புதிய பதிவுகள்
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலக்கணச் சுருக்கம் Poll_c10இலக்கணச் சுருக்கம் Poll_m10இலக்கணச் சுருக்கம் Poll_c10 
48 Posts - 43%
heezulia
இலக்கணச் சுருக்கம் Poll_c10இலக்கணச் சுருக்கம் Poll_m10இலக்கணச் சுருக்கம் Poll_c10 
46 Posts - 41%
T.N.Balasubramanian
இலக்கணச் சுருக்கம் Poll_c10இலக்கணச் சுருக்கம் Poll_m10இலக்கணச் சுருக்கம் Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
இலக்கணச் சுருக்கம் Poll_c10இலக்கணச் சுருக்கம் Poll_m10இலக்கணச் சுருக்கம் Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
இலக்கணச் சுருக்கம் Poll_c10இலக்கணச் சுருக்கம் Poll_m10இலக்கணச் சுருக்கம் Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
இலக்கணச் சுருக்கம் Poll_c10இலக்கணச் சுருக்கம் Poll_m10இலக்கணச் சுருக்கம் Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
இலக்கணச் சுருக்கம் Poll_c10இலக்கணச் சுருக்கம் Poll_m10இலக்கணச் சுருக்கம் Poll_c10 
2 Posts - 2%
prajai
இலக்கணச் சுருக்கம் Poll_c10இலக்கணச் சுருக்கம் Poll_m10இலக்கணச் சுருக்கம் Poll_c10 
2 Posts - 2%
Manimegala
இலக்கணச் சுருக்கம் Poll_c10இலக்கணச் சுருக்கம் Poll_m10இலக்கணச் சுருக்கம் Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
இலக்கணச் சுருக்கம் Poll_c10இலக்கணச் சுருக்கம் Poll_m10இலக்கணச் சுருக்கம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலக்கணச் சுருக்கம் Poll_c10இலக்கணச் சுருக்கம் Poll_m10இலக்கணச் சுருக்கம் Poll_c10 
414 Posts - 49%
heezulia
இலக்கணச் சுருக்கம் Poll_c10இலக்கணச் சுருக்கம் Poll_m10இலக்கணச் சுருக்கம் Poll_c10 
282 Posts - 33%
Dr.S.Soundarapandian
இலக்கணச் சுருக்கம் Poll_c10இலக்கணச் சுருக்கம் Poll_m10இலக்கணச் சுருக்கம் Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
இலக்கணச் சுருக்கம் Poll_c10இலக்கணச் சுருக்கம் Poll_m10இலக்கணச் சுருக்கம் Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
இலக்கணச் சுருக்கம் Poll_c10இலக்கணச் சுருக்கம் Poll_m10இலக்கணச் சுருக்கம் Poll_c10 
28 Posts - 3%
prajai
இலக்கணச் சுருக்கம் Poll_c10இலக்கணச் சுருக்கம் Poll_m10இலக்கணச் சுருக்கம் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
இலக்கணச் சுருக்கம் Poll_c10இலக்கணச் சுருக்கம் Poll_m10இலக்கணச் சுருக்கம் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
இலக்கணச் சுருக்கம் Poll_c10இலக்கணச் சுருக்கம் Poll_m10இலக்கணச் சுருக்கம் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
இலக்கணச் சுருக்கம் Poll_c10இலக்கணச் சுருக்கம் Poll_m10இலக்கணச் சுருக்கம் Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
இலக்கணச் சுருக்கம் Poll_c10இலக்கணச் சுருக்கம் Poll_m10இலக்கணச் சுருக்கம் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலக்கணச் சுருக்கம்


   
   

Page 1 of 10 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 14, 2009 2:00 am

இலக்கணச் சுருக்கம் - ஆறுமுகநாவலர்


முதலாவது: எழுத்ததிகாரம்

1.1. எழுத்தியல்

இலக்கண நூலாவது, உயர்ந்தோர் வழக்கத்தையுஞ் செய்யுள் வழக்கத்தையும் அறிந்நு விதிப்படி எழுதுவதற்கும் பேசுதற்குங் கருவியாகிய நூலாம்.
-----

2. அந்நூல் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், தொடர்மொழியதிகாரம் என, மூன்றதிதிகாரங்களாக வகுக்கப்படும்.

எழுத்துக்களின் பெயர்
3. எழுத்தாவது சொல்லுக்கு முதற்காரணமாகிய ஒலியாம்
-----

4. அவ்வெழுத்து, உயிரெழுத்து, மெய்யெழுத்து, உயிர் மெய்யெழுத்து, ஆய்தவெழுத்து என நான்கு வகைப்படும்.
-----

5. உயிரெழுத்துக்கள், அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள என்னும் பன்னிரண்டெழுத்துக்களுமாம். இவை ஆவி எனவும் பெயர் பெறும்.
-----

6. உயிரெழுத்துக்கள், குற்றெழுத்து, நெட்டெழுத்து, என இரண்டு வகைப்படும்.
-----

7. குற்றெழுத்துக்கள், அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்துமாம். இவை குறில் எனவும் பெயர் பெறும்.
-----

8. நெட்டெழுத்துக்கள், ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்னும் ஏழமாம். இவை நெடில் எனவும் பெயர் பெறும்
-----

9. மெய்யெழுத்துக்கள், க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் என்னும் பதினெட்டெழுத்துக்களுமாகும்.
இவை உடல், உடம்பு, உறுப்பு, ஒற்று, புள்ளி எனவும் பெயர் பெறும்.
-----

10. மெய்யெழுத்துக்கள், வல்லெழுத்து, மெல்லெழுத்து, இடையெழுத்து என மூன்று வகைப்படும்.
-----

11. வல்லெழுத்துக்கள், க், ச், ட், த், ப், ற், என்னும் ஆறுமாம்.
இவை வல்லினம், வன்கணம், வலி எனவும் பெயர் பெறும்.
-----

12. மெல்லெழுத்துக்கள், ங், ஞ், ண், ந், ம், ன் என்னும் ஆறுமாம்.
இவை மெல்லினம், மென்கணம், மெலி எனவும் பெயர் பெறும்.
-----

13. இடையெழுத்துக்கள், ய், ர், ல், வ், ழ், ள் என்னும் ஆறுமாம்.
இவை இடையினம், இடைக்கணம், இடை எனவும் பெயர் பெறும்.
-----

14. அ, இ, உ என்னும் மூன்றும், மொழிக்கு முதலிலே சுட்டுப் பொருளில் வரும்போது, சுட்டெழுத்துக்களாம். உதாரணம்.
அவன், இவன், உவன்,
அக்கொற்றன், இக்கொற்றன், உக்கொற்றன்.
-----

15.எகரம் மொழிக்கு முதலிலும், அகரமும் ஒகாரமும் மொழிக்கு கடையிலும், வினாப்பொருளில் வரும் போது, வினாவெழுத்துக்களாம்.உதாரணம்.
எவன், எக்கொற்றன்
கொற்றான, கொற்றனோ
ஏவன், கொற்றனே
யா என்னும் உயிர் மெய்யும், மொழிக்கு முதலிலே வினாப் பொருளில் வரும் போது வினாவெழுத்தாம்
-----

16. அகரத்துக்கு ஆகாரமும், இகரத்துக்கு ஈகாரமும், ஒகரத்துக்கு ஓகாரமும், உகரத்துக்கு ஊகாரமும், எகரத்துக்கு ஏகாரமும், ஐகாரத்துக்கு இகரமும், ஒகரத்துக்கு ஓகாரமும், ஒளகாரத்துக்கு உகரமும், ககரத்துக்கு ஙகரமும், சகரத்துக்கு ஞகரமும், டகரத்துக்கு ணகரமும், தகரத்துக்கு நகரமும், பகரத்துக்கு மகரமும், றகரத்துக்கு னகரமும், இன வெழுத்துக்களாம். இடையெழுத்தாறும். ஓரினமாகும்; அவை இவ்விரண்டோரினமாகாவாம்.
-----

17. உயிர் மெய்யெழுத்துக்களாவன. புன்னிரண்டுயிரும் பதினெட்டு மெய்மேலுந் தனித்தனி ஏறிவருதலாகிய இருநாற்றுப்பதினாறுமாம்.

அவை, க, கா, கி, கீ முதலியவைகளாம்.

உயிர் மெய்க்குற்றெழுத்துத் தொண்ணூறு; உயிர்மெய் நெட்டெழுத்து நூற்றிருபத்தாறு; ஆக உயிர்மெய் இருநாற்றுப் பதினாறு.

ஊயிர்மெய் வல்லெழுத்து எழுபத்திரண்டு, உயிர்மெய் மெல்லெழுத்து எழுபத்திரண்டு, உயிர்மெய் யிடையெழுத்து எழுபத்திரண்டு, ஆக உயிர்மெய் இருநாற்றுப் பதினாறு.
-----

18. ஆய்தவெழுத்தாவது, குற்றெழுத்துக்கும் உயிர்மெய் வல்லெழுத்துக்கும் நடுவே மூன்று புள்ளி வடிவுடையதாய் வரும் ஓரெழுத்தாகும்.
உதாரணம். எஃகு, கஃசு, அஃது, பஃறி
-----

19. மேற்சொல்லப்பட்ட உயிர் பன்னிரண்டும், மெய்பதினெட்டும், உயிர்மெய் இருநாற்றுப் பதினாறும், ஆய்தம் ஒன்றும் ஆகிய இருநாற்று நாற்பத்தேழெழுத்துக்களுந் தமிழ் நெடுங்கணக்கில் வழங்கி வருதல் கண்டு கொள்க.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 14, 2009 2:01 am

தேர்வு வினாக்கள்


1. இலக்கண நூலாவதியாது?
2. அந்நூல் எத்தனை அதிகாரங்களாக வகுக்கப்படும்?
3. எழுத்தாவது யாது?
4. அவ்வெழுத்து எத்தனை வகைப்படும்?
5.உயிரெழுத்துக்கள் எவை?
6. உயிரெழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?
7.குற்றெழுத்துக்கள் எவை?
8. நெட்டெழுத்துக்கள் எவை?
9. மெய்யெழுத்துக்கள் எவை?
10. மெய்யெழுத்துக்கள் எத்தனை வகைப்படும்? 11. வல்லெழுத்துக்கள் எவை?
12.மெல்லெழுத்துக்கள் எவை?
13. இடையெழுத்துக்கள் எவை?
14. சுட்டெழுத்துக்கள் எவை?
15. வினாவெழுத்துக்கள் எவை?
16. எந்தெந்த வெழுத்துக்கு எந்தெந்தவெழுத்து இனவெழுத்தாகும்.
17. உயிர்மெய்யெழுத்துக்கள் எவை?
18. உயிர்மெய் குற்றெழுத்து எத்தனை?
உயிர்மெய்க் குற்றெழுத்து எப்படி தொண்ணுறாகும்?
உயிர்மெய் நெட்டெழுத்து எத்தனை? உயிர்மெய் நெட்டெழுத்து எப்படி நூற்றிருபத்தாறாகும்?
உயிர்மெய் வல்லெழுத்து எத்தனை? உயிர்மெய் வல்லெழுத்து எப்படி எழுபத்திரண்டாகும்?
உயிர்மெய் மெல்லெழுத்து எத்தனை? உயிர்மெய் மெல்லெழுத்து எப்படி எழுபத்திரண்டாகும்?
உயிர்மெய் யிடையெழுத்து எத்தனை? உயிர்மெய் யிடையெழுத்து எப்படி எழுபத்திரண்டாகும்?
18. ஆய்தவெழுத்தாவது எது?
19. ஆகத் தமிழ் நெடுங்கணக்கில் வழங்கும் எழுத்துக்கள் எத்தனை?



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 14, 2009 2:02 am

எழுத்துக்களின் மாத்திரை

20. குற்றெழுத்துக்கு மாத்திரை ஒன்று, நெட்டெழுத்துக்கு மாத்திரை இரண்டு.
மெய்யெழுத்துக்கும் ஆய்தவெழுத்துக்குந் தனித்தனி மாத்திரை அரை.
ஊயிர்மெய்க் குற்றெழுத்துக்கு ஏறிய உயிரின ளவாகிய மாத்திரை ஒன்று; உயிர்மெய் நெட்டெழுத்துக்கு ஏறிய உயிரினளவாகிய மாத்திரை இரண்டு.
மாத்திரையாவது கண்ணிமைப்பொழுது, அல்லது கைந்நொடிப்பொழுது.
-----

21. உயிரெழுத்துக்குள்ளே, உகரமும் இகரமும், சிலவிடங்களிலே தம் மாத்திரையிற் குறைவாக ஒலித்து நிற்கும். ஆவ்வுகரத்திற்கு குற்றியலுகரமென்றும் பெயராம்.
-----

22. குற்றியலுகரமாவது, தனிக் குற்றெழுத்தல்லாத மற்றையெழுத்துக்களுக்குப் பின்னே மொழிகளிளிறுதியில் வல்லின மெய்களில் ஏறி நிற்கும் உகரமாகும்.
ஆக்குற்றியலுகரம், ஈற்றெழுத்தாகிய தன்னைத்தொடர்கின்ற அயலெழுத்தின் வகையiனாலே, நெடிற் றொடர்க்குற்றியலுகரம், ஆய்தத்தொடர்க்குற்றியலுகரம், உயிர்த்தொடர்க்குற்றியலுகரம், வன்றொடர்க்குற்றியலுகரம், மென்றொடர்க்குற்றியலுகரம், இடைத்தொடர்க்குற்றியலுகரம், என ஆறுவகைப்படும். அவைகளுள், நெடிற்றொடர் மாத்திரம் இரண்டெழுத்து மொழியாகியும், மற்றையைந்து தொடரும் மூன்றெழுத்து முதலிய பல வெழுத்து மொழியாகியும் வரும்.
உதாரணம்.

நாகு, ஆடு


நெடிற்றொடர்க்குற்றியலுகரம்

எஃகு, கஃசு


ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம்

வரகு, பலாசு


உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்

கொக்கு, கச்சு


வன்றொடர்க் குற்றியலுகரம்

சங்கு, வண்டு


மென்றொடர்க் குற்றியலுகரம்

அல்கு, எய்து


இடைத்தொடர்க்குற்றியலுகரம்

-----

23. தனிக்குற்றறெழுத்துக்குப்பின் வல்லின மெய்களில் ஏறி நிற்கும் உகரமும், மெல்லின மெய்களில் ஏறி நிற்கும் உகரமும் முற்றியலுகரமாம்.
உதாரணம். நகு, கொசு, கடு, அது, கணு, திரு, வழு: பூணு, வாரு, உருமு, கதவு, நெல்லு, கொள்ளு.
-----

24. குற்றியலிகரமாவது, யகரம் வந்து புணருமிடத்துக் குற்றியலுகரந் திரிந்த இகரமாம்.
உதாரணம்.

நாகு + யாது =


நாகியது

எஃகு + யாது =


எ.கியாது

வரகு + யாது =


வரகியாது

கொக்கு + யாது =


கொக்கியாது

சங்கு + யாது =


சங்கியாது

அல்கு + யாது =


அல்கியாது

அன்றியும், மியாவென்னும் அசைச்சொல்லிலே மகரத்தின் மேல் ஏறி நிற்கும் இகரமுங் குற்றியலுகரந் திரிந்த இகரமாம்.
-----

25. பாட்டில் ஓசை குறைந்தவிடத்து, உயிரெழுத்துக்களுள்ளும், ஒற்றையெழுத்துக்குள்ளும், சிலசில, தம் மாத்திரைகளின் அதிகமாக ஒலிக்கும், அவிவுயிரெழுத்துக்கு உயிரளபெடை என்றும் பெயராம்.
-----

26. உயிரளபெடையாவன, மொழிக்கு முதலிலாயினும் இடையிலாயினுங் கடையிலாயினுந் தம் மாத்திரையின் அதிகமாக ஒலித்து வருகின்ற நெட்டெழுத்துக்களேழுமாம். ஆளபெடுகின்ற நெட்டெழுத்துக்குப் பின் அதற்கினமாகிய குற்றெழுத்து அறிகுறியாக எழுதப்படும்.
உதாரணம்.

ஆஅடை,


ஈஇடு,


ஊஉமை,


ஏஎடு,

ஐஇயம்,


ஓஒடு,


ஒளஉவை,


பலாஅ.

சில விடயங்களிலே குற்றெழுத்து நெட்டெழுத்தாகிப் பின்னளபெடுக்கும்.உதாரணம்.
எழுதல் - எழூஉதல்,
வரும் - வரூஉம்,
குரி - குரிஉஇ

-----

27. ஒற்றளபெடையாவன, மொழிக்கு இடையிலாயினுங் கடையிலாயினுந் தம் மாத்திரையின் அதிகமாக ஒலித்து வருகின்ற ங், ஞ், ண், ந், ம், ன், வ், ய், ல், ள் என்னும் பத்து மெய்களும் ஆய்தமுமாம். ஆளபெடுகின்ற ஒற்றெழுத்துக்குப் பின் அவ் வொற்றொழுத்தே அறிகுறியாக எழுதப்படும். இவ்வொற்றளபெடை, குறிற்கீழுங் குறலிணைக்கீழும் வரும்.
உதாரணம்.
சங்ங்கு, பிஞ்ஞ்சு, கண்ண்டம், பந்ந்து, அம்ம்பு, அன்ன்பு, தெவ்வ்வர், மெய்ய்யர், செல்ல்க, கொள்ள்க, எஃஃகு, அரங்ங்கு, அங்ங்கனிந்த, மடங்கலந்த.

-----

28. குற்றியலுகரத்துக்குங், குற்றியலிகரத்துக்குந் தனித்தனி மாத்திரை அரை, உயிரௌபெடைக்கு மாத்திரை மூன்று, ஒற்றளபெடைக்கு மாத்திரை ஒன்று.
-----

29. பண்டமாற்றலிலும், அழைத்தலிலும், புலம்பலிலும், இராகத்திலும், உயிரெழுத்தும், மெய்யெழுத்தும், தமக்குச் சொல்லிய அளவை கடந்து நீண்டொலிக்கும்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 14, 2009 2:03 am

தேர்வு வினாக்கள்

20. குற்றெழுத்துக்கு மாத்திரை எத்தனை?
நெட்டெழுத்துக்கு மாத்திரை எத்தனை? மெய்யெழுத்துக்கு மாத்திரை எத்தனை?
ஆய்தவெழுத்துக்கு மாத்திரை எத்தனை?
உயிர்மெய்குற்றெழுத்துக்கு மாத்திரை எத்தனை?
உயிர்மெய்நெட்டெழுத்துக்கு மாத்திரை எத்தனை? மாத்திரையாவது எது?
21. தம் மாத்திரையிற் குறைவாக ஒலித்து நிற்கும் எழுத்துக்கள் உளவோ?
தன் மாத்திரையிற் குறைவாக ஒலித்து நிற்கும் உகரத்திற்கு பெயர் யாது?
ன் மாத்திரையிற் குறைவாக ஒலித்து நிற்கும் இகரத்திற்கு பெயர் யாது?
22. குற்றியலுகரமாவது யாது?
அக் குற்றியலுகரம் எத்தனை வகைப்படும்? நெடிற்றொடர் எத்தனையெழுத்து மொழியாகிவரும்?
23. முற்றியலுகரமாவன எவை?
24. குற்றியலிகரமாவது யாது?
25. தம் மாத்திரைகளின் அதிகமாக ஒலிக்கும் எழுத்துக்கள் உளவோ?
அதிகமாக ஒலிக்கும் உயிரெழுத்துக்குப் பெயர் யாது?
அதிகமாக ஒலிக்கும் ஒற்றெழுத்துக்குப் பெயர் யாது?
26. உயிரௌபெடை யாவன யாவை?
27. ஒற்றளபெடையாவன யாவை? 28. குற்றியலிகரத்துக்கு மாத்திரை எத்தனை?
உயிரள பெடைக்கு மாத்திரை எத்தனை?
ஒற்றளபெடைக்கு மாத்திரை எத்தனை?
29. எவ.வௌ;விடங்களில் எழுத்துக்கள் தமக்குச் சொல்லிய அளவைக்கடந்து நீணடடொலிக்கும்?



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 14, 2009 2:04 am

முதனிலை

30. பன்னிரண்டுயிரெழுத்துக்களும், உயிரேறிய க, ச, த, ந, ப, ம, வ, ய, ஞ என்னும் ஒன்பது மெய்யெழுத்துக்களும், மொழிக்கு முதலில் நிற்கும் எழுத்துக்களாம்.
உதாரணம்.
அணி, ஆடை, இலை, ஈரல், உரல், ஊர்தி, எழு, ஏணி, ஐயம், ஒளி, ஓடு, ஒளவை.
கரி, சரி, நன்மை, பந்து, மணி, வயல், யமன், ஞமலி.
------

31. இவைகளுள்ளே, க, ச, த, ந, ப, ம, என்னும் ஆறு மெய்களும், பன்னிரண்டுயிரோடும் மொழிக்கு முதலாகி வரும்.
உதாரணம்.

1. களி, காளி, கிளி, கீரை, குளிர், கூடு, கெண்டை, கேழல், கைதை, கோண்டை, கோடை, கௌவை.
2. சட்டி, சாநந்து, சினம், சீர், சுக்கு, சூரல், செக்கு, சேவல், சையம், சொன்றி, சோறு, சௌரியம்.
3. தகை, தார், திதலை, தீமை, துளை, தூசு, தெளிவு, தேழ், தையல், தொண்டு, தோடு, தௌவை.
4. நஞ்சு, நாரி, நிலம், நீறு, நுகம், நூல், நெல், நேர்மை, நைதல், நொய்து, நோய், நௌளி.
5. பந்து, பால், பிட்டு, பீடு, புள், பூண்டு, பெருமை, பேடு, பையல், பொன், போது, பௌவம்.
6. மனை, மாடு, மின்னல், மீன், முள், மூரி, மெய்ம்மை, மேதி, மையல், மொட்டு, மோகம், மௌவல்.


----

32. வகரமெய், அ, ஆ, இ, ஈ, எ, ஏ, ஐ, ஒள என்னும் எட்டுயிரோடு, மொழிக்கு முதலாகி வரும்.
உதாரணம்.
வளி, வாளி, விளி, வீடு, வெண்மை, வேலை, வையம், வெளவால்.


----

33. யகரமெய், அ, ஆ, உ, ஊ, ஒ, ஒள னெ;னும் ஆறயிரோடு, மொழிக்கு முதலாகிவரும்.
உதாரணம்.
யவனர், யானை, யுகம், யூகம், யோகம், யௌவனம்.
----

34. ஞகரமெய், அ, ஆ, எ, ஒ, என்னும் நான்குயிரோடு மொழிக்கு முதலாகி வரும்.
உதாரணம்.
ஞமலி, ஞாலம், ஞெகிழி, ஞொள்கல்.

தேர்வு வினாக்கள்


30. மொழிக்கு முதலில் நிற்கும் எழுத்துக்கள் எவை?
31. இவ்வொன்பது மெய்களுள், எத்தனை மெய்கள் பன்னிரண்டுயிரோடும் மொழிக்கு முதலாகிவரும்?
32. வகரமெய் எவ்வுயிர்களோடு மொழிக்கு முதலாகிவரும்?
33. யகரமெய் எவ்வுயிர்களோடு மொழிக்கு முதலாகிவரும்?
34. ஞகரமெய் எவ்வுயிர்களோடு மொழிக்கு முதலாகிவரும்?

----

இறுதி நிலை

35. எகரம் ஒழிந்த பதினோருயிர்களும், ஞ், ண், ந், ம், ன், ய், ர், ல், வ், ழ், ள், என்னும் பதினொரு மெய்களுமாகிய இருபத்திரண்டெழுத்துக்களும், மொழிக்கிறுதியில் நிற்கும் எழுத்துக்களாம்.
உதாரணம்.
விள, பலா, கிளி, தீ, கடு, பூ, சே, கை, நொ, போ, வெள, உரிஞ், மண், வெரிந், மரம், பொன், காய், வேர், வேல், தெவ், யாழ், வாள்.

தேர்வு வினா


31. மொழிக்கு இறுதியில் நிற்கும் எழுத்துக்கள் எவை?



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 14, 2009 2:07 am

முதனிலை

30. பன்னிரண்டுயிரெழுத்துக்களும், உயிரேறிய க, ச, த, ந, ப, ம, வ, ய, ஞ என்னும் ஒன்பது மெய்யெழுத்துக்களும், மொழிக்கு முதலில் நிற்கும் எழுத்துக்களாம்.
உதாரணம்.
அணி, ஆடை, இலை, ஈரல், உரல், ஊர்தி, எழு, ஏணி, ஐயம், ஒளி, ஓடு, ஒளவை.
கரி, சரி, நன்மை, பந்து, மணி, வயல், யமன், ஞமலி.
------

31. இவைகளுள்ளே, க, ச, த, ந, ப, ம, என்னும் ஆறு மெய்களும், பன்னிரண்டுயிரோடும் மொழிக்கு முதலாகி வரும்.
உதாரணம்.

1. களி, காளி, கிளி, கீரை, குளிர், கூடு, கெண்டை, கேழல், கைதை, கோண்டை, கோடை, கௌவை.
2. சட்டி, சாநந்து, சினம், சீர், சுக்கு, சூரல், செக்கு, சேவல், சையம், சொன்றி, சோறு, சௌரியம்.
3. தகை, தார், திதலை, தீமை, துளை, தூசு, தெளிவு, தேழ், தையல், தொண்டு, தோடு, தௌவை.
4. நஞ்சு, நாரி, நிலம், நீறு, நுகம், நூல், நெல், நேர்மை, நைதல், நொய்து, நோய், நௌளி.
5. பந்து, பால், பிட்டு, பீடு, புள், பூண்டு, பெருமை, பேடு, பையல், பொன், போது, பௌவம்.
6. மனை, மாடு, மின்னல், மீன், முள், மூரி, மெய்ம்மை, மேதி, மையல், மொட்டு, மோகம், மௌவல்.


----

32. வகரமெய், அ, ஆ, இ, ஈ, எ, ஏ, ஐ, ஒள என்னும் எட்டுயிரோடு, மொழிக்கு முதலாகி வரும்.
உதாரணம்.
வளி, வாளி, விளி, வீடு, வெண்மை, வேலை, வையம், வெளவால்.


----

33. யகரமெய், அ, ஆ, உ, ஊ, ஒ, ஒள னெ;னும் ஆறயிரோடு, மொழிக்கு முதலாகிவரும்.
உதாரணம்.
யவனர், யானை, யுகம், யூகம், யோகம், யௌவனம்.
----

34. ஞகரமெய், அ, ஆ, எ, ஒ, என்னும் நான்குயிரோடு மொழிக்கு முதலாகி வரும்.
உதாரணம்.
ஞமலி, ஞாலம், ஞெகிழி, ஞொள்கல்.

தேர்வு வினாக்கள்

30. மொழிக்கு முதலில் நிற்கும் எழுத்துக்கள் எவை?
31. இவ்வொன்பது மெய்களுள், எத்தனை மெய்கள் பன்னிரண்டுயிரோடும் மொழிக்கு முதலாகிவரும்?
32. வகரமெய் எவ்வுயிர்களோடு மொழிக்கு முதலாகிவரும்?
33. யகரமெய் எவ்வுயிர்களோடு மொழிக்கு முதலாகிவரும்?
34. ஞகரமெய் எவ்வுயிர்களோடு மொழிக்கு முதலாகிவரும்?

----

இறுதி நிலை

35. எகரம் ஒழிந்த பதினோருயிர்களும், ஞ், ண், ந், ம், ன், ய், ர், ல், வ், ழ், ள், என்னும் பதினொரு மெய்களுமாகிய இருபத்திரண்டெழுத்துக்களும், மொழிக்கிறுதியில் நிற்கும் எழுத்துக்களாம்.
உதாரணம்.
விள, பலா, கிளி, தீ, கடு, பூ, சே, கை, நொ, போ, வெள, உரிஞ், மண், வெரிந், மரம், பொன், காய், வேர், வேல், தெவ், யாழ், வாள்.
தேர்வு வினா


31. மொழிக்கு இறுதியில் நிற்கும் எழுத்துக்கள் எவை?



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 14, 2009 2:16 am

1. 2. பதவியல்

38. பதமாவது, த ஒரெழுத்தாலாயினும் இரண்டு முதலிய பலவெழுத்துக்களாயினும் ஆக்கப்பட்டுப் பொருளை அறிப்பதாம். ஆது, பகாப்பதமும், பகுபதமும் என இருவகைப்படும்.
---

39. பகாப்பதமாவது, பகுக்கபடாத இயல்புடைய பதமாம். ஆது, பெயர்ப்பகாப்பதம், வினைப்பகாப்பதம், இடைப் பகாப்பதம், உரிப் பகாப்பதம், என நான்கு வகைப்படும்.
உதாரணம்.
நிலம், நீர், மரம் பெயர்ப் பகாப்பதம்
நட, வா, உண் வினைப் பகாப்பதம்
மற்று, ஏ, ஓ இடைப் பகாப்பதம்
உறு, தவ, நனி உரிப் பகாப்பதம்
----

40. பனுபதமாவது, பகுக்கப்படும் இயல்பையுடைய பதமாம். அது, பெயர்ப்பகுபதம், வினைப்பகுபதம், என இருவகைப்படும். அவற்றுல், வினைப் பகுபதம், தெரிநிலை வiனைப் பகுபதம், குறிப்பு வினைப் பகுபதமும் என இருவகைப்படும்.
உதாரணம்.
பொன்னன் .. பெயர்ப் பகுபதம்
நடந்தான் .. தெரிநிலை வினைப் பகுபதம்
பெரியன் .. உரிப்பகாப்பதம்

தேர்வுவினாக்கள்

38. பதமாவது யாது?
அது எத்தனை வகைப்படும்?
39. பகாப்பதமாவது யாது? அது எத்தனை வகைப்படும்?
40. பகுபதமாவது யாது? அது எத்தனை வகைப்படும்?
வினைப் பகுபதம் எத்தனை வகைப்படும்?

----

தெரிநிலைவினையுங் குறிப்பு வினையும் பகுபதமாகும் எனவே, அவ்விருவகை வினையாலணையும் பெயர்களும் பகுபதமாகும் என்பது பெறப்படும்.

பகுதவுறுப்பு

41. பகுபதத்துக்கு உறுப்புக்கள், பகுதி, விகுதி, இடைநிலை சாரியை, சந்தி, விகாரம், என ஆறாம். புகுபதம், இ;வ்வாறுறுப்புக்களுள்ளும் பகுதி விகுதி என்னும் இரண்டு முதலியவவைகளினால் முடிவு பெறும்.
உதாரணம்.

(1) கூனி என்பது, கூன், இ எனப் பகுதி, விகுதி என்னும் இரண்டுறுப்பால் முடிந்தது.
(2) ஊண்டான் என்பது, உண், ட், ஆன் எனப் பகுதி, விகுதி, இடைநிலை என்னும் மூன்றுறுப்பால் முடிந்தது.
(3) உண்டனன் என்தது, உண், ட், அன், அன், அன், எனப் பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை என்னும் நான்குறுப்பால் முடிந்தது.
(4) பிடித்தனன் என்பது, பிடி, த், த், அன், அன், எனப் பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை, சந்தி என்னும் ஐந்துறுப்பால் முடிந்தது.
(5) நடந்தனன் என்பது, நட, த், த், அன், அன் எனப் பகுதி, முதலிய ஐந்தும் பெற்று, சந்தியால் வந்த தகர வல்லொற்று நகரமெல்லொற்றாதலாகிய விகாரமும் பெற்று, ஆறுறுப்பால் முடிந்தது.

தேர்வு வினாக்கள்
41. பகுபதத்துக்கு உறுப்புக்கள் எவை? புகுபதம் இவ்வாறுறுப்புக்களும் பெற்றே முடிவு பெறுமோ?


----

பகுதி



42. பகுதிகளாவன, பகுபதங்களின் முதலிலே நிற்கும் பகாப்பதங்களாம்.
---

43. பெயர்ப்பகுபதங்களுக்குப் பெரும்பாலும் பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில், என்னும் ஆறவகைப் பெயர்ச்சொற்களும், சிறுபான்மை சுட்டிடைச் சொற்கள், வினாவிடைச் சொற்கள், பிற மற்று என்னும் இடைச்சொற்களும், பகுதிகளாய் வரும்.
உதாரணம்.
(1) பொன்னன், நிலத்தன், தையான், பல்லன், கரியன், நடையன்.
(2) அவன், இவன், உவன், எவன், ஏவன், யாவன், பிறன், மற்றையன்.
---

44. வினைக்குறிப்பு பகுபதங்களுக்கு, மேற்சொல்லப்பட்டனவாகிய அறுவகைப் பெயர்ச்சொற்களும், இடைச்சொற்களும், பகுதிகளாய் வரும்.
உதாரணம்.
(1) பொன்னன், நிலத்தன், தையான், பல்லன், கரியன், நடையன்.
(2) ஆற்று, இற்று, எற்று
---

45. மை விகுதி புணர்ந்து நின்ற செம்மை கருமை முதலிய பண்புப் பெயர்கள், விகுதி புணரும்பொழுது, பெரும்பாலும் விகாரப்பட்டு வரும். இவை விகாரப்படுதல் பதப்புணர்ச்சிக்குங் கொள்க.
உதாரணம்.
அணியன்: இங்கே அணிமையின் மை விகுதி கெட்டது.
கரியன்: இங்கே கருமையின் மைவிகுதி கெட்டு, நடு உகரம் இகரமாய்த் திரிந்தது.
பாசி: இங்மே பசுமையின் மைவிகுதி கெட்டு, முதல் நீண்டது.
பேரறிவு: இங்மே பெருமையின் மைவிகுதியோடு நடு நின்ற உகரவுயிர் கெட்டு முதல் நீண்டது.
குருங்குதிரை: இங்கே கருமையின் மைவிகுதி கெட்டு, வரும் வல்லெழுத்திற்கு இனமெல்லெழுத்து மிகுந்தது.
பைந்தர்: இங்கே பகமையின் மை விகுதியோடு நடு நின்ற ககரவுயிர் மெய் கெட்டு, முதலகரம் ஐகாரமாய் திரிந்து, வரும் வல்லெழுத்துக்கு இன மெல்லெழுத்து மிகுந்நது.
வெற்றிலை: இங்கே வெறுமையின் மைவிகுதி கெட்டு, நடு நின்ற மெய் இரட்டித்தது.
சேதாம்பல்: இங்கே செம்மையின் மைவிகுதி கெட்டு, முதல் நீண்டு, நடு நின்ற, மகரமெய் தகரமெய்யாய்த் திரிந்தது.
---

46. தெரிநிலைவினைப் பகுபதங்களுக்குப் பெரும்பாலும் நட வா முதலிய வினைச்சொற்களும், சிறுபான்மை பெயர்ச்சொல் இடைச்சொல் உரிச்சொற்களும், பகுதிகளாய் வரும்.
உதாரணம்.
நட, நடந்தான் வினையடி
வா, வந்தான்
நில், நின்றான்
காண், கண்டான்
சித்திரம், சித்திரித்தான் பெயரடி
கடைக்கண், கடைக்கணித்தான்
போல், பொன்போன்றான் இடையடி
நிகர், புலிநிகர்த்தான்
சால், சான்றான் உரியடி
மாண், மாண்டான்
---

47. தெரிநிலைவினைப் பகுதிகள், விகுதி முதலியவற்றோடு புணரும்போது, இயல்பாகியும், விகாரமாகியும் வரும்.
உதாரணம்.
1. தொழு: தொழுதான் இயலபாகி வந்தன உண், உண்டான்
2. சேறல்: இங்கே சொல்லென்பகுதி முதல் நீண்டது.
தந்தான்: இங்கே தாவென்பகுதி முதல் குறகியது.
தருகின்றான்: இங்கே தாவென்பகுதி முதல் குறுகி, ருகரவுயிர்மெய் விரியப்பெற்றது.
செத்தான்: இங்கே சாவென்பகுதி முதலாகரம் எகராமாய்த் திரிந்தது.
விராவினான்: இங்கே விராவென்பகுதி நடுக்குறில் நீண்டது.
கொணார்ந்தான்: இங்கே கொணாவென் பகுதியீற்று நெடில் குறிகி, ரகரமெய் விரிந்தது.
கற்றான்: இங்கே கல்லென் பகுதியீற்று மெய் வருமெழுத்தாய்த் திரிந்தது.
சென்றான்: இங்கே சொல்லென் பகுதியீற்று மெய் வருமெழுத்துக்கு இனமாய்த் திரிந்தது.
----

48. தொரிநிலை வினைப்பகுதிகள், வி, பி, முதலிய விகுதி பெற்றேனும், விகாரப்பட்டேனும், விகாரப்பட்டு விகுதி பெற்றேனும், பிறவினைப் பகுதிகளாய் வரும்.
உதாரணம்.
1. செய், செய்வி, செய்வித்தான் நட, நடப்பி, நடப்பித்தான்
2. திருந்து, திருத்து, திருத்தினான் ஆடு, ஆட்டு, ஆட்டினான் தேறு, தேற்று, தேற்றினான் உருகு, உருக்கு, உருக்கினான்
3. திருத்து, திருத்துவி, திருத்துவித்தான் ஆட்டு, ஆட்டுவி, ஆட்டுவித்தான் தேற்று, தேற்றுவி, தேற்றிவித்தான் உருக்கு, உருக்குவி, உருக்குவித்தான்
----

49. பொன்னன், கரியன், முதலானவை, எட்டு வேற்றுமைகளுள் ஒன்றை யேற்கும் போது பெயர்ப்பகுபதங்களாம்: முக்காலங்களுள் ஒன்றைக் குறிப்பாகக் காட்டும்போது வினைக்குறிப்பு முற்றுப்பகுபதங்களாம்: காலங்காட்டுதலோடு வேற்றுமையேற்கும் போது குறிப்பு வினையாலணையும் பெயர்ப்பகுபதங்களாம். இவையே இம் மூன்றுக்கும் வேறுபாடம்.
---

50. நடந்தான், வந்தான், முதலானவை காலங்காட்டும் போது தெரிநிலை வினை முற்றப் பகுபதங்களாம்: காலங்காட்டுதலோடு வேற்றுமையேற்கும்போது தெரிநிலை வினையாலணையும் பெயர்ப்பகுபதங்களாம். இவையே இவ்விரண்டுக்கும் வேறுபாடாம்.


தேர்வு வினாக்கள்


42. பகுதிகளாவன யாவை?
43. பெயர்ப் பகுபதங்களுக்குப் பகுதிகள் எவை?
44. வினைக்குறிப்புப் பகுபதங்களுக்குப் பகுதிகள் எவை?
45. விகுதி புணரும் பொழுது விகாரப்பட்டு வரும் பெயர்களும் உளவோ?
46. தெரிநிலை வினைப் பகுபதங்களுக்குப் பகுதிகள் எவை?
47. தெரிநிலை வினைப்பகுதிகள் விகுதி முதலியவற்றோடு புணரும் பொழுது எப்படி வரும்?
48. தெரிநிலை வினைப்பகுதிகள் பிறவினைப் பகுதிகளாமிடத்து எப்படி வரும்?
49. பெயர்ப்பகுபதம் குறிப்பு வினைமுற்;றுப் பகுபதம் குறிப்பு வினையாலணையும் பெயர்ப்பகுபதம் என்னும் மூன்றுக்கும் வேறுபாடு என்ன?
50. தெரிநிலை வினைமுற்றுப் பகுபதம், தெரிநிலை வினையாலணையும் பெயர்ப் பகுபதம் என்னும் இரண்டுக்கும் வேறுபாடு என்ன?



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 14, 2009 2:17 am

விகுதி

51. விகுதிகளாவன, பகுபதங்களின் இறுதியிலே இடைப்பதங்களாகும்.
---

52. பெயர் விகுதிகள், அன், ஆன், மன்,மான், ன், அள்,ஆள், இ, ள், அர், ஆர், மார், கள், ர், து, அ, வை, வ், தை, கை, பி, முன், அல், என்னும் இருபத்து மூன்றும் பிறவுமாம்.
உதாரணம். குழையன், வாகத்தான், வடமன், கோமான், பிறன், குழையள், வானத்தாள், அரசி, பறள், குழையர், வானத்தார், தேவிமார், கோக்கள், பிறர், அது, குநற்தாளன, அவை, எந்தை, எங்கை, எம்பி, எம்முன், தோன்றல்.
----

53. தொழிற்பெயர்விகுதிகள், தல், அல், அம், ஐ, கை,வை, கு, பு, உ, தி, சி, வி, உள், காடு, பாடு, அரவு, ஆனை, மை, து என்னும் பத்தொன்பதும் பிறவுமாம்.
உதாரணம். நடத்தல், ஆடல், வாட்டம், கொலை, நடக்கை, பார்வை, போக்கு, நடப்பு, வரவு, மறதி, புணர்ச்சி, புலவி, விக்குள், சாக்காடு, கோட்பாடு, தோற்றரவு, வாரானை, நடவாமை, பாய்த்து என வரும்.
மை விகுதி, செய்தமை, செய்கின்றமை, என இறந்த காலவிடை நிலை, நிகழ்காலவிடை நிலைகளோடு கூடியும் வரும்.
துவ்விகுதி, அவர் செய்தது, செய்கின்றது. செய்வது என முக்கால விடைநிலைகளோடு கூடியும் வரும்.
----

54. பண்புப் பெயர்விகுதிகள், மை, ஐ, சி, பு, உ, கு, றி, று, அம், நர், என்னும் பத்தும் பிறவுமாம்.
உதாரணம். நன்மை, தொல்லை, மாட்சி, மான்பு, மழவு, நன்கு, நன்றி, நன்று, நலம், நன்னர் என வருமு;.
---

55. தெரிநிலை வினைமுற்று விகுதிகள், அன், ஆன், அள், ஆள், அர், ஆர், ப, மார், அ, ஆ, கு, டு, து, று, என், ஏன், அல், அம், ஆம், எம், ஏம், ஒம், கும், டுமு;, தும், றும், ஐ, ஆய், இ, இர், ஈர், க, இய, இயர், ஆல், ஏல், மின், உம் என்னும் முப்பெத்தெட்டும் பிறவுமாம்.
உதாரணம்.
நடந்தனன், நடந்தான், நடந்தனள், நடந்தாள், நடந்தனர், நடந்தார், நடப்ப, நடமார், நடந்தன, நடவா, உண்கு, உண்டு, நடந்தது, கூயிற்று, நடந்தெனன், நடந்தேன், நடப்பல், நடப்பம், நடப்பாம், நடப்பெம், நடப்பேம், நடப்போம், உண்கும், உண்டும், வருதும், சேறும், நடந்தனை, நடந்தாய், நடத்தி, நடந்தனிர், நடந்தீர், வாழ்க, வாழிய, வாழியர், மாறல், அழேல், நடமின், உண்ணும்.
---

56. குறிப்பு வினைமுற்று விகுதிகள், அன், ஆன், அள், ஆள், அர், ஆர், அ,
டு, து, று, என், ஏன், அம், ஆம், எம், ஏம், ஒம், ஐ, ஆய், இ, இர், ஈர், என்னும் இருபத்திரண்டும் பிறவுமாம்.
உதாரணம்.
கரியன், கரியான், கரியள், கரியாள், கரியர், கரியார், கரியன, குநற்தட்டு, கரிது, குழையிற்று, கரியென், கரியேன், கரியம், கரியாம், கரியெம், கரியேம், கரியோம், கரியை, கரியாய், வில்லி, கரியிர், கரியீர்.
---

57. தெரிநிலை வினைப் பெயரெச்ச விகுதிகள், அ, உம், என்னும் இரண்டுமாம்.
உதாரணம்.
செய்த, செய்கின்ற் செய்யும்.
குறிப்பு வினைப்பெயரெச்சவிகுதி, அ ஒன்றேயாம். உம், விகுதி, இடைநிலையேலாது, தானே எதிர்காலங்காட்டலாற் குறிப்பு வiனைப் பெயரெச்சத்துக்கு வாராது.
உதாரணம். கரிய
---

58. தெரிநிலைவினை வினையெச்ச விகுதிகள், உ, இ, ய், பு, ஆ, ஊ, என, அ, இன், ஆல், கால், ஏல், எனின், ஆயின், ஏனும், கு, இய, இயர், வான், பான், பாக்கு, கடை, வழி, இடத்து, உம், மல், மை, மே என்னும் இருபத்தெட்டும் பிறவுமாம். இவற்றுள், இறுதியிற்கூறிய மல், மை, மே என்னும் மூன்று விகுதிகளும் எதிர்மறையில் வரும்.
உதாரணம்.
நடந்து, ஒடி, போய், உண்குபு, உண்ணா, உண்ணுh, உண்ணென, உண்ண, உண்ணின், உண்டால், உண்டகடகால், உண்டானேல், உண்டானெனின், உண்டானாயின், உண்டானெனும், உணற்கு, உண்ணிய, உண்ணியர், வருவான், உண்பான், உண்பாக்கு, செய்தக்கடை, செய்தவழி, செய்தவிடத்து, காண்டலும், உண்ணாமல், உண்ணாமை, உண்ணாமே.
குறிப்பு வினை வினையெச்ச விகுதிகள், அ, றி, து, ஆல், மல், கடை, வழி, இடத்து, என்னும் எட்டும் பிறவுமாம்.
உதாரணம்.
மெல்ல, அன்றி, அல்லது, அல்லால், அல்லாமல், அல்லாக்கடை, அல்லாவழி, அல்லாவிடத்து.
----

59. பிறவினை விகுதிகள், வி, பி, கு, சு, டு. து, பு, று என்னம் எட்டுமாம்.
உதாரணம்.
செய்வி, நடப்பி, போக்கு, பாய்ச்சு, உருட்டு, நடத்து, எழுப்பு, துயிற்று.
---

60. இ, ஐ, அம் என்னும் மூன்று விகுதிகளும், வினைமுதற்பொருளையுஞ் செயற்படு பொருளையும் கருவிப்பொருளையும் உணர்த்தும்.
உதாரணம்.
1. அலரி, பறவை, எச்சம், என்பன வினைமுதற்பொருளை உணர்த்தின. இவை முறையே, அலர்வது, பறப்பது, எஞ்சுவது, எனப் பொருள் படும்.
2. ஊருணி, தொடை, தேட்டம், என்பன செயற்படு பொருளை உணர்த்தின. இவை முறையே, ஊராலுண்ணப் படுவது, தொடுக்கப்படுவது, தேடபபடுவது எஎனப்பொருள்படும்.
3. மண்வெட்டி, பார்வை, நோக்கம், என்பன, கருவிப்பொருளை, உணர்த்தின. இவை முறையே, டண்வெட்டற்கருவி, பார்த்தற் கருவி, நோக்கற்கருவி எனப் பொருள்படும்.
----

61. இதுவரையுங் கூறிய விகுதிகளேயன்றிப் பிற விகுதிகளும் உண்டு. அவை வருமாறு:-
விடு, ஒழி, விகுதிகள், துணிவுப்பொருளை உணர்த்தும்.
உதாரணம்.
வந்துவிட்டான், கெட்டொழிந்தான், என வரும்.
கொள்விகுதி, தற்பொருட்டுப் பொருள் உணர்த்தும்.
உதாரணம்.
அடித்துக்கொண்டான்.
படு, உண், விகுதிகள் செயப்பாட்டு வினைப்பொருள் உணர்த்தும்.
உதாரணம்.
கட்டப்பட்டான், கட்டுண்டான்.
மை விகுதி தன்மைப்பொருள் உணர்த்தும்.
உதாரணம்.
பொன்மை, ஆண்மை
இரு, இடு, என்பன, தமக்கென வேறுபொருள் இன்றிப் பகுதிப்பொருள் இன்றிப் பகுதிப்பொருள் விகுதியாய் வரும்.
உதாரணம். எழுசந்திருக்கின்றான், உரைத்திடுக்கின்றான்.

தேர்வு வினாக்கள்

51. விகுதிகளாவன யாவை?
52. பெயர் விகுதிகள் எவை?
53. தொழிற்பெயர் விகுதிகள் எவை?
54. பண்புப்பெயர் விகுதிகள் எவை?
55. தெரிநிலை வினைமுற்று விகுதிகள் எவை?
56. குறிப்பு வினைமுற்று விகுதிகள் எவை?
57. தெரிநிலை விiனாப் பெயரெச்ச விகுதிகள் எவை?
58. தெரிநிலை வினை வினையெச்ச விகுதிகள் எவை?
குறிப்புவினை வினையெச்ச விகுதிகள் எவை?
59. பிறவினை விகுதிகள் எவை? 60. வினை முதற்பொருள் செயற்படு பொருள் கருவிப்பொருள்களை உணர்த்தும் விகுதிகள் எவை?
61. துணிவுப் பொருளுணர்த்தும் விகுதிகள் எவை?
தற்பொருட்டுப் பொருளுணர்த்தும் விகுதி எது?
செயற்பாட்டு வினைப்பொருளுணர்த்தும் விகுதிகள் எவை?
தன்மைப்பொருளுணர்த்தும் விகுதி எது? பகுதிப்பொருள் விகுதிகள் எவை?



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 14, 2009 2:20 am

புணர்ந்து கெடும் விகுதி

62. முன்னிலையேவலொருமை ஆய் விகுதியும், பெயெரெச்ச விகுதியும், தொழிற்பெயர் விகுதியும், வினைமுதற் பொருளை உணர்த்தும் ஐ விகுதியும், பகுதியோடு புணர்ந்து நின்றாற் போலவே தம்பொருளை உணர்த்தும்.
உதாரணம். நீ, நட, நீ நடப்பி: இவைகளிலே ஆய் விகுதி புணர்ந்து கெட்டது.
கொல்களிறு, ஒடாக்குதிரை: இவைகளிலே பெயரெச்ச விகுதிகள் புணர்ந்து கெட்டன.
அடி, கேடு, இடையீடு : இவைகளிலே தல்லென்னுந் தொழிற்பெயர் விகுதி புணர்ந்து கெட்டது.
காய், தளிர், பூ, கனி : இவைகளிலே வினைமுதற் பொருளை உணர்த்தும் இகரவிகுதி புணர்ந்து கெட்டது.
ஊண், தீன், எழுத்து : இவைகளிலே செயப்படு பொருளை உணர்த்தும் ஐ விகுதி புணர்ந்து கெட்டது.

தேர்வு வினா

62. பகுதியோடு புணர்ந்து பின்கெடும் விகுதிகள் எவை?


---

இடைநிலை

63.இடைநிலைகளாவன, பகுபதங்களிலே பகுதிக்கும் விகுதிக்கும் நடுவிலே நிற்கும் இடைப்பகாப்பதங்களாம். அவை, காலங்காட்டாவிடைநிலையும், காலங்காட்டுமிடைநிலையும் என இரண்டு வகைப்படும்.
---

64. காலங்காட்டாவிடைநிலைகள் பெயர்ப்பகுபதங்களுக்கு வரும்.
உதாரணம்.
அறிஞன் .. ஜஞஇடைநிலைஸ
ஒதுவான் .. ஜவ இடைநிலைஸ
வலைச்சி .. ஜச இடைநிலைஸ
வண்ணாத்தி .. ஜத இடைநிலைஸ
---

65. காலங்காட்டுமிடைநிலைகள் தெரிநிலைவினைப் பகுபதங்களுக்கு வரும்.
அவை, இறந்தகாலவிடைநிலையும், நிகழ்காலவிடைநிலையும், எதிர்காலவிடைநிலையும் என, மூன்று வகைப்படும்.
---

66. இறந்தகாலவிடைநிலைகள், த், ட், ற், இன், என்னும் நான்குமாம்.
உதாரணம்.
செய்தான், உண்டான், தின்றான், ஓடினான்.
சிறுபான்மை இன்னிடைநிலை, போனான், என இகரங்குறைந்தும், எஞ்சியது என னகர மெய் குறைந்தும் வரும். பேயாது என யகரமெய் இறந்தகாலவிடைநிலையாயும் வரும்.
---

67. நிகழ்காலவிடைநிலைகள், ஆநின்று, கின்று, கிறு என்னும் மூன்றுமாம்.
உதாரணம்.
நடவாநின்றான், நடக்கின்றான், நடக்கிறான்.
---

68. எதிர்கால விடைநிலைகள், ப், வ், என்னும் இரண்டுமாம்.
உதாரணம்.
நடப்பான், செய்வான்.

தேர்வு வினாக்கள்

62. இடைநிலைகளாவன யாவை?
63. அவை எடதனை வகைப்படும்?
64. காலங்காட்ட விடைநிலைகள் எப்பகுபதங்களுக்கு வரும்?
65. காலங்காட்டுமிடைநிலைகள் எப்பகுபதங்களுக்கு வரும்?
ஆவை எத்தனை வகைப்படும்?
66. இறந்தகால விடைநிலைகள் எவை?
67. நிகழ்கால விடைநிலைகள் எவை?
68. எதிர்கால விடைநிலைகள் எவை?

------

எதிர்மறையிடைநிலை

69. இல், அல், ஆ, என்னும் மூன்றும் எதிர்மறை யிடைநிலைகளாம். இவற்றுள், ஆகாரவிடைநிலை, வருமெழுத்து மெய்யாயிற் கெடாதும், உயிறாய்க்கெட்டும் கெட்டும் வரும்.
உதாரணம்.
நடந்திலன், நடக்கின்றிலன், நடக்கலன், நடவாதான், நடவான், நடவேன்.
நடவாதான் என்பதிலே தகரமெய் எழுத்துப்பேறு.

தேர்வு வினாக்கள்

69. எதிர்மறையிடைநிலைகள் எவை?
ஏதிர்மறை ஆகாரவிடைநிலை எங்கே கெடதும், எங்கே கெட்டும் வரும்?

----

காலங்காட்டும் விகுதி

70. சில விகுதிகள், இடைநிலையேலாது, தாமே காலங்காட்டும், அவை வருமாறு:-
து, தும், று, றும் என்னும் விகுதிகள் இறந்தகாலமும், எதிர்காலமுங்காட்டும்.
உதாரணம்.
வந்து, (-வந்தேன்), வந்தும், (-வந்தேம்) வருது, (-வருவேன்) வருதும், (-வருவேம்) எ-ம்.
சென்று, (-சென்றேன்) சென்றும், (-சென்றேம்) சேறு, (-செல்வேன்) சேறும், (-செல்வேம்) எ-ம். வரும்.
கு, கும் என்னும் விகுதிகள் எதிர்காலங் காட்டும்.
உதாரணம்.
உண்கு, (-உண்பேன்) உண்கும், (-உண்பேம்) என வரும்
டு, டும் என்னும் விகுதிகள் இறந்தகாலங் காட்டும்.
உதாரணம்.
உண்டு, (-உண்டேன்) உண்டும், (-உண்டேம்) என வரும்.
இ என்னும் முன்னிலை வினைமுற்று விகுதி யொன்றும், ப, மர், என்னும் படர்க்கை வினைமுற்று விகுதியிரண்டும், க, இய, இயர், அல், என்னும் வியங்கோண் முற்று விகுதுp நான்கும், ஆய், இ, ஆல், ஏல், காண், மின், உம், ஈர், என்னும் முன்னிலையேவன்முற்று விகுதியேழும், ஆகிய பதிநான்கு விகுதிகளும் எதிர்காலங்காட்டும்.
உதாரணம்.
(1). சேறி, (-செல்வாய்) (2) நடப்ப, (-நடப்பார்) நடமார், (-நடப்பார்) (3) வாழ்க, வாழிய, வாழியர், உண்ணல் (4) நடவாய், உண்ணுதி, மாறல், அழேல், சொல்லிக்காண், நடமின், உண்ணும், உண்ணீர்.
உம்
என்னஞ் செய்யுமன் முற்று விகுதி நிகழ்காhலமும் எதிர்காலமுங் காட்டும்.
உதாரணம்.
உண்ணும்
எச்சவிகுதிகள் காலங்காட்டல் வினையியலிற் கண்டு கொள்க.

தேர்வுவினாக்கள்

70. இடைநிலையேலாது தாமே காலங்காட்டும் விகுதிகள் உளவோ?
து, தும், று, றும், விகுதிகள் எக்காலங் காட்டும்?, கு, கும், விகுதிகள் எக்காலங் காட்டும்?
டு, டும் விகுதிகள் எக்காலங் காட்டும்? ஏதிர்காலங்காட்டும்? வேறு விகுதிகள் உளவோ? உம் என்னுஞ் செய்யுமென் முற்று விகுதி எக்காhலங் காட்டும்?

------

காலங்காட்டும் பகுதி

71. கு, டு, று, என்னும் மூன்னுயிர்மெய்களை இறுதியாக உடைய சில குறிலிணைப் பகுதிகள் விகாரப்பட்டு இறந்த காலங்காட்டும்.
உதாரணம்.
புக்கான், விட்டான், பெற்றான்.

தேர்வு வினா

71. காலங்காட்டும் பகுதிகள் உளவோ?

----

சாரியை

72. சாரியைகள், அன், ஆன், அம், ஆம், அல், அத்து, அற்று, இன், இற்று, தன், தான், தம், தாம், நம்,நும், அ, ஆ, உ, ஏ, ஐ, கு, து, ன் என்னும் இருபத்து மூன்றும் பிறவுமாம்.
உதாரணம்.
நடந்தனன், ஒருபற்கு, புளியங்காய், புற்றாஞ்சோறு, தொடையல், அகத்தன், பலவற்றை, வய்டின் கால், பதிற்றுப் பத்து, அவன்றன்னை, அவன்றான், அவர்தம்மை, அவர்தாம், எல்லாநம்மையும், எல்லீர் நும்மையும், நடந்தது, இல்லாப்பொருள், உண்ணுவான், செய்து கொண்டான், ஆன்.

தேர்வு வினா

72. சாரியைகளென்பன எவை?

------



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 14, 2009 2:25 am

சந்தி

73. சந்திகளாவன, புணரியலிற் சொல்லப்டுவன வாகிய தோன்றல் முதலிய புணர்ச்சி விகாரங்களாம்.


தேர்வு வினா


73. சந்திகளாவன எவை?

----


விகாரம்


74. விகாரங்களாவன, மெல்லின மெய்யை வல்லின மெய்யாக்கலும், குற்றெழுத்தை நெட்டெழுத்தாக்களும், நெட்டெழுத்தை கற்றெழுத்தாக்கலும், இல்லாத எழுத்தை விரித்தலும், உள்ள எழுத்தை தொகுத்தலும் ஆம்.

தேர்வு வினா

74. வகாரங்களாவன எவை?

பதவியல் முற்றிற்று




[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 1 of 10 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக