புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திகார் - கண்ணீருடன் கனிமொழி -சில காட்சிகள் (நக்கீரன்)
Page 1 of 1 •
திடுதிப்பென்று டெல்லிக்கு கலைஞர் கிளம்புவார் என்பதை தி.மு.க நிர்வாகிகளோ கலைஞர் குடும்பத்தினரோ எதி
ர்பார்க்கவில்லை. கனிமொழிக்கு சுப்ரீம்கோர்ட்டில் பெயில் பெட்டிஷன் விசாரணைக்கு வந்த ஜூன் 20-ந் தேதி கலைஞர் மிகவும் எதிர்பார்ப்புடனும் நம்பிக்கையுடனும் இருந்தார். பகல் 12.30 மணிக்கு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், பரபரப்பு அதிகமானது.
பெயில் பெட்டிஷன் டிஸ்மிஸ் என்ற தகவல் கிடைத்ததும் அதிர்ச்சியடைந்த கலைஞர், மறுநாளே டெல்லிக்கு செல்வது என முடிவெடுத்தார். ஃப்ளைட் டிக்கெட் புக் செய்யப்பட்டது. செவ்வாயன்று டெல்லிக்கு சென்ற கலைஞர், திகார் சிறையில் கனிமொழியை சந்தித்தார்.
கலைஞரின் இந்த ஜெட்வேக பின்னணி சென்னையிலும் டெல்லியிலும் கூர்ந்து கவனிக்கப்பட்டுள்ளது. பெயில் பெட்டிஷன் மீது சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, குற்றச்சாட்டுகள் முழுமையாகப் பதிவுசெய்யப்பட்ட பிறகு, கீழ் கோர்ட்டில் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்யலாம் என உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த உத்தரவு, கலைஞருக்கு பலத்த அதிர்ச்சியைக் கொடுத்தது. அன்று மதியம் அவர் சாப்பிடவில்லை. டெல்லியில் கனிமொழிக் காக ஆஜரான -ஆலோசனைகள் தெரிவித்த சட்ட வல்லுநர்களை போனில் தொடர்புகொண்டு பேசினார் கலைஞர்.
அவர்களோ, "அடுத்த சார்ஜ் ஷீட் எப்போது தாக்கலாகும் என்பது பற்றி சி.பி.ஐ. தரப்பில் தேதியை மாற்றி மாற்றி சொல்கிறார்கள். ஜூன் கடைசி வாரத்தில் இருக்கும் என்றார்கள். இப்போது ஜூலை 30-ந் தேதி என்கிறார்கள். சார்ஜ்ஷீட் போட்ட பிறகுதான், சார்ஜ் ஃப்ரேமிங் நடக்கும். வழக்கில் குற்றம்சாட்டப் பட்டிருப்பவர்களில் யாராவது, சார்ஜ் ஃப்ரேமிங் செய்வதை எதிர்த்தால், அது இன்னமும் தள்ளிப்போகும். ஏற்கனவே, கனிமொழிக்கு பெயில் கேட்டு கீழ்க்கோர்ட்டில் ஆர்க்யூ மெண்ட் நடந்தபோது, அவருக்கு மட்டும் என்ன சிறப்புச் சலுகை என்ற ரீதியில் பால்வாவின் வக்கீல் வாதாடினார். இதுபோன்ற எதிர்ப்பு கள் கிளம்பினால், சார்ஜ் ஃப்ரேமிங் சீக்கிரமாக நடக்காது. அதனால், "பெயில் பெட்டிஷன் போடுவதும் தள்ளிப்போகும்' என்று கலைஞரிடம் சொன்னதுடன், இந்த வழக்கில் சி.பி.ஐ. போகும் போக்கு பற்றியும் கவலை நிறைந்த குரலில் பேசி யிருக்கிறார்கள்.
பெயில் பெட்டிஷன் டிஸ்மிஸ் என்ற தகவல் கிடைத்ததும் அதிர்ச்சியடைந்த கலைஞர், மறுநாளே டெல்லிக்கு செல்வது என முடிவெடுத்தார். ஃப்ளைட் டிக்கெட் புக் செய்யப்பட்டது. செவ்வாயன்று டெல்லிக்கு சென்ற கலைஞர், திகார் சிறையில் கனிமொழியை சந்தித்தார்.
கலைஞரின் இந்த ஜெட்வேக பின்னணி சென்னையிலும் டெல்லியிலும் கூர்ந்து கவனிக்கப்பட்டுள்ளது. பெயில் பெட்டிஷன் மீது சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, குற்றச்சாட்டுகள் முழுமையாகப் பதிவுசெய்யப்பட்ட பிறகு, கீழ் கோர்ட்டில் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்யலாம் என உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த உத்தரவு, கலைஞருக்கு பலத்த அதிர்ச்சியைக் கொடுத்தது. அன்று மதியம் அவர் சாப்பிடவில்லை. டெல்லியில் கனிமொழிக் காக ஆஜரான -ஆலோசனைகள் தெரிவித்த சட்ட வல்லுநர்களை போனில் தொடர்புகொண்டு பேசினார் கலைஞர்.
அவர்களோ, "அடுத்த சார்ஜ் ஷீட் எப்போது தாக்கலாகும் என்பது பற்றி சி.பி.ஐ. தரப்பில் தேதியை மாற்றி மாற்றி சொல்கிறார்கள். ஜூன் கடைசி வாரத்தில் இருக்கும் என்றார்கள். இப்போது ஜூலை 30-ந் தேதி என்கிறார்கள். சார்ஜ்ஷீட் போட்ட பிறகுதான், சார்ஜ் ஃப்ரேமிங் நடக்கும். வழக்கில் குற்றம்சாட்டப் பட்டிருப்பவர்களில் யாராவது, சார்ஜ் ஃப்ரேமிங் செய்வதை எதிர்த்தால், அது இன்னமும் தள்ளிப்போகும். ஏற்கனவே, கனிமொழிக்கு பெயில் கேட்டு கீழ்க்கோர்ட்டில் ஆர்க்யூ மெண்ட் நடந்தபோது, அவருக்கு மட்டும் என்ன சிறப்புச் சலுகை என்ற ரீதியில் பால்வாவின் வக்கீல் வாதாடினார். இதுபோன்ற எதிர்ப்பு கள் கிளம்பினால், சார்ஜ் ஃப்ரேமிங் சீக்கிரமாக நடக்காது. அதனால், "பெயில் பெட்டிஷன் போடுவதும் தள்ளிப்போகும்' என்று கலைஞரிடம் சொன்னதுடன், இந்த வழக்கில் சி.பி.ஐ. போகும் போக்கு பற்றியும் கவலை நிறைந்த குரலில் பேசி யிருக்கிறார்கள்.
சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. வைத்த வாதங்கள் ரொம்பவும் கடுமையாக இருந்தன. கலைஞர் டி.வி.க்கு வந்த பணம் என்பது கடன் அல்ல, அது லஞ்சம்தான் என்று இதுவரை, கலைஞர் டி.வி. பண பரிவர்த்தனையில் மட்டும் கனி மொழியை சம்பந்தப்படுத்தி குற்றச் சாட்டுகளை அடுக்கி வந்த சி.பி.ஐ., இந்த முறை 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு விஷயத்திலேயே கனி மொழிக்கு தொடர்பிருப்பதாக வாதங்களை முன்வைத்து, பெயில் பெட்டிஷனை எதிர்த்தார்கள். இதே போன்ற நிலைமை நீடித்தால், கனிமொழி எப்போது வெளியே வருவார் என்ற நிச்சயம் இல்லாமல் போய்விடும் என்றும் சொல்லி யிருக்கிறார்கள். இதனைக் கேட்ட தும், மனதளவில் கலைஞர் கடும் அதிர்ச்சிக்குள்ளாகிவிட்டாராம்.
கனிமொழியின் பெயில் பெட்டிஷன் சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டதற்கும், அவரது விடுதலை தொடர்ந்து தாமதமாகி வருவதற்கும் தான்தான் காரணம் என்ற எண்ணம் கலைஞரின் மனதுக்குள் இருப்பதால்தான் அவர் இந்தளவு மன உளைச்சலுக்குள்ளாகி யுள்ளார் என்கிறார்கள் உடனிருப்ப வர்கள். கீழ்க்கோர்ட்டிலும், ஹை கோர்ட்டிலும் கனிமொழியின் ஜாமீன் பெட்டிஷன் தள்ளுபடி செய்யப்பட்ட பிறகு, சுப்ரீம் கோர்ட்டிற்குப் போவது பற்றி ஆலோசனை நடந்தது. அப்போது கலைஞருடன் சீனியர் வழக்கறிஞர்கள் மற்றும் மு.க.அழகிரி, டி.ஆர்.பாலு, துரைமுருகன், பொன்முடி, ஜெகத் ரட்சகன் உள்ளிட்டோர் உடனிருந் துள்ளனர்.
சுப்ரீம் கோர்ட்டில் நிச்சயம் பெயில் கிடைத்துவிடும் என அவர்கள் நம் பிக்கை தெரிவித்துள்ள னர். அங்கே பெயில் பெட்டிஷன் தாக்கல் செய்ய வேண்டுமென்றால் அதற்கு கனிமொழியின் கையெழுத்துத் தேவை. இதற்காக வக்கீல்கள் அவரை திகார் சிறையில் சந்தித்தபோது, "நான் இதில் கையெழுத்துப் போடவிரும்பவில்லை' என்று கனிமொழி மறுத்துள்ளார். ஏன் என்று வழக்கறிஞர்கள் கேட்டபோது, "இப்போதுதான் கீழ் கோர்ட்டிலும் அதையடுத்து ஹைகோர்ட்டிலும் பெயில் பெட்டிஷன் ரிஜக்ட் ஆயிடிச்சி. இப்ப சுப்ரீம் கோர்ட்டுக்குப் போவது சரியாக இருக்காது' என்ற கனிமொழி, அதற்கான காரணத்தையும் விவரித்திருக்கிறார்.
"இப்போது தேசிய அளவில் ஊழலுக்கு எதிரான இயக்கங்கள் தீவிரமா நடந்துக்கிட்டிருக்கு. அன்னா ஹசாரேவின் உண்ணாவிரதமும் பாபா ராம்தேவின் டெல்லி முற்றுகையும் மீடியாக்களால் பெரியளவில் பிரபலப்படுத்தப்பட்டிருக்கு. லோக்பால் மசோதா சம்பந்தமா அரசுக்கும் சமூக ஆர்வலர்களுக்கும் நடக்கும் பேச்சுவார்த்தைகளை மீடியாக்கள் மூலமாக பொதுமக்கள் கூர்ந்து கவனிச்சிக்கிட்டிருக்காங்க. இதெல்லாம் ஊழலுக்கு எதிரான மனநிலையைத் தீவிரப்படுத்தியிருக்கு. இந்த நேரத்தில், நாம் சுப்ரீம் கோர்ட்டுக்குப் போனால், அங்கேயும் மீடியா வெளிப்படுத்தும் மனநிலைதான் பிரதிபலிக்கும். மீடியாக்களின் விமர்சனத்திற்குப் பயந்து, உண்மை பின்னுக்குத் தள்ளப்பட்டு, பெயில் பெட்டிஷன் தள்ளுபடியாகும் வாய்ப்புதான் அதிகமா இருக்கு. அதனால இப்ப சுப்ரீம் கோர்ட் போகவேண்டாம்' என்று சொல்லி, கையெழுத்துப் போடாமல் திருப்பி அனுப்பிவிட்டார் கனிமொழி.
திகாரில் அவரைச் சந்தித்தவர்கள் இந்த விவரத்தை கலைஞரிடம் தெரிவிக்க, கலைஞர் மீண்டும் ஆலோசனை நடத்தினார். சுப்ரீம் கோர்ட்டில் நிச்சயம் ஜாமீன் கிடைக்கும் என்ற நம்பிக்கை அவருக்கு ஏற்பட்டது. வெகேஷன் கோர்ட்டில் நீதிபதி சதாசிவம் பெஞ்ச்சில்தான் ஜாமீன் பெட்டிஷன் விசாரணைக்கு வருகிறது என்பதால் கலைஞருக்கு நம்பிக்கை தந்தவர்களுக்கு கூடுதலாகவே இருந்தது. மீடியாக்களின் பார்வையைத் தாண்டி, சட்டரீதியாக இதனைக் கவனிக்கக்கூடிய நீதிபதியான சதாசிவம், தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கு உண்மை நிலவரங்கள் நன்றாகவே தெரியும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பு.
இதனை மீண்டும் கனிமொழியிடம் எடுத்துச் சொல்வதற்காக வழக்கறிஞர்களும், தி.மு.க. வி.ஐ.பி.க்களும் திகார் சிறைக்குச் சென்றனர். சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் கிடைக்கும் என்ற நம்பிக்கையை அவரிடம் தெரிவித்திருக் கிறார்கள். அப்போது கனிமொழி, "ஆரம் பத்திலிருந்து எல்லா விஷயத்திலும் இப்படித்தான் நம்பிக்கை வார்த்தைகளை சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். அறிவாலயத்துக்கு சி.பி.ஐ. வந்தபோது 10 நிமிடம் மட்டும்தான் ஃபார்மாலிட்டியான விசாரணை என்று சொன்னீங்க. ஆனா, 4 மணிநேரம் எனக்கு சம்பந்தமேயில்லாத கேள்விகளைக் கேட்டு விசாரிச்சாங்க. கலைஞர் டி.வி. தொடர்பான எந்த மீட்டிங்கிலும் கலந்துக்காத என்னை அவங்க கேட்ட கேள்வியால் மன உளைச்சல் ஏற்பட்டது.
அதுபோலத்தான், சி.பி.ஐ. கோர்ட்டிலும் சம்மனுக்கு ஆஜராவதாலும், ராம்ஜெத்மலானி வாதாடுவதாலும் அரெஸ்ட் இருக்காதுன்னு சொன்னீங்க. அங்கேயும் முன்ஜாமீன் கேன்சலாகி என்னை ஜெயிலுக்கு கொண்டு வந்துட்டாங்க. ஹைகோர்ட்டுக்குப் போனா நீதி கிடைக்கும்னு சொன்னீங்க. அங்கேயும் பெயில் பெட்டிஷன் டிஸ்மிஸ் ஆயிடிச்சி. இப்ப சுப்ரீம் கோர்ட்டுக்குப் போகலாம்னு சொல்றீங்க. எனக்கு நம்பிக்கையில்லை. அங்கேயும் இப்ப நியாயம் கிடைக்கும்னு எதிர்பார்க்கலை. அப்பா சொன்னதால கையெழுத்துப் போடுறேன்' என்று பெயில் பெட்டிஷனில் கையெழுத்திட்டி ருக்கிறார் கனிமொழி.
சுப்ரீம் கோர்ட்டில் பெயில் பெட்டிஷனை நீதிபதி சதாசிவம் பெஞ்ச் விசாரிக்கும் என்று கலைஞர் எதிர்பார்த்திருந்த நிலையில், சதாசிவமும் அவருடன் பெஞ்ச்சில் இடம்பெற்றிருந்த பட்நாய்க்கும் இந்த மனுவைத் தாங்கள் விசாரிக்க முடியாது என விலகிவிட்டதால், நீதிபதி சிங்வி பெஞ்ச்சிடம் விசாரணைக்கு வந்தது. கனிமொழி கைதாகி ஒருமாதம் கழிந்த நிலையில், ஜூன் 20-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் பெயில் பெட்டிஷன் மீதான விசாரணை நடந்து, அது தள்ளுபடி செய்யப்பட்டதுமே, டெல்லிக்குப் போக முடிவெடுத்துவிட்டார் கலைஞர்.
திருவாரூரில் நடந்த நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டத்திலேயே, தன்னால்தான் கனி மொழிக்கு கலைஞர் டி.வி.யில் ஷேர் வழங்கப்பட்டு, அதன் காரணமாக இப்போது அவர் சிறைப் பட்டிருக்கிறார் என்று வேதனையோடு சொன்னார் கலைஞர். இப்போது சுப்ரீம் கோர்ட்டுக்குப் போகவேண்டியதில்லை என்று சொன்ன கனி மொழியிடம் பெயில் பெட்டிஷனில் கையெழுத்து வாங்கச் செய்ததும் தான்தான் என்பதால் கலைஞர் மிகவும் மனம்கலங்க, மறுநாளே டெல்லி பயணத்தை மேற்கொண்டார்.
ஜூன் 21-ஆம் தேதி காலையில் டெல்லி சென்ற கலைஞர் அங்கே யாரிடமும் பேசவில்லை. தி.மு.க. மந்திரிகள், எம்.பி.க்களிடமும் பெரியளவில் ஆலோசனைகள் நடத்தவில்லை. மாலையில் அவரும் ராஜாத்தி அம்மாளும் திகார் சிறைக்கு சென்றார்கள். அங்கே சூப்பிரண்டெண்ட் அறையில் இருவரும் கனிமொழியை சந்தித்தபோது, பலத்த அதிர்ச்சி. கனிமொழியின் உடலெங்கும் சிறுசிறு கொப்புளங் கள். முகமும் வாடி வதங்கியிருந்தது. அந்தக் கோலத்தில் அவரைப் பார்த்ததும் ராஜாத்தி அம்மாள் கட்டிப்பிடித்து கதறினார். இதைப்பார்த்த கலைஞரும் கலங்கினார்.
அவர்கள் இருவரிடமும், ஏன் அழுறீங்க என்று கேட்ட கனிமொழி, "ஜெயிலில் ஹீட் அதிகமா இருக்கு. அதனாலதான் இப்படி கட்டியும் கொப்புள மும் வந்திருக்கு. படுக்கிறதுக்கு சிமெண்ட் திண்டுதான். அதில் உஷ்ணம் அப்படியே இறங்கிடுற தால, படுத்தா உடம்பெல்லாம் கொதிக்கும். அதனால, எனக்குப் போர்த்திக்க கொடுத்திருக்கும் கம்பளி பெட்ஷீட்டை, செல்லுக்குள்ளேயே இருக்கும் லெட்ரின் பைப் தண்ணீரில் நனைத்து, சிமெண்ட் திண்டுமேலே போட்டு, அந்த ஈர பெட்ஷீட் மேலே படுத்துக்குறேன். ஓரளவு பரவாயில்லை. நேரமாக நேரமாக, பெட்ஷீட் ஈரத்தையெல்லாம் அந்த சிமெண்ட்பெஞ்ச் உறிஞ்சிடும். அப்புறம், மறுபடியும் ஹீட் ஏறும். திரும்பவும் லெட்ரின் பைப் தண்ணீரில் பெட்ஷீட்டை நனைத்து சிமெண்ட் பெஞ்ச்சில் போட்டுப் படுப்பேன்' என்று வெகுசாதாரணமாகச் சொல்லியிருக்கிறார் .
அவர் சொல்லச் சொல்ல கலைஞர்-ராஜாத்தி அம்மாள் இருவராலும் வேதனையை அடக்க முடியவில்லை. கனிமொழி பிறந்தபிறகு, கலைஞர் முதல்வராகிவிட்டார். அதனால், முதல்வருக்குரிய வசதிகளுடன் அவரது வீடு இருந்தது. சிறுவயதிலிருந்தே கனிமொழிக்கு வசதியான பெட்ரூம், அதில் ஏ.சி., நல்ல கட்டில் மெத்தை, அட்டாச்ட் பாத்ரூம் போன்ற வசதிகள் இருந்தன. அதனை அனுபவித்து வளர்ந்தவர், இப்போது லெட்ரின் பைப் தண்ணீரில் பெட்ஷீட்டை நனைத்துப் போட்டு, சிமெண்ட் பெஞ்ச்சில் படுக்கிறார் என்பதையறிந்ததும் பெற்றவர்களால் தாங்க முடியவில்லை.வெயில் காலத்தில் சிறைக்குள் இப்படிப்பட்ட அவலநிலைமை என்றால் ஆகஸ்டு மாத மழைக்காலத்திலும் குளிர்காலத்திலும் கடுங்குளிர் வாட்டுவதோடு கொசுக்களும் படையெடுக்கும். கொசுக்கடியால் உடல் முழுவதும் தடிப்பு ஏற்படுவதோடு மலேரியா உள்ளிட்ட நோய்களின் பாதிப்பும் இருக்கும்.
இதையெல்லாம் நினைத்து கலைஞரும் ராஜாத்தி அம்மாளும் வேதனைப்படுவதைக் கவனித்த கனிமொழி, "இதையெல்லாம் நான் ஃபேஸ் பண்ணிக்கிட்டுத்தான் இருக்கேன். எனக்கு எந்தக் கவலையும் இல்லை. என்னை ஜெயிலுக்கு வந்து சந்திக்கிறவங்களெல்லாம் நிறைய புத்தகங்களைக் கொண்டு வந்து கொடுத்துக்கிட்டிருக்காங்க. அதைப் படிக்கிறேன். நோட்ஸ் எடுக்கிறேன். சிறை அனு பவங்களையும் குறித்து வைச்சுக்கிட்டு வர்றேன். கவிதையும் எழுதிக்கிட்டிருக்கேன்' என்று சொன்னவர் கலைஞரைப் பார்த்து, "அப்பா உங்களை நள்ளிரவில் அரெஸ்ட் பண்ணிக் கொண்டு போனப்ப, சென்ட்ரல் ஜெயில் வாசலில் உட்கார்ந்து எதிர்ப்பைக் காட்டுனீங்களே.. அந்த மன உறுதி என்கிட்டேயும் இருக்கு. அதே உறுதியோடுதான் நான் இருக்கேன்' என்று சொல்ல, கலைஞர் சற்று நிம்மதி யடைந்துள்ளார்.
"என்னைப் பற்றிக் கவலைப்படாதீங்க. இதற்கெல்லாம் யார் காரணம்னு தெரியும். நான் தைரியமாகத்தான் இருக்கேன். குற்றவாளி இல்லை, நிரபராதிதான்னு நிரூபிச்சி வெளியே வருவேன். பெயில் கிடைக்கலையேன்னு யோசிக்காதீங்க. நிச்சயமா நிரூபிச்சுக் காட்டுவேன்' என்று கனிமொழி சொல்ல, கலைஞரும் ராஜாத்தி அம்மாளும் மெல்ல இயல்புநிலைக்கு வந்திருக்கிறார்கள். கனி மொழியைத் தொடர்ந்து, கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குநர் சரத்குமாரையும் அவர்கள் சந்தித்தார்கள்.
சரத் ரொம்பவும் கலங்கிப்போய் இருந்துள்ளார். "எனக்கும் இதற்கும் என்ன சம்பந்தம், இப்படி பண்ணுறாங்களே' என்று அவர் கலங்க, அவரது கையெல்லாம் பாளம் பாளமாக வெடித்திருப்பதைக் கலைஞர் கவனித்து விசாரித்திருக்கிறார். வெயில் அதிகமா இருக்கிறதால உடல் தாங்கமாட்டேங்குது என்று சொல்லியிருக்கிறார் சரத். சன் டி.வி. கலாநிதிமாறனின் கல்லூரி நண்பரான சரத், படிக்கும்போதே எல்லோரையும்விட அதிக வசதியுள்ளவர். எப்போதும் ஏ.சி.வாசம்தான். அப்படிப்பட்டவருக்கு சிறைவாசம் படாதபாடு படுத்துகிறது. அவருக்கு கலைஞர் தைரியம் கொடுத்து, ஆறுதலும் சொல்லியிருக்கிறார்.
கனிமொழியையும் சரத்தையும் சந்தித்தபிறகு, திகார் சிறையில் முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவை கலைஞர் சந்தித்தார். அப்போது ஆ.ராசா, "சுப்ரீம்கோர்ட் டில் பெயில் பெட்டிஷன் இப்படித்தான் போகும்ங்கிறதை நான் எதிர்பார்த்துதான் இருந்தேன். நீங்க எப்போதும் போல உறுதியா இருங்க அய்யா.. இங்கே நாங்க எல்லாத்தையும் எதிர்கொள்ளும் மன தைரியத்தோடுதான் இருக்கோம். நீங்க தைரியமா இருந்தாதான் கட்சிக்காரர் களும் தைரியமா இருப்பாங்க. இந்த கேஸை எப்படி நடத்துவதுங்கிறதுக்காக நானே சட்ட புத்தகங்களைப் படிச்சிக்கிட்டிருக்கேன். இந்த வழக்கில் முழு விவரமும் அறிந்தவன் நான்தான். 2ஜி விவகாரத்தில் என்ன நடந்ததுங்கிறது எனக்குத்தான் முழுக்க முழுக்கத் தெரி யும். ஒதுக்கீடு செய்தது, பிரதமருக்கு கடிதம் எழுதியது உள்பட எல்லாவற்றிலும் உள்ள சட்ட நுணுக்கங்களைப் படிச்சி தெரிஞ்சுக்கிட்டிருக்கேன். நிச்சயமா நாங்க இதிலிருந்து வெளியே வருவோம்' என்று உறுதியான குரலில் சொல்லியிருக்கிறார்.
ஏறத்தாழ 1 மணிநேரத்திற்குப்பின் திகார் சிறையிலிருந்து வெளியே வந்து, டெல்லியில் தங்கியிருந்த ஹோட்டலுக்குத் திரும்பினார் கலைஞர். அவரை காங்கிரஸ் பிரமுகர்கள் யாரும் அதிகாரப்பூர்வமாக சந்திக்கவில்லை. கலைஞரும் காங்கிரஸ் தரப்பில் யாரையும் சந்திக்க விரும்பவில்லை. வயலார் ரவி மட்டும் தனிப்பட்ட முறையில் வந்து சந்தித்து, உடல்நலன் விசாரித்துவிட்டுப்போனார்.
கனிமொழி எப்போது வெளியே வருவார் என்ற சிந்தனையுடனேயே டெல்லியிலிருந்து புறப்பட்ட கலைஞர், அதே சிந்தனையுடனேயே சென்னைக்கு வந்தார். கனிமொழிக்கு எப்போது ஜாமீன் கிடைக்கும் என்பது நீதிதேவன் மட்டுமே அறிந்த ரகசியமாக இருக்கிறது.
கனிமொழியின் பெயில் பெட்டிஷன் சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டதற்கும், அவரது விடுதலை தொடர்ந்து தாமதமாகி வருவதற்கும் தான்தான் காரணம் என்ற எண்ணம் கலைஞரின் மனதுக்குள் இருப்பதால்தான் அவர் இந்தளவு மன உளைச்சலுக்குள்ளாகி யுள்ளார் என்கிறார்கள் உடனிருப்ப வர்கள். கீழ்க்கோர்ட்டிலும், ஹை கோர்ட்டிலும் கனிமொழியின் ஜாமீன் பெட்டிஷன் தள்ளுபடி செய்யப்பட்ட பிறகு, சுப்ரீம் கோர்ட்டிற்குப் போவது பற்றி ஆலோசனை நடந்தது. அப்போது கலைஞருடன் சீனியர் வழக்கறிஞர்கள் மற்றும் மு.க.அழகிரி, டி.ஆர்.பாலு, துரைமுருகன், பொன்முடி, ஜெகத் ரட்சகன் உள்ளிட்டோர் உடனிருந் துள்ளனர்.
சுப்ரீம் கோர்ட்டில் நிச்சயம் பெயில் கிடைத்துவிடும் என அவர்கள் நம் பிக்கை தெரிவித்துள்ள னர். அங்கே பெயில் பெட்டிஷன் தாக்கல் செய்ய வேண்டுமென்றால் அதற்கு கனிமொழியின் கையெழுத்துத் தேவை. இதற்காக வக்கீல்கள் அவரை திகார் சிறையில் சந்தித்தபோது, "நான் இதில் கையெழுத்துப் போடவிரும்பவில்லை' என்று கனிமொழி மறுத்துள்ளார். ஏன் என்று வழக்கறிஞர்கள் கேட்டபோது, "இப்போதுதான் கீழ் கோர்ட்டிலும் அதையடுத்து ஹைகோர்ட்டிலும் பெயில் பெட்டிஷன் ரிஜக்ட் ஆயிடிச்சி. இப்ப சுப்ரீம் கோர்ட்டுக்குப் போவது சரியாக இருக்காது' என்ற கனிமொழி, அதற்கான காரணத்தையும் விவரித்திருக்கிறார்.
"இப்போது தேசிய அளவில் ஊழலுக்கு எதிரான இயக்கங்கள் தீவிரமா நடந்துக்கிட்டிருக்கு. அன்னா ஹசாரேவின் உண்ணாவிரதமும் பாபா ராம்தேவின் டெல்லி முற்றுகையும் மீடியாக்களால் பெரியளவில் பிரபலப்படுத்தப்பட்டிருக்கு. லோக்பால் மசோதா சம்பந்தமா அரசுக்கும் சமூக ஆர்வலர்களுக்கும் நடக்கும் பேச்சுவார்த்தைகளை மீடியாக்கள் மூலமாக பொதுமக்கள் கூர்ந்து கவனிச்சிக்கிட்டிருக்காங்க. இதெல்லாம் ஊழலுக்கு எதிரான மனநிலையைத் தீவிரப்படுத்தியிருக்கு. இந்த நேரத்தில், நாம் சுப்ரீம் கோர்ட்டுக்குப் போனால், அங்கேயும் மீடியா வெளிப்படுத்தும் மனநிலைதான் பிரதிபலிக்கும். மீடியாக்களின் விமர்சனத்திற்குப் பயந்து, உண்மை பின்னுக்குத் தள்ளப்பட்டு, பெயில் பெட்டிஷன் தள்ளுபடியாகும் வாய்ப்புதான் அதிகமா இருக்கு. அதனால இப்ப சுப்ரீம் கோர்ட் போகவேண்டாம்' என்று சொல்லி, கையெழுத்துப் போடாமல் திருப்பி அனுப்பிவிட்டார் கனிமொழி.
திகாரில் அவரைச் சந்தித்தவர்கள் இந்த விவரத்தை கலைஞரிடம் தெரிவிக்க, கலைஞர் மீண்டும் ஆலோசனை நடத்தினார். சுப்ரீம் கோர்ட்டில் நிச்சயம் ஜாமீன் கிடைக்கும் என்ற நம்பிக்கை அவருக்கு ஏற்பட்டது. வெகேஷன் கோர்ட்டில் நீதிபதி சதாசிவம் பெஞ்ச்சில்தான் ஜாமீன் பெட்டிஷன் விசாரணைக்கு வருகிறது என்பதால் கலைஞருக்கு நம்பிக்கை தந்தவர்களுக்கு கூடுதலாகவே இருந்தது. மீடியாக்களின் பார்வையைத் தாண்டி, சட்டரீதியாக இதனைக் கவனிக்கக்கூடிய நீதிபதியான சதாசிவம், தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கு உண்மை நிலவரங்கள் நன்றாகவே தெரியும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பு.
இதனை மீண்டும் கனிமொழியிடம் எடுத்துச் சொல்வதற்காக வழக்கறிஞர்களும், தி.மு.க. வி.ஐ.பி.க்களும் திகார் சிறைக்குச் சென்றனர். சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் கிடைக்கும் என்ற நம்பிக்கையை அவரிடம் தெரிவித்திருக் கிறார்கள். அப்போது கனிமொழி, "ஆரம் பத்திலிருந்து எல்லா விஷயத்திலும் இப்படித்தான் நம்பிக்கை வார்த்தைகளை சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். அறிவாலயத்துக்கு சி.பி.ஐ. வந்தபோது 10 நிமிடம் மட்டும்தான் ஃபார்மாலிட்டியான விசாரணை என்று சொன்னீங்க. ஆனா, 4 மணிநேரம் எனக்கு சம்பந்தமேயில்லாத கேள்விகளைக் கேட்டு விசாரிச்சாங்க. கலைஞர் டி.வி. தொடர்பான எந்த மீட்டிங்கிலும் கலந்துக்காத என்னை அவங்க கேட்ட கேள்வியால் மன உளைச்சல் ஏற்பட்டது.
அதுபோலத்தான், சி.பி.ஐ. கோர்ட்டிலும் சம்மனுக்கு ஆஜராவதாலும், ராம்ஜெத்மலானி வாதாடுவதாலும் அரெஸ்ட் இருக்காதுன்னு சொன்னீங்க. அங்கேயும் முன்ஜாமீன் கேன்சலாகி என்னை ஜெயிலுக்கு கொண்டு வந்துட்டாங்க. ஹைகோர்ட்டுக்குப் போனா நீதி கிடைக்கும்னு சொன்னீங்க. அங்கேயும் பெயில் பெட்டிஷன் டிஸ்மிஸ் ஆயிடிச்சி. இப்ப சுப்ரீம் கோர்ட்டுக்குப் போகலாம்னு சொல்றீங்க. எனக்கு நம்பிக்கையில்லை. அங்கேயும் இப்ப நியாயம் கிடைக்கும்னு எதிர்பார்க்கலை. அப்பா சொன்னதால கையெழுத்துப் போடுறேன்' என்று பெயில் பெட்டிஷனில் கையெழுத்திட்டி ருக்கிறார் கனிமொழி.
சுப்ரீம் கோர்ட்டில் பெயில் பெட்டிஷனை நீதிபதி சதாசிவம் பெஞ்ச் விசாரிக்கும் என்று கலைஞர் எதிர்பார்த்திருந்த நிலையில், சதாசிவமும் அவருடன் பெஞ்ச்சில் இடம்பெற்றிருந்த பட்நாய்க்கும் இந்த மனுவைத் தாங்கள் விசாரிக்க முடியாது என விலகிவிட்டதால், நீதிபதி சிங்வி பெஞ்ச்சிடம் விசாரணைக்கு வந்தது. கனிமொழி கைதாகி ஒருமாதம் கழிந்த நிலையில், ஜூன் 20-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் பெயில் பெட்டிஷன் மீதான விசாரணை நடந்து, அது தள்ளுபடி செய்யப்பட்டதுமே, டெல்லிக்குப் போக முடிவெடுத்துவிட்டார் கலைஞர்.
திருவாரூரில் நடந்த நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டத்திலேயே, தன்னால்தான் கனி மொழிக்கு கலைஞர் டி.வி.யில் ஷேர் வழங்கப்பட்டு, அதன் காரணமாக இப்போது அவர் சிறைப் பட்டிருக்கிறார் என்று வேதனையோடு சொன்னார் கலைஞர். இப்போது சுப்ரீம் கோர்ட்டுக்குப் போகவேண்டியதில்லை என்று சொன்ன கனி மொழியிடம் பெயில் பெட்டிஷனில் கையெழுத்து வாங்கச் செய்ததும் தான்தான் என்பதால் கலைஞர் மிகவும் மனம்கலங்க, மறுநாளே டெல்லி பயணத்தை மேற்கொண்டார்.
ஜூன் 21-ஆம் தேதி காலையில் டெல்லி சென்ற கலைஞர் அங்கே யாரிடமும் பேசவில்லை. தி.மு.க. மந்திரிகள், எம்.பி.க்களிடமும் பெரியளவில் ஆலோசனைகள் நடத்தவில்லை. மாலையில் அவரும் ராஜாத்தி அம்மாளும் திகார் சிறைக்கு சென்றார்கள். அங்கே சூப்பிரண்டெண்ட் அறையில் இருவரும் கனிமொழியை சந்தித்தபோது, பலத்த அதிர்ச்சி. கனிமொழியின் உடலெங்கும் சிறுசிறு கொப்புளங் கள். முகமும் வாடி வதங்கியிருந்தது. அந்தக் கோலத்தில் அவரைப் பார்த்ததும் ராஜாத்தி அம்மாள் கட்டிப்பிடித்து கதறினார். இதைப்பார்த்த கலைஞரும் கலங்கினார்.
அவர்கள் இருவரிடமும், ஏன் அழுறீங்க என்று கேட்ட கனிமொழி, "ஜெயிலில் ஹீட் அதிகமா இருக்கு. அதனாலதான் இப்படி கட்டியும் கொப்புள மும் வந்திருக்கு. படுக்கிறதுக்கு சிமெண்ட் திண்டுதான். அதில் உஷ்ணம் அப்படியே இறங்கிடுற தால, படுத்தா உடம்பெல்லாம் கொதிக்கும். அதனால, எனக்குப் போர்த்திக்க கொடுத்திருக்கும் கம்பளி பெட்ஷீட்டை, செல்லுக்குள்ளேயே இருக்கும் லெட்ரின் பைப் தண்ணீரில் நனைத்து, சிமெண்ட் திண்டுமேலே போட்டு, அந்த ஈர பெட்ஷீட் மேலே படுத்துக்குறேன். ஓரளவு பரவாயில்லை. நேரமாக நேரமாக, பெட்ஷீட் ஈரத்தையெல்லாம் அந்த சிமெண்ட்பெஞ்ச் உறிஞ்சிடும். அப்புறம், மறுபடியும் ஹீட் ஏறும். திரும்பவும் லெட்ரின் பைப் தண்ணீரில் பெட்ஷீட்டை நனைத்து சிமெண்ட் பெஞ்ச்சில் போட்டுப் படுப்பேன்' என்று வெகுசாதாரணமாகச் சொல்லியிருக்கிறார் .
அவர் சொல்லச் சொல்ல கலைஞர்-ராஜாத்தி அம்மாள் இருவராலும் வேதனையை அடக்க முடியவில்லை. கனிமொழி பிறந்தபிறகு, கலைஞர் முதல்வராகிவிட்டார். அதனால், முதல்வருக்குரிய வசதிகளுடன் அவரது வீடு இருந்தது. சிறுவயதிலிருந்தே கனிமொழிக்கு வசதியான பெட்ரூம், அதில் ஏ.சி., நல்ல கட்டில் மெத்தை, அட்டாச்ட் பாத்ரூம் போன்ற வசதிகள் இருந்தன. அதனை அனுபவித்து வளர்ந்தவர், இப்போது லெட்ரின் பைப் தண்ணீரில் பெட்ஷீட்டை நனைத்துப் போட்டு, சிமெண்ட் பெஞ்ச்சில் படுக்கிறார் என்பதையறிந்ததும் பெற்றவர்களால் தாங்க முடியவில்லை.வெயில் காலத்தில் சிறைக்குள் இப்படிப்பட்ட அவலநிலைமை என்றால் ஆகஸ்டு மாத மழைக்காலத்திலும் குளிர்காலத்திலும் கடுங்குளிர் வாட்டுவதோடு கொசுக்களும் படையெடுக்கும். கொசுக்கடியால் உடல் முழுவதும் தடிப்பு ஏற்படுவதோடு மலேரியா உள்ளிட்ட நோய்களின் பாதிப்பும் இருக்கும்.
இதையெல்லாம் நினைத்து கலைஞரும் ராஜாத்தி அம்மாளும் வேதனைப்படுவதைக் கவனித்த கனிமொழி, "இதையெல்லாம் நான் ஃபேஸ் பண்ணிக்கிட்டுத்தான் இருக்கேன். எனக்கு எந்தக் கவலையும் இல்லை. என்னை ஜெயிலுக்கு வந்து சந்திக்கிறவங்களெல்லாம் நிறைய புத்தகங்களைக் கொண்டு வந்து கொடுத்துக்கிட்டிருக்காங்க. அதைப் படிக்கிறேன். நோட்ஸ் எடுக்கிறேன். சிறை அனு பவங்களையும் குறித்து வைச்சுக்கிட்டு வர்றேன். கவிதையும் எழுதிக்கிட்டிருக்கேன்' என்று சொன்னவர் கலைஞரைப் பார்த்து, "அப்பா உங்களை நள்ளிரவில் அரெஸ்ட் பண்ணிக் கொண்டு போனப்ப, சென்ட்ரல் ஜெயில் வாசலில் உட்கார்ந்து எதிர்ப்பைக் காட்டுனீங்களே.. அந்த மன உறுதி என்கிட்டேயும் இருக்கு. அதே உறுதியோடுதான் நான் இருக்கேன்' என்று சொல்ல, கலைஞர் சற்று நிம்மதி யடைந்துள்ளார்.
"என்னைப் பற்றிக் கவலைப்படாதீங்க. இதற்கெல்லாம் யார் காரணம்னு தெரியும். நான் தைரியமாகத்தான் இருக்கேன். குற்றவாளி இல்லை, நிரபராதிதான்னு நிரூபிச்சி வெளியே வருவேன். பெயில் கிடைக்கலையேன்னு யோசிக்காதீங்க. நிச்சயமா நிரூபிச்சுக் காட்டுவேன்' என்று கனிமொழி சொல்ல, கலைஞரும் ராஜாத்தி அம்மாளும் மெல்ல இயல்புநிலைக்கு வந்திருக்கிறார்கள். கனி மொழியைத் தொடர்ந்து, கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குநர் சரத்குமாரையும் அவர்கள் சந்தித்தார்கள்.
சரத் ரொம்பவும் கலங்கிப்போய் இருந்துள்ளார். "எனக்கும் இதற்கும் என்ன சம்பந்தம், இப்படி பண்ணுறாங்களே' என்று அவர் கலங்க, அவரது கையெல்லாம் பாளம் பாளமாக வெடித்திருப்பதைக் கலைஞர் கவனித்து விசாரித்திருக்கிறார். வெயில் அதிகமா இருக்கிறதால உடல் தாங்கமாட்டேங்குது என்று சொல்லியிருக்கிறார் சரத். சன் டி.வி. கலாநிதிமாறனின் கல்லூரி நண்பரான சரத், படிக்கும்போதே எல்லோரையும்விட அதிக வசதியுள்ளவர். எப்போதும் ஏ.சி.வாசம்தான். அப்படிப்பட்டவருக்கு சிறைவாசம் படாதபாடு படுத்துகிறது. அவருக்கு கலைஞர் தைரியம் கொடுத்து, ஆறுதலும் சொல்லியிருக்கிறார்.
கனிமொழியையும் சரத்தையும் சந்தித்தபிறகு, திகார் சிறையில் முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவை கலைஞர் சந்தித்தார். அப்போது ஆ.ராசா, "சுப்ரீம்கோர்ட் டில் பெயில் பெட்டிஷன் இப்படித்தான் போகும்ங்கிறதை நான் எதிர்பார்த்துதான் இருந்தேன். நீங்க எப்போதும் போல உறுதியா இருங்க அய்யா.. இங்கே நாங்க எல்லாத்தையும் எதிர்கொள்ளும் மன தைரியத்தோடுதான் இருக்கோம். நீங்க தைரியமா இருந்தாதான் கட்சிக்காரர் களும் தைரியமா இருப்பாங்க. இந்த கேஸை எப்படி நடத்துவதுங்கிறதுக்காக நானே சட்ட புத்தகங்களைப் படிச்சிக்கிட்டிருக்கேன். இந்த வழக்கில் முழு விவரமும் அறிந்தவன் நான்தான். 2ஜி விவகாரத்தில் என்ன நடந்ததுங்கிறது எனக்குத்தான் முழுக்க முழுக்கத் தெரி யும். ஒதுக்கீடு செய்தது, பிரதமருக்கு கடிதம் எழுதியது உள்பட எல்லாவற்றிலும் உள்ள சட்ட நுணுக்கங்களைப் படிச்சி தெரிஞ்சுக்கிட்டிருக்கேன். நிச்சயமா நாங்க இதிலிருந்து வெளியே வருவோம்' என்று உறுதியான குரலில் சொல்லியிருக்கிறார்.
ஏறத்தாழ 1 மணிநேரத்திற்குப்பின் திகார் சிறையிலிருந்து வெளியே வந்து, டெல்லியில் தங்கியிருந்த ஹோட்டலுக்குத் திரும்பினார் கலைஞர். அவரை காங்கிரஸ் பிரமுகர்கள் யாரும் அதிகாரப்பூர்வமாக சந்திக்கவில்லை. கலைஞரும் காங்கிரஸ் தரப்பில் யாரையும் சந்திக்க விரும்பவில்லை. வயலார் ரவி மட்டும் தனிப்பட்ட முறையில் வந்து சந்தித்து, உடல்நலன் விசாரித்துவிட்டுப்போனார்.
கனிமொழி எப்போது வெளியே வருவார் என்ற சிந்தனையுடனேயே டெல்லியிலிருந்து புறப்பட்ட கலைஞர், அதே சிந்தனையுடனேயே சென்னைக்கு வந்தார். கனிமொழிக்கு எப்போது ஜாமீன் கிடைக்கும் என்பது நீதிதேவன் மட்டுமே அறிந்த ரகசியமாக இருக்கிறது.
-டெல்லியிலிருந்து உமர்முக்தார்
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
"என்னைப் பற்றிக் கவலைப்படாதீங்க. இதற்கெல்லாம் யார் காரணம்னு தெரியும்.
நான் தைரியமாகத்தான் இருக்கேன். குற்றவாளி இல்லை, நிரபராதிதான்னு
நிரூபிச்சி வெளியே வருவேன். பெயில் கிடைக்கலையேன்னு யோசிக்காதீங்க.
நிச்சயமா நிரூபிச்சுக் காட்டுவேன்' என்று கனிமொழி சொல்ல, கலைஞரும் ராஜாத்தி
அம்மாளும் மெல்ல இயல்புநிலைக்கு வந்திருக்கிறார்கள்.
இப்படியெல்லாம் சொல்ல அசிங்கமாய்ருக்காதா....
தவறு செய்தது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தானே....இதற்க்கு மேலும் பட்டாலும் திருந்த மாட்டாள்..நீதிதேவன் நல்ல தீர்ப்பை மட்டுமே தருவான்....
பகிர்வுக்கு நன்றி சார்....
- karuppuபுதியவர்
- பதிவுகள் : 40
இணைந்தது : 08/07/2010
வைரமுத்து இதனை வைத்து ஒரு அழுக்காச்சி காவியம் எழுதலாம்
கே .சாமி
கே .சாமி
- சோழன்பண்பாளர்
- பதிவுகள் : 111
இணைந்தது : 17/06/2011
பாவம் கலைஞர் குடும்பம் தலைமேல சனியன் மேடை போட்டு மானாட மயிலாட நடத்துது இந்த எபிசோட் எப்ப முடிஞ்சு தயாநிதி எபிசோட் தொடங்குமோ தெரியல...... இந்த வருஷம் பத்திரிகைகாரர்களுக்கு செம வேட்டைதாண்டோ......
என்றும் அன்புடன்,
சோழவேந்தன்
- positivekarthickதளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
"ஜெயிலில் ஹீட் அதிகமா இருக்கு. அதனாலதான் இப்படி கட்டியும் கொப்புள மும் வந்திருக்கு. படுக்கிறதுக்கு சிமெண்ட் திண்டுதான். அதில் உஷ்ணம் அப்படியே இறங்கிடுற தால, படுத்தா உடம்பெல்லாம் கொதிக்கும். அதனால, எனக்குப் போர்த்திக்க கொடுத்திருக்கும் கம்பளி பெட்ஷீட்டை, செல்லுக்குள்ளேயே இருக்கும் லெட்ரின் பைப் தண்ணீரில் நனைத்து, சிமெண்ட் திண்டுமேலே போட்டு, அந்த ஈர பெட்ஷீட் மேலே படுத்துக்குறேன். ஓரளவு பரவாயில்லை. நேரமாக நேரமாக, பெட்ஷீட் ஈரத்தையெல்லாம் அந்த சிமெண்ட்பெஞ்ச் உறிஞ்சிடும். அப்புறம், மறுபடியும் ஹீட் ஏறும். திரும்பவும் லெட்ரின் பைப் தண்ணீரில் பெட்ஷீட்டை நனைத்து சிமெண்ட் பெஞ்ச்சில் போட்டுப் படுப்பேன்' என்று வெகுசாதாரணமாகச் சொல்லியிருக்கிறார்" .
கணிமொலியை என்னவோ தியாகி ரேஞ்சுக்கு நக்கீரன் சித்திரிக்கிறது .
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே -நு சொன்ன நக்கீரன் தரம் தாழ்ந்து வெகு நாள் ஆகிறது நண்பா !!!!!!!!!
கணிமொலியை என்னவோ தியாகி ரேஞ்சுக்கு நக்கீரன் சித்திரிக்கிறது .
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே -நு சொன்ன நக்கீரன் தரம் தாழ்ந்து வெகு நாள் ஆகிறது நண்பா !!!!!!!!!
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|