Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்by Dr.S.Soundarapandian Today at 1:42 pm
» கருத்துப்படம் 21/06/2024
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm
» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am
» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ayyamperumal | ||||
Anitha Anbarasan | ||||
Guna.D | ||||
manikavi | ||||
prajai |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
ayyamperumal | ||||
JGNANASEHAR | ||||
Anitha Anbarasan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
J J உப்புமா
+13
ஸ்ரீஜா
ஜாஹீதாபானு
மஞ்சுபாஷிணி
ரா.ரமேஷ்குமார்
கே. பாலா
கலைவேந்தன்
jbalasubramanian
சின்றெல்லா
பாலாஜி
ரேவதி
SK
தாமு
dsudhanandan
17 posters
Page 1 of 4
Page 1 of 4 • 1, 2, 3, 4
J J உப்புமா
என்ன தம்பி ரொம்ப நாளா ஆளக் காணோம்.... ஆமா நீ ஏதோ கட்சியில சேர்ந்திட்டியாமே...
என்னது கட்சியிலா?... அப்படி ஒண்ணும் இல்லையே...
என்னோட வீட்டுக்காரர் சொன்னாரு... நீ ஏதோ செயலாளர் ஆயிட்டேன்னு...
ஆமாக்கா... அது ஈகரை இணையத்துல சதுர செயலாளர்...
என்னது சதுர செயலாளரா....? அப்படீன்னா...?
அது அந்த சிவ(ா)னுக்கே வெளிச்சம்....
சரி... கொஞ்சம் J J உப்புமா சாப்பிடரயா....
என்னது J J உப்புமாவா?... ஏங்க அவங்க ஜெயிச்சு ஆட்சிக்கு வந்துட்டாங்க அப்படிங்கறதுக்காக உப்புமாவுக்குகெல்லாம் அவங்க பெயரை வைக்கரது நல்லா இல்லை...
டேய்... இது ஜெய்ப்பூர் ஜவ்வரிசி உப்புமாடா...
"ம்... ம்..." டைனிங் ரூமிலிருந்து வெளியே வந்தார் என் நண்பர்
(சாதாரண ஜவ்வரிசி உப்புமா தானுங்க, அது பண்ணப் பண்ண உப்புமாவா, கூழா, களியான்னு புரியாம குழம்பிப்போயி கடைசியிலே பழியை ஒரு பாவமும் அறியாத ஜெய்ப்பூர் மேலே போட்டுட்டாங்க.)
உப்புமாவைச் சாப்பிட்டதுலேருந்து நண்பர் பேந்தப் பேந்த முழிச்சிட்டு இருந்தாரு பாவம்...
டேய்... நீ கொஞ்சம் சாப்பிடுறயா...
(நண்பரின் முழி என்னை எச்சரித்ததால்)... இல்லக்கா நான் மெஸ்ஸிலேயே சாப்பிட்டாச்சு...
அப்பா தப்பிச்சாண்டா... நண்பர் (மனதுக்குள்)
அக்கா இந்த உப்புமா செய்யறதப் பத்தி சொன்னா அதையே இன்னைக்கு பதிவுல போட்டுடறேன்...
இதெல்லாம் பதிவுல போடலாமா?
எத வேண்ணா போடலாம் அக்கா... படிச்சிட்டு அவங்க தலயிலெ அவங்களே முட்டிக்குவாங்க... நம்பள ஒண்ணும் பண்ண மாட்டாங்க... ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லவங்க....
அக்காவுக்கும் கணினிக்கும் ஏழாம் பொருத்தம்! அவங்க தினமும் மவுஸோட அல்லாடுறதைப் பார்த்தா அவங்க வேலை பார்க்கிறாங்களா?... இல்லே... தோசை வார்க்குறாங்களான்னு சந்தேகமாயிருக்கும். அதுனாலே அவங்க புருஷனோட தொழில்நுட்ப அறிவைப் பயன்படுத்தித் தமிழிலே தட்டச்சு செய்ய முடிவு பண்ணினாங்க...
அவரு மனசுக்குள்ளே என்னைத் திட்டிக்கிட்டே கணிணி முன்னால வந்து உட்காந்தாரு...
இனி அந்தக் காட்சி அப்படியே!!! (நண்பரின் மனைவியும்.... நண்பரின் மனசாட்சியும்)
J J உப்புமா வேண்டாங்க... இன்னைக்கு "முதல்லே சிம்பிளா ரவா உப்புமா செய்வது எப்படீன்னு சொல்லறேங்க"
"ம்..." அதுக்கு மேலே நண்பராலே வாயைத் தொறக்க முடியலே..! எல்லாம் J J உப்புமாவோட ஜாலம்!
மனைவி சொல்லச் சொல்ல நண்பர் தட்டச்சு செய்ய ஆரம்பிச்சாரு!
"டைப் பண்ணுங்க! ரவா உப்புமா செய்யத் தேவையான பொருட்கள்...!"
"சாப்பிட ரெண்டு பேர்!" நண்பர் மனசுக்குள்ளே சொல்லிக்கிட்டாரு!
"ஏதாவது சொன்னீங்களா?" அக்கா கேட்குறாங்க... சொல்லுற நிலைமையிலா அவரு இருக்காரு? ஊஹூமுன்னு தலையை மட்டும் ஆட்டுறாரு!
"சரி, அடுத்ததா ரவை உப்புமா செய்யத் தேவையான பாத்திர பண்டங்களைப் பற்றிப் பார்க்கலாமா?"
"ரொம்ப முக்கியம்..." இது நண்பரின் மனசாட்சி.
"வாணலி..."
"----------"
"ஐயோ, வானொலி இல்லீங்க... வாணலி..! இலுப்புச்சட்டி... உங்க தலை மாதிரி இருக்குமே...!"
இப்படியே கரண்டி, கத்தி, தட்டுன்னு எல்லாத் தட்டுமுட்டுச் சாமான் பெயரையும் அம்மணி சொல்லச் சொல்ல, இப்போ நண்பர் பில்கேட்ஸுக்கு சாபம் போட்டுக்கிட்டிருந்தாரு! இருடீ, அடுத்தவாட்டி இந்தியா வா, வச்சிருக்கேன் உனக்கு!
ஒரு வழியா தேவையான பொருட்களுக்கு வந்தாங்க அம்மணி!
"பாம்பே ரவை!"
"போச்சுடா, பட்ட காலிலே படும்கிறது சரியாத் தானிருக்கு. பாம்பேக்கு இப்போ நேரமே சரியில்லை..." இது நண்பரின் மனசாட்சி.
"வெங்காயம்..."
"நல்ல வேளை! இதை வெட்டுற ஆம்பிளைங்க எதுக்கு அழறாங்கன்னு யாருக்கும் தெரியாது."
"தக்காளி!"
"க்கும்... கொஞ்சம் விலை குறைஞ்சா போதுமே!"
"உருளைக்கிழங்கு..."
"இது எதுக்கு? விட்டா முட்டக்கோசையே முழுசாப் போட்டிருவா போலிருக்கே!"
"கேரட்!"
"அதை மட்டும் ஏன் விட்டு வைக்கணும்?"
"பட்டாணி!"
"ஆமா, இப்படிப் பண்டங்களை வேஸ்ட் பண்ணினா பட்டாணிகிட்டே போய்த் தான் கடன் வாங்கணும்."
"பச்சை மிளகாய்... இஞ்சி... கருவேப்பிலை... கொத்தமல்லி..."
"அட, சுக்கு, மிளகு, திப்பிலியெல்லாத்தியும் விட்டுட்டாளே!"
"தாளிக்கத் தேவைப்படும் பொருட்கள்!"
"கல்யாணம் ஆனதுலேருந்து தினமும் எங்களைத் தாளிக்கறீங்களே, போதாதா?"
"கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம்...."
"இப்போ ஜீரகம் வரும் பாருங்க..!"
"ஜீரகம்....!"
"அதானே பார்த்தேன்!"
"ரீஃபைண்டு ஆயில்..."
"என்ன வெலை விக்குது தெரியுமா?"
"தேவையான அளவு உப்பு!"
"சொரணையிருக்கிறவங்களுக்கு மட்டும்!"
"தண்ணீர்..."
"சாப்பிடறதுக்கு முன்னாலேயும், அப்புறமும் அவங்கவங்க தலையிலே தெளிச்சுக்கணும். கடவுளாப் பார்த்துக் காப்பாத்தினாத் தானுண்டு."
"உப்புமா செய்வது மிகவும் சுலபம்"
"ஆமாமா, சாப்பிடறதுதான் கஷ்டம்."
"முதலில் அடுப்பைப் பற்ற வைத்து அதன் மேல் வாணலியை வைக்கவும்....."
"ஆமா, மத்தவங்களெல்லாம் அடுப்பிலே வைக்காம வாணலியை அடகுலே வைக்குறாங்களாக்கும்....."
"கொஞ்சமாக எண்ணையை விட்டு, ரவையைப் போட்டு வறுக்கவும்."
"புருசனை வறுக்கிறா மாதிரி இல்லாம இருந்தா சரி..."
"இளஞ்சிவப்பாக ரவை மாறியதும் அதை ஒரு அகலமான தட்டில் ஆற வைக்கவும்...."
"அடுப்பை உங்க சித்தப்பாவா வந்து அணைக்கப்போறாரு?"
"வெங்காயம், உருளைக்கிழங்கு, கேரட் ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்."
"இந்த நேரத்துலே ஆம்பிளைங்கெல்லாம் சந்தர்ப்பம் பார்த்து ஓடிப்போயிருங்க.....!"
"தக்காளியைத் துண்டுதுண்டாக வெட்டவும்..."
"கையிலே கத்தியைக் கொடுத்தாலே இப்படித்தான்...."
"பட்டாணியின் தோலை உரிக்கவும்...."
"இவளுக்கு இதெல்லாம் சர்வசாதாரணம்...."
"பச்சை மிளகாயைக் கீறவும்..."
"இதைச் செய்ய இவளுக்குக் கத்தியே வேண்டாம்...."
"இஞ்சியைப் பொடிப்பொடியாக நறுக்கவும்..."
"இவ்வளவு வயலன்ஸ் தேவையா...?"
"கருவேப்பிலை, கொத்தமல்லியைக் கிள்ளி வைக்கவும்..."
"எதுக்கும் கொஞ்சம் தள்ளி நில்லுங்க! உங்களைக் கிள்ளிறப் போறாங்க....!"
"வாணலியிலே எண்ணையை விட்டு....."
"திரும்பவும் முதல்லேயிருந்தா...? அவ்வ்வ்வ்வ்...!"
"எண்ணை சூடானதும், அதில் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கடுகு, பெருங்காயம், வெங்காயம், இஞ்சி, பச்சைமிளகாய், ஜீரகம் உப்பு எல்லாத்தையும் போட்டு..."
"நல்லாக் கிண்டுங்க! அதுதான் கை வந்த கலையாச்சே....!"
"பொன்னிறமானதும்....."
"அதைக் கொண்டு போய் நகைக்கடையிலே கொடுத்துப் புதுநகை வாங்கவும்....."
"உருளைக்கிழங்கையும், கேரட்டையும் போட்டு வதக்கவும்...."
"சும்மா சொல்லக்கூடாது. நல்ல மெமரி பவர்... ஆனா, அடிக்கடி வயசைத்தான் மறந்திடறா...."
"பட்டாணி, தக்காளியும் சேர்த்து வதக்கி, கொஞ்சம் பதம் வந்ததும் தண்ணீர் ஊற்றவும்..."
"ஆமா... அப்பத்தான் உப்புமா ரசம் மாதிரி தெளிவா இருக்கும்....."
"கருவேப்பிலையும் கொத்துமல்லியையும் சேர்த்து விடவும்...."
"இல்லியா பின்னே, அதுங்களை மட்டும் ஏன் விட்டு வைக்கணும்..?"
"ரவையை மெதுவாகக் கிளறிக்கிட்டே இருக்கணும்..."
"இந்த சமயத்துலே எதிர்வீட்டு சினேகிதிக்கு போன் பண்ணிப் பேசிக்கிட்டே கிளறினா இன்னும் நல்லாக் கிண்டலாம்...."
"அடுப்பைக் குறைத்து ஒரு தட்டைப் போட்டு மூடவும்...."
"அப்பாடா! இது ஒண்ணு தான் எனக்குப் பிடிச்சிருக்கு...."
"ஆவியிலே கொஞ்ச நேரம் வேகவைத்து விட்டுப் பிறகு இறக்கவும்..."
"எதை? ஆவியையா....?"
"சூடான சுவையான உப்புமா தயார்!"
"யாரும் அவசரப்பட்டு ஒரு முடிவுக்கு வராதீக! சூடா இருக்குமுங்கிறத வேண்ணா ஒத்துக்கறேன். மத்ததைச் சாப்பிட்டுச் சொல்லுங்க!"
ஹலோ எங்க ஓடறீங்க.... இன்னும் இதுமாதிரி குறிப்பெல்லாம் சொல்லறேங்க... பிளீஸ்... ஓடாதீங்க... ஹலோ... ஹலோஓஓஓஓஓஓ...
என்னது கட்சியிலா?... அப்படி ஒண்ணும் இல்லையே...
என்னோட வீட்டுக்காரர் சொன்னாரு... நீ ஏதோ செயலாளர் ஆயிட்டேன்னு...
ஆமாக்கா... அது ஈகரை இணையத்துல சதுர செயலாளர்...
என்னது சதுர செயலாளரா....? அப்படீன்னா...?
அது அந்த சிவ(ா)னுக்கே வெளிச்சம்....
சரி... கொஞ்சம் J J உப்புமா சாப்பிடரயா....
என்னது J J உப்புமாவா?... ஏங்க அவங்க ஜெயிச்சு ஆட்சிக்கு வந்துட்டாங்க அப்படிங்கறதுக்காக உப்புமாவுக்குகெல்லாம் அவங்க பெயரை வைக்கரது நல்லா இல்லை...
டேய்... இது ஜெய்ப்பூர் ஜவ்வரிசி உப்புமாடா...
"ம்... ம்..." டைனிங் ரூமிலிருந்து வெளியே வந்தார் என் நண்பர்
(சாதாரண ஜவ்வரிசி உப்புமா தானுங்க, அது பண்ணப் பண்ண உப்புமாவா, கூழா, களியான்னு புரியாம குழம்பிப்போயி கடைசியிலே பழியை ஒரு பாவமும் அறியாத ஜெய்ப்பூர் மேலே போட்டுட்டாங்க.)
உப்புமாவைச் சாப்பிட்டதுலேருந்து நண்பர் பேந்தப் பேந்த முழிச்சிட்டு இருந்தாரு பாவம்...
டேய்... நீ கொஞ்சம் சாப்பிடுறயா...
(நண்பரின் முழி என்னை எச்சரித்ததால்)... இல்லக்கா நான் மெஸ்ஸிலேயே சாப்பிட்டாச்சு...
அப்பா தப்பிச்சாண்டா... நண்பர் (மனதுக்குள்)
அக்கா இந்த உப்புமா செய்யறதப் பத்தி சொன்னா அதையே இன்னைக்கு பதிவுல போட்டுடறேன்...
இதெல்லாம் பதிவுல போடலாமா?
எத வேண்ணா போடலாம் அக்கா... படிச்சிட்டு அவங்க தலயிலெ அவங்களே முட்டிக்குவாங்க... நம்பள ஒண்ணும் பண்ண மாட்டாங்க... ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லவங்க....
அக்காவுக்கும் கணினிக்கும் ஏழாம் பொருத்தம்! அவங்க தினமும் மவுஸோட அல்லாடுறதைப் பார்த்தா அவங்க வேலை பார்க்கிறாங்களா?... இல்லே... தோசை வார்க்குறாங்களான்னு சந்தேகமாயிருக்கும். அதுனாலே அவங்க புருஷனோட தொழில்நுட்ப அறிவைப் பயன்படுத்தித் தமிழிலே தட்டச்சு செய்ய முடிவு பண்ணினாங்க...
அவரு மனசுக்குள்ளே என்னைத் திட்டிக்கிட்டே கணிணி முன்னால வந்து உட்காந்தாரு...
இனி அந்தக் காட்சி அப்படியே!!! (நண்பரின் மனைவியும்.... நண்பரின் மனசாட்சியும்)
J J உப்புமா வேண்டாங்க... இன்னைக்கு "முதல்லே சிம்பிளா ரவா உப்புமா செய்வது எப்படீன்னு சொல்லறேங்க"
"ம்..." அதுக்கு மேலே நண்பராலே வாயைத் தொறக்க முடியலே..! எல்லாம் J J உப்புமாவோட ஜாலம்!
மனைவி சொல்லச் சொல்ல நண்பர் தட்டச்சு செய்ய ஆரம்பிச்சாரு!
"டைப் பண்ணுங்க! ரவா உப்புமா செய்யத் தேவையான பொருட்கள்...!"
"சாப்பிட ரெண்டு பேர்!" நண்பர் மனசுக்குள்ளே சொல்லிக்கிட்டாரு!
"ஏதாவது சொன்னீங்களா?" அக்கா கேட்குறாங்க... சொல்லுற நிலைமையிலா அவரு இருக்காரு? ஊஹூமுன்னு தலையை மட்டும் ஆட்டுறாரு!
"சரி, அடுத்ததா ரவை உப்புமா செய்யத் தேவையான பாத்திர பண்டங்களைப் பற்றிப் பார்க்கலாமா?"
"ரொம்ப முக்கியம்..." இது நண்பரின் மனசாட்சி.
"வாணலி..."
"----------"
"ஐயோ, வானொலி இல்லீங்க... வாணலி..! இலுப்புச்சட்டி... உங்க தலை மாதிரி இருக்குமே...!"
இப்படியே கரண்டி, கத்தி, தட்டுன்னு எல்லாத் தட்டுமுட்டுச் சாமான் பெயரையும் அம்மணி சொல்லச் சொல்ல, இப்போ நண்பர் பில்கேட்ஸுக்கு சாபம் போட்டுக்கிட்டிருந்தாரு! இருடீ, அடுத்தவாட்டி இந்தியா வா, வச்சிருக்கேன் உனக்கு!
ஒரு வழியா தேவையான பொருட்களுக்கு வந்தாங்க அம்மணி!
"பாம்பே ரவை!"
"போச்சுடா, பட்ட காலிலே படும்கிறது சரியாத் தானிருக்கு. பாம்பேக்கு இப்போ நேரமே சரியில்லை..." இது நண்பரின் மனசாட்சி.
"வெங்காயம்..."
"நல்ல வேளை! இதை வெட்டுற ஆம்பிளைங்க எதுக்கு அழறாங்கன்னு யாருக்கும் தெரியாது."
"தக்காளி!"
"க்கும்... கொஞ்சம் விலை குறைஞ்சா போதுமே!"
"உருளைக்கிழங்கு..."
"இது எதுக்கு? விட்டா முட்டக்கோசையே முழுசாப் போட்டிருவா போலிருக்கே!"
"கேரட்!"
"அதை மட்டும் ஏன் விட்டு வைக்கணும்?"
"பட்டாணி!"
"ஆமா, இப்படிப் பண்டங்களை வேஸ்ட் பண்ணினா பட்டாணிகிட்டே போய்த் தான் கடன் வாங்கணும்."
"பச்சை மிளகாய்... இஞ்சி... கருவேப்பிலை... கொத்தமல்லி..."
"அட, சுக்கு, மிளகு, திப்பிலியெல்லாத்தியும் விட்டுட்டாளே!"
"தாளிக்கத் தேவைப்படும் பொருட்கள்!"
"கல்யாணம் ஆனதுலேருந்து தினமும் எங்களைத் தாளிக்கறீங்களே, போதாதா?"
"கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம்...."
"இப்போ ஜீரகம் வரும் பாருங்க..!"
"ஜீரகம்....!"
"அதானே பார்த்தேன்!"
"ரீஃபைண்டு ஆயில்..."
"என்ன வெலை விக்குது தெரியுமா?"
"தேவையான அளவு உப்பு!"
"சொரணையிருக்கிறவங்களுக்கு மட்டும்!"
"தண்ணீர்..."
"சாப்பிடறதுக்கு முன்னாலேயும், அப்புறமும் அவங்கவங்க தலையிலே தெளிச்சுக்கணும். கடவுளாப் பார்த்துக் காப்பாத்தினாத் தானுண்டு."
"உப்புமா செய்வது மிகவும் சுலபம்"
"ஆமாமா, சாப்பிடறதுதான் கஷ்டம்."
"முதலில் அடுப்பைப் பற்ற வைத்து அதன் மேல் வாணலியை வைக்கவும்....."
"ஆமா, மத்தவங்களெல்லாம் அடுப்பிலே வைக்காம வாணலியை அடகுலே வைக்குறாங்களாக்கும்....."
"கொஞ்சமாக எண்ணையை விட்டு, ரவையைப் போட்டு வறுக்கவும்."
"புருசனை வறுக்கிறா மாதிரி இல்லாம இருந்தா சரி..."
"இளஞ்சிவப்பாக ரவை மாறியதும் அதை ஒரு அகலமான தட்டில் ஆற வைக்கவும்...."
"அடுப்பை உங்க சித்தப்பாவா வந்து அணைக்கப்போறாரு?"
"வெங்காயம், உருளைக்கிழங்கு, கேரட் ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்."
"இந்த நேரத்துலே ஆம்பிளைங்கெல்லாம் சந்தர்ப்பம் பார்த்து ஓடிப்போயிருங்க.....!"
"தக்காளியைத் துண்டுதுண்டாக வெட்டவும்..."
"கையிலே கத்தியைக் கொடுத்தாலே இப்படித்தான்...."
"பட்டாணியின் தோலை உரிக்கவும்...."
"இவளுக்கு இதெல்லாம் சர்வசாதாரணம்...."
"பச்சை மிளகாயைக் கீறவும்..."
"இதைச் செய்ய இவளுக்குக் கத்தியே வேண்டாம்...."
"இஞ்சியைப் பொடிப்பொடியாக நறுக்கவும்..."
"இவ்வளவு வயலன்ஸ் தேவையா...?"
"கருவேப்பிலை, கொத்தமல்லியைக் கிள்ளி வைக்கவும்..."
"எதுக்கும் கொஞ்சம் தள்ளி நில்லுங்க! உங்களைக் கிள்ளிறப் போறாங்க....!"
"வாணலியிலே எண்ணையை விட்டு....."
"திரும்பவும் முதல்லேயிருந்தா...? அவ்வ்வ்வ்வ்...!"
"எண்ணை சூடானதும், அதில் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கடுகு, பெருங்காயம், வெங்காயம், இஞ்சி, பச்சைமிளகாய், ஜீரகம் உப்பு எல்லாத்தையும் போட்டு..."
"நல்லாக் கிண்டுங்க! அதுதான் கை வந்த கலையாச்சே....!"
"பொன்னிறமானதும்....."
"அதைக் கொண்டு போய் நகைக்கடையிலே கொடுத்துப் புதுநகை வாங்கவும்....."
"உருளைக்கிழங்கையும், கேரட்டையும் போட்டு வதக்கவும்...."
"சும்மா சொல்லக்கூடாது. நல்ல மெமரி பவர்... ஆனா, அடிக்கடி வயசைத்தான் மறந்திடறா...."
"பட்டாணி, தக்காளியும் சேர்த்து வதக்கி, கொஞ்சம் பதம் வந்ததும் தண்ணீர் ஊற்றவும்..."
"ஆமா... அப்பத்தான் உப்புமா ரசம் மாதிரி தெளிவா இருக்கும்....."
"கருவேப்பிலையும் கொத்துமல்லியையும் சேர்த்து விடவும்...."
"இல்லியா பின்னே, அதுங்களை மட்டும் ஏன் விட்டு வைக்கணும்..?"
"ரவையை மெதுவாகக் கிளறிக்கிட்டே இருக்கணும்..."
"இந்த சமயத்துலே எதிர்வீட்டு சினேகிதிக்கு போன் பண்ணிப் பேசிக்கிட்டே கிளறினா இன்னும் நல்லாக் கிண்டலாம்...."
"அடுப்பைக் குறைத்து ஒரு தட்டைப் போட்டு மூடவும்...."
"அப்பாடா! இது ஒண்ணு தான் எனக்குப் பிடிச்சிருக்கு...."
"ஆவியிலே கொஞ்ச நேரம் வேகவைத்து விட்டுப் பிறகு இறக்கவும்..."
"எதை? ஆவியையா....?"
"சூடான சுவையான உப்புமா தயார்!"
"யாரும் அவசரப்பட்டு ஒரு முடிவுக்கு வராதீக! சூடா இருக்குமுங்கிறத வேண்ணா ஒத்துக்கறேன். மத்ததைச் சாப்பிட்டுச் சொல்லுங்க!"
ஹலோ எங்க ஓடறீங்க.... இன்னும் இதுமாதிரி குறிப்பெல்லாம் சொல்லறேங்க... பிளீஸ்... ஓடாதீங்க... ஹலோ... ஹலோஓஓஓஓஓஓ...
Last edited by dsudhanandan on Fri Jul 01, 2011 4:28 pm; edited 5 times in total (Reason for editing : எழுத்துப் பிழைகளைச் சரி செய்ய)
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: J J உப்புமா
///எத வேண்ணா போடலாம் அக்கா... படிச்சிட்டு அவங்க தலயிலெ அவங்களே முட்டிக்குவாங்க... நம்பள ஒண்ணும் பண்ண மாட்டாங்க... ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லவங்க....////
Re: J J உப்புமா
ஒரு உப்புமாவுக்காக துப்பாக்கியெல்லாம் தூக்கலாமா... அட்ரஸ் கொடுத்தா அக்கா செஞ்ச J J உப்புமாவ பார்சல் அனுப்பறேங்க...தாமு wrote:///எத வேண்ணா போடலாம் அக்கா... படிச்சிட்டு அவங்க தலயிலெ அவங்களே முட்டிக்குவாங்க... நம்பள ஒண்ணும் பண்ண மாட்டாங்க... ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லவங்க....////
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: J J உப்புமா
dsudhanandan wrote:ஒரு உப்புமாவுக்காக துப்பாக்கியெல்லாம் தூக்கலாமா... அட்ரஸ் கொடுத்தா அக்கா செஞ்ச J J உப்புமாவ பார்சல் அனுப்பறேங்க...தாமு wrote:///எத வேண்ணா போடலாம் அக்கா... படிச்சிட்டு அவங்க தலயிலெ அவங்களே முட்டிக்குவாங்க... நம்பள ஒண்ணும் பண்ண மாட்டாங்க... ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லவங்க....////
Re: J J உப்புமா
ஏன் பாஸ் உப்புமா வேண்டாமா.....தாமு wrote:
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» உப்புமா வகைகள்
» 108 உப்புமா
» சோள ரவை உப்புமா
» பிரட் இல் பலவகை உணவுகள் - வெஜ் சாண்ட்விச்
» சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள - சோள அடை !
» 108 உப்புமா
» சோள ரவை உப்புமா
» பிரட் இல் பலவகை உணவுகள் - வெஜ் சாண்ட்விச்
» சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள - சோள அடை !
Page 1 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|