புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 6 I_vote_lcapபுறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 6 I_voting_barபுறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 6 I_vote_rcap 
81 Posts - 68%
heezulia
புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 6 I_vote_lcapபுறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 6 I_voting_barபுறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 6 I_vote_rcap 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 6 I_vote_lcapபுறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 6 I_voting_barபுறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 6 I_vote_rcap 
9 Posts - 8%
mohamed nizamudeen
புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 6 I_vote_lcapபுறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 6 I_voting_barபுறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 6 I_vote_rcap 
4 Posts - 3%
sureshyeskay
புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 6 I_vote_lcapபுறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 6 I_voting_barபுறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 6 I_vote_rcap 
1 Post - 1%
viyasan
புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 6 I_vote_lcapபுறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 6 I_voting_barபுறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 6 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 6 I_vote_lcapபுறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 6 I_voting_barபுறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 6 I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 6 I_vote_lcapபுறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 6 I_voting_barபுறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 6 I_vote_rcap 
221 Posts - 37%
mohamed nizamudeen
புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 6 I_vote_lcapபுறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 6 I_voting_barபுறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 6 I_vote_rcap 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 6 I_vote_lcapபுறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 6 I_voting_barபுறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 6 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 6 I_vote_lcapபுறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 6 I_voting_barபுறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 6 I_vote_rcap 
18 Posts - 3%
prajai
புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 6 I_vote_lcapபுறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 6 I_voting_barபுறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 6 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 6 I_vote_lcapபுறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 6 I_voting_barபுறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 6 I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 6 I_vote_lcapபுறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 6 I_voting_barபுறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 6 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 6 I_vote_lcapபுறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 6 I_voting_barபுறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 6 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 6 I_vote_lcapபுறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 6 I_voting_barபுறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - Page 6 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு


   
   

Page 6 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun Jul 03, 2011 6:07 pm

First topic message reminder :

Nalla Tamil Arivom - purananuru

தமிழ் நூல்களில் பெரும் பிரிவு பதினெண் கீழ் கணக்கு நூல்கள், பதினெண் மேல் கணக்கு நூல்கள். கீழ் கணக்கு நூல்கள் வாழ்விற்கு தேவையான அறத்தையும் நீதி போதனையும் கூறுபவை ஆகும். மேல் கணக்கு நூல்கள் எட்டுத் தொகை, பத்து பாட்டு நூல்கள் ஆகும். எட்டுத் தொகை நூல்களுள் அறம், போர், வீரம் போன்ற புற வாழ்க்கை பற்றி கூறும் நூல் புற நானூறு. மொத்தம் நானூறு பாடல்களை கொண்டது.

தற்காலத்தில் நாம் ஒருவரிடம் உதவி கேட்டு, கேட்டது கிடைத்தால் அவரை பாராட்டுகிறோம். உதவியை மறுத்தாலோ, குறைத்து கொடுத்தோலோ அவரை பற்றி குறை கூறுவோம். அப்படி உதவியை தேடிப்போய் நமக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்றாலும் நாம் அவரை பழிக்கக்கூடாது என்பதை மிக அழகாக இந்த பாடல் உணர்த்துகிறது. தமிழின் இனிமையும், வாழ்வியல் உண்மையும் இந்த சங்கப் பாடல்கள் மிக அழகாக எடுத்து காட்டுகிறது.

பாடல் 1: அதனினும் உயர்ந்தது
பாடியவர் : கழைதின் யானையார்
பாடப்பட்டோன் : வல் வில் ஓரி
திணை : பாடாண் துறை : பரிசில்

ஈஎன இரத்தல் இழிந்தன்று, அதன் எதிர்
ஈயென் என்றல் அதனினும் இழிந்தன்று;
கொள் எனக் கொடுத்தல் உயர்தன்று,
அதன் எதிர்
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்தன்று;
தெண்ணீர்ப் பரப்பின் இமிழ்திரைப் பெருங்கடல்
உண்ணார் ஆகுப, நீர் வேட்டோரே;
ஆவும் மாவும் சென்று உணக், கலங்கிச்,
சேறோடு பட்ட சிறுமையத்து ஆயினும்
உண்ணீர் மருங்கின் அதர்பல ஆகும்;
புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை
உள்ளிச் சென்றோர் பழியலர்; அதனாற்
புலவேன் வாழியர், ஓரி ; விசும்பின்
கருவி வானம் போல
வரையாது சுரக்கும் வள்ளியோய் ! நின்னே


பொருளுரை:

பிச்சை எடுப்பது இழிவான செயல் இல்லை, அதை விட
இழிவான செயல் பிச்சை இடாமல் இருப்பது
ஒருவனுக்கு கொடுத்தல் உயர்வான செயல் இல்லை, அதை விட
கொடுப்பதை வேண்டாம் என்று மறுத்தல் உயர்வானது
நுரை பொங்கும் கடல் நீர் மிகப் பெரியதாக இருந்தாலும்
தாகம் உள்ளவருக்கு குடிநீராகாது ; ஆனால்
பசுக்களும், மற்ற விலங்குகளும் சென்று நீர் அருந்தி
சேறு நிறைந்த சிறு குளம் ஆனாலும், மனிதர்கள்
தாகத்திற்கு அந்த குளத்து நீரையே அருந்துவர்.
அது போல் மிகப் பெரியவர் பலர் இருந்தாலும்
அவர்கள் கடல் நீரை போன்றவர்கள், எங்களின் துயர் துடைக்க மாட்டார்கள்,
நீ வறுமை அடைந்து வசதி குறைந்து இருந்தாலும்
பலன் எதிர் பார்க்காமல் கொடுக்கும் வானத்து மேகம் போல்
அள்ளி அள்ளி எங்களுக்கு வழங்குவாய்,
ஆனால் இன்று நீ வழங்காது இருப்பது எங்கள் குறையே,
நாங்கள் புறப்படும் வேளையில் பறவை செய்த சகுணங்கள் சரியில்லை,
எங்களின் நேரம் சரியில்லை.
கேட்டவர்க்கு கொடுக்கும் வள்ளல் ஓரியே, நீ நீடோடி வாழ்க



சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca

avatar
அ.இராஜ்திலக்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 279
இணைந்தது : 13/10/2011

Postஅ.இராஜ்திலக் Sat Nov 12, 2011 2:42 pm

அரிய பதிவு பாராட்டுகள்



அன்பான
[You must be registered and logged in to see this image.]

அரிதாய் பூக்கும் குறிஞ்சி பூவிற்காக
அன்றன்று பூக்கும் மலர்மாலை சுமந்தபடி.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Nov 12, 2011 3:37 pm

நல்ல முயற்சி சதாசிவம் அய்யா , விரைவில் அனைத்து பக்கங்களையும் படித்துவிட முயல்வேன். [You must be registered and logged in to see this image.]

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat Nov 12, 2011 5:27 pm

அ.இராஜ்திலக் wrote:அரிய பதிவு பாராட்டுகள்

உங்கள் பாராட்டுக்கு நன்றி



சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat Nov 12, 2011 5:29 pm

ராஜா wrote:நல்ல முயற்சி சதாசிவம் அய்யா , விரைவில் அனைத்து பக்கங்களையும் படித்துவிட முயல்வேன். [You must be registered and logged in to see this image.]

நன்றி,
தமிழின் பெருமையும் தமிழரின் பெருமையும் சொல்லும் சிறந்த நூல் புறநானூறு.
அனைத்து தமிழர்களும் படித்து அறிய வேண்டிய அருமையான நூல் இது.



சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat Dec 10, 2011 9:36 pm

தமிழ் முதியவளின் வீரம்

தமிழ்நாட்டில் ஆண்கள் மட்டுமா வீரத்தில் சிறந்தவர்கள் ?, வீரத்தில் பங்கு அளிப்பவர்கள் அவர்கள் மட்டுமா?. வீர மகனைப் பெற்று அவனை போருக்கு அனுப்பும் தாயும் கூட சிறந்தவள் தான். அப்படி ஒரு சிறந்த தாயின் வீர மரபை பற்றிக் கூறும் அழகான பாடல் இந்தப் புறப்பாடல். அந்த காலத்தில் போருக்கு செல்வதில் சில மரபுகள் இருந்தது. போருக்கு ஆள் தேர்ந்தெடுப்பதிலும், அவர்களை போர் முனையில் நிறுத்தி வைக்கும் முறையிலும் தமிழன் மனிதத்தன்மையுடன் தான் இருந்தான். அதாவது திருமணம் ஆகி குழந்தை பெறாதவர், வீட்டுக்கு ஒரேப் பிள்ளையாக இருப்பவர்கள், வயது முதிர்தோர் ஆகியவர்களை போரில் முதல் வரிசையில் நிற்க வைக்காமல், அல்லது முதல் நாள் போரில் கலந்து கொள்ளச் செய்யாமல், போர் தொடர்ந்து நடைபெற்று மற்ற ஆட்கள் இறந்து மேலும் ஆட்கள் தேவைப்படும் சூழ்நிலையில் மட்டுமே அவர்கள் போரில் நிறுத்தப்பட்டனர். இது தான் தமிழ் மண்ணின் மரபு. அப்படி ஒரு பாடலின் சிறப்பைக் காண்போம்.

பாடல் 19: பெரிது உவந்தனளே (புறம் : 278)
பாடியவர் : காக்கைப்பாடினார் நச்செள்ளையார்
திணை : தும்பை துறை : உவகைக் கலுழ்ச்சி

'நரம்பு எழுந்து உலறிய நிரம்பா மென் தோள்,
முளரி மருங்கின், முதியோள் சிறுவன்
படை அழிந்து, மாறினன்' என்று பலர் கூற,
மண்டு அமர்க்கு உடைந்தனன் ஆயின், உண்ட என்
முலை அறுத்திடுவென், யான்' எனச் சினைஇ,
கொண்ட வாளொடு படு பிணம் பெயரா,
செங்களம் துழவுவோள், சிதைந்து வேறு ஆகிய
படு மகன் கிடக்கை காணூஉ,
ஈன்ற ஞான்றினும் பெரிது உவந்தனளே!


பொருள் விளக்கம்

நரம்பு தெரியும் அளவுக்கு மெலிந்த தோள்கள், தாமரை இலை போல் மெலிந்த ஒட்டிய வயிறை உடைய முதியவளின் சிறு மகன், போரில் தோற்றுப் போனான், புற முதுகு காட்டி ஓடி இறந்தான் என்று பலர் கூற, அப்படி அவன் இறந்திருந்தால் அவனுக்கு பால் கொடுத்த இந்த மார்பகத்தை அறுத்து எறிவேன் என்று கையில் வாளைக் ஏந்திக் கொண்டு மகன் இறந்து இருக்கும் இடம் சென்றாள். இரத்தம் சிதறி சிகப்பு கம்பளம் விரித்தது போல் சிவந்து கிடந்த போர்க்களத்தில் மகனின் உடலைத் தேடுகிறாள். தன் மகன் சிதைந்து இரு துண்டுகளாய் ஆன உடலைக் கண்டு பதறுகிறாள், அந்த உடல் மார்பில் பாய்ந்த வேலால் சிதைந்து அந்த வேல் முதுகை கிழித்து தான் உடலை இரண்டு துண்டாக்கி உள்ளது. என் மகன் புறமுதுகு காட்டி இறக்கவில்லை. அவனைப் பெற்ற பொழுது அடைந்த மகிழ்ச்சியை விட இப்பொழுது தான் நான் பெரிது மகிழ்கிறேன்.


பாடலின் சிறப்பு.


பல நாட்கள் குழந்தை இல்லாமல் வயது முதிர்ந்த நிலையில் பிறந்த மகன் என்று இந்த பாடல் இலைமறை காயாக கூறுகிறது. தாயை தோள் மெலிந்த வெள்ளை முடி உள்ளவளாகவும், மகனை சிறுவனாகவும் கூறுவதால் வயதான பெண்ணின் இளம் வயது மகன் என்று பொருள் படுகிறது. இப்படி வீட்டுக்கு ஒரே பிள்ளையாக இருக்கும் மகனையும் போரில் இழந்ததை நினைத்து வருத்தப்படாமல் அவன் புறமுதுகு காட்டி இறந்து விட்டான் என்று பிறர் கூறுவதை கேட்டுப் பொறுக்க முடியாமல், என் மகன் அப்படி இறக்க மாட்டான், அவனுக்கு நான் வீர்ப்பால் அல்லவா ஊட்டினேன்.அப்படி இறந்திருந்தால் அவனுக்கு பாலூட்டிய என் தனங்களை அறுத்து எறிவேன் என்று சூளுரைத்து அவன் இறந்த உடலை கண்டு மார்பில் பாய்ந்த வேல் தான் அவன் நெஞ்சைக் கிழித்து முதுகில் வெளி வந்து இருக்கிறது. என் மகன் புறமுதுகு காட்டவில்லை என்று பெருமைப்படும் கூறும் தமிழ் நாட்டுத் தாயின் பாடல் இது.


வயது முதிர்ந்தவள் இப்படி என்றாள், தமிழ் இளையவள் எப்பை இருப்பாள். வீட்டில் இருக்கும் ஒவ்வொரு ஆண்மகனையும் போருக்கு அனுப்பும் பெண்ணின் வீரத்தை அடுத்த பாடலில் காண்போம்.


புறம் வளரும்




சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Dec 10, 2011 10:47 pm

பள்ளி நாடகங்களில் பார்த்த இந்த கதையை, உங்கள் வரிகள் மூலம், உட்கருத்தோடு படித்தது, மிகவும் நன்று ஐயா.......மிக்க நன்றிகள் புன்னகை நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat Dec 17, 2011 4:17 pm

தமிழ் இளையவளின் வீரம்

வீரம் என்பது பிறப்பில் வரவேண்டும். வழி வழியாக இரத்தத்தில் ஊறி வருகிறது. எல்லைகள் காக்க வீரம், கௌரவம் காக்க வீரம், பெருமைக்கு வீரம், ஆண்மையை வெளிப்படுத்த வீரம், பெண்மையை கவர வீரம் என்று வீரம் பல காரணங்களில் வெளிப்படுகிறது. ஒரு குடும்பம் சுழல ஆண், பெண் என்ற இரண்டு சக்கரங்கள் தேவை. அது போல் நாடு வளம் பெற ஆண் பெண் என்ற இரண்டு பேரும் வேண்டும். நாடு வளம் பெற, வளம் பெற்ற நாடு பிறர் வசம் வீழாமல் இருக்க வீரம் வேண்டும். வீரம் ஆண் பெண் என்ற இரண்டு பேருக்கும் வேண்டும். அப்படி இருவருக்கும் இருக்கும் போது தான் விதைக்கும் விதை வீறுகொண்டு வீரத்தோடு இருக்கும். இப்படி ஒரு வீரத்தில் விளைந்த ஒரு இளையவளின் பெருமையை பாடும் புறப் பாடல் இது. வயதில் இளையவளாக இருந்தாலும் இவளை மூத்தாள், மூத்த குடியில் பிறந்தவள் என்று இந்த பாடல் பெருமையுடன் கூறுகிறது.

பாடல் : செல்கென விடுமே (புறம் 279)
பாடியவர் : ஒக்கூர் மாசாத்தியார்
திணை : வாகை துறை : மூதின் முல்லை

கெடுக சிந்தை; கடிது இவள் துணிவே;
மூதில் மகளிர் ஆதல் தகுமே:
மேல்நாள் உற்ற செருவிற்கு இவள் தன்னை,
யானை எறிந்து, களத்து ஒழிந்தனனே;
நெருநல் உற்ற செருவிற்கு இவள் கொழுநன்,
பெரு நிரை விலங்கி, ஆண்டுப் பட்டனனே;
இன்றும், செருப் பறை கேட்டு, விருப்புற்று, மயங்கி,
வேல் கைக் கொடுத்து, வெளிது விரித்து உடீஇ,
பாறு மயிர்க் குடுமி எண்ணெய் நீவி,
ஒரு மகன் அல்லது இல்லோள்,
செருமுகம் நோக்கிச் செல்க' என விடுமே!


பொருள் விளக்கம்

இவள் சிந்தை கொடியது, கடுமையானது இவள் துணிவு. மூத்த மகள் என்று கூற தகுதி உடையவள் இவள். முதல் நாள் போரில் இவளுடைய தந்தை போரில் யானை தூக்கி எறிந்து இறந்தான். நேற்று நடந்த போரில் இவள் ஆசைக் கணவன் பசு நிரைகளைக் மீட்கச் சென்று இறந்து போனான். இன்று போர் முரசைக் கேட்டு, தெருவில் பரட்டை தலையோடு விளையாடும் தன் ஒரே மகனை, வீட்டில் இருக்கும் ஒரே ஆண் மகனை அழைத்து எண்ணை இட்டு, போர் அலங்காரம் செய்து,கையில் வேல் கொடுத்து விருப்பத்துடன் போருக்குச் செல் என்று அனுப்பி வைக்கிறாள். என்னே இவள் துணிவு. இவள் துணிவு பெருமை மிக்கது. இவள் மூத்தோள் என்று கூறத் தகுதியானவள் தான்.

பாடலின் சிறப்பு

அன்றைய தமிழகத்தில் போருக்கு செல்வது இவ்வளவு பெருமைப் பட வேண்டிய விஷயமாக கருதப்படுகிறது. பெருமை உள்ளவரைத் தான் பெண் விரும்புகிறாள். ஒவ்வொரு காலத்திலும் சிறப்பும் பெருமையும், வசதியும் உள்ளவரை தான் பெண் விரும்புகிறாள். இரண்டாம் உலகப் போரின் போது ஐரோப்யாவில் உள்ள ஜெர்மன், ஃபிரான்ஸ் போன்ற நாடுகளில் போர் வீரர்களுக்கு என்று தனி மரியாதை இருந்தது, தன் காதலன் போர் வீரன் என்று கூறுவது பெருமை மிக்கதாய் இருந்தது. இன்று விளையாட்டு வீரர்களை, சினிமாக்காரர்களை நாம் எப்படி கொண்டாடுகிறோம், அதைப் போல் பழைய காலம் முதல் இரண்டாம் உலகப் போர் நடக்கும் வரை சமுதாயத்தில் போர் வீரர்களுக்கு தனி மரியாதை இருந்தது, அவர்களை கொண்டாடி வந்தோம். ஆனால் இன்று ஒரு சினிமாவில் கேமராவிற்கு பின்னால் இருக்கும் களைஞர்கள் பேர் கூட நமக்குத் தெரிகிறது. பிரபல கிரிக்கெட் வீரர் காலையில் டீ சாப்பிடுவாரா, காபி சாப்பிடுவாரா என்றும் தெரிந்திருக்கிறது. ஆனால் இந்தியாவின் முப்படை தளபதியின் பெயரைக் கேட்டால் தெரிவதில்லை. இது தான் இன்றைய வீரம். போரில் இறந்து ஒருவரைப் பற்றி தினசரி பத்திரிக்கையில் வரும் வரை நாம் போர் வீரர்களை நினைப்பதில்லை.

இப்படி வீர மரணம் அடையும் வீரனுக்கு நம் தமிழ் மண் என்ன மரியாதை செய்தது, அடுத்த பாடலில் பாப்போம்.

புறம் வளரும்.







சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat Dec 31, 2011 10:00 am

வருமா வீர மரணம்

போர் களத்தில் புறமுதுகு காட்டாமல் வீரத்தோடு சண்டை போட்டு வெற்றிப் பெறுவது நம் தமிழ் வீரனின் விருப்பம். எதற்காக இப்படி செய்கிறான். நாட்டுப் பற்றும், ஆண்மைத் திறனின் வெளிப்பாடும், வெற்றியும், வீரக் களிப்பும், விருந்தும், புகழ் மாலையும் தான் ஒரு வீரனை போற்களம் நோக்கிச் செலுத்துகிறது. இப்படி போற்களம் செல்லும் வீரனுக்கு நம் தமிழ் மன்னன் செய்யும் மரபு என்ன. இன்று ராணுவத்தில் வீர மரணம் அடைந்து உள்ள வீரனுக்கு தேசியக் கொடி போர்த்துவது புதிதல்ல, பன்னெடுங்காலமாக உள்ள வழக்கத்தின் தொடர்ச்சி தான் இது என்பதை இந்த பாடல் மூலம் அறியலாம்.

பாடல் 21 : பலர் மீது நீட்டிய மண்டை (பாடல் 286)
பாடியவர் : ஔவையார்
திணை கரந்தை; துறை வேத்தியல்.

வெள்ளை வெள் யாட்டுச் செச்சை போலத்
தன் ஓரன்ன இளையர் இருப்ப,
பலர் மீது நீட்டிய மண்டை என் சிறுவனைக்
கால் கழி கட்டிலில் கிடப்பி,
தூ வெள் அறுவை போர்ப்பித்திலதே!


பொருள் விளக்கம்

வெள்ளை ஆட்டுக் கிடாய் போல் வரிசையாக வீரர்கள் பலர் நிற்க இந்த சிறு வயதுள்ள வீரனின் சிறப்பான செயல் கண்டு அவனுக்கு மன்னனே மண்டையில் (ஒரு வகையான கிண்ணம், வொய்ன் கிலாஸ் போல) கள் கொடுத்து சிறப்பு செய்தான். இது அவனுக்கு உற்சாகம் அளிக்கிறது. இந்த உற்சாகம் அவனுக்கு திடம் அளித்து போற்களம் செல்லச் செய்கிறது. காலில்லாத கட்டிலாகிய பாடையில் கிடத்தி அவன் உடல் மேல் வெள்ளை ஆடை போர்த்த இன்னும் அவன் வீர மரணம் அடையவில்லை. இதுவே அவனுக்கு வருத்தத்தை தருகிறது.

பாடலின் சிறப்பு

மூப்பு, நோய் வந்து இறப்பதை சுத்த தமிழ் வீரன் விரும்பவில்லை. போற்களம் சென்று வீர மரணம் அடைவதை தான் விரும்பினான் என்று இந்த பாடல் உணர்த்துகிறது. பரம் வீர் ஸக்ரா விருந்து வாங்கிய ராணுவ வீரனை ஜனாதிபதியும் எழுந்து வரவேற்க வேண்டும் என்று இன்று உள்ள வழக்கமும் இது போன்ற ஒரு மரபில் இருந்து வந்தது தான்.

மாரத்தான் ஓட்டத்தில் வெற்றி பெற்ற வீரனுக்கு மன்னன் கொடுக்கும் பரிசு ஆலிவ் மர சிறு இலை தான், ரோமானிய வீர விளையாட்டில் வெற்றி பெரும் வீரனுக்கு மன்னன் செய்யும் மரியாதை சிறுகையசைப்பும், விருந்து உபசாரமும் தான். பரிசு சிறுசு, ஆனால் அது தரும் உற்சாகம், கௌரவம் பெருசு, இதற்கு உயிரை விடவும் வீரர்கள் தயாராகி விடுகின்றனர். இன்று பணிசெய்பவர்கள் தங்களின் கீழ் சிறப்பாக பணி செய்பவர்களுக்கு தனி மரியாதை செய்ய வேண்டும் என்று நமக்கு கற்றுத்தரும் பாடல் இது.

தொடரும்




சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Dec 31, 2011 10:11 am

மிகவும் அருமை.... மகிழ்ச்சி மகிழ்ச்சி

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Jan 02, 2012 11:12 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் அருமை.... மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிகவும் நன்றி ஐயா
நன்றி அன்பு மலர்



சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Sponsored content

PostSponsored content



Page 6 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக