ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

செவ்வாய்

Go down

செவ்வாய் Empty செவ்வாய்

Post by சிவா Mon Sep 14, 2009 4:37 am



அதிகாரத்துடன் ஆனந்த வாழ்வு வேண்டுமா? அங்காரனை வழிபடுங்கள்.
உலகில் மாவீரனகா வேண்டுமா? அந்த மங்கள் செவ்வாயை வழிபடுங்கள்
.

செவ்வாய் யார்?

சிவபெருமானின் கண்ணீர்த் துளியிலிருந்து பூமியில் விழுந்து வளர்ந்ததால் குஜன் என்றும் பரத்துவாஜ முனிவரின் மகனாகப் பிறந்து பூமி தேவியால் வளர்க்கப்பட்டதால் அங்ககாரகன் என்றும் அதுவே சுருக்கமாக அங்காரகன் என்றும் வழங்கப்படுகிறது. பூமித்தாயின் மகன் என்பதால் பௌமன் என்று அழைக்கப்படுகிறான். கு என்றால் பூமி அதிலிருந்து ஜனித்தவர் என்பதால் குஜன் என்றும் அழைக்கப்படுகிறார். பூமித்தாயால் வளர்க்கப்பட்டதால் ப+மிகாரகன் என்றும் அழைக்கப்படுகிறார். மாலினி சுசீலினி என்று இரு மனைவிகள் உள்ள இவர் செந்நிறமானவர். அதனால் செவ்வாய் என்று அழைக்கப்படுகிறார். இவருடைய கைகள் விண்ணில் செவ்வொளி வீசி விளங்குவதால் இவர் தமிழிலக்கியத்தில் “செம்மீன”; என்றும் அழைக்கப்டுகிறார். முந்நீர் நாப்பன் திமில் சுடர் போலச் செம்மீன் இமைக்கும்மாக விசம்பின என்று புறநானுhற்றில் கூறப்படுகிறது. மேலும் வீரபத்திரருடைய அம்சம் செவ்வாய் என்று புராணம் கூறுகிறது. பரத்வாஜ கோத்திரத்தை சேர்ந்த இவர் முக்குணங்களிலே ராட்சத குணத்தைச் சேர்ந்தவர். சூரியனையும் குருவையும்; போல ஆண் கிரகமாக கருதப்படுவர். போரில் வலிமையுடையவர் என்பதால் சூரியனைப் போல் ஷத்திரிய ஜாதியைச் சேர்ந்தவராவார். நான்கு வித உபாயங்களில் தண்ட உபாயத்திற்குரியவன்.

ஜாதகத்தில் செவ்வாயின் பங்கு:

பூமியிலிருந்து சுமார் 14 கோடி மைல் தூரம் உள்ள செவ்வாய் கிரகம் ஒவ்வொரு ராசியிலும் 45 நாட்கள் சஞ்சரிப்பவர். மேஷ விருச்சிக ராசிகளுக்கு அதிபதி மிருகசீரிடம் சித்திரை அவிட்ட நட்சத்திரங்களுக்கு அதிபதி ஆங்கில எண்ணில் 9க்கு அதிபதி. மங்களம் என்ற செவ்வாய் ஒரு ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால்தான் யாருக்கும் தலை வணங்காமல் தன்மானத்துடன் வாழ்வான். உடல் உறுதிக்கும் மன உறுதிக்கும் காரகன் செவ்வாய் ரத்தத்திற்குக் காரகன் ரத்தக் கலப்பான சகோதரர்களுக்கும் காரகன். உடலில் எலும்பினுள் ஊன் (மஜ்ஜை) இவன். நாட்டில் முதல் வரிசையில் வைத்து எண்ணப்படுகின்ற அரசியல் தலைவர்கள் காவல் அதிகாரிகள் நாட்டுத் தளபதிகள் நீதிபதிகள் பொறியியல் வல்லுநர்கள் முதலானோரின் ஜாதகங்களில் அங்காரக பலம் இருந்திடும் என்று திடமாக நம்பலாம். மாவீரன் படைத்த புரட்சியாளர்களைத் தோற்றுவிப்பவன் அங்காரகன். பெருந்தன்மை அதே நேரத்தில் கண்டிப்பு தொண்டு செய்தல் தலைமை வகித்தல் வைராக்கியம் பகைவரை பந்தாடும் பராக்கிரமம் இவற்றை அளிப்பவன் செவ்வாய். மேல்நோக்கிப் பார்க்கும் பார்வை கொண்ட இவன் நெருப்புக் கூடத்திலும் உலவுவோன். அரசு வழியில் அமைச்சர் ஆவதும் அவர் உறவில் பிறப்பதும் ஆயுதம் வைத்திருப்பதற்கும் கூட செவ்வாய் ஆதிக்கம் வேண்டும். ஜாதகத்தில் உச்சம் அடைந்த அங்காரகன் ஒரு கேந்திரத்தில் இருந்தானானால் அந்த ஜாதகரை இவன் வாழ வைத்தே தீருவான். ஜாதகத்தில் செவ்வாய் யோக காரகன் ஆகி சந்திரனுடன் இணைந்து சந்திரமங்கள யோகத்தையும் குருவுக்கு கேந்திரத்தில் செவ்வாய் அமர்ந்தால் குருமங்கள யோகமும் ஜீவன ஸ்தானத்தில் செவ்வாய் ஆட்சி பெற்றால் ருஜக யோகத்தையும் பிரதிபலிப்பான்.

செவ்வாய் சரியில்லாத ஜாதகர்கள்:

ஒரு ஜாதகத்தில் செவ்வாய் சரியில்லை என்றால் அதற்கு செவ்வாய் தோஷம் என்றே சொல்கிறார்கள். அந்தளவுக்கு செவ்வாயின் தாக்கம் பூமியில் அதிகம். செவ்வாய் ஒரு தீக்கோள் உஷ்ண கிரகம். அத்துடன் ரத்தத்திற்கும் காரகத்துவம் வகிப்பவர். உடல் ஆரோக்கியத்திற்கும் உயிர் வாழவும் ரத்த ஓட்டம் மிகமிக அவசியம் விஞ்ஞான மருத்துவ அடிப்டையில் ரத்த குரூப் இவற்றின் தன்மை ஒத்து வந்தால் தான் உடல்நலம் நன்றாக இருக்கும். புத்திரபாக்கியம் ஏற்படுத்தும். இந்த காரணங்களால் செவ்வாய் ஜாதகத்தில் இருக்கும் இடத்தை ஆண் பெண் இருபாலருக்கும் ஒத்துப் போகும் விதத்தில் திருமணத்திற்கு பொருந்தும் விதத்தில் இணைக்கலாம். செவ்வாய் மனித உடலின் ரத்தத்திற்கு காரகத்துவம் வகிக்கும் கிரகம். ஆணை விட பெண் உடலியலின் கூற்றுப்படி ரத்தம் அதிகம் முக்கியத்துவம் வாய்ந்தது. காரணம் பெண்ணிற்கு பூப்பெய்திய பிறகு மாதவிடாய் காரணமாக ரத்த இழப்பு ஏற்படுகிறது. பிரசவ காலத்தில் ரத்த இழப்பு ஏற்படுகிறது. ஆகவே பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாய் கெட்டுப்போய் இருந்தால் ரத்தசோகை ஏற்பட வாய்ப்புள்ளது. அத்துடன் மாதவிடாய் காலகட்டத்தில் வயிற்று வலி அதிகம் உதிரப் போக்குஅல்லது சரிவர உதிரப்போக்கு அல்லாத நிலை போன்றவை ஏற்படகூடும். உடல் நல்ல ஆரோக்கியமுடன் இருக்காமல் பலகீனமாக இருக்கும்.

இது போல் ஒரு ஆண் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருப்பின் அதிக உணர்ச்சி வசப்படுதல் பால் உணர்வு காம வேட்கை இருக்க வாய்ப்பு உண்டு அல்லது மிகக் குறைவான பால் உணர்வு இருக்கவும் கூடும். செவ்வாய் இருக்கும் இடத்தைப் பொருத்து இவற்றை நிர்ணயிக்க வேண்டும். செவ்வாய் 247812ல் இருந்தால் அவசர புத்தி பேச்சில் கோபம் குடும்பம் நிம்மதியில்லாமை உடல்நலம் பாதிப்பு உற்றார் நண்பர்களுடன் ஒற்றுமை இல்லாமை விட்டுக் கொடுக்கும் தன்மை இல்லாமை அடிபடுதல் காயம் ஏற்படுதல் அறுவை சிகிச்சை தற்கொலை முயற்சி எளிதில் உணர்ச்சி வசப்படும் இயல்பு மாங்கல்ய பாக்கியத்திற்கு ஊறு விளைவிக்கும் நிலை உணர்ச்சி அதிகமான நிலை உடல் சக்தியை இழக்கும் நிலைமை ஒழுக்ககோட்டினால் உடல் நலம் பாதிப்பு போன்ற செய்ல்கள் அனைத்திற்கும் செவ்வாய் சரியில்லாத அமைப்பே காரணமாகும

செவ்வாயின் ஆற்றல் பெற:

முருகன் வழிபாடு மிக முக்கியமானதாகும். அறுபடை வீடுகளில் பழநி அங்காரக சேஷத்திரம். தமிழகத்தில் அங்காரகன் பூஜித்த ஸ்தலங்கள் மூன்று. முதலாவது திருச்சிறுகுடி இது நாகப்பட்டினத்திலிருந்து – பேரளத்திலிருந்து ஏழு கிலோ மீட்டர் தூரம் உள்ளது. அங்காரகன் பூஜித்ததால் இறைவன் பெயரே ஸ்ரீ மங்களேஸ்வரர். இறைவியின் பெயர் மங்கள நாயகி. திருஞான சம்பந்தரின் தேவாரப் பாடல் பெற்ற தலம். அடுத்த அங்காரக சேஷத்திரம் என்று மிகவும் புகழ் பெற்ற வைத்தீஸ்வரன் கோயில் என்கின்ற திருப்புள்ளருக்கு வேளுர். இதை அங்காரகபுரம் என்று அழைப்பார்கள். செவ்வாய்க் கிழமைகளில் சந்தியா காலத்தில் ஆட்டுக்கடா வாகனத்தில் பவனி வருவார் அங்காரகன். அடுத்து அங்காரகனால் பூஜிக்கப்பட்டவர் பழநி ஆண்டவர். செவ்வாய் செவ்வேளை பூஜித்த தலம் பழநி. அதனால் இது அங்காரக சேஷத்திரம் எனப்படுகிறது. வட நாட்டில் செவ்வாய் பூஜித்த தலம் உஜ்ஜயினி. செவ்வாய் கிழமை இராகு காலத்தில் துர்க்கைக்கு சிவப்பு வஸ்திரங்களை சார்த்தி அணிவதாலும் இரத்தினங்களில் பவளமும் உலோகங்களில் செம்பு அணிவதாலும் செண்பக மலர் செவ்வரளி மலர் கொண்டு பூஜை செய்வதாலும் செம்மரங்களை நடுவதாலும் செம்மரங்களுக்கு தண்ணீர் உற்றுவதாலும் செவ்வாய் அருள் பெறலாம். உணவு வகைளில் வெண்டைக்காய் பீட்ரூட் நெல்லிமுள்லி முந்திரி சுண்ட வத்தல் மிதுக்க வத்தல் திப்பிலி மூலம் கசாயம் கறிவேப்பிலை ஈத்து காம்பு கோசசாணி ஆமம் போன்ற வகைகளைச் சேர்த்துக் கொண்டால் செவ்வாய் பாதிப்புகளில் இருந்து விலகி செவ்வாய் ஆதிக்கம் பெறலாம். வாஸ்து சாஸ்திர முறைப்படி தெற்கு பார்த்த வீடுகள் கட்டலாம் வசிக்கலாம்.

தேசத்தைப் பரியாவணம் செய்வோருக்கும் நால்வகைப் படைகளை முன்னின்று இயக்குவோருக்கும் தீப்பிழம்பு போல் அசுத்தத்தை சுட்டெரித்துத் தூய்மையை நிலை நாட்டுவாருக்கும் யாருக்கும் தலை வணங்காமல் தன்மானத்துடன் வாழ்வோருக்கும் மூல பலமாக உள்ள அங்காரகனை வழிப்பட்டு வரமும் பெற்று விட்டால் எல்லாச் சிறப்பும் நம்மை நாடி வரும். இப்படிப்பட் செவ்வாயை வணங்கி சக்தியாகவும் சந்தோஷமாகவும் வாழ்வோம். வாழ்க வளமுடன்!


செவ்வாய் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum