புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்களுக்கும் மீசை Poll_c10பெண்களுக்கும் மீசை Poll_m10பெண்களுக்கும் மீசை Poll_c10 
7 Posts - 64%
வேல்முருகன் காசி
பெண்களுக்கும் மீசை Poll_c10பெண்களுக்கும் மீசை Poll_m10பெண்களுக்கும் மீசை Poll_c10 
2 Posts - 18%
heezulia
பெண்களுக்கும் மீசை Poll_c10பெண்களுக்கும் மீசை Poll_m10பெண்களுக்கும் மீசை Poll_c10 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களுக்கும் மீசை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 13, 2009 10:42 am

பெண்களுக்கும் மீசை Hirsutism


பெரும்பாலான பெண்களுக்கு மீசை, தாடி வளரும் பிரச்சினை இருக்கிறது. சுமார் பத்து சதவீதம் பெண்கள் இந்தப்பிரச்சினையால் பாதிக்கப்படுகிறார்கள். பெண்களுக்கு தேவையில்லாத இடங்களில் முடி முளைக்கும் இந்த நோய்க்கு Hirsutism என்று பெயர்.

ஆண் பால்வினை ஹார்மோன் Androgen அதிகம் சுரந்தால் பூனை முடியாக இருக்கும் முடிகள் கருப்பாக, தடினமாக மாற ஆரம்பித்து விடும். ஆண்களுக்கு மீசை, தாடி வளர்வது போல முகத்தில் முடி தோன்றுவது மட்டுமல்லாது, கை, கால்கள், மார்பு வயிறு என ரோமங்களை தடிமனாக்கி விடும்.

ஆண் பால்வினை ஹார்மோன் Androgen கரு முட்டைப்பை அல்லது அட்ரினல் சுரப்பியிலிருந்து சுரக்கப்படும். எனவே கருமுட்டைப் பையில் மாற்றங்களோ அல்லது அட்ரினல் சுரப்பியில் கோளாறுகளோ வந்தால் சுரப்பி நீரை அதிகளவில் சுரக்க வைத்து விடும்.

கரு முட்டைப்பையில் தோன்றும் நீர்க்கட்டிகள்தான் பெரும்பாலான பெண்களுக்கு முடி வளர்ச்சியைத் தோற்றுவிக்கின்றன. இதில் இளம் பெண்கள் மிகவும் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர்.

தீட்டு சரியாக வராமல் இருக்கலாம். உடல்பருமன் கூடியிருக்கலாம். குழந்தைப் பேரின்மை இருக்கலாம். பெரும்பாலும் முன்தலையில் வழுக்கை கூட விழலாம். எதேச்சையாக வயிற்றுப் பகுதியை வேறு ஏதாவது கோளாறுக்காக ஸ்கேன் செய்யும்போதோ அல்லது மாஸ்டர் செக்கப் செய்யும் போதோ நீர்க்கட்டிகள் தெரியவரும்.

கரு முட்டைப்பையில் ஏராளமாக இருக்கும் சினை முட்டைகள் நன்கு வளர்ச்சி பெற முடியாமல் நீர் கோர்த்துக் கொண்டு நீர்க்கட்டிகளை இரண்டு கரு முட்டைப் பைகளிலும் உருவாக்கி விடும். முட்டை வளர்ச்சி தடைபடுவதால் பெண்மைக்குத் தேவைப்படும் இயக்குநீரான Estrogen அதிகமாகச் சுரக்க கரு முட்டைப்பையில் உள்ள இணைப்புத் திசுக்களில் இருந்து Androgen ஹார்மோன் அதிகமாகிவிடும். எனவே மயிர்ககல்கள் தூண்டப்பட்டு வளர் பருவத்தைக் கூட்டி விடுவதால் முடி வளர ஆரம்பித்து விடுகிறது. தொடர்ந்து இந்நிலை நீடிக்க நீடிக்க புதிய முடிகளும் உருவாக ஆரம்பித்து விடுகிறது.

இந்த நீர்க்கட்டிகள் தோன்றக் காரணம் பரம்பரை ஒரு பக்கம் இருந்தாலும், சர்க்கரை வியாதி உள்ள குடும்பங்களில் அதிகம் காணப்படுகிறது. தைராய்டு சுரப்பி, பிட்யூட்டரி சுரப்பிக் கோளாறுகள்கூட இதற்கு வழிவகை செய்யலாம்.

அட்ரினல் சுரப்பியில் கட்டிகள் தோன்றினால்கூட Androgen அளவு அதிகமாகிவிடும். சில ஆங்கில மருந்துகள் முடி வளர்ச்சியைக் கூட்டலாம். வலிப்பு நோய் மனநலப் பிரச்சினைகளுக்கு மருந்து சாப்பிடுபவர்கள் கருத்தடை மாத்திரை சாப்பிடுபவர்களுக்கு முடி வளர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது. சில பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும்போது ஏற்படும் ஹார்மோனல் இம்பேலன்ஸ் முடி வளர்ச்சியைக் கொடுக்கலாம்.

சிலருக்கு எந்தக் காரணத்தையும் அறிய முடியாத நிலையில் சர்க்கரை வியாதி குடும்பப் பாரம்பரியத்தில் இருப்பது தெரியவரும். இந்த வகைக்குரியவர்கள் பெரும்பாலும் குண்டாக இருப்பார்கள். இன்சுலின் அளவு தேவைக்கு அதிகமாக சுரந்து மாவுச்சத்தை கிரகிக்க எடையைக் கூட்டி விடும். சர்க்கரை வியாதி இருக்குமோ, என்று பயந்துவிடாதீர்கள். பரிசோதனை செய்து பார்த்தால் சிறுநீர் ரத்தம் இரண்டிலும் சரியாகத்தான் இருக்கும். ஆனால் பரிசோதனையில் இன்சுலின் அளவு கூடியிருக்கும்.

அதிகப்படியாக இன்சுலின் Androgen ஹார்மோனை அதிகமாக சுரக்க வைத்து மீசை, தாடியை வளரச்செய்துவிடும். இந்த insulin resistance பல நோயாளிகளுக்கு உள்ளது.

ஹோமியோபதி மருத்துவம் மூலம் முடி வளர்ச்சிப் பிரச்சனைகளை உள்ளுக்கு சாப்பிடும் மருந்துகளால் தீர்க்க முடியும். அதோடு மட்டுமின்றி இதன் அடிப்படை காரணங்கள் எதுவாக இருந்தாலும் வேறுக்க முடியும். தலை முடி கொட்டுவதற்கொரு சிகிச்சை, தீட்டுக் கோளாறுக்கு ஒரு மருந்து, உடல் பருமனைக் குறைக்க ஒரு வைத்தியம், கட்டிகளுக்கு அறுவை சிகிச்சை என்று தனித்தனியாக சிகிச்சை தேவையில்லை. அனைத்தையும் ஒரு தொகுப்பாக குணமாக்க முடியும். குழந்தைப் பேறுகூட உண்டாகி இருக்கிறது.

தேவையற்ற இடங்களில் முடி வளர்ச்சி பெண்களுக்கு மிக தர்ம சங்கடமான விஷயம். வெளியில் தலைகாட்ட முடியாமல் கஷடப்படுவார்கள். முதல் முறையாக வளரும் முடியை நகங்கள் மூலமோ, அல்லது பிளக்கர் மூலம் கிள்ளி எடுப்பது என்று முயற்சி செய்வார்கள். முடிகளைப் பிடுங்குவதால் மயிர்க்கால் வேரோடு பிடுங்கப்படும் போது ஏற்படும் ரத்தக்கசிவு சிறு தழும்புகளை ஏற்படுத்தலாம். அருகில் உள்ள முடிகள் மயிர்க்கால்களுக்கு அதிகப்படியான ரத்த ஓட்டத்தைக் கொடுத்து அவற்றின் வளர்ச்சியைக் கூட்டலாம்.

ஹேர் ரிமூவர்கள் கொண்டு முடியை நீக்க பலர் முயற்சி செய்வார்கள். சலித்தவர்கள் பிளீச்சிங், எலக்ரோலைசிஸ் செய்ய அழகு நிலையங்களை நாடுவதும் உண்டு. சிலர் தற்போதைய புதிய கண்டுபிடிப்பான லேசர் சிகிச்சையை நாடுவார்கள். ஒரு சிலர் சேவிங் செய்து கொள்வார்கள்.

எல்லாவற்றையும்விட சிறந்தது முகச்சவரம்தான். ஏனென்றால் வளர்ந்த முடியை வெட்டியெடுக்குமே தவிர, மயிர்க்கால்களுக்கு எந்தவித தீங்கும் செய்யாது. மற்ற முறைகள் அனைத்திலும் மயிர்க்கால்கள் பாதிக்கப்பட்டு சிறு தழும்புகள் ஏற்படும். சொரசொரவென்று மாறி, நாளடைவில் முடிவளர்ச்சியிருந்த இடத்தில் கருப்பாக பளிச்சென்று தெரிய ஆரம்பித்து விடும். அதோடு மட்டுமல்லாமல் நோய்க் கிருமிகள் மயிர்க்கால்களைத் தாக்கி இன்பெக்ஷன் எற்படவும் ஏதுவாகும்.

சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா? என்று பலர் நினைக்கிறார்கள். நிச்சயமாக வளராது. ஏனெனில் முடி வளர்ச்சி Androgen அளவை வைத்துதான் இருக்குமே தவிர, சவரத்தை வைத்து நிச்சயமாக இருக்காது. முதலில் குறைவாக இருக்கும் முடிகள் சிகிச்சை பெற்றதால் தடிமனாக மாறி விடுவதும், புதிய முடிகள் தோன்றுவதும் ஷேவிங் செய்வதால் இருக்கும் என்ற மாயையை தோற்றுவிக்கும்.

பெரும்பான்மையான நோயாளிகள் சிகிச்சை எடுத்தவுடன் முடிவளர்ச்சிக் கட்டுப்பட்டு உதிர்ந்துவிட வேண்டும் என்று நினைப்பார்கள். உடனடி நிவாரணம் கிடைக்காமல் மருந்துகள் முதலில் Androgen அளவைக் குறைக்கும். எனவே புதிய முடிகள் வளர்வது நிற்கும். ஏற்கனவே தூண்டப்பட்ட முடிகள் அதன் வளர் பருவம் முடிந்தவுடன் உதிர்ந்துவிடும். இதன் முன்னேற்றத்தை ரத்தத்தில் உள்ள Testosterone அளவைப் பரிசோதனை செய்து அறிந்து கொள்ளவும்.

அதோடு மட்டுமல்லாது ஸ்கேன் பரிசோதனை மூலம் கட்டிகள் குணமாவதை உறுதி செய்து கொள்ளலாம்.

மற்ற நோய்க்குறிகளின் முன்னேற்றத்தை வைத்தும் அறிந்துகொள்ள முடியும்.

பெண்களுக்கு முடி முளைக்கும் பிரச்சினைகளைப் போக்குவதற்கு ஹோமியோபதி மருத்துவத்தில் நல்ல தீர்வு உண்டு.



பெண்களுக்கும் மீசை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Sep 13, 2009 11:37 am

மிக மிக பயனுள்ள தகவல்கள் அண்ணா ..குண்டுக்கும் இன்சுலினுக்கும் தொடர்பு இருக்கா..ம்ம்ம்ம்ம் ..அருமையான தகவல்கள்..

சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா? என்று பலர் நினைக்கிறார்கள். நிச்சயமாக வளராது. ஏனெனில் முடி வளர்ச்சி Androgen அளவை வைத்துதான் இருக்குமே தவிர, சவரத்தை வைத்து நிச்சயமாக இருக்காது. முதலில் குறைவாக இருக்கும் முடிகள் சிகிச்சை பெற்றதால் தடிமனாக மாறி விடுவதும், புதிய முடிகள் தோன்றுவதும் ஷேவிங் செய்வதால் இருக்கும் என்ற மாயையை தோற்றுவிக்கும்((எனக்கு இந்த டவுட் இருந்தது ..இப்போ தெளிவாய் புரயுது..தேங்க்ஸ் ஷிவா அண்ணா ..))



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக