புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உச்ச நடிகர்களின் உண்மை முகங்கள் Poll_c10உச்ச நடிகர்களின் உண்மை முகங்கள் Poll_m10உச்ச நடிகர்களின் உண்மை முகங்கள் Poll_c10 
5 Posts - 63%
heezulia
உச்ச நடிகர்களின் உண்மை முகங்கள் Poll_c10உச்ச நடிகர்களின் உண்மை முகங்கள் Poll_m10உச்ச நடிகர்களின் உண்மை முகங்கள் Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
உச்ச நடிகர்களின் உண்மை முகங்கள் Poll_c10உச்ச நடிகர்களின் உண்மை முகங்கள் Poll_m10உச்ச நடிகர்களின் உண்மை முகங்கள் Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

உச்ச நடிகர்களின் உண்மை முகங்கள்


   
   

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Jun 27, 2011 3:34 pm

டிஸ்கி - தலைப்பையோ அல்லது மேலோட்டமாக படித்துவிட்டோ யாரும் கருத்து சொல்ல வேண்டாம்..முழுவதும் படித்துவிட்டு பிறகு சொல்லுங்கள் உங்கள் கருத்துக்களை.. இன்னொன்றும் நான் சொல்லுகிறேன்.. நான் ஒரு ரஜினி ரசிகன்.. திரைப்படங்களில் அவர் நடிப்பிற்கு மட்டும்!


உச்ச நடிகர்களின் உண்மை முகங்கள் Hogenakkal_kamal_sarath_rajini


தலைப்பை பார்த்து விட்டு ஏதோ.. நடிகர்களின் கிசு கிசு...அந்தரங்கம் அம்பலம்..என்று நினைத்து நீங்கள் வந்தால் உங்களுக்கு ஒரு பெரிய கும்புடு... இந்த பதிவு அவர்களின் சொந்த வாழ்க்கையை உரசிப்பார்க்கும் முயற்சி அல்ல.. அதற்க்கு நான் மஞ்சள் ப்ளாக் எழுதவில்லை! அதுக்குனே நம்ம ராசகோவாலு அண்ணன் ஒரு பத்திரிகை நடத்துறாரு.. அத வாங்கி படிச்சுக்கங்க.. இது பொது வாழ்வில் அவர்கள் அடிக்கும் கூத்துக்களையும் மக்களை ஏமாற்றுவதையும் கொஞ்சம் ஞாபகப்படுத்தி பார்க்கும் முயற்சி மட்டுமே!


நம்ம நடிகர்களுக்கு நாட்டுப்பற்று உங்கள என்னைய விட கொஞ்சம் அதிகம்.. போர் நடந்தா உடனே கலைநிகழ்ச்சி நடத்தி வசூல் பண்ணி கொடுப்பாங்க... நல்ல விசயம்தான்! ஆனா அதற்க்கு அடுத்த நாளே முதல்வருக்கு ஒரு கோரிக்கை வைப்பாங்க.. பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்த வரியை குறைக்க வேண்டும்! எங்களுக்கு இடம் வேணும் வீடு வேணும்... இப்படி போகும் அவர்களின் கோரிக்கை! உடனே நம்ம முதல்வரும் அவர்களின் சேவை இன்னும் தேவைன்னு எல்லாத்துக்கும் சரின்னு சொல்லுவாரு... இதுல நடிகர்களுக்கு ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்! அதுவரை வாய்ப்பு இல்லாமல் வீட்ல சும்மா உக்காந்தவன் எல்லாம் வெளிச்சத்துக்கு வருவான்.. அரசாங்க சலுகையால் அவங்க வசூல் பண்ணி கொடுத்த தொகையை விட இரட்டை லாபம்.. இதுல தொண்ணை.. வேற யாரு? நம்மதான்! இதுலவேற தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்காம்?.. என்ன ஒரு முட்டாள்தனம்? இதனால் வருடத்திற்கு சுமார் 300 கோடி வரை அரசாங்கத்திற்கு வரி இழப்பு! இதனால் மக்களுக்கு என்ன பயன்? டிக்கெட் விலை குறைந்ததா? தமிழ் அப்பிடியே இமயமலை உயரத்திற்கு வளர்ந்ததா? இதற்க்கு ஒரே பதில் இல்லை என்பதே! தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு என்பதை மாற்றி தமிழில் வைக்கவில்லை என்றால் ஐந்து சதவீதம் கூடுதல் வரி என்று சொல்லிப்பார்க்கட்டும்... பிறகு பார்க்கலாம் அவர்களின் தமிழ் அறிவை!


நாட்டில் உள்ள காவிரி பிரச்னை ஆகட்டும்.. இலங்கை பிரச்னை ஆகட்டும் நானும் ரௌடிதான் கணக்கா ஒரு போராட்டம் பண்ணி அட்டனன்ஸ் போட வேண்டியது.. ஆனா அதற்க்கு அடுத்தநாள் என்ன நடந்தாலும் கண்டுக்கிறது இல்ல.. அவங்கவங்க வேலைய பார்க்க போய்டுவாங்க.. அந்த போராட்டதில்கூட ஒற்றுமை இருக்காது! எல்லோரும் பீச்சுல உண்ணாவிரதம் இருந்தா இவருமட்டும் தனியா இருப்பாரு! இதுவரை இவர்கள் நடத்திய எந்த போராட்டங்களுக்காவது முடிவு என்று எதுவுமே வந்ததில்லை.. இன்னும் அந்த பிரச்சனைகள் தொடர்ந்துகொண்டுதான் உள்ளது... அது இவர்களின் குற்றமல்ல..ஆனால் அவகளின் போராட்டத்தின் அடுத்த நிலை என்ன? யாரிடமாவது பதில் உள்ளதா? ஒரு உணர்ச்சிவசமான நிலையில் மக்களை அமைதிப்படுத்துவதுதான் கலைஞர்களின் வேலையாக இருக்க வேண்டுமே தவிர அவர்களின் உணர்சிகளை தூண்டி விட்டு அதில் வியாபாரத்தனமாய் குளிர்காய்வது அவர்கள் வேலை அல்ல!


சினிமாவில் சாதி இல்லை மதம் இல்லை என்று பக்கம் பக்கமாய் வசனம் பேசும் நம் நடிகர்கள் எத்தனை பேர் தன் ஜாதியை துறந்து வாழ்கிறார்கள்? சேரன் பாண்டியன் படத்துல சாதியே இல்லன்னு வசனம் பேசி பார்க்கிற நம்ம கன்னத்துல பளார்னு அறையுரமாதிரி வசம் பேசுவாரு அண்ணன் சரத்குமார்! ஆனால் இன்று அவர் கட்சி நடத்துவதே அவர் சார்ந்த சமுதாயத்தை வைத்துதான்.. அவர்களை தன் கட்டுக்குள் வைத்துக்கொள்ள அறிவித்ததுதான் காமராஜர் மணிமண்டபம்! இன்றுவரை அது அடிக்கல் நாட்டிய நிலையிலே உள்ளது! முதல் படத்திலே ஜாதி இல்லை மதம் இல்லைன்னு சொன்னவருதான் நம்ம கார்த்திக்! ஆனா இன்று அவரின் நிலை? தனக்கு ஒரு பிரச்னை வரும்போதும்..படத்தில் வாய்ப்புகள் குறையும்போதும் என் சமுதாய இளைஞர்கள் என் பின்னாடி என்று வசனம் பேசினார்...பேசுகிறார்.. ஓர் கட்சியும்(???) நடத்துகிறார்! படங்களில் கருத்து கந்தசாமியாக மாறி உலகத்தில் அவர் மட்டுமே புத்திசாலி என்பதுபோல் வசனம் பேசுவார் விவேக்! ஆனால் உண்மை நிலை? தனக்கு ஒரு பிரச்சனை என்று வரும்போது தன் சமுதாய பேரை சொல்லி.. என் சமுதாயம் எனக்கு பின்னாடி நிற்கும் என்று மேடைலே சொன்னவர்தான் இந்த பகுத்தறிவாதி! இவ்வளவு ஏன்? இன்று எதிர்கட்சி தலைவராக இருக்கும் விஜயகாந்த் கூட தன் சமுதாயத்தை சேர்ந்தவரைத்தான் திருமணம் செய்தார்! இதெல்லாம் அவர்கள் சொந்த விசயம்தான்.. ஆனால் இவர்கள் அடுத்தவர்களுக்கு அறிவுரை சொல்ல என்ன தகுதி உள்ளது? துடைப்பத்தை எடுத்துகிட்டு வீதிக்கு வரும் முன்னாடி வீட்ல உள்ள குப்பைய கூட்டிட்டு வரட்டும்!


நடிகர்களுக்கும் அரசியலுக்கும் உள்ள ஒரே சம்பந்தம் நடிப்பது மட்டுமே! ஆனால் இதையே தகுதியாக நினைத்துக்கொண்டு நம்ம நடிகர்கள் அடிக்கிற கூத்து... அரசியலுக்கு வருவது அவரவர் உரிமை..ஓக்கே... ஆனால் தன் படத்தின் வியாபார வெற்றிகளுக்காக ஒவ்வொரு படம் வெளியாகும்போதும் அரசியல் பரபரப்புகளை கிளப்ப வேண்டியது..படம் ஓடியதும் அதை ஆண்டவன் கையில் கொடுக்க வேண்டியது! இந்த வேலையை கடந்த பதினைந்து வருடங்களாய் செய்து வருபவர் ரஜினி! இன்றுவரை அவர் அரசியலுக்கே வரமாட்டேன் என்று ஒரேடியாக மறுக்கவும் இல்லை.. வருவேன் என்று கூறவும் இல்லை! அப்படி சொன்னால் அவரின் கடைசி படம் வரை எப்படி ஓடவைப்பது? இதே உத்தியைதான் இன்று நடிகர் விஜய்யும் பயன்படுத்துகிறார்! (அப்படியும் படம் ஓடல..அது தனிக்கதை!).. ஆனால் இவர்களை நம்பி இவர்களின் பேனருக்கும்...படத்துக்கும் பால் அபிசேகம்..பீர் அபிசேகம்னு செய்து கொண்டிருக்கும் இளைஞர்களை என்ன செய்வது? நன்றாக கவனியுங்கள்... இது வரை எந்த நடிகரும் தன் ரசிகர்களை இப்படி செய்யகூடாது என்று கட்டளை இடவில்லை! அவர்களும் இதை ரசிக்கிறார்கள்.. மேற்கொண்டு பணம் கொடுத்து அவர்களை இதேபோல் செய்ய ஊக்குவிக்கிறார்கள்! இந்த விசயத்தில் நாம் பாராட்ட வேண்டிய ஒரே நடிகர் அஜீத்! இவரின் தனிப்பட்ட வாழ்க்கையை விடுங்கள்... தன்னை அரசியலுக்கு கூப்புடுகின்ற ஒரே காரணத்திற்க்காக தன் ரசிகர் மன்றங்களை கலைக்கும் தைரியம் யாருக்கு வரும்? ரஜினி செய்வாரா இதை? விஜய் செய்வாரா இதை? நடிகர்களே.. தயவு செய்து உங்கள் சொந்த லாபத்துக்காக இளைஞர்களை தவறாக வழிநடத்தாதீர்கள்!


நாட்ல என்ன துயரமான சம்பவம் நடந்தாலும் உடனே உதவித்தொகை அறிவிக்கும் நம் நடிகர்கள் அதை ஒழுங்காக கொடுக்கின்றார்களா என்றால்?..அந்த கடவுளுக்கே வெளிச்சம்! உங்களில் எத்தனை பேருக்கு ஞாபகம் இருக்கிறது? ஏழு வருடங்களுக்கு முன்னாள் கும்பகோணம் பள்ளியில் தீயில் கருகிய மொட்டுகளை! சம்பவத்தை கேள்விப்பட்டதும் துடித்துபோய்(நடித்துப்போய்) ஆறுதலும் சொல்லி உதவித்தொகை அறிவித்தார்கள்... சில நடிகர்கள் நேரில் சென்றார்கள் அவர்களை கூட பாராட்டலாம்... என்னை வாழவைக்கும் தெய்வங்களாகிய தமிழ் மக்கள் என்று சொல்லிக்கொள்ளும் ரஜினி என்ன செய்தார்? அந்த விபத்தில் தனது இரண்டு குழந்தைகளை பறிகொடுத்து கதறியவர் யார் தெரியுமா?.. ரஜினி ரசிகர் மன்ற தலைவர் இன்பராஜ்! அவர் வெளிப்படையாக பத்திரிகைகளில் குறைபட்ட பிறகே இமேஜுக்கு பங்கம் வரக்கூடாது என்று தனது மனைவியை அனுப்பி வைத்தார்! உதவிதொகையும் அறிவித்தார்.. ஆனால் நீண்ட நாட்க்களாக கொடுக்காமல் அதைப்பற்றி பத்திரிக்கையில் வரவும் முறையான விபரங்கள் இல்லையென்று மீண்டும் அவர்களை வரவழைத்து விபரங்கள் கேட்டார்கள்.. ஆனால் கிடைத்ததா இல்லையென்று அந்த பெற்றவர்களுக்கே வெளிச்சம்! ரஜினி மட்டும் இல்லை கமல் 12 லட்சம்! விஜயகாந்த 10 லட்சம்! சூர்யா.. விஜய்..சரத்..இப்படி தன்னை முன்னிலைப்படுத்தும் அனைவருமே அறிவித்தனர்! ஆனால் இதுவரை உள்ள விபரங்கள் படி விஜயகாந்த் சூர்யா தவிர யாருடைய உதவியும் அவர்களுக்கு கிடைக்கவில்லை என்றே தெரிகிறது! இல்லை கொடுத்துவிட்டார்கள் என்றால் தெரிந்தவர்கள் சொல்லவும்..


இவர்களின் கருணை இப்பொழுது நம் நாட்டைவிட்டு உலக அளவில் சென்று விட்டது! ஜப்பானில் சுனாமி வந்தபோது தனி மனிதனாக ஒரு பெரும் தொகையை அறிவித்தார் ரஜினி! பாராட்டுக்கள்.. ஆனால் இதே கருணை ஈழத்தமிழர்கள் முள்வேலியில் உண்ண உணவில்லாமல் தவித்தபோது இல்லையே?.. இருக்காது ஏனென்றால் அவர்களால் இனி இவரின் படங்களுக்கு காசு கொடுத்து டிக்கெட் வாங்கி பார்க்கமுடியாது அல்லவா? செய்யும் உதவிகளைக்கூட வியாபாரத்தில் செய்யும் முதலீடாக செய்பவர்கள்தான் நம் நடிகர்கள்! இவர்களுக்குத்தான் நம் இளைஞர்கள் வேலை விட்டு..குடும்பத்தை மறந்து கொடி கட்டி...அலகு குத்தி காவடி எடுக்கிறார்கள்! நடிகர்களை திரையில் ரசிப்பதோடு நிறுத்திவிடுங்கள்.. அவர்களை உங்கள் வீட்டு வரவேர்ப்பறைக்கு கொண்டு செல்லாதீர்கள்! அவர்களுக்கு தேவை வளைந்த உங்கள் முதுகுகள்! உங்கள் முதுகுகளை படிக்கட்டாக மாற்றி ஏறிவிட்டு அதையே எட்டி உதைப்பதுதான் உங்கள் உச்ச நடிகர்களின் உண்மை முகங்கள்!



வைகை




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Jun 27, 2011 3:36 pm

கரெக்டா சொன்னிங்க அண்ணா உச்ச நடிகர்களின் உண்மை முகங்கள் 224747944



dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Mon Jun 27, 2011 3:39 pm

தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு என்பதை மாற்றி தமிழில் வைக்கவில்லை என்றால் ஐந்து சதவீதம் கூடுதல் வரி என்று சொல்லிப்பார்க்கட்டும்... பிறகு பார்க்கலாம் அவர்களின் தமிழ் அறிவை!

சூப்பருங்க



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Jun 27, 2011 3:45 pm

ரேவதி wrote:கரெக்டா சொன்னிங்க அண்ணா உச்ச நடிகர்களின் உண்மை முகங்கள் 224747944

புன்னகை உச்ச நடிகர்களின் உண்மை முகங்கள் 678642




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Jun 27, 2011 3:46 pm

dsudhanandan wrote:தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு என்பதை மாற்றி தமிழில் வைக்கவில்லை என்றால் ஐந்து சதவீதம் கூடுதல் வரி என்று சொல்லிப்பார்க்கட்டும்... பிறகு பார்க்கலாம் அவர்களின் தமிழ் அறிவை!

உச்ச நடிகர்களின் உண்மை முகங்கள் 224747944

புன்னகை உச்ச நடிகர்களின் உண்மை முகங்கள் 678642




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
bala23
bala23
பண்பாளர்

பதிவுகள் : 196
இணைந்தது : 09/01/2011

Postbala23 Mon Jun 27, 2011 3:53 pm

உச்ச நடிகர்களின் உண்மை முகங்கள் 453187





இயற்கையோடு இயைந்த நோயற்ற அமைதியான வாழ்வு
அன்புடன்
:afro: [b]பாலா[/b] :afro:
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Jun 27, 2011 3:54 pm

உச்ச நடிகர்களின் உண்மை முகங்கள் 678642




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Jun 27, 2011 3:58 pm

உண்மையினை வெளிச்சப்படுத்தி உள்ளது இந்த கருத்துக்கள்....அத்தனையும் உண்மை தான் தாமு..
அவர்களின் நிஜ முகங்கள் இதுவே....
பகிர்வுக்கு உச்ச நடிகர்களின் உண்மை முகங்கள் 678642




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Jun 27, 2011 4:00 pm

dsudhanandan wrote:தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு என்பதை மாற்றி தமிழில் வைக்கவில்லை என்றால் ஐந்து சதவீதம் கூடுதல் வரி என்று சொல்லிப்பார்க்கட்டும்... பிறகு பார்க்கலாம் அவர்களின் தமிழ் அறிவை!

உச்ச நடிகர்களின் உண்மை முகங்கள் 224747944

தமிழில் அவர்கள் வைக்கும் பெயர்களுக்கு ஆங்கிலத்திலயே வைத்து விடலாம்.....
கோ............
போ....
குருவி....
விட்டா.....பருப்பி....பல்லி...கொசு ன்னு போய்கிட்டே இருப்பாங்க....




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Jun 27, 2011 4:02 pm

உமா wrote:உண்மையினை வெளிச்சப்படுத்தி உள்ளது இந்த கருத்துக்கள்....அத்தனையும் உண்மை தான் தாமு..
அவர்களின் நிஜ முகங்கள் இதுவே....
பகிர்வுக்கு உச்ச நடிகர்களின் உண்மை முகங்கள் 678642

உச்ச நடிகர்களின் உண்மை முகங்கள் 154550 உச்ச நடிகர்களின் உண்மை முகங்கள் 678642




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content



Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக