ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள்

4 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள் - Page 2 Empty மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள்

Post by சிவா Wed Jun 29, 2011 8:01 am

First topic message reminder :

ஆயுதங்களைக் கொண்டு வர வேண்டாம் என பெர்க்காசா ஆதரவாளர்களுக்கு அறிவுரை

ஜுலை 9ம் தேதி பெர்சே பேரணியை எதிர்கொள்வதற்கு தாங்கள் நடத்தும் பேரணிக்கு பெர்க்காசாவும் அதன் அரசு சாரா தோழமை அமைப்புக்களும் “வெறும் கைகளுடன்” வரும்.

இவ்வாறு கூறும் பெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலி, அன்றைய தினம் தமது உறுப்பினர்கள் யாரும் வன்முறையில் ஈடுபட மாட்டார்கள் என்பதற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என்றார்.

“நான் உத்தரவாதம் அளிக்க முடியாது. வன்முறையில் இறங்குவது யாராவது இருக்கலாம். பெர்க்காசா உறுப்பினர்கள் அதில் சம்பந்தப்பட்டால் அது அவர்களுடைய தவறாகும்.”

“பலர் அங்கு கூடும் போது யார் அதனைத் தொடங்கினார்கள் என்பது உங்களுக்கு எப்படித் தெரியும் ? பெர்சே கூட எங்கள் அமைப்புக்குள் ஊடுருவி இருக்கலாம்,” என்றார் அவர்.

“10 மாவட்டங்களிலும் 22 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் பெர்க்காசா விளக்கக் கூட்டங்களை நடத்தியுள்ளது. “யாரையும் தூண்ட வேண்டாம்.ஆயுதங்களைக் கொண்டு வர வேண்டாம். வெறும் கைகளுடன் வாருங்கள்,” என உறுப்பினர்களுக்குக் கூறப்பட்டுள்ளது.”

சீனர்கள் வீட்டுக்குள் இருக்க வேண்டும் என்றும் உணவுப் பொருட்களை சேமித்து வைக்க வேண்டும் என்றும் தாம் ஏற்கனவே கூறிய ‘அறிவுரையை’ அவர் மீண்டும் வெளியிட்டார்.

“நாடு குழப்பத்தில் இருக்கும் போது, சாலைகள் போக்குவரத்து தேங்கியிருக்கும் போது நீங்கள் எப்படி சந்தைக் கூடங்களுக்குச் செல்ல முடியும் ?” என அவர் வினவினார்.

சாலைகளிலிருந்து மக்களை விலக்கி வைப்பதே தமது நோக்கம் என்றும் அவர் விளக்கினார்.

போலீஸ் அனுமதி இல்லாமல் பெர்க்காசா சாலைகளில் ஆர்ப்பாட்டம் செய்யவிருப்பது இதுவே முதன் முறையாகும் என்றும் “அனுமதி இல்லாத பெர்சேக்கு பதிலடி” கொடுப்பதற்கே அவ்வாறு செய்யப்படுகிறது என்றும் இப்ராஹிம் சொன்னார்.


மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள் - Page 2 Empty Re: மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள்

Post by சிவா Wed Jul 06, 2011 7:14 pm

பெர்சே 2.0 தொடர்பில் 17 பேர் மீது குற்றம் சாட்டப்படும்

பெர்சே 2.0 பேரணியை ஒடுக்கும் நடவடிக்கைகள் தொடருகின்றன. அதன் கீழ் இன்றும் நாளையும் நீதிமன்றத்தில் 17 பேர் மீது குற்றம் சாட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காஜாங் நகராட்சி மன்றக் கூட்டத்துக்கு மஞ்சள் நிற பெர்சே டி சட்டைகளை அணிந்து வந்ததற்காக 11 காஜாங் நகராட்சி மன்ற உறுப்பினர்கள் மீது இன்று குற்றம் சாட்டப்படும் எனத் தெரிய வருகிறது.

சங்கச் சட்டத்தின் 47வது பிரிவின் கீழ் “சட்ட விரோத சங்கம் ஒன்றின் பிரச்சாரப் பொருட்களை வெளியிட்டதாக” அவர்கள் மீது குற்றம் சுமத்தப்படும் என்று அந்த 11 பேரையும் பிரதிநிதிக்கும் வழக்குரைஞர் லிம் லிப் எங் கூறினார்.

அவர்கள் சங்கச் சட்டத்தின் 47வது பிரிவின் கீழான குற்றச்சாட்டுடன் அதே சட்டத்தின் 48வது பிரிவின் கீழ் இன்னொரு குற்றச்சாட்டையும் எதிர்நோக்குவர்.

11 காஜாங் நகராட்சி மன்ற உறுப்பினர்களில் அறுவர் டிஎபி மற்றும் அரசு சாரா அமைப்புக்களை சார்ந்தவர்கள். அந்த ஆறு பேரும் பிற்பகல் 3 மணிக்கு காஜாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு செல்வது உறுதி செய்யப்பட்டுள்ளதாக டிஎபி சிகாம்புட் நாடாளுமன்ற உறுப்பினருமான லிம் சொன்னார்.

பிகேஆர், பாஸ் நியமனம் செய்த மற்ற ஐவரும் இன்று நீதிமன்றத்துக்கு செல்வார்களா என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை.

மற்ற அறுவரும் எம்பவர் என்னும் ஒர் உள்நாட்டு அரசு சாரா அமைப்பின் ஊழியர்கள் ஆவர். அவர்கள் மீது நாளை குற்றம் சாட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குற்றச்சாட்டுக்கள் தெளிவாக இல்லை

ஆறு எம்பவர் ஊழியர்கள் சம்பந்தப்பட்ட வழக்கின் விவரங்கள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என அவர்களுடைய வழக்குரைஞரான ஹனி தான் கூறினார்.

நாளை அவர்கள் மீது குற்றம் சாட்டப்படும் என்பதை மட்டுமே அவர் உறுதிப்படுத்தினார்.

அவர்கள் எந்த நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவர் என்பதும் தெரியவில்லை என அவர் சொன்னார்.

“அவர்கள் எந்தத் தவறும் செய்யவில்லை. நாங்கள் வழக்கு முடியும் வரை போராடுவோம். அவர்கள் விடுவிக்கப்படுவர் என நாங்கள் நம்புகிறோம்.”

பெட்டாலிங் ஜெயா போலீஸ் நிலையத்தில் வாக்குமூலம் அளிக்க வருமாறு அழைக்கப்பட்ட அந்த ஆறு எம்பவர் ஊழியர்களுடன் அங்கு சென்றிருந்த தான் நிருபர்களிடம் பேசினார்.

பெர்சே செயலகமாகவும் இயங்கிய எம்பவர் அலவலகத்தைக் கடந்த புதன் கிழமை போலீசார் சோதனை செய்தனர். பெர்சே சட்டவிரோத அமைப்பு எனப் பிரகடனம் செய்யப்பட்ட பின்னர் அந்த அமைப்பை ஒடுக்குவதற்கு போலீசார் மேற்கொண்ட நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக அந்தச் சோதனை அமைந்திருந்தது.

அதிகாரிகள், பெர்சே 2.0 பிரசுரங்களையும் டி சட்டைகளையும் அங்கு கண்டு பிடித்தனர். ஏழு எம்பவர் ஊழியர்கள் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டனர்.

மலேசியாஇன்று


மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள் - Page 2 Empty Re: மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள்

Post by சிவா Wed Jul 06, 2011 7:15 pm

பேரணியை மெர்டேகா அரங்கில் நடத்த பெர்சே விரும்புகிறது

பெர்சே அதன் சனிக்கிழமை பேரணியை மெர்டேகா அரங்கில் பிற்பகல் மணி 2-இலிருந்து மாலை மணி 4 வரை நடத்த முடிவு செய்துள்ளது.

இணக்கப்போக்கைக் கடைப்பிடிக்குமாறு மாட்சிமை தங்கிய மாமன்னர் கேட்டுக்கொண்டிருப்பதை அடுத்து இவ்வாறு முடிவு செய்யப்பட்டதாக அதன் தலைவர் எஸ்.அம்பிகா இன்று காலை கோலாலும்பூர்-சிலாங்கூர் சீன அசெம்ப்ளி மண்டபத்தில் செய்தியாளர் கூட்டமொன்றில்தெரிவித்தார்.

தேர்தல் முறையை மேம்படுத்தும் வழிகளைக் கண்டறிய அரச விசாரணை ஆணையம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று பெர்சே கூட்டணி விரும்புவதாகவும் அம்பிகா கூறினார்.

நேற்று தனது எட்டு-அம்ச கோரிக்கைகளை மாமன்னரிடம் முன்வைத்த பெர்சே 2.0, பேரணி தொடர்பில் கைது செய்யப்பட்ட அல்லது தடுத்து வைக்கப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டதாக அவர் சொன்னார்.

அதிகாரிகள் பெர்சே 2.0-இன் ஆதரவாளர்களுக்கு தொல்லை கொடுப்பதையும் நெருக்குதல் கொடுப்பதையும் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அக்கூட்டணி கேட்டுக்கொண்டது.


மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள் - Page 2 Empty Re: மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள்

Post by சிவா Wed Jul 06, 2011 7:15 pm

பெர்சே-க்கு இடமளிக்க மெர்டேகா அரங்கு மறுப்பு

மெர்டேகா அரங்கில் பெர்சே 2.0 பேரணியை நடத்த அந்த அரங்கின் நிர்வாகம் அனுமதி அளிக்க மறுத்துவிட்டது.

பேரணிக்காக அந்த அரங்கைப் பதிவு செய்ய முயன்றபோது அங்கிருந்த அதிகாரி பல “சாக்குப்போக்குகள்” கூறி பதிவை ஏற்க மறுத்ததாக பெர்சே அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

“ ‘உள் விளையாட்டு நிகழ்வுகள்’, ‘புதுப்பிக்கும் வேலைகள்” எனத் தெளிவற்ற காரணங்கள் கூறப்பட்டன.

“இவ்வளவுக்கும் அண்மைய காலம்வரை அங்கு ‘கொன்சர்ட் ரக்சக்சா 2’ நிகழ்வை ஜூலை 9-இல் நடத்தத் திட்டமொன்று இருந்தது”, என்று அவ்வறிக்கை கூறியது.

ரோக் இசைக்குழுக்கள் சுவீட் சேரிட்டியும் புளூஸ் கேங்கும் பங்கேற்கவிருந்த கொன்சர்ட் ரக்சக்சா 2 பாதுகாப்புக் காரணங்களுக்காக அக்டோபர் 1-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள் - Page 2 Empty Re: மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள்

Post by சிவா Wed Jul 06, 2011 7:17 pm

உள்துறை அமைச்சர்: பெர்சே இன்னும் சட்ட விரோதமானதே!

பெர்சே 2.0 அமைப்பு இன்னும் சட்ட விரோதமானதே. அது சட்ட நடவடிக்கைக்கு இன்னும் உட்பட்டதே என்று உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் கூறியிருக்கிறார்.

பெர்சே 2.0 தலைவர்களுக்கு அகோங் நேற்று பேட்டியளித்த போதிலும் அரசாங்கத்தின் நிலை இன்னும் மாறவில்லை என அவர் சொன்னார்.

“அவர்கள் தடை செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது இன்னும் தடை உள்ளது. யாரும் சட்டத்திற்கு மேலானவர்கள் அல்ல. துவாங்கு அவர்களைச் சந்தித்தார் என்பதால் அவர்கள் இனிமேல் சட்டவிரோதமானவர்கள் அல்ல என அர்த்தம் கொள்ளக் கூடாது,” என ஹிஷமுடின் இன்று புத்ராஜெயாவில் நிருபர்களிடம் கூறினார்.

ஹிஷாமுடின் உள்துறை அமைச்சர் என்னும் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி பெர்சே 2.0 அமைப்பை ஜுலை முதல் தேதி சட்ட விரோதமானது எனப் பிரகடனம் செய்தார்.

பெர்சே 2.0ன் சட்டப்பூர்வ நிலை குறித்தும் அது தனது பேரணியை நடத்துவதற்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பது பற்றியும் எழுப்பப்பட்ட பல கேள்விகளைத் தவிர்த்த அவர் ஒன்றை மட்டும் மீண்டும் மீண்டும் சொன்னார்- “போலீசாருடன் பேரணி ஏற்பாட்டாளர்கள் விவாதிக்க வேண்டும்.”

என்றாலும் பெர்சே கூட்டணி அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டியதில்லை என எஸ் அம்பிகா கூறிக் கொள்வதை ஹிஷாமுடின் நிராகரித்தார். அனுமதியைப் பெறுவது முன் நிபந்தனைகளில் ஒன்று என்பதை தேசியப் போலீஸ் படைத் தலைவர் தெளிவாக அறிவித்துள்ளதாக அவர் வலியுறுத்தினார்.

“தேசியப் போலீஸ் படைத் தலைவர் நேற்று விடுத்த அறிக்கையில் அதனைத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். நாம் அனைவரும் இந்த நாட்டின் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டுள்ளோம். நீங்கள் அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனக் கூறும் போலீஸ் சட்டத்தின் 27வது பிரிவையும் அவருடைய அறிக்கை குறிப்பிட்டுள்ளது.”

சனிக்கிழமை உள் அரங்கப் பேரணி நிகழ்வதற்கு அனுமதிக்கப்படும் என்பதற்கு அரசாங்கம் உத்தரவாதம் அளிக்குமா இல்லையா எனப் பல முறை கேட்கப்பட்ட போது, ஹிஷாமுடின் மீண்டும் மழுப்பலாக அது ஏற்பாட்டாளர்கள் விண்ணப்பத்துக்கு அனுமதிப்பதைப் பொறுத்துள்ளது என்று மட்டும் கூறினார்.

“அவர்கள் விண்ணப்பிக்கட்டும். அதனை போலீசார் பின்னர் பரிசீலிப்பது நடைமுறையாகும். அவர்கள் எவ்வளவு விரைவாக விண்ணப்பிக்கின்றனரோ அவ்வளவுக்கு விரைவாக போலீசார் அதனைப் பரிசீலிக்க முடியும்… அனுமதி, கூட்டத்தை நடத்துவதற்கு அவர்கள் விண்ணப்பிப்பதைப் பொறுத்துள்ளது.,” என்றார் உள்துறை அமைச்சர்.

ஏற்பாட்டாளர்கள் அனுமதிக்கு விண்ணப்பித்து விதிக்கப்படும் எல்லா நிபந்தனைகளையும் நிறைவேற்றினால் பேரணிக்கு அனுமதி கொடுக்கப்படும் எனக் கூறிய அவர் விவரங்களை வெளியிடவில்லை.

“நாங்கள் முதலில் அவர்களுடைய விண்ணப்பத்துக்காக காத்திருக்கிறோம். அவர்கள் விண்ணப்பிக்கும் போது போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையில் நிபந்தனைகள் பற்றி விவாதிக்கப்படும்.”

ஒடுக்குவது தொடரும்

பெர்சே 2.0 இன்னும் சட்ட விரோதமானதே. ஆகவே அதன் ஆதரவாளர்களை ஒடுக்கும் நடவடிக்கைகளை அதிகாரிகள் முடிவுக்குக் கொண்டு வருவதற்கு எந்தக் காரணமும் இல்லை. ஏனெனில் அவர்கள் இன்னும் சட்ட விரோத அமைப்பு ஒன்றுடன் தொடர்புடையவர்கள் என்றே கருதப்படுகின்றனர் என்று ஹிஷாமுடின் குறிப்பிட்டார்.

“…… அவர்கள் சட்ட விரோதமாக இருக்கும் வரையில் சட்ட விரோதமான ஒன்றுடன் சம்பந்தப்பட்ட எந்த நடவடிக்கையும் நாட்டின் சட்டங்களுக்கு உட்பட்டதாகவே இருக்கும். நாங்கள் சட்டம் மீது ஒரே மாதிரியான நிலையை எப்போதும் கடைப்பிடித்து வருகிறோம்.”

“ஆனால் இப்போதைய சூழ்நிலைகளின் அடிப்படையில் பார்த்தால் அவர்கள் (பெர்சே 2.) அரங்கத்தில் கூட விரும்புகின்றனர். ஆகவே விவாதிப்பதற்கு இடம் இருக்கிறது. அவர்கள் தங்களுடைய கவலைகளைத் தெரிவிப்பதும் அதற்கான ஆற்றலும் டி சட்டைகளை அணிவதை மட்டும் சார்ந்திருக்கவில்லை. அது அதனை விடப் பெரியது.

“நியாயமான சுதந்திரமான பொதுத் தேர்தல்களைப் பற்றிப் பேசுவது தான் முக்கியக் கருத்து ஆகும். அரசாங்கமும் அதனைத் தான் விரும்புகிறது. நீங்கள் ஒர் அரங்கில் நடத்த வேண்டும் என்றால் டி சட்டை அல்லது பெயர் ஒரு பிரச்னையாக இருக்க வேண்டும் ? நாம் போராடுவதாகக் கூறிக் கொள்ளும் நியாயமான சுதந்திரமான தேர்தல்கள் என்ற அடிப்படை விஷயத்திலிருந்து நாம் விலகிச் செல்லக் கூடாது.”

அரங்கத்தை வழங்க முன் வந்தது ‘நல்ல மாற்றம்’

பெர்சே 2.0ஐயும் அதன் ஆதரவாளர்களையும் அரசாங்கம் ஒடுக்குவதை அனைத்துலக அமைப்புக்கள் கண்டித்துள்ளதை நிராகரித்த ஹிஷாமுடின், அரங்கத்தை வழங்க முன் வந்துள்ளது ‘நல்ல மாற்றம்’ என்றார்.

பெரிய அளவில் சாலைகளில் பேரணி நடத்த பெர்சே 2.0 முதலில் திட்டமிட்டிருந்ததால் “அதனைச் சமாளிப்பதற்கு வேறு வழி இல்லாததால்” போலீசார் ஒடுக்கும் நடவடிக்கைகளை நாடியதாக அவர் கூறிக் கொண்டார்.

“ஆனால் இப்போது எங்களுக்கு மாற்று வழி உள்ளது, அது நல்ல முன்னேற்றம் இல்லையா ?

அரங்கத்தை வழங்க முன் வந்தது குறித்த அனைத்துலக அரசு சாரா அமைப்புக்களின் பதிலை நான் பார்க்க விரும்புகிறேன். கண்காணிக்கவும் விரும்புகிறேன்.”

“அரங்கத்தில் கூடுவதற்கு நாங்கள் வாய்ப்பு அளித்த பின்னரும் அவை அதனை ஒடுக்குமுறையாகக் கருதினால் அவை பாகுபாடு காட்டுகின்றன. அரசாங்கத்துக்கு நியாயமாக நடந்து கொள்ளவில்லை எனப் பொருள்படும்.”

தடுத்து வைக்கப்பட்டுள்ள பெர்சே 2.0 ஆதரவாளர்கள் விடுவிக்கப்பட வேண்டும் எனக் கோருவதற்கு உள்நாட்டு, அனைத்துலக அரசு சாரா அமைப்புக்களூக்கு உரிமை இல்லை என்று ஹிஷாமுடின் மேலும் சொன்னார்.

“அதனை அவை சொல்லக் கூடாது. ஏனெனில் ஒரு மனிதர் எப்போது விடுவிக்கப்பட வேண்டும் என்பதை சட்டமே முடிவு செய்ய வேண்டும்.”


மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள் - Page 2 Empty Re: மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள்

Post by சிவா Wed Jul 06, 2011 7:19 pm

அம்னோ இளைஞர் பிரிவு: மெர்தேக்கா அரங்கத்தை பெர்சே பயன்படுத்த முடியாது

மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள் - Page 2 Bersih-rally-in-stadium-merdeka1

ஜூலை 9 இல் பேரணிக்கு மெர்தேக்கா அரங்கத்தை பயன்படுத்தும் பெர்சேவின் திட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அம்னோ இளைஞர் பிரிவு கூறுகிறது.

மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள் - Page 2 Umno-youth-information-reezal
மெர்தேக்கா அரங்கம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. பெர்சேயிக்கு அதனைக் கொடுக்கக்கூடாது என்று அம்னோ இளைஞர் பிரிவின் தகவல் தலைவர் ரீஸல் மரைக்கான் நைனா மரைக்கான் இன்று கூறினார்.

“நாங்கள் மெர்தேக்கா அரங்கத்தை நிராகரிக்கிறோம். அரசியல் கூட்டத்திற்கான இடம் அதுவல்ல. பக்கத்தான் ராக்யாட் (ஆட்சி புரியும்) மாநிலத்தில் செய்யட்டும். மேலும், ஷா அலாம் அரங்கம் அளிக்கப்பட்டுள்ளது”, என்றாரவர்.


மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள் - Page 2 Empty Re: மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள்

Post by சிவா Fri Jul 08, 2011 1:43 am

பிகேஆர் மகளிர் பிரிவு: ‘ஹிஷாமுடின் தேசத் துரோகக் குற்றத்தைப் புரிந்துள்ளார்’

பெர்சே 2.0 அமைப்பு இன்னும் சட்ட விரோத அமைப்பே என வலியுறுத்துவதின் மூலம் உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன், அகோங்கிற்கு எதிராக தேசத் துரோகக் குற்றத்தை புரிந்துள்ளதாக பிகேஆர் மகளிர் பிரிவு இன்று குற்றம் சாட்டியுள்ளது.

பெர்சே 2.0 அரங்கம் ஒன்றில் பேரணியை நடத்துவதற்கு அகோங் இணக்கம் தெரிவித்துள்ள வேளையில் அந்த அமைப்பு இன்னும் சட்ட விரோதமானதே என உள்துறை அமைச்சர் கூறுவதாக அந்தப் பிரிவின் தலைவி சுராய்டா கமாருதின் சொன்னார்.

“போலீசார் ஒடுக்குமுறையைத் தொடருவது அவமதிப்பதாகும். அமைதியான கூட்டத்துக்கு மாமன்னர் அங்கீகாரம் அளித்துள்ளது தெளிவான விஷயமாகும்.”

“ஒரு மலாய்க்காரர், மலேசியன் என்ற முறையில் ஹிஷாமுடின் அதற்குக் கட்டுப்பட வேண்டும்,” என சுராய்டா பெட்டாலிங் ஜெயாவில் பிகேஆர் தலைமையகத்தில் நிருபர்களிடம் கூறினார்.

கடந்த இரண்டு நாட்களாக அந்த விவகாரத்தை கையாளுவதில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மாறி மாறிப் பேசுவதாகவும் அவர் சாடினார்.

“அந்தக் குளறுபடியிலிருந்து தம்மை விலக்கிக் கொள்ள நஜிப் முயலுகிறார். அவர் பலவீனமான தலைவர் என்பதையே அது காட்டுகிறது. தமது நிர்வாகத்தில் உள்ள அமைச்சர்களுடைய விருப்பங்களுக்கும் மருட்டல்களுக்கும் அவர் அடிபணிவதாகத் தோன்றுகிறது,” என்றும் பிகேஆர் மகளிர் தலைவி சொன்னார்.

“அது ஒரு கேள்வியை எழுப்புகிறது; யாருக்கு அதிகமான அதிகாரம் உள்ளது ? அகோங்கிற்கா, நஜிப்புக்கா அல்லது ஹிஷாமுடினுக்கா ?” என அவர் வினவினார்.


மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள் - Page 2 Empty Re: மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள்

Post by சிவா Fri Jul 08, 2011 1:46 am

எஸ்பிஎடி: வெள்ளிக்கிழமையும் சனிக்கிழமையும் கோலாலம்பூருக்கு செல்வதற்கு பஸ் அனுமதிகள் கிடையாது

கோலாலம்பூருக்கு செல்வதற்கு வெள்ளிக்கிழமையும் சனிக்கிழமையும் தற்காலிக பஸ் அனுமதிகள் ஏதும் இல்லை. ஆனால் எல்ஆர்டி, கேடிஎம், பஸ் சேவைகள் கோலாலம்பூரில் வழக்கம் போல நடைபெறும்.

இவ்வாறு ஸ்பாட் என்ற தரைப் பொதுப் போக்குவரத்து ஆணையத் தலைவர் சையட் ஹமீட் அல்பார் அறிவித்துள்ளார். பெரு நாள் அல்லாத காலங்களில் தற்காலிக பஸ் அனுமதிகளை வழங்குவதில்லை என்ற கொள்கையை தமது ஆணையம் தொடர்ந்து கடைப்பிடிக்கும் என அவர் விளக்கினார்.

“நாங்கள் தற்காலிக பஸ் அனுமதிகளை முடக்கவில்லை. மாறாக அதே நிலையைக் கடைப்பிடித்து வருகிறோம்,” என அவர் மலேசியாகினியிடம் கூறினார்.

“அதற்கு எந்த ஒரு பேரணிக்கும் தொடர்பு இல்லை.”

“சீனப் புத்தாண்டு, நோன்புப் பெருநாள், தீபாவளி போன்ற பெருநாள் காலங்களைத் தவிர வேறு எந்த நேரத்திலும் நாங்கள் தற்காலிக பஸ் அனுமதிகளை வெளியிடுவதில்லை.”

சில ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது போல அது உத்தரவல்ல எனக் குறிப்பிட்ட அவர் நடப்புக் கொள்கையை மீண்டும் எடுத்துக் கூறும் நோட்டீசே அது எனச் சொன்னார்.

கோலாலம்பூரில் சனிக்கிழமையன்று எல்லாப் பொதுப் போக்குவரத்துச் சேவைகளும் வழக்கம் போல நடைபெறும் என சையட் ஹமீட் மேலும் கூறினார்.

“என்னைப் பொறுத்த வரையில் எல்ஆர்டி சேவைகள் ஏதும் ரத்துச் செய்யப்பட்டதாக எனக்குத் தெரியவில்லை.”

சனிக்கிழமையன்று எல்ஆர்டி சேவைகள் நிறுத்தப்பட மாட்டாது என்பதை அந்தச் சேவைகளை நடத்தும் பிராசார்னா நிறுவனத்தின் பேச்சாளர் மலேசியாகினியிடம் உறுதிப்படுத்தினார்.

“சேவைகள் வழக்கம் போல நடைபெறும். என்றாலும் போலீசார் போன்ற எந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் முடிவுக்கும் நாங்கள் கட்டுப்படுவோம்,” என அவர் சொன்னார். போலீசாரிடமிருந்து தங்களுக்கு இதுவரையில் எந்த ‘அறிவுரையும்’ வரவில்லை என்றார் அவர்.

சனிக்கிழமைக்குத் திட்டமிடப்பட்டுள்ள பெர்சே பேரணிக்கு மக்கள் செல்வதைக் கட்டுப்படுத்த அன்றைய தினம் அதிகாரிகள் பொதுப் போக்குவரத்துச் சேவைகளை மூடக் கூடும் என பேஸ் புக் போன்ற சமூக இணையத் தளங்களில் ஏற்கனவே ஆரூடம் கூறப்பட்டிருந்தது.


மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள் - Page 2 Empty Re: மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள்

Post by சிவா Fri Jul 08, 2011 1:48 am

பேரணியில் கலந்துகொள்ளாதீர், பிஎஸ்டி உத்தரவு

மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள் - Page 2 Bersih-edu

அரசு ஊழியர்கள் சட்டவிரோத பேரணியிலோ நாட்டின் பாதுகாப்புக்கு மிரட்டலாக விளங்கும் எந்தவோர் இயக்கத்திலோ கலந்துகொள்ளக்கூடாது என்று தடைவிதித்துப் பொதுச் சேவைத்துறை (பிஎஸ்டி) சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.

பிஎஸ்டி தலைமை இயக்குனர் அபு பக்கார் அப்துல்லாவின் கையொப்பத்தைக் கொண்டுள்ள ஜூன் 30ஆம் தேதியிடப்பட்ட அந்த அறிக்கை பேரணியின் பெயரைக் குறிப்பிடவில்லை.

இவ்வார இறுதியில் மூன்று பேரணிகள் நடத்தத் திட்டமிடப்படுள்ளது. தூய்மையான, நியாயமான தேர்தல்களுக்குக் கோரிக்கை விடுக்கும் கூட்டணி (பெர்சே 2.0), பெர்க்காசா, அம்னோ இளைஞர் பகுதி ஆகிய மூன்றும் அப்பேரணிகளுக்குத் திட்டமிட்டுள்ளன.

எல்லா அமைச்சுகளுக்கும் அரசுத்துறைகளுக்கும் மாநிலச் செயலகங்களுக்கும் அனுப்பிய அந்த மூன்று-பக்கக் கடிதத்தில் அபு பக்கார், அரசு ஊழியர்கள் எந்தவோர் இயக்கத்திலும் கட்சிகள் ஏற்பாடு செய்யும் கூட்டங்களிலும் தீவிரமாக ஈடுபடுவதோ, அலுவலக நேரங்களில் அப்படிப்பட்ட கூட்டங்களில் கலந்துகொள்வதோ, சட்டவிரோதக் கூட்டம் பற்றித் தகவலளிக்க அலுவலகப் பொருள்களைப் பயன்படுத்தவோ கூடாது என்பதை நினைவுறுத்தினார்.

அரசு ஊழியர்கள் பொதுச் சேவையின் நடுவுநிலைக் கொள்கைகளைப் பாதுகாக்க வேண்டும். பாகுபாடு காட்டலாகாது. வழங்கப்படும் சேவை, நிலையானதாகவும் நடுநிலை வாய்ந்ததாகவும் இருப்பதையும் எந்தவொரு இயக்கத்துக்கும் அல்லது அரசியல் கட்சிகளுக்கும் ஆதரவாக இல்லாமலிருப்பதையும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றவர் நினைவுபடுத்தினார்.

இந்த விதிகளை மீறினால் 1993 அரசு அதிகாரிகள் நிலை ஆணைகளின்கீழ் எடுக்கப்படும் நடவடிக்கைகளையும் அவர் விவரித்திருந்தார்.

கல்வி அமைச்சும் ஜூன் 30ஆம் தேதியிடப்பட்ட சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. அதில் பெர்சே 2.0-இன் பெயர் தெளிவாகவே குறிப்பிடப்பட்டுள்ளது.

பெர்சே 2.0, தேர்தல்கள் வெளிப்படையாகவும் நியாயமாகவும் நடைபெற வேண்டும் என்று கோரிக்கையுடன் “ஜனநாயகப் பேரணி”க்கு ஏற்பாடு செய்துள்ளதாக அது கூறியது.

“அதைச் சட்டவிரோதக் கூட்டம் என்று போலீசார் வகைப்படுத்தியுள்ளனர். அதன் விளைவாக கலகங்களும் ஆர்ப்பாட்டங்களும் பூசல்களும் தோன்றலாம். அக்கூட்டம் நாட்டின் பாதுகாப்பையும் நிலைத்தன்மையையும் பாதிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது”, என்று அமைச்சின் தலைமை இயக்குனர் அப்துல் கப்பார் மஹ்மூட் அதில் தெரிவித்துள்ளார்.

“கல்வி அமைச்சின்கீழ் உள்ள அதிகாரிகளும் பணியாளர்களும் கல்விக்கழகங்களில் உள்ள மாணவர்களும் சட்டவிரோத அமைப்பான பெர்சே ஏற்பாடு செய்யும் பேரணிக்குச் செல்வதோ, அதில் கலந்துகொள்வதோ தடை செய்யப்பட்டுள்ளது”, என்றாரவர்..

கல்வி அமைச்சின் அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் அதிகாரிககளின் நடவடிக்கைகளுக்கு ஆளாகாமல் தடுப்பதற்காகவே அவ்வறிக்கை விடுக்கப்பட்டதாக அப்துல் கப்பார் கூறினார்.


மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள் - Page 2 Empty Re: மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள்

Post by சிவா Fri Jul 08, 2011 2:00 am

மலாயா பல்கலைக்கழகத்தில் போலீஸ் முகாம்கள்

மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள் - Page 2 UM-300x175

கலகத் தடுப்புப் போலீசார் உட்பட போலீஸ் படையின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் இப்போது மலாயா பல்கலைக்கழக தங்கும் விடுதிகளில் முகாம்களை அமைத்துக் கொண்டுள்ளனர்.

சனிக்கிழமை கோலாலம்பூரில் நடத்தப்படுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள பேரணியின் தொடர்பில் அங்கு அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.

அந்த விவரங்களை மலாயா பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதித்துவ மன்றம் இன்று வெளியிட்டது.

“அந்தப் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழையும் யாரும் வளாகம் முழுவதும் போலீஸ் பஸ்களும் டிரக்குகளும் கலகத் தடுப்புப் போலீஸ் வாகனங்களும் நிறைந்திருப்பதைக் காணலாம். அந்த வளாகம் முழுவதும் போலீஸ் பள்ளியாக மாற்றப்பட்டுள்ளதாக தோன்றுகிறது. இது மிகவும் அபத்தமானது.”

“அந்த போலீஸ்காரர்களும் கலகத் தடுப்புப் போலீசாரும் வெளியூர்களிலிருந்து வந்திருக்கும் சாத்தியமுள்ளது. பெர்சே கூட்டத்தை ஒடுக்குவதற்கு ஜுலை 9ம் தேதி அவர்கள் அனுப்பப்படலாம்,”என அந்தப் பல்கலைக்கழகத்தின் உயர் மாணவர் அமைப்பு கூறியது.

“போலீஸ்காரர்கள் மலாயா பல்கலைக்கழகத்தின் முதலாவது இரண்டாவது, ஏழாவது தங்கும் விடுதிகளில் தங்கியுள்ளதாக தெரிய வருகிறது.” இப்போது அந்தப் பல்கலைக்கழகத்துக்கு விடுமுறைக் காலமாகும். அதனால் அந்த தங்கும் விடுதிகள் காலியாக உள்ளன.

நேற்று அந்த வளாகத்திற்குள் சென்ற போலீஸ் அதிகாரிகள் ஜுலை 12 வரை அங்கு தங்கியிருப்பர் என ஒர் அதிகாரி மலேசியாகினியிடம் கூறினார்.

கூட்டரசுத் தலைநகரில் உள்ள ஒரே ஒரு பொதுப் பல்கலைக்கழகம் மலாயாப் பல்கலைக்கழகமாகும். அது இஸ்தானா நெகாராவிலிருந்தும் மற்ற பெர்சே ஒன்று கூடும் இடங்களிலிருந்தும் எட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.


மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள் - Page 2 Empty Re: மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள்

Post by சிவா Fri Jul 08, 2011 2:06 am

ஐஜிபி: பேரணியை ஷா அலாமில் நடத்துங்கள்

மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள் - Page 2 IGP1-199x300

பெர்சே 2.0 ஷா அலாமில் உள்ள மெலாவத்தி அரங்கில் தனது பேரணியை நடத்தலாம் என ஐஜிபி என்ற தேசிய போலீஸ் படைத் தலைவர் இஸ்மாயில் ஒமார் யோசனை கூறியுள்ளார்.

சட்டப்பூர்வ அமைப்பு அல்லது தனிநபர்களின் பெயரில் அது கூடிய விரைவில் அனுமதிக்கு விண்ணப்பிப்பது நல்லது என்று அவர் சொன்னார்.

“கோலாலம்பூரில் நெரிசலாக இருப்பதால் மாநகருக்கு வெளியில் பேரணியை நடத்துமாறு நான் அவர்களுக்கு யோசனை கூறினேன். கோலாலம்பூரில் நடத்தினால் போக்குவரத்துப் பாதிக்கப்படும். வர்த்தகமும் குலையும். பேரணியில் சம்பந்தப்படாத மக்களுக்கும் சிரமம் ஏற்படும்.”

“நான் அவர்களுக்கு மெலாவத்தி அரங்கை பரிந்துரைத்தேன். சிலாங்கூர் மந்திரி புசாரும் அதனை வழங்க முன் வந்துள்ளார்.” அவர் பெர்சே 2.0 தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசனைச் சந்தித்த பின்னர் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தில் நிருபர்களிடம் கூறினார்.

ஆனால் அம்பிகா “பிடிவாதமாக” இருப்பதாகவும் அந்த யோசனையை நிராகரித்து விட்டதாகவும் இஸ்மாயில் சொன்னார்.

“மலேசியா பெரிய நாடு. மாநகர மத்தியில் நீங்கள் ஏன் ஒர் இடத்தைத் தேர்ந்தெடுத்து மற்றவர்களுக்கு தொந்தரவு கொடுக்கின்றீர்கள்?”

“இந்த நாட்டில் எத்தனை அரங்கங்கள் இருக்கின்றன? முப்பது அல்லது நாற்பது? மற்ற இடங்களைத் தேர்வு செய்யுங்கள். நீங்கள் உங்கள் செய்தியைச் சொல்ல வேண்டும்.”

“அரசாங்கம் அவர்களுக்கு அரங்கத்தைத் தருவதாக கூறியதே தவிர மெர்தேக்கா அரங்கத்தைக் கொடுப்பதாக சொல்லவே இல்லை.”

“நீங்கள் ஒரு செய்தியைச் சொல்ல விரும்பினால் பாகாங்கில் உள்ள ஒர் அரங்கில் அமர்ந்து கொண்டு உங்கள் செய்தியை சொல்ல முடியாதா?”

போலீசார் அனுமதியை வழங்குவதற்கு முன்னர் அரங்கத்தின் உரிமையாளரிடம் ஏற்பட்டாளர்கள் ஒப்புதல் பெற வேண்டும் என்றும் அவர் சொன்னார்.

பெர்சே 2.0 இன்னும் சட்டவிரோத அமைப்பே, அதனைப் பிரதிநிதிக்கின்ற அல்லது பிரச்சாரம் செய்கின்ற எவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசியப் போலீஸ் படைத் துணைத் தலைவர் காலித் அபு பாக்கார் நேற்று கூறியதை இஸ்மாயிலும் இன்று குறிப்பிட்டார்.

நன்றி: http://www.malaysiaindru.com


மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள் - Page 2 Empty Re: மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics
» மலேசியா: ஜுலை 9ம் தேதி எதுவும் நடக்கலாம் என பெர்க்காசா எச்சரிக்கிறது
» சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.பில். படிப்பில் சேர கடைசி தேதி நீட்டிப்பு ஜுலை 12-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
» அயோத்தி ராமர் கோவில் விவகாரம் சிவசேனா சார்பில் 24-ந் தேதி பேரணி உத்தவ் தாக்கரே பேட்டி
» அமைச்சர்: பெர்சே 2.0 பேரணி மீதான இணையத்தளப் போரில் தோற்றோம்
» ராயல் என்ஃபீல்டு கிளாஸிக் 500 லிமிடெட் எடிஷன் பைக்குகள் ஜுலை 15-ம் தேதி ரிலீஸ்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum