ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

"குற்ற ஜாதகம்' பார்க்க போலீசிடம் மண்டியிடும் அரசியல் பிரமுகர்கள்

Go down

"குற்ற ஜாதகம்' பார்க்க போலீசிடம் மண்டியிடும் அரசியல் பிரமுகர்கள் Empty "குற்ற ஜாதகம்' பார்க்க போலீசிடம் மண்டியிடும் அரசியல் பிரமுகர்கள்

Post by positivekarthick Fri Jul 01, 2011 5:45 am

கோவை: நிலம், சொத்து அபகரிப்பு குற்றத்தில் ஈடுபட்டோர் பட்டியல், மாவட்டம் தோறும் போலீஸ் உயரதிகாரிகள் பொறுப்பில் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. இப்பட்டியலில் இருக்கும் 47 பேரில் இதுவரை ஏழு பேர் கைது செய்யப்பட்டுவிட்டனர். இதனால், மிரண்டு போயுள்ள நிலம் அபகரிப்பாளர்கள், போலீஸ் அதிகாரிகளை சந்தித்து, "பட்டியலில் என்னோட பெயர் இருக்கான்னு பார்த்துச் சொல்லுங்க...' என, கெஞ்சிக்கேட்டு மன்றாடி வருகின்றனர். இதையறிந்த உயரதிகாரிகள், துறைசார்ந்த அலுவலக ரகசியங்களை தெரிவித்தால் கடுமையான நடவடிக்கை பாயும் என, போலீசாரை எச்சரித்துள்ளனர்.

கடந்த தி.மு.க., ஆட்சியில் நடந்ததாக கூறப்படும் நிலம், சொத்து அபகரிப்பு தொடர்பான புகார்களை விசாரிக்க, மாவட்டம் தோறும் "ஸ்பெஷல் செல்' அமைக்கப்பட்டுள்ளது. டி.எஸ்.பி., மற்றும் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் ஏற்படுத்தப்பட்டுள்ள இப்பிரிவு நிலம் அபகரிப்பு குறித்த விபரங்களை, சப்-டிவிஷன் வாரியாக திரட்டி வருகிறது. கடந்த காலங்களில் நிலம் அபகரிப்பு நடந்து, பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் அளித்திருந்தால், அதன் மீது எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டுள்ளதா, சொத்தின் மொத்த மதிப்பு எவ்வளவு, குற்றம்சாட்டப்பட்டவர்கள் யார், வழக்கின் தற்போதைய நிலை என்ன என்பதை கண்டறிய, மாவட்டம் தோறும் உள்ள குற்ற ஆவண காப்பகங்களில் வழக்கு ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இதில், ரியல் எஸ்டேட் நிறுவன அதிபர்களை மிரட்டி அரசியல் பிரமுகர்கள் சிலர் கோடிக்கணக்கில் கமிஷன் பணம் வசூலித்தது அம்பலமாகியுள்ளது. இதுதொடர்பான புகார்கள் சேலம் மாவட்ட போலீசில் அதிகளவில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

முதலீட்டில் 10 சதவீதம் கமிஷன்: தமிழகத்தில் இதற்குமுன் இருந்திராத வகையில் கடந்த ஐந்தாண்டுகளில் ரியல் எஸ்டேட் தொழில் கொடிகட்டி பறந்தது. குறிப்பாக கோவை, சேலம் மாவட்டங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் புற்றீசல் போன்று முளைத்தன. 10 ஆண்டுகளுக்கு முன்வரை ஏக்கர் ஒரு லட்சம் ரூபாய்க்கு விலைபோன, "பொட்டல் காடு' நிலங்கள் கூட, ஏக்கர் 40 -70 லட்சம் வரை விலைபோயின. நகரையொட்டிய விவசாய எண்ணற்ற நிலங்கள் ஏக்கர் 2 முதல் 10 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டன. இவ்வாறு, கொள்ளை விலை கிடைத்ததால், விவசாயிகள் பலரும் நிலங்களை விற்று கோடீஸ்வரர்களாயினர். கோவையில் மட்டும் கடந்த ஐந்து ஆண்டுகளில் பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் தனி நபர்களிடம் இருந்து, ரியல் எஸ்டேட்காரர்களுக்கு கைமாறின. இவர்கள் 3,4, 5 சென்ட் அளவுகளில் நிலத்தை "லே -அவுட்' போட்டு வீட்டுமனைகளாக விற்பனை செய்தனர். இவற்றில் பெரும்பாலான "லே-அவுட்'கள் அரசின் அங்கீகாரம் பெறாதவை. ரியல் எஸ்டேட் தொழில் சூடுபிடித்ததால் தொழிலதிபர்கள், வர்த்தகர்கள் என பலரும் கோடிக்கணக்கான ரூபாயை முதலீடு செய்து வீட்டுமனை விற்பனையில் இறங்கினர். இதைக்கண்ட அரசியல் பிரமுகர்கள் சிலர், ரியல் எஸ்டேட் நிறுவன அதிபர்களை மிரட்டி பணம் பறிக்கும் வேளையில் இறங்கினர்.

சேலத்தில் ஆளுங்கட்சியினர் நடத்திய அத்துமீறல்கள் கணக்கிலடங்காதவை என, போலீசாரின் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. பெரிய அளவில் 1000, 2000 எண்ணிக்கையில் வீட்டுமனைகளை பிரித்து விற்பனை செய்தவர்களை மிரட்டி, மொத்த முதலீட்டில் ஐந்து முதல் 10 சதவீத ரூபாயை அரசியல் பிரமுகர்கள் கமிஷனாக வசூலித்துள்ளனர். கமிஷன் தராதவரின் "லே-அவுட்'டில் "திடீர் குடிசைகளை' போட்டு ஆக்கிரமித்து மிரட்டியுள்ளனர். இது குறித்து ரியல் எஸ்டேட்காரர்கள் சிலர் போலீசில் புகார் அளித்தனர். ஆக்கிரமிப்பாளர்கள் ஆளுங்கட்சியினர் என்பதால் நடவடிக்கை மேற்காள்ளப்படவில்லை. இதுபோன்ற கமிஷன் முறைகேடுகள் கோவை, ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களிலும் நடந்திருப்பதாக போலீசாரின் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. மிரட்டி கமிஷன் பெற்ற அரசியல் பிரமுகர்கள் குறித்து ரியல் எஸ்டேட்காரர்கள் போலீசாருக்கு சில தகவல்களை தெரிவித்துள்ளனர். இவர்களிடம் எழுத்து மூலமான புகார்களை பெற்று, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள எஸ்.பி.,க்களுக்கு ஐ.ஜி.,அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.

போலீசாரிடம் பலரும் கெஞ்சல்: நிலம் அபகரிப்பு குற்றங்களில் ஈடுபட்டோர் பட்டியல் போலீஸ் உயரதிகாரிகள் பொறுப்பில் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக தயாரிக்கப்பட்ட பட்டியலில் கோவை மாநகரில் 12 பேரும், தமிழக மேற்கு மண்டலத்தில் 35 பேரும் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் ஏழு பேர் சேலம் மற்றும் கோவை மாநகர போலீசாரால் சமீபத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டுவிட்டனர்; இவர்களில் ஐந்து பேர் தி.மு.க.,வைச் சேர்ந்தவர்கள். மீதமுள்ள நபர்கள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ள, பாதிக்கப்பட்ட நபர்கள் புகார் அளிக்கலாம் என, போலீசார் வெளிப்படையாக அறிவித்துள்ளனர். "புகார் வந்ததும் கைது' என்ற நிலை ஏற்பட்டுள்ளதால், பட்டியலில் தங்களது பெயர் உள்ளதா என அறிய, அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள், ரியல் எஸ்டேட் நிறுவன அதிபர்கள் தங்களுக்கு விசுவாசமான போலீஸ் அதிகாரிகளை தொடர்பு கொண்டு விசாரித்து வருகின்றனர். இந்நபர்களுக்கு உதவினால் தமது வேலைக்கே உலை வந்துவிடும் என்பதால், "பட்டியலில் உங்கள் பெயர் இல்லை' எனக்கூறி அனுப்பி வருகின்றனர். இன்னும் சில நிலம் அபகரிப்பாளர்கள், கடந்த காலங்களில் தங்கள் மீது புகார் கூறிய நபர்களை அழைத்து, சமசரம் பேசி வருகின்றனர்.

போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: போலீசுக்கு எழுத்து மூலமான புகார் வந்தால் மட்டுமே சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள முடியும். நிலம், சொத்து பிரச்னை தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ள சிலரும் புகார் மனு அளித்து வருகின்றனர். வழக்கு விசாரணை கோர்ட்டில் நிலுவையில் இருக்கும் நிலையில் புதிதாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள இயலாது. நிலம் அபகரிப்பு தொடர்பாக ஏற்கனவே போலீசில் புகார் செய்து நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தால் மட்டுமே, பாதிக்கப்பட்டவர்களின் முறையீட்டை ஏற்க முடியும். புதிதாக புகார் அளித்தாலும், மனுவில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் உண்மைத் தன்மை, சட்ட ரீதியான சாதகமாக அம்சங்களை ஆராய்ந்த பிறகே நடவடிக்கை மேற்கொள்ள முடியும். பொய்யான புகார் அளித்து போலீசாரை திசை திருப்பும் முயற்சியில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும் சட்டத்தில் இடமுள்ளது. நிலம் அபகரித்தோர் பட்டியலில் இருக்கும் நபர்களுடன் போலீசார் எவ்வித தொடர்பும் வைத்திருக்கக்கூடாது எனவும், அலுவலக ரகசியங்களை தெரிவித்தால் துறைசார்ந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் ஏற்கனவே எச்சரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, போலீஸ் உயரதிகாரி தெரிவித்தார்.

சினிமா பட அதிபர் மீது புகார்: கடந்த ஆட்சியின் போது முதல்வர் கருணாநிதிக்கு நெருக்கமாக இருந்த சினிமா பட அதிபர், நிலம் அபகரிப்பு பட்டியலில் கோவை போலீசாரால் சேர்க்கப்பட்டுள்ளார். பல ஆயிரம் ஏக்கர் நிலங்களை கோவை நகரையொட்டியும், புறநகர் பகுதிகளிலும் வாங்கியுள்ள இவர், வடமாநில தொழில் நிறுவனங்களுக்கு நிலத்தை விற்பனை செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவருடன் தமிழக போலீஸ் உயரதிகாரிகள், அரசுத்துறை அதிகாரிகள், சிலர் நேரடி தொடர்பு வைத்து, குறைந்த விலைக்கு நிலம் வாங்கியிருப்பதாக போலீசாரின் ரகசிய விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பெயர் விபரங்களுடன் கூடிய அறிக்கை அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், கோவை புறநகர் பகுதியில் வசிக்கும் நில உரிமையாளர் ஒருவர், சினிமா பட அதிபர் மீது கோவை போலீசில் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த விபரத்தை வெளியிட மறுத்த அதிகாரிகள், "நிலம் அபகரிப்பு புகார்கள் மீதான விசாரணை ஆரம்ப நிலையில் உள்ளன. இப்போதைக்கு எதையும் கூறுவதற்கில்லை' என்றனர்.
தினமலர்


"குற்ற ஜாதகம்' பார்க்க போலீசிடம் மண்டியிடும் அரசியல் பிரமுகர்கள் P"குற்ற ஜாதகம்' பார்க்க போலீசிடம் மண்டியிடும் அரசியல் பிரமுகர்கள் O"குற்ற ஜாதகம்' பார்க்க போலீசிடம் மண்டியிடும் அரசியல் பிரமுகர்கள் S"குற்ற ஜாதகம்' பார்க்க போலீசிடம் மண்டியிடும் அரசியல் பிரமுகர்கள் I"குற்ற ஜாதகம்' பார்க்க போலீசிடம் மண்டியிடும் அரசியல் பிரமுகர்கள் T"குற்ற ஜாதகம்' பார்க்க போலீசிடம் மண்டியிடும் அரசியல் பிரமுகர்கள் I"குற்ற ஜாதகம்' பார்க்க போலீசிடம் மண்டியிடும் அரசியல் பிரமுகர்கள் V"குற்ற ஜாதகம்' பார்க்க போலீசிடம் மண்டியிடும் அரசியல் பிரமுகர்கள் E"குற்ற ஜாதகம்' பார்க்க போலீசிடம் மண்டியிடும் அரசியல் பிரமுகர்கள் Empty"குற்ற ஜாதகம்' பார்க்க போலீசிடம் மண்டியிடும் அரசியல் பிரமுகர்கள் K"குற்ற ஜாதகம்' பார்க்க போலீசிடம் மண்டியிடும் அரசியல் பிரமுகர்கள் A"குற்ற ஜாதகம்' பார்க்க போலீசிடம் மண்டியிடும் அரசியல் பிரமுகர்கள் R"குற்ற ஜாதகம்' பார்க்க போலீசிடம் மண்டியிடும் அரசியல் பிரமுகர்கள் T"குற்ற ஜாதகம்' பார்க்க போலீசிடம் மண்டியிடும் அரசியல் பிரமுகர்கள் H"குற்ற ஜாதகம்' பார்க்க போலீசிடம் மண்டியிடும் அரசியல் பிரமுகர்கள் I"குற்ற ஜாதகம்' பார்க்க போலீசிடம் மண்டியிடும் அரசியல் பிரமுகர்கள் C"குற்ற ஜாதகம்' பார்க்க போலீசிடம் மண்டியிடும் அரசியல் பிரமுகர்கள் K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

Back to top

- Similar topics
» வேலன்:-ஜாதகம் பார்க்க
» குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் தேர்தலில் போட்டியிடத் தடை? அரசியல் சாசன அமர்வை அமைக்கிறது உச்ச நீதிமன்றம்
» அமெரிக்காவில் போராட்டக்காரர்களை அமைதி படுத்த அவர்கள் முன் மண்டியிடும் போலீசார்
» அ.தி.மு.க. பிரமுகர்கள் திகிலில்! நாற்காலிகள் ஆடுகின்றன!!
» அ.தி.மு.க. பிரமுகர்கள் திகிலில்! நாற்காலிகள் ஆடுகின்றன!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum