ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேன்மொழிக்கு வந்த சோதனை! மதுரை மீட்புப் போராட்டம்

2 posters

Go down

தேன்மொழிக்கு வந்த சோதனை!  மதுரை மீட்புப் போராட்டம் Empty தேன்மொழிக்கு வந்த சோதனை! மதுரை மீட்புப் போராட்டம்

Post by மஞ்சுபாஷிணி Thu Jun 23, 2011 1:27 pm

தேன்மொழிக்கு வந்த சோதனை!

மதுரை மீட்புப் போராட்டம்


மதுரை மாநகராட்சியில் ஊழல், முறைகேடு புகார்கள் என எத்தனையோ வரிசை கட்டி நிற்க, 320 சதுரஅடி பிரச்னையால், லஞ்ச வழக்கில் சிக்கிக்கொண்டு முழிக் கிறார் மேயர் தேன்மொழி!

மதுரை மதிச்சியம் வடக்குத் தெருவில் மாநகராட்சிக்குச் சொந்தமான சமுதாயக்கூடம் உள்ளது. அதன் அருகே இருந்த காலிமனையை, அப்பகுதியைச் சேர்ந்த தி.மு.க. இலக்கிய அணி துணைச் செயலாளர் சுந்தர்ராஜன் ஆக்கிரமித்து வீடு கட்ட, மாநகராட்சிக்குப் புகார் போனது. அதை யாரும் கண்டுகொள்ளாமல் போகவே, மேயர் மீது வழக்குப் போட்டார் வக்கீல் ஜெயராம்!

அவரைச் சந்தித்தோம். 'மாநகராட்சி இடத்தை ஒருவர் ஆக்கிரமிப்பு செய்தால் மேயரோ, கமிஷனரோ நேரடியாக நடவடிக்கை எடுப்பதோடு, சம்பந்தப்பட்ட நபர் மீது போலீஸில் புகார் கொடுக்க வேண்டும். ஆனால், இங்கே காம்பவுண்ட் சுவரைக்கூட இடித்துவிட்டு, மாநகராட்சி நிலத்தை ஆக்கிரமித்து இரண்டு மாடி கட்டடமே கட்டிவிட்டார்கள். எட்டு மாதங்களாகத் தொடர்ந்து புகார் கொடுத்தும் பதில் இல்லை. காரணம், சுந்தர்ராஜன் தி.மு.க-காரர் மட்டும் அல்ல, மேயரின் கணவர் கோபிநாதனுக்கு நெருக்கமான கான்ட்ராக்டர் மாணிக்கம் பிள்ளைக்கு வேண்டியவர். அதனால், பல லட்சம் மதிப்புள்ள அந்த நிலத்தையே அவருக்குப் பட்டா போட்டுக் கொடுக்க ஆயத்தமாகிவிட்டனர்.
தேன்மொழிக்கு வந்த சோதனை!  மதுரை மீட்புப் போராட்டம் So27b
ஆகவே, லஞ்ச ஒழிப்புத் துறை துணைக் கண்காணிப்பாளருக்குப் புகார் அனுப்பினேன். அதற்கும் பதில் இல்லை. உடனே, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குப் போட்டேன். என் புகாரின்படி லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும், இல்லை என்றால் உயர் நீதிமன்றத்தில் மனுதாரர் தனிநபர் வழக்குப் போடலாம் என்று 24.2.11 அன்று நீதிமன்றம் உத்தரவு இட்டது.

சுந்தர்ராஜனிடம் லஞ்சம் வாங்கியவர்களில் ஒருவரான சர்வேயர் குருசாமி, 'நீ எந்தக் கோர்ட்டுக்கு போனாலும், கடைசியில் ரிக்கார்டுக்கு எங்ககிட்டதான வரணும்?’ என்று மமதையாக சொன்னார். சொன்னதுபோலவே, அந்த இடத்தை ராமமூர்த்தி என்பவரிடம் இருந்து, சுந்தர்ராஜனின் மனைவி ரங்கம்மாள் பெயருக்கு கிரையம் பண்ணியதாக போலி ஆவணமும் ரெடி பண்ணிட்டாங்க.

உயர் நீதிமன்ற உத்தரவு நகலை லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநருக்கு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் தொடங்கவில்லை. அதனால் நீதிமன்றம் கொடுத்த 2-வது வாய்ப்பின்படி, மதுரை தலைமை நீதித் துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டேன். அதை விசாரித்த நீதிபதி, மேயர் தேன்மொழி, கான்ட்ராக்டர் மாணிக்கம்பிள்ளை, ஆணையாளர் செபாஸ்டின், நகரமைப்பு அதிகாரி முருகேசன், சர்வேயர் குருசாமி, தி.மு.க. பிரமுகர் சுந்தர்ராஜன், அவரது மனைவி ரங்கம்மாள் உள்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு இட்டது!' என்றார்.
தேன்மொழிக்கு வந்த சோதனை!  மதுரை மீட்புப் போராட்டம் So27a
மேயர் சார்பில் பேசிய அவரது கணவர் கோபிநாதன், 'இதுவரை இந்த விஷயம் மேயரின் கவனத்துக்கு வரவே இல்லை. நேற்றுதான் நகரமைப்பு அதிகாரியிடம் கேட்டேன். சுந்தர் ராஜன், மத்திய அரசின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், 1 லட்சம் நிதி உதவியுடன் கட்டிய வீடு அது. வீட்டின் மொத்த பரப்பே 320 சதுரடி(!)தான். தாசில்தார், நகராட்சி இன்ஜினியர் உள்ளிட்ட அதிகாரிகள்... 'அந்த இடத்துக்குப் பட்டா, பத்திரம் சரியாக இருக்கிறதா?’ என்று ஆய்வு செய்த பின்னரே வீடு கட்ட அனுமதி கொடுத்தார்கள். வீடு கட்டும்போது மாநகராட்சி இடத்தில் இரண்டு அடி இழுத்துக்கட்டிவிட்டதாக புகார் வந்ததால், ஆக்கிரமிப்பு செய்த இடத்தை மட்டும் இடித்தனர். மொத்த வீட்டையும் இடிக்க வேண்டும் என்று வீம்பு செய்த ஜெயராம், நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு உள்ளார். இந்தப் பிரச்னைபற்றி மேயரைச் சந்தித்து இதுவரை ஒரு மனுகூட அவர் கொடுத்தது இல்லை. மண்டலங்கள்தோறும் நடத்தப்படும் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திலும் அவர் மனு கொடுக்கவில்லை. பிறகு ஏன் சம்பந்தமே இல்லாமல் மேயரை வழக்கில் சேர்த்தார் என்றே தெரியவில்லை. அவர் அ.தி.மு.க. வக்கீல் என்பதால் திட்டம் இட்டு அசிங்கப்படுத்துகிறார்!' என்றார்.
தேன்மொழிக்கு வந்த சோதனை!  மதுரை மீட்புப் போராட்டம் So27
விஜிலன்ஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, 'நீதிமன்ற உத்தரவுப்படி மேயர் உள்ளிட்ட 13 பேர் மீது 3 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து உள்ளோம். அவர்கள் மீதான குற்றம் நிரூபணமானால், குறைந்தது ஓர் ஆண்டு முதல் அதிகபட்சம் 7 ஆண்டுவரை சிறைத் தண்டனை கிடைக்கும்!'' என்றார்.

இதற்கிடையே, மேயர் தேன்மொழி முன்ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து உள்ளார். இன்னும் என்னென்ன புகார்கள் கிளம்பப் போகிறதோ?

‍நன்றி விகடன்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தேன்மொழிக்கு வந்த சோதனை!  மதுரை மீட்புப் போராட்டம் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

தேன்மொழிக்கு வந்த சோதனை!  மதுரை மீட்புப் போராட்டம் Empty Re: தேன்மொழிக்கு வந்த சோதனை! மதுரை மீட்புப் போராட்டம்

Post by dsudhanandan Thu Jun 23, 2011 1:36 pm

"மொழி" மற்றும் "நிதி" -- ன்னாலே இப்ப பிரச்சினைதானோ...

கனிமொழி, தேன்மொழி, ...????

நேற்று தினமலர்... இன்று விகடன்... நான் இந்த வாரம் விடகனும் வாங்கலீங்கோ ஜாலி


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

தேன்மொழிக்கு வந்த சோதனை!  மதுரை மீட்புப் போராட்டம் Empty Re: தேன்மொழிக்கு வந்த சோதனை! மதுரை மீட்புப் போராட்டம்

Post by மஞ்சுபாஷிணி Thu Jun 23, 2011 2:47 pm

ஒழுங்கா என் அக்கவுண்ட் நம்பர் தரேன் படிச்சதுக்கு பத்து தினார் அனுப்புங்க என் அக்கவுண்ட்ல சிப்பு வருது


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தேன்மொழிக்கு வந்த சோதனை!  மதுரை மீட்புப் போராட்டம் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

தேன்மொழிக்கு வந்த சோதனை!  மதுரை மீட்புப் போராட்டம் Empty Re: தேன்மொழிக்கு வந்த சோதனை! மதுரை மீட்புப் போராட்டம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum