Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஸ்பெக்ட்ரம் ‘வசூல் ராஜா’ தயாநிதி.. தயாநிதியேதான்!
+2
SK
தாமு
6 posters
Page 1 of 1
ஸ்பெக்ட்ரம் ‘வசூல் ராஜா’ தயாநிதி.. தயாநிதியேதான்!
புதுடில்லி, இந்தியா: சிறிய பொறி பெரிதாகிவிட்டது. மேலும் மேலும் ஆதாரங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஆதாரங்கள் எல்லாமே காட்டுவது ஒன்றே ஒன்றைத்தான். இந்திய தொலைத் தொடர்புத் துறையில் வசூல் ராஜா, தயாநிதி மாறன்தான். தற்போது ‘உள்ளே’ இருக்கும் ஆ.ராசாவைவிட, இவர் உச்சத்தில்!
ஏர் செல் முன்னாள் அதிபர் சிவசங்கரன், தனது நிறுவனத்தை ஆனந்த கிருஷ்னனின் மேக்ஸிஸ் நிறுவனத்துக்கு விற்க வேண்டிய நிலையை தயாநிதி ஏற்படுத்தினார் என்பதே ஏற்கனவேயுள்ள குற்றச்சாட்டு. தயாநிதி, அமைச்சர் என்ற முறையில் தன்னை மிரட்டிப் பணியவைத்தார் என்பது சிவசங்கரனின் வாக்குமூலம்.
அது பழைய கதை. இப்போது புதிதாக, இந்தக் கதையில் ஒரு கிளைக் கதை தோன்றியுள்ளது.
தயாநிதி அமைச்சராக இருக்கும்வரை தனக்கு எந்த லைசென்சும் கிடைக்காது எனப் புரிந்துகொண்ட சிவசங்கரன், ஏர் செல் நிறுவனத்தை வேறு ஒரு நிறுவனத்துக்கு விற்க முயன்றிருக்கிறார். அதையும் தடுத்திருக்கிறார் தயாநிதி என்பதே தற்போது வெளியாகியுள்ள கதையின் ஒன்லைன்.
இதன்படி,
• தயாநிதி தனது பதவியை வைத்து, சிவசங்கரனுக்கு லைசென்ஸ் கிடைக்காதபடி தடுத்திருக்கிறார்.
• இதையடுத்து, வேறு வழியில்லாமல் சிவசங்கரனின் ஏர் செல் நிறுவனத்தை மேக்ஸிஸ் நிறுவனத்துக்கு விற்பார் என எதிர்பார்த்திருக்கிறார்.
• ஆனால் சிவசங்கரன், தயாநிதியின் பிளானுக்கு எதிரான நகர்வு ஒன்றை மேற்கொண்டிருக்கிறார். மேக்ஸிஸ் நிறுவனத்திடம் செல்லாமல், மற்றொரு நிறுவனத்திடம் ஏர் செல்லை விற்பனை செய்ய, டீல் போட்டிருக்கிறார்.
• சிவசங்கரன் அணுகிய நிறுவனம், ஹட்சிசன்.
• சிவசங்கரன் மற்றும் ஹட்சிசன் இடையிலான டீல் நல்லபடியாக முடிந்திருக்கின்றது. பேரம் படிந்திருக்கின்றது. ஒரு தரப்பும் விற்பனை ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டிருக்கின்றன.
• ஆனால் குறிப்பிட்ட இந்த விற்பனைக்கு, தகவல் தொடர்புத்துறை (Department of Telecommunications – DoT) அனுமதி கொடுக்க வேண்டும் என்பது சட்டம். DoTயின் அனுமதி 6 மாதங்களுக்குள் கிடைக்காவிட்டால், விற்பனை ஒப்பந்தம் null and void!
• இவர்களுக்கு இடையிலான விற்பனை டீல், தயாநிதிக்குத் தெரியவந்திருக்கிறது. அவர் என்ன செய்தார்? குறிப்பிட்ட காலப் பகுதிக்குள் DoT அனுமதி கிடைக்காதபடி, விண்ணப்பத்தை அமைச்சுக்குள் முடக்கி விட்டிருக்கிறார்!
இதுதான் தற்போது தெரியவந்துள்ள கிளைக் கதை. இப்படியொரு வதந்தி முன்பு லேசாக அடிபடத் தொடங்கியிருந்தது. ஆனால், அது பெரிதாக மாறும் முன் அடக்கப்பட்டது. அதற்கு, தற்போது தொலைத்தொடர்பு வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள ஹட்சிசன் காரணமாக இருக்கலாம்.
“ஏம்பா.. வண்டி திகார் வருமா?”
இப்படியான விவகாரங்களில் தமது பெயர் தேவையில்லாமல் அடிபடுவதை, எந்தப் பெரிய நிறுவனமும் விரும்பாது. அதனால், இந்த விவகாரம் பற்றியே பேசுவதற்கு ஹட்சிசன் விரும்பாதிருக்கலாம். (அல்லது தயாநிதி அழுத்தம் கொடுத்துக்கூட இருக்கலாம்)
அவர்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், இப்போது விஷயம் வெளியே வந்துள்ளது. DoTயில் அனுமதிக்காகச் செய்யப்பட்ட ஒரிஜினல் விண்ணப்பத்தின் பிரதியும் வெளியாகிவிட்டது.
அந்த விண்ணப்பம், தொலைத் தொடர்பு அமைச்சில், ஆக்ஷன் எடுக்கப்படாமல் எட்டரை மாதங்கள் தூங்கியிருக்கின்றது என்பதற்கு ஆதாரங்களும் வெளியாகியுள்ளது.
விண்ணப்பம் பக்காவாக இருந்திருக்கின்றது. அதைத் தாமதிப்பதற்கும் காரணம் ஏதுமில்லை. நிராகரிப்பதற்கும் காரணம் ஏதுமில்லை.
2004ம் ஆண்டு ஜூன் மாதம், சிவசங்கரன் ஏர் செல் நிறுவனத்தின் தமிழ்நாடு வர்த்தகத்தை ஹட்சிசனுக்கு விற்பதற்கான டீலை முடித்துள்ளார். அதே மாதத்தில் இதற்கான விற்பனை ஒப்பந்தமும் போடப்பட்டுள்ளது. இரு தரப்பாலும் ஒப்புக்கொள்ளப்பட்ட விற்பனை விலை 1,200 கோடி ரூபா.
இந்த 2004ம் ஆண்டு ஜூன் மாதத்துக்கு ஒரு மாதம் முன்னர்தான், தயாநிதி மத்திய அமைச்சராகியிருந்தார்.
வெளியாகியுள்ள ஆதாரங்களின்படி, ஜூன் மாதம் 28ம் தேதி, DoT அனுமதி கோரும் விண்ணப்பம் அமைச்சில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேவையான ஆவணங்கள் அனைத்தும் விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்டிருந்தன. அப்படியிருந்தும் மேலதிக ஆவணம் ஒன்று தேவை என அமைச்சு ஏர் செல்லுக்கு கடித மூலம் அறிவித்திருக்கின்றது.
அந்த ஆவணமும், ஏர் செல் நிறுவனத்தால் அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றது. அமைச்சினால் அந்த ஆவணம் பெற்றுக்கொள்ளப்பட்டது ஆகஸ்ட், 14ம் தேதி.
அமைச்சு கோரிய ஆவணம் வழங்கப்பட்ட பின்னரும் விண்ணப்பம் அமைச்சில் ஆக்ஷன் எடுக்கப்படாமல் தூங்கியது. “எமது விண்ணப்பத்துக்கு எந்தப் பதிலும் இன்றைய தேதிவரை கிடைக்கவில்லை” என ஏர் செல், அமைச்சுக்கு ஒரு கடிதம் எழுதியது. இந்தக் கடிதம், அமைச்சினால் பெற்றுக் கொள்ளப்பட்ட தேதி, மார்ச் 7, 2005.
அதற்கும், எந்தப் பதிலுமில்லை.
ஒப்பந்த அனுமதிக்கான காலக்கெடு முடிவடைந்துவிட, ஏர் செல் – ஹட்சிசன் ஒப்பந்தம் முறிந்தது. அதன்பின் சிவசங்கரன் வேறு வழியில்லாமல் தனது நிறுவனத்தை (தயாநிதியின் விருப்பப்படி) மேக்ஸிஸ் ஆனந்த கிருஷ்னனுக்கு விற்கவேண்டிய நிலை ஏற்பட்டது!
இந்த ஆதாரம் வெளியாகியிருப்பது, தயாநிதி மாறனை மேலும் சிக்கலில் மாட்டிவிட்டுள்ளது. நிலைமையைப் பார்த்தால், லேசில் விடுவிக்க முடியாத சிக்கல் போலத்தான் இருக்கிறது.
சிவசங்கரன் மனசு வைத்தால்தான், நம்மாள் இதிலிருந்து தப்பலாம்
vivi
ஏர் செல் முன்னாள் அதிபர் சிவசங்கரன், தனது நிறுவனத்தை ஆனந்த கிருஷ்னனின் மேக்ஸிஸ் நிறுவனத்துக்கு விற்க வேண்டிய நிலையை தயாநிதி ஏற்படுத்தினார் என்பதே ஏற்கனவேயுள்ள குற்றச்சாட்டு. தயாநிதி, அமைச்சர் என்ற முறையில் தன்னை மிரட்டிப் பணியவைத்தார் என்பது சிவசங்கரனின் வாக்குமூலம்.
அது பழைய கதை. இப்போது புதிதாக, இந்தக் கதையில் ஒரு கிளைக் கதை தோன்றியுள்ளது.
தயாநிதி அமைச்சராக இருக்கும்வரை தனக்கு எந்த லைசென்சும் கிடைக்காது எனப் புரிந்துகொண்ட சிவசங்கரன், ஏர் செல் நிறுவனத்தை வேறு ஒரு நிறுவனத்துக்கு விற்க முயன்றிருக்கிறார். அதையும் தடுத்திருக்கிறார் தயாநிதி என்பதே தற்போது வெளியாகியுள்ள கதையின் ஒன்லைன்.
இதன்படி,
• தயாநிதி தனது பதவியை வைத்து, சிவசங்கரனுக்கு லைசென்ஸ் கிடைக்காதபடி தடுத்திருக்கிறார்.
• இதையடுத்து, வேறு வழியில்லாமல் சிவசங்கரனின் ஏர் செல் நிறுவனத்தை மேக்ஸிஸ் நிறுவனத்துக்கு விற்பார் என எதிர்பார்த்திருக்கிறார்.
• ஆனால் சிவசங்கரன், தயாநிதியின் பிளானுக்கு எதிரான நகர்வு ஒன்றை மேற்கொண்டிருக்கிறார். மேக்ஸிஸ் நிறுவனத்திடம் செல்லாமல், மற்றொரு நிறுவனத்திடம் ஏர் செல்லை விற்பனை செய்ய, டீல் போட்டிருக்கிறார்.
• சிவசங்கரன் அணுகிய நிறுவனம், ஹட்சிசன்.
• சிவசங்கரன் மற்றும் ஹட்சிசன் இடையிலான டீல் நல்லபடியாக முடிந்திருக்கின்றது. பேரம் படிந்திருக்கின்றது. ஒரு தரப்பும் விற்பனை ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டிருக்கின்றன.
• ஆனால் குறிப்பிட்ட இந்த விற்பனைக்கு, தகவல் தொடர்புத்துறை (Department of Telecommunications – DoT) அனுமதி கொடுக்க வேண்டும் என்பது சட்டம். DoTயின் அனுமதி 6 மாதங்களுக்குள் கிடைக்காவிட்டால், விற்பனை ஒப்பந்தம் null and void!
• இவர்களுக்கு இடையிலான விற்பனை டீல், தயாநிதிக்குத் தெரியவந்திருக்கிறது. அவர் என்ன செய்தார்? குறிப்பிட்ட காலப் பகுதிக்குள் DoT அனுமதி கிடைக்காதபடி, விண்ணப்பத்தை அமைச்சுக்குள் முடக்கி விட்டிருக்கிறார்!
இதுதான் தற்போது தெரியவந்துள்ள கிளைக் கதை. இப்படியொரு வதந்தி முன்பு லேசாக அடிபடத் தொடங்கியிருந்தது. ஆனால், அது பெரிதாக மாறும் முன் அடக்கப்பட்டது. அதற்கு, தற்போது தொலைத்தொடர்பு வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள ஹட்சிசன் காரணமாக இருக்கலாம்.
“ஏம்பா.. வண்டி திகார் வருமா?”
இப்படியான விவகாரங்களில் தமது பெயர் தேவையில்லாமல் அடிபடுவதை, எந்தப் பெரிய நிறுவனமும் விரும்பாது. அதனால், இந்த விவகாரம் பற்றியே பேசுவதற்கு ஹட்சிசன் விரும்பாதிருக்கலாம். (அல்லது தயாநிதி அழுத்தம் கொடுத்துக்கூட இருக்கலாம்)
அவர்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், இப்போது விஷயம் வெளியே வந்துள்ளது. DoTயில் அனுமதிக்காகச் செய்யப்பட்ட ஒரிஜினல் விண்ணப்பத்தின் பிரதியும் வெளியாகிவிட்டது.
அந்த விண்ணப்பம், தொலைத் தொடர்பு அமைச்சில், ஆக்ஷன் எடுக்கப்படாமல் எட்டரை மாதங்கள் தூங்கியிருக்கின்றது என்பதற்கு ஆதாரங்களும் வெளியாகியுள்ளது.
விண்ணப்பம் பக்காவாக இருந்திருக்கின்றது. அதைத் தாமதிப்பதற்கும் காரணம் ஏதுமில்லை. நிராகரிப்பதற்கும் காரணம் ஏதுமில்லை.
2004ம் ஆண்டு ஜூன் மாதம், சிவசங்கரன் ஏர் செல் நிறுவனத்தின் தமிழ்நாடு வர்த்தகத்தை ஹட்சிசனுக்கு விற்பதற்கான டீலை முடித்துள்ளார். அதே மாதத்தில் இதற்கான விற்பனை ஒப்பந்தமும் போடப்பட்டுள்ளது. இரு தரப்பாலும் ஒப்புக்கொள்ளப்பட்ட விற்பனை விலை 1,200 கோடி ரூபா.
இந்த 2004ம் ஆண்டு ஜூன் மாதத்துக்கு ஒரு மாதம் முன்னர்தான், தயாநிதி மத்திய அமைச்சராகியிருந்தார்.
வெளியாகியுள்ள ஆதாரங்களின்படி, ஜூன் மாதம் 28ம் தேதி, DoT அனுமதி கோரும் விண்ணப்பம் அமைச்சில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேவையான ஆவணங்கள் அனைத்தும் விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்டிருந்தன. அப்படியிருந்தும் மேலதிக ஆவணம் ஒன்று தேவை என அமைச்சு ஏர் செல்லுக்கு கடித மூலம் அறிவித்திருக்கின்றது.
அந்த ஆவணமும், ஏர் செல் நிறுவனத்தால் அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றது. அமைச்சினால் அந்த ஆவணம் பெற்றுக்கொள்ளப்பட்டது ஆகஸ்ட், 14ம் தேதி.
அமைச்சு கோரிய ஆவணம் வழங்கப்பட்ட பின்னரும் விண்ணப்பம் அமைச்சில் ஆக்ஷன் எடுக்கப்படாமல் தூங்கியது. “எமது விண்ணப்பத்துக்கு எந்தப் பதிலும் இன்றைய தேதிவரை கிடைக்கவில்லை” என ஏர் செல், அமைச்சுக்கு ஒரு கடிதம் எழுதியது. இந்தக் கடிதம், அமைச்சினால் பெற்றுக் கொள்ளப்பட்ட தேதி, மார்ச் 7, 2005.
அதற்கும், எந்தப் பதிலுமில்லை.
ஒப்பந்த அனுமதிக்கான காலக்கெடு முடிவடைந்துவிட, ஏர் செல் – ஹட்சிசன் ஒப்பந்தம் முறிந்தது. அதன்பின் சிவசங்கரன் வேறு வழியில்லாமல் தனது நிறுவனத்தை (தயாநிதியின் விருப்பப்படி) மேக்ஸிஸ் ஆனந்த கிருஷ்னனுக்கு விற்கவேண்டிய நிலை ஏற்பட்டது!
இந்த ஆதாரம் வெளியாகியிருப்பது, தயாநிதி மாறனை மேலும் சிக்கலில் மாட்டிவிட்டுள்ளது. நிலைமையைப் பார்த்தால், லேசில் விடுவிக்க முடியாத சிக்கல் போலத்தான் இருக்கிறது.
சிவசங்கரன் மனசு வைத்தால்தான், நம்மாள் இதிலிருந்து தப்பலாம்
vivi
Re: ஸ்பெக்ட்ரம் ‘வசூல் ராஜா’ தயாநிதி.. தயாநிதியேதான்!
திராவிட முநேற்ற கழகம்
இப்போ
திகார் முநேற்ற கழகம் என்று மாறபோகுதாமே
இப்போ
திகார் முநேற்ற கழகம் என்று மாறபோகுதாமே
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: ஸ்பெக்ட்ரம் ‘வசூல் ராஜா’ தயாநிதி.. தயாநிதியேதான்!
என்னன்ன வில்லத்தனம் பண்ணனுமோ அனைத்தையும் செய்துள்ளரே!
ரூட் கிளியரா இருக்கு ரைட் ரைட்!
“ஏம்பா.. வண்டி திகார் வருமா?”
ரூட் கிளியரா இருக்கு ரைட் ரைட்!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: ஸ்பெக்ட்ரம் ‘வசூல் ராஜா’ தயாநிதி.. தயாநிதியேதான்!
படுபாவிகள்... குடும்பமே சேர்ந்து கொள்ளை அடித்திருக்கிறான்களே... இந்த பாவம் சும்மா விடுமா..?
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: ஸ்பெக்ட்ரம் ‘வசூல் ராஜா’ தயாநிதி.. தயாநிதியேதான்!
அவர்களை பாவம் சும்மா விடாது..........ஆனால் இன்னும் சிறிது நாட்களில் நமது அரசு இவர்களை நிரபராதிகள் என்று சும்மா விட்டு விடும்....இதை நாமும் சும்மா விட்டு விடுவோம்....இந்த பாவம் யாரையும் சும்மா விடாது.....
இவர்கள் வெளி வந்தவுடன் இவர்களுக்காக நாம் வாக்களித்து மீண்டும் தேர்ந்தெடுப்போம்......
ஜெயிலுக்கு சென்றால் தியாகிகள் தானே.......எதற்கு சென்றார்கள் என்ன செய்துவிட்டு சென்றார்கள் என்பதை....நாம் என்றும் பார்த்ததும் இல்லை.....இனி பார்ப்போமா என்பதும் ???
இவர்கள் வெளி வந்தவுடன் இவர்களுக்காக நாம் வாக்களித்து மீண்டும் தேர்ந்தெடுப்போம்......
ஜெயிலுக்கு சென்றால் தியாகிகள் தானே.......எதற்கு சென்றார்கள் என்ன செய்துவிட்டு சென்றார்கள் என்பதை....நாம் என்றும் பார்த்ததும் இல்லை.....இனி பார்ப்போமா என்பதும் ???
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: ஸ்பெக்ட்ரம் ‘வசூல் ராஜா’ தயாநிதி.. தயாநிதியேதான்!
வேதனையான் உண்மை பிஜி ராமன்..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Similar topics
» மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் தயாநிதி மாறன்
» ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிக்கிய தயாநிதி மாறன்-சன் டிவி நிறுவன ஷேர்களில் பெரும் சரிவு!
» ஸ்பெக்ட்ரம் மெகா ஊழல் :தயாநிதி மீது எப்.ஐ.ஆர்.- அடுத்த கட்டமாக கைது செய்ய ' ஜரூர் ’ திட்டம்
» 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு வித்திட்ட தயாநிதி: பிரதமருக்கு எழுதிய கடிதம் அம்பலத்திற்கு வந்தது.
» ஸ்பெக்ட்ரம் ஏலம் விலை-பிரதமருடன் மோதி உத்தரவு போட்ட தயாநிதி மாறன்
» ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிக்கிய தயாநிதி மாறன்-சன் டிவி நிறுவன ஷேர்களில் பெரும் சரிவு!
» ஸ்பெக்ட்ரம் மெகா ஊழல் :தயாநிதி மீது எப்.ஐ.ஆர்.- அடுத்த கட்டமாக கைது செய்ய ' ஜரூர் ’ திட்டம்
» 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு வித்திட்ட தயாநிதி: பிரதமருக்கு எழுதிய கடிதம் அம்பலத்திற்கு வந்தது.
» ஸ்பெக்ட்ரம் ஏலம் விலை-பிரதமருடன் மோதி உத்தரவு போட்ட தயாநிதி மாறன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|