புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் இலக்கியத்திலிருந்து சுவை மிகுந்த காட்சிகள் Poll_c10தமிழ் இலக்கியத்திலிருந்து சுவை மிகுந்த காட்சிகள் Poll_m10தமிழ் இலக்கியத்திலிருந்து சுவை மிகுந்த காட்சிகள் Poll_c10 
21 Posts - 70%
heezulia
தமிழ் இலக்கியத்திலிருந்து சுவை மிகுந்த காட்சிகள் Poll_c10தமிழ் இலக்கியத்திலிருந்து சுவை மிகுந்த காட்சிகள் Poll_m10தமிழ் இலக்கியத்திலிருந்து சுவை மிகுந்த காட்சிகள் Poll_c10 
6 Posts - 20%
viyasan
தமிழ் இலக்கியத்திலிருந்து சுவை மிகுந்த காட்சிகள் Poll_c10தமிழ் இலக்கியத்திலிருந்து சுவை மிகுந்த காட்சிகள் Poll_m10தமிழ் இலக்கியத்திலிருந்து சுவை மிகுந்த காட்சிகள் Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
தமிழ் இலக்கியத்திலிருந்து சுவை மிகுந்த காட்சிகள் Poll_c10தமிழ் இலக்கியத்திலிருந்து சுவை மிகுந்த காட்சிகள் Poll_m10தமிழ் இலக்கியத்திலிருந்து சுவை மிகுந்த காட்சிகள் Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
தமிழ் இலக்கியத்திலிருந்து சுவை மிகுந்த காட்சிகள் Poll_c10தமிழ் இலக்கியத்திலிருந்து சுவை மிகுந்த காட்சிகள் Poll_m10தமிழ் இலக்கியத்திலிருந்து சுவை மிகுந்த காட்சிகள் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் இலக்கியத்திலிருந்து சுவை மிகுந்த காட்சிகள் Poll_c10தமிழ் இலக்கியத்திலிருந்து சுவை மிகுந்த காட்சிகள் Poll_m10தமிழ் இலக்கியத்திலிருந்து சுவை மிகுந்த காட்சிகள் Poll_c10 
213 Posts - 42%
heezulia
தமிழ் இலக்கியத்திலிருந்து சுவை மிகுந்த காட்சிகள் Poll_c10தமிழ் இலக்கியத்திலிருந்து சுவை மிகுந்த காட்சிகள் Poll_m10தமிழ் இலக்கியத்திலிருந்து சுவை மிகுந்த காட்சிகள் Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
தமிழ் இலக்கியத்திலிருந்து சுவை மிகுந்த காட்சிகள் Poll_c10தமிழ் இலக்கியத்திலிருந்து சுவை மிகுந்த காட்சிகள் Poll_m10தமிழ் இலக்கியத்திலிருந்து சுவை மிகுந்த காட்சிகள் Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழ் இலக்கியத்திலிருந்து சுவை மிகுந்த காட்சிகள் Poll_c10தமிழ் இலக்கியத்திலிருந்து சுவை மிகுந்த காட்சிகள் Poll_m10தமிழ் இலக்கியத்திலிருந்து சுவை மிகுந்த காட்சிகள் Poll_c10 
21 Posts - 4%
prajai
தமிழ் இலக்கியத்திலிருந்து சுவை மிகுந்த காட்சிகள் Poll_c10தமிழ் இலக்கியத்திலிருந்து சுவை மிகுந்த காட்சிகள் Poll_m10தமிழ் இலக்கியத்திலிருந்து சுவை மிகுந்த காட்சிகள் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
தமிழ் இலக்கியத்திலிருந்து சுவை மிகுந்த காட்சிகள் Poll_c10தமிழ் இலக்கியத்திலிருந்து சுவை மிகுந்த காட்சிகள் Poll_m10தமிழ் இலக்கியத்திலிருந்து சுவை மிகுந்த காட்சிகள் Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
தமிழ் இலக்கியத்திலிருந்து சுவை மிகுந்த காட்சிகள் Poll_c10தமிழ் இலக்கியத்திலிருந்து சுவை மிகுந்த காட்சிகள் Poll_m10தமிழ் இலக்கியத்திலிருந்து சுவை மிகுந்த காட்சிகள் Poll_c10 
8 Posts - 2%
Guna.D
தமிழ் இலக்கியத்திலிருந்து சுவை மிகுந்த காட்சிகள் Poll_c10தமிழ் இலக்கியத்திலிருந்து சுவை மிகுந்த காட்சிகள் Poll_m10தமிழ் இலக்கியத்திலிருந்து சுவை மிகுந்த காட்சிகள் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தமிழ் இலக்கியத்திலிருந்து சுவை மிகுந்த காட்சிகள் Poll_c10தமிழ் இலக்கியத்திலிருந்து சுவை மிகுந்த காட்சிகள் Poll_m10தமிழ் இலக்கியத்திலிருந்து சுவை மிகுந்த காட்சிகள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
தமிழ் இலக்கியத்திலிருந்து சுவை மிகுந்த காட்சிகள் Poll_c10தமிழ் இலக்கியத்திலிருந்து சுவை மிகுந்த காட்சிகள் Poll_m10தமிழ் இலக்கியத்திலிருந்து சுவை மிகுந்த காட்சிகள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் இலக்கியத்திலிருந்து சுவை மிகுந்த காட்சிகள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 14, 2009 1:33 am

சங்க காலத்திற்குப் பின் தோன்றிய நூல்களில் மிகவும் சுவையான காவியம் சிலப்பதிகாரம். படிக்கப் படிக்கத் தெவிட்டாத நூல். இதனால் தான் 'சொற்றேரின் சாரதி'யாம் 'பாரதி' தன் கவிதையில் "நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம்" என்று புகழ்கிறார். இந்தச் சிலப்பதிகாரத்தில் ஏராளமான அரிய செய்திகள் உள்ளன.

இதனைத் தமிழ் இலக்கியத்தின் 'என்சைக்ளோபீடியா' (கலைக் களஞ்சியம்) என்றால் மிகையல்ல. இதனை எழுதிய இளங்கோவடிகள் நமக்குப் பொற்கைப் பாண்டியனின் கதையை வழங்குகிறார். பாண்டிய மன்னன் ஒருவனுக்கு அறுவைச் சிகிச்சை நடந்து, செயற்கைக் கை பொருத்தப்பட்ட செய்தியை இதிலிருந்து ஊகிக்கலாம். அக்காலத் தமிழகத்தில் மருத்துவ விஞ்ஞானம் எந்த அளவுக்கு முன்னேறியிருந்தது என்பதற்கு இது ஒரு நல்ல சான்று.

பொற்கைப் பாண்டியனின் (PANDYA WITH THE GOLD HAND) கதையைப் பலரும் அறிந்திருப்பார்கள். கீரந்தை என்ற அந்தணன் வெளியூர் செல்ல நேரிட்டது. அவன் மனைவியோ தனியாக வசிக்கப் பயப்படுகிறாள். அவனோ "அன்பே, அஞ்சாதே, செங்கோல் வழுவாத பாண்டியனின் ஆட்சியில் ஒரு தவறும் நிகழா" என்று ஆறுதல் கூறுகிறான்.

அந்தணன் இவ்வாறு கூறுவதை இரவு நேரத்தில் மாறு வேடத்தில் உளவறிய வந்த பாண்டிய மன்னன் கேட்டு விட்டான். இதன் காரணமாகத் தினமும் அவ்வீட்டைக் கவனித்துச் சிறப்புப் பாதுகாப்புக் கொடுத்தான். ஒரு நாள் இரவில் திடீரென்று அந்த வீட்டில் ஒரு ஆணின் குரல் கேட்டது. உண்மையில் அது அந்தப் பெண்ணின் கணவன் 'கீரந்தை' தான். அவன் வெளியூரிலிருந்து திரும்பி வந்ததை அறியாத அரசன், அவசரப்பட்டு ஆராயாமல் கதவைத் தட்டி விட்டான்.

உள்ளேயிருந்த அந்தணன் கீரந்தை "யாரது?" என்று கேட்க அவன் மனைவி "பாண்டியன் ஆட்சியில் ஒன்றும் தவறு நிகழா என்றீர்களே, பாருங்கள், இரவில் யாரோ கதவைத் தட்டுகிறார்களே!" என்று கூறுகிறாள். உடனே அரசன் அவர்களுடய அச்சத்தைப் போக்குவதற்காக அந்தணர் தெருவிலுள்ள அத்தனை வீடுகளின் கதவுகளையும் தட்டிவிட்டு அரண்மனக்குச் சென்று விடுகிறான்.

மறுநாள் காலையில் அந்தணர்கள் அனைவரும் அரசவைக்கு வந்து முறையிடவே, கதவைத் தட்டிய 'கயவன்' தானே என்று கூறிய அரசன், தன் கையைத் தானே வெட்டிக் கொள்கிறான்.

அரசனின் நேர்மையை அனைவரும் பாராட்டுகின்றனர். உடனே அரசவை மருத்துவர்கள் அரசனுக்கு அறுவைச் சிகிச்சை (OPERATION) மூலம் பொற்கையைப் (GOLD HAND) பொருத்துகின்றனர். அன்று முதல் அந்தப் பாண்டியனுக்குப் 'பொற்கைப் பாண்டியன்' என்று பெயர். இது உரையாசிரியர்கள் தரும் தகவல். அக்காலத் தமிழகம் மருத்துவ விஞ்ஞானத்தில் முன்னேறியிருந்ததால் பாண்டியனுக்குச் செயற்கையாகச் செய்த தங்கக் கையைப் பொருத்தினர். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்நிகழ்ச்சியைச் "சிலப்பதிகாரம்" யாத்த இளங்கோவும் "பழமொழி நானூறு" எழுதிய மூன்றுரை அரையனாரும் கூறுகின்றனர்.

"உதவா வாழ்க்கைக் கீரந்தை மனைவி
புதவக் கதவம் புடைத்தனன் ஓர் நாள்
அரச வேலி யல்ல தியாவதும்
புரைதீர் வேலி யில்லென மொழிந்து
மன்றத் திருத்திச் சென்றீர் அவ்வழி,
இன்றவ் வேலி காவா தோவெனச்
செவிச் சூட்டாணியிற் புகையழல் பொத்தி
நெஞ்சஞ் சுடுதலின் அஞ்சி நடுக்குற்று,
வச்சிரத் தடக்கை அமரர் கோமான்
உச்சிப் பொன்முடி ஒளிவளை உடைத்தகை
குறைத்த செங்கோல் குறையாக் கொற்றத்து
இறைக்குடிப் பிறந்தோர்க்கு ..."


(மதுரைக் காண்டம், கட்டுரைக் காதை, சிலப்பதிகாரம்)

பழமொழிப் பாடலும் இதே கதையைத் தெரிவிக்கிறது.

"எனக்குத் தகவன்றால் என்பதே நோக்கித்
தனக்குக் கரியாவான் தானாய்த் - தவற்றை
நினத்துத்தன் கை குறைத்தான் தென்னவனும் காணார்
எனச் செய்தார் மாணா வினை."


- பழமொழி நானூறு

இன்னுமொரு பாட்டில் பொற்கைப் பாண்டியன் என்ற பெயரே குறிப்பிடப்படுகிறது.

"நாடு விளங்கொண்புகழ் நடுதல் வேண்டித் தன்
ஆடு மழைத் தடக்கை யறுத்து முறை செய்த
பொற்கை நறுந்தார்ப் புனைதேர்ப் பாண்டியன்"


வாழ்க தென்னவன் புகழ்! வளர்க மருத்துவ அறிவியல்!

@நிலாச்சாரல்



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Sep 14, 2009 1:44 am

ஷிவா அண்ணா ..நீங்க போடும் இத்தகவல்கள் ..எனக்கு கொஞ்சம் கஷ்டமாக இருக்கின்றது படிக்க ..அதனால் என் கருத்தை சரியாக கூர முடியாததை இட்டு வருந்துகிறேன் சாரி அண்ணா
பொற்கைப் பாண்டியனின் கதை புரிந்தது..சிறப்பானதே..கீழ் உள்ள கவிதையா அது புரியவே இல்லை..



[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 14, 2009 1:47 am

கவிதையல்ல! மதுரைக் காண்டம், கட்டுரைக் காதை, சிலப்பதிகாரம்



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Sep 14, 2009 1:50 am

சிவா wrote:கவிதையல்ல! மதுரைக் காண்டம், கட்டுரைக் காதை, சிலப்பதிகாரம்

ஓஓஓஓஒ இவை எல்லாம் எனக்கு தெரியவே தெரியாது அண்ணா ..



[You must be registered and logged in to see this link.]
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Dec 03, 2011 10:44 pm

சிறு வயதில் படித்தது...மீண்டும் படிக்க இனிக்கிறது மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக