Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு
+27
அதி
sinthiyarasu
கபாலி
T.PUSHPA
ராஜா
அ.இராஜ்திலக்
rameshnaga
Aathira
Dr.சுந்தரராஜ் தயாளன்
kitcha
கேசவன்
பிஜிராமன்
சரவணன்1
மகா பிரபு
தே.மு.தி.க
குடந்தை மணி
ஹாசிம்
கா.ந.கல்யாணசுந்தரம்
தாமு
கலைவேந்தன்
சிவா
அன்பு தளபதி
dsudhanandan
bala23
அசுரன்
மஞ்சுபாஷிணி
சதாசிவம்
31 posters
Page 1 of 10
Page 1 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு
Nalla Tamil Arivom - purananuru
தமிழ் நூல்களில் பெரும் பிரிவு பதினெண் கீழ் கணக்கு நூல்கள், பதினெண் மேல் கணக்கு நூல்கள். கீழ் கணக்கு நூல்கள் வாழ்விற்கு தேவையான அறத்தையும் நீதி போதனையும் கூறுபவை ஆகும். மேல் கணக்கு நூல்கள் எட்டுத் தொகை, பத்து பாட்டு நூல்கள் ஆகும். எட்டுத் தொகை நூல்களுள் அறம், போர், வீரம் போன்ற புற வாழ்க்கை பற்றி கூறும் நூல் புற நானூறு. மொத்தம் நானூறு பாடல்களை கொண்டது.
தற்காலத்தில் நாம் ஒருவரிடம் உதவி கேட்டு, கேட்டது கிடைத்தால் அவரை பாராட்டுகிறோம். உதவியை மறுத்தாலோ, குறைத்து கொடுத்தோலோ அவரை பற்றி குறை கூறுவோம். அப்படி உதவியை தேடிப்போய் நமக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்றாலும் நாம் அவரை பழிக்கக்கூடாது என்பதை மிக அழகாக இந்த பாடல் உணர்த்துகிறது. தமிழின் இனிமையும், வாழ்வியல் உண்மையும் இந்த சங்கப் பாடல்கள் மிக அழகாக எடுத்து காட்டுகிறது.
பாடல் 1: அதனினும் உயர்ந்தது
பாடியவர் : கழைதின் யானையார்
பாடப்பட்டோன் : வல் வில் ஓரி
திணை : பாடாண் துறை : பரிசில்
ஈஎன இரத்தல் இழிந்தன்று, அதன் எதிர்
ஈயென் என்றல் அதனினும் இழிந்தன்று;
கொள் எனக் கொடுத்தல் உயர்தன்று, அதன் எதிர்
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்தன்று;
தெண்ணீர்ப் பரப்பின் இமிழ்திரைப் பெருங்கடல்
உண்ணார் ஆகுப, நீர் வேட்டோரே;
ஆவும் மாவும் சென்று உணக், கலங்கிச்,
சேறோடு பட்ட சிறுமையத்து ஆயினும்
உண்ணீர் மருங்கின் அதர்பல ஆகும்;
புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை
உள்ளிச் சென்றோர் பழியலர்; அதனாற்
புலவேன் வாழியர், ஓரி ; விசும்பின்
கருவி வானம் போல
வரையாது சுரக்கும் வள்ளியோய் ! நின்னே
பொருளுரை:
பிச்சை எடுப்பது இழிவான செயல் இல்லை, அதை விட
இழிவான செயல் பிச்சை இடாமல் இருப்பது
ஒருவனுக்கு கொடுத்தல் உயர்வான செயல் இல்லை, அதை விட
கொடுப்பதை வேண்டாம் என்று மறுத்தல் உயர்வானது
நுரை பொங்கும் கடல் நீர் மிகப் பெரியதாக இருந்தாலும்
தாகம் உள்ளவருக்கு குடிநீராகாது ; ஆனால்
பசுக்களும், மற்ற விலங்குகளும் சென்று நீர் அருந்தி
சேறு நிறைந்த சிறு குளம் ஆனாலும், மனிதர்கள்
தாகத்திற்கு அந்த குளத்து நீரையே அருந்துவர்.
அது போல் மிகப் பெரியவர் பலர் இருந்தாலும்
அவர்கள் கடல் நீரை போன்றவர்கள், எங்களின் துயர் துடைக்க மாட்டார்கள்,
நீ வறுமை அடைந்து வசதி குறைந்து இருந்தாலும்
பலன் எதிர் பார்க்காமல் கொடுக்கும் வானத்து மேகம் போல்
அள்ளி அள்ளி எங்களுக்கு வழங்குவாய்,
ஆனால் இன்று நீ வழங்காது இருப்பது எங்கள் குறையே,
நாங்கள் புறப்படும் வேளையில் பறவை செய்த சகுணங்கள் சரியில்லை,
எங்களின் நேரம் சரியில்லை.
கேட்டவர்க்கு கொடுக்கும் வள்ளல் ஓரியே, நீ நீடோடி வாழ்க
தமிழ் நூல்களில் பெரும் பிரிவு பதினெண் கீழ் கணக்கு நூல்கள், பதினெண் மேல் கணக்கு நூல்கள். கீழ் கணக்கு நூல்கள் வாழ்விற்கு தேவையான அறத்தையும் நீதி போதனையும் கூறுபவை ஆகும். மேல் கணக்கு நூல்கள் எட்டுத் தொகை, பத்து பாட்டு நூல்கள் ஆகும். எட்டுத் தொகை நூல்களுள் அறம், போர், வீரம் போன்ற புற வாழ்க்கை பற்றி கூறும் நூல் புற நானூறு. மொத்தம் நானூறு பாடல்களை கொண்டது.
தற்காலத்தில் நாம் ஒருவரிடம் உதவி கேட்டு, கேட்டது கிடைத்தால் அவரை பாராட்டுகிறோம். உதவியை மறுத்தாலோ, குறைத்து கொடுத்தோலோ அவரை பற்றி குறை கூறுவோம். அப்படி உதவியை தேடிப்போய் நமக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்றாலும் நாம் அவரை பழிக்கக்கூடாது என்பதை மிக அழகாக இந்த பாடல் உணர்த்துகிறது. தமிழின் இனிமையும், வாழ்வியல் உண்மையும் இந்த சங்கப் பாடல்கள் மிக அழகாக எடுத்து காட்டுகிறது.
பாடல் 1: அதனினும் உயர்ந்தது
பாடியவர் : கழைதின் யானையார்
பாடப்பட்டோன் : வல் வில் ஓரி
திணை : பாடாண் துறை : பரிசில்
ஈஎன இரத்தல் இழிந்தன்று, அதன் எதிர்
ஈயென் என்றல் அதனினும் இழிந்தன்று;
கொள் எனக் கொடுத்தல் உயர்தன்று, அதன் எதிர்
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்தன்று;
தெண்ணீர்ப் பரப்பின் இமிழ்திரைப் பெருங்கடல்
உண்ணார் ஆகுப, நீர் வேட்டோரே;
ஆவும் மாவும் சென்று உணக், கலங்கிச்,
சேறோடு பட்ட சிறுமையத்து ஆயினும்
உண்ணீர் மருங்கின் அதர்பல ஆகும்;
புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை
உள்ளிச் சென்றோர் பழியலர்; அதனாற்
புலவேன் வாழியர், ஓரி ; விசும்பின்
கருவி வானம் போல
வரையாது சுரக்கும் வள்ளியோய் ! நின்னே
பொருளுரை:
பிச்சை எடுப்பது இழிவான செயல் இல்லை, அதை விட
இழிவான செயல் பிச்சை இடாமல் இருப்பது
ஒருவனுக்கு கொடுத்தல் உயர்வான செயல் இல்லை, அதை விட
கொடுப்பதை வேண்டாம் என்று மறுத்தல் உயர்வானது
நுரை பொங்கும் கடல் நீர் மிகப் பெரியதாக இருந்தாலும்
தாகம் உள்ளவருக்கு குடிநீராகாது ; ஆனால்
பசுக்களும், மற்ற விலங்குகளும் சென்று நீர் அருந்தி
சேறு நிறைந்த சிறு குளம் ஆனாலும், மனிதர்கள்
தாகத்திற்கு அந்த குளத்து நீரையே அருந்துவர்.
அது போல் மிகப் பெரியவர் பலர் இருந்தாலும்
அவர்கள் கடல் நீரை போன்றவர்கள், எங்களின் துயர் துடைக்க மாட்டார்கள்,
நீ வறுமை அடைந்து வசதி குறைந்து இருந்தாலும்
பலன் எதிர் பார்க்காமல் கொடுக்கும் வானத்து மேகம் போல்
அள்ளி அள்ளி எங்களுக்கு வழங்குவாய்,
ஆனால் இன்று நீ வழங்காது இருப்பது எங்கள் குறையே,
நாங்கள் புறப்படும் வேளையில் பறவை செய்த சகுணங்கள் சரியில்லை,
எங்களின் நேரம் சரியில்லை.
கேட்டவர்க்கு கொடுக்கும் வள்ளல் ஓரியே, நீ நீடோடி வாழ்க
Last edited by சதாசிவம் on Sun May 27, 2012 7:52 am; edited 3 times in total
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு
பொருள் விளக்கத்துடன் மிக அருமையான வரிகள்..
அன்பு நன்றிகள் சதாசிவம் பகிர்வுக்கு.
அன்பு நன்றிகள் சதாசிவம் பகிர்வுக்கு.
Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு
சிறப்பான செயல் செய்த சதாசிவத்துக்கு நன்றிகள். இதுபோன்று நிறைய தமிழ் பழமையை சொல்லும் பாடல்களை விளக்கத்துடன் தாருங்கள் நண்பரே
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு
சூப்பர் ரொம்ப நாள் இது போல பதிவு வருமா என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.
மிக்க மகிழ்ச்சி... மேலும் தொடர வாழ்த்துக்கள்....
நன்றி
மிக்க மகிழ்ச்சி... மேலும் தொடர வாழ்த்துக்கள்....
நன்றி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இயற்கையோடு இயைந்த நோயற்ற அமைதியான வாழ்வு
அன்புடன்
:afro: [b]பாலா[/b] :afro:
bala23- பண்பாளர்
- பதிவுகள் : 196
இணைந்தது : 09/01/2011
Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு
ஊக்கம் அளித்த நண்பர்களுக்கு நன்றி.
புறநானூறு & குறுந்தொகையில் உள்ள சிறந்த பாடல்களை தொடராக எழுதலாம் என்று உள்ளேன். தகவல் திரட்டிய பிறகு பாடல்கள் தொடரும்.
நன்றி
[You must be registered and logged in to see this image.]
புறநானூறு & குறுந்தொகையில் உள்ள சிறந்த பாடல்களை தொடராக எழுதலாம் என்று உள்ளேன். தகவல் திரட்டிய பிறகு பாடல்கள் தொடரும்.
நன்றி
[You must be registered and logged in to see this image.]
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு
தமிழ் இலக்கண முன்னூல் ஆன தொல்காப்பியம் நூல்கள் எழுதும் முறையை நான்கு வகையாக பிரித்து உள்ளது.
அவை
இப்படி மேற் சொன்ன நூல் முறையில், பதினெண் மேல் கணக்கு நூல்களுள் தொகுக்கப்பட்ட தொகை நூல்கள் எட்டு. அவை எட்டுத்தொகை நூல்கள் என்று வழங்கப்படுகிறது. இவை
" நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பற்று ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம் புறம் என்று
இத்திறத்த எட்டுத் தொகை"
எட்டுத்தொகை நூல்கள் அகம், புறம் ஆகிய இரண்டு பிரிவுகளை பற்றி மிகச்சிறப்பான பாடல்கள் கொண்ட தொகுப்பு ஆகும்.
புறநானூறு
புறம் + நானூறு = புறநானூறு. இப்பாடல்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து கி.பி 2-ஆம் நூற்றாண்டு வரை வாழ்ந்த புலவர்களால் பாடப்பட்டவையாகும். இதன் மூலம் மூவேந்தர்களின் சிறப்பு, தமிழ்நாட்டின் சிறப்பு, கடை ஏழு வள்ளற்களின் சிறப்பு, வீரம் என பல தரப்பட்ட விவரங்களும், பலருடைய வரலாற்று குறிப்புகளும் அறியலாம்.
அதியமானும் , ஔவையாறும்
அதியமான், ஔவையாருக்கு சிறந்த நண்பர். ஒரு முறை ஔவையார் அதியமானிடம் பாடி பரிசில் பெற சென்றார். பரிசில் உடனே வழங்கி விட்டால் ஔவையார் சென்று விடுவார் என்ற எண்ணத்தில் பரிசில் தராமல் காலம் கடத்தினார் அதியமான், அந்த சூழலில் எழுந்த பாடல் இது. விருந்தும் மருந்தும் மூன்று நாட்கள் என்பர் நம் பெரியோர், மூன்று நாட்கள் மேல் ஒரு வீட்டில் இருந்தால் முதல் நாள் உள்ள உபசரிப்பு போல் இருக்காமல் அடுத்தடுத்த நாட்களில் உபசரிப்பு குறையும். ஆனால் இந்த பாடல் கூறும் அதியமானின் சிறப்பை பாருங்கள்.
பாடல் 2: பல நாளும் தலை நாளும்
பாடியவர் : ஔவையார்
பாடப்பட்டோன் : அதியமான் நெடுமான் அஞ்சி
திணை : பாடாண் துறை : பரிசில் கடா நிலை
பாடல்: புறம் : 101
" ஒரு நாள் செல்லலம்: இருநாட் செல்லலம்
பன்னாள் பயின்று, பலரோடு செல்லினும்
தலைநாள் பொன்ற விருப்பினன் மாதோ:
அணிபூண் அணிந்த யானை இயல் தேர்
அதியமான்; பரிசில் பெறூஉங் காலம்
நீட்டினும், நீட்டா தாயினும், யானைதன்
கோட்டிடை வைத்த கவளம் போலக்
கையகத் தது அது: பொய்யா காதே;
அருந்தே மாந்த நெஞ்சம்!
வருந்த வேண்டா; வாழ்க அவன் தாளே! "
பொருளுரை:
ஒரு நாள் செல்லலாம், பல நாள் செல்லலாம்
ஒருவராக செல்லலாம், பலருடன் செல்லலாம்
முதல் நாள் விருந்து உபசரிக்கும் மங்கையை போல்
அழகிய நகைகள் அணிந்த யானையை உடைய
அதியமான் நம்மை உபசரிப்பான்.
பரிசு உடனடியாக கொடுத்தாலும், கொடுக்கா விட்டாலும்
பெரிய யானையின் கொம்புகளுக்கு இடையே வைத்த உணவு
அதன் வாய்க்குள் தப்பாமல் செல்வது போல்,
நம்மை வந்து சேரும், அது பொய் ஆகாது
ஆதலால், கலங்காதே மனமே, வருந்த வேண்டாம்
வாழ்க அவன் தோள்கள், வாழ்க அதியமான்.
இப்படிச் சொன்ன ஔவையார், பல நாள் ஆகியும் பரிசு கிடைக்காததால் ஒரு பாடல் பாடினார், அப்பாடலை பின்பு காண்போம்.
அவை
- தொகுத்தல் - பல் வேறு விஷயங்களை தொகுத்து ஒருவர் எழுதுதல்
- விரித்தல் - இது ஏற்கனவே எழுதிய புத்தகத்திற்கு விளக்க உரை எழுதுதல்
- தொகை - பல் வேறு கால கட்டங்களில் பல புலவர்களால் எழுதப்பட்ட பாடல்களை தொகுத்து ஒரு நூலாக வெளியிடல்.
- மொழி பெயர்ப்பு - இது வேறு மொழியில் உள்ள நூல்களில் இருந்து தமிழில் மொழி பெயர்த்து எழுதுதல்.
இப்படி மேற் சொன்ன நூல் முறையில், பதினெண் மேல் கணக்கு நூல்களுள் தொகுக்கப்பட்ட தொகை நூல்கள் எட்டு. அவை எட்டுத்தொகை நூல்கள் என்று வழங்கப்படுகிறது. இவை
" நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பற்று ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம் புறம் என்று
இத்திறத்த எட்டுத் தொகை"
எட்டுத்தொகை நூல்கள் அகம், புறம் ஆகிய இரண்டு பிரிவுகளை பற்றி மிகச்சிறப்பான பாடல்கள் கொண்ட தொகுப்பு ஆகும்.
புறநானூறு
புறம் + நானூறு = புறநானூறு. இப்பாடல்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து கி.பி 2-ஆம் நூற்றாண்டு வரை வாழ்ந்த புலவர்களால் பாடப்பட்டவையாகும். இதன் மூலம் மூவேந்தர்களின் சிறப்பு, தமிழ்நாட்டின் சிறப்பு, கடை ஏழு வள்ளற்களின் சிறப்பு, வீரம் என பல தரப்பட்ட விவரங்களும், பலருடைய வரலாற்று குறிப்புகளும் அறியலாம்.
அதியமானும் , ஔவையாறும்
அதியமான், ஔவையாருக்கு சிறந்த நண்பர். ஒரு முறை ஔவையார் அதியமானிடம் பாடி பரிசில் பெற சென்றார். பரிசில் உடனே வழங்கி விட்டால் ஔவையார் சென்று விடுவார் என்ற எண்ணத்தில் பரிசில் தராமல் காலம் கடத்தினார் அதியமான், அந்த சூழலில் எழுந்த பாடல் இது. விருந்தும் மருந்தும் மூன்று நாட்கள் என்பர் நம் பெரியோர், மூன்று நாட்கள் மேல் ஒரு வீட்டில் இருந்தால் முதல் நாள் உள்ள உபசரிப்பு போல் இருக்காமல் அடுத்தடுத்த நாட்களில் உபசரிப்பு குறையும். ஆனால் இந்த பாடல் கூறும் அதியமானின் சிறப்பை பாருங்கள்.
பாடல் 2: பல நாளும் தலை நாளும்
பாடியவர் : ஔவையார்
பாடப்பட்டோன் : அதியமான் நெடுமான் அஞ்சி
திணை : பாடாண் துறை : பரிசில் கடா நிலை
பாடல்: புறம் : 101
" ஒரு நாள் செல்லலம்: இருநாட் செல்லலம்
பன்னாள் பயின்று, பலரோடு செல்லினும்
தலைநாள் பொன்ற விருப்பினன் மாதோ:
அணிபூண் அணிந்த யானை இயல் தேர்
அதியமான்; பரிசில் பெறூஉங் காலம்
நீட்டினும், நீட்டா தாயினும், யானைதன்
கோட்டிடை வைத்த கவளம் போலக்
கையகத் தது அது: பொய்யா காதே;
அருந்தே மாந்த நெஞ்சம்!
வருந்த வேண்டா; வாழ்க அவன் தாளே! "
பொருளுரை:
ஒரு நாள் செல்லலாம், பல நாள் செல்லலாம்
ஒருவராக செல்லலாம், பலருடன் செல்லலாம்
முதல் நாள் விருந்து உபசரிக்கும் மங்கையை போல்
அழகிய நகைகள் அணிந்த யானையை உடைய
அதியமான் நம்மை உபசரிப்பான்.
பரிசு உடனடியாக கொடுத்தாலும், கொடுக்கா விட்டாலும்
பெரிய யானையின் கொம்புகளுக்கு இடையே வைத்த உணவு
அதன் வாய்க்குள் தப்பாமல் செல்வது போல்,
நம்மை வந்து சேரும், அது பொய் ஆகாது
ஆதலால், கலங்காதே மனமே, வருந்த வேண்டாம்
வாழ்க அவன் தோள்கள், வாழ்க அதியமான்.
இப்படிச் சொன்ன ஔவையார், பல நாள் ஆகியும் பரிசு கிடைக்காததால் ஒரு பாடல் பாடினார், அப்பாடலை பின்பு காண்போம்.
Last edited by சதாசிவம் on Mon Jul 11, 2011 6:25 pm; edited 2 times in total
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு
பதிவுகள் அருமை... தொடருங்கள் நண்பரே...
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : [You must be registered and logged in to see this link.]
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு
பயனுள்ள திரியைத் துவங்கியுள்ளீர்கள் சதா! மகிழ்ச்சி! தொடருங்கள்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Page 1 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தமிழ் விடு தூது – நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு
» ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு !
» நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு
» காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு
» நல்ல தமிழ் அறிவோம் -ஔவையாரின் நல்வழி தொடர் பதிவு -முடிந்தது
» ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு !
» நல்ல தமிழ் அறிவோம் - நன்னெறி நாற்பது- தொடர் பதிவு
» காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு
» நல்ல தமிழ் அறிவோம் -ஔவையாரின் நல்வழி தொடர் பதிவு -முடிந்தது
Page 1 of 10
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|