Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு
+27
அதி
sinthiyarasu
கபாலி
T.PUSHPA
ராஜா
அ.இராஜ்திலக்
rameshnaga
Aathira
Dr.சுந்தரராஜ் தயாளன்
kitcha
கேசவன்
பிஜிராமன்
சரவணன்1
மகா பிரபு
தே.மு.தி.க
குடந்தை மணி
ஹாசிம்
கா.ந.கல்யாணசுந்தரம்
தாமு
கலைவேந்தன்
சிவா
அன்பு தளபதி
dsudhanandan
bala23
அசுரன்
மஞ்சுபாஷிணி
சதாசிவம்
31 posters
Page 5 of 10
Page 5 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு
First topic message reminder :
Nalla Tamil Arivom - purananuru
தமிழ் நூல்களில் பெரும் பிரிவு பதினெண் கீழ் கணக்கு நூல்கள், பதினெண் மேல் கணக்கு நூல்கள். கீழ் கணக்கு நூல்கள் வாழ்விற்கு தேவையான அறத்தையும் நீதி போதனையும் கூறுபவை ஆகும். மேல் கணக்கு நூல்கள் எட்டுத் தொகை, பத்து பாட்டு நூல்கள் ஆகும். எட்டுத் தொகை நூல்களுள் அறம், போர், வீரம் போன்ற புற வாழ்க்கை பற்றி கூறும் நூல் புற நானூறு. மொத்தம் நானூறு பாடல்களை கொண்டது.
தற்காலத்தில் நாம் ஒருவரிடம் உதவி கேட்டு, கேட்டது கிடைத்தால் அவரை பாராட்டுகிறோம். உதவியை மறுத்தாலோ, குறைத்து கொடுத்தோலோ அவரை பற்றி குறை கூறுவோம். அப்படி உதவியை தேடிப்போய் நமக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்றாலும் நாம் அவரை பழிக்கக்கூடாது என்பதை மிக அழகாக இந்த பாடல் உணர்த்துகிறது. தமிழின் இனிமையும், வாழ்வியல் உண்மையும் இந்த சங்கப் பாடல்கள் மிக அழகாக எடுத்து காட்டுகிறது.
பாடல் 1: அதனினும் உயர்ந்தது
பாடியவர் : கழைதின் யானையார்
பாடப்பட்டோன் : வல் வில் ஓரி
திணை : பாடாண் துறை : பரிசில்
ஈஎன இரத்தல் இழிந்தன்று, அதன் எதிர்
ஈயென் என்றல் அதனினும் இழிந்தன்று;
கொள் எனக் கொடுத்தல் உயர்தன்று, அதன் எதிர்
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்தன்று;
தெண்ணீர்ப் பரப்பின் இமிழ்திரைப் பெருங்கடல்
உண்ணார் ஆகுப, நீர் வேட்டோரே;
ஆவும் மாவும் சென்று உணக், கலங்கிச்,
சேறோடு பட்ட சிறுமையத்து ஆயினும்
உண்ணீர் மருங்கின் அதர்பல ஆகும்;
புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை
உள்ளிச் சென்றோர் பழியலர்; அதனாற்
புலவேன் வாழியர், ஓரி ; விசும்பின்
கருவி வானம் போல
வரையாது சுரக்கும் வள்ளியோய் ! நின்னே
பொருளுரை:
பிச்சை எடுப்பது இழிவான செயல் இல்லை, அதை விட
இழிவான செயல் பிச்சை இடாமல் இருப்பது
ஒருவனுக்கு கொடுத்தல் உயர்வான செயல் இல்லை, அதை விட
கொடுப்பதை வேண்டாம் என்று மறுத்தல் உயர்வானது
நுரை பொங்கும் கடல் நீர் மிகப் பெரியதாக இருந்தாலும்
தாகம் உள்ளவருக்கு குடிநீராகாது ; ஆனால்
பசுக்களும், மற்ற விலங்குகளும் சென்று நீர் அருந்தி
சேறு நிறைந்த சிறு குளம் ஆனாலும், மனிதர்கள்
தாகத்திற்கு அந்த குளத்து நீரையே அருந்துவர்.
அது போல் மிகப் பெரியவர் பலர் இருந்தாலும்
அவர்கள் கடல் நீரை போன்றவர்கள், எங்களின் துயர் துடைக்க மாட்டார்கள்,
நீ வறுமை அடைந்து வசதி குறைந்து இருந்தாலும்
பலன் எதிர் பார்க்காமல் கொடுக்கும் வானத்து மேகம் போல்
அள்ளி அள்ளி எங்களுக்கு வழங்குவாய்,
ஆனால் இன்று நீ வழங்காது இருப்பது எங்கள் குறையே,
நாங்கள் புறப்படும் வேளையில் பறவை செய்த சகுணங்கள் சரியில்லை,
எங்களின் நேரம் சரியில்லை.
கேட்டவர்க்கு கொடுக்கும் வள்ளல் ஓரியே, நீ நீடோடி வாழ்க
Nalla Tamil Arivom - purananuru
தமிழ் நூல்களில் பெரும் பிரிவு பதினெண் கீழ் கணக்கு நூல்கள், பதினெண் மேல் கணக்கு நூல்கள். கீழ் கணக்கு நூல்கள் வாழ்விற்கு தேவையான அறத்தையும் நீதி போதனையும் கூறுபவை ஆகும். மேல் கணக்கு நூல்கள் எட்டுத் தொகை, பத்து பாட்டு நூல்கள் ஆகும். எட்டுத் தொகை நூல்களுள் அறம், போர், வீரம் போன்ற புற வாழ்க்கை பற்றி கூறும் நூல் புற நானூறு. மொத்தம் நானூறு பாடல்களை கொண்டது.
தற்காலத்தில் நாம் ஒருவரிடம் உதவி கேட்டு, கேட்டது கிடைத்தால் அவரை பாராட்டுகிறோம். உதவியை மறுத்தாலோ, குறைத்து கொடுத்தோலோ அவரை பற்றி குறை கூறுவோம். அப்படி உதவியை தேடிப்போய் நமக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்றாலும் நாம் அவரை பழிக்கக்கூடாது என்பதை மிக அழகாக இந்த பாடல் உணர்த்துகிறது. தமிழின் இனிமையும், வாழ்வியல் உண்மையும் இந்த சங்கப் பாடல்கள் மிக அழகாக எடுத்து காட்டுகிறது.
பாடல் 1: அதனினும் உயர்ந்தது
பாடியவர் : கழைதின் யானையார்
பாடப்பட்டோன் : வல் வில் ஓரி
திணை : பாடாண் துறை : பரிசில்
ஈஎன இரத்தல் இழிந்தன்று, அதன் எதிர்
ஈயென் என்றல் அதனினும் இழிந்தன்று;
கொள் எனக் கொடுத்தல் உயர்தன்று, அதன் எதிர்
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்தன்று;
தெண்ணீர்ப் பரப்பின் இமிழ்திரைப் பெருங்கடல்
உண்ணார் ஆகுப, நீர் வேட்டோரே;
ஆவும் மாவும் சென்று உணக், கலங்கிச்,
சேறோடு பட்ட சிறுமையத்து ஆயினும்
உண்ணீர் மருங்கின் அதர்பல ஆகும்;
புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை
உள்ளிச் சென்றோர் பழியலர்; அதனாற்
புலவேன் வாழியர், ஓரி ; விசும்பின்
கருவி வானம் போல
வரையாது சுரக்கும் வள்ளியோய் ! நின்னே
பொருளுரை:
பிச்சை எடுப்பது இழிவான செயல் இல்லை, அதை விட
இழிவான செயல் பிச்சை இடாமல் இருப்பது
ஒருவனுக்கு கொடுத்தல் உயர்வான செயல் இல்லை, அதை விட
கொடுப்பதை வேண்டாம் என்று மறுத்தல் உயர்வானது
நுரை பொங்கும் கடல் நீர் மிகப் பெரியதாக இருந்தாலும்
தாகம் உள்ளவருக்கு குடிநீராகாது ; ஆனால்
பசுக்களும், மற்ற விலங்குகளும் சென்று நீர் அருந்தி
சேறு நிறைந்த சிறு குளம் ஆனாலும், மனிதர்கள்
தாகத்திற்கு அந்த குளத்து நீரையே அருந்துவர்.
அது போல் மிகப் பெரியவர் பலர் இருந்தாலும்
அவர்கள் கடல் நீரை போன்றவர்கள், எங்களின் துயர் துடைக்க மாட்டார்கள்,
நீ வறுமை அடைந்து வசதி குறைந்து இருந்தாலும்
பலன் எதிர் பார்க்காமல் கொடுக்கும் வானத்து மேகம் போல்
அள்ளி அள்ளி எங்களுக்கு வழங்குவாய்,
ஆனால் இன்று நீ வழங்காது இருப்பது எங்கள் குறையே,
நாங்கள் புறப்படும் வேளையில் பறவை செய்த சகுணங்கள் சரியில்லை,
எங்களின் நேரம் சரியில்லை.
கேட்டவர்க்கு கொடுக்கும் வள்ளல் ஓரியே, நீ நீடோடி வாழ்க
Last edited by சதாசிவம் on Sun May 27, 2012 7:52 am; edited 3 times in total
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு
kitcha wrote:எத்தனையோ பதிவுகள் இருந்தாலும் அத்தனை பதிவுகளை விட சிறந்த பதிவு இது,உங்களுக்கும் எனது வாழ்த்துகள்.[You must be registered and logged in to see this image.]
நன்றி தோழரே,
ஈகரையில் பதியும் அனைத்து பதிவுகளும் சிறந்தவை தான்
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு
ஆற்றாமையும் போற்றாமையும் (எண் பேர் அச்சம்)
மழலைச்செல்வம் மகிழ்வானது, மனிதப்பிறவியும் இனிதானது, இப்படி அரிதாக கிடைக்கும் மனிதப்பிறவியில் குறை இல்லாமல் பிறப்பது அரிது. அப்படி குறை இல்லாமல் பிறந்த பிறப்பின் பயன் என்ன என்று இந்த புறப்பாடல் கூறுகிறது.
பாடல் 15: ஆற்றாமையும் பொற்றாமையும்
பாடியவர் : உறையூர் முது கண்ண சாத்தனார்
பாடப்பட்டோன் : சோழன் நலங்கிள்ளி
திணை : பொதுவியல் துறை : முதுமொழிக்காஞ்சி
சிறப்பு இல் சிதடும், உறுப்பு இல் பிண்டமும்,
கூனும், குறளும், ஊமும், செவிடும்,
மாவும், மருளும், உளப்பட வாழ்நர்க்கு
எண் பேர் எச்சம் என்று இவை எல்லாம்
பேதைமை அல்லது ஊதியம் இல்' என,
முன்னும், அறிந்தோர் கூறினர்; இன்னும்,
அதன் திறம் அத்தை யான் உரைக்க வந்தது
வட்ட வரிய செம் பொறிச் சேவல்
ஏனல் காப்போர் உணர்த்திய கூஉம்
கானத்தோர், நின் தெவ்வர்; நீயே,
புறஞ்சிறை மாக்கட்கு அறம் குறித்து, அகத்தோர்
புய்த்து எறி கரும்பின் விடு கழை தாமரைப்
பூம் போது சிதைய வீழ்ந்தென, கூத்தர்
ஆடு களம் கடுக்கும் அக நாட்டையே;
அதனால், அறனும் பொருளும் இன்பமும் மூன்றும்
ஆற்றும், பெரும! நின் செல்வம்;
பொருள் விளக்கம்:
மனிதப்பிறவி அரிதானது, அதிலும் குருடு, தசைப்பிண்டம், கூன், குள்ளம், ஊமை, செவிடு, விலங்கு வடிவம், மன வளர்ச்சி இல்லாமல் பிறப்பது ஆகிய எட்டு குறைகள் இல்லாமல் பிறப்பது அரிதானது. இப்படி கூறும் பேதமை நீங்கி பிறக்கும் பிறப்பு தான் உயர் பிறப்பு ஆகும், மற்ற பிறப்புக்கு ஊதியம் இல்லை. இப்படி பிறந்தாலும், அறிவுள்ளவனாக வளர்வது சிறந்தது என்று பல விஷயங்களை முழுவதும் அறிந்த சான்றோர் உரைத்தனர்.
இப்படி உள்ள மனிதப்பிறவியின் சிறப்பாக நான் கூறுவது, உன் பகை நாட்டினர் சேவல் கூவி எழுப்பும் வளம் இல்லாத திணை நிலத்தை உடையவர்கள். வீட்டு வேலிக்கு வெளியே நின்று ஒருவர் கேட்டால், கை எட்டும் தூரத்தில் உள்ள கரும்பு தோட்டத்தில், கரும்பை பிய்த்து கொடுக்கும் வளம் மிக்க வயல்களும், கரும்பை புடுங்குவதால் சிதைவு தாமரை நிறைந்த தடாகமும் உடையது உன் நாடு , இது கூத்தர் ஆடும் ஆட்டத்தில் உள்ள செந்நிறம் போல் இருக்கிறது. நல்ல வளமை மிக்க மக்களும் உன் நாட்டில் நிறைந்துள்ளனர்.
அறம் செய்து மேன்மை அடைய உன் நாட்டில் வளம் இருக்கிறது, உன்னிடம் நல்ல குணம் இருக்கிறது, ஆதலால் உன் செல்வத்தைக் கொண்டு அறம், பொருள், இன்பம் என்ற மூன்று பேறுகளை படைத்துக்கொள். இவற்றை அடைய முடியாவிட்டால் நீ பெற்ற செல்வம் வீணாகிவிடும்...இதை நீ ஆற்றாவிட்டால் அது உன்னை போற்றாமை ஆகிவிடும்.
புறம் தொடரும் ......
மழலைச்செல்வம் மகிழ்வானது, மனிதப்பிறவியும் இனிதானது, இப்படி அரிதாக கிடைக்கும் மனிதப்பிறவியில் குறை இல்லாமல் பிறப்பது அரிது. அப்படி குறை இல்லாமல் பிறந்த பிறப்பின் பயன் என்ன என்று இந்த புறப்பாடல் கூறுகிறது.
பாடல் 15: ஆற்றாமையும் பொற்றாமையும்
பாடியவர் : உறையூர் முது கண்ண சாத்தனார்
பாடப்பட்டோன் : சோழன் நலங்கிள்ளி
திணை : பொதுவியல் துறை : முதுமொழிக்காஞ்சி
சிறப்பு இல் சிதடும், உறுப்பு இல் பிண்டமும்,
கூனும், குறளும், ஊமும், செவிடும்,
மாவும், மருளும், உளப்பட வாழ்நர்க்கு
எண் பேர் எச்சம் என்று இவை எல்லாம்
பேதைமை அல்லது ஊதியம் இல்' என,
முன்னும், அறிந்தோர் கூறினர்; இன்னும்,
அதன் திறம் அத்தை யான் உரைக்க வந்தது
வட்ட வரிய செம் பொறிச் சேவல்
ஏனல் காப்போர் உணர்த்திய கூஉம்
கானத்தோர், நின் தெவ்வர்; நீயே,
புறஞ்சிறை மாக்கட்கு அறம் குறித்து, அகத்தோர்
புய்த்து எறி கரும்பின் விடு கழை தாமரைப்
பூம் போது சிதைய வீழ்ந்தென, கூத்தர்
ஆடு களம் கடுக்கும் அக நாட்டையே;
அதனால், அறனும் பொருளும் இன்பமும் மூன்றும்
ஆற்றும், பெரும! நின் செல்வம்;
பொருள் விளக்கம்:
மனிதப்பிறவி அரிதானது, அதிலும் குருடு, தசைப்பிண்டம், கூன், குள்ளம், ஊமை, செவிடு, விலங்கு வடிவம், மன வளர்ச்சி இல்லாமல் பிறப்பது ஆகிய எட்டு குறைகள் இல்லாமல் பிறப்பது அரிதானது. இப்படி கூறும் பேதமை நீங்கி பிறக்கும் பிறப்பு தான் உயர் பிறப்பு ஆகும், மற்ற பிறப்புக்கு ஊதியம் இல்லை. இப்படி பிறந்தாலும், அறிவுள்ளவனாக வளர்வது சிறந்தது என்று பல விஷயங்களை முழுவதும் அறிந்த சான்றோர் உரைத்தனர்.
இப்படி உள்ள மனிதப்பிறவியின் சிறப்பாக நான் கூறுவது, உன் பகை நாட்டினர் சேவல் கூவி எழுப்பும் வளம் இல்லாத திணை நிலத்தை உடையவர்கள். வீட்டு வேலிக்கு வெளியே நின்று ஒருவர் கேட்டால், கை எட்டும் தூரத்தில் உள்ள கரும்பு தோட்டத்தில், கரும்பை பிய்த்து கொடுக்கும் வளம் மிக்க வயல்களும், கரும்பை புடுங்குவதால் சிதைவு தாமரை நிறைந்த தடாகமும் உடையது உன் நாடு , இது கூத்தர் ஆடும் ஆட்டத்தில் உள்ள செந்நிறம் போல் இருக்கிறது. நல்ல வளமை மிக்க மக்களும் உன் நாட்டில் நிறைந்துள்ளனர்.
அறம் செய்து மேன்மை அடைய உன் நாட்டில் வளம் இருக்கிறது, உன்னிடம் நல்ல குணம் இருக்கிறது, ஆதலால் உன் செல்வத்தைக் கொண்டு அறம், பொருள், இன்பம் என்ற மூன்று பேறுகளை படைத்துக்கொள். இவற்றை அடைய முடியாவிட்டால் நீ பெற்ற செல்வம் வீணாகிவிடும்...இதை நீ ஆற்றாவிட்டால் அது உன்னை போற்றாமை ஆகிவிடும்.
புறம் தொடரும் ......
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு
குழந்தைகளின் வியப்பான குணம்
ஒவ்வொருவரும் அவர்கள் குழந்தை செய்யும் குறும்புகளை பார்ப்பதற்கு மிகவும் மகிழ்வர். குழந்தைகள் வளரும் போது அவர்களின் குறும்புகள் தானாகவே குறைந்து விடும். இப்படி குறும்பு செய்து அடம் பிடிக்கும் குழந்தையை கட்டுப்படுத்த தாய் பல் வேறு உபாயங்களை செய்கிறாள். கோகுல கண்ணனின் குறும்பை அடக்க அவனை உரலில் கட்டி வைத்த கதை அனைவருக்கும் தெரியும். இப்படி குறும்பை அடக்க நாம் சிறு பயம் காட்டினாலும் குழந்தை நம் சொல்லுக்கு கட்டுப்படுகிறது,, ஆனால் இப்படி நமக்கு கட்டுப்பட்ட, சிறு விஷயதிற்கும் பயம் கொண்ட குழந்தை வளர்ந்தவுடன் நம்மை பயம் கொள்ளச் செய்கிறது. இப்படி ஆச்சரியமான மாற்றம் குழந்தைகளிடம் (மனிதர்களிடம்) ஏற்படுகிறது. இப்படி தன் குழந்தையின் மாற்றத்தைக் கண்ட, தமிழ்நாட்டில் வாழ்ந்த ஒரு தாய் பாடும் அழகான பாடல் இது.
பாடல் 16: உரவோர் மகனே (புறம் : 310)
பாடியவர்: பொன்முடியார்
பாடப்பட்டோர் : யாரும் இல்லை (பொதுவாக பாடியது)
திணை: தும்பை துறை : நூழிலாட்டு
பால்கொண்டு மடுப்பவும் உண்ணான் ஆகலின்,
செறாஅது ஓச்சிய சிறுகோல் அஞ்சியடு,
உயவொடு வருந்தும் மன்னே! இனியே
புகர்நிறங் கொண்ட களிறட்டு ஆனான்,
முன்நாள் வீழ்ந்த உரவோர் மகனே,
உன்னிலன் என்னும், புண்ஒன்று அம்பு_
மான்உளை அன்ன குடுமித்
தோல்மிசைக் கிடந்த புல்அண லோனே.
பொருள் விளக்கம்:
என் மகன் சிறுவன், அவன் குடிக்க கிண்ணத்தில் பால் ஊற்றி கொடுப்பேன், அவனோ அதை குடிக்காமல் குறும்பு செய்வான், அவன் பால் குடிக்க அவனை பயமுறுத்த ஒரு சிறு குச்சியை எடுத்து அவனை அடிப்பது போல் மிரட்டுவேன், அப்படி ஒரு சிறு குச்சிக்கு பயந்து பால் குடிப்பான் . ஆனால் அந்த சிறுவன் இன்று போற்களம் செல்கிறான், பெரிய புகைப் போல் கரிய யானையை எதிர்த்து வேலை எறிந்து அதை விழ்த்தினான். தன் மார்பில் பட்ட அம்பு கூட அவனுக்கு தெரியவில்லை, தோளில் சாய்ந்து விழுப்புண் பட்டு கிடக்கிறான்.
என்ன ஆச்சரியம்!!!!!!!!, சிறிய குச்சிக்கு பயந்த என் மகனா இவன் ? நினைத்து பார்த்தால் வியப்பாக இருக்கிறது , பெருமையாக இருக்கிறது. மறக்குடியில் பிறந்த மகன், அவன் செயல் வியப்புக்குரியது.
புறம் வளரும் ......
ஒவ்வொருவரும் அவர்கள் குழந்தை செய்யும் குறும்புகளை பார்ப்பதற்கு மிகவும் மகிழ்வர். குழந்தைகள் வளரும் போது அவர்களின் குறும்புகள் தானாகவே குறைந்து விடும். இப்படி குறும்பு செய்து அடம் பிடிக்கும் குழந்தையை கட்டுப்படுத்த தாய் பல் வேறு உபாயங்களை செய்கிறாள். கோகுல கண்ணனின் குறும்பை அடக்க அவனை உரலில் கட்டி வைத்த கதை அனைவருக்கும் தெரியும். இப்படி குறும்பை அடக்க நாம் சிறு பயம் காட்டினாலும் குழந்தை நம் சொல்லுக்கு கட்டுப்படுகிறது,, ஆனால் இப்படி நமக்கு கட்டுப்பட்ட, சிறு விஷயதிற்கும் பயம் கொண்ட குழந்தை வளர்ந்தவுடன் நம்மை பயம் கொள்ளச் செய்கிறது. இப்படி ஆச்சரியமான மாற்றம் குழந்தைகளிடம் (மனிதர்களிடம்) ஏற்படுகிறது. இப்படி தன் குழந்தையின் மாற்றத்தைக் கண்ட, தமிழ்நாட்டில் வாழ்ந்த ஒரு தாய் பாடும் அழகான பாடல் இது.
பாடல் 16: உரவோர் மகனே (புறம் : 310)
பாடியவர்: பொன்முடியார்
பாடப்பட்டோர் : யாரும் இல்லை (பொதுவாக பாடியது)
திணை: தும்பை துறை : நூழிலாட்டு
பால்கொண்டு மடுப்பவும் உண்ணான் ஆகலின்,
செறாஅது ஓச்சிய சிறுகோல் அஞ்சியடு,
உயவொடு வருந்தும் மன்னே! இனியே
புகர்நிறங் கொண்ட களிறட்டு ஆனான்,
முன்நாள் வீழ்ந்த உரவோர் மகனே,
உன்னிலன் என்னும், புண்ஒன்று அம்பு_
மான்உளை அன்ன குடுமித்
தோல்மிசைக் கிடந்த புல்அண லோனே.
பொருள் விளக்கம்:
என் மகன் சிறுவன், அவன் குடிக்க கிண்ணத்தில் பால் ஊற்றி கொடுப்பேன், அவனோ அதை குடிக்காமல் குறும்பு செய்வான், அவன் பால் குடிக்க அவனை பயமுறுத்த ஒரு சிறு குச்சியை எடுத்து அவனை அடிப்பது போல் மிரட்டுவேன், அப்படி ஒரு சிறு குச்சிக்கு பயந்து பால் குடிப்பான் . ஆனால் அந்த சிறுவன் இன்று போற்களம் செல்கிறான், பெரிய புகைப் போல் கரிய யானையை எதிர்த்து வேலை எறிந்து அதை விழ்த்தினான். தன் மார்பில் பட்ட அம்பு கூட அவனுக்கு தெரியவில்லை, தோளில் சாய்ந்து விழுப்புண் பட்டு கிடக்கிறான்.
என்ன ஆச்சரியம்!!!!!!!!, சிறிய குச்சிக்கு பயந்த என் மகனா இவன் ? நினைத்து பார்த்தால் வியப்பாக இருக்கிறது , பெருமையாக இருக்கிறது. மறக்குடியில் பிறந்த மகன், அவன் செயல் வியப்புக்குரியது.
புறம் வளரும் ......
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு
நம் பண்டைத்தமிழிரின் குருதியில் ஊறிய வீரத்தைக் கண்டு வியக்கும் நற்றாயின் குரலை அப்படியே உங்கள் எழுத்தில் கேட்டேன். இனிமையான எழுத்துப் பதிவு.
இந்த திரி ஈகரையில் சிறப்பான திருமுடியில் அமைந்த ஒப்பில்லா வைரக்கல். தொடங்கியமைக்கும் வெற்றிகரமாகத் தொடர்வதற்கும் வாழ்த்துகள் சதா ஐயா.
இந்த திரி ஈகரையில் சிறப்பான திருமுடியில் அமைந்த ஒப்பில்லா வைரக்கல். தொடங்கியமைக்கும் வெற்றிகரமாகத் தொடர்வதற்கும் வாழ்த்துகள் சதா ஐயா.
Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு
இப்போது எல்லா பாடல்களையும் படித்தேன். புறநானுற்றுக் கடலில் சதாசிவம் ஐயா மூழ்கி எடுத்துப் பதிந்த முத்துப்பதிவுகள் அததனையும். எம் தமிழரின் வாழ்விய்ல் பெருமைகளை ஈகரை உறவுகளுக்கு அறிமுகப்படுத்தும் அழகிய பதிவுக்கு மிக்க நன்றி ஐயா.
Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு
Aathira wrote:இப்போது எல்லா பாடல்களையும் படித்தேன். புறநானுற்றுக் கடலில் சதாசிவம் ஐயா மூழ்கி எடுத்துப் பதிந்த முத்துப்பதிவுகள் அததனையும். எம் தமிழரின் வாழ்விய்ல் பெருமைகளை ஈகரை உறவுகளுக்கு அறிமுகப்படுத்தும் அழகிய பதிவுக்கு மிக்க நன்றி ஐயா.
புறநானூறும், குறுந்தொகையும் ஒவ்வொரு தமிழனும், குறிப்பாக கவிதை எழுதுபவர்கள் படித்து அறிய வேண்டும் என்பது என் அவா.
உங்கள் ஊக்கத்திற்கு மிக்க நன்றி.......
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு
rameshnaga wrote:pagirvukku nanri sadhaasivam saar.
நன்றி
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு
தமிழனின் வீரமும் மானமும்
"மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமான்" என்று நாம் படித்ததுண்டு, தமிழர்களிடம் பணம், பொருள், பதவியை விட மானம் பெரிதான விஷயமாக கருதப்படுகிறது, தவறு செய்து விட்டு அடுத்தவர் முன் நாணி நிற்கும் சூழல் நேரா வண்ணம், நம்முடைய குணங்கள் இருக்க வேண்டும் என்று வள்ளுவம் உரைக்கிறது. எதிரியிடம் உயிர்ப்பிச்சை கேட்காமல் வீரத்தோடு சண்டையிட்டு வீரமரணம் அடையும் போக்கு தமிழக வீரனிடம் இருந்தது. புறமுதுகு காட்டி மரணம் அடைவது இழுக்காக கருதப்பட்டது.
சேரமான் கணைக்கால் இரும்பொறை சோழன் செங்கண்ணோடு போர் புரிந்து குடவாயில் கேட்டை சிறையில் சிறைப்பட்டு இருக்கும் நிலையில் தண்ணீர் தா என்று இரந்து கேட்டுப் பெறாமல் தவிக்கும் நிலையில் எழுந்த பாடல் இது, பகைவனிடம் போரிடும் வீரமும், தன்னிலை இழக்காத தன்மானமும் நிறைந்தது தமிழனின் வாழ்க்கை என்று இந்த பாடல் மூலம் அறியலாம். குழந்தை இறந்து பிறந்தாலும், வெறும் சதைப்பிண்டம் பிறந்தாலும் அதன் உடலில் வாளால் கீறி வீர மரணம் அடைந்ததாக கருதி புதைக்கும் பழக்கம் இருந்ததையும் இந்த பாடல் மூலம் அறிய முடிகிறது.
பாடல் 17: குழவி இறப்பினும் (புறம் 74)
பாடியவர் : சேரமான் கணைக்கால் இரும்பொறை
திணை பொதுவியல்; துறை முதுமொழிக் காஞ்சி.
குழவி இறப்பினும், ஊன்தடி பிறப்பினும்,
'ஆள் அன்று' என்று வாளின் தப்பார்;
தொடர்ப் படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய
கேள் அல் கேளிர் வேளாண் சிறு பதம்,
மதுகை இன்றி, வயிற்றுத் தீத் தணிய,
தாம் இரந்து உண்ணும் அளவை
ஈன்மரோ, இவ் உலகத்தானே?
பொருள் விளக்கம்:
குழந்தை இறந்து பிறந்தாலும், வெறும் சதைப்பிண்டம் பிறப்பினும், வயது முதிர்ந்து நோயால் இறந்தாலும் அப்படியே புதைத்தால் வீரம் இல்லை, ஆண்மைக்கு அழகில்லை என்று கருதி அந்த இறந்த உடலை வாளால் கீறி புதைப்பது மறவர் குல வழக்கம். பசி தனிய நாயின் கீழ் நடத்தும் கேளிர் அல்லாத இந்த பகைவரிடம் தண்ணீர் தா என்று கேட்டுப் பெரும் இழிவு நிலை நேர்ந்தது. இது சரியில்லை. இந்த இழிவு நிலை உள்ளவரை உலகம் ஏற்காது.
புறம் தொடரும் .....
"மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமான்" என்று நாம் படித்ததுண்டு, தமிழர்களிடம் பணம், பொருள், பதவியை விட மானம் பெரிதான விஷயமாக கருதப்படுகிறது, தவறு செய்து விட்டு அடுத்தவர் முன் நாணி நிற்கும் சூழல் நேரா வண்ணம், நம்முடைய குணங்கள் இருக்க வேண்டும் என்று வள்ளுவம் உரைக்கிறது. எதிரியிடம் உயிர்ப்பிச்சை கேட்காமல் வீரத்தோடு சண்டையிட்டு வீரமரணம் அடையும் போக்கு தமிழக வீரனிடம் இருந்தது. புறமுதுகு காட்டி மரணம் அடைவது இழுக்காக கருதப்பட்டது.
சேரமான் கணைக்கால் இரும்பொறை சோழன் செங்கண்ணோடு போர் புரிந்து குடவாயில் கேட்டை சிறையில் சிறைப்பட்டு இருக்கும் நிலையில் தண்ணீர் தா என்று இரந்து கேட்டுப் பெறாமல் தவிக்கும் நிலையில் எழுந்த பாடல் இது, பகைவனிடம் போரிடும் வீரமும், தன்னிலை இழக்காத தன்மானமும் நிறைந்தது தமிழனின் வாழ்க்கை என்று இந்த பாடல் மூலம் அறியலாம். குழந்தை இறந்து பிறந்தாலும், வெறும் சதைப்பிண்டம் பிறந்தாலும் அதன் உடலில் வாளால் கீறி வீர மரணம் அடைந்ததாக கருதி புதைக்கும் பழக்கம் இருந்ததையும் இந்த பாடல் மூலம் அறிய முடிகிறது.
பாடல் 17: குழவி இறப்பினும் (புறம் 74)
பாடியவர் : சேரமான் கணைக்கால் இரும்பொறை
திணை பொதுவியல்; துறை முதுமொழிக் காஞ்சி.
குழவி இறப்பினும், ஊன்தடி பிறப்பினும்,
'ஆள் அன்று' என்று வாளின் தப்பார்;
தொடர்ப் படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய
கேள் அல் கேளிர் வேளாண் சிறு பதம்,
மதுகை இன்றி, வயிற்றுத் தீத் தணிய,
தாம் இரந்து உண்ணும் அளவை
ஈன்மரோ, இவ் உலகத்தானே?
பொருள் விளக்கம்:
குழந்தை இறந்து பிறந்தாலும், வெறும் சதைப்பிண்டம் பிறப்பினும், வயது முதிர்ந்து நோயால் இறந்தாலும் அப்படியே புதைத்தால் வீரம் இல்லை, ஆண்மைக்கு அழகில்லை என்று கருதி அந்த இறந்த உடலை வாளால் கீறி புதைப்பது மறவர் குல வழக்கம். பசி தனிய நாயின் கீழ் நடத்தும் கேளிர் அல்லாத இந்த பகைவரிடம் தண்ணீர் தா என்று கேட்டுப் பெரும் இழிவு நிலை நேர்ந்தது. இது சரியில்லை. இந்த இழிவு நிலை உள்ளவரை உலகம் ஏற்காது.
புறம் தொடரும் .....
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு
தமிழனின் வீரம்
குழந்தை இறந்து பிறந்தாலும் வாளால் கீறி புதைக்கும் வீரம் விளைந்த பூமி இந்த தமிழ் பூமி. பகைவரை கண்டு அஞ்சாத, புறமுதுகு காட்டாத வீரம் இந்த மண்ணின் மைந்தர்களுக்கு உண்டு. அப்படி உள்ள ஒரு தமிழக வீரனின் வீரத்தை புலப்படுத்தும் பாடல் இது.
பாடல் 18 : பெயர் புற நகுமே (புறம் பாடல் எண் : 284)
பாடியவர் : ஓரம் போகியார்
திணை : தும்பை துறை : பண்பாட்டு
'வருகதில் வல்லே; வருகதில் வல்' என,
வேந்து விடு விழுத் தூது ஆங்கு ஆங்கு இசைப்ப,
நூலரி மாலை சூடி, காலின்,
தமியன் வந்த மூதிலாளன்
அருஞ் சமம் தாங்கி, முன் நின்று எறிந்த
ஒரு கை இரும் பிணத்து எயிறு மிறையாகத்
திரிந்த வாய் வாள் திருத்தா,
தனக்கு இரிந்தானைப் பெயர் புறம் நகுமே.
பொருள் விளக்கம்
திறமையான வல்லமை பொருந்தியவனே வீரனே வருக வருக என்று தூதுவர்கள் உன்னை போருக்கு அழைப்பார்கள். நூலால் கட்டிய மாலையை கழுத்தில் சூடி, காலால் நடந்து போருக்கு செல்கிறான் வீரம் விளைந்த மூத்த குடியில் பிறந்த வீரன்.
தன்னை எதிர்க்க வரும் யானையை வேல் கொண்டு தாக்கி வீழ்த்துகிறான். யானையை வீழ்த்தியதால் வேல் வளைந்து விட்டது. வளைந்த வேலை யானையின் உடம்பில் வைத்து நிமிர்த்துகிறான். மறுபடி வேலைக் கையில் ஏந்தி தாங்க தோற்றவன் நோக்கிப் பாய அவன் புறமுதுகு இட்டு ஓடுகிறான். அஞ்சி ஓடும் அவனைப் பார்த்து நகைக்கும் இவனின் வீரம் பாராட்டுக்குரியது.
தமிழக ஆணின் வீரம் இப்படி என்றால், பெண்கள் எப்படி இருப்பார்கள், அடுத்த பாடலில் தமீழக பெண்ணின் வீரத்தைக் இதைக் காண்போம்.
புறம் வளரும்
குழந்தை இறந்து பிறந்தாலும் வாளால் கீறி புதைக்கும் வீரம் விளைந்த பூமி இந்த தமிழ் பூமி. பகைவரை கண்டு அஞ்சாத, புறமுதுகு காட்டாத வீரம் இந்த மண்ணின் மைந்தர்களுக்கு உண்டு. அப்படி உள்ள ஒரு தமிழக வீரனின் வீரத்தை புலப்படுத்தும் பாடல் இது.
பாடல் 18 : பெயர் புற நகுமே (புறம் பாடல் எண் : 284)
பாடியவர் : ஓரம் போகியார்
திணை : தும்பை துறை : பண்பாட்டு
'வருகதில் வல்லே; வருகதில் வல்' என,
வேந்து விடு விழுத் தூது ஆங்கு ஆங்கு இசைப்ப,
நூலரி மாலை சூடி, காலின்,
தமியன் வந்த மூதிலாளன்
அருஞ் சமம் தாங்கி, முன் நின்று எறிந்த
ஒரு கை இரும் பிணத்து எயிறு மிறையாகத்
திரிந்த வாய் வாள் திருத்தா,
தனக்கு இரிந்தானைப் பெயர் புறம் நகுமே.
பொருள் விளக்கம்
திறமையான வல்லமை பொருந்தியவனே வீரனே வருக வருக என்று தூதுவர்கள் உன்னை போருக்கு அழைப்பார்கள். நூலால் கட்டிய மாலையை கழுத்தில் சூடி, காலால் நடந்து போருக்கு செல்கிறான் வீரம் விளைந்த மூத்த குடியில் பிறந்த வீரன்.
தன்னை எதிர்க்க வரும் யானையை வேல் கொண்டு தாக்கி வீழ்த்துகிறான். யானையை வீழ்த்தியதால் வேல் வளைந்து விட்டது. வளைந்த வேலை யானையின் உடம்பில் வைத்து நிமிர்த்துகிறான். மறுபடி வேலைக் கையில் ஏந்தி தாங்க தோற்றவன் நோக்கிப் பாய அவன் புறமுதுகு இட்டு ஓடுகிறான். அஞ்சி ஓடும் அவனைப் பார்த்து நகைக்கும் இவனின் வீரம் பாராட்டுக்குரியது.
தமிழக ஆணின் வீரம் இப்படி என்றால், பெண்கள் எப்படி இருப்பார்கள், அடுத்த பாடலில் தமீழக பெண்ணின் வீரத்தைக் இதைக் காண்போம்.
புறம் வளரும்
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Page 5 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
» தமிழ் விடு தூது – நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு
» ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு !
» நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு
» நல்ல தமிழ் அறிவோம் -ஔவையாரின் நல்வழி தொடர் பதிவு -முடிந்தது
» நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.
» ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு !
» நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு
» நல்ல தமிழ் அறிவோம் -ஔவையாரின் நல்வழி தொடர் பதிவு -முடிந்தது
» நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.
Page 5 of 10
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|