ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புள்ளிகளும் கோடுகளும்

2 posters

Go down

புள்ளிகளும் கோடுகளும் Empty புள்ளிகளும் கோடுகளும்

Post by சிவா Mon Sep 14, 2009 12:08 am

சைக்கிளை உருட்டியபடி மிக மெதுவாக நடந்துகொண்டிருந்தான் சாரங்கன். பாதையின் கோட்டை சற்றுவிலகி இடது புறமாக உள்ளோடி வளைந்த மண் பாதைக்குள் இறங்கிய பிறகுதான் தெரிந்தது அவனது ஊர் நெருங்கிவிட்டது. இருபுற சிமென்ட் கால்வாய்களுக்குள் நீரின் குபு..குபு இரைச்சல். இரண்டொரு நீர்ப்பறவைகள் முழுகுவதும் எழுவதுமாய்.... இன்னும் என்னென்னவோ இனங்காண முடியாத இரைச்சல்கள். அதிகாலைக் காற்று முழுவதும் முட்ட முட்டப் பனியின் சோடிப்பு, இழுத்து உள்வாங்க அவதியாகத் தும்மல் வந்தது.

புதுக்காற்று விட்டு விடுதலையாகிய சுதந்திரக்காற்றின் அற்புதமான வாசம். ஊடே ஏதோ ஒரு வாடை கருகுவது போல, தீய்வது போல மனித உடலின் புழுத்துப் போன மக்கல் வாடை. குறுக்கே நாயொன்று எதையோ நீளமாக கறுப்பாகக் கௌவியிருந்தது. நின்று நிதானமாக உற்றுப்பார்க்க மனிதனின் எரிந்து போன கால்எலும்பு. ஒரு நிமிடம் நின்றான். உறைந்தது, உறைத்தது. விரு விருவென நெஞ்சுக்குள் எதுவோ ஊர்ந்தது. நகர நகர ஊரின் அலங்கோலம் உருச்சிதைந்து, உறவுகள் சிதைந்து ஒரு கொடியைப் பிடித்திழுத்தால் ஊர் முழுவதும் சொந்தமாகியிருந்த நாட்கள் கலைந்துபோய் வெறிச்சென்ற வீதிகள் மட்டும் பின்னல் பின்னலாக ஓடிஓடி மறைந்து கொண்டிருந்தது. ஆங்காங்கே சிவப்பு முக்கோணத் தகடுகள் கண்ணிவெடி அபாய அறிவிப்புக்கள். சைக்கிளோடு மனமும் சேர்ந்து உருண்டு கொண்டிருந்தது. முன்னோக்கி உருள ஏதில்லா சூனியம் பின்னோக்க பின்னோக்க கனமான கவலைகள். காயங்கள், கருத்தரிப்புக்கள், கருச்சிதைவுகள், அம்மாடி...

ஒற்றைத் தூணில் ஒருபக்கச் சாரம் மட்டும் தொங்கியிருக்க மலைக்குவியலாய் கற்கள் மேடை போட்டிருந்தன. ஒரு நிமிடம் இதயம் ஓராயிரம் இரத்தச் சொட்டுகளை உதிர்த்தது. அண்ணா யப்பானில் பார்த்த வீட்டைப் படம் பிடித்துப் பார்த்துப் பார்த்துக் கட்டிய வீடு.

கற்குவியல் மேல் கவனமாக உட்கார்ந்திருந்தான். முற்றமெல்லாம் பெயர் தெரியாத அழகழகாய் பூச்சொரிந்த பூச்செடிகள் பாத்தி போட்டிருக்க, தொட்டிக்குள் தோடையும் மாவும், பப்பாசியும் இரண்டு வயதுப் பிள்ளையின் உயரத்தில் பூவும் பிஞ்சுமாக விட்டிருந்தன. மாதக்கணக்கில் யோசித்து யோசித்து அவன்தான் வீட்டுக்குப் பெயர் வைத்தான் ~~குற்றாலம்|| அம்மாவின் அருகிலிருந்து அண்ணா சொன்னது இப்போதும் கேட்கிறது. ~அம்மா இது என்ர தங்கச்சிக்கு நான் கட்டிக்குடுக்கிற கோயிலம்மா. அவளின்ர பேரை முன்னுக்குப் போடுவம்|| குற்றால்திற்கு முன்னால் திருவேணி எழுதி தினம் தினம் பிராஸோவால் தேய்த்து பளபளப் பாக்கி அழகு பார்த்தவன் அண்ணா. அண்ணா பொறியிலாளன். அவனிருக்கும் இடத்தில் கட்டாயம் சிரிப்பிருக்கும். கண்களும், உதடுகளும், கன்னங்களும் சேர்ந்து பூப்பூவாய் சிரிக்கும்.

எல்லாம் கொஞ்சக காலம். நிம்மதியும் சந்தோஷமும் கொட்டிப் பரவிய காலம். மீண்டும் வரமுடியாத நிமிடங்கள். அமைதி அடைகாத்துக் கொண்டிருந்த ஊர்தான். ஒரு நொடியில் அவிழ்ந்தது. சிதறியது. ஊர் ஓடி முடிந்தது. ஒற்றையாய் உறவுகளைத் தேடித்தேடி அலைந்ததில் சிவசம்பு மாமா, தங்கச்சியை மட்டும் அவனிடம் கொடுத்துக் குலுங்கிக் குலுங்கி அழுதார்.

பல்கலைக்கழகப் படிப்பில் இன்னும் ஒற்றை வருஷமும் ஓர் ஆறுமாதமும் மட்டுமே மிச்சமாயிருக்க நடந்து முடிந்த எதையும் நம்பிக் கொள்ள முடியாமல் நம்பித்தான் ஆக வேண்டிய நிலைமையில் அழக்கூடத் தெரியாமல் உறைந்தவன் தான். ஓடுகின்ற உயிர்த்துடிப்பும் தங்கைக்காய் இழுத்து அணைத்த போது வியர்வைக் கொப்பளிப்பில் உடம்பு சில்லிட்டது.

அம்மாவும் அப்பாவும் ஒன்றாக ஒரே விநாடியில் உருச்சிதைந்து போன அதே நொடிப்பொழுதில் சரிந்து விழுந்த ஏணியின் தலைப்புக்குள் அண்ணாவின் உயிரும் உணர்வுகளும் இல்லாமல் ஓடிப்போயிருக்கிறது. ஆறுமாதங்களுக்குப் பிறகு இதயக் காயம் மீண்டும் கிளறிக் கொண்டது. நிறைய வலித்தது. இருட்டு மூலைக்குள் ஊமையாக அழுதுத்தீர்த்தான்.

ஆறுவருடங்கள் மிக நீண்ட காலக்கோடுகள். அண்ணாவின் சேமிப்புக்கள். யப்பான் நாடு அண்ணாவின் இழப்பீட்டிற்காக அனுப்பிய மொத்தமான தொகை கொஞ்சம் கரைந்து போயிருந்தாலும் கணிசமான லட்சங்கள் இன்னும் இருந்தன. பத்தொன்பது வயதுத் திருவேணியின் கல்யாணத்தை மட்டும் முடித்துவிட்hல் போதும் அவனின் கால்களைக் கட்டிய தளையும் கட்டவிழ்ந்து போகும்.

சிவசம்பு மாமா முழுமூச்சாகத் திருவேணிக்காக மாப்பிள்ளை தேடத் தொடங்கியிருந்தார். மாமா நான் காசைப் பாக்கேல்லை. அவளுக்கு பிடிச்சிருந்தால் சரி|| கிட்டத்தட்ட ஆறு ஏழு இடங்கள் திருவேணிக்கு எதுவும் பிடிக்கவில்லை. கொஞ்சம் சலிப்பாகக் கூட இருந்தது. என்ன இவள்...அலுத்தது. கடைசியாக மாமா ~~தம்பி கவலைப்படாதை அவளின்ர மனதுக்குள்ளேயும் என்னவோ இருக்குது. விட்டுப்பிடிப்போம். இப்ப என்ன வயசே போட்டுது. பாப்பம்||.

நாட்கள் ஓடிக்கொண்டேயிருந்தன. அவசர அவசரமாகக் குளித்து விட்டு வெளியே புறப்பட்டான் சாரங்கன். கோயில் வாசலில் சைக்கிளை ஸ்ராண்ட்போட்டு நிறுத்தி உள்ளே வந்தான். வெறிச்சோடிய பிரகாரத்தை ஒருமுறை சுற்றி வில்வ மர மணலி;ல் கண்களை மூடிக்கொண்டு உட்கார்ந்தான். எவ்வளவு நேரம்இருந்திருப்பானோ விழித்தபோது இமைகள் கண்ணீரில் பிசுபிசுத்தன. இளவெய்யிலில் காஸ்கை தெரிந்தது. உதறிக்கொண்டு எழுந்தான்.


புள்ளிகளும் கோடுகளும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

புள்ளிகளும் கோடுகளும் Empty Re: புள்ளிகளும் கோடுகளும்

Post by சிவா Mon Sep 14, 2009 12:08 am

வீட்டுக்குள் நுழைய எங்கேயோ... எப்போதோ கேட்ட குரலின் ஜாடை... யாராயிருக்கும் ஆ...அட.. ஜீவன் இவன் எப்படி இங்க. ஜீவன் ஓடிவந்து உணர்வுகளின் கொந்தளிப்போடு அணைத்துக் கொள்ள சாரங்கன்... சின்ன கீச்சிடலோடு எழுந்த ஜீவனின் கண்ணாடிநழுவிக்கொள்ள இரண்டு கண்களிலிருந்து இடங்கள் .. ஓ.. ஜீவன்.. உனக்கு நீ... பல நிமிடம் உணர்வுகளின் பதைப்பதைப்பை, உயிர்க் கூட்டின் வதைப்பைப் பொங்கி வழியும் கண்ணீரைக் கூடத் துடைக்கத் தோன்றாமல் வலியோடு பார்த்துக்கொண்டிருந்தாள் திருவேணி.

ஜீவன் மலையின் முகட்டில் ஏதோ ஒரு கிராமத்தில் பிறந்தவன். பல்கலைக்கழகத்தில் சாரங்கனோடு ஒன்றாகச் சேர்ந்தவன். முதலாம் வருடத்தின் இறுதி நாளன்று, செம்மை படர்ந்த மகாவலியின் புது வெள்ளப்பெருக்கில அடித்துச் செல்லப்படவிருந்த அவனை மயிர்க் கூச்செறியும் துணிச்சலோடு காப்பாற்றியவன்... பிறகு தெரியாது.. இவனைப் பற்றி எதுவும் தெரியாது.

ஜீவன் அமைதியாகச் சொன்னான். ~~சாரங்கா உனக்கு அழுவதற்காவது கண்கள் இருக்கின்றதே என்று சந்தோசப்படு. எனக்கு... அவன் உதடுகள் அழுதன. அவ்வளவுதான்.

அந்த நிமிடமே திருவேணியின் நெஞ்சுக்குள் சின்னதாக எதுவோ உடைந்தது. பொங்கியது. உலகத்தின் நிறத்தை உனக்கு நான் காட்டுகிறேன். ஜீவன் அவள் உதடுகள் மெதுவாக அவன் பெயரை உச்சரித்துப் பார்த்தன. ஏதோ ஒருமுடிச்சு அவிழ்ந்தது மாதிரி மனசுக்குள் ஏக சில்லிப்பு.

நாட்கள் ஒவ்வொன்றாக சிரமமாய், சிக்கலாய் உதிரஉதிர நெஞ்சு மட்டும் இறுகிக்கொண்டது. இந்தச் சாயங்காலம் பூப்பூவாக வானம் பூச்சிதறலாக உதறிக் கொண்டிருக்க இறகுகள் நனைந்து போன பறவை மிதமாகமிதந்து கொண்டிருந்தது. அவள் தன் முடிவை தனது எதிர்காலத்திற்கான ஒருபக்க அத்திவாரத்தை லேசான கண்ணீரோடு சொல்லி முடித்தாள். ஜீவன், அண்ணா, அப்பாச்சி அந்த முக்கோணத்துருவங்களிடையே மூவேறு அதிர்வுகள். ஜீவன் ஒரு நிமிடம் உறைந்தவன் தான் தள்ளிக் கொண்டு எழுந்தான். ~~சாரங்கா மன்னித்துக்கொள். நான் வருகிறேன்...|| சாரங்கன் எதுவும் தோன்றாமல் உட்கார்ந்திருக்க.. அப்பாச்சி தான் கதைத்தாள். ~~மோனை.. ஜீவன் இப்ப நீ போறதால இந்தப் பிரச்சினை இத்தோடை தீருமென்று நீ நினைச்சால் போ... ஆனால் இது நிக்கிற பிரச்சினை இல்ல மோனை... பொம்பிளையின்ர மனம் எனக்குத் தெரியும். ஒருக்கால் அது ஒருத்தனுக்குத்தான் திறக்கும்.. மூடும்..|| அப்பாச்சி எங்கோ தொலை தூரத்திற்கு நகர்வது போல இருந்தது.

~~என்ரை பரம்பரையைப் பற்றி உங்களுக்குத் தெரியாது. பத்துத் தலைமுறை பட்டங்கட்டி ஆண்டவங்கள். எனக்குப்பாக்காத இடமில்லை. கடைசியில என்ரையப்பு எக்கேடும் கெடட்டும் எண்டு கைகழுவி விடடிட்டார். பொம்பிளை பாக்க வந்த உடையாருக்கும் எனக்கும் பதினெழு வயது வித்தியாசம் மோனை. அப்ப ஊர் சிரிச்சுது. ஆனால் என்ர அப்பு, ஆச்சியோட மல்லுக்கு நிண்டு அவரைத்தான் கட்டினன்... எனக்கென்ன குறை?

~~அதுக்கில்ல ஆச்சி அது வேற இதுவேற||

~~மோனை உதைச் சொல்லாதை. என்ரை நெஞ்சு உடையாருக்குப் பின்னால் போனது போல பொடிச்சியின்ர மனம் உனக்குப் பின்னால ஓடிட்டுது. எல்லாம் கடவுள் சங்கற்பம்||.

திருவேணிக்கு ஆச்சியை கட்டிக்கொள்ள வேண்டும் போலத் துடித்தது. சாரங்கன் சிந்தியிருந்த நீரில் மௌனமாக கோலம் போட்டுக் கொண்டிருந்தான். முகத்தசைகள் மட்டும் இறுகிப் போயிருக்க உணர்வுகளை அடக்க உதடுகளை அழுது;தமாகக் கடித்திருந்தான்.

வசந்தம் ஒருசுற்றுச் சுற்றி வந்தது. கலியாணத்திற்கு நாள் குறித்து ஊர்கூட்டி, நடாத்தி வைத்தது. அவன் கைவிடித்து படியிறங்கிப் போன அனுதாபத்தோடு, ஆதூரத்தோடு பார்த்தது. அவள் மட்டும் நெஞ்சு நிறைந்த பூரிப்போடு அப்பாச்சியின் கால்களைத் தொட்டாள். அழுத அண்ணாவின் கண்ணீரைச் சுண்டிவிட்டாள். ~~அழாதே இது அழுகிற காலமல்ல. அண்ணா என் வயிற்றில் பிறக்கின்ற இவனோ, இவளோ நிச்சயம் எங்கட அம்மா, அப்பா ஏன் தன்னைப் பெற்றவனின் கண்களுக்காகவும் கேள்வியாக எழுவான்||. சொல்லவில்லை சொல் முடியவில்லை. மனது மட்டும் சட்டம் போட்டு கோடிட்டது தொட்டு வைத்த புள்ளிகளெல்லாம் புதிது புதிதாக அர்த்தம் சொல்லின.


புள்ளிகளும் கோடுகளும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

புள்ளிகளும் கோடுகளும் Empty Re: புள்ளிகளும் கோடுகளும்

Post by மீனு Mon Sep 14, 2009 12:39 am

அண்ணா என் வயிற்றில் பிறக்கின்ற இவனோ, இவளோ நிச்சயம் எங்கட அம்மா, அப்பா ஏன் தன்னைப் பெற்றவனின் கண்களுக்காகவும் கேள்வியாக எழுவான்||.

நல்ல கதை.. இல்லை இல்லை நிஜம்மாகும் உண்மை கதை..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

புள்ளிகளும் கோடுகளும் Empty Re: புள்ளிகளும் கோடுகளும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum