ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பட்டீஸ்வரம் - துர்கை கோயில்

Go down

பட்டீஸ்வரம் - துர்கை கோயில் Empty பட்டீஸ்வரம் - துர்கை கோயில்

Post by சிவா Mon Sep 14, 2009 1:06 am

பட்டீஸ்வரம் - துர்கை கோயில் Durgai10

பட்டீஸ்வரம் என்பது கும்பகோணத்துக்கு தெற்கே பழையாறை என்கிற ஊருக்கு நடுவே இருக்கிறது. பழையாறை யாருடைய ஊர் தெரியுமா?

அது இராஜராஜசோழன் வாழ்ந்த ஊர். பிறந்த மண். வளர்ந்த பூமி.

பட்டீஸ்வரம் மிக அழகிய ஒரு கிராமம். மிகமிகத் தொன்மையான ஒரு கிராமம். இப்போதும் அங்கு இராஜராஜசோழன் வாழ்ந்த மாளிகை ஒரு மேடு போல இருக்கிறது. அங்கு சூலங்கள் நட்டு வழிபடுகிறார்கள். மிகப் பெரிய ஒரு ஆலமரம் அங்கு விழுதுவிட்டு படர்ந்திருக்கிறது. அந்த இடத்திற்கு போகும்போதே பழமையான, மிகத் தொன்மையான, பலர் வாழ்ந்து மறைந்த ஒரு இடத்திற்கு போகிறோம் என்ற உணர்வு ஏற்படுகிறது.

அந்த சோழன் மாளிகை மேட்டுக்கு அருகேதான் இந்த பட்டீஸ்வரம் துர்க்கை கோயில் இருக்கிறது. பொன்னியின் செல்வனில் வரும் ஆதித்த கரிகாலன் மிகவும் நேசித்த துர்க்கை அந்த பட்டீஸ்வரம் துர்க்கை.. இது சோழர்களின் குலதெய்வம்.

வேறு எங்கோ தனியாக கோயில்கொண்டிருந்த இந்த துர்க்கையை எடுத்து, பட்டீஸ்வரம் கிராமத்தில் உள்ள கோயிலுக்கு முன்பாக பிற்காலத்தில் நிறுத்தி வைத்தார்கள். அந்த தனி சந்நிதி இப்பொழுது மிகப்பெரிய தனிக் கோயிலாக மாடங்களுடனும், அழகிய தரையுடனும், சிற்ப வேலைப்பாடுமிக்க தூண்களோடும் திகழ்கிறது. ஆறுகால பூஜையும் அற்புதமாக நடக்கிறது.

இந்த துர்க்கை பார்ப்பதற்கு மிக வனப்போடு இருக்கிறாள். கீழே உள்ள மிகப் பெரிய எருமை தலையில் கால்வைத்து ஊன்றி, எட்டு கைகளோடும் புன்னகை தவழும் முகத்தோடும் சாந்த சொரூபியாக காட்சியளிக்கிறாள்.

அதென்ன பட்டீஸ்வரம் என்று பெயர்?

காமதேனுவின் மகளான கன்றுக்கு பட்டி என்று பெயர். பட்டி பூஜித்த ஸ்தலமென்பதால் இது பட்டீஸ்வரம் என்று பெயர் பெற்றது.

துர்க்கையால் பிரசித்தி பெற்ற இந்த ஸ்தலத்துக்கு மக்கள் பலபேர் வந்து கூடி, பல்வேறு விதமான நன்மைகள் பெற்றுப் போகிறார்கள். நீங்கள் ஒரு முறை பட்டீஸ்வரம் வந்தால், பட்டீஸ்வர துர்க்கையை தரிசித்தால், அந்த துர்க்கையின் மீது பதிந்த உங்கள் பார்வையை வேறுபக்கம் திசைதிருப்புவது அவ்வளவு எளிதல்ல. அந்த அளவிற்கு ஈர்ப்பு சக்தி உடையவள் இந்தத்தாய்.

இந்த பட்டீஸ்வரம் துர்க்கை கோயிலை ஒட்டியே தேனுபுரிஸ்வரர் கோயில் இருக்கிறது. இந்த தேனுபுரிஸ்வரர் கோயில் மிகமிகப் பழமை வாய்ந்தது.

திருஞானசம்பந்தர் இந்தக் கோவிலின் வாசலில் வெயில் தாளாமல் தவித்தபோது, பூதகணங்கள் முத்துப்பந்தல் ஏந்தி ஞானசம்பந்தருக்கு நிழல் கொடுத்தன என்று சொல்லப் படுவதுண்டு. இறைவன் சம்பந்தர் வரும் காட்சியைக் காண சற்று விலகிய நந்தி, அழகான கோவிலுக்கு நடுவே உள்ள குளம் என்று மிக இதமான ஒரு சூழ்நிலையில் கோயில் அமைந்திருக்கிறது. மக்கள் இந்த தேனுபுரிஸ்வரர் கோவிலுக்கு அதிகம் வருவதில்லை. பட்டீஸ்வரம் துர்க்கையை வணங்கிவிட்டு ஓடிப்போய் விடுகிறார்கள்.

ஆனால் நீங்கள் உள்ளே போய்ப் பார்க்க, அம்மையும் அப்பனும் மிக அற்புதமாய் கொலுவீற்றிருக்கும் காட்சியைக் காணலாம்.

கோவிந்த தீட்சிதர் என்கிற ஒரு மகான் தஞ்சாவூரையும், குடந்தையையும் உயர்த்த பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டார். பாடசாலைகள் நிறுவினார். ஏழைஎளிய மக்களுக்கு பலவகைகளில் உதவினார். இசை ஞானமும், வடமொழிப் புலமையும் கொண்ட அந்த தீட்சிதரை மந்திரியாகப் பெற்ற அரசன் அவருக்கு பல உதவிகள் செய்ய, அவன் அந்த உதவிகளைப் பெற்று, அவற்றையெல்லாம் மக்களுக்கே செலவழித்ததாக ஒரு வரலாறு இருக்கிறது. அவரை மக்கள் அன்போடு "ஐயன்" என்று அழைத்தனர். தஞ்சாவூரிலுள்ள ஐயன்கடை, ஐயன்குளம், ஐயன்தெரு போன்றவைகளெல்லாம் அவர் பெயரால் ஏற்பட்டவை.

அவருடைய சிலையும், அவருடைய மனைவியின் சிலையும், ஞானாம்பிகை என்கிற அம்பாள் சந்நிதியில் நிறுத்தப்பட்டிருக்கிறது. மெல்ல அந்தச் சிலையின் அருகே போய் அவர் விரல்களைப் பற்றிப்பார்த்தால், அந்தச் சிலையின் விரல்கள் ஒரு மனிதனின் விரல்கள் போலவே மிக மென்மையாக அழுந்தும் வண்ணமாக நமக்குப் படுகிறது. இந்த கோயிலுக்கு வந்தால் நீங்கள் நிச்சயம் இந்த அனுபவத்தைப் பெற முடியும்.

பட்டீஸ்வரம் துர்க்கை உங்கள் தொழிலில் மேன்மையும், சிறப்புமடைய வழி செய்பவள். அவளை வணங்கியோர் நல்ல நிலையில் இருக்கிறார்கள். சமீபத்தில் கோவில் குடமுழுக்கு விழா நடந்தேறியது. கோவில் மிக அழகாக பராமரிக்கப்பட்டு வருகிறது. தவறாது ஒரு முறையேனும் பட்டீஸ்வரம் துர்க்கை கோயிலுக்குப் போய் துர்க்கையை தரிசித்துவிட்டு வாருங்கள். தலைகுனிந்து நமஸ்கரித்துவிட்டு வாருங்கள்.


பட்டீஸ்வரம் - துர்கை கோயில் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» `துர்காதேவி சரணம்’ - பாக்கியம் அருளும் பட்டீஸ்வரம் துர்கை மகிமைகள்!
» திருகோணமலை நிலாவெளியில் புதிய கோயில் - இலங்கையின் மிகப் பெரிய இந்துக் கோயில்
» நெய் உருகாத சிவன் கோயில் - திருச்சூர் வடக்கு நாதர் கோயில்.
» தஞ்சாவூர் கோயிலின் தந்தை கோயில் -திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயில் தல பெருமைகள்
» துர்கை வழிபாடு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum