ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூநகரியை கைப்பற்றியது இலங்கை ராணுவம் : புலிகளின் கடைசி 'கோட்டை'யும் தகர்ந்தது

Go down

பூநகரியை கைப்பற்றியது இலங்கை ராணுவம் : புலிகளின் கடைசி 'கோட்டை'யும் தகர்ந்தது Empty பூநகரியை கைப்பற்றியது இலங்கை ராணுவம் : புலிகளின் கடைசி 'கோட்டை'யும் தகர்ந்தது

Post by சிவா Sun Nov 16, 2008 6:59 am

கொழும்பு : இலங்கையில் விடுதலைப் புலிகளின் முக்கிய தளமாக விளங்கிய பூநகரி என்ற நகரத்தை, ராணுவம் கைப்பற்றியுள்ளது. இதன் மூலம், இலங்கை மேற்கு கடற்கரை பகுதி முழுவதும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. இந்த பகுதியில் தங்கள் வசமிருந்த கடைசி "கோட்டை'யையும் புலிகள் இழந்துள்ளனர். இலங்கையில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை கைப்பற்ற, ராணுவம் தீவிரமாக சண்டையிட்டு வருகிறது. புலிகளின் தலைமையகமான கிளிநொச்சியைக் கைப்பற்ற, மும்முனை தாக்குதல் நடத்தி வருகிறது. தொடர் தாக்குதலில், புலிகளிடம் இருந்து பூநகரி நகரைக் கைப்பற்றியுள்ளதாக ராணுவம் அறிவித்துள்ளது.


இலங்கை ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது: கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பூநகரி என்ற நகரம், புலிகளின் முக்கிய தளமாக விளங்கி வந்தது. பூநகரியை மையமாக வைத்தே, கடல் புலிகளின் நடவடிக்கைகள் அமைந்திருந்தன. நாட்டின் மற்ற பகுதிகளிலிருந்து யாழ்ப்பாணத்தை இணைக்கக்கூடிய முக்கியமான சாலை, பூநகரியில் உள்ளது. பல ஆண்டுகளாக இந்த நகரம், புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. கடந்த இரு நாட்களாக இங்கு கடும் சண்டை நடந்தது. பூநகரியின் தெற்கு பகுதி வழியாக, புலிகள் மீது ராணுவத்தினர் கடும் தாக்குதல் நடத்தினர். இதன் எதிரொலியாக, பூநகரி-பரந்தன் இடையேயான சாலை ராணுவம் வசம் வந்தது. பின்னர், "பி 69' சாலை வழியாக 10 கி.மீ., தூரம் முன்னேறிய ராணுவ வீரர்கள், இன்று(நேற்று)அதிகாலை பூநகரியைக் கைப்பற்றி, தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். இதையடுத்து, மிகப் பெரிய தோல்வியை புலிகள் தழுவியுள்ளனர். பூநகரியைக் கைப்பற்றியதன் மூலம், நாட்டின் மேற்கு கடற்கரை பகுதி முழுவதுமாக ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. மேற்கு கடற்கரை பகுதியில் தங்கள் வசமிருந்த கடைசி நிலப் பரப்பையும் புலிகள் இழந்துள்ளனர். மேலும், யாழ்ப்பாணத்தில் உள்ள படையினருக்கு, சாலை வழியாகவும் பொருட்களை கொண்டு செல்ல இந்த வெற்றி வழி வகுத்துள்ளது. இந்த சண்டையின் போது, புலிகள் கடும் எதிர் தாக்குதல் நடத்தினர். ராணுவ வீரர்கள் அதை முறியடித்து முன்னேறியுள்ளனர். கிளிநொச்சிக்கு மிக அருகில் ராணுவம் நெருங்கி விட்டது. எந்த நேரத்திலும் கிளிநொச்சியும் ராணுவத்தின் வசம் வந்து விடும். இவ்வாறு ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.


இலங்கை அதிபர் ராஜபக்சே கூறுகையில், "பூநகரியை இலங்கை ராணுவம் கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் யாழ்ப்பாணத்திற்கு செல்லும் நெடுஞ்சாலை நம் வசம் வந்துள்ளது. இந்த நேரத்தில், புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். ஆயுதத்தை கீழே போட்டு விட்டு சரணடையுங்கள். பின்னர், பேச்சுவார்த்தை நடத்தலாம். ஆயுதங்களை கீழே போடுவது என்பது, வடக்கு பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நீங்கள் செய்யும் மிகப் பெரிய உதவியாக இருக்கும்' என்றார்.


பிள்ளையன் செயலர் சுட்டுக் கொலை: இலங்கை போலீஸ் செய்தி தொடர்பாளர் ரஞ்சித் கூறியதாவது: இலங்கை, கிழக்கு மாகாண முதல்வராக இருப்பவர் பிள்ளையன். இவர், விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்து சென்ற கருணாவின் ஆதரவாளர். நேற்று முன்தினம் இவரது செயலர் குமாரசாமி நந்தகோபன் என்ற ரகு, கொழும்பு அருகே காரில் வந்து கொண்டிருந்தார். திடீரென காரை வழிமறித்த அடையாளம் தெரியாத கும்பல், ரகுவையும், டிரைவர் நசீரையும் நோக்கி சரமாரியாக சுட்டது. இதில், இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர். விடுதலைப் புலிகள் தான், இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது. இவ்வாறு ரஞ்சித் கூறினார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» 'இந்திய மாநிலமல்ல இலங்கை' : சிங்கள கட்சி கொதிப்பு: இலங்கை ராணுவம் முன்னேற்றம்
» அதிபர் முபாரக் குடும்பத்துடன் தப்பி ஓட்டம், எகிப்தில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது.
» விடுதலைப் புலிகளின் 10 விமானங்கள் இலங்கை நோக்கிப் புறப்பட்டது
» இலங்கை: விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல் அழிப்பு
» புலிகளின் தங்கத்தை திருப்பி தர இலங்கை அரசுக்கு கோரிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum