ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அற்புதர்,திருத்தூதர்,தூய தோமையர்!

Go down

அற்புதர்,திருத்தூதர்,தூய தோமையர்! Empty அற்புதர்,திருத்தூதர்,தூய தோமையர்!

Post by jesudoss Sat Jul 02, 2011 8:02 pm

அற்புதர்,திருத்தூதர்,தூய தோமையர்! Tamil-DailyNews_Paper_69925653935
இயேசு உயிர்பெற்று வந்தபோது பன்னிரு
சீடர்களுள் ஒருவரான திதிம் என்னும் தோமா அங்கில்லை. மற்ற சீடர்கள் அவரிடம்,
‘ஆண்டவரைக் கண்டோம்’ என்றார்கள். தோமா அவர்களிடம், ‘‘அவருடைய கைகளில்
ஆணியால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலைவிட்டு, அவர் விலாவில்
என் கையை விட்டாலன்றி நான் நம்ப மாட்டேன்’’ என்றார்.
எட்டு
நாட்களுக்குப்பின் அவர்கள் ஓர் அறைக்குள் கூடியிருந்தார்கள். அன்று
தோமாவும் அவர்களோடு இருந்தார். கதவுகள் பூட்டப்பட்டிருந்தும் இயேசு உள்ளே
வந்து அவர்கள் நடுவில் நின்று, ‘‘உங்களுக்கு அமைதி உரித்தாகுக!’’ என்று
வாழ்த்தினார். பின்னர் அவர் தோமாவிடம், ‘‘இதோ! என் கைகள், இங்கே உன் விரலை
இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு, ஐயம் தவிர்த்து நம்பிக்கைகொள்’’
என்றார்.
அதேபோல தோமா அவரை சோதித்துப் பார்த்துவிட்டு, பிறகு உண்மை தெளிந்து, ‘‘நீரே என்
ஆண்டவர்!
நீரே என் கடவுள்!’’ என்று சொல்லி மெய்சிலிர்த்தார். இயேசு அவரிடம், ‘‘நீ
என்னைக் கண்டதால் நம்பினாய், காணாமலே நம்புவோர் பேறு பெற்றோர்’’ என்றார்.
(யோவான் 20: 24&29)
இயேசுவின் மீது அசையாத, உறுதி மிகுந்த
நம்பிக்கையுடன் இருந்த தூய தோமா, ‘‘நாமும் செல்வோம், அவரோடு இறப்போம்’’
என்று சொல்லும் அளவுக்கு அஞ்சா நெஞ்சமும், அர்ப்பணிப்பு உணர்வும்
கொண்டிருந்தார். இயேசுவின் மரணம் தூய தோமாவின் நம்பிக்கையை அசைத்திருந்தது.
அதனால் ஏற்பட்ட கசப்பு, விரக்தியினால், எதையுமே நம்ப முடியாமல் தவித்துக்
கொண்டிருந்தார். ‘‘ஆண்டவரைக் கண்டோம்’’ என்று மற்ற சீடர்கள் சொன்னபோது தோமா
அதற்கான உறுதியான ஆதார அடையாளங்களை கேட்டார். இந்தச் செய்கையானது
விசுவாசமற்ற தன்மையின் வெளிப்பாடாக இருப்பினும், தோமாவின் மனதை சரியாகப்
புரிந்து கொண்டவர் இயேசு மட்டுமே. ஆகவேதான், இயேசு சாந்தமுடன் தோமாவின்
சந்தேகத்தை நீக்க, தன் காயங்களை தொட அழைத்தார். தன்னுடைய அவ
நம்பிக்கையையும், சந்தேக குணத்தையும் உணர்ந்துகொண்ட தோமா, அது குறித்து
வெட்கமடைந்து, ‘‘நீரே என் ஆண்டவர், நீரே என் கடவுள்’’ என்று மற்ற சீடர்கள்
முன்பாக விசுவாச அறிக்கை சமர்ப்பித்தார். அதோடு இயேசுவின் மனிதத்
தன்மையையும், தெய்வீகத் தன்மையையும் உணர்ந்து இதன் மூலம் இயேசுவிடம்
தனிப்பட்ட விதத்தில் உறவை வளர்த்துக் கொண்டார்.நாம் யார் மீதெல்லாமோ வீணாக
சந்தேகப்பட்டு நம்முடைய அன்பின் சமாதானத்தை இழந்திருக்கிறோம். ஆனால்
ஆண்டவர் மீது நம்பிக்கையை வளர்க்க என்ன முயற்சிகள் எடுத்திருக்கிறோம்?
அவநம்பிக்கைக்கு இடம் கொடாமல் இறைவனில் ஆழ்ந்த விசுவாசம் கொள்ள வேண்டியது
அவசியம். அப்போதுதான் தூய தோமாவைப் போல இறையனுபவத்தை எடுத்துரைக்கும்
கருவியாக நம்மால் மாற முடியும்.
புனிதர்களின் மரணத்திற்குப்பின்
திருச்சபையில் வழிகாட்டிகளும் தலைவர்களும் இருந்தனர். அவர்கள்
புனிதர்களிடமிருந்து பெற்றுக்கொண்டவற்றையும் கற்றுக்கொண்டவற்றையும்
மக்களுக்குப் போதித்தனர். புனிதர்களிடமிருந்து தாங்கள் பெற்றுக்கொண்ட
அனைத்தையும் இவர்களும் தமக்குப் பின் தம் சீடர்களிடம் ஒப்படைத்தனர்.
ஜெருசலேமில் இருந்து யாகப்பர் எழுதியதையும் உரோமையிலிருந்து சீமோன்
எழுதியதையும் எபேசுவிலிருந்து அருளப்பர் எழுதியதையும் பெரிய
அலெக்சாந்திரியாவிலிருந்து மாற்கு எழுதியதையும் மசதோனியாவிலிருந்து லூக்கா
எழுதியதையும் இந்தியாவிலிருந்து தோமா எழுதியதையும் இன்னும் புனிதர்
எவரேனும் எழுதிய கடிதங்களைப் பெற்றுக்கொண்டு, எல்லா இடங்களிலும்
தேவாலயங்களிலும் லூக்கா எழுதிய ‘அப்போஸ்தலர் பணி’ வரலாற்றைப்போல
வாசிக்கப்பட வேண்டும் என்றும் பணித்தார்கள். இதனால் புனிதர்கள் எங்கும்
அறிமுகமாக
வேண்டும் என்றார்கள்.
இந்தியாவும், அதைச் சார்ந்த
பகுதிகளும் தூய தோமையாரிடமிருந்து புனிதத்துவத்தைப் பெற்றுக் கொண்டன. அவர்
அங்கு திருச்சபையைக் கட்டி எழுப்பி, அதற்குப் பணிவிடை செய்து, அதன்
வழிகாட்டியாகவும் தலைவராகவும் இருந்தார்.கிறிஸ்து இயேசுவின் பன்னிரு
சீடருள் ஒருவர் புனித தோமையார். நற்செய்தி போதிக்கும் பேறு கொண்டவர்.
ஆண்டவர் இயேசுவை ஆவலாய்த் தொடர்ந்தவர். கிறிஸ்துவுக்காக குருதி சிந்திய
வேதசாட்சி. என் ஆண்டவரே, என் கடவுளே என்று மொழிந்த நல் தூயவர். இயேசுவின்
காயங்களை தொடுகின்ற பெரும்பேறு பெற்றவர். கிறிஸ்துவின் உண்மை விசுவாச
வாழ்வின் முன் உதாரணமானவர். விசுவாசத் தன்மையை இயேசுவிடம் நிறைவாக
அறிந்தவர். இறைவனில் பேரன்பு கொண்டுள்ளதே பெரும் செல்வம் என்று உணர்ந்தவர்.
இயேசுவுக்காக அனைத்திலும் பணிந்து மகிழ்ந்தவர். ஈட்டியினாலே வதையுற்று
மண்ணில் சாய்ந்தாலும், விண்ணில் வாழும் தூயவர். நான் போதிக்கப் போகும் இடம்
எதுவென்று இறைவனிடம் கேட்டவர். இயேசுவே வழியும், உண்மையும், உயிரும்
என்றுணர்ந்தவர். ‘வாருங்கள் செல்வோம் இயேசுவுடன்’ என அழைத்தவர். கிறிஸ்துவ
விசுவாசம் வளம் பெற தினம் உழைத்தவர்.இந்திய நாட்டின் ஒளியாக தினம்
திகழ்பவர். ஏழு ஆண்டுகள் மலபாரில் வாழ்ந்து நற்செய்தி உரைத்தவர். தோமாவின்
மரபென மலபார் மக்கள் பெருமிதம் கொள்ளச் செய்தவர். தோமா கிறிஸ்தவம் என பல
குடும்பமும் மகிழ்வுறச் சொல்லும்படி திகழ்ந்தவர். சோழ மண்டலத்தின் இறுதிப்
பகுதியாம் சென்னை மயிலாப்பூர் வந்து இறைவனை எழிலாய்த் தமிழ்மொழி தனிலே
போதித்த திருத்தூதர். அப்போஸ்தலர்களுள் தமிழ் பேசும் சிறப்புப் பெற்று
சின்ன மலையில் குகை ஒன்றில் தங்கி, ஜெபித்து, போதனை செய்து மக்களை இறைபதம்
நாட அழைத்தவர். பாறையின் மீது தன் கைத்தடியால் தட்டி நீர் பெருகச் செய்து
மக்களின் தாகம் தணித்த சாதனையாளர். நன்றியறியாத வஞ்சகர்களால் சின்னமலையில்
ஈட்டியால் குத்தப்பட்டு ஒடுங்கிய உடலோடு ரத்தம் சிந்தச் சிந்த பெரியமலை
(பரங்கி மலை)க்கு இடம் பெயர்ந்து, ரத்த சாட்சியாய் இந்தியத் திருநாட்டில்,
தமிழகத் திருமலையில் உயிர் நீத்தவர். தோமையார் மலை எனப்பெயர் பெற்று
விளங்கும் பரங்கி மலையில் திருப்பீடத்தில் புனிதப்படுத்தப்பட்டிருக்கும்
திருச்சிலுவையை தன் கரங்களால் செதுக்கிய சிற்பி. மாந்தர் அனைவருக்கும்
சிலுவையின் புனிதம் அறியச்செய்த
மாபெரும் புனிதர்.
மண்ணக வாழ்வின்
நிலையற்ற பொருளை மாந்தர்க்கு விளக்கி, சாட்சிய வாழ்வின் விடிவெள்ளியாக
உயர்ந்து, இந்திய நாட்டிற்கு மிகப்பெரிய ஆசீர்வாதமாய் இறைவனால்
கொடுக்கப்பட்ட அற்புதர், திருத்தூதர், தூய தோமையார். விசுவாசமற்றவர்களால்
ஈட்டியால் குத்தப்பட்டு மரித்த அவரது ரத்தம் தமிழக மண்ணில் சிந்திச் சிதறி
வேத சாட்சியத்தின் வித்தாகத் திகழ்ந்த மகத்துவத்தின் மகிமை என்றென்றும்
மாறாது, மறையாது.& மணவைப்பிரியன் ஜெயதாஸ் பெர்னாண்டோ
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum