புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Yesterday at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) Poll_c10நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) Poll_m10நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) Poll_c10 
81 Posts - 68%
heezulia
நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) Poll_c10நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) Poll_m10நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) Poll_c10நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) Poll_m10நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) Poll_c10 
9 Posts - 8%
mohamed nizamudeen
நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) Poll_c10நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) Poll_m10நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) Poll_c10 
4 Posts - 3%
sureshyeskay
நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) Poll_c10நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) Poll_m10நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) Poll_c10 
1 Post - 1%
viyasan
நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) Poll_c10நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) Poll_m10நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) Poll_c10நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) Poll_m10நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) Poll_c10 
273 Posts - 45%
heezulia
நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) Poll_c10நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) Poll_m10நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) Poll_c10நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) Poll_m10நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) Poll_c10நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) Poll_m10நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) Poll_c10நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) Poll_m10நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) Poll_c10 
18 Posts - 3%
prajai
நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) Poll_c10நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) Poll_m10நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) Poll_c10நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) Poll_m10நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) Poll_c10 
8 Posts - 1%
Guna.D
நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) Poll_c10நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) Poll_m10நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) Poll_c10நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) Poll_m10நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) Poll_c10 
7 Posts - 1%
mruthun
நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) Poll_c10நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) Poll_m10நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்) Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் ? (விவாதம்)


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

வாழ்கைக்கு கவிதை தேவையா? [29Vote ]

  • ஆம் கண்டிப்பாக தேவை!/

    2379%
  • தேவை இல்லை/

    414%
  • கருத்து இல்லை

    27%

You are not connected. Please login or register

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Jul 09, 2011 7:05 am

[You must be registered and logged in to see this link.]


கவிதை என்ற ஒன்றை நான் என்றுமே
ஆமோதிப்பது கிடையாது ஏன்னெனில் கவிதை என்பது தனிமனித சுயவெறுப்பு மற்றும்
விருப்புகளை சார்ந்ததாகவே இருக்கும்..மீறினால் சுயசிந்தனை என்று
நினைக்கிறேன்..
மாறாக வாழ்வில் பயன்படும் அறிவியல் மற்றும் அறிவியல்சார்ந்த நுட்பமாக இராது.. என்பது என் நோக்கம்..
ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவது என்பது என்னுடைய கருத்து (எவரையொனும் புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்)



நண்பர் realvampire ஒரு பதிவின் பின்னுடத்தில் தான் கவிதையை என்றும் ஆதரிப்பதில்லை என்றும் !அறிவியல் போல் இது ஒன்றுக்கும் உதவாது என்றும் சொல்லியிருக்கிறார் ! நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat Jul 09, 2011 7:21 am

எனக்குகவிதை எழுத தெரியாது ஆனால் கவிதை வாசிக்க பிடிக்கும் என்னை பொறுத்த வரை கவிதை என்பது ஒரு விதமான கலை."ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவது"இந்த கருத்தை நானும் ஏறுக்கொள்கிறேன் ஆனால் பழங்கால ஏடுகளில் இருந்து தான் பழவற்றை ஆறிந்து கொள்ள முடிகிறது இந்த பழமொழிக்கான உண்மையான காரணம் என்ன என்று தெரியவில்லை அறிந்தவர்கள் சொல்லுங்கள்...
ஒரு சின்ன சந்தேகம் அறிவியலுக்கும் கவிதைக்கும் எதற்க்கு முடிச்சு போடுரிங்க...சிரி



[You must be registered and logged in to see this image.] அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் [You must be registered and logged in to see this image.]
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Jul 09, 2011 7:24 am

கவிதை யாருடைய ஆமோதிப்பையும் எதிர் பார்த்து இருக்கவில்லைஎன்பதுதான் உண்மை! அறிவியலையும் கவிதையையும் ஒப்பிடுவதே ஒரு அறியாமை தான்! இரண்டுக்கும் ஆன வேலைகளும் , பயன்படுக்களும் வெவ்வேறு!
ஒன்றுக்கும் உதவாது என்று எப்படி சொல்வது!
உள்ளத்து உணர்ச்சிகள் வார்த்தையில் வடிக்க படும் கவிதையினால் உலகம் இன்னும் உயிரோடு இருக்கிறது என்று நினைக்கிறேன்!உள்ளத்தின் மென்மையான பகுதியை தூண்டும் கவிதை அவசியம் என்றே நினைக்கிறேன் .
நீங்கள் "நியூட்டன் விதியை சொல்லியா காதல் செய்வீர்கள்?
உங்கள் உள்ளம் தொட்ட, அழகை, உணர்வை, வாழ்வை வெளிப்படுத்த கவிதை வேண்டாமா?

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Jul 09, 2011 7:49 am

கே.பாலா வின் கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியது.

ஒருவரை போற்றவும் தூற்றவும் பயன்படும் அருமையான ஆயுதம் தான் கவிதை.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 09, 2011 9:01 am

தமிழர்களின் பழங்கால வாழ்வுடன் இணைந்தது பாடல்கள். அவ்வாறே இன்று கவிதைகளும் மனித மனங்களின் மகிழ்ச்சி, சோகம், எழுச்சி போன்றவற்றின் வடிகாலாகப் பயன்படுகிறது.

மனிதனின் இயந்திரத் தனமான வாழ்க்கையிலிருந்து, மனிதனை மனிதனாக வாழ வைக்கும் அளவிற்கு மனதை மாற்றும் சக்தி ஒரு நல்ல கவிதைக்கு உண்டு.

கவிதை என்றதும் உடனே அனைவர் மனதிலும் தோன்றுவது காதல் கவிதைகள் மட்டுமே. ஆனால் வாழ்வின் அனைத்து அங்கங்களுடனும் இணைந்து வரகூடியது கவிதை.

அறிவியல் தோன்றும் முன்பே மக்களுடன் இணைந்திருந்தது கவிதை.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Jul 09, 2011 9:35 am

ஏட்டு சுரைக்காய் கரிக்கு உதவாது தான்......ஆனால் சுரைக்காய் எப்படி இருக்கும் என்பதை ஏட்டில் இருந்து தானே கற்றுக் கொள்கிறோம்...

மனித சமூகம் என்பது நம்மால் உருவாக்கப்பட்டது. அந்த சமூகத்தில் ஒரு தனிமனிதனுக்கு ஏற்பட்ட ஒரு விஷயத்தை அவன் மற்றவரோடு பகிர கவிதையை கருவியாக கொள்கிறான். அதே கவிதையில் தான் அனுபவித்ததை மற்றொருவர் அனுபவிக்காமல் இருக்க வேண்டும் என்ற உள்ளார்ந்த சிந்தனையும் இருக்கும்......

கவிதையை சிலர் ஆமோதிபது கிடையாது என்பதற்கு காரணம்.......இவன் என்ன சொல்லுவது நாம் என்ன கேட்பது.....அல்லது இவன் எப்படி இவ்வாறெல்லாம் புத்திமதி சொல்லலாம் என்ற கர்வ மனப்பான்மை இருப்பவர்கள் தான் அப்படி கூற வாய்பு இருக்கிறது......."குரங்கை கூட வழிபடு அதுகூட உனக்கு வழிகாட்டும்" (சரியான வார்த்தை ஞாபகம் இல்லை மன்னிக்கவும்) என்று கவியரசு கண்ணதாசன் பாடியுள்ளார்.....அப்படி இருக்க ஆறறிவு கொண்ட மனிதன் கூறும் கருத்துள்ள கவி எப்படி உதவாமல் போகும்.......
கவிதை படிக்க மனமில்லை ஆதலால் அதை பிடிக்க வாய்பில்லை

பாட்டுகள் பாடியே மக்களை சுதந்திரதிர்காக போராட தூண்டிய பாரதியின் வரிகள் எப்படி உதவியதோ....மக்கள் அவரின் கணீர் குரலில் எளுந்த மேலார்ந்த கவிதைகளில் உணர்ச்சி பெற்று அவர் கவிதைக்கு உயிர் கொடுத்து சுதந்திரதிர்காக போராட வில்லையா....

கவிதை ஏட்டு சுரைக்காய் தான் ஆனால் சுரைக்காயை எப்படி கூட்டாக செய்வது என்பதையும் அந்த ஏட்டின் வாயிலாக தான் அறிய முடியும்.....சுரைக்காயை மட்டும் கண்டு அது பயன் படாது என்று நினைத்து சென்றால் அதன் பயனான கூட்டு செய்யும் முறையை அறியாமலே போயி விட நேரிடலாம்.......

கவிதை கண்டு அதில்
இருந்து ஒரு பொறி கண்டு
அப்பொறியை கொண்டு
தீபமாய் எரிந்தவர் பலர் உண்டு
வெறும் ஏட்டு சுரைக்காய்
என்ற எண்ணம் கொண்டு
கவிதை படித்தால் அது
தன் துணைவியை காமத்துடன்
மட்டுமே நெருங்கும் கணவனுக்கு இணை
மனைவியை அன்புடன் நெருங்கினால்
மட்டுமே அவள் மூலம் வசந்தம் பிறக்கும்
அதே போல் தான்
ஏட்டு சுரைக்காய் ஆன கவிதையும்

இது என் தனிப்பட்ட கருத்து தவறிருந்தால் சுட்டி காட்டலாம்.......பாதிப்பு இருந்தால் மன்னிக்கவும்

விவாதத்துக்கு உட்படுத்த வேண்டிய அருமையான தலைப்பு பாலா ஸார் மிக்க நன்றி இது போன்ற வாய்பை உருவாக்கி தந்தமைக்கு :நல்வரவு:



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat Jul 09, 2011 10:17 am

கவிதை ஒரு மொழியின் மிக சிறந்த அடையாளம். இன்று நாம் ஜப்பானிய மொழியின் ஆழத்தை அதன் ஐகூக் கவிதையின் வாயிலாகவே அறிகிறோம். தமிழ் மொழியை பற்றி சொல்லவே வேண்டாம், அத்தனையும் செவ்விலக்கியங்கள்.

அறிவியல் என்றால் கணிதமும் பொதிகமும், வேதியல் மட்டும் அல்ல. மொழியை பற்றிய அறிவும் ஒரு அறிவு தான், மொழியை பற்றி ஆராயும் அறிவியல்லார்கள் உண்டு.

கவிதையின் மிகப் பெரிய பலவீனம், அது வெளிப்படுத்தும் உணர்வுகளில் அனுபவப்பட்டவர்களுக்கே முழுமையாக புரியும். காதலில் அனைத்து உணர்வுகளும் அனைவருக்கும் ஏற்படுவதில்லை. காதல் திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழும் ஒருவனால் காதல் தோல்வியை வெளிப்படுத்தும் கவிதையை புரிந்து கொள்வது, மிகக் கடினம். "இரவு முழுவதும் அழுதான்" என்ற சொல் இரவு முழுவதும் அழுத ஒருவனுக்கு தான் அந்த வார்த்தையின் வேதனை புரியும். அது போல் தான் அனைத்து உணர்வுகளும்.

கவிதை என்பது உணர்வுகளின் வெளிப்பாடு. நாம் ஒவ்வொருவரும் நம்மில் நிகழும்
உணர்வுகளை பல வகைகளில் பகிர்ந்து கொள்கிறோம். அப்படி பகிரும் உணர்வுகளை
எழுத்து வடிவத்தில் சித்திரம் வரைவது தான் கவிதை. சதுரவடிவம் ஒரு
சித்திரம் தான், அழகான பெண் ஓவியம் ஒரு சித்திரம் தான். பார்ப்பவர் கண்களை
பொறுத்தே சித்திரம் அழகு பெறுகிறது. மாடர்ன் ஆர்ட்ஸ்யை பார்த்து இது என்ன
கிறுக்கலாக இருக்கிறது என்று நாம் கூறுவதில்லையா, அதை போல் தான் கவிதை,
அனுபவித்து படிப்பவர்களுக்கு தான் தன்னை வெளிப்படுத்தும்.

நமக்கு பிடிக்காத ஒன்றை, புரியாத ஒன்றை, உணர முடியாத ஒன்றை குறைத்து பேசுவது என்பது மனித இயல்பு.



சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Jul 09, 2011 10:36 am

கவிதை கண்டிப்பாக தேவை

ஆராயல் நெடுங்கொடி வாரல் ஏன மறித்து கை காட்ட

இந்த சிலப்பதிகார வரிகளே போதும் இதற்க்கு சான்றாக



[You must be registered and logged in to see this link.]
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Sat Jul 09, 2011 10:42 am

அசதியைக் கிள்ளி, அறிவைக் கிளப்பி,
அலையும் மனத்தை அடக்கி நிறுத்தி,
இன்ப துன்ப உணர்ச்சிகளை எழுப்பி,
நன்மை தீமையை நன்றாய் விளக்க
இல்லாத ஒன்றையும் இருப்பதைப் போலவே
மனக்கண் முன்னால் மலரச் செய்தே
இருக்கிற ஒன்றையும் இல்லாத தேபோல்
மனத்தை விட்டு மறையச் செய்து,
வாழ்க்கைக் குதவும் நல்ல வழிகளில்
ஊக்கம் கொள்ளும் உறுதியை ஊட்டப்
பாடு படாமல் பாடம் பண்ணவும்,
நினைவில் எளிதாய் நிற்கவும் தக்கதாய்
இணைத்த சொற்களே கவிதை என்ப்படும்.

கவிதை என்பது கற்பனை உள்ளது;
கூட்டியும் பேசும்; குறைத்தும் கூறும்;
பொய்ம்மையும் வாய்மையே போலப் பொலிவுற
அறங்களைப் புகட்டலே அதனுடை நோக்கம்.
எதுகை மோனை இலக்கணம் பார்த்தும்
பதங்களை அடுக்கிப் பாட்டெனச் செய்தும்
உள்ளதை உள்ளதே போல உரைக்கும்
கதையோ பாட்டோ கற்பனை யில்லையேல்
ஐந்தும் ஒன்றும் ஆறு என்கிற
கணக்கே யாகும்; கவிதையா காது.
கற்பனை மிகுந்த கவிதைகள் மிகுந்தது
தமிழ்மொழிக் குள்ள தனிப்பெரும் சிறப்பு!

— நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை

கவிதைக்கு சந்தம் இல்லாவிடினும் உணர்வு மட்டும் போதும். அவ்வுணர்வு கவிதையைப் படிப்பவர்களுக்கும் ஏற்படுமெனில் அதுவே அந்தக் கவிதைக்கு
கிடைத்த வெற்றி என்பது என் தாழ்மையான கருத்து.



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : [You must be registered and logged in to see this link.]
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Sat Jul 09, 2011 11:18 am

கே. பாலா wrote:கவிதை யாருடைய ஆமோதிப்பையும் எதிர் பார்த்து இருக்கவில்லைஎன்பதுதான் உண்மை! அறிவியலையும் கவிதையையும் ஒப்பிடுவதே ஒரு அறியாமை தான்! இரண்டுக்கும் ஆன வேலைகளும் , பயன்படுக்களும் வெவ்வேறு!
ஒன்றுக்கும் உதவாது என்று எப்படி சொல்வது!
உள்ளத்து உணர்ச்சிகள் வார்த்தையில் வடிக்க படும் கவிதையினால் உலகம் இன்னும் உயிரோடு இருக்கிறது என்று நினைக்கிறேன்!உள்ளத்தின் மென்மையான பகுதியை தூண்டும் கவிதை அவசியம் என்றே நினைக்கிறேன் .
நீங்கள் "நியூட்டன் விதியை சொல்லியா காதல் செய்வீர்கள்?
உங்கள் உள்ளம் தொட்ட, அழகை, உணர்வை, வாழ்வை வெளிப்படுத்த கவிதை வேண்டாமா?

அருமையிருக்கு சூப்பருங்க
மிக அருமையாகயிருக்கிறது தங்களின் விளக்கம் ..



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக