ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்ரீ அருணகிநாதாரின் கந்தர் அநுபூதி

2 posters

Go down

ஸ்ரீ அருணகிநாதாரின் கந்தர் அநுபூதி Empty ஸ்ரீ அருணகிநாதாரின் கந்தர் அநுபூதி

Post by சிவா Mon Jun 27, 2011 7:07 am

ஸ்ரீ அருணகிநாதாரின் கந்தர் அநுபூதி Prayerஸ்ரீ அருணகிநாதாரின் கந்தர் அநுபூதி Murganஸ்ரீ அருணகிநாதாரின் கந்தர் அநுபூதி Prayer


காப்பு
நெஞ்சக் கன கல்லு நெகிழ்ந்(து) உருகத்
தஞ்சத்(து) அருள் சண் முகனுக்(கு) இயல்சேர்
செஞ்சொல் புனை மாலை சிறந்திடவே
பஞ்சக்கர ஆனை பதம் பணிவாம். ---

நூல்
ஆடும் பா, வேல், அணிசேவல் எனப்
பாடும் பணியே பணியா அருள்வாய் !
தேடுங் கயமா முகனைச் செருவில்
சாடுந் தனி யானை சகோதரனே. 1

உல்லாச, நிராகுல, யோக விதச்,
சல்லாப, விநோதனும் நீ அலையோ?
எல்லாம் அற, என்னை இழந்த நலம்
சொல்லாய், முருகா ! சுரபூ பதியே ! 2

வானோ? புனல் பார் கனல் மாருதமோ?
ஞானோ தயமோ? நவில் நான் மறையோ?
யானோ? மனமோ? எனை ஆண்ட இடம்
தானோ? பொருளாவது சண்முகனே ! 3

வளைபட்ட கைம் மாதொடு, மக்கள் எனும்
தளைபட்(டு) அழியத் தகுமோ? தகுமோ?
கிளைபட்(டு) எழு சூர் உரமும், கியும்,
தொளைபட்(டு) உருவத் தொடு வேலவனே ! 4

மக மாயை களைந்திட வல்ல பிரான்
முகம் ஆறும் மொழிந்து மொழிந்திலனே !
அகமாடை, மடந்தையர் என்(று) அயரும்
சகமாயையுள் நின்று தயங்குவதே ! 5

திணியான மனோ சிலைமீது, உனதாள்
அணியார், அரவிந்தம் அரும்பு மதோ?
பணியா? என, வள்ளி பதம் பணியும்
தணியா அதிமோக தயா பரனே ! 6

கெடுவாய் மனனே, கதி கேள், கரவாது
இடுவாய், வடிவேல் இறைதாள் நினைவாய்
சுடுவாய் நெடு வேதனை தூள்படவே
விடுவாய் விடுவாய் வினை யாவையுமே. 7

அமரும் பதி, கேள், அகம் ஆம் எனும் இப்
பிமரம் கெட மெய்ப் பொருள் பேசியவா !
குமரன் கிராச குமா மகன்
சமரம் பொரு தானவ நாசகனே ! 8

மட்டூர் குழல் மங்கையர் மையல் வலைப்
பட்டு, ஊசல்படும் பாசு என்று ஒழிவேன்?
தட்டு ஊடு அற வேல் சயிலத்(து) எறியும்
நிட்டூர நிராகுல, நிர்ப்பயனே ! 9

கார் மா மிசை காலன் வால், கலபத்
தேர்மா மிசை வந்து, எதிரப் படுவாய்
தார் மார்ப ! வலா தலா எனும்
சூர்மா மடியத் தொடுவே லவனே ! 10

கூகா என என் கிளை கூடி அழப்
போகா வகை, மெய்ப் பொருள் பேசியவா !
நாகாசல வேலவ ! நாலுகவித்
த்யாகா ! சுரலோக சிகாமணியே ! 11

செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன், பிறவான், இறவான்
சும்மா இரு, சொல் அற என்றலுமே,
அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே. 12

முருகன், தனிவேல் முனி, நம் குரு என்று
அருள்கொண்டு அறியார் அறியும் தரமோ !
உரு அன்று, அரு அன்று, உளது அன்று, இலது
அன்று,
இருள் அன்று, ஒளி அன்று என நின்றதுவே. 13

கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற்(று)
உய்வாய், மனனே ! ஒழிவாய் ஒழிவாய்
மெய் வாய் விழி நாசியடும் செவி ஆம்
ஐவாய் வழி செல்லும் அவாவினையே. 14

முருகன், குமரன், குகன் என்று மொழிந்து
உருகும் செயல் தந்து, உணர்(வு) என்(று)
அருள்வாய்?
பொரு புங்கவரும், புவியும் பரவும்
குருபுங்கவ ! எண் குண பஞ்சரனே ! 15

பேராசை எனும் பிணியில் பிணிபட்டு,
ஓரா வினையேன் உழலத் தகுமோ?
வீரா ! முதுசூர் படவேல் எறியும்
சூரா, சுரலோக துரந்தரனே ! 16

யாம் ஓதிய கல்வியும், எம் அறிவும்
தாமே பெற, வேலவர் தந்ததனால்
பூமேல் மயல்போய் அறம் மெய்ப் புணர்வீர்
நாமே னடவீர், நடவீர் இனியே. 17

உதியா, மாயா, உணரா, மறவா,
விதிமால் அறியா, விமலன் புதல்வா,
அதிகா, அநகா, அபயா ! அமரா
பதி காவல ! சூர பயங் கரனே ! 18

வடிவும் தனமும் மனமும் குணமும்
குடியும் குலமும் குடிபோ கியவா !
அடி அந்தம் இலா அயில் வேல் அரசே !
மிடி என்று ஒரு பாவி வெளிப் படினே. 19

அதாகிய மெய்ப் பொருளுக்கு அடியேன்
உதா உபதேசம் உணர்த்தியவா !
விதாரண ! விக்ரம வேள் ! இமையோர்
புதாரக ! நாக புரந்தரனே ! 20

கருதா மறவா நெறிகாண, எனக்கு
இருதாள் வனசம் தர என்று இசைவாய்
வரதா முருகா ! மயில் வாகனனே !
விரதா ! சுர சூர விபாடணனே ! 21

காளைக் குமரேசன் எனக் கருதித்
தாளைப் பணியத் தவம் எய்தியவா !
பாளைக் குழல் வள்ளி பதம் பணியும்
வேளைச் சுர பூபதி, மேருவையே ! 22

அடியைக் குறியாது அறியா மையினான்
முடியக் கெடவோ? முறையோ? முறையோ?
வடி விக்ரம வேல் மகிபா, குறமின்
கோடியைப் புணரும் குண பூதரனே ! 23

கூர்வேல் விழி மங்கையர் கொங்கையிலே
சேர்வேன், அருள் சேரவும் எண்ணுமதோ !
சூர் வேரொடு குன்று தொளைத்த, நெடும்
போர் வேல ! புரந்தர பூபதியே ! 24

மெய்யே என வெவ்வினை வாழ்வை உகந்து
ஐயோ ! அடியேன் அலையத் தகுமோ?
கையோ, அயிலோ, கழலோ முழுதும்
செய்யோய் ! மயில் ஏறிய சேவகனே ! 25

ஆதாரம் இலேன், அருளைப் பெறவே
நீதான் ஒரு சற்றும் நினைந்திலையே !
வேதாகம ஞான விநோத ! மன
அதீதா ! சுரலோக சிகாமணியே ! 26

மின்னே நிகர் வாழ்வை விரும்பிய யான்
என்னே ! விதியின் பயன் இங்கு இதுவோ?
பொன்னே ! மணியே ! பொருளே ! அருளே !
மன்னே ! மயில் ஏறிய வானவனே ! 27

ஆனா அமுதே ! அயில் வேல் அரசே !
ஞானாகரனே நவிலத் தகுமோ?
யான் ஆகிய என்னை விழுங்கி, வெறும்
தானாய் நிலை நின்றது, தற்பரமே. 28

இல்லே எனும் மாயையில் இட்டனை நீ,
பொல்லேன் அறியாமை பொறுத்திலையே,
மல்லேபு பன்னிரு வாகுவில் என்
சொல்லே புனையும் சுடர் வேலவனே ! 29

செவ்வான் உருவில் திகழ் வேலவன் அன்று
ஒவ்வாதது என உணர்வித் ததுதான்,
அவ்வாறு அறிவார் அறிகின்றது அலால்
எவ்வாறு ஒருவற்கு இசைவிப் பதுவே? 30

பாழ்வாழ்வு எனும் இப் படுமாயையிலே
வீழ்வாய் என என்னை விதித்தனையே !
தாழ்வானவை செய்தன தாம் உளவோ
வாழ்வாய் இனி நீ மயில் வாகனனே ! 31

கலையே பதறிக், கதறித் தலையூடு
அலையே படுமாறு அதுவாய் விடவோ?
கொலையே பு வேடர் குலப் பிடிதோய்
மலையே ! மலைகூறிடு வாகையனே. 32

சிந்தாகுல இல்லொடு செல்வம் எனும்
விந்தாடவி என்று விடப் பெறுவேன்?
மந்தாகினி தந்த வரோதயனே !
கந்தா ! முருகா ! கருணாகரனே ! 33

சிங்கார மடந்தையர் தீநெறி போய்
மங்காமல் எனக்கு வரம் தருவாய்
சங்க்ராம சிகாவல ! சண்முகனே !
கங்கா நதிபால ! க்ருபாகரனே ! 34

விதிகாணும் உடம்பை விடா வினையேன்
கதிகாண, மலர்க் கழல் என்று அருள்வாய்?
மதிவாள் நுதல் வள்ளியை அல்லது பின்
துதியா விரதா ! சுர பூபதியே ! 35

நாதா ! குமரா ! நம ! என்று அரனார்
ஓதாய் என ஓதியது, எப்பொருள் தான்?
வேதா முதல் விண்ணவர் சூடும் மலர்ப்
பாதா ! குறமின் பத சேகரனே ! 36

கிவாய் விடு விக்ரம வேல் இறையோன்
பாவாரம் எனும் பதம் மேவலையே
புவாய் மனனே ! பொறையாம் அறிவால்
அவாய் அடியோடும் அகந்தையையே. 37

ஆதாளியை, ஒன்று அறியேனை அறத்
தீது ஆளியை, ஆண்டது செப்புமதோ !
கூதாள கிராத குலிக்கு இறைவா !
வேதாள கணம் புகழ் வேலவனே ! 38

மாஏழ் சனனம் கெட, மாயைவிடா,
மூஏடணை என்று முடிந்திடுமோ !
கோவே ! குறமின் கொடிதோள் புணரும்
தேவே சிவசங்கர தேசிகனே ! 39

வினை ஓட விடும் கதிர் வேல் மறவேன்,
மனையோடு தியங்கி மயங்கிடவோ?
சுனையோடு, அருவித் துறையோடு, பசுந்
தினையோடு, இதணோடு திந்தவனே ! 40

சாகாது எனையே சரணங் களிலே
கா கா, நமனார் கலகம் செயும் நாள்
வாகா ! முருகா ! மயில் வாகனனே !
யோகா ! சிவஞான உபதேசிகனே ! 41

குறியைக் குறியாது குறித்து அறியும்
நெறியைத் தனிவேலை நிகழ்த்திடலும்
செறிவு அற்று, உலகோடு உரை சிந்தையும் அற்று
அறிவு அற்று, அறியாமையும் அற்றதுவே. 42

தூசா மணியும் துகிலும் புனைவாள்
நேசா முருகா நினது அன்பு அருளால்
ஆசா நிகளம் துகளாயின பின்,
பேசா அநுபூதி பிறந்ததுவே. 43

சாடும் தனிவேல் முருகன் சரணம்
சூடும்படி தந்தது சொல்லுமதோ?
வீடும், சுரர் மாமுடி, வேதமும், வெம்
காடும், புனமும் கமழும் கழலே. 44

கரவாகிய கல்வி உளார் கடை சென்று
இரவா வகை மெய்ப் பொருள் ஈகுவையோ?
குரவா ! குமரா ! குலிசாயுத ! குஞ்
சரவா ! சிவயோக தயாபரனே? 45

எம் தாயும் எனக்கு அருள் தந்தையும் நீ,
சிந்தாகுலம் ஆனவை தீர்த்து எனையாள்,
கந்தா ! கதிர் வேலவனே ! உமையாள்
மைந்தா ! குமரா ! மறை நாயகனே ! 46

ஆறு ஆறையும் நீத்து, அதன் மேல் நிலையைப்
பேறா அடியேன் பெறுமாறு உளதோ?
சீறாவரு சூர் சிதைவித்து, இமையோர்
கூறா உலகம் குளிர்வித்தவனே ! 47

அறிவு ஒன்று அற நின்று, அறிவார் அறிவில்
பிறிவு ஒன்று அற நின்ற, பிரான் அலையோ?
செறிவு ஒன்று அற வந்து, இருளே சிதைய
வெறி வென்றவரோடு உறும் வேலவனே ! 48

தன்னந் தனி நின்றது, தான் அறிய
இன்னம் ஒருவர்க்கு இசைவிப் பதுவோ?
மின்னும் கதிர் வேல் விகிர்தா, நினைவார்
கின்னம் களையும் க்ருபை சூழ் சுடரே ! 49

மதிகெட்டு அறவாடி, மயங்கி, அறக்
கதிகெட்டு, அவமே கெடவோ கடவேன்?
நதி புத்திர ! ஞான சுகாதிப ! அத்
திதி புத்திரர் வீறு அடு சேவகனே ! 50

உருவாய் அருவாய், உளதாய் இலதாய்
மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய், அருள்வாய் குகனே ! 51

ஸ்ரீ அருணகிநாதாரின் கந்தர் அநுபூதி முற்றிற்று

http://www.bakthi.org


ஸ்ரீ அருணகிநாதாரின் கந்தர் அநுபூதி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஸ்ரீ அருணகிநாதாரின் கந்தர் அநுபூதி Empty Re: ஸ்ரீ அருணகிநாதாரின் கந்தர் அநுபூதி

Post by தாமு Mon Jun 27, 2011 8:37 am

பகிர்வுக்கு நன்றி அண்ணா ஸ்ரீ அருணகிநாதாரின் கந்தர் அநுபூதி 224747944 ஸ்ரீ அருணகிநாதாரின் கந்தர் அநுபூதி 154550



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum