ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இப்படியும் கவிதை எழுதலாம்

5 posters

Go down

இப்படியும் கவிதை எழுதலாம் Empty இப்படியும் கவிதை எழுதலாம்

Post by வித்யாசாகர் Mon Sep 14, 2009 2:38 am

தம்பி தாமுவுக்கு, வணக்கம்!

வித்யாசாகர் எழுதுகிறேன்.

தாமதத்திற்கு மன்னிக்கவும்;

"விதவைக்கு வண்ணப் புடவை தர எண்ணிய போதும்,

ஊதுவத்தியின் பொகை மேலெழ, சாம்பல் கீழுதிர
குச்சித் தீர்ந்து போகையில் -
மிஞ்சியது வாசனை" என்றாயே அப்போதே நீ கவிஞாகி விட்டாய்!

இன்று வானில் பறக்கும் விமானியில் இருந்து
ஓவியத்தில் இதயம் தின்ற ரவிவர்மா வரை குழந்தையாய் பிறந்து வளர்ந்தவர்கள் தானே?

தத்தி தத்தி நடக்க ஆரம்பித்து விட்டாலே
ஒருநாள் ஓட்டப் பந்தையத்திலும் ஜெயித்து விடுவோமென்று
நம்பிக்கை கொள்!

நல்ல தெளிவு கிடைக்க; வெல்லும் புத்தகங்கள் படி.

விதைத்தால் தானே விளையும்? பிறகு கவிதை பூப் பறிக்க
அழகு தமிழை மனதில் விதைக்க வேண்டாமா?

சமூகத்தில் தட்டிக் கேட்கமுடியாத குற்றங்களை
சுட்டிக் காட்டும் கோபத்தை நெஞ்சுக்குள் புகுத்தவேண்டாமா?

தொட்டு ரசிக்கும் அழகெல்லாம் மனம் முத்தமிட்டு வருட
வார்த்தை தேடி.. வார்த்தை தேடி.. அலைய வேண்டாமா?

எழுத்து ஒரு தவம், சிலர் கிறுக்கினேன் என்பார்கள்; நாமும்
கிறுக்கலாம், அந்த கிறுக்கலுக்குள் ஞானம் புகுத்தமுடியுமானால்
கிறுக்கலாம்!

தங்கம் கூட நெருப்பில் சுடச் சுடத் தானே மின்னும், நாமும் அப்படி
சமூக நெருப்பிலும், இயற்கையின் வனப்பிலும் புடமாக புடமாக
கவிதை தானே வரும் தாமு.

"ஒருவரின் உணர்வுகளுக்கு மொழி வடிவம் கொடுத்தால்
அது கவிதை!"

அது படிப்பவர்களுக்கு ரசிக்கும் படி இருத்தல் சிறப்பு அத்தனையே, வேறொன்றுமில்லை!

கீழுள்ள கவிதை உங்களின் கவிதை முயற்சிக்கு என் அன்பு சமர்ப்பணம்..

ம்...., எழுதி குவியுங்கள், உங்களை நல்லக் கவிஞனென்று சொல்லும் வார்த்தையை, ஈகரை காதுகுளிர கேட்கக் காத்திருக்கிறது.

ஒரு உணவகம் செல்கிறீர்கள்; அங்கு என்ன கொடுத்தாலும் வாங்கி தின்று விடுவீர்களா?

இல்லைதானே, அறிவுப் பசியும் அப்படித்தான்.

நாம் எழுதுவதை எல்லாம் எல்லோரும் படித்து விடவேண்டுமென்ருமில்லை, படிப்பது பிடித்துவிட வேண்டுமென்றுமில்லை. ஆனால்.. பிடிக்க செய்வது சாமார்த்தியமென்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

அதற்க்கு சற்று கடின உழைப்பும் முயற்சியும் தேவை. அதுவரை ஆயிரம் கவிதை எழுதினால், அதில் நூறினை தேர்ந்தெடுத்து ஈகரைக்குக் கொடுங்கள்; ஒருவேளை நூறு கவிதை ஈகரைக்கு தர நினைத்தால் ஆயிரம் கவிதை எழுதுங்கள். எழுதுவீர்கள். வாழ்த்துக்கள்!

முயற்சி திருவினை மட்டுமல்ல; நல்ல கவிஞனையும் ஆக்கும்!__வித்யாசாகர்


Last edited by vidhyasagar on Thu Sep 17, 2009 5:41 am; edited 3 times in total
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

இப்படியும் கவிதை எழுதலாம் Empty Re: இப்படியும் கவிதை எழுதலாம்

Post by வித்யாசாகர் Mon Sep 14, 2009 2:53 am

அத்தனையும் கவிதை .. கவிதை!

நாம் சிந்தாமல் சிதறாமல்
தின்னும் சோற்று பருக்கைகளை
இறைத்து இறைத்து ஒரு -
குழந்தை சாப்பிட்டால் - அது கவிதை!

நேர்த்தியாக நாமணியும் - சட்டைகளை
மேலும்கீழுமாய் பொத்தான் மாற்றி
ஒரு குரங்கு மாட்டிக் கொண்டு
திரியுமானால் - அது கவிதை!

வெள்ளி உடைந்து சிதறியது போல்
சிரித்து கொண்டே திரிந்தவள்
தலைகுனிந்து வெட்கப் படும் -
காதலியானால் - அது கவிதை!

தெரிவில் நடந்தவன் மனதில் நடக்கும்
காதலனானாலோ; காதலன் காமப்
பாலொழுக ஒரு கடிதமெழுதினாலோ
அது கவிதை!

கடித்து தலை துப்ப வந்தவன்
நண்பனானாலோ; நண்பன் கடைசி மணித்துளியில்
பகைவனென தெரிந்தாலோ -
மனதில் எரியுமந்த கோபம் - கவிதை!

குழந்தை சிரிப்பதும் - அழுவதும் கவிதை;
துள்ளி நடப்பதும் -
தொட்டு நம் முகம் - வருடுவதும் கவிதை!

வானில் வட்டமிடும் பறவை கவிதை -
வீட்டு ஜன்னலில் கத்தும் - குருவி கவிதை!

வீழும் நட்சத்திரம் கவிதை - வீசும்
தென்றல் கவிதை!

பூமி பிளந்து பூகம்பம் வந்தால்
கவிதை ; கடல் புத்தி தடுமாறி
மனிதரை கொன்று குவித்தாலும் - கவிதை!

மழை வந்தால் கவிதை - மழையின்றி
விவசாயி வானம் பார்த்தாலும்
சாபமிட்டாலும் கவிதை!

வசிக்க கட்டும் வீட்டினை
ரசித்துக் கட்டினால் கவிதை;

ருசித்து புசிக்கும் மீனும் - துடிக்க
வெட்டிய ஆடும் கவிதை;
வெட்டாமல் ஓடும் ஆட்டுக் குட்டியும்
நீரில் வெட்டி வெட்டி ஓடும் மீனும் கவிதை!

சீவி முடிந்து பெண்
சிங்காரித்து நின்றாலும் கவிதை;
சேலை களைந்து காமம்
சொக்கி நின்றாலும் கவிதை!

மனைவி தாயானாள் கவிதை - தாயாக
மாட்டாலென்றாலும் கவிதை!

நிறையும் குறையும் கவிதை;
ஊடலும் கூடலும் கவிதை!

ஆடலும் பாடலும் கவிதை;
தேடலும் திகட்டலும் கவிதை!

ஞானமும் கிறுக்கும் கவிதை;
உரக்கமும் விழிப்பும் கவிதை!

வாழ்வும் வீழ்வும் கவிதை;
பட்டினியும் பணமும் கூட கவிதை!

பனைமரமும்.., பஞ்சப் பசியும் கவிதை;
கூர்ந்து கவனிப்போருக்கு -

பக்கமிருக்கும் - அத்தனையும்
கவிதை .. கவிதை .. கவிதை .. கவிதை .. !
------------------------------------------------

வித்யாசாகர்


Last edited by vidhyasagar on Thu Sep 17, 2009 5:38 am; edited 2 times in total
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

இப்படியும் கவிதை எழுதலாம் Empty Re: இப்படியும் கவிதை எழுதலாம்

Post by மீனு Mon Sep 14, 2009 3:00 am

வசிக்க கட்டும் வீட்டினை
ரசித்துக் கட்டினால் கவிதை

சீவி முடிந்து பெண்சிங்காரித்து
நின்றாலும் கவிதைசேலை
களைந்து காமம்
சொக்கி நின்றாலும் கவிதை!

இப்படியும் எழுதலாம் கவிதை அருமை வித்யாசாகர்..
பாராட்டுக்கள்..நாமும் இனி இப்படி எழுத முயற்சிக்கலாம் போல் தெரிகிறதே..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

இப்படியும் கவிதை எழுதலாம் Empty Re: இப்படியும் கவிதை எழுதலாம்

Post by சிவா Mon Sep 14, 2009 3:04 am

கவிதைக்கே கவிதை படைத்து சாதனை படைத்துள்ளார் எங்கள் கவி வித்யா! நன்றி


இப்படியும் கவிதை எழுதலாம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இப்படியும் கவிதை எழுதலாம் Empty Re: இப்படியும் கவிதை எழுதலாம்

Post by மீனு Mon Sep 14, 2009 3:12 am

வித்தியாசாகர் ..என்ன ஒரு கவிதை இது தெர்யுமா..
எப்படி இப்படி வரிகள் அமைக்க முடிகின்றது ,,புல்லரிக்கின்றது கவிதை படிக்கும் போது ..பாராட்டுக்கள் வித்யாசாகர் ..அருமை..

சீவி முடிந்து பெண்

சிங்காரித்து நின்றாலும் கவிதை;

சேலை களைந்து காமம்

சொக்கி நின்றாலும் கவிதை!



மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

இப்படியும் கவிதை எழுதலாம் Empty Re: இப்படியும் கவிதை எழுதலாம்

Post by ரூபன் Mon Sep 14, 2009 3:22 am

சீவி முடிந்து பெண்சிங்காரித்து
நின்றாலும் கவிதைசேலை
மினுவைப்போல் தலை கோதாமல்
பறட்டையாக இருந்தாலும் அது கவிதை


வாழ்வும் வீழ்வும் கவிதை;

பட்டினியும் பணமும் கூட கவிதை!


அருமையான கவிதை சிவா அண்ணன் சொன்னது சரியே


Last edited by Ruban1 on Mon Sep 14, 2009 3:37 am; edited 1 time in total
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

இப்படியும் கவிதை எழுதலாம் Empty Re: இப்படியும் கவிதை எழுதலாம்

Post by வித்யாசாகர் Mon Sep 14, 2009 3:25 am

மன்னியுங்கள், எனக்கு கிடைப்பதே குறைந்த நேரம், அதிலும் எழுத்து அளவு சிறிதாக இருந்ததால் அதனிடம் மன்றாடி சரி செய்து திருத்தி அமைக்க இத்தனை நேரமாகி விட்டது. உங்களிடம் அன்பாக பேசும் இன்றைய நேரத்தை இழந்து விட்டேன்.



எல்லோரும் இன்புற்றிருக்கவே யன்றி வேறொன்றுமறியேன் பராபரமே. நன்றி!
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

இப்படியும் கவிதை எழுதலாம் Empty Re: இப்படியும் கவிதை எழுதலாம்

Post by தாமு Mon Sep 14, 2009 5:47 am

வித்யாசாகர், ரூபன், சிவா அண்ணா, மூனு அக்கா அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றி.... மிக மிக நன்றி.......

எனக்கு கவிதை எழுத வராது... ஆனால் படிக்க பிடிக்கும்.... படித்தை சேமித்து வைக்க பிடிக்கும்.....

இவை நான் சேமித்து வைத்ததுதான்.... ஆனால் அதில் நான் கொஞ்சம் என் கர்பனையை சேர்ததும் உண்டு....

உங்கள் வாழ்த்துக்கு நான் தகுதியானாவானா என தெரியவில்லை ... மன்னிக்கவும்...

இது சேமிப்புதான்.... உங்கள் வாழ்த்துக்கு மருபியும் நன்றி....
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

இப்படியும் கவிதை எழுதலாம் Empty Re: இப்படியும் கவிதை எழுதலாம்

Post by வித்யாசாகர் Thu Sep 17, 2009 5:35 am

தம்பி தாமு மன்னிக்கவும், அன்றொரு நாள்
சிங்கபூரில் இவ்வளவு மணி நேரம் ஆகிறது அங்கு எத்தனை மணி ஆகிறதென்றீர்கள் நினைவிருக்கா?

அதை நான் மறுதினம் தான் பார்த்தேன். சிங்கபூரில் காலை பத்து மணி நேரமென்றால் இங்க குவைத்தில் ஐந்து மணியாகும். ஐந்து மணி நேர முன்பின் வித்யாசம்.

வணக்கம்!!
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

இப்படியும் கவிதை எழுதலாம் Empty Re: இப்படியும் கவிதை எழுதலாம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum