புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
Dr.ஷர்மிளா-வின் ஆலோசனை நேரம் - Page 3 I_vote_lcapDr.ஷர்மிளா-வின் ஆலோசனை நேரம் - Page 3 I_voting_barDr.ஷர்மிளா-வின் ஆலோசனை நேரம் - Page 3 I_vote_rcap 
81 Posts - 68%
heezulia
Dr.ஷர்மிளா-வின் ஆலோசனை நேரம் - Page 3 I_vote_lcapDr.ஷர்மிளா-வின் ஆலோசனை நேரம் - Page 3 I_voting_barDr.ஷர்மிளா-வின் ஆலோசனை நேரம் - Page 3 I_vote_rcap 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
Dr.ஷர்மிளா-வின் ஆலோசனை நேரம் - Page 3 I_vote_lcapDr.ஷர்மிளா-வின் ஆலோசனை நேரம் - Page 3 I_voting_barDr.ஷர்மிளா-வின் ஆலோசனை நேரம் - Page 3 I_vote_rcap 
9 Posts - 8%
mohamed nizamudeen
Dr.ஷர்மிளா-வின் ஆலோசனை நேரம் - Page 3 I_vote_lcapDr.ஷர்மிளா-வின் ஆலோசனை நேரம் - Page 3 I_voting_barDr.ஷர்மிளா-வின் ஆலோசனை நேரம் - Page 3 I_vote_rcap 
4 Posts - 3%
sureshyeskay
Dr.ஷர்மிளா-வின் ஆலோசனை நேரம் - Page 3 I_vote_lcapDr.ஷர்மிளா-வின் ஆலோசனை நேரம் - Page 3 I_voting_barDr.ஷர்மிளா-வின் ஆலோசனை நேரம் - Page 3 I_vote_rcap 
1 Post - 1%
viyasan
Dr.ஷர்மிளா-வின் ஆலோசனை நேரம் - Page 3 I_vote_lcapDr.ஷர்மிளா-வின் ஆலோசனை நேரம் - Page 3 I_voting_barDr.ஷர்மிளா-வின் ஆலோசனை நேரம் - Page 3 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
Dr.ஷர்மிளா-வின் ஆலோசனை நேரம் - Page 3 I_vote_lcapDr.ஷர்மிளா-வின் ஆலோசனை நேரம் - Page 3 I_voting_barDr.ஷர்மிளா-வின் ஆலோசனை நேரம் - Page 3 I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
Dr.ஷர்மிளா-வின் ஆலோசனை நேரம் - Page 3 I_vote_lcapDr.ஷர்மிளா-வின் ஆலோசனை நேரம் - Page 3 I_voting_barDr.ஷர்மிளா-வின் ஆலோசனை நேரம் - Page 3 I_vote_rcap 
221 Posts - 37%
mohamed nizamudeen
Dr.ஷர்மிளா-வின் ஆலோசனை நேரம் - Page 3 I_vote_lcapDr.ஷர்மிளா-வின் ஆலோசனை நேரம் - Page 3 I_voting_barDr.ஷர்மிளா-வின் ஆலோசனை நேரம் - Page 3 I_vote_rcap 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
Dr.ஷர்மிளா-வின் ஆலோசனை நேரம் - Page 3 I_vote_lcapDr.ஷர்மிளா-வின் ஆலோசனை நேரம் - Page 3 I_voting_barDr.ஷர்மிளா-வின் ஆலோசனை நேரம் - Page 3 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
Dr.ஷர்மிளா-வின் ஆலோசனை நேரம் - Page 3 I_vote_lcapDr.ஷர்மிளா-வின் ஆலோசனை நேரம் - Page 3 I_voting_barDr.ஷர்மிளா-வின் ஆலோசனை நேரம் - Page 3 I_vote_rcap 
18 Posts - 3%
prajai
Dr.ஷர்மிளா-வின் ஆலோசனை நேரம் - Page 3 I_vote_lcapDr.ஷர்மிளா-வின் ஆலோசனை நேரம் - Page 3 I_voting_barDr.ஷர்மிளா-வின் ஆலோசனை நேரம் - Page 3 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
Dr.ஷர்மிளா-வின் ஆலோசனை நேரம் - Page 3 I_vote_lcapDr.ஷர்மிளா-வின் ஆலோசனை நேரம் - Page 3 I_voting_barDr.ஷர்மிளா-வின் ஆலோசனை நேரம் - Page 3 I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
Dr.ஷர்மிளா-வின் ஆலோசனை நேரம் - Page 3 I_vote_lcapDr.ஷர்மிளா-வின் ஆலோசனை நேரம் - Page 3 I_voting_barDr.ஷர்மிளா-வின் ஆலோசனை நேரம் - Page 3 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
Dr.ஷர்மிளா-வின் ஆலோசனை நேரம் - Page 3 I_vote_lcapDr.ஷர்மிளா-வின் ஆலோசனை நேரம் - Page 3 I_voting_barDr.ஷர்மிளா-வின் ஆலோசனை நேரம் - Page 3 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
Dr.ஷர்மிளா-வின் ஆலோசனை நேரம் - Page 3 I_vote_lcapDr.ஷர்மிளா-வின் ஆலோசனை நேரம் - Page 3 I_voting_barDr.ஷர்மிளா-வின் ஆலோசனை நேரம் - Page 3 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Dr.ஷர்மிளா-வின் ஆலோசனை நேரம்


   
   

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 16, 2008 8:42 am

First topic message reminder :

நான் ஒரு கல்லூரி மாணவி. என் மார்புப் பகுதியில் கட்டிகள் மாதிரி இருக்கிறது. காம்புகள் உள் நோக்கி இருக்கின்றன. புற்று நோயாக இருக்குமோ என பயப்படுகிறேன். வீட்டில் சொல்லவும் பயமாக இருக்கிறது. மார்பகப் புற்று நோய்க்கு எங்கே சிகிச்சை அளிக்கிறார்கள்? எவ்வளவு செலவாகும்? - பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகி.



தாமதிக்காமல் முதலில் மருத்துவரை அணுகுங்கள். அது புற்று நோய்தானா அல்லது வெறும் நீர்க் கட்டிகளா எனப்பாருங்கள். நீர்க் கட்டிகளாக இருந்தால், அவற்றை அகற்றுவது சுலபம். புற்றுநோய் என நீங்கள் சந்தேகப்படும் பட்சத்தில் உடனடியாக வீட்டில் விஷயத்தைச் சொல்லி சிகிச்சை மேற்கொள்ளுங்கள். தாமதித்தால், அது பரவி, மார்பகங்களையே அகற்றும் நிலை ஏற்படலாம். மகப்பேறு மருத்துவரை முதலில் போய் பாருங்கள். எல்லா மருத்துவமனைகளிலும் இன்று இதற்கான சிறப்பு மருத்துவர்கள் இருக்கிறார்கள்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 16, 2008 8:52 am

என் வயது 24. திருமணமாகி இரண்டு வருடங்களாகிறது. திருமணமான ஆறே மாதங்களில் கருத்தரித்தேன். அப்போது குழந்தை வேண்டாமென அதை அபார்ஷன் செய்துவிட்டேன். அதன் பிறகு எனக்குக் கர்ப்பம் தங்கவே இல்லை. மருத்துவர் ஒருவரின் ஆலோசனையின் பேரில் இப்போது ஹார் மோன் மாத்திரைகள் சாப்பிடுகிறேன். இதனால் கருத்தரிக்குமா? - பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகி.

முதல் கர்ப்பத்தைக் கலைப்பது மிகப் பெரிய தவறு. குழந்தை வேண்டாம் என நினைத்த நீங்கள் அதற்கேற்ப இல்லற வாழ்வில் ஈடுபடுகிற போது பாதுகாப்பாக இருந்திருக்கலாம். அதைத் தவிர்த்து ஆறே மாதங்களில் உண்டான கர்ப்பத்தைக் கலைத்திருக்கக் கூடாது. உங்களுக்கு சினைப்பைகளில் தொற்றோ, கருக்குழாய் அடைப்போ இருக்கிறதா எனப் பார்க்க வேண்டும். முதல் வேலையாக நீங்கள் ழளுழு எக்ஸ் ரேவும், பெல்விக் ஸ்கேனும் செய்ய வேண்டும். ஹார்மோன் மாத்திரைகள் சாப்பிடுவதை உடனடியாக நிறுத்துங்கள். அவற்றால் உண்டாகிற பக்க விளைவுகள் பயங்கரமானதாக இருக்கும். தவிர, உங்கள் கணவருக்கும் விந்தணுச் சோதனை செய்ய வேண்டும். எல்லாவற்றையும் பார்த்து தான் உங்களுக்கான சிகிச்சையைப் பரிந்துரைக்க முடியும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 16, 2008 8:53 am

என் வயது 21. இப்போது நான் இரண்டு மாதக் கர்ப்பம். கர்ப்பமாக இருக்கிறபோது இல்லற வாழ்வில் ஈடுபட்டால் சுகப் பிரசவம் நிகழும் என்று கேள்விப்பட்டேன். அது நிஜமா? எத்தனை நாட்கள் இடைவெளியில் ஈடுபடலாம்? அதனால் குழந்தைக்கு பாதிப்பிருக்குமா? - எல். ராஜகுமாரி, அறந்தாங்கி.

நீங்கள் கேள்விப்பட்ட விஷயம் ரொம்பவும் தவறானது. கர்ப்பம் தரித்த முதல் மூன்று மற்றும் கடைசி மூன்று மாதங்களில் இல்லற வாழ்க்கையில் ஈடுபடுவது ஆபத்தானது. இடைப்பட்ட மாதங்களில் கர்ப்பப் பைக்கு அழுத்தம் தராத வகையில் மென்மையாக உறவு கொள்ளலாம். அதுவும் கூட பிரசவமாவதில் எந்தச்சிக்கலும் இருக்காது என சொல்லப்பட்ட பெண்களுக்கு மட்டும்தான். மற்ற பெண்கள் அதைத் தவிர்ப்பது நல்லது. கர்ப்ப காலத்தில் இல்லற வாழ்வில் ஈடுபடுவதால் தொற்றுக் கிருமிகள் அதிகம் தாக்க வாய்ப்புகள் உண்டு. பிறப்புறுப்பு சுகாதாரம் என்பது இந்த நாட்களில் மிக மிக முக்கியம். கர்ப்ப காலம் முழுவதுமே செக்ஸைத் தவிர்ப்பது என்பது ரொம்பவே நல்லது தான். சுகப் பிரசவத்துக்கு ஆரோக்கியமான உணவுதான் அடிப்படை. தினம் ஒரு பெரிய நெல்லிக்காய் சாப்பிடவும். இரவு உணவுக்குப் பிறகு வெற்றிலை, பாக்கு போடலாம். கமலா ஆரஞ்சும், வாழைப் பழமும் தினம் சாப்பிடலாம். முருங்கைக் கீரையும், முட்டையும் சேர்த்து சமைத்து சாப்பிடலாம். தினம் மூன்று வேளை பால் குடிக்க வேண்டியது மிக முக்கியம். குதிகால் உயரமாக வைத்த ஹைஹீல்ஸ் செருப்புகளைத் தவிர்க்கவும். மருத்துவரின் ஆலோசனையை மட்டும் சரியாகப் பின்பற்றுங்கள். மற்றவர்கள் சொல்கிற அனுபவங்கள், கேள்விப்படுகிற விஷயங்களை எல்லாம் காதில் வாங்காமல், பயமின்றி பிரசவத்தை எதிர் நோக்குங்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 16, 2008 8:53 am

எனக்குத் திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகின்றன. திருமணமான புதிதில் என் மேல் அன்பாக இருந்த கணவர், ஒரு குழந்தை பிறந்த பிறகு என்னை நெருங்குவதே இல்லை. உணர்ச்சிகளை அடக்க நான் சுய இன்பம் செய்ய வேண்டியிருக்கிறது. கணவருக்கு என் மேல் மீண்டும் நாட்டம் வர சிகிச்சை உண்டா? -பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகி.

பொதுவாகவே திருணமான புதிதில் செக்ஸ் வாழ்க்கையில் இருக்கிற ஈடுபாடு, காலத்துக்கும் அப்படியே இருப்பதில்லை. உங்கள் கணவருக்கு அது ஒரேயடியாகக் குறைய என்ன காரணம் என முதலில் கண்டு பிடியுங்கள். ஒரு குழந்தை பெற்ற பிறகு தன்னை அழகாக, சுத்தமாக வைத்துக் கொள்கிற எண்ணம் பெரும்பாலான பெண்களுக்குப் போய் விடுகிறது. தினம் இரண்டு வேளைகள் குளியுங்கள். கஸ்தூரி மஞ்சள் தேய்த்துக் குளிப்பதால், அது கணவரை இல்லற வாழ்க்கைக்கு ஈர்க்கும். நீங்கள் அணிகிற உடைகள் மற்றும் உள்ளாடைகள் அழுக்கின்றி, வியர்வை நாற்ற மின்றி சுத்தமாக இருக்கட்டும். படுக்கையறையை சுத்தமாக வைத்திருங்கள். தினம் காலையில் கணவருக்குக் கைப்பிடியளவு பச்சைப் புதினாவை சாப்பிடக் கொடுங்கள். கருணைக் கிழங்கு மற்றும் பசலைக் கீரை அதிகம் சமைத்துக் கொடுங்கள். முருங்கைப்வை நெய்யில் வதக்கிக் கொடுங்கள். இரவு படுக்கும் முன்பாக வெற்றிலை, பாக்குடன், சிறிது ஜாதிக்காய் சேர்த்துக் கொடுங்கள். இதெல்லாம் கணவருக்குத் தாம்பத்திய ஈடுபாட்டை அதிகப்படுத்தும். படுக்கையறையில் வீட்டுப் பிரச்சினைகள் பேசாதீர்கள். சுய இன்பம் என்பது எப்போ தாவது ஒரு மாறுதலுக்குச் செய்யலாம். நாளைக்கே உங்கள் கணவர் மீண்டும் உங்களிடம் நெருக்கமா கும்போது உங்களின் அந்தப் பழக்கம் அவருக்கு நெருடலை உண் டாக்கும். ஜாக்கிரதை.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 16, 2008 8:54 am

என் வயது 19. எனக்கொரு விசித்திரமான பிரச்சினை. அந்த ரங்க உறுப்பிலிருந்து எப்போதும் துர்வாடை வீசுகிறது. தர்மசங்கடமான இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு சொல்லுங்கள். -எம்.கே., நெல்லை.

மருந்துக் கடைகளில் பொட்டாசியம் பர்மாங்கனேட் என்று கிடைக்கும். அதில் சிட்டிகை எடுத்து வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து, பிறப்புறுப்பை தினம் நான்கைந்து முறைகள் கழுவவும். டாய்லெட் மற்றும் அங்கே வைத்திருக்கிற பக்கெட், மக் போன்ற எல்லாம் சுத்தமாக இருக்க வேண்டும். அவை சுத்தமாக இல்லாமல் பாசிப் பிடித்து இருந்தால் கூட அதன் மூலம் தொற்றுக் கிருமிகள் பரவி, இம் மாதிரி பிரச்சினைகள் வரலாம். வெள்ளைப் படுதல் இருந்தால் வைட்டமின் சி மாத்திரை உட்கொள்ளவும். உணவில் பொன்னாங்கண்ணிக் கீரை, பெரிய நெல்லிக்காய், ஆரஞ்சு அதிகம் சேர்த்துக் கொள்ளவும். காபி மற்றும் டீயைக் குறைத்து, திக்கான பாலில் பாதாம் பருப்பைப் பொடி செய்து கலந்து குடிக்கவும். பழங்கள், பால், முட்டை இந்த மூன்றும் தினசரி சாப்பிட வேண்டியவை. போஷாக்கான ஆகாரம்தான் இப்பிரச்சினைக்கான முதல் தீர்வு. உபயோகிக்கிற உள்ளாடைகள் காட்டனாக, சுத்தமாக இருக்கட்டும். தினம் அவற்றை இரண்டு வேளைகள் மாற்றவும். மாதவிலக்கு நாட்களில் அதிகப் படியான சுத்தத்தைக் கடைப் பிடிக்கவும். குறிப்பிட்ட நேரத்துக்கொரு முறை நாப்கினை மாற்றவும். இவற்றையெல்லாம் செய்தாலே உங்கள் பிரச்சினைகள் சரியாகும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 16, 2008 8:54 am

எனக்குத் திருமணமாகி குழந்தை பிறந்த பிறகு சிறுநீரை அடக்க முடியாத நிலை உண்டாகி விட்டது. சிரித்தால், தும்மினால், இருமினால் கூட சிறுநீர் கசிகிறது. சிகிச்சை உண்டா? - பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகி.

நிறைய பெண்களுக்கு இப்பிரச்சினை இருக்கிறது. பிரதான காரணம் இரத்த சோகை. உலக அளவில் இந்தியப் பெண்கள்தான் இரத்த சோகையால் அதிகம் பாதிக்கப் படுகிறார்கள் என்கிறது சமீபத்திய ஆராய்ச்சிக் குறிப்பு ஒன்று. வெளி வேலை, வீட்டுப் பொறுப்பு என இரட்டைச் சுமை சுமக்கிற பெண்கள் பெரும்பாலும் அதற்கேற்ற சரிவிகித உணவை உட்கொள்வதில்லை. மீந்து போன உணவு, முதல் நாள் சமைத்ததை சாப்பிடுவது என உடம்பைப் பாழாக்கிக் கொள்கிறார்கள். இரத்த சோகையைக் குணப்பபடுத்திக் கொண்டாலே இப்பிரச்சினை சரியாகும். ஈஸ்னோஃபிலியா இருந்தாலும் இப்படி இருக்கலாம். அதற்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். இவை தவிர சிறுநீரகத் தசை நார்கள் பலவீனமாக இருப்பவர்களுக்கும் இப்படி இருக்கலாம். எனவே உங்களுக்கு எதனால் இப்படியிருக்கிறது என்பதை நேரில் பார்த்துதான் சரியான சிகிச்சையைப் பரிந்துரைக்க முடியும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 16, 2008 8:55 am

என் வயது 26. திருமணமாகி ஆறு மாதங்கள் ஆகிறது. புது மணப் பெண்ணாக வந்த எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது. என் கணவர் என்னை நெருங்குவதே இல்லை. காரணம் எனது சிறுத்த மார்பகங்கள். அவரது கோபம் வேறு விஷயங்களில் வெடிக்கிறது. முதலிரவோடு முடிந்து போன என் தாம்பத்திய வாழ்க்கையை மலர வைக்க முடியுமா? மார்பக வளர்ச்சிக்கு சிகிச்சை ஏதும் உண்டா? - டி.சுஜா, திருச்சி.

மனைவியையே ஒதுக்கும் அளவுக்கு இது அப்படியொன்றும் பெரிய பிரச்சினையில்லை. உங்கள் கணவரின் காட்டுமிராண்டித் தனமான மனப்பான்மையின் வெளிப்பாடே இது. மார்பகங்களின் அளவு என்பது பரம்பரை வாகு, உடலமைப்பு, சாப்பிடுகிற உணவு எனப் பல விஷயங்களைப் பொறுத்து அமைவது. நாட்டு மருந்துக் கடைகளில் அமுக்கராக் கிழங்கு சூரணம் என்று கிடைக்கும். அதை வாங்கி நெய்யில் குழைத்து தினம் சாப்பிடவும். பொட்டுக்கடலையைப் பொடித்து, சர்க்கரையும், சூடான நெய்யும் சேர்த்து தினம் மூன்று வேளைகள் கொஞ்சம் சாப்பிடவும். அதிலுள்ள ஈஸ்ட் மார்பக வளர்ச்சிக்கு உதவும். திராட்சை சாப்பிடுவதை தினசரி பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். பாதாம், அக்ரூட், பேரிச்சம்பழம் மாதிரி உலர் பழங்களை தினம் கொஞ்சம் சாப்பிடவும். நல்ல கெட்டியான தயிர் தினம் ஒரு கப் சாப்பிடவும். இரவில் பால் ஒரு டம்ளர் குடிக்கவும். முட்டையை அதன் மஞ்சள் கருவுடன் சேர்த்து சாப்பிடவும். வைட்டமின் ஈ கிரிம் என மருந்துக் கடைகளில் கேட்டு வாங்கி, மார்பகங்களில் கீழிருந்து மேலாகத் தடவி மசாஜ் செய்து அரை மணி நேரம் ஊறிக் குளிக்கவும். இதெல்லாம் உங்கள் திருப்திக்காக. கணவரிடம் பக்குவமாகப் பேசுங்கள். மார்பக அழகோ, அளவோ காலத்துக்கும் அப்படியே இருக்கப் போவதில்லை. நம் உடலில் உள்ள வியர்வை சுரப்பியை மாதிரி அதுவும் ஒரு வகை சுரப்பி அவ்வளவுதான். அதைப் பெரிது படுத்தி நிகழ் கால சந்தோஷத்தை மறக்க வேண்டாம் எனப் பேசுங்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 16, 2008 8:55 am

எனக்குத் திருமணம் ஆகி ஒரு வருடம் ஆகிறது. என் வயது 27. என் கணவருக்கு விதைப்பை ஒன்று மட்டும் உள்ளது. முதலில் இரண்டுமே இல்லையாம். பிறகு ஆபரேஷன் செய்து ஒன்று மட்டும் உள்ளது. மற்ற ஒன்று அந்த இடத்தில் இல்லை. மருத்துவர்களோ குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என்று சொல்கிறார்கள். சித்த மருத்துவத்தில் எனக்குக் குழந்தை பாக்கியம் உண்டாக்க வழி ஏதேனும் உண்டா? -எஸ். கவிதா, ஊர் வெளியிட விரும்பவில்லை.

உங்கள் கணவருக்கு இரண்டு விதைப் பைகளுமே இருந்து, அவை இரண்டுமே இறங்கியிருந்தால் அல்லது ஒன்று மேலும், ஒன்று கீழும் இருந்திருந்தாலும் கூட குழந்தை பிறக்க வைக்க ஏதேனும் முயற்சிகள் செய்யலாம். ஆனால் அவருக்கு இரண்டுமே இல்லாமலிருந்து, பிறகு ஒன்று இறக்கியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். அதனால் அவருக்கு உங்களைக் கருத்தரிக்க வைக்கிற ஆற்றல் இருக்காது. செயற்கை மருத்துவ முறைகளும் பலனளிக்கும் என்று சொல்வதற்கில்லை. மன உளைச்சலும், பண விரயமும்தான் அதில் அதிகம். எனவே நீங்கள் இன்னும் காலம் தாழ்த்தாமல் உடனே ஒரு குழந்தையை தத்தெடுத்துக் கொள்ளும் முயற்சியில் இறங்குங்கள். அதிலும் உறவுக்குள் தத்து எடுக்க வேண்டாம். அது பின்னாளில் உங்களுக்குப் பல பிரச்சினைகளைத் தர வாய்ப்புண்டு. வெளியிலிருந்து ஒரு குழந்தையை தத்தெடுத்து அதற்கு முகவரியும், வாழ்க்கையும் கொடுங்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 16, 2008 8:56 am

என் வயது 29. எனக்கு இரண்டு மார்பகங்களும் பெரியதாக உள்ளன. நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கிற கொடி வேலித் தைலம் உபயோகித்தால் இப்பிரச்சினை சரியாகும் என்கிறார்களே, அது சரியா? மேலும் எனக்குக் கல்யாணமாகி, குழந்தை இல்லை. குழந்தை உண்டானால் இப்பிரச்சினையால் பால் சுரப்புக்கு ஏதேனும் பிரச்சினைகள் வருமா? -பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகி.

நான் ஏற்கனவே சொன்ன மாதிரி மார்பகங்களின் அமைப்பு என்பது பரம்பரைத் தன்மை, உடல்வாகு போன்றவற்றைப் பொறுத்தது. அதைப் பற்றிய வருத்தம் உங்களுக்கு வேண்டாம். குழந்தை உண்டாகி, அதற்குத் தாய்ப்பால் கொடுத்தாலே, இப்பிரச்சினை ஓரளவு சரியாகும். பல பெண்களும் பயப்படுகிற மாதிரி மார்பக அளவுக்கும், தாய்ப்பால் சுரப்புக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. மார்பக அளவைப் பொறுத்து தாய்ப்பாலின் சுரப்பு கூடவோ, குறையவோ செய்யாது. தினம் குளிப்பதற்கு சோப்பைத் தவிர்த்து, பயத்தம் பருப்பு மாவைத் தேய்த்துக் குளித்து வாருங்கள். அதற்கு மார்பக சதைகளை ஓரளவுக் குறைக்கிற சக்தி உண்டு. மற்றபடி உடற்பயிற்சி, யோகா போன்றவை மூலம்தான் இப்படிப்பட்ட பிரச்சினைகளை சரியாக்க முடியும். தகுந்த யோகாசன நிபுணரிடம் கலந்தாலோசித்து சரியான ஆசனங்களைச் செய்ய ஆரம்பியுங்கள். தினம் மூன்று கிலோமீட்டர் தூரம் நடப்பதும் நல்லது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 16, 2008 8:56 am

என் வயது 40. குழந்தை பாக்கியம் இல்லை. மூன்று வருடங்களுக்கு முன் என் கர்ப்பப்பையில் கட்டி வந்து கர்ப்பப்பையை அகற்றிவிட்டோம். என் கணவருக்கு வயது 55. இந்த வயதிலும் என்னுடன் உறவு கொள்ள விரும்புகிறார். அதனால் என் உடல் நிலை பாதிக்குமா? -வி. காளியம்மா, உத்தமசோழபுரம்.

கர்ப்பப்பையை அகற்றி விட்டதால் இனி உங்களுக்குக் குழந்தைப் பேற்றுக்கான வாய்ப்பு இருக்காது. மற்றபடி நீங்கள், உங்கள் கணவருடன் விரும்புகிற வரை உறவு கொள்ளலாம். செக்ஸ் உறவு என்பது தம்பதியருக்குள் உண்டாகிற இயற்கையான எதிர்பார்ப்பு தான். அதற்கு வயதோ, வேறு விஷயங்களோ தடையாக இருக்கத் தேவையில்லை. மனசுதான் முக்கியம். உங்கள் கணவர் மனத்தளவில் இளமையாகவே இருப்பதாகத் தெரிகிறது. எனவே உறவுக்கு நீங்கள் உடன்படுவதில் தவறில்லை. இது உங்கள் இருவரின் உடல் நலத்தையும் எந்த வகையிலும் பாதிக்காது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 16, 2008 8:56 am

என் வயது 24. திருமணமாகி மூன்றரை வருடங்கள் ஆகிறது. மாதவிடாய் முறையாக இல்லை. எல்லா சோதனைகளும் செய்தாகி விட்டது. மருந்துகள் எடுத்துக் கொண்டேன். சில மாதங்களுக்கு முன் இரண்டு மாதங்கள் சரியாக 28 நாட்களில் மாதவிலக்கு வந்தது. மருத்துவர் குழந்தை நிற்க மருந்து கொடுத்தார். அந்த மாதமே கருவுற்றேன். இரண்டு மாதங்களில் அபார்ஷன் ஆகிவிட்டது. ஒரு முறை டி.என்.சியும் செய்து விட்டேன். ஹார்மோன் டெஸ்ட் நார்மல். மீண்டும் நான்கு மாதங்களாக மாதவிலக்கு வரவில்லை. மாத விடாய் சரியாகி, எனக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்குமா? -சரஸ்வதி, பாண்டிச்சேரி.

நீங்கள் குறிப்பிட்டுள்ள விவரங்களை வைத்துப் பார்க்கும் போது உங்களுக்கு சினை முட்டை சினைக்கும் தன்மை குறைவாக இருப்பது தெரிகிறது. மாதவிடாய் முறையாக சில மருந்துகளை உட்கொள்ள வேண்டும். கொள்ளு வேக வைத்த தண்ணீரை வாரம் இரண்டு முறைகள் தவறாமல் குடிக்கவும். வாழைத் தண்டு வேக வைத்த தண்ணீரில் கொஞ்சம் தனியா தூளும், கொஞ்சம் சீரகத் தூளும் சேர்த்துக் குடிக்கலாம். பயத்தம் பருப்பும், வாழைத் தண்டும் சேர்த்து கூட்டு செய்து சாப்பிடவும். சமையலில் புதினா அடிக்கடி சேர்ப்பதுடன், இஞ்சி, பூண்டு, மிளகு, சீரகம், தனியா தினமுமே சேர்த்துக் கொள்ளவும். தினம் ஒரு பெரிய நெல்லிக் காய் சாப்பிடவும். மாதவிலக்கு ஒழுங்காக வந்தால், முதல் மூன்று நாட்கள் கொள்ளு வேக வைத்த தண்ணீரை இரண்டு வேளைகள் கட்டாயம் குடிக்க வேண் டும். சினை முட்டை வந்தால்தான் மாதவிலக்கு வரும். இதற்கிடையில் உங்கள் கணவருக்கும் விந்தணுச் சோதனை செய்யவும். அவருக்கேதும் குறைபாடுகள் இருந்தாலும்கூட அபார்ஷன் ஆகும். மேற்சொன்னவற்றை எல்லாம் தாமதிக்காமல் செய்யவும். பயம் வேண்டாம். சரியாகும்.

Sponsored content

PostSponsored content



Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக