புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணுக்குள் ஒரு கள்வன்... Poll_c10கண்ணுக்குள் ஒரு கள்வன்... Poll_m10கண்ணுக்குள் ஒரு கள்வன்... Poll_c10 
30 Posts - 86%
வேல்முருகன் காசி
கண்ணுக்குள் ஒரு கள்வன்... Poll_c10கண்ணுக்குள் ஒரு கள்வன்... Poll_m10கண்ணுக்குள் ஒரு கள்வன்... Poll_c10 
2 Posts - 6%
heezulia
கண்ணுக்குள் ஒரு கள்வன்... Poll_c10கண்ணுக்குள் ஒரு கள்வன்... Poll_m10கண்ணுக்குள் ஒரு கள்வன்... Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
கண்ணுக்குள் ஒரு கள்வன்... Poll_c10கண்ணுக்குள் ஒரு கள்வன்... Poll_m10கண்ணுக்குள் ஒரு கள்வன்... Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணுக்குள் ஒரு கள்வன்...


   
   
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jun 23, 2011 3:12 pm

கண்ணுக்குள் ஒரு கள்வன் !

''என்னனு தெரியலை... கொஞ்ச நாளா தலைவலி இருந்துட்டே இருக்கு. கண்ணும் வலிக்குது. குமட்டல் வருது. ராத்திரி நேரத்துல பார்க்கற வெளிச்சத்தைச் சுத்தி ஒரு வட்டம் தெரியுது''...

''தலைவலினு டாக்டர்கிட்ட சொல்லி கண்ணாடி போட்டேன். ஆனா, தலைவலி தீர்ந்தபாடில்ல. கண்ணாடியை மாத்திப் பார்த்தேன். அதுவும் சரிப்படல. பக்கவாட்டுல இருக்கற ஒண்ணும் தெரியல. சில நேரத்தில பாக்கறதெல்லாம் மங்கலாத் தெரியுது''...


கண்ணுக்குள் ஒரு கள்வன்... Avl67


மேற்கண்ட புலம்பல்களை ஆங்காங்கே கேட்டு இருப்பீர்கள்தானே!

''இத்தகைய பிரச்னைகளுக்கு, 'க்ளாக்கோமா’ (Glaucoma)எனப்படும் 'கண்ணின் உள்நீர் அழுத்த நோய்'கூட அதற்குக் காரணமாக இருக்கலாம்'' என்று எச்சரிக்கிறார் சென்னை, சங்கர நேத்ராலயா மருத்துவமனையின் மருத்துவ சமூகவியல்துறை மேலாளர், முனைவர் அ.போ. இருங்கோவேள்.

''கண்ணில் பூ, பவர் பிரச்னைகள் எல்லாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அது என்ன கண்ணின் உள்நீர் அழுத்தம்..?'' என்ற கேள்விக்கு விளக்கமாகவே பதில் தந்தார் இருங்கோவேள்.

''க்ளாக்கோமா என்பது... கண்ணின் பார்வை நரம்பைப் பாதித்து, பார்வை இழப்பை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு ஆபத்து நிறைந்த கண் பிரச்னைகளின் தொகுப்பு. உலக அளவில், கண் பார்வை இழப்புக்கான காரணிகளில், 'க்ளாக்கோமா’ இரண்டாம் இடத்தில் இருக்கிறது. நம் கண்ணின் முன்பகுதியில் உள்ள அறையில் சுரக்கும் நீரின் அழுத்தம், சாதாரண நிலையி லிருந்து படிப்படியாக அதிகரிக்கும்போது ஏற்படும் பிரச்னை இது. கண்ணின் உள் நீர் அழுத்தமானது, பார்வை நரம்பினால் தாங்கக் கூடிய அளவை தாண்டும்போது, 'க்ளாக்கோமா’ ஏற்படுகிறது. இந்தியாவில் கிராமப் பகுதியில் 4.17 சதவிகித மக்களையும், நகரப்புறத்தில் 5.4 சதவிகித மக்களையும் இந்நோய் பாதித்திருப்பதாக தெரிவிக்கிறது சமீபத்தில் சங்கர நேத்ராலயாவில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு விவரம்'' என்ற இருங்கோவேள், இந்நோயின் குறிப்பிடத்தக்கத் தன்மையான மறைந்திருந்து தாக்கும் ஆபத்து பற்றித் தொடர்ந்தார்.

கண்ணுக்குள் ஒரு கள்வன்... Avl67a

''ஆரம்பக்கட்ட நிலையிலேயே கண்டுபிடித்து உரிய சிகிச்சையை வழங்கினால், குணம் பெறலாம். ஆனால், படிப்படியாகவே இதன் பாதிப்பு ஏற்படுவதால், தங்களுக்கு இந்நோய் இருக்கிறது என்பதே தெரி யாதவர்கள்தான் அதிகமாக இருக்கிறார்கள். அதனால் தான் மருத்துவர்கள் 'க்ளாக் கோமா’வை 'நமக்கே தெரியா மல் நம் கண்ணுக்குள் மறைந் திருந்து தாக்கும் கள்வன்’ என்கிறார்கள். ஒரு கட்டத் தில், தீராத கண் பிரச்னை களால் மருத்துவரிடம் செல்லும்போது, அவர்களுக்கு 'க்ளாக்கோமா’ முற்றிய நிலைக்கு சென்றுவிடுகிறது. இப்படி பாதிக்கப்பட்ட வர்கள் இந்தியாவில் மட்டும் 11.2 மில்லியன் பேர். முற்றிய நிலைக்கு செல்லும் 'க்ளாக் கோமா’, பார்வை இழப்பை ஏற்படுத்தும் என்பது, அதி முக்கியத் தகவல்'' என்று அதிர்ச்சி தந்து முடித்தார்.

இந்நோயின் அறிகுறிகள், இதைக் கண்டறி வதற்கான பரிசோதனை பற்றிப் பேசிய சங்கர நேத்ராலயாவின் 'க்ளாக்கோமா’ துறையின் இயக்குநரும், இந்திய க்ளாக்கோமா சங்கத்தின் தலைவருமான டாக்டர் எல். விஜயா, ''50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், மரபுக் காரணங்களால், ஏற்கெனவே 'க்ளாக்கோமா’ நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்த சொந் தங்களுக்கும், சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கும் மற்றும் அதிக கிட்டப்பார்வை உள்ளவர்களுக்கும் 'க்ளாக்கோமா’ பாதிப்பு ஏற்படலாம்.

தலைவலி, கண்வலி, சிவந்த கண்கள், குமட்டல், பக்கவாட்டுப் பார்வை பாதிப்பு, படிப்படியான பார்வை இழப்பு போன்ற கண் பிரச்னைகள், 'க்ளாக்கோமா’வுக்கான அறிகுறிகள். பொதுவாக நாற்பது வயதுக்கு மேற் பட்டவர்கள் முழுமையான கண் பரிசோதனை செய்துகொள்வது நல்லது. அடிக்கடி கண் பிரச்னைகளால் அவதிப்படுபவர்கள், கண்ணின் உட்பகுதிகளை முழுமை யாக அறியும் சில சிறப்புப் பரிசோதனையின் மூலம், 'க்ளாக்கோமா’ பாதிப்பை அறியலாம்'' என்ற டாக்டர்,

''ஒருவேளை க்ளாக்கோமா பாதிப்பு உறுதி செய்யப்பட்டால், அது ஆரம்பக் கட்டத்தில் இருக்கும்போது அதிர்ச்சி அடையத் தேவை யில்லை. சொல்லப் போனால், தனக்கு இந்நோய் இருப்பதையே அறியாமல் கண்ணுக்குள் நோய் வளர்த்துக் கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கானோ ரோடு ஒப்பிடும்போது, நோயை அறிந்து கொண்டவர்கள் அதிர்ஷ்டசாலிகளே. நோயின் படிநிலையைப் பொறுத்து சொட்டு மருந்தில் இருந்து அறுவை சிகிச்சை வரை இதற்கான சிகிச்சைகள் விரிகின்றன. எனவே, கண் மருத்துவருடன் இணைந்து செயலாற்றுவதன் மூலம் பார்வையை பாதுகாக்க முடியும்'' என்று நம்பிக்கை அளித்தார் விஜயா!

உங்கள் கண்ணுக்குள் இருக்கிறானா கள்வன்?!

நன்றி விகடன்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கண்ணுக்குள் ஒரு கள்வன்... 47
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jun 23, 2011 3:20 pm

எனக்கு இல்லக்கா



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக