புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரஜினி எனக்கு குழந்தை மாதிரி... Poll_c10ரஜினி எனக்கு குழந்தை மாதிரி... Poll_m10ரஜினி எனக்கு குழந்தை மாதிரி... Poll_c10 
48 Posts - 51%
heezulia
ரஜினி எனக்கு குழந்தை மாதிரி... Poll_c10ரஜினி எனக்கு குழந்தை மாதிரி... Poll_m10ரஜினி எனக்கு குழந்தை மாதிரி... Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
ரஜினி எனக்கு குழந்தை மாதிரி... Poll_c10ரஜினி எனக்கு குழந்தை மாதிரி... Poll_m10ரஜினி எனக்கு குழந்தை மாதிரி... Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
ரஜினி எனக்கு குழந்தை மாதிரி... Poll_c10ரஜினி எனக்கு குழந்தை மாதிரி... Poll_m10ரஜினி எனக்கு குழந்தை மாதிரி... Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
ரஜினி எனக்கு குழந்தை மாதிரி... Poll_c10ரஜினி எனக்கு குழந்தை மாதிரி... Poll_m10ரஜினி எனக்கு குழந்தை மாதிரி... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரஜினி எனக்கு குழந்தை மாதிரி... Poll_c10ரஜினி எனக்கு குழந்தை மாதிரி... Poll_m10ரஜினி எனக்கு குழந்தை மாதிரி... Poll_c10 
48 Posts - 51%
heezulia
ரஜினி எனக்கு குழந்தை மாதிரி... Poll_c10ரஜினி எனக்கு குழந்தை மாதிரி... Poll_m10ரஜினி எனக்கு குழந்தை மாதிரி... Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
ரஜினி எனக்கு குழந்தை மாதிரி... Poll_c10ரஜினி எனக்கு குழந்தை மாதிரி... Poll_m10ரஜினி எனக்கு குழந்தை மாதிரி... Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
ரஜினி எனக்கு குழந்தை மாதிரி... Poll_c10ரஜினி எனக்கு குழந்தை மாதிரி... Poll_m10ரஜினி எனக்கு குழந்தை மாதிரி... Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
ரஜினி எனக்கு குழந்தை மாதிரி... Poll_c10ரஜினி எனக்கு குழந்தை மாதிரி... Poll_m10ரஜினி எனக்கு குழந்தை மாதிரி... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஜினி எனக்கு குழந்தை மாதிரி...


   
   
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Jul 01, 2011 1:09 am

''ரஜினி எனக்கு குழந்தை மாதிரி!''
ரஜினி எனக்கு குழந்தை மாதிரி... P77a
''என் கணவர் எனக்குப் பெரிய இன்ஸ்பிரேஷன்'' - எந்த மனைவியும் தன் அன்பான கணவரைப்பற்றிக் கூறக்கூடிய வார்த்தைகள்தான். ஆனால், லதாவுடன் வெகுநேரம் பேசியதில்... அவருடைய ஆழ் மனதில் ரஜினி பெரிய மாறுதல்களை ஏற்படுத்தி இருக்கிறார் என்பதை உணர முடிந்தது.

''தன் குழந்தைப் பருவத்தைப்பற்றி - யாருக்குமே தெரியாத விஷயங்களைக்கூட - ரஜினி உங்களிடம் சொல்லி இருக்கக்கூடும்... அவற்றில் உங்கள் மனதைத் தொட்ட சில விஷயங்களைச் சொல்ல முடியுமா?''
ரஜினி எனக்கு குழந்தை மாதிரி... P77
''நிறையவே மனம்திறந்து சொல்லி இருக்கிறார். குடும்பத்தில் ரஜினிதான் கடைக்குட்டி. ஒரு அக்கா, அதற்குப் பிறகு இரு சகோதரர்கள். சிறு வயதில் குடும்பத்தில் பொருளாதாரப் பிரச்னைகள் நிறைய இருந்ததாம். வெளியே துடிப்போடு ஓடி விளையாடினாலும், மனசுக்குள் அன்புக்காக நிறைய ஏங்கியவர் அவர். அப்பா போலீஸ் வேலையில் இருந்ததால் பிஸி. கண்டிப்பானவர் வேறு. ரஜினியின் சிறு வயதிலேயே அம்மாவும் இறந்துவிட்டதால்... பெரிய அண்ணாதான் பொறுப்போடு குடும்பத்தைக் கவனித்து வந்தார். வீட்டில் நிறைய அடி, உதை வாங்கி யிருக்கிறார். யாரையும் இதற்குக் குற்றம் சொல்ல முடியாது. வீட்டில் ஏதேதோ பிரச்னைகள் இருக்கும்போது இவர் வேறு எதற்காகவாவது அடம்பிடித்தால்... லூட்டி அடித்தால் என்ன செய்ய? அத்தனை கோபமும் இவர் மீதுதானே திரும்பும்!

பெங்களூரில் பள்ளிக் கூடத்தில் அவர் மீடியம் கன்னடம்... ரேங்க் ஹோல்டர்! 'நன்றாகப் படிக்கிறானே’ என்று, அவரிடம் ஒரு வார்த்தைகூடக் கேட்காமல், திடீரென்று இங்கிலீஷ் மீடியத்துக்கு மாற்றினார்கள். ஒரு நிமிஷத்தில் எல்லாப் பாடங்களும் இங்கிலீஷ் ஆக மாறிவிட்டது. ரஜினி ரொம்ப அப்செட் ஆகிவிட்டார். திடீரென்று 'ரேங்க்’ குறைந்தது அவர் மனதைப் பாதித்தது... யாரிடமும் ஒன்றும் சொல்ல முடியாமல் மனசுக்குள் வருத்தத்தோடு தவித்திருக்கிறார்!''

''ஏன்? அவரிடம் பாசத்துடன் பழகியவர்கள் சுற்றுவட்டாரத்தில் யாருமேவா இல்லை? நண்பர்கள்... உறவினர்கள்?''

''அவருக்குப் பக்கத்து வீட்டில் ஒரு பிராமின் ஃபேமிலி இருந்தது. அவர்கள் இவர் மீது நிறைய அன்பு காட்டி இருக்கிறார்கள். மற்றபடி, அவர் சின்ன வயசுத் தாக்கங்களில் இருந்து மீண்டதற்கு முக்கியக் காரணம், கடவுள் நம்பிக்கை!

'நான் நல்லவனாக வளர வேண்டும், கடவுள் அருளால் ஏதாவது சாதிக்க வேண்டும்’ என்ற உணர்வு அவரிடம் மேலோங்கி நின்றிருக்கிறது. சின்ன வயதில் தினமும் நெற்றி பூரா விபூதி அடித்துக்கொள்வார் அவர்... அது அவருக்கு ரொம்பப் பிடிக்குமாம்!''

''கடவுள் நம்பிக்கைக்குப் பின்னணியிலும் ஏதேனும் காரணம்... உந்து சக்தி இருந்திருக்க வேண்டுமே?''

''ஆமாம்! சிறு வயதில் ராமகிருஷ்ண மடத்துக்குத் தினமும் போவார். அங்கு தண்ணீர் பிடித்துவைப்பது, தரையைப் பெருக்குவது போன்ற பணிகளைச் செய்வார். ரஜினியைக் கவனித்து வந்த குருஜிக்கு இவர் மீது ஒரு பாசம். தான் மாணவர்களிடையே சொற்பொழிவு ஆற்றும்போது எல்லாம், ரஜினியையும் அன்புடன் அழைத்து உட்காரவைத்துக் கொள்வார். அப்போதும் சரி, இப்போதும் சரி... ஸிணீழீவீஸீவீ வீs ணீ ரீக்ஷீமீணீt லிவீstமீஸீமீக்ஷீ. நீங்கள் ஒன்று அவரிடம் பேசினால் ரொம்பப் பொறுமையாக, கவனமாகக் கேட்பார்... தெரியுமா?''

''ரஜினி குழந்தையாக இருந்தபோது எடுத்த போட்டோ ஏதாவது தர முடியுமா?''

''உண்மையில் ஒரு போட்டோகூட இல்லை. காரணம், அவரை யாரும் போட்டோ எடுக்க வில்லை. அண்மையில் ஒரு சமயம் குடும்பமாக அமர்ந்து என் ஆல்பம், எங்கள் குழந்தைகளின் போட்டோக்களை எல்லாம் பார்த்து ரசித்துக் கொண்டு இருந்தபோது திடீரென்று அவர், 'என்னுடைய குழந்தைப் பருவ போட்டோதான் ஒன்றுகூட இல்லை’ என்று லேசாகப் புன்னகைத் தார். எனக்கும் குழந்தைகளுக்கும் மனசு கஷ்டமாகிவிட்டது.

தன் போட்டோ இல்லை என்று சொன்னதும் அவருடைய கரங்களை ஆதரவோடு கெட்டி யாகப் பற்றிக்கொண்டேன். வீட்டில் என்னை அவர் 'ஜில்லு’ என்றுதான் அழைப்பார்! மறு விநாடி அவர் முகத்தில் சிரிப்பு மலர்ந்தது. 'பிலீவ் மீ! சின்ன வயசில் கறுப்பா இருந்தாலும்... துறுதுறுவென்று நன்றாகவே இருப்பேன்!’ என்றார் உடனே!''

''அவர் குழந்தைப் பருவம் சரி... பிற்பாடு புகழ் உச்சிக்குப்போன பிறகு தன் குழந்தை களோடு அவரால் நேரம் செலவிட முடிந்ததா?''

''முடியாமல்தான் போனது! ஐஸ்வர்யா பிறந்த சமயம்... அப்போது இவர் ரொம்ப பிஸி... இரவு பகலென்று பாராமல் உழைத்துக்கொண்டு இருந்த சமயம் அது. பிற்பாடு, எல்லாமே ஒரு கன்ட்ரோலுக்கு வந்த பிறகுதான் குழந்தைகளுக்காக நேரம் ஒதுக்க முடிந்தது!''

''ஐஸ்வர்யா பிறந்த சமயம்பற்றி சொல்லுங் கள்... நீங்கள் மெட்டர்னடிக்குப் போனபோது ரஜினி எங்கு இருந்தார்?''

''அது ஒரு வியப்பான விஷயம்! ஐஸ்வர்யா பிறந்தது ஜனவரி 1-ம் தேதி. தன் 'பர்த் டே’யை உலகமே கொண்டாடுகிறது என்று தமாஷாக அவள் சொல்வாள். நியாயமாக ஜனவரி 26-ம் தேதிதான் அவள் பிறக்க வேண்டிய, டியூ டேட்!

ஜனவரி ஒண்ணாம் தேதி காலையில் என் வயிற்றில் திடீரென்று குழந்தையின் மூவ்மென்ட் இல்லை. சில நிமிஷங்களில் சரியாகிவிட்டது. அப்போது உதவிக்கு என் அம்மா கூடவே இருந்தார். காலையில் எனக்காக ஏதோ முக்கிய மாகக் கடைக்குப் போக வேண்டி இருந்தது அம்மா. 'ஒரு மாதிரி இருக்கு என்று சொல்கி றாயே... நான் அப்புறம் போகிறேனே?’ என்றார் அம்மா. 'அதெல்லாம் ஒன்றுமில்லை’ என்று அம்மாவை வற்புறுத்திக் கடைக்கு அனுப்பி விட்டேன். இவரோ ஷூட்டிங் போயாகிவிட்டது. திரும்ப இரவாகும். வீட்டில் தன்னந்தனியாக நான்!

திடீரென்று மறுபடியும் வயிற்றை ஏதோ பண்ணியது! வீட்டில் இரண்டு கார்களையும் அம்மாவும் அவருமாக எடுத்துக்கொண்டு போய்விட... 'சட்’டென்று என்னைக் கலவரம் சூழ்ந்துவிட்டது. அம்மாவை மடத்தனமாக அனுப்பிவிட்டோமே என்று என் மீதே கோபம் வர, கண்கள் கலங்கிப் போய் பூஜை அறைக்குள் சுவாமி படங்களுக்கு முன் உட்கார்ந்து 'கடவுளே... என்னைக் காப்பாற்று!’ என்று பிரார்த்தனை பண்ண ஆரம்பித்தேன். திடீரென 'க்ரீச்’சென்று கார் வந்து நிற்கும் சத்தம். மெள்ளத் திரும்பிப் பார்த்தால்... பூஜையறை வாசலில்... அவர்!

'ஜில்லூ! என்ன ஆச்சு?’ என்று பதறியவாறு அருகே ஓடி வந்தார். நான் விஷயத்தைச் சொன்னேன். அப்படியே என்னை அணைத்துத் தாங்கியவாறு காருக்குள் உட்காரவைத்தார். கார் வெலிங்டன் நர்ஸிங் ஹோமை நோக்கிப் பறந்தது. அவர் தோளில் என் தலையைச் சாய்த்தவாறு 'நீங்கள் எப்படி... திடீரென்று?!’ என்றேன் மெல்லிய குரலில். காரை வேகமாக ஓட்டிக்கொண்டே 'ஷூட்டிங் இன்று இல்லை... போரடித்தது. 'சரி, வீட்டுக்குப் போய் ஒரு தூக்கம் போடுவோம்’ என்று விநாடியில் ஏதோ தோன்றியது. உடனே, கிளம்பி வந்துவிட்டேன்!’ என்றார்.

நர்ஸிங் ஹோம் போன கையோடு லேபர் ரூமுக்கு ஸ்ட்ரெச்சரில் வைத்து என்னை அழைத்துக்கொண்டு ஓடினார்கள். மூன்று மணி நேரம் கழித்து ஐஸ்வர்யா பிறந்தாள். நேரே குழந்தையை எடுத்துக்கொண்டுபோய் அவர் கையில் கொடுக்கச் சொன்னேன். அத்தனை நேரமும் பதற்றத்துடன் யாரோடும் பேசாமல் வெளியே குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டு இருந்தார் என்றும், அந்த நேரத்தில் முதன் முறையாக ஒரு சிகரெட்கூடப் பிடிக்கவில்லை என்றும் அப்புறம் கேள்விப்பட்டேன். 'டென்ஷ னாக இருந்தால், நிச்சயம் சிகரெட் பிடிப்பீர்கள். எப்படி மூன்று மணி நேரம் சிகரெட் பிடிக்காமல் உங்களால் இருக்க முடிந்தது?!’ என்று கேட்டேன். 'சாதாரண டென்ஷனுக்குத்தான் சிகரெட் பிடிக்கத் தோன்றும்... இது அதை எல்லாம் தாண்டிப் போய்விட்ட மகா டென்ஷன்!’ என்றார் சாவதானமாக!''

''இரண்டு குழந்தைகளுக்குப் பிறகு சிலரைப் போல, ஆண் வாரிசு இல்லையே என்று வருத்தம் இருக்கிறதா?''

''இல்லை! இரண்டு குழந்தைகளோடு நிறுத்திக் கொள்வதும் நாட்டுக்குச் செய்யும் சேவை!’ என்பார் அவர். சிசேரியன் வேறு! மனைவியின் வயிற்றில் கத்தி... தையல்... இதெல்லாம் அவருக் குத் தாங்க முடியவில்லை. இந்தக் கஷ்டம் எல்லாம் தேவையா என்று ரொம்ப அப்செட் ஆவார். எங்கள் ரெண்டு பேருக்குமே பெண் 'குழந்தைகள் அதிகமாகப் பிடிக்கும். ஆண் குழந்தை இல்லையே என்று ஒருமுறைகூட நினைத்தது இல்லை!

அண்மையில் ஒரு முறை அவரிடம், 'உங்கள் பெரிய அக்காவும் திருமணமாகிப் போன பிறகு, உங்கள் வீட்டில் எல்லோருமே ஆண்கள்தான். இப்போது அப்படியே உல்டா ஆகிவிட்டது... நம் வீட்டில் பெண்கள்தான் மெஜாரிட்டி!’ என்று தமாஷ் பண்ணுவேன்.

எனக்கு அவரே ஒரு குழந்தை மாதிரிதான். இரண்டும் பெண் குழந்தைகள் என்று பேச்சு வரும்போது, 'உங்களுக்குத்தான் இரண்டுமே பெண் குழந்தைகள்... எனக்கு உங்களையும் சேர்த்து மூன்று குழந்தைகள். ஒரு ஆண்... இரண்டு பெண் குழந்தைகள்!’ என்பேன்.தலையை உயர்த்தி வாய்விட்டுச் சிரிப்பார் ரஜினி!'

நன்றி விகடன்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ரஜினி எனக்கு குழந்தை மாதிரி... 47
avatar
ராமகிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 259
இணைந்தது : 18/06/2011

Postராமகிருஷ்ணன் Fri Jul 01, 2011 2:34 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Fri Jul 01, 2011 2:52 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Jul 01, 2011 3:03 pm

ரஜினி எனக்கு குழந்தை மாதிரி... 2825183110 ரஜினி எனக்கு குழந்தை மாதிரி... 154550 நல்ல பதிவு ரஜினி எனக்கு குழந்தை மாதிரி... 678642



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jul 01, 2011 3:09 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Jul 01, 2011 4:21 pm

மகிழ்ச்சி சூப்பருங்க
படிக்கவே ஆர்வமா இருந்தது....





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக