Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் அடுத்த அடி -விஷால்!!
3 posters
Page 1 of 1
என் அடுத்த அடி -விஷால்!!
"வாழ்க்கைக்கான திருப்பத்தை ஏதாவது
ஒரு நிமிடமோ, நாளோதான் எல்லோருக்கும் கொடுத்து சென்றிருக்கக் கூடும்.
அப்படித்தான் இந்த சில மாதங்கள். அந்த நிமிடம், அந்த நாள், அந்த மாதம்
எல்லோருக்கும் நிச்சயம் வரும். இவ்வளவு சீக்கிரம் நான் எதிர்பார்க்கவில்லை.
என்னால் இவ்வளவு முடியும் என உணர்த்திய நாட்களுக்கு நன்றி.
எல்லாவற்றுக்கும் காரணமான பாலாவுக்கு எதை சொல்லுவது?" - மகிழ்ச்சியாகப்
பேசினார் விஷால்.
பாலா பட அனுபவம் எப்படி இருந்தது?
பாலா படத்தில் நடிக்கும் ஆசை எல்லா நடிகர்களுக்கும் இருக்கும். எனக்கும்
இருந்தது. இப்போது படம் முடித்து திரும்பிப் பார்த்தால் ஆச்சரியம்தான்.
நிறைய விஷயங்கள் அப்படியே அனுபவங்களாக உள்ளுக்குள்ளேயே இருக்கிறது.
இது நிச்சயம் என் அடுத்தடுத்த பயணங்களுக்கான எரி பொருள். நிறைய கஷ்டம்
ஆனால் ஆர்வம். இத்தனை மாதங்களாக தேனி வாசம். மக்களோடு மக்களாக உருமாறி
நிற்பது ஒரு கலைஞனுக்கு ரொம்ப முக்கியமான விஷயம்.
அதை நான் செய்து முடித்திருக்கேன். எனக்கு முன் இருந்தவர்கள் இதை நிச்சயம்
கடந்திருப்பார்கள். எனக்கு இப்போதுதான் நடந்திருக்கிறது. இது மாதிரியான ஒரு
கதையில் இதுவரை நடிக்காமல் இருந்ததில் தவறு இருக்கு. வித்தியாசமான கதை.
ஆச்சரியங்களும், மாச்சரியங்களும் நிறைந்த திரைக்கதை இது என சொல்லி போரடிக்க
விருப்பமில்லை.
இது பாலா படம் அவ்வளவுதான். அவர் படம் எப்படி இருக்குமோ அப்படிதான்
இதுவும். ஆனால் இது எனக்கு முதல் படம் மாதிரி. இவனா விஷால்? என படம்
முடிந்ததும் யோசிப்பீர்கள். இந்த வார்த்தை அப்படியே சத்தியமானது.
படத்தில் திருநங்கை கேரக்டர் என முதலில் செய்தி. மேடை நாடக கலைஞன் என அடுத்த செய்தி. எதுதான் உங்க கேரக்டர்?
நிச்சயம். நான் மேடை நடிகன். அதுதான் உண்மையும் கூட. நாடக காட்சிகளின் போது
பெண் வேடம் அணிந்து நடிக்கிறேன். அதுதான் அப்படியே திருநங்கை கேரக்டர் என
செய்தி பரவ காரணம். அந்த காட்சி ரொம்ப அதிர்ச்சியாக இருக்கும். கெஸ்ட்
ரோலில் சூர்யாவும் வருகிறார். ரொம்ப திருப்தியான ரோல் அவருக்கு.
ஆர்யாவுக்கும் உங்களுக்கும் மோதல் எழுந்ததாக செய்திகள் வந்ததே?
ஆர்யா என் நண்பன். கஷ்டப்பட்ட காலத்திலிருந்தே என்னை அவனுக்கு தெரியும்.
அவன் மூலம்தான் 'அவன் - இவன்' பட வாய்ப்பே கிடைத்தது என தெரிந்தபோது,
வாழ்வில் நட்பு எவ்வளவு முக்கியம் என தெரிஞ்சிக்கிட்டேன். உயிர் நண்பன் என
எல்லோருக்கும் ஒருவன் இருப்பான். அப்படிதான் எனக்கு ஆர்யா. அவனோடு நான்
கோபங்கொண்டால் இந்த வாழ்வு என்னை பழிக்கும். எனக்கு எல்லாமும் செய்கிற
ஆர்யாவுக்கு நான் என்ன செய்ய போகிறேன்?
கொஞ்சம் சறுக்கல் நிறைய கற்றுத் தந்திருக்குமே?
சினிமாவில் எல்லாமும் நடக்கும். டி.வி.யில் பார்க்கிற கிரிக்கெட் மேட்ச்
மாதிரிதான் இது. தோற்பதும், ஜெயிப்பதும் வாடிக்கைதான். கடைசியாக நடித்த
நான்கு படங்கள் சரியாக போகவில்லை. எல்லாமும் பிடித்து நடித்ததுதான். யார்
மீதும் குறை சொல்ல முடியாது. படம் வெளிவந்த பின்னர்தான் மக்கள் ரசனை
புரிகிறது.
ரசிகர்களின் 'பல்ஸ்' தெரிந்துக் கொண்டால் எல்லாமும் வெற்றிதான். தொடர்
வெற்றிகளும் வேண்டாம். கொஞ்சம் சரிவையும் சந்திக்க வேண்டும். சந்தித்து
விட்டேன். நிறைய விஷயங்கள் என்னை கடந்து போயிருக்கிறது. வெற்றியையும்,
தோல்வியையும் சரி விகிதத்தில் சந்தித்து வந்திருக்கேன்.
இது இப்படிதான் இருக்கும் என நினைக்கும்போது மற்றொன்று அதை அப்படியே மாற்றி
போட்டு வேடிக்கை பார்த்தது. அதிலிருந்து இப்போது மீண்டு வந்திருக்கிறேன்
என நினைக்கிறேன். இனி என் அடுத்த அடி சரியாக இருக்கும்.
அடுத்து பிரபுதேவாவுடன் கமர்ஷியல் களமாமே?
நல்ல விஷயம். அவரின் 'போக்கிரி', என்னுடயை 'திமிரு' மாதிரியான ஒரு படம்
இது. ரொம்ப ரசித்து கதை கேட்டேன். அப்படியே படமும் வந்துகொண்டு இருக்கிறது.
பாலா படம் முடித்து விட்டு, இப்படி ஒரு படத்தில் நடிக்க வேண்டும்
என்றுதான் விரும்பினேன். அதுவாகவே கிடைத்திருக்கிறது. எல்லாம்
நல்லதுக்குதான்.
எல்லோரும் தவறுகிற இடம் இது. ஆனால் உங்களை பற்றி ஒரு கிசுகிசு கூட படிக்க முடியலையே?
இது நல்ல விஷயம்தான். நடிகனாக இருந்து இப்படி ஒரு கேள்வியை
எதிர்க்கொள்வதில் பெருமை. ஆரம்பத்திலிருந்தே கவனமாக இருக்கிறேன். அதுதான்
இப்போதும் என்னை வழி நடத்துகிறது. நான் நானாக இருக்க வேண்டும் என எப்போதும்
நினைக்கிறேன். அது அப்படியே நடக்கிறது. 50 படங்கள் முடித்த பின்னரும் இதே
கேள்வியை நீங்கள் கேட்கணும்.
கல்யாணம் எப்போன்னு இப்போ கேட்கலாம்தானே?
எந்த விஷயமும் என்னை கடந்து போகவில்லை என பொய் சொல்ல முடியாது. இப்போதும்
நான் தனியாகத்தான் இருக்கிறேன். கவலையும், சந்தோஷமும் என்னை மட்டுமே
சார்ந்தது என வேதாந்தம் பேசும் வயசும் எனக்கு வரவில்லை. என்னை நான்
பக்குவப்படுத்தி வைத்திருக்கிறேன்.
இந்த அற்புத வாழ்வு தருகிற எல்லோரின் அன்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அது
காதல்? கல்யாணம் என்பதில் மட்டுமே முடங்கி விடக் கூடாது. திகட்ட திகட்ட
காதலிக்க காதலி கிடைக்கும்போதும், கல்யாணம் நடக்கும்போதும் நிறைய பேசலாம்.
மீண்டும் பாலா படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தால்?
'சண்டக்கோழி' படம்தான் மாஸ் ஹீரோ அந்தஸ்தை தந்தது. பின் சிறியதாக சறுக்கல்.
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பாலா முன் நின்றேன். 'உன்னை மாத்திக்
காட்டுறேன்' பார் என எனக்கு எல்லாமும் தந்தார். வாழ்வின் வலி, மரணம்
இப்படித்தான் இருக்கும் என எல்லாவற்றையும் இந்த ஒரே படத்தில் காட்டி
விட்டார்.
இதோ வாழ்வின் நெடுகிலும் அவரின் புராணம் பாடப் போகிறேன். மீண்டும் அவர்
படத்தில் நடிக்க ஒரு வாய்ப்பு வந்தால், என் முழு வாழ்க்கைக்குமான
அனுபவங்களை அதில் பெற்று விடுவேன்.
30 அடி உயரத்தில் இருந்து குதிக்க வேண்டிய ஒரு காட்சி. அப்படியே தோல்
பிசகி, கை இடறி விழுந்துட்டேன். பதறி ஓடி வந்து கட்டியணைத்தார் பாலா. 'நான்
ரொம்ப ஆசைப்படுறேன்'னு அவர் சொன்னபோது விழியோரங்களில் கொஞ்சம் ஈரம்.
பாலாவின் மனசிலும்தான். அதுதான் பாலா!
TMT
ஒரு நிமிடமோ, நாளோதான் எல்லோருக்கும் கொடுத்து சென்றிருக்கக் கூடும்.
அப்படித்தான் இந்த சில மாதங்கள். அந்த நிமிடம், அந்த நாள், அந்த மாதம்
எல்லோருக்கும் நிச்சயம் வரும். இவ்வளவு சீக்கிரம் நான் எதிர்பார்க்கவில்லை.
என்னால் இவ்வளவு முடியும் என உணர்த்திய நாட்களுக்கு நன்றி.
எல்லாவற்றுக்கும் காரணமான பாலாவுக்கு எதை சொல்லுவது?" - மகிழ்ச்சியாகப்
பேசினார் விஷால்.
பாலா பட அனுபவம் எப்படி இருந்தது?
பாலா படத்தில் நடிக்கும் ஆசை எல்லா நடிகர்களுக்கும் இருக்கும். எனக்கும்
இருந்தது. இப்போது படம் முடித்து திரும்பிப் பார்த்தால் ஆச்சரியம்தான்.
நிறைய விஷயங்கள் அப்படியே அனுபவங்களாக உள்ளுக்குள்ளேயே இருக்கிறது.
இது நிச்சயம் என் அடுத்தடுத்த பயணங்களுக்கான எரி பொருள். நிறைய கஷ்டம்
ஆனால் ஆர்வம். இத்தனை மாதங்களாக தேனி வாசம். மக்களோடு மக்களாக உருமாறி
நிற்பது ஒரு கலைஞனுக்கு ரொம்ப முக்கியமான விஷயம்.
அதை நான் செய்து முடித்திருக்கேன். எனக்கு முன் இருந்தவர்கள் இதை நிச்சயம்
கடந்திருப்பார்கள். எனக்கு இப்போதுதான் நடந்திருக்கிறது. இது மாதிரியான ஒரு
கதையில் இதுவரை நடிக்காமல் இருந்ததில் தவறு இருக்கு. வித்தியாசமான கதை.
ஆச்சரியங்களும், மாச்சரியங்களும் நிறைந்த திரைக்கதை இது என சொல்லி போரடிக்க
விருப்பமில்லை.
இது பாலா படம் அவ்வளவுதான். அவர் படம் எப்படி இருக்குமோ அப்படிதான்
இதுவும். ஆனால் இது எனக்கு முதல் படம் மாதிரி. இவனா விஷால்? என படம்
முடிந்ததும் யோசிப்பீர்கள். இந்த வார்த்தை அப்படியே சத்தியமானது.
படத்தில் திருநங்கை கேரக்டர் என முதலில் செய்தி. மேடை நாடக கலைஞன் என அடுத்த செய்தி. எதுதான் உங்க கேரக்டர்?
நிச்சயம். நான் மேடை நடிகன். அதுதான் உண்மையும் கூட. நாடக காட்சிகளின் போது
பெண் வேடம் அணிந்து நடிக்கிறேன். அதுதான் அப்படியே திருநங்கை கேரக்டர் என
செய்தி பரவ காரணம். அந்த காட்சி ரொம்ப அதிர்ச்சியாக இருக்கும். கெஸ்ட்
ரோலில் சூர்யாவும் வருகிறார். ரொம்ப திருப்தியான ரோல் அவருக்கு.
ஆர்யாவுக்கும் உங்களுக்கும் மோதல் எழுந்ததாக செய்திகள் வந்ததே?
ஆர்யா என் நண்பன். கஷ்டப்பட்ட காலத்திலிருந்தே என்னை அவனுக்கு தெரியும்.
அவன் மூலம்தான் 'அவன் - இவன்' பட வாய்ப்பே கிடைத்தது என தெரிந்தபோது,
வாழ்வில் நட்பு எவ்வளவு முக்கியம் என தெரிஞ்சிக்கிட்டேன். உயிர் நண்பன் என
எல்லோருக்கும் ஒருவன் இருப்பான். அப்படிதான் எனக்கு ஆர்யா. அவனோடு நான்
கோபங்கொண்டால் இந்த வாழ்வு என்னை பழிக்கும். எனக்கு எல்லாமும் செய்கிற
ஆர்யாவுக்கு நான் என்ன செய்ய போகிறேன்?
கொஞ்சம் சறுக்கல் நிறைய கற்றுத் தந்திருக்குமே?
சினிமாவில் எல்லாமும் நடக்கும். டி.வி.யில் பார்க்கிற கிரிக்கெட் மேட்ச்
மாதிரிதான் இது. தோற்பதும், ஜெயிப்பதும் வாடிக்கைதான். கடைசியாக நடித்த
நான்கு படங்கள் சரியாக போகவில்லை. எல்லாமும் பிடித்து நடித்ததுதான். யார்
மீதும் குறை சொல்ல முடியாது. படம் வெளிவந்த பின்னர்தான் மக்கள் ரசனை
புரிகிறது.
ரசிகர்களின் 'பல்ஸ்' தெரிந்துக் கொண்டால் எல்லாமும் வெற்றிதான். தொடர்
வெற்றிகளும் வேண்டாம். கொஞ்சம் சரிவையும் சந்திக்க வேண்டும். சந்தித்து
விட்டேன். நிறைய விஷயங்கள் என்னை கடந்து போயிருக்கிறது. வெற்றியையும்,
தோல்வியையும் சரி விகிதத்தில் சந்தித்து வந்திருக்கேன்.
இது இப்படிதான் இருக்கும் என நினைக்கும்போது மற்றொன்று அதை அப்படியே மாற்றி
போட்டு வேடிக்கை பார்த்தது. அதிலிருந்து இப்போது மீண்டு வந்திருக்கிறேன்
என நினைக்கிறேன். இனி என் அடுத்த அடி சரியாக இருக்கும்.
அடுத்து பிரபுதேவாவுடன் கமர்ஷியல் களமாமே?
நல்ல விஷயம். அவரின் 'போக்கிரி', என்னுடயை 'திமிரு' மாதிரியான ஒரு படம்
இது. ரொம்ப ரசித்து கதை கேட்டேன். அப்படியே படமும் வந்துகொண்டு இருக்கிறது.
பாலா படம் முடித்து விட்டு, இப்படி ஒரு படத்தில் நடிக்க வேண்டும்
என்றுதான் விரும்பினேன். அதுவாகவே கிடைத்திருக்கிறது. எல்லாம்
நல்லதுக்குதான்.
எல்லோரும் தவறுகிற இடம் இது. ஆனால் உங்களை பற்றி ஒரு கிசுகிசு கூட படிக்க முடியலையே?
இது நல்ல விஷயம்தான். நடிகனாக இருந்து இப்படி ஒரு கேள்வியை
எதிர்க்கொள்வதில் பெருமை. ஆரம்பத்திலிருந்தே கவனமாக இருக்கிறேன். அதுதான்
இப்போதும் என்னை வழி நடத்துகிறது. நான் நானாக இருக்க வேண்டும் என எப்போதும்
நினைக்கிறேன். அது அப்படியே நடக்கிறது. 50 படங்கள் முடித்த பின்னரும் இதே
கேள்வியை நீங்கள் கேட்கணும்.
கல்யாணம் எப்போன்னு இப்போ கேட்கலாம்தானே?
எந்த விஷயமும் என்னை கடந்து போகவில்லை என பொய் சொல்ல முடியாது. இப்போதும்
நான் தனியாகத்தான் இருக்கிறேன். கவலையும், சந்தோஷமும் என்னை மட்டுமே
சார்ந்தது என வேதாந்தம் பேசும் வயசும் எனக்கு வரவில்லை. என்னை நான்
பக்குவப்படுத்தி வைத்திருக்கிறேன்.
இந்த அற்புத வாழ்வு தருகிற எல்லோரின் அன்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அது
காதல்? கல்யாணம் என்பதில் மட்டுமே முடங்கி விடக் கூடாது. திகட்ட திகட்ட
காதலிக்க காதலி கிடைக்கும்போதும், கல்யாணம் நடக்கும்போதும் நிறைய பேசலாம்.
மீண்டும் பாலா படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தால்?
'சண்டக்கோழி' படம்தான் மாஸ் ஹீரோ அந்தஸ்தை தந்தது. பின் சிறியதாக சறுக்கல்.
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பாலா முன் நின்றேன். 'உன்னை மாத்திக்
காட்டுறேன்' பார் என எனக்கு எல்லாமும் தந்தார். வாழ்வின் வலி, மரணம்
இப்படித்தான் இருக்கும் என எல்லாவற்றையும் இந்த ஒரே படத்தில் காட்டி
விட்டார்.
இதோ வாழ்வின் நெடுகிலும் அவரின் புராணம் பாடப் போகிறேன். மீண்டும் அவர்
படத்தில் நடிக்க ஒரு வாய்ப்பு வந்தால், என் முழு வாழ்க்கைக்குமான
அனுபவங்களை அதில் பெற்று விடுவேன்.
30 அடி உயரத்தில் இருந்து குதிக்க வேண்டிய ஒரு காட்சி. அப்படியே தோல்
பிசகி, கை இடறி விழுந்துட்டேன். பதறி ஓடி வந்து கட்டியணைத்தார் பாலா. 'நான்
ரொம்ப ஆசைப்படுறேன்'னு அவர் சொன்னபோது விழியோரங்களில் கொஞ்சம் ஈரம்.
பாலாவின் மனசிலும்தான். அதுதான் பாலா!
TMT
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
positivekarthick- தளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
Re: என் அடுத்த அடி -விஷால்!!
நெகிழ்ச்சியான வரிகள் பாலாவை பற்றி விஷால் சிலாகித்து சொன்னவை.... வாழ்த்துகள் விஷால் இன்னும் வெற்றிகளின் சிகரம் தொட....
பகிர்வுக்கு அன்பு நன்றிகள் கார்த்தி.
பகிர்வுக்கு அன்பு நன்றிகள் கார்த்தி.
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Similar topics
» பிரபு தேவாவின் அடுத்த படத்தில் த்ரிஷா - விஷால்
» எம்.ஜி.ஆர். வேடத்தில் விஷால்!
» சினிமா செய்திகள் ........
» லிங்குசாமிக்கு கை கொடுப்பாரா விஷால்!
» ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....
» எம்.ஜி.ஆர். வேடத்தில் விஷால்!
» சினிமா செய்திகள் ........
» லிங்குசாமிக்கு கை கொடுப்பாரா விஷால்!
» ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|