ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹிட்லரின் ஜெர்மனில் பெண்களின் நிலை

+2
பிரகாஸ்
சிவா
6 posters

Go down

ஹிட்லரின் ஜெர்மனில் பெண்களின் நிலை Empty ஹிட்லரின் ஜெர்மனில் பெண்களின் நிலை

Post by சிவா Sun Sep 13, 2009 3:29 pm

ஹிட்லரின் ஜெர்மனில் பெண்களின் நிலை 225px-Hitler_portrait_crop



இக் கட்டுரையாளரான அமெரிக்காவைச் சேர்ந்த கேட் மில்லட் ஆரம்பத்தில் 1969இல் வெளியான அவரது நூலான பாலியல் அரசியல் (Sexual Politics) எனும் நூலின் மூலமே உலகுக்குத் தெரியவந்தார். ஆங்கில மொழிவிசேட பட்டம்பெற்ற இவர் பேராசிரியராகவும் கடமையாற்றியவர். அவரது ஆய்வு நூலுக்கு அரசியலில் பால்நிலை செல்வாக்கு குறித்து அக்கறை காட்டியிருந்தார். ஆணாதிக்க வாழ்முறை தொடர்ச்சியாக இருப்புகொள்ள இலகுவாக்கிய பிற்போக்கு சக்திகள் ஆற்றிய பாத்திரம் அவை வெற்றிகொண்ட விதம் அதன் மூலம் புரட்சிகர சமூக மாற்றம் மேலும் பின்தள்ள காரணமாகிப் போன விதம் என்பன குறித்து விரிவாக எழுதியிருக்கிறார். இந் நூல் பின்னர் வந்த பெண்ணிய ஆய்வுகளுக்கு அதிக துணைபுரிந்துள்ள புகழ்பெற்ற நூலாக கொள்ளப்படுகிறது. அவரது நூலில் ஒரு கட்டுரையான நாசி ஜேர்மனியில் பெண்கள் எப்படி நடத்தப்பட்டார்கள் எனும் கட்டுரை இங்கு மொழியாக்கம் செய்யப்படுகிறது.

பொதுவான ஆணாதிக்க அரசியல் கட்டமைப்புக்குள் நடாத்தப்படும் ஏனைய பிரச்சினைகளுக்குள் எவ்வாறு பெண்கள் விசேடமாக அடக்கப்படுகிறார்கள், புனிதங்களின் பெயரால் அவை எப்படி நியாயப்படுத்தப்படுகிறது. இந்த ஒடுக்குமுறைகள் எவ்வாறு திட்டமிட்டு நிறுவனமயப்படுத்தப்படுகின்றன. இதனை எதிர்க்க முடியாதபடி அரச இயந்திரம் எப்படி அடக்குமுறைக்கு தயார்படுத்துகிறது, விடுதலையின் பெயராலும், தாய்நாட்டின் விடிவின் பெயராலும், இனத்துவத்தின் பேராலும், இவை எல்லாம் தவிர்க்கமுடியாது என்பது எப்படி நம்பவைக்கப்படுகிறது என்பது இன்றைய காலகட்டத்தில் தமிழ்ச் சூழலில் அவசியமானவை. அப்படி ஒரு அனபவத்தைத் தர இந்த கட்டுரை 60 வருடங்களுக்கு முந்திய சூழலுக்குள் கொண்டு போகிறது.



ஹிட்லரின் ஜேர்மனியில் பெண்களுக்கு அளிக்கப்பட்ட இடமானது குடும்பம் தாய்மை போன்றனவற்றை பெற்றுக் கொள்ளக ;கூடியவாறான நிலையே. என்றாலும், அத்தோடு யுத்தம் தொடக்கப்பட்ட காலப்பகுதியில், ஜேர்மயின் யுத்த தந்திரோபாயமானது யுத்தத்தளபாடங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாகைளில் அதிகளவில் உழைப்பை செலுத்தியவர்கள் பெண்களாவர். கிழக்கு ஐரோப்பாவிலிருந்து அடிமை உழைப்புக்கு அள்ளுப்பட்டு வந்த காலத்தில் இந்த நிலைமை அதிகரித்தது. 1933 ஜனவரியில் ஹிட்லர் அதிகாரத்திற்கு வரும்போது தொழிற்சாலைகளில் பணிபுரிந்த உழைப்பாளர்களில் 37.3 வீதம் பெண்களாக இருந்தனர். 1936ஆகும்போது பெண்களின் தொகை 31.8ஆக குறைந்தது. என்றபோதும் 1940 ஆகும் போது மீண்டும் 37.1 வரை வேலை செ;யும் பெண்களின் வீதாசாரம் உயர்ந்தது.

1935இல் யூலை 26 அன்று தேசிய உழைப்புச்சேவை சட்டத்தின் கீழ் பெண்கள்-ஆண்கள் இரு தரப்பினரும் கட்டாய தேசிய சேவைக்கு அமர்த்தப்பட்டனர். 1940இல் இந்த சட்டத்தை மீறமுடிந்த பெண்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. திருமணம், தாய்மை மற்றும் குடும்பம் பற்றிய கற்பிதங்களும், பிரசாரங்களும் எவ்வாறிருந்தபோதும் நாசி ஆட்சியின் கீழ் தொழில்புரிந்த பெண்களின் தொகை நிச்சயமாக அதிகமாக இருந்தது. இதில் உள்ள ஆச்சிரியம் என்னவென்றால் நாசி ஜெர்மனியில் வேறு துறைகளில் பெண்களுக்கு இருந்த இடம் பற்றி தெரியும்போது தான். பல்கலைக்கழக பிரவேசம் தொடர்பாக கடைபிடித்த கொள்கையின் காரணமாக பெண்களின் பிரவேசம் 10க்கு 1 ஆக இருந்தது. இரண்டாம் நிலை பாடசாலை மாணவர்களில் மூன்றில் இரண்டு வீதம் பெண்களாக இருந்தனர்.

இவற்றை ஆராய்ந்துகொண்டு போனபோது எமக்கு கிடைக்க முடிவுகள் இதுதான். பெண்களை மீண்டும் வீட்டுக்குள் முடக்கி வைத்திருப்பது என்பது நாசிச் சிந்தனையின் பிரதான நோக்கமாக இருக்கவில்லை, மாறாக "சகல உயர் தொழில்களிலிருந்தும் அவர்களை நீக்கி அவர்களை குறைந்த ஊதியம் பெறும் தொழிலாளர்களாக ஆக்குவதாகவே இருந்தது."

1934இல் நாசி வைத்தியச் சபையொன்றில் உரையாற்றிய வைத்தியத்துறை தலைவர் டொக்டர் வாக்னர் இப்படிக் கூறினார். "நாங்கள் பெண்களுக்கு உயர் கல்வியை அளிக்கும் எண்ணத்தை விட்டுவிடுவோம்' என்றார் அவர்.

புதிய முறையினை எதிர்த்து தமது குரல்களை பெண்கள் வெளிப்படுத்தாமலுமில்லை. திம் எனும் டொக்டர், சோபி சோக், பர்னர், அன்னா பெப்ரிட்ஸ் போன்றோர் இதில் அடங்கினர். ஆனால் இவர்களின் குரல்கள் படிப்படியாக ஊமையாக்கப்பட்டன. புதிய அரச யந்திரம் உறுதிபடுத்தப்பட்டதன்பின், நீதிபதிகளாக கடமையாற்றும் உரிமையும் பெண்களுக்கு மறுக்கப்பட்டது. 1936 ஆகும் போது நீதிமன்றங்களில் எந்தவொரு பதவியையும் பெண்கள் வகிப்பது தடை செய்யப்பட்டது. நாசிகள் பதவிக்கமர்ந்த போது ரய்க்ஸ்டாக் எனும் பிரதேச அட்சியில் பெண் உறுப்பினர்கள் 30 பேர் அங்கம் வகித்தனர். 1938இல் ஒரு பெண்ணும் அங்கம் வகித்திருக்கவில்லை.


ஹிட்லரின் ஜெர்மனில் பெண்களின் நிலை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஹிட்லரின் ஜெர்மனில் பெண்களின் நிலை Empty Re: ஹிட்லரின் ஜெர்மனில் பெண்களின் நிலை

Post by சிவா Sun Sep 13, 2009 3:30 pm

இதே காலப்பகுதியில் பிரச்சார சாதனங்களால் தாய்மை கருத்தாக்கங்களும், குடும்பம், வீடு உயர் குண்கள் என்பன பற்றிய கருத்துருவாக்கங்களும் பரப்பப்பட்டன. இதன் நோக்கம் பெண்களை உழைப்பில் ஈடுபதிலிருந்து அகற்றும் நோக்கத்தைக் கொண்டதாகவே இருந்திருக்க முடியும். இரண்டு வருமானமுடைய குடும்பங்களுக்கு எதிராக ஏற்படுத்தப்பட்ட சட்டங்களும், எந்தவித காரணமுமின்றி திருமணமான, திருமணமாகாத பெண்களை தொழிலிருந்து நீக்கப்பட்டதையும் நாம் கவனத்திற்கு எடுக்க வேண்டுவதோடு, இவ்வாறான மேற்தோற்றத்தில் நிலைமைகள் உருவாகும்போது தன்னை உறு உழைப்புச் சந்தையில் குறைந்த ஊதியத்திற்கு தள்ளப்பட்டோ அல்லது உதவியாளராகவோ தள்ளப்படும் நிலைமையை மொளனமாக ஏற்றுக்கொள்ள தயார்படுத்தப்பட்டாள்.

அமைச்சுப் பதவி வகித்த வில்ஹெம் பிரிக் இன் கருத்தின்படி "தாய்க்கு தமது பிள்ளைக்காக அர்ப்பணிப்பதும், மனைவி கனவனுக்காக அர்ர்ப்பணிப்பதும் பெண்களின் ஆயுட்கடமையானது." திருமணமாகாத பெண் தன்னை பாதுகாக்க "பெண்களுக்கே உரித்தான" தொழில்களை செய்வதற்கூடாகத் தான் தன்னை பேணக்கொள்ளலாம். இன்னொருவகையில் கூறப்போனால் தொழிலானது ஆண்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.என்றபோதும், நாசி அரசின் ஆணாதிக்கமானது முக்கியத்துவம் பெறுவதற்கு பிரதான காரணம் உளவியல் ரீதியான மற்றும் ஐதீகம் சார்ந்ததுமாகும். கட்சியின் தலைவர்கள் வெளியிட்ட அறிக்கைகளிலிருந்து இது வெளிப்படையாக தெரிகிறது. கட்சியின் ஆரம்பகால சித்தாந்தவாதியாக இருந்த கொட்பி பெடர் மக்களுக்கு பெண்களின் இயல்பு பற்றி தெளிவுபடுத்தும்போது இவ்வாறு குறிப்பிடுகிறார்-

பாலியல் ஜனநாயகத்தை திட்டமிட்டு யூதப் பெண்கள் எம்மிடமிருந்து பறித்திருக்கிறார்கள். இளைஞர்களாகிய நாங்கள் ஒன்றுபட்டு இதனை இல்லாது செய்யவேண்டும். அப்போதுதான் உலகின் மிகவும் புனிதமான பொருளான வேலைக்காரி மற்றும் பணிப்பெண்ணாக செயற்படும் பெண்ணை மீளவும் நாங்கள் பெற்றுக்கொள்ளலாம்.

1934 செப்டம்பர் 8 அன்று நூரெம்பர்க்கில் ஹிட்லர் உரையாற்றியபோது கட்டற்ற பாலியல் புரட்சிக்கு காரணம் யூத கம்யூனிசமே என்று கூறினார்.

"பெண்கள் விடுதலை" பற்றிய கருத்தாக்கம் கண்டெடுக்கப்பட்டது யூதப்பெண்களிடமிருந்தே என்பதால் அதில் கருக்கொண்டு இருப்பதும் யூத ஆத்மாவே.

பெண்களின் நிலைமை குறித்து ஹிட்லர் கொண்டிருந்த கொள்கை மிகவும் தெளிவானவை. ஏனையோரைப்போலவே அவருக்கும், பெண்-ஆண் இரு பாலினருக்குமான வேறுபாடு இயற்கையானது. "அவளின் உலகமானது கணவன், குடும்பம், பிள்ளைகள், வீடு. ஆனால் இந்த சின்ன உலகம் எந்தவொரு காரணத்தைக்கொண்டும் பாதுகாக்காவிட்டால், அதைவிட பெரிய உலகத்தை பாதுகாப்பது யார்? பெண்ணானவள் கனவனின் உலகத்திற்குள் நுழைய முயற்சிப்பது, எமது உணர்வுகளுக்கு ஏற்புடையதல்ல. உண்மையில், இந்த இரு உலகங்களும் வேறுவேறாக இயங்குவது இயல்பானதாகத் தோன்றும். ஒரு சாராருக்கு உரிமையாவது என்பது உணர்வுபூர்வமான, ஆத்மார்த்தரீதியலான பலமே. ஆண்களே உலகைத் தாங்கி நிற்கின்றனர். பெண்களே குடும்பத்தை தாங்கிநிற்கின்றனர். பெண்களின் உரிமை என கருத்தப்படுவது யாதெனில் இயற்கையால் அவளுக்கு நியமமாக்கப்பட்டுள்ள வாழ்க்கை முறைக்குள் கிடைக்கக்கூடிய கவனிப்பு அவளுக்கு கிடைக்கச்செய்வதையே. பெண்களும் ஆண்களும் பூரணமாகவே வௌ;வேறு வாழ்க்கையைஅனுபவிக்கும் உயிரிகள் இரண்டு. ஆணிடம் ஆட்சி செய்வது தர்க்க அறிவு. அவன் ஆராய்வான். சில வேளைகளில் புதிய உலகைக் கண்டுபிடிப்பான். ஆனால் அவனின் தர்க்க அறிவால் பெறும் விளைவுகள் பெரும்பாலும் மாற்றமுறவும் கூடும். உணர்வுகள் தர்க்க அறிவை விட சில வேளைகளில் மேலாதிக்கம் செலுத்துகின்றன. பெண்கள் என்பவர்கள் உணர்வுகள்."

மேற்படி மேற்கோள் ஹிட்லரின் புகழ்பெற்ற நூலான "மயின் காம்ப்" என்பதில் எடுக்கப்பட்டது. அதில்இன்னுமொரு இடத்தில் "ஜேர்மனிய இளம் பெண்கள் அரசின் முன் சேவகர்கள். அவள் பிரஜையாவது மணமானதன் பின்னர்தான்." என்றும் குறிப்பிடுகிறார்.

முதலாவது நாசி வேலைத்திட்டதின் மூலம் கோரப்பட்ட பிரதான கோரிக்கை பெண்களின் வாக்குரிமையை இல்லாதொழிப்பது என்பது. 1918இல் வைமார் அரசால் ஜேர்மன் மக்கள் பெற்றுக்கொண்டு சர்வஜன வாக்குரிமை நாசி ஆட்சி யந்திரம் பதவிக்கு அமர்ந்ததும் இல்லாமல் செய்யப்பட்டது. பெண்கள் பொது வாழ்க்கையில் அந்நியப்படுத்தப்பட்டு, அரச பதவிகளில் இருந்து அகற்றப்படுவதும் நாசிகளின் கொள்கையாகும். ஹிட்லரின் "பெண்கள் கல்வியின் மூலம் இலக்காக்கிக் கொள்ளவேண்டியது எதிர்கால தாய்மைக்கு தயாராவது குறித்தே" எனும் கூற்று முக்கியமாக அவசியப்படுவது எதற்கெனில் இராணுவ அரசொன்றில் ஆட்பலத்தை அதிகரிப்பதற்கான நீண்டகால இலக்கை கருத்தில் போதே. நாட்டுக்காக மரணமாவதற்காக குழந்தைகள் அதிகளவில் பிறந்துகொண்டிருக்க வேண்டும். பதிவரதைத்தனத்தை காத்துக்கொண்டுஒரு நல்ல தாயாக இருப்பது ஒரு எடுத்தக்காட்டான பெண்ணின் கடமையாக வலியுற்றத்தப்படுவது, பாலியல் தேவைகளுடன் கருவளத்தையும் கட்டாயமாக பிணைத்து வைத்திருப்பதும் முக்கியமான வழிமுறையென தெரிகிறது. நாசிகள் குடும்பக்கட்டுப்பாட்டுக்கும், கருக்கலைப்புக்கும் எதிராக கொண்டுவரப்பட்ட சட்டங்கள் இதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு. அது போல இந்த வழிகளின் மூலம் பெண்களின் பாலியல் மற்றம் கருவள உரிமைகளை தீர்மானிப்பதும், கட்டுப்படுத்துவதும் அரசின் நடைமுறை தத்துவமாக இருந்தது.


ஹிட்லரின் ஜெர்மனில் பெண்களின் நிலை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஹிட்லரின் ஜெர்மனில் பெண்களின் நிலை Empty Re: ஹிட்லரின் ஜெர்மனில் பெண்களின் நிலை

Post by சிவா Sun Sep 13, 2009 3:30 pm

நாசி கட்சியின் ஆரம்பகாலத்தில் முக்கியமான பாத்திரமாற்றிய ப்லே ட்ஸ்க்ளிங் எனும் பெண்மணியும் இதே வகையான கருத்துக்களுக்கு ஊக்கமளித்துக ;கொண்டிருந்தார். அவர் இப்படிக் கூறியிருந்தார். "ஜேர்மனிய பெண்களின் சீவியக் கடமை ஜேர்மனிய கனவனுக்கு சேவை செய்வதே. வீட்டைப்பேணிக்காத்து ஆணுக்கு திருப்தி ஏற்படுத்தக்கூடிய வகையில் நடந்துகொள்வதே" என்றார் அவர்.

நாசிக் கொள்கையானது ஆணுக்கே ஆணுக்குரிய ஒன்றாகவே இருந்து வந்தது என்பது சந்தேகத்திற்கிடமில்லை. பிரசாசரத்துறைக்கு பொறப்பான அமைச்சர் கோயபல்ஸ் இன் கருத்தின்படி "நாசி இயக்கமானது இயல்பாகவே ஆண்களின் இயக்கமாகும். பொது வாழ்க்கையில் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதில் கடினமான காரியமில்லை. அரசியல் எனும் மிகப்பெரும் துறை இதிலொன்றாகும். இது நிச்சயமாக ஆண்களுக்கு உரித்தாக இருக்க வேண்டிய ஒன்று. நாங்கள் பொது வாழ்க்கையில் பெண்களை விரட்டும் போது அவ்வாறு செய்வது அவளிடமிருந்து விடுபடுவதற்கு அல்ல. அவளுக்கு உயர்ந்த கௌரவம் கொடுப்பதற்காகவே. பெண்களுக்கு உரித்தான பிரதானமானதும், முக்கியமானதுமான கடமையானது மனைவியாதலே. நாங்கள் இந்த கருத்திலிருந்து திரும்பினோமானால் அது பெரும் குற்றமாகும்."

நாசி "பரீசிலிப்பு" குறித்து மிகவும் எமக்கு முக்கியமாவது அது பெண்களின் நிலைமையை சட்டரீதியில் கட்டுப்படுத்துவதாலேயே. நாசி அரச இயந்திரத்தின் கீழ் திருமணமாகாத பெண்-ஆண் ஆகிய இரு சாராரிடமிருந்தும் வரி வசூலிக்கப்பட்டது. 1933 யூன் 1ஆம் திகதி முக்கியத்துவம் வாய்ந்த விவாகக்கடன் சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்படி விவாகமொன்றின் மூலம் பெறப்பட்ட சகல குழந்தைக்கும் வரிவிலக்கு வழங்கப்பட்டது. பெண்ணின் பெயருக்கு இந்த கடன் வழங்கப்பட்டாலும் அதனை பெற்றுக்கொண்டது ஆண்தான். இந்த கடன் முறையின் மூலம் தாய்மார் தொழில்செய்வது தடைசெய்யப்பட்டிருந்தது.

நாசி ஜேர்மனில் குடும்பக்கட்டுப்பாடு பற்றிய பிரச்சாரங்கள் செய்வது வைத்தியர்களுக்குக் கூட தடைசெய்யப்பட்டிருந்ததானது மோசகரமான செயலாக இருந்தது. குடும்பக் கட்டுப்பாட்டு முறைகளை செய்துகொண்டிருந்த நிலையங்கள் 1993இன் பின் மூடப்பட்டன. விசேட அனுபமதிப்பத்திரமின்றி குடும்பக்கட்டுப்பாடு குறித்து ஆலோசனை வழங்குவது, பிரசுரங்கள் வெளியிடுவது, விற்பனை செய்வது தடைசெய்யப்பட்டிருந்தது.

நாசி அரசு பற்றிய ஒட்டுமொத்த சாராம்சமாக பார்க்கும்போது "புனிதமான தாய்மை' மற்றும் குடும்பத்தில் முக்கியத்துவத்தைப் பற்றியும் அறியும் அதே வேளை பொருளாதார காரணங்களும் காரணியாக தொழிற்பட்டிருக்கிறது. அரசுக்கு தேவைபட்டபடி மிகவும் கடினமான செயற்பாடுகளில் ஈடுபடுத்துவதற்காக ஜேர்மனிய பெண்கள் தொழில் ரீதியாகவும் அரசியல் சமூக பங்களிப்புகளிலிருந்து அந்நியப்படுத்தப் பட்டதோடு மட்டுமல்லாமல் குடும்பத்தில் அனைத்து உறுப்பினர்களுக்கும் கட்டாயம் நிறுவனமயப்படுவதற்காக அரசுக்கும், குடும்ப அலகுக்கும் இடையில் போட்டி நிலைமை எறு;பட்டது.

ஆனால் நாசி அரசு ஆணாதிக்கத்தை சித்தாந்த வழிகொண்டு நடத்தப்பட்ட தன்மை பிரதானப்பட்டது. பெண்களின் மீதான அடக்குமுறைகளின் மேல் எழுப்பப்பட்ட சமூக கட்டமைப்புக்குள் சர்வாதிகார இராணுவ ஆட்சியந்திரத்தை நடத்துவதென்பது இலகுவாக இருந்தது.

மீண்டுமொருமுறை எமக்கு முடிவுக்கு வரக்கூடியதாக இருக்கும் விடயம், பாலியல் அரசியல் சமூக அமைப்புக்குள் பொருளாதார மற்றும் வேறும் துறைகளுடன் தொடர்புற்றிருக்கக்கூடும் ஆனால், அது பிரதானமாக ஏதாவது வாழ்முறை சார்ந்த கொள்கையாகவும் இருப்பது தான் எமது கவனத்துக்குரியது. எமது இருப்பின் மீது சகல மட்டங்களிலிருந்தும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே எமது மரபில் இறுக்கமான உளவியல் சித்தாந்த கட்டமைப்பு தோற்றுவிக்கப ;பட்டிருக்கிறது. இன்று வரை அதிலிருந்து எவராலும் இலகுவாக கழன்றுவிடமுடியாதபடி இருக்கிறது.


கேட் மிலட்


ஹிட்லரின் ஜெர்மனில் பெண்களின் நிலை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஹிட்லரின் ஜெர்மனில் பெண்களின் நிலை Empty Re: ஹிட்லரின் ஜெர்மனில் பெண்களின் நிலை

Post by பிரகாஸ் Sun Sep 13, 2009 3:41 pm

பெண்ணடிமை கொடுமையின் நாசிகளின் சித்தாந்தம் மிகக் கொடுமையானது

நல்ல தகவல் அளித்தமைக்கு நன்றி


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

ஹிட்லரின் ஜெர்மனில் பெண்களின் நிலை Empty Re: ஹிட்லரின் ஜெர்மனில் பெண்களின் நிலை

Post by செரின் Sun Sep 13, 2009 3:44 pm

இன்னும் இந்த பூமியில் பல ஹிட்லர்கள் இருக்கிறார்கள் தான் அண்ணா
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

ஹிட்லரின் ஜெர்மனில் பெண்களின் நிலை Empty Re: ஹிட்லரின் ஜெர்மனில் பெண்களின் நிலை

Post by ரூபன் Sun Sep 13, 2009 3:45 pm

இது என்ன கொடுமை இன்று நம்நாட்டில் நடப்பவையை விடவா இது கொடுமை அங்கு பெண்களின் கருப்பையை அகற்றுகிறார்கள் ஆண்களின் ஆண்மைத்தன்மையை இலக்கச்செய்கிறார்கள் என்ன கொருமை இதைவிட கிட்லர் பரவாயில்லை என்றே எனக்கு தோன்றுகிறது
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

ஹிட்லரின் ஜெர்மனில் பெண்களின் நிலை Empty Re: ஹிட்லரின் ஜெர்மனில் பெண்களின் நிலை

Post by மீனு Sun Sep 13, 2009 3:45 pm

பயனுள்ள தகவல்கள் அண்ணா ..இங்கு இன்னும் பல அறிய கிட்லர் படங்கள் போடுங்கள் ..அண்ணா முடிந்தால்.. கட்டுரை அருமை..இதில் உள்ள பல தகவல்களை நாம் படித்து இருந்தாலும் ..மீண்டும் நினைவு படுத்த உதவிய ஷிவா அண்ணனுக்கு நன்றிகள் பலப் பல


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ஹிட்லரின் ஜெர்மனில் பெண்களின் நிலை Empty Re: ஹிட்லரின் ஜெர்மனில் பெண்களின் நிலை

Post by சிவா Sun Sep 13, 2009 3:53 pm

மேலும் படங்கள் இங்கு இணைக்கப்பட்டுள்ளது மீனு!

https://eegarai.darkbb.com/-f22/--t4727.htm


ஹிட்லரின் ஜெர்மனில் பெண்களின் நிலை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஹிட்லரின் ஜெர்மனில் பெண்களின் நிலை Empty Re: ஹிட்லரின் ஜெர்மனில் பெண்களின் நிலை

Post by பிரகாஸ் Sun Sep 13, 2009 3:53 pm

கிட்லர் பருவாயில்லை என்று சொல்லக் கூடாது

கிட்லர் போலுல்லவர்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள்


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

ஹிட்லரின் ஜெர்மனில் பெண்களின் நிலை Empty Re: ஹிட்லரின் ஜெர்மனில் பெண்களின் நிலை

Post by சதீஷ்குமார் Sun Sep 13, 2009 6:37 pm

ஹிட்லர்
இப்பொழுது மறுபிறவி எடுத்துள்லானே ஹிட்லரின் ஜெர்மனில் பெண்களின் நிலை 128872
சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Back to top Go down

ஹிட்லரின் ஜெர்மனில் பெண்களின் நிலை Empty Re: ஹிட்லரின் ஜெர்மனில் பெண்களின் நிலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum