புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் இலக்கியத்திலிருந்து சுவை மிகுந்த காட்சிகள் I_vote_lcapதமிழ் இலக்கியத்திலிருந்து சுவை மிகுந்த காட்சிகள் I_voting_barதமிழ் இலக்கியத்திலிருந்து சுவை மிகுந்த காட்சிகள் I_vote_rcap 
81 Posts - 68%
heezulia
தமிழ் இலக்கியத்திலிருந்து சுவை மிகுந்த காட்சிகள் I_vote_lcapதமிழ் இலக்கியத்திலிருந்து சுவை மிகுந்த காட்சிகள் I_voting_barதமிழ் இலக்கியத்திலிருந்து சுவை மிகுந்த காட்சிகள் I_vote_rcap 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
தமிழ் இலக்கியத்திலிருந்து சுவை மிகுந்த காட்சிகள் I_vote_lcapதமிழ் இலக்கியத்திலிருந்து சுவை மிகுந்த காட்சிகள் I_voting_barதமிழ் இலக்கியத்திலிருந்து சுவை மிகுந்த காட்சிகள் I_vote_rcap 
9 Posts - 8%
mohamed nizamudeen
தமிழ் இலக்கியத்திலிருந்து சுவை மிகுந்த காட்சிகள் I_vote_lcapதமிழ் இலக்கியத்திலிருந்து சுவை மிகுந்த காட்சிகள் I_voting_barதமிழ் இலக்கியத்திலிருந்து சுவை மிகுந்த காட்சிகள் I_vote_rcap 
4 Posts - 3%
sureshyeskay
தமிழ் இலக்கியத்திலிருந்து சுவை மிகுந்த காட்சிகள் I_vote_lcapதமிழ் இலக்கியத்திலிருந்து சுவை மிகுந்த காட்சிகள் I_voting_barதமிழ் இலக்கியத்திலிருந்து சுவை மிகுந்த காட்சிகள் I_vote_rcap 
1 Post - 1%
viyasan
தமிழ் இலக்கியத்திலிருந்து சுவை மிகுந்த காட்சிகள் I_vote_lcapதமிழ் இலக்கியத்திலிருந்து சுவை மிகுந்த காட்சிகள் I_voting_barதமிழ் இலக்கியத்திலிருந்து சுவை மிகுந்த காட்சிகள் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் இலக்கியத்திலிருந்து சுவை மிகுந்த காட்சிகள் I_vote_lcapதமிழ் இலக்கியத்திலிருந்து சுவை மிகுந்த காட்சிகள் I_voting_barதமிழ் இலக்கியத்திலிருந்து சுவை மிகுந்த காட்சிகள் I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
தமிழ் இலக்கியத்திலிருந்து சுவை மிகுந்த காட்சிகள் I_vote_lcapதமிழ் இலக்கியத்திலிருந்து சுவை மிகுந்த காட்சிகள் I_voting_barதமிழ் இலக்கியத்திலிருந்து சுவை மிகுந்த காட்சிகள் I_vote_rcap 
221 Posts - 37%
mohamed nizamudeen
தமிழ் இலக்கியத்திலிருந்து சுவை மிகுந்த காட்சிகள் I_vote_lcapதமிழ் இலக்கியத்திலிருந்து சுவை மிகுந்த காட்சிகள் I_voting_barதமிழ் இலக்கியத்திலிருந்து சுவை மிகுந்த காட்சிகள் I_vote_rcap 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழ் இலக்கியத்திலிருந்து சுவை மிகுந்த காட்சிகள் I_vote_lcapதமிழ் இலக்கியத்திலிருந்து சுவை மிகுந்த காட்சிகள் I_voting_barதமிழ் இலக்கியத்திலிருந்து சுவை மிகுந்த காட்சிகள் I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தமிழ் இலக்கியத்திலிருந்து சுவை மிகுந்த காட்சிகள் I_vote_lcapதமிழ் இலக்கியத்திலிருந்து சுவை மிகுந்த காட்சிகள் I_voting_barதமிழ் இலக்கியத்திலிருந்து சுவை மிகுந்த காட்சிகள் I_vote_rcap 
18 Posts - 3%
prajai
தமிழ் இலக்கியத்திலிருந்து சுவை மிகுந்த காட்சிகள் I_vote_lcapதமிழ் இலக்கியத்திலிருந்து சுவை மிகுந்த காட்சிகள் I_voting_barதமிழ் இலக்கியத்திலிருந்து சுவை மிகுந்த காட்சிகள் I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
தமிழ் இலக்கியத்திலிருந்து சுவை மிகுந்த காட்சிகள் I_vote_lcapதமிழ் இலக்கியத்திலிருந்து சுவை மிகுந்த காட்சிகள் I_voting_barதமிழ் இலக்கியத்திலிருந்து சுவை மிகுந்த காட்சிகள் I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
தமிழ் இலக்கியத்திலிருந்து சுவை மிகுந்த காட்சிகள் I_vote_lcapதமிழ் இலக்கியத்திலிருந்து சுவை மிகுந்த காட்சிகள் I_voting_barதமிழ் இலக்கியத்திலிருந்து சுவை மிகுந்த காட்சிகள் I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தமிழ் இலக்கியத்திலிருந்து சுவை மிகுந்த காட்சிகள் I_vote_lcapதமிழ் இலக்கியத்திலிருந்து சுவை மிகுந்த காட்சிகள் I_voting_barதமிழ் இலக்கியத்திலிருந்து சுவை மிகுந்த காட்சிகள் I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
தமிழ் இலக்கியத்திலிருந்து சுவை மிகுந்த காட்சிகள் I_vote_lcapதமிழ் இலக்கியத்திலிருந்து சுவை மிகுந்த காட்சிகள் I_voting_barதமிழ் இலக்கியத்திலிருந்து சுவை மிகுந்த காட்சிகள் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் இலக்கியத்திலிருந்து சுவை மிகுந்த காட்சிகள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 14, 2009 1:33 am

சங்க காலத்திற்குப் பின் தோன்றிய நூல்களில் மிகவும் சுவையான காவியம் சிலப்பதிகாரம். படிக்கப் படிக்கத் தெவிட்டாத நூல். இதனால் தான் 'சொற்றேரின் சாரதி'யாம் 'பாரதி' தன் கவிதையில் "நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம்" என்று புகழ்கிறார். இந்தச் சிலப்பதிகாரத்தில் ஏராளமான அரிய செய்திகள் உள்ளன.

இதனைத் தமிழ் இலக்கியத்தின் 'என்சைக்ளோபீடியா' (கலைக் களஞ்சியம்) என்றால் மிகையல்ல. இதனை எழுதிய இளங்கோவடிகள் நமக்குப் பொற்கைப் பாண்டியனின் கதையை வழங்குகிறார். பாண்டிய மன்னன் ஒருவனுக்கு அறுவைச் சிகிச்சை நடந்து, செயற்கைக் கை பொருத்தப்பட்ட செய்தியை இதிலிருந்து ஊகிக்கலாம். அக்காலத் தமிழகத்தில் மருத்துவ விஞ்ஞானம் எந்த அளவுக்கு முன்னேறியிருந்தது என்பதற்கு இது ஒரு நல்ல சான்று.

பொற்கைப் பாண்டியனின் (PANDYA WITH THE GOLD HAND) கதையைப் பலரும் அறிந்திருப்பார்கள். கீரந்தை என்ற அந்தணன் வெளியூர் செல்ல நேரிட்டது. அவன் மனைவியோ தனியாக வசிக்கப் பயப்படுகிறாள். அவனோ "அன்பே, அஞ்சாதே, செங்கோல் வழுவாத பாண்டியனின் ஆட்சியில் ஒரு தவறும் நிகழா" என்று ஆறுதல் கூறுகிறான்.

அந்தணன் இவ்வாறு கூறுவதை இரவு நேரத்தில் மாறு வேடத்தில் உளவறிய வந்த பாண்டிய மன்னன் கேட்டு விட்டான். இதன் காரணமாகத் தினமும் அவ்வீட்டைக் கவனித்துச் சிறப்புப் பாதுகாப்புக் கொடுத்தான். ஒரு நாள் இரவில் திடீரென்று அந்த வீட்டில் ஒரு ஆணின் குரல் கேட்டது. உண்மையில் அது அந்தப் பெண்ணின் கணவன் 'கீரந்தை' தான். அவன் வெளியூரிலிருந்து திரும்பி வந்ததை அறியாத அரசன், அவசரப்பட்டு ஆராயாமல் கதவைத் தட்டி விட்டான்.

உள்ளேயிருந்த அந்தணன் கீரந்தை "யாரது?" என்று கேட்க அவன் மனைவி "பாண்டியன் ஆட்சியில் ஒன்றும் தவறு நிகழா என்றீர்களே, பாருங்கள், இரவில் யாரோ கதவைத் தட்டுகிறார்களே!" என்று கூறுகிறாள். உடனே அரசன் அவர்களுடய அச்சத்தைப் போக்குவதற்காக அந்தணர் தெருவிலுள்ள அத்தனை வீடுகளின் கதவுகளையும் தட்டிவிட்டு அரண்மனக்குச் சென்று விடுகிறான்.

மறுநாள் காலையில் அந்தணர்கள் அனைவரும் அரசவைக்கு வந்து முறையிடவே, கதவைத் தட்டிய 'கயவன்' தானே என்று கூறிய அரசன், தன் கையைத் தானே வெட்டிக் கொள்கிறான்.

அரசனின் நேர்மையை அனைவரும் பாராட்டுகின்றனர். உடனே அரசவை மருத்துவர்கள் அரசனுக்கு அறுவைச் சிகிச்சை (OPERATION) மூலம் பொற்கையைப் (GOLD HAND) பொருத்துகின்றனர். அன்று முதல் அந்தப் பாண்டியனுக்குப் 'பொற்கைப் பாண்டியன்' என்று பெயர். இது உரையாசிரியர்கள் தரும் தகவல். அக்காலத் தமிழகம் மருத்துவ விஞ்ஞானத்தில் முன்னேறியிருந்ததால் பாண்டியனுக்குச் செயற்கையாகச் செய்த தங்கக் கையைப் பொருத்தினர். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்நிகழ்ச்சியைச் "சிலப்பதிகாரம்" யாத்த இளங்கோவும் "பழமொழி நானூறு" எழுதிய மூன்றுரை அரையனாரும் கூறுகின்றனர்.

"உதவா வாழ்க்கைக் கீரந்தை மனைவி
புதவக் கதவம் புடைத்தனன் ஓர் நாள்
அரச வேலி யல்ல தியாவதும்
புரைதீர் வேலி யில்லென மொழிந்து
மன்றத் திருத்திச் சென்றீர் அவ்வழி,
இன்றவ் வேலி காவா தோவெனச்
செவிச் சூட்டாணியிற் புகையழல் பொத்தி
நெஞ்சஞ் சுடுதலின் அஞ்சி நடுக்குற்று,
வச்சிரத் தடக்கை அமரர் கோமான்
உச்சிப் பொன்முடி ஒளிவளை உடைத்தகை
குறைத்த செங்கோல் குறையாக் கொற்றத்து
இறைக்குடிப் பிறந்தோர்க்கு ..."


(மதுரைக் காண்டம், கட்டுரைக் காதை, சிலப்பதிகாரம்)

பழமொழிப் பாடலும் இதே கதையைத் தெரிவிக்கிறது.

"எனக்குத் தகவன்றால் என்பதே நோக்கித்
தனக்குக் கரியாவான் தானாய்த் - தவற்றை
நினத்துத்தன் கை குறைத்தான் தென்னவனும் காணார்
எனச் செய்தார் மாணா வினை."


- பழமொழி நானூறு

இன்னுமொரு பாட்டில் பொற்கைப் பாண்டியன் என்ற பெயரே குறிப்பிடப்படுகிறது.

"நாடு விளங்கொண்புகழ் நடுதல் வேண்டித் தன்
ஆடு மழைத் தடக்கை யறுத்து முறை செய்த
பொற்கை நறுந்தார்ப் புனைதேர்ப் பாண்டியன்"


வாழ்க தென்னவன் புகழ்! வளர்க மருத்துவ அறிவியல்!

@நிலாச்சாரல்



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Sep 14, 2009 1:44 am

ஷிவா அண்ணா ..நீங்க போடும் இத்தகவல்கள் ..எனக்கு கொஞ்சம் கஷ்டமாக இருக்கின்றது படிக்க ..அதனால் என் கருத்தை சரியாக கூர முடியாததை இட்டு வருந்துகிறேன் சாரி அண்ணா
பொற்கைப் பாண்டியனின் கதை புரிந்தது..சிறப்பானதே..கீழ் உள்ள கவிதையா அது புரியவே இல்லை..



[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 14, 2009 1:47 am

கவிதையல்ல! மதுரைக் காண்டம், கட்டுரைக் காதை, சிலப்பதிகாரம்



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Sep 14, 2009 1:50 am

சிவா wrote:கவிதையல்ல! மதுரைக் காண்டம், கட்டுரைக் காதை, சிலப்பதிகாரம்

ஓஓஓஓஒ இவை எல்லாம் எனக்கு தெரியவே தெரியாது அண்ணா ..



[You must be registered and logged in to see this link.]
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Dec 03, 2011 10:44 pm

சிறு வயதில் படித்தது...மீண்டும் படிக்க இனிக்கிறது மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக