Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
இனி மெல்ல.... சாகும் திமுக அரசியல்!
+12
ANTHAPPAARVAI
ரேவதி
பிஜிராமன்
அதிமுக
உமா
அக்னிபுத்திரன்
மஞ்சுபாஷிணி
திவ்யா
realvampire
Manik
திமுக
சிவா
16 posters
Page 1 of 7
Page 1 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
இனி மெல்ல.... சாகும் திமுக அரசியல்!
April 24, 2009 - இரண்டு வருடத்திற்கு முன் எழுதப்பட்ட கட்டுரை இது! இன்றைய திமுகவின் நிலைக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்!
‘என்ன சொன்னாலும் இந்த தேர்தலில் ஓட்டுப் போட போகமாட்டேன்’, விடாப்பிடியாக இருக்கிறார்.
‘ஏன் வாக்களிக்க மாட்டீங்க?’.
‘ஈழப்பிரச்சனையில் எல்லா கட்சிகளும் ஏமாற்றிவிட்டது’, பதில் சுருக்கென்று வருகிறது.
திமுக ஒரு பேரியக்கமாக உருவான காலம் துவங்கி கடந்த ஐம்பது ஆண்டுகளாக அவர் வைத்திருந்த நம்பிக்கை தகர்க்கப்பட்டது உணரமுடிகிறது. கூட்டமாக படுகொலை செய்யப்படும் தமிழர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்காத அரசியல் தலைவர்கள் மீதான சலிப்பும், வேதனையும் நம்பிக்கையின்மையும் தமிழக மக்களிடம் குமுறலாக இருக்கிறது. திமுக தலைமையை நேரடியாக விமர்சிக்காவிட்டாலும் பெரியவர் மு.க மீதான ஏமாற்றம் உடன்பிறப்புகளிடம் தெரிகிறது. கொள்கை அடிப்படையில் ஒன்றிப்போயிருக்கும் தொண்டர்களுக்கு அதுவரை தலைமை மீதான ஏமாற்றத்தினால் அமைப்பிலிருந்து வெளியேறுவது எளிதாக இருப்பதில்லை. இத்தகைய தருணங்களில் அமைப்புகளிலிருந்து தீர்க்கமான சிந்தனையுடன் வெளியேறுபவர்கள் மனதிற்குள் ரணங்களுடன் தான் வெளியேறக்கூடும். அவர்களுக்குள் ஏமாற்றத்தின் வலியும், காயமும் இருக்கத்தான் செய்யும். உதாரணமாக பெரியவர் தமிழருவி மணியன் அவர்கள் காங்கிரசின் அனைத்து பதவிகள் மற்றும் உறுப்பினர் நிலையிலிருந்தும் வெளியேறிய போதும் ரணப்பட்டிருப்பார். ஆனாலும் வெளியேறிய பிறகு சிறகடித்து சுதந்திரமாக பறக்கும் சிட்டுக்குருவியின் உணர்வு கிடைத்திருக்கும்.
பதவிகளுக்காக பெரிய பொறுப்புகளில் இருப்பவர்களுக்கு கொள்கையாவது, மண்ணாங்கட்டியாவது. தலைமைக்கு தலையாட்டி பலன் பெறுவதோடு எல்லாம் முடிந்து போகும். அவர்களைப் பொறுத்தவரையில் கட்சி மாறுவது வேடந்தாங்கலுக்கு வரும் பறவை போன்ற வளம் தேடும் இடப்பெயற்சி. எந்த பதவிகளையும், பலனையும் அனுபவிக்காத உண்மையான அடிமட்ட தொண்டர்களின் நிலமை அதுவல்ல. அவர்களைப் பொறுத்தவரையில் கட்சின் அல்லது தலைமையின் போக்கில் உடன்பாடில்லை ஆனாலும் வேறுவழியில்லை என்ற மிகவும் பரிதாபமான நிலையில். இன்று அப்பாவும் அத்தகைய நிலையில் இருக்கிறார்.
அப்பாவுக்கும், எனக்கும் அரசியல் கருத்துக்களில் முரண்பாடுகள் வருவதுண்டு. அரசியல் பற்றி கடுமையாக விவாதிப்போம். திமுகவை சமூகநீதிக்காகவும், தமிழுணர்விற்காக முன்னொரு காலத்தில் பாடுபட்ட பேரியக்கமாக பார்த்திருக்கிறேன். இன்றைய திமுக அப்படியல்ல என்பது எனது பார்வை. உலகமயமாக்கல் பொருளாதாரத்தின் அனைத்து கழிவுகளையும் மக்கள் மீது திணித்து பன்னாட்டு, தனியார் முதலாளிகளுக்கு உதவுகிற ஊதுகுழலாக மாறியிருக்கிறது திமுக. அதிமுக மட்டும் என்ன வெளிச்சம் என்று கேட்பவர்களுக்கு அதிமுக பற்றி சமூகநீதி, தமிழுணர்வு, பொருளாதாரம் உட்பட எந்த தளத்திலும் முன்னரும், தற்போதும் எனக்கு எந்த உடன்பாடுமில்லை என்பது மட்டுமே எனது பதில். திமுக கலைஞருக்கோ, ஸ்டாலினுக்கோ, அழகிரிக்கோ, அன்பழகனுக்கோ, துரைமுருகனுக்கோ, கனிமொழிக்கோ மட்டும் சொந்தமான நிறுவனமாக 1949ல் உருவாகவில்லை. பதவிகளை அவர்கள் அனுபவிக்கட்டும். ஆனால் திமுகவின் கொள்கை யாருக்காக அண்ணாவால் உருவாக்கப்பட்டவை? திமுக அன்றைக்கு தமிழக மக்களுக்கான இயக்கம். இன்று தனது மக்களுக்கான நிறுவனம். சன்குழுமத்திற்கு முன், சன்குழுமத்திற்கு பின் என்று நாம் திமுக வரலாற்றை பகுத்துப் பார்த்தால் இயக்கமாக செயல்பட்ட திமுகவிற்கும், நிறுவனமாகியிருக்கும் திமுகவிற்கும் வேறுபாடுகளை உணரமுடியும். இரண்டையும் கொள்கை நிலைபாடுகள் அடிப்படையில் ஒப்பீடு செய்து பார்க்க வேண்டும். கலைஞரின் அழகு தமிழில் மயங்கி கிடந்த தமிழர்கள் ஈழப்பிரச்சனையில் அகமுரண்பாடுகளையும் காணத் துவங்குகிறார்களென்று நினைக்கிறேன். அவரது கடந்தகால போராட்ட வரலாறுகளில் இதுவரையில் மூழ்கிக்கிடந்த மக்கள் நிகழ்காலத்தில் அவர் என்ன செய்கிறார் என்பதை கூர்ந்து கவனிக்கிறார்கள். தயாநிதி மாறனின் அரசியலை அச்சமாக கவனித்து வந்த மக்களுக்கு அண்ணன் அழகிரியின் நுழைவும் வந்து சேர்ந்திருக்கிறது. துவக்ககாலங்களில் அடிமட்ட தொண்டர்களின் தன்னலமற்ற உழைப்பிலும், ‘திண்ணைப் பேச்சுக்களாலும்’ சமுதாயத்தின் அடிவேர்வரை கொள்கைப்பிடிப்போடு திமுக பரவியிருந்தது. இப்போதெல்லாம் பதவிகளையும், உறுப்பினர் அட்டை பெறுவதிலும் முடங்கிப்போயிருக்கிறது. எந்த இயக்கமும் நிறுவனமாகும் போது இயக்கத்திற்குரிய சிறப்புகளான கொள்கை, இயங்கும்தன்மை, கூட்டான கருத்துப்பரிமாற்றங்கள் எல்லாம் கடந்தகாலமாகிவிடும். திமுகவும் நிறுவனமயமாகிவிட்டது. சன் குழுமங்களும், புதுடில்லியின் அமைச்சரவை பங்கேற்பும் திமுகவை வெகுவாக பாதித்திருக்கிறது. இந்த அரசியலின் விளைவுகளை இன்னும் சிறிது காலம் பொறுத்து மக்கள் புரிந்துகொள்வார்கள்.
கொள்கை அளவிலான அரசியல் நிலைபாடுகளில்லாமல், எதிரிக்கு எதிரி நண்பன் என்னும் துருவமயமான தமிழக அரசியல் மு.க x எம்ஜிஆர் காலம் தொட்டு நடைபெறுகிறது. ஜெயலலிதாவின் வருகைக்கு பிறகு பலம்பெற்று ‘பரம்பரை’ குடும்பப் பகை போலாகிவிட்டது. எந்த மக்களுக்காக பாடுபடுவதாக சொல்கிறார்களோ அந்த தமிழக மக்களையும் கூறுபோட்டு எதிராக நிற்க வைக்க இந்த அரசியல் காரணமாயிற்று. ஜெயலலிதாவுக்கு இருக்கும் பங்கிற்கு சற்றும் குறைவில்லாத அளவு மு.கவிற்கும் இதில் பங்குள்ளது. இருவரின் இந்த போக்குகளால் தமிழர்களுக்கு பாதிப்பு தானே தவிர எந்த நன்மையுமில்லை. கொள்கைரீதியாக எதிர்த்து அரசியல் நிச்சயம் வளர்த்தெடுக்கப்பட வேண்டும். ஆனால அதற்கான அறிகுறிகள் தமிழகத்தில் இருக்கிறதா? அதனால் தமிழக அரசியல் கட்சிகளின் ஒற்றுமையை எதிர்பார்க்க இயலாது. ஈழப்பிரச்சனைக்காக மட்டுமல்ல எந்த பிரச்சனையிலும் இவர்கள் ஒன்றுசேர்ந்து மத்திய அரசுடன் வாதாடுவதோ, போராடுவதோ எதிர்பார்ப்பது ஏமாற்றத்தில் முடியும்.
‘ஜெயலலிதாவுக்கு, மு.க பரவாயில்லை’ என்கிறார்கள். அப்படியானால் அ.தி.மு.க மற்றும் திமுக துவங்கிய காரணங்களுக்கும் கொள்கைகளுக்கும் வேறுபாடில்லையா? அப்பாவுடன் பெரும்பாலும் முரண்படும் இடம் இது. அப்போதெல்லாம் ‘சரிடே. கலைஞரின் போக்கு சரியில்லைன்னு வைத்துக்கொள்வோம். வேற ஒரு யோக்கியனை காட்டு பார்க்கலாம்’ என்பார் அவர். யோக்கியன் என்பதற்கான அளவுகோல் என்ன? மு.கவின் பன்முக பரிணாம திறமைகள் வியப்பிற்குரியவை. அவரது இராஜதந்திரம் வலியது என்பதெல்லாம் உண்மை தான். அவை எதற்காக எப்படி பயன்படுகிறது என்பதையும் பார்க்க வேண்டும். ‘ராஜதந்திரியின் தோல்வி உச்சபட்ச ராஜதந்திரத்தில் முடியுமென்று’ நினைக்கிறேன். மத்திய அரசுடன் முரண்பட்டு தீர்க்கமான நிலையை எடுக்கமுடியாத நிலை அரசு பொறுப்பிலுள்ளவர்களுக்கு உண்டு என்பதை நாம் கவனிக்கவேண்டுமென்கிறார் மு.கவிற்கு அருகிலிருக்கும் தமிழுணர்வாளர் ஒருவர். முரண்படவேண்டாம். ஈழப்பிரச்சனையை தவிர வேறு எவற்றிலாவது காங்கிரசுக்கு எதிரான நிலைப்பாட்டிலிருந்து முறையாக, தீர்க்கமாக வாதாடமுடிகிறதா திமுகவால்? அணுசக்தி ஒப்பந்தம் பற்றிய திமுகவின் தகிடுதத்தப் பேச்சுக்களும், நிலைபாடுகளும் இதற்கு உதாரணம். எம்ஜிஆர் உயிரோடு இருந்த போது ஆட்சியை இழந்தும், ஆட்சிக்கு வராமலும் தொடர்ந்து பல ஆண்டுகள் திமுக பலமாக இருந்தது. இன்று திமுகவிற்கு அல்லது தமிழகத்திற்கு இழப்பு ஏற்படுமென்பது மட்டுமே ‘தலைவரின்’ கவலையல்ல. நிறுவனங்களால் நிறைந்திருக்கும் குடும்பங்களின் கதி? சுயநலம் எங்கு முளைக்கிறதோ அங்கேயே அரசியல் உரிமைகளுக்கான போராடும் குணமும் புதைக்கப்பட்டுவிடுகிறது.
சாதாரண தொண்டர்களுக்கு இவற்றை புரிந்தாலும், அமைப்பிலிருந்து விலகிச்செல்வது எளிதல்ல. காரணம் திமுகவை வாழ்க்கையின் அங்கமாக பழகியவர்கள் அவர்கள். ஈழப்பிரச்சனையில் திமுக தலைமையின் தற்போதைய பேச்சுக்களும், எழுத்துக்களும், கவிதைக்குவியல்களும், தந்திகளும் ஏமாற்றம் தந்து அத்தகைய உணர்வுள்ள திமுகவினரையும் மாற்றியிருக்கிறது. அப்பாவின் அரசியல் உணர்வும் மாறியிருக்கிறது. அப்பா கழகம் துவங்கிய காலம் முதல் கழக உறுப்பினராக இருந்தார். அவரை ‘கழகம்’ என்று உடன்பிறப்புகளில் பலர் அழைப்பதை கேட்டிருக்கிறேன். திமுகவில் இதுவரையில் நான் உறுப்பினராக இல்லை. எந்த கட்சியிலும் நானில்லை. சுதந்திரமாக சிந்திக்க இப்படி இருப்பதிலும் ஒரு சுகம்.எனக்கும் முன்பெல்லாம் திமுக கொடி பெருமையும், நம்பிக்கையையும் இருந்தது. திமுகவின் வரலாற்றுக் காரணங்களோடு பெருமைப்பட எனக்கு தனிப்பட்ட காரணமும் இருந்தது. திமுகவின் துவக்க காலத்தில் ‘கடவுளுக்கு எதிரானவர்கள்’ என்று எதிர்கட்சிகள் பிரச்சாரம் செய்தன. அதனால் ஊரில் கொடி நாட்டும் இடத்திற்கும் எதிர்ப்பு. சொந்த நிலத்தில் கொடி நாட்டினால் யார் கேட்க முடியும்? 4 பேர் 1 சென்ட் நிலம் விலைகொடுத்து வாங்கி கழகக்கொடியை துவக்க காலத்தில் நாட்டி கழக பாசறை கட்டியிருக்கிறார்கள். அந்த நால்வரில் அப்பாவும் ஒருவர் என்பதை மற்றவர்கள் சொன்னபோது பெருமையாக இருந்தது. அவை கடந்த காலம்.
இரவு சாப்பாட்டு நேரங்களில் அப்பா எங்களுக்கு பெரியார், அண்ணா, கலைஞர் பற்றி சொல்லுவார். அப்பாவிடமிருந்து எனக்கு பெரியார் சிந்தனைகள் முதலில் அறிமுகம் துவக்கமானது. அப்பா வைத்திருந்த கழக புத்தகங்களை திருட்டுத்தனமாக எடுத்து படிக்கும் வேளைகளில் அண்ணாவின் கொஞ்சு தமிழிலும், கலைஞரின் வீரவசனங்களிலும், பெரியாரின் சிந்தனைகளிலும் ஒரு ஈர்ப்பு இருந்தது. இன்று எல்லாவற்றையும் பகுத்துப்பார்க்க பெரியார் கொள்கைகள் எனக்கு காலக்கண்ணாடி. அந்த விதத்தில் திமுகவின் இன்றைய நிலை வருத்தமே.
ஈழத்தமிழரையும், பிரபாகரனையும் எனக்கு அறிமுகம் செய்ததும் கழகம் தான். எட்டாம் வகுப்பில் மாணவனாக படித்துக் கொண்டிருந்த காலத்தில் ஈழப்பிரச்சினை பெரியதாக வெடிக்க ஆரம்பித்திருந்தது. தமிழர்கள் மீது இலங்கை அரசும், சிங்களவர்களும் நடத்திய கொடூரமான 1983 ஜூலை தாக்குதல்களை எதிர்த்து தமிழகத்தில் மிகப்பெரிய போராட்டங்கள் வெடித்தன. கண்டன ஊர்வலங்கள், மாணவர் போராட்டங்கள், வேலைநிறுத்தங்கள் நடந்தன. ஊரில் நடந்த பல போராட்டங்கள் சிறுவனாக இருந்த என்னையும் பாதித்தது. அப்போது கழகத்தினர் பெரிய கருப்பு, வெள்ளை கேலிச்சித்திரம் ஒன்றை வைத்திருந்தனர். தட்டியை பார்க்க சென்ற போது நான் கண்ட காட்சி என்னை மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியது. அதில் "தமிழர்களின் கறி இங்கு கிடைக்கும்" என எழுதப்பட்டு சிங்களவர்கள் தமிழர்களை படுகொலை செய்த காட்சிகள் வரையப்பட்டிருந்தன.
விடுதலைப்புலிகள் இயக்கப் போராளிகள் ஆசிரியர்களின் (ஈழப்பிரச்சனைக்காக குரலெழுப்ப ஆசிரியர்களை காணோம். ஈழப்பிரச்சனை என்றில்லை. பொதுப்பிரச்சனைகளில் ஆசிரியர்கள் நிலைபாடுகள் இன்று காணமுடியவில்லை. அவர்களது சம்பளக்கவலை அவர்களுக்கு) துணையுடன் எங்கள் பள்ளியில் குறும்படங்கள் திரையிட்டனர். அவற்றில் கண்ட வேதனைமிக்க காட்சிகளும், துப்பாக்கியுடன் மேலே பார்த்தபடி நின்ற ஒருவரும் மனதை என்னமோ செய்தது. அவர் தான் பிரபாகரன் என்று பின்னர் அறிந்தேன். தொடர்ந்து மாணவர் மலரில் கட்டுரைகள், மேடைப்பேச்சுக்கள், ஈழத்திற்கு போர்நிறுத்த காலத்தில் பயணம் இப்படி எனக்குள் மாற்றம் ஏற்படுத்திய திமுக இன்று ஈழப்பிரச்சனையில் மாறிப்போனது ஒரு காலநிலைமாற்றமா? ஈழம் தமிழகத்தில் பெரும்பான்மை மக்களுக்கு நெஞ்சுக்கு நெருக்கமான நெருப்பு உணர்வு. அன்றும், இன்றும் அப்படியே. இனி என்றும் அந்த நெருப்பு அணையாமல் இருக்கும் வேலையை செய்த காங்கிரசுக்கு நன்றி!
இன்றைய திமுகவிற்கும் பொருத்தமாக அறிஞர் அண்ணா சொல்லியிருக்கும் வார்த்தைகள்!
"தம்பி!
தமிழரின் பிணங்கள் கடலலையால் மோதப்பட்டு, மோதப்பட்டு, சிங்களத்தீவின் கரையிலே, ஒதுக்கப்பட்டிருக்கின்றன. ஆமடா, தம்பி! ஆம்! எந்த சிங்களம் சீறிப் போரிட்ட தமிழர்கள் முன் ஒரு காலத்தில் மண்டியிட்டதோ, எந்தச் சிங்களவர், போரில் தோற்றதால், அக்கால முறைப்படி, அடிமைகளாக்கபட்டு இங்கு கொண்டுவரப்பட்டு, காவிரிக்கு கரை அமைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டார்களோ, அந்தச் சிங்களவர்கள் காண, தமிழர்களின் பிணங்கள், சுறா தின்றதுபோக, சுழல் அரித்தது போக, மிச்சம் இருந்த பிணங்கள் சிங்களத்திதீவின் கரை ஓரம் கிடந்தன! தமிழரின் பிணங்கள் சிங்களத் தீவின் கரையிலே கிடக்கின்றன . . .
இவர்தம் ஆட்சியின் சிறப்பினை உலகுக்கே, எடுத்துக்காட்ட, சிங்களக் கரையிலே ஒதுக்கப்பட்ட 18 தமிழர்களின் பிணங்கள் போதுமே!! சிங்களவர் என்ன எண்ணியிருப்பர், தமிழரின் பிணங்களைக்கண்டு; தமிழருக்கு இது கதி, இவர்கள் ஆட்சியில்! இது குறித்து வெட்கித் தலை குனிந்து வேதனைப்பட்டு கிடக்க வேண்டியதிருக்க, வீறாப்பு காட்டுவதும், பேச்சை கூவமாக்குவதுமாக இருக்கிறார்கள். இறந்துபட்ட அந்தத் தமிழர்கள், அலை கடலிலே தத்தளித்தபோது, சுறா கொத்தியபோது, கைகால் சோர்ந்தபோது, கண் பஞ்சடைத்தபோது என்னென்ன எண்ணினரோ. எப்படி எப்படிப் புலம்பினரோ, யாரறிவர்! கடலில் தமிழன் பிணமாகி மிதக்கிறான். அது கண்டு சிங்களவன், இதோ கள்ளத் தோணி என்று கேலிபேசி சிரிக்கிறான், வாழவைக்கவேண்டிய பொறுப்பினை நிறைவேற்றும் தகுதி இழந்துபோனானாமே என்று கண்ணீர் வடிக்கவேண்டிய அமைச்சர் பேச்சை கூவம் ஆக்கிக்கொள்கிறார்; ஏனோ பாவம்!"
(அறிஞர் அண்ணா 04.09.1960)
திமுகவிற்கு எதிராக வேறு கட்சிகளுக்கு வாக்களிக்க விரும்பாத திமுககாரர்களும், அனுதாபிகளும் இந்த முறை பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க செல்லமாட்டார்களென்று கருதிகிறேன். அப்பாவும் அவர்களில் ஒருவர். அவர்களின் வலியும், ரணமும் புரிகிறது. காங்கிரசை புதைகுழிக்கு அனுப்ப வேண்டிய காலமிது. மீண்டும் உடனடியாக காங்கிரஸ் தலைமையில் ஆட்சிக்கு வந்தால் ஈழத்தமிழர்கள் என்றொரு இனம் முற்காலத்தில் வாழ்ந்ததாக வரலாறு பதிவு செய்யும். நாம் தீர்க்கமாக செயல்படவேண்டிய நேரமிது.
http://www.thiruvalluvar.in/2009/04/blog-post.எச்டிஎம்எல்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இனி மெல்ல.... சாகும் திமுக அரசியல்!
நன்றி சகோ! ஈழப்பிரச்சனையில் தமிழர்கள் நம்மிடம் ஒற்றுமை இல்லை! கழகம் காரணம் என்பது அறியாமை !
தமிழனுக்கு தமிழன் ஓற்றுமையாக இருக்க வேண்டும்!! ஒருவர் தவறு செய்யும் செய்யும் போது சரியான முறையில் சுட்டிகாட்டி திருத்தி கொள்ள வேண்டும்! அதே போல் அதை ஏற்று கொள்ளும் மன பக்குவம் வேண்டும்!
திமுக- பண்பாளர்
- பதிவுகள் : 99
இணைந்தது : 25/06/2011
Re: இனி மெல்ல.... சாகும் திமுக அரசியல்!
கழகம் காரணம் என்று கூறும் நண்பரே உங்களுக்கும் இந்த அறியாமை பொருந்தும்.........
போர் நிறுத்தம் என்ற ஒற்றைச்சொல் தான் கழகமா
போர் நிறுத்தம் என்ற ஒற்றைச்சொல் தான் கழகமா
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: இனி மெல்ல.... சாகும் திமுக அரசியல்!
Manik wrote:கழகம் காரணம் என்று கூறும் நண்பரே உங்களுக்கும் இந்த அறியாமை பொருந்தும்.........
போர் நிறுத்தம் என்ற ஒற்றைச்சொல் தான் கழகமா
இங்கே ஈழத்தின் பால் அக்கறை காட்டும் தமிழுணர்வாளர்களில் மிகப்பலர் , ஈழப்பிரச்சினையில் கலைஞர் தடுமாற்றத்துடன் கருத்துக்களை தெரிவிப்பதாக கருதுகிறார்கள்….ஒரு வகையில் அவரது நிலைப்பாடும் அவ்வாறு கருதுவதாகவே இருந்து வந்திருக்கிறது….
ஆனால் உண்மை நிலை என்ன???
கலைஞரது தமிழுணர்வையும் , அவரது ஈழத்தின் பாலான அக்கறையையும் சந்தேகப்படுவதென்பது மிகப்பெரிய முட்டாள்தனம்..!! ஆகவே , அவ்வாறான வாதங்களை வைப்போர் , கலைஞரின் அரசியல் எதிர்களே என்பது உள்ளங்கை நெல்லிக்கனி , அவர்களுக்கு நாம் பதிலும் சொல்லத் தேவையில்லை.ஆனால் , கலைஞரின் நிலையில் குழப்பங்கொண்டு , ஏன் இவ்வாறாக அவர் செயல்படுகிறார் என்ற ஆதங்கத்துடன் தமது கருத்துக்களை வைப்போரின் சந்தேகத்தை தீர்க்கும் முகமாகவே இப்பதிவினை நாம் எழுதுகின்றோம்!
எந்தவொரு கட்சிக்கும் அரசியல் அதிகாரம் முக்கியம்…..இன்றைய சூழலில் புதிதாக கட்சி ஆரம்பிக்கும் பலரும் கூட முதலமைச்சர் கனவிலேயே ஆரம்பிக்கிறார்கள் என்பது கண்கூடு…மறுக்க முடியாத உண்மையுங் கூட…..
ஆக , தமது ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் , அதுவும் இன்றைய உலகளாவிய பொருளாதார நெருக்கடியும் , தென் இந்தியாவில் நிலவும் தற்போதைக்கு சரி செய்யமுடியாத மின்வெட்டுக்களும் சூழந்த ஒரு சூழலில் தேர்தலில் ஈழத்துக்காக பதவி துறந்தால் , கழகம் மீண்டும் ஆட்சிக்கு வருமா என்பது சந்தேகம்தான்!!! இதுதான் உண்மை , இதைச்சொல்ல நமக்கு தயக்கமேதுமில்லை…கழகப்பொருளாளர் கூட அதே கருத்தைதன் சொல்லியிருக்கிறார்…
ஆக , ஆட்சியை தக்கவைத்துக்கொள்வதென்பது எவ்வளவு முக்கியமோ , அதே அளவிற்கு காங்கிரஸுக்கு மத்திய ஆட்சியை தக்க வைத்துக்கொள்வதென்பது முக்கியம் , ஆனால் இன்னும் ஒரு சில மாதங்களே இருக்கும் மத்திய ஆட்சியை பற்றிய பெரியதொரு கவலை இல்லை அவர்களுக்கு , இங்கே நிலை தலைகீழ்!!!!! காங்கிரஸை நம்பியே கழக் ஆட்சி இருப்பது கண்கூடு!!
அப்படிப்பட்ட சூழலில் , திரு.பழ நெடுமாறன் அவர்களுக்கோ , திரு.வைகோ அவர்களுக்கோ , திரு.திருமாவளவன் அவர்களுக்கோ , இல்லாத நெருக்கடி அல்லது பொருந்தாத சூழல் கலைஞருக்கு இருக்கிறது……அதனால் பழ.நெடுமாறன் போன்ற தமிழுணர்வாளர்களின் செயல்பாட்டையும் , ஆட்சியில் இருக்கும் கலைஞரின் செயல்பாட்டையும் ஒப்பிடுவதென்பது முட்டாள்தனம்…
ஆனால் , கலைஞரின் தமிழுணர்வின் பால் நம்பிக்கை கொண்ட பலரும் கூட , நெடுமாறனைப்போல கலைஞர் செயல்பட மாட்டேன் என்கிறாரே என்ற ஆதங்கத்தில் தான் கலைஞரை குறை கூறுகிறார்கள்..
ஆகவே தவறான ஒப்பீட்டின் பால் கலைஞரை குறைகூறுபவர்களுக்கு சில கேள்விகள்…
இன்றைய சூழலில் கழக ஆட்சி இல்லாது போனால் , ஒரு வேளை ஜெயலலிதா ஆட்சி மலருமானால் கருத்து சுதந்திரம் காணாமல் போய்விடும்….அதைத் தான் விரும்புகிறீர்களா??
இன்றைக்கு நாடாளுமன்ற எம்பிக்களை ராஜினாமா செய்வதால் யாருக்கு நட்டம்?? தமிழகத்துக்குத் தானே???? ஒரு வேளை ராஜினாமா செய்தபின் , காங்கிரஸ் தமிழகத்தில் ஆதரவை விலக்கி அதனால் திமுக ஆட்சியும் கவிழ்வதைத்தான் விரும்புகிறோமா????
( இங்கே குறிப்பிட வேண்டியது – அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஏன் கலைஞர் இதை நினைக்கவில்லை என்று – அன்றைய நிலை வேறு , காங்கிரஸும் கூட தீர்மானத்தை ஆதரித்தது , பிறகு அந்தர் பல்டி அடித்தது…அதனால் அனறைய சூழலும் ,இன்றைய சூழலும் வேறுவேறுதானதொரு சூழலில் இரண்டு நிகழ்வுகளையும் ஒப்பிடுதல் இமாலயத் தவறு)
இக்கேள்விகளுக்கு பதில் கண்டோமானால் , கலைஞர் ஈழப்பிரச்சினையில் தடுமாறவில்லை…தெளிவான கொள்கையுடனே இருக்கிறார்……..ஆனால் தமிழின எதிர்கள் தான் அவர் தடுமாறுவதாக சித்தரிக்க முயற்சிக்கிறார்கள் என்பது தெளிவுற விளங்கும்!!!
ஆகவெ , அவர் தடுமாறவும் இல்லை , தடுமாறவும் மாட்டார் என்பதைத்தான் அவரது சீரிய செயல்பாடுகளும் , மென்மையான அணுகுமுறைகளும் காட்டுகின்றன…
அவரது புலிகளின் நிலைப்பாடு பற்றிய கேள்விகளுக்கு புலிகளும் பதிலளித்துவிட்டார்கள் , அதன்பின்னர் கலைஞரும் போர்நிறுத்தம்தான் தேவை என்ற தொனியில் மத்திய அரசை வலியுறுத்தியிருக்கிறார்…
நல்லதொரு தீர்வு கலைஞரால் கிடைக்குமென்ற நம்பிக்கையில் நாம் கலைஞர் கரத்தை வலுப்படுத்துவோம்!!!
வாழ்க தமிழ்மொழி , வாழ்க திமுக , வளர்க கலைஞர் புகழ்!!
ஆனால் உண்மை நிலை என்ன???
கலைஞரது தமிழுணர்வையும் , அவரது ஈழத்தின் பாலான அக்கறையையும் சந்தேகப்படுவதென்பது மிகப்பெரிய முட்டாள்தனம்..!! ஆகவே , அவ்வாறான வாதங்களை வைப்போர் , கலைஞரின் அரசியல் எதிர்களே என்பது உள்ளங்கை நெல்லிக்கனி , அவர்களுக்கு நாம் பதிலும் சொல்லத் தேவையில்லை.ஆனால் , கலைஞரின் நிலையில் குழப்பங்கொண்டு , ஏன் இவ்வாறாக அவர் செயல்படுகிறார் என்ற ஆதங்கத்துடன் தமது கருத்துக்களை வைப்போரின் சந்தேகத்தை தீர்க்கும் முகமாகவே இப்பதிவினை நாம் எழுதுகின்றோம்!
எந்தவொரு கட்சிக்கும் அரசியல் அதிகாரம் முக்கியம்…..இன்றைய சூழலில் புதிதாக கட்சி ஆரம்பிக்கும் பலரும் கூட முதலமைச்சர் கனவிலேயே ஆரம்பிக்கிறார்கள் என்பது கண்கூடு…மறுக்க முடியாத உண்மையுங் கூட…..
ஆக , தமது ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் , அதுவும் இன்றைய உலகளாவிய பொருளாதார நெருக்கடியும் , தென் இந்தியாவில் நிலவும் தற்போதைக்கு சரி செய்யமுடியாத மின்வெட்டுக்களும் சூழந்த ஒரு சூழலில் தேர்தலில் ஈழத்துக்காக பதவி துறந்தால் , கழகம் மீண்டும் ஆட்சிக்கு வருமா என்பது சந்தேகம்தான்!!! இதுதான் உண்மை , இதைச்சொல்ல நமக்கு தயக்கமேதுமில்லை…கழகப்பொருளாளர் கூட அதே கருத்தைதன் சொல்லியிருக்கிறார்…
ஆக , ஆட்சியை தக்கவைத்துக்கொள்வதென்பது எவ்வளவு முக்கியமோ , அதே அளவிற்கு காங்கிரஸுக்கு மத்திய ஆட்சியை தக்க வைத்துக்கொள்வதென்பது முக்கியம் , ஆனால் இன்னும் ஒரு சில மாதங்களே இருக்கும் மத்திய ஆட்சியை பற்றிய பெரியதொரு கவலை இல்லை அவர்களுக்கு , இங்கே நிலை தலைகீழ்!!!!! காங்கிரஸை நம்பியே கழக் ஆட்சி இருப்பது கண்கூடு!!
அப்படிப்பட்ட சூழலில் , திரு.பழ நெடுமாறன் அவர்களுக்கோ , திரு.வைகோ அவர்களுக்கோ , திரு.திருமாவளவன் அவர்களுக்கோ , இல்லாத நெருக்கடி அல்லது பொருந்தாத சூழல் கலைஞருக்கு இருக்கிறது……அதனால் பழ.நெடுமாறன் போன்ற தமிழுணர்வாளர்களின் செயல்பாட்டையும் , ஆட்சியில் இருக்கும் கலைஞரின் செயல்பாட்டையும் ஒப்பிடுவதென்பது முட்டாள்தனம்…
ஆனால் , கலைஞரின் தமிழுணர்வின் பால் நம்பிக்கை கொண்ட பலரும் கூட , நெடுமாறனைப்போல கலைஞர் செயல்பட மாட்டேன் என்கிறாரே என்ற ஆதங்கத்தில் தான் கலைஞரை குறை கூறுகிறார்கள்..
ஆகவே தவறான ஒப்பீட்டின் பால் கலைஞரை குறைகூறுபவர்களுக்கு சில கேள்விகள்…
இன்றைய சூழலில் கழக ஆட்சி இல்லாது போனால் , ஒரு வேளை ஜெயலலிதா ஆட்சி மலருமானால் கருத்து சுதந்திரம் காணாமல் போய்விடும்….அதைத் தான் விரும்புகிறீர்களா??
இன்றைக்கு நாடாளுமன்ற எம்பிக்களை ராஜினாமா செய்வதால் யாருக்கு நட்டம்?? தமிழகத்துக்குத் தானே???? ஒரு வேளை ராஜினாமா செய்தபின் , காங்கிரஸ் தமிழகத்தில் ஆதரவை விலக்கி அதனால் திமுக ஆட்சியும் கவிழ்வதைத்தான் விரும்புகிறோமா????
( இங்கே குறிப்பிட வேண்டியது – அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஏன் கலைஞர் இதை நினைக்கவில்லை என்று – அன்றைய நிலை வேறு , காங்கிரஸும் கூட தீர்மானத்தை ஆதரித்தது , பிறகு அந்தர் பல்டி அடித்தது…அதனால் அனறைய சூழலும் ,இன்றைய சூழலும் வேறுவேறுதானதொரு சூழலில் இரண்டு நிகழ்வுகளையும் ஒப்பிடுதல் இமாலயத் தவறு)
இக்கேள்விகளுக்கு பதில் கண்டோமானால் , கலைஞர் ஈழப்பிரச்சினையில் தடுமாறவில்லை…தெளிவான கொள்கையுடனே இருக்கிறார்……..ஆனால் தமிழின எதிர்கள் தான் அவர் தடுமாறுவதாக சித்தரிக்க முயற்சிக்கிறார்கள் என்பது தெளிவுற விளங்கும்!!!
ஆகவெ , அவர் தடுமாறவும் இல்லை , தடுமாறவும் மாட்டார் என்பதைத்தான் அவரது சீரிய செயல்பாடுகளும் , மென்மையான அணுகுமுறைகளும் காட்டுகின்றன…
அவரது புலிகளின் நிலைப்பாடு பற்றிய கேள்விகளுக்கு புலிகளும் பதிலளித்துவிட்டார்கள் , அதன்பின்னர் கலைஞரும் போர்நிறுத்தம்தான் தேவை என்ற தொனியில் மத்திய அரசை வலியுறுத்தியிருக்கிறார்…
நல்லதொரு தீர்வு கலைஞரால் கிடைக்குமென்ற நம்பிக்கையில் நாம் கலைஞர் கரத்தை வலுப்படுத்துவோம்!!!
வாழ்க தமிழ்மொழி , வாழ்க திமுக , வளர்க கலைஞர் புகழ்!!
நன்றி .
தமிழனுக்கு தமிழன் ஓற்றுமையாக இருக்க வேண்டும்!! ஒருவர் தவறு செய்யும் செய்யும் போது சரியான முறையில் சுட்டிகாட்டி திருத்தி கொள்ள வேண்டும்! அதே போல் அதை ஏற்று கொள்ளும் மன பக்குவம் வேண்டும்!
திமுக- பண்பாளர்
- பதிவுகள் : 99
இணைந்தது : 25/06/2011
திவ்யா- மகளிர் அணி
- பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011
Re: இனி மெல்ல.... சாகும் திமுக அரசியல்!
இங்கே நிலை தலைகீழ்!!!!! காங்கிரஸை நம்பியே கழக் ஆட்சி இருப்பது கண்கூடு!!
உண்மைதான்.. கனிமொழியை காப்பாற்ற வேண்டும் அல்லவா!!
உண்மைதான்.. கனிமொழியை காப்பாற்ற வேண்டும் அல்லவா!!
Re: இனி மெல்ல.... சாகும் திமுக அரசியல்!
அம்மையார் என்ன செய்தார்? இப்போது கடிதம்தான் எழுதுகிறார்! எங்கே தமிழன் ஒற்றுமை ? அண்ணன் வைகோ மற்றும் நெடுமாறன் ஐயாவை ஆதரிப்போர் எத்தனை பேர்?
தமிழனுக்கு தமிழன் ஓற்றுமையாக இருக்க வேண்டும்!! ஒருவர் தவறு செய்யும் செய்யும் போது சரியான முறையில் சுட்டிகாட்டி திருத்தி கொள்ள வேண்டும்! அதே போல் அதை ஏற்று கொள்ளும் மன பக்குவம் வேண்டும்!
திமுக- பண்பாளர்
- பதிவுகள் : 99
இணைந்தது : 25/06/2011
Re: இனி மெல்ல.... சாகும் திமுக அரசியல்!
மத்தியில் குரல் கொடுக்க நட்பு அடிப்படையில் சில திட்டங்களை தமிழக மக்களுக்கு தலைவர் கலைஞர் மட்டும் நிறைவேற்றியவர்! இப்போது முல்லை பெரியாற்றில் புதிய அணை கட்ட கேரளா அரசு தெரிவித்துள்ளது முடிந்தால் அம்மையார் தடுக்கட்டும்!
தமிழனுக்கு தமிழன் ஓற்றுமையாக இருக்க வேண்டும்!! ஒருவர் தவறு செய்யும் செய்யும் போது சரியான முறையில் சுட்டிகாட்டி திருத்தி கொள்ள வேண்டும்! அதே போல் அதை ஏற்று கொள்ளும் மன பக்குவம் வேண்டும்!
திமுக- பண்பாளர்
- பதிவுகள் : 99
இணைந்தது : 25/06/2011
Page 1 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» தமிழ் இனி மெல்ல சாகும்!!!!
» தமிழினி மெல்ல சாகும்... உண்மையா?
» மெல்ல தமிழினிச் சாகும் ..தமிழன் ????
» மெல்ல தமிழ் இனிச் சாகும் - மிக மிக அருமையான வீடியோ காணவும்
» அரசியல் மங்காத்தாவில் உயிர்த்தெழுகிறதா திமுக?
» தமிழினி மெல்ல சாகும்... உண்மையா?
» மெல்ல தமிழினிச் சாகும் ..தமிழன் ????
» மெல்ல தமிழ் இனிச் சாகும் - மிக மிக அருமையான வீடியோ காணவும்
» அரசியல் மங்காத்தாவில் உயிர்த்தெழுகிறதா திமுக?
Page 1 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|