்க் காவல் படை வீரர்கள் இருந்தனர். இவர்கள் வழிவழியாக (பரம்பரை பரம்பரையாக) மன்னனின் உயிர் காக்கும் பணியில் ஈடுபட்டு இவர்கள் உயிர் இழந்து மன்னனின் உயிரை காப்பாறி உள்ளனர். பொன்னியின் செல்வனிலும் கல்கி வேளாளப்படை பற்றிய குறிப்புகளைச் சொல்கிறார். இவர்களுக்கு அரசனிடமும், அரண்மனையிலும் தனி மரியாதை இருந்ததாக கூறப்படுகிறது. உயிரைத் துச்சமாக மதித்து மன்னனின் உயிரை காப்பதாலும், இவர்களில் பெரும்பாலும் அற்ப ஆயுளில் போரில் இறந்து விடுவதாலும் இந்த சலுகைகள் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இப்படி உள்ள வீரனுக்கு முதல் மரியாதை, முதல் சலுகைகளை மன்னன் வழங்கினான், வழங்க வேண்டும் என்பதை இந்த புறப் பாடல் நமக்கு எடுத்துக் கூறுகிறது.
பாடல் 22: மறப்புகழ் நிறைந்தோன் (பாடல் 290)
பாடியவர் :ஔவையார்
பாடப்பட்டோன் பற்றிய குறிப்பு பாடலில் இல்லை
திணை : கரந்தை துறை : குடிநிலை உரைத்தல்
இவற்கு ஈத்து உண்மதி, கள்ளே; சினப் போர்
இனக் களிற்று யானை, இயல் தேர்க் குருசில்!
நுந்தை தந்தைக்கு இவன் தந்தை தந்தை,
எடுத்து எறி ஞாட்பின் இமையான், தச்சன்
அடுத்து எறி குறட்டின், நின்று மாய்ந்தனனே;
மறப் புகழ் நிறைந்த மைந்தினோன் இவனும்,
உறைப்புழி ஓலை போல,
மறைக்குவன் பெரும! நிற் குறித்து வரு வேலே
பொருள் விளக்கம்
முதலில் இவனுக்கு கள்ளை கொடு, குடித்து மகிழட்டும். அன்று நடந்த பெரும் சேதத்தை விளைவித்த போரில், ஆண் யானை மேல் இருந்த ஒருவன் அழகான தேரில் அமர்ந்து இருந்த உன் பாட்டன் மேல் (தந்தையின் தந்தை) எறிந்த அம்புகளை எறியும் போது , இந்த வீரனின் பாட்டன் (தந்தையின் தந்தை) கண் இமைக்காமல் தச்சனின் ஆரச் சக்கரக் குடம் (கேடயம்) போல் தடுத்து உயிர் விட்டான். அந்த புகழ் நிறைந்த வீரப் பரம்பரையில் வந்த மறக் குடியில் பிறந்த வீரன் இவன்.
பனை ஓலையில் செய்யப்பட்ட குடை மழையைத் தடுப்பது போல் இவன் உன் மேல் பகைவர் பொழியும் வேல்களைத் தடுப்பான். உனக்கு இவன் மெய்க்காப்பாலனாக இருப்பான். குடி மரபு இது. இவனுக்கு முதலில் சிறப்பு செய்க. கள் வார்த்துக் கொடு, இவனே முதல் மரியாதைக்குரியவன்.
இப்படி மன்னன் கொடுக்கும் கள்ளுக்கா இவன் ஆசைபடுகிறான். இப்படி உள்ள வீரன் ஆசைப்படுவது என்ன, அடுத்த பாடலில் காண்போம்.
புறம் வளரும்
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
தமிழ் வீரனின் ஆசை
மன்னனிடம் முதல் மரியாதை வாங்குவது மிகச் சிறந்த வீரனின் ஆசை. இப்படி முதல் மரியாதையில் மன்னன் கையில் கிடைக்கும் கள்ளுக்காகவா ஒரு சுத்த வீரன் ஆசைபடுகிறான் ? நன்கு படித்த மாணவன் எப்போது தேர்வு வரும், முதல் மதிப்பெண் எடுக்கலாம் என்று காத்து இருப்பான், நன்கு கவிதை புனையும் கவிஞன் எப்போது கவிதைப் போட்டி வரும் என்று காத்து இருப்பான். அதுபோல் சுத்த வீரன் காத்திருப்பது அவன் வீரத்தை நிரூபிக்க வாய்ப்பு கிடைக்கும் போர்க்களத்தை தான். அப்படி ஒரு தமிழ் வீரன் ஆசைப் படுவது போர்க்களமே என்று இந்தப் புறப் பாடல் கூறுகிறது.
பாடல் 22: ஆயும் உழவன் (பாடல் 289)
பாடியவர் : கழாத்தலையார்
திணை , துறை : கிடைக்கவில்லை
ஈரச் செவ்வி உதவினஆயினும்,
பல் எருத்துள்ளும் நல் எருது நோக்கி,
வீறு வீறு ஆயும் உழவன் போல,
பீடு பெறு தொல் குடிப் பாடு பல தாங்கிய
மூதிலாளருள்ளும், காதலின்
தனக்கு முகந்து ஏந்திய பசும் பொன் மண்டை,
'இவற்கு ஈக!' என்னும்; அதுவும் அன்றிசினே;
கேட்டியோ வாழி பாண! பாசறை,
'பூக் கோள் இன்று' என்று அறையும்
மடி வாய்த் தண்ணுமை இழிசினன் குரலே?
பொருள் விளக்கம்
ஈரம் மிகுந்த வளமான செழிப்பான வயல்களாக இருந்தாலும், அதில் விளைவிக்க உழவு செய்ய வேண்டும். பல எருதுகள் இருந்தாலும், நன்கு கடினமாக உழைக்கும், பலம் பொருந்திய எருதுகளைத் தேடித் தேடி தேர்ந்தெடுக்கும் உழவனைப் போல், பெருமை பல உள்ள பரம்பரையில் உதித்த வீரம் நிறைந்த வீரர்கள் பல இருந்தாலும் அதில் சிறந்து விளங்கும், இவனை அன்பினால் கௌரவித்து கள் அளித்து நாட்டு அரசன் சிறப்பித்தான். இவனுக்கே மதுவை முதலில் தருக என்று ஊக்குவித்தான்.
பாடல் பாடும் பாணனே இதை கண்டு வியக்கிறாய். அதோ பூ கொள்க என்று பறை அறைந்து தெரிவிக்கும் போர்ச் செய்தி கேட்டாயா !!!அவனுக்குக் கள் பெரிதன்று களமே பெரிது.
பாடலின் சிறப்பு
வயல் வளமாக இருந்தாலும் அதை உழுதால் தான் வயல் செழிப்படையும். அது போல் ஒரு நாடு எத்தனை வளமுடன் இருந்தாலும், அந்த நாட்டைக் காக்க போர் வீரர்கள் அவசியம் என்று அழகிய உதாரணத்துடன் விளக்குகிறது.
ஒலிம்பிக் செல்ல நினைக்கும் விளையாட்டு வீரன் உள்ளாட்டு சிறு விளையாட்டுகளில் சிறந்து விளங்கினால் மட்டுமே மேலும் மேலும் வளர்ந்து ஒலிம்பிக் செல்ல முடியும். ஒரு சிறந்த விளையாட்டு வீரனைத் தேர்ந்தெடுத்து தான் பெரிய போட்டிக்கு அனுப்புகிறார்கள். அது போல் தான் போரும், வீரத்தில் சிறந்து விளங்கி, உயிரை துச்சமாக நினைக்கும், நாட்டின் மேல் பற்று இருக்கும் மிகச் சிறந்த தமிழ் வீரனைத்தான் போர்க்களம் அனுப்பியதாக இந்த பாடல் மூலம் அறியலாம். சுத்த தமிழ் வீரன் வெறும் விருத்துக்கும் கேளிக்கைகளுக்கும் கள்ளுக்கும் ஆசைபடவில்லை. அவன் ஆசைப்படுவது போர்க்களமே என்று இந்த பாடல் அழகாகக் எடுத்துக் கூறுகிறது.
தொடரும்.....
மன்னனிடம் முதல் மரியாதை வாங்குவது மிகச் சிறந்த வீரனின் ஆசை. இப்படி முதல் மரியாதையில் மன்னன் கையில் கிடைக்கும் கள்ளுக்காகவா ஒரு சுத்த வீரன் ஆசைபடுகிறான் ? நன்கு படித்த மாணவன் எப்போது தேர்வு வரும், முதல் மதிப்பெண் எடுக்கலாம் என்று காத்து இருப்பான், நன்கு கவிதை புனையும் கவிஞன் எப்போது கவிதைப் போட்டி வரும் என்று காத்து இருப்பான். அதுபோல் சுத்த வீரன் காத்திருப்பது அவன் வீரத்தை நிரூபிக்க வாய்ப்பு கிடைக்கும் போர்க்களத்தை தான். அப்படி ஒரு தமிழ் வீரன் ஆசைப் படுவது போர்க்களமே என்று இந்தப் புறப் பாடல் கூறுகிறது.
பாடல் 22: ஆயும் உழவன் (பாடல் 289)
பாடியவர் : கழாத்தலையார்
திணை , துறை : கிடைக்கவில்லை
ஈரச் செவ்வி உதவினஆயினும்,
பல் எருத்துள்ளும் நல் எருது நோக்கி,
வீறு வீறு ஆயும் உழவன் போல,
பீடு பெறு தொல் குடிப் பாடு பல தாங்கிய
மூதிலாளருள்ளும், காதலின்
தனக்கு முகந்து ஏந்திய பசும் பொன் மண்டை,
'இவற்கு ஈக!' என்னும்; அதுவும் அன்றிசினே;
கேட்டியோ வாழி பாண! பாசறை,
'பூக் கோள் இன்று' என்று அறையும்
மடி வாய்த் தண்ணுமை இழிசினன் குரலே?
பொருள் விளக்கம்
ஈரம் மிகுந்த வளமான செழிப்பான வயல்களாக இருந்தாலும், அதில் விளைவிக்க உழவு செய்ய வேண்டும். பல எருதுகள் இருந்தாலும், நன்கு கடினமாக உழைக்கும், பலம் பொருந்திய எருதுகளைத் தேடித் தேடி தேர்ந்தெடுக்கும் உழவனைப் போல், பெருமை பல உள்ள பரம்பரையில் உதித்த வீரம் நிறைந்த வீரர்கள் பல இருந்தாலும் அதில் சிறந்து விளங்கும், இவனை அன்பினால் கௌரவித்து கள் அளித்து நாட்டு அரசன் சிறப்பித்தான். இவனுக்கே மதுவை முதலில் தருக என்று ஊக்குவித்தான்.
பாடல் பாடும் பாணனே இதை கண்டு வியக்கிறாய். அதோ பூ கொள்க என்று பறை அறைந்து தெரிவிக்கும் போர்ச் செய்தி கேட்டாயா !!!அவனுக்குக் கள் பெரிதன்று களமே பெரிது.
பாடலின் சிறப்பு
வயல் வளமாக இருந்தாலும் அதை உழுதால் தான் வயல் செழிப்படையும். அது போல் ஒரு நாடு எத்தனை வளமுடன் இருந்தாலும், அந்த நாட்டைக் காக்க போர் வீரர்கள் அவசியம் என்று அழகிய உதாரணத்துடன் விளக்குகிறது.
ஒலிம்பிக் செல்ல நினைக்கும் விளையாட்டு வீரன் உள்ளாட்டு சிறு விளையாட்டுகளில் சிறந்து விளங்கினால் மட்டுமே மேலும் மேலும் வளர்ந்து ஒலிம்பிக் செல்ல முடியும். ஒரு சிறந்த விளையாட்டு வீரனைத் தேர்ந்தெடுத்து தான் பெரிய போட்டிக்கு அனுப்புகிறார்கள். அது போல் தான் போரும், வீரத்தில் சிறந்து விளங்கி, உயிரை துச்சமாக நினைக்கும், நாட்டின் மேல் பற்று இருக்கும் மிகச் சிறந்த தமிழ் வீரனைத்தான் போர்க்களம் அனுப்பியதாக இந்த பாடல் மூலம் அறியலாம். சுத்த தமிழ் வீரன் வெறும் விருத்துக்கும் கேளிக்கைகளுக்கும் கள்ளுக்கும் ஆசைபடவில்லை. அவன் ஆசைப்படுவது போர்க்களமே என்று இந்த பாடல் அழகாகக் எடுத்துக் கூறுகிறது.
தொடரும்.....
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
சொன்ன சொல் தவறாதவன்
போர்க்களம் செல்லும் வீரன் விரும்புவது வெற்றியைத் தான். இன்று ஒவ்வொரு விளையாட்டு வீரன் குறித்து நாம் எவ்வளவு பெருமைப்படுகிறோம்.இவர் விளையாட்டு களத்தில் நுழைந்தால் கண்டிப்பாக சதம் அடிப்பார். குழுவின் வெற்றிக்கு இவரே காரணம் என்று. இப்படி கூறும் விளையாட்டு வீரனை விட உயிரை துச்சமாக நினைத்து காலம் சென்று போரிடம் வீரன் மிகச் சிறந்தவன். தமிழ் மரபில் இருக்கும் ஒரு வழக்கம் சூளுரைத்தல், ஒன்றைச் செய்வேன் என்று சபதம் செய்தல். மகாபாரத் போரிலும் தன் மகன் அபிமன்யுவைக் கொன்றவனை மறுநாள் சூரிய அஸ்தமனம் முன்பு கொள்வதாக அர்ஜுனன் சபதம் செய்கிறான். இப்படி ஒரு சபதம் செய்த வீரனைப் பற்றிய புறப்பாடல் இது. ஒருவர் சபதம் செய்யும் போது அவனின் சொன்ன சொல் தவறாத தன்மையை கேள்விப்பட்டு எதிரிகள் பயப்படுகிறார்கள். அந்தப் பாடலை இப்போது காண்போம்.
பாடல் 23: எம்முன் தப்பியோன் (புறம் 304)
பாடியவர் : அரிசில்கிழார்
திணை : தும்பை துறை : குதிரை மறம்
கொடுங் குழை மகளிர் கோதை சூட்டி,
நடுங்கு பனிக் களைஇயர் நார் அரி பருகி,
வளி தொழில் ஒழிக்கும் வண் பரிப் புரவி
பண்ணற்கு விரைதி, நீயே; 'நெருநை,
எம்முன் தப்பியோன் தம்பியொடு, ஒராங்கு
நாளைச் செய்குவென் அமர்' எனக் கூறி,
புன் வயிறு அருத்தலும் செல்லான், வன் மான்
கடவும் என்ப, பெரிதே; அது கேட்டு,
வலம் படு முரசின் வெல் போர் வேந்தன்
இலங்கு இரும் பாசறை நடுங்கின்று
பொருள் விளக்கம்
ஏவலனே (ஏவல் செய்வபனே = வேலைக்காரன்) காதில் அழகிய குழைகள் (கம்மல்) அணிந்த மகளிர் உனக்கு மாலை சூட்டிப் பின் அவர்கள் வார்த்துக் கொடுக்கும் கள்ளை குளிர் நீக்க பருகுக. காற்றுக்கு தொழில் எதிர்ப்பு விசையை ஏறுபடுத்துதல், அப்படி எதிர்க்கும் காற்றின் தொழிலை ஒழிக்கும் வண்ணம் காற்றைக் கிழித்து கொண்டு செல்லும் வலிமையான குதிரையை தேர்ந்தெடுத்து கொடுத்தவுடன் அதனை போருக்கு அலங்கரித்து தயாராக வைக்க என்று உனக்கு கட்டளையிட்டுள்ளான்.
எனக்கு மூத்தவனை கொன்றவனையும், அவனது தம்பியையும் ஒன்றாக நாளை போரில் கொல்வேன், என்று அந்த எதிரிகள் மேல் சூளுரைத்துள்ளான். பசிக்கும் வயிறுக்கு உணவு உண்ணக் கூடச் செல்லவில்லை, குதிரைப் கொட்டகையில் இருந்த பல குதிரைகளில் நல்ல திறமையான குதிரையை தேர்ந்தெடுப்பதில் மும்முரமாக இருக்கிறான்.
இவன் சூளுரைத்ததை ஒற்றன் மூலம் கேட்டுத் தெரிந்த பகை மன்னனின் பாசறையில் இருந்த வீரர்கள் நடுங்குகிறார்கள். அவன் சொன்ன சொல் தவறான். சொன்னைத் செய்பவன் கண்டிப்பாக அவன் சொன்னது போல் நம் மன்னனைக் கொல்வான் என்று கூறியவாறே நடுங்குகிறார்கள்.
பாடலின் சிறப்பு:
ஒரு நாட்டில் பேசும் செய்தி அறிந்து அதை அடுத்த நாட்டில் உள்ள தன் மன்னனுக்குச் சொல்லும் ஒற்றர்களின் திறமையை இந்தப் பாடல் புலப்படுத்துகிறது. சொன்னச் சொல் தவறாதவன் என்று கூறும் போது அந்த மன்னனின் திறமை, இதற்கு முன் செய்த செயல்கள், அவனது வரலாறு இந்த ஒற்றனுக்கும், எதிரிப் படை வீரர்களுக்கும் தெரிந்து இருக்கிறது.
தொடரும்
போர்க்களம் செல்லும் வீரன் விரும்புவது வெற்றியைத் தான். இன்று ஒவ்வொரு விளையாட்டு வீரன் குறித்து நாம் எவ்வளவு பெருமைப்படுகிறோம்.இவர் விளையாட்டு களத்தில் நுழைந்தால் கண்டிப்பாக சதம் அடிப்பார். குழுவின் வெற்றிக்கு இவரே காரணம் என்று. இப்படி கூறும் விளையாட்டு வீரனை விட உயிரை துச்சமாக நினைத்து காலம் சென்று போரிடம் வீரன் மிகச் சிறந்தவன். தமிழ் மரபில் இருக்கும் ஒரு வழக்கம் சூளுரைத்தல், ஒன்றைச் செய்வேன் என்று சபதம் செய்தல். மகாபாரத் போரிலும் தன் மகன் அபிமன்யுவைக் கொன்றவனை மறுநாள் சூரிய அஸ்தமனம் முன்பு கொள்வதாக அர்ஜுனன் சபதம் செய்கிறான். இப்படி ஒரு சபதம் செய்த வீரனைப் பற்றிய புறப்பாடல் இது. ஒருவர் சபதம் செய்யும் போது அவனின் சொன்ன சொல் தவறாத தன்மையை கேள்விப்பட்டு எதிரிகள் பயப்படுகிறார்கள். அந்தப் பாடலை இப்போது காண்போம்.
பாடல் 23: எம்முன் தப்பியோன் (புறம் 304)
பாடியவர் : அரிசில்கிழார்
திணை : தும்பை துறை : குதிரை மறம்
கொடுங் குழை மகளிர் கோதை சூட்டி,
நடுங்கு பனிக் களைஇயர் நார் அரி பருகி,
வளி தொழில் ஒழிக்கும் வண் பரிப் புரவி
பண்ணற்கு விரைதி, நீயே; 'நெருநை,
எம்முன் தப்பியோன் தம்பியொடு, ஒராங்கு
நாளைச் செய்குவென் அமர்' எனக் கூறி,
புன் வயிறு அருத்தலும் செல்லான், வன் மான்
கடவும் என்ப, பெரிதே; அது கேட்டு,
வலம் படு முரசின் வெல் போர் வேந்தன்
இலங்கு இரும் பாசறை நடுங்கின்று
பொருள் விளக்கம்
ஏவலனே (ஏவல் செய்வபனே = வேலைக்காரன்) காதில் அழகிய குழைகள் (கம்மல்) அணிந்த மகளிர் உனக்கு மாலை சூட்டிப் பின் அவர்கள் வார்த்துக் கொடுக்கும் கள்ளை குளிர் நீக்க பருகுக. காற்றுக்கு தொழில் எதிர்ப்பு விசையை ஏறுபடுத்துதல், அப்படி எதிர்க்கும் காற்றின் தொழிலை ஒழிக்கும் வண்ணம் காற்றைக் கிழித்து கொண்டு செல்லும் வலிமையான குதிரையை தேர்ந்தெடுத்து கொடுத்தவுடன் அதனை போருக்கு அலங்கரித்து தயாராக வைக்க என்று உனக்கு கட்டளையிட்டுள்ளான்.
எனக்கு மூத்தவனை கொன்றவனையும், அவனது தம்பியையும் ஒன்றாக நாளை போரில் கொல்வேன், என்று அந்த எதிரிகள் மேல் சூளுரைத்துள்ளான். பசிக்கும் வயிறுக்கு உணவு உண்ணக் கூடச் செல்லவில்லை, குதிரைப் கொட்டகையில் இருந்த பல குதிரைகளில் நல்ல திறமையான குதிரையை தேர்ந்தெடுப்பதில் மும்முரமாக இருக்கிறான்.
இவன் சூளுரைத்ததை ஒற்றன் மூலம் கேட்டுத் தெரிந்த பகை மன்னனின் பாசறையில் இருந்த வீரர்கள் நடுங்குகிறார்கள். அவன் சொன்ன சொல் தவறான். சொன்னைத் செய்பவன் கண்டிப்பாக அவன் சொன்னது போல் நம் மன்னனைக் கொல்வான் என்று கூறியவாறே நடுங்குகிறார்கள்.
பாடலின் சிறப்பு:
ஒரு நாட்டில் பேசும் செய்தி அறிந்து அதை அடுத்த நாட்டில் உள்ள தன் மன்னனுக்குச் சொல்லும் ஒற்றர்களின் திறமையை இந்தப் பாடல் புலப்படுத்துகிறது. சொன்னச் சொல் தவறாதவன் என்று கூறும் போது அந்த மன்னனின் திறமை, இதற்கு முன் செய்த செயல்கள், அவனது வரலாறு இந்த ஒற்றனுக்கும், எதிரிப் படை வீரர்களுக்கும் தெரிந்து இருக்கிறது.
தொடரும்
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- T.PUSHPAபண்பாளர்
- பதிவுகள் : 96
இணைந்தது : 05/01/2011
"சொன்ன சொல் தவறாதவன்" மட்டும் தான் படித்தேன். அருமையாக இருக்கிறது. மற்றவைகளையும் படிக்கிறேன். நன்றி. தொடருங்கள்....
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
T.PUSHPA wrote:"சொன்ன சொல் தவறாதவன்" மட்டும் தான் படித்தேன். அருமையாக இருக்கிறது. மற்றவைகளையும் படிக்கிறேன். நன்றி. தொடருங்கள்....
நன்றி தோழி,
வாசியுங்கள் நம் பழம் பெரும் பெருமை வாய்ந்த தமிழ்பாட்டன் பாடிய பாடல்களை வாசியுங்கள்.
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
முதல் பக்கம் வாசித்தேன் நண்பரே... ஔவையின் பாடலும் கடமைகள் குறித்த புறநானூற்றுப் பாடல்களின் பொருள் விளக்கம் மிக அருமை.
சில அருஞ்சொற்களின் பொருளைக் கீழே தந்தால் இன்னும் பயனுடையதாக இருக்கும்.
நான் வேண்டுமானால் உதவத்தயார். என் சிற்றறிவுக்கு ஏற்ப பொருள் தருவேன்.
இன்னும் பிற பக்கங்களைத் தொடர்கிறேன்.
ஈகரையின் தலை சிறந்த திரிகளில் இதுவும் ஒன்று. நன்று.
சில அருஞ்சொற்களின் பொருளைக் கீழே தந்தால் இன்னும் பயனுடையதாக இருக்கும்.
நான் வேண்டுமானால் உதவத்தயார். என் சிற்றறிவுக்கு ஏற்ப பொருள் தருவேன்.
இன்னும் பிற பக்கங்களைத் தொடர்கிறேன்.
ஈகரையின் தலை சிறந்த திரிகளில் இதுவும் ஒன்று. நன்று.
நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அந்த காலத்தில் சொன்ன சொல் தவறாதவர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதை நினைக்கையில் மிகவும் பிரம்மிப்பாக உள்ளது. இப்ப இருக்குறவங்களை நினைச்சா சிரிப்பு சிரிப்பா வருது
அருமையான விளக்கம் சதாசிவம் - பாராட்டுகள்
அருமையான விளக்கம் சதாசிவம் - பாராட்டுகள்
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
கபாலி wrote:முதல் பக்கம் வாசித்தேன் நண்பரே... ஔவையின் பாடலும் கடமைகள் குறித்த புறநானூற்றுப் பாடல்களின் பொருள் விளக்கம் மிக அருமை.
சில அருஞ்சொற்களின் பொருளைக் கீழே தந்தால் இன்னும் பயனுடையதாக இருக்கும்.
நான் வேண்டுமானால் உதவத்தயார். என் சிற்றறிவுக்கு ஏற்ப பொருள் தருவேன்.
இன்னும் பிற பக்கங்களைத் தொடர்கிறேன்.
ஈகரையின் தலை சிறந்த திரிகளில் இதுவும் ஒன்று. நன்று.
நன்றி கபாலி,
அருஞ்சொற் பொருளைத் தந்தால் பள்ளிக்கூட உரை படிப்பது போன்ற மாயை இருக்கும் என்று கருதியதால் சேர்க்கவில்லை. பாடலின் பொருளைப் படித்து பாடலை ஒருமுறை வாசித்து உணர வேண்டும் என்பதால் இந்த முறையைக் கையாண்டுள்ளேன்.
உங்கள் பங்களிப்பும் தாருங்கள்.அருஞ்சொற் பொருள் இணைக்க எனக்கு ஆட்சேபனை இல்லை.
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
அசுரன் wrote:அந்த காலத்தில் சொன்ன சொல் தவறாதவர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதை நினைக்கையில் மிகவும் பிரம்மிப்பாக உள்ளது. இப்ப இருக்குறவங்களை நினைச்சா சிரிப்பு சிரிப்பா வருது
அருமையான விளக்கம் சதாசிவம் - பாராட்டுகள்
நன்றி அசுரன்
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- Sponsored content
Page 7 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 7 of 10
|
|