ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெ ஆட்சி நன்றாக உள்ளது - மனம் திறக்கிறார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

Go down

ஜெ ஆட்சி நன்றாக உள்ளது - மனம் திறக்கிறார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் Empty ஜெ ஆட்சி நன்றாக உள்ளது - மனம் திறக்கிறார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

Post by சிவா Mon Jun 27, 2011 8:36 am

ஜெ ஆட்சி நன்றாக உள்ளது - மனம் திறக்கிறார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் E_1308897883

தேர்தல் தோல்விக்குப் பின் கப்-சிப்பென்று அமைதி காத்த தமிழக காங்கிரஸ் கட்சியிலிருந்து - தங்களை கடுமையாக விமர்சிப்பவர்களை எதிர்த்து முதல் குரல் கொடுத்திருப்பவர் முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். காங்கிரஸ் கட்சி மீது கூட்டணிக் கட்சியனரே வைக்கும் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு தமக்கேயுரிய பாணியில் சரவெடி போல் பதிலளித்தார்.

*காங்கிரஸ் கட்சி இலங்கைப் பிரச்னையில் காட்டிய அலட்சியம்தான் உங்கள் கூட்டணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறதே?


“தங்களைத் தாங்களே பொய்யாக சமாதானப்படுத்திக் கொள்ள இங்குள்ள திராவிடத் தலைகள் இப்படி எதையாவது சொல்லலாம். தோல்விக்கான உண்மையான இரு காரணங்கள் - பெருக்கெடுத்த லஞ்ச லாவண்யம், ஊழல். அடுத்தது குடும்ப ஆட்சியால் நடந்த அலங்கோலங்கள்! அவ்வளவுதான். தி.மு.க.வுடன் சேர்ந்து சகவாசதோஷத்தில் காங்கிரஸும் பாதிக்கப்பட்டுவிட்டது!

இலங்கைப் பிரச்னையைப் பொறுத்தவரை, நாங்கள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்தே வந்திருக்கிறோம். கடந்த ஓர் ஆண்டாக மூத்த அமைச்சர் பிரணாப் முகர்ஜி நேரடியாகவே இலங்கை சென்றுள்ளார். அதேபோல் வெளியுறவுத் துறை அதிகாரிகள், சிறப்புத் தூதர் என்று வரிசையாக பலர் இலங்கை சென்று பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு கோடிக்கணக்கில் உதவிகள் செய்து, சாலைகள், பள்ளிகள், வீடுகள் என்று கட்டித் தரப்பட்டுள்ளன. இதற்கு மேலாக தமிழக காங்கிரஸ் கட்சியினர் மற்ற கட்சியினருடன் இணைந்து மத்திய அரசை இன்னும் தீவிரமாக இலங்கைத் தமிழர் நலன் காக்க வற்புறுத்தி வருகிறார்கள்!’

* இதெல்லாம் சம்பிரதாய பேச்சுகள் என்றுதானே காங்கிரஸ் மீது குற்றம் சாட்டுகிறார்கள்?

“தோல்விக்கு காங்கிரஸ் காரணம் என்று இப்படி அவதூறு கிளப்புவதெல்லாம் அவர்களாக சொல்கிறார்களா “ல்லது வயதான முதியவர்கள் தூண்டுதலால் சொல்கிறார்களா என்பது என் சந்தேகம். இப்படிச் சொல்பவர்கள் இங்குள்ள தமிழர்கள் நல்வாழ்வுக்கும் பாடுபடுபவர்கள் அல்ல. இலங்கைத் தமிழர்கள் நல்வாழ்வுக்கும் அக்கறை காட்டுபவர்கள் அல்ல... கட்டப் பஞ்சாயத்து செய்பவர்கள் எல்லாம் காங்கிரஸைப் பற்றி பேசக் கூடாது’

* தோல்விக்குக் காரணம் “தி.மு.க.வின் ஊழல், குடும்ப அரசியல்’ என்று சொல்லும் நீங்கள், அதே கட்சியுடன் சேர்ந்துதானே ஊர் ஊராய் சென்று பிரசாரம் செய்தீர்கள்? உங்கள் பேச்சு உங்களுக்கே முரண்பாடாக இல்லையா?

“முரண்பாடாக இருந்தாலும் தேசிய கட்சியான காங்கிரஸுக்கு இதுபோன் சூழ்நிலை ஏற்படாமல் இருக்க வருங்காலத்தில் நடவடிக்கை எடுப்பார்கள் என தமிழக காங்கிரஸ் நம்புகிறது! சொல்லப்போனால் இதுபோன்ற சூழ்நிலை தேசிய கட்சிகள் எல்லோருக்குமே ஏற்பட்டுள்ளது. (சற்றுநேரம் யோசிக்கிறார்) சில சமயங்களில் ஆத்ம விசாரணை செய்யும்போது கசப்பான நிஜங்களை சொல்லித்தானே ஆகவேண்டும்? அப்போதுதான் தெளிவு பிறக்கும்!’

* இலங்கை அதிபரை “போர்க் குற்றவாளி’ என்கிறது ஐ.நா. அறிக்கை. நீங்களோ தூத்துக்குடியில் கப்பல் போக்குவரத்தை துவங்கி வைக்கிறீர்கள்... நியாயமா?


“இலங்கையோடு இப்போது ஊகூஅ (ஊணூஞுஞு கூணூச்ஞீஞு அஞ்ணூஞுஞுட்ஞுணt) ஒப்பந்தத்தில் இருக்கிறோம் நாம். இந்த நிலையில் நமக்கும், இலங்கைக்கும் பெரிய அளவில் வியாபாரத் தொடர்பாலும், அதேபோல் பல வெளிநாடுகள் நமக்கு அனுப்பும் சரக்குகளை ஸ்ரீலங்கா வழியாக அனுப்புவதன் மூலமாக அதிக பயணிகள் பிரயாணம் செய்வதாலும் கப்பல் விடுவது அவசியமாகிறது. “உலக அளவில் வியாபாரம்’ என்று சொல்லப்படும் இந்தக் காலத்தில் இதெல்லாம் அவசியமாகிறது.’

* இந்தத் தேர்தலில் பரபரப்பாக பேசப்பட்ட “ராகுல் ஃபார்முலா’ என்பது அர்த்தமற்றதாகிவிட்டதா?

“அப்படிச் சொல்ல மாட்டேன். இது ஒரு ஆரம்ப கட்டம். இந்த நடவடிக்கைகளில் உள்ள குறைகள் நிவர்த்தி செய்யப்படும்போது, அது காங்கிரஸ் கட்சி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்று நம்புகிறேன். தமிழக காங்கிரஸ் மீண்டும் எழும். பொறுத்திருங்கள்.’

* அது சரி, தமிழக காங்கிரஸுக்கு இப்போது யார் தலைவர்?

“சீக்கிரமாக முடிவு செய்ய வேண்டும். மேலிடம் சற்று மெத்தனமாக உள்ளது! விரைவில் எல்லாம் சீரடையும் என்று நம்புகிறேன்.’

* பாபா ராம்தேவ், அன்னா ஹஸாரே போன்றவர்கள் ஊழல், கறுப்புப் பணத்திற்கு எதிராக குரல் கொடுத்தால் உடனே அதற்கு ஏன் மதச் சாயம் பூசி அமுக்கப் பார்க்கிறது காங்கிரஸ்?

“தப்பு... தப்பு. ஊழல், கறுப்புப் பணத்திற்கு எதிராக யார் பேசினாலும் அதை வரவேற்கிறோம். அது எங்களுக்கும் ஏற்புடையதுதான். ஆனால் இப்படி குரல் கொடுப்பவர்கள் வைத்திருக்கும் பணம் கணக்கில் உள்ள பணமா? தங்களைக் காண வருபவர்களிடம் ஒரு லட்சம், பத்தாயிரம் என்று வாங்குகிறார்களே.. வாங்கிய பணத்திற்கு கணக்கு உண்டா? தொகை செக்காக வருகிறதா? கள்ளப் பணமா? என்பதெல்லாம் தெளிவுபடுத்தவேண்டும்.’

*ஜெயலலிதாவின் ஒரு மாதகால ஆட்சி எப்படியுள்ளது?

“ஆரம்பம் நன்றாக இருக்கிறது. அவரது நடவடிக்கைகளில் பக்குவம் தொடர்கிறது. முதிர்ச்சி தெரிகிறது. இப்படியே தொடரவேண்டும். சமச்சீர் கல்வியைப் பொறுத்தவரை, தேவையற்ற, சுயவிளம்பரப் பக்கங்கள் இடம் பெற்றிருந்தால் அவற்றை நீக்கிவிட்டு அமல்படுத்தியிருக்கலாம்.’

- வி.சந்திரசேகரன் (குமுதம்)


ஜெ ஆட்சி நன்றாக உள்ளது - மனம் திறக்கிறார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» நானே அம்மா, அப்பா - மனம் திறக்கிறார் பார்த்திபன்
» கிரிக்கெட்டில் இன்னும் திருப்தியில்லை: மனம் திறக்கிறார் சச்சின்
» கார்த்திகாவுக்கு ஈடு கொடுப்பது கஷ்டமாம் ஜீவா மனம் திறக்கிறார்
»  கிரிக்கெட்டில் சாதிக்க தூண்டியது நெருக்கடிதான்: மனம் திறக்கிறார் லட்சுமண்
» நன்றாக உள்ளது --நீங்களும் முயற்சிகவும்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum