Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீச்சலுக்கு வந்த மாணவிகள் கர்ப்பமா?
+2
சிவா
மஞ்சுபாஷிணி
6 posters
Page 1 of 1
நீச்சலுக்கு வந்த மாணவிகள் கர்ப்பமா?
நீச்சலுக்கு வந்த மாணவிகள் கர்ப்பமா?
சேலம் பரபரப்பு
''பள்ளி மாணவிகள் இருவர் கர்ப்பம் அடைந்து இருக்கிறார்கள்...'' என்கிற பதறவைக்கும் செய்திதான் சேலத்தை இப்போது பரபரப்பு அடையச் செய்துள்ளது!
சேலம், காந்தி ஸ்டேடியம் அருகே உள்ளது, அரசுக்கு சொந்தமான நீச்சல் குளம். இந்தக் குளத்துக்கு நீச்சல் பயிற்சிக்கு வந்த மாணவிகளில் இருவர்தான் கர்ப்பம் அடைந்து விட்டதாகவும், அதற்கு நீச்சல் பயிற்சியாளர் ஞானசேகரன்தான் காரணம் என்றும் பரவி இருந்த தகவலை அடுத்து தீவிர விசாரணையில் இறங்கினோம்.
சிலரிடம் பேசியபோது,
''நீச்சல் பயிற்சிக்காக பள்ளி மாணவிகள் ஏராளமானோர் நீச்சல் குளத்துக்கு வருகிறார் கள். கடந்த இரண்டு மாதத்துக்கு முன்பு தென் மண்டல அளவிலான நீச்சல் போட்டி திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. அந்தப் போட்டிக்காக பயிற்சியாளர் ஞானசேகரன் 15 மாணவிகளை சேலத்துல இருந்து அழைச்சிட்டுப் போனார். சில மாணவிகள் பெற்றோருடனும், சிலர் தனியாகவும் திருவனந்தபுரம் போயிருக்காங்க. அங்கேதான் ஏடாகூடமா நடந்திருக்கணும்.
ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவிகள் இரண்டு பேர், இரண்டு வாரங்களுக்கு முன்பு தொடர்ந்து வாந்தி எடுத்து இருக்காங்க. அந்த மாணவிகளோட பெற்றோர், அவர்களை டாக்டர்கிட்ட அழைச்சிட்டுப் போய் காட்டியபோதுதான் இரண்டு பேருமே கர்ப்பமாக இருப்பது தெரிஞ்சிருக்கு. அந்த மாணவிகளோட பெற்றோர், ரொம்பவும் மனசு உடைஞ்சி போயிட்டாங்க. டாக்டர் அவர் களை சமாதானப்படுத்தி, மாணவி களிடம் விசாரித்தபோது, அந்த நீச்சல் பயிற்சியாளர் பற்றி சொல்லி இருக்காங்க.
டாக்டர்களின் ஆலோசனைப் படி, உடனடியாக மாணவிகளுக்கு கரு கலைப்பு செய்வதற்கான மருந்துகளைக் கொடுத்துட்டாங்க. இந்த விஷயத்தை வெளியில் சொன்னா குழந்தைகளோட எதிர்காலமே பாழாகிவிடும் என்பதால்தான் பெற்றோர்கள் அமைதியாக இருந்துட் டாங்க. ஆனாலும் தங்களோட பெயரைக் குறிப்பிடாம, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்குப் புகார் அனுப்பி இருக்காங்க. அதுக்குப் பிறகுதான் இந்த விஷயம் வெளியே பரவிடுச்சு!'' என்றார் முகம் காட்ட விரும்பாத விளையாட்டு ஆணையத்தில் பணிபுரியும் அலுவலர் ஒருவர்.
சேலம் மாவட்ட விளையாட்டு அலுவலர் பிரதாப்குமாரிடம் இந்த பரபரப்புப் புகார் பற்றி கேட்டபோது, ''மாணவிகளின் பெற்றோர் யாரும் எங்களிடம் புகார் தெரிவிக்கவில்லை. எனவே, அது தொடர்பான விவரங்கள் எதுவுமே எனக்குத் தெரியாது...'' என்று சொன்னார்.
இந்தச் சூழ்நிலையில், கடந்த 17-ம் தேதி நீச்சல் பயிற்சி பெறும் குழந்தைகள் சிலரின் பெற்றோர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர். ''நீச்சல் குளத்தில் பயிற்சி பெற்ற மாணவிகள் இருவர் கர்ப்பம் என தவறான தகவல் பரப்பி இருக்காங்க. எங்க குழந்தைகளும் நீச்சல் பயிற்சிக்கு போயிட்டு இருப்ப தால், எங்களுக்கு மன உளைச்சலாக இருக்கிறது. மாணவிகள் கர்ப்பம் என்பதே தவறான தகவல். அப்படி இருந்தால், யார் என்று வெளிப்படையா சொல்ல வேண்டியதுதானே? மாவட்ட விளையாட்டு அலுவ லருக்கும், நீச்சல் பயிற்சியாளருக்கும் ஏதோ தனிப்பட்ட பிரச்னை இருக்கிறது. அந்த விரோதம் காரணமாகத்தான் இப்படிப் புரளிகளைக் கிளப்பி விடுறாங்களோ என்று எங்களுக்கு சந்தேகமாக இருக்குது. எனவே, மாவட்ட ஆட்சியர் இந்த விஷயத்தை உடனடியாக விசாரித்து, உரிய நடவடிக்கை எடுப்பது அவசரமான விஷயம்!'' என்று மனு கொடுத்து இருக்கிறார்கள்.
கலெக்டர் மகரபூஷணமோ, ''மாணவிகள் கர்ப்பம் அடைந்து விட்டதாக எனக்கு எந்த பெற்றோரும் புகார் செய்யவில்லையே...'' என்று நழுவினார்.
பயிற்சி மையத்தில் இருந்த சிலரிடம் பேசினோம். ''ஞானசேகரன் இங்கே பயிற்சி யாளராக வந்த பிறகுதான் பல போட்டிகள்ல குழந்தைகள் ஜெயிச்சிருக்காங்க. ஞானசேகரனுக்கு பல தரப்புல இருந்தும் பாராட்டுக்கள் வந்துட்டே இருக்கும். மாவட்ட விளையாட்டு அலுவல ரால இதை ஜீரணிக்க முடியல. தன்னையும் தாண்டி ஞானசேகரனுக்கு பாராட்டுக்கள் போவதை தாங்கிக்க முடியாம அவர் மீது பழி போடத்தான் இப்படி ஒரு தகவலை வெளியில பரப்பி விடுறாரு. இது எல்லாத்துக்குமே அவருதான் காரணம். அவரை விசாரிச்சால் உண்மை வெளியில வரும். இந்த விவகாரம் துறை ரீதியிலான விசாரனையில இருக்கிறதால் ஞானசேகரன் உங்களிடம் நேரடியாக பேச முடியாது'' என்று சொல்கிறார்கள்.
தமிழ்நாடு மக்கள் உரிமை இயக்கம், இப்போது இந்த விவகாரத்தைக் கையில் எடுத்து இருக்கிறது. அதன் மாநிலத் தலைவரான பூமொழியிடம் பேசினோம். ''நீச்சல் குளத்தில் குற்ற சம்பவம் நடந்துள்ளது என்பதுதான் எங்களு டைய விசாரணையில் தெளிவாகத் தெரிகிறது. விஷயம் வெளியில் தெரிந்தால், மாவட்ட நிர்வாகத்துக்குக் கெட்ட பெயர் வந்துவிடும் என்ற காரணத்துக்காகவே கலெக்டர் உட்பட ஒட்டுமொத்த அதிகாரிகளும் சேர்ந்து மூடி மறைக்கிறார்கள். இந்த விஷயத்தை பெற்றோர் யாரும் வெளிப்படையாக வந்து சொல்ல மாட் டார்கள் என்பதை சாதகமாக எடுத்துக் கொள்கிறார்கள். தமிழக முதல்வர் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு உண்மையை வெளியே கொண்டுவர உத்தரவிட வேண்டும். இல்லை என்றால் இது தொடர்கதையாகி மேலும் பல மாணவிகள் பாதிக்கப்படலாம். இதுதவிர, சேலம் மாவட்ட விளையாட்டுத் துறையில் ஏகத்துக்கும் ஊழல்கள் நடக்கிறது. அதையும் விசாரிக்க உடனே உத்தரவிடணும்!'' என்று கோரிக்கை வைத்தார்.
நெருப்பில்லாமல் புகையாது என்பதால், இந்த விஷயத்தில் உறங்கும் உண்மைகளை வெளியில் கொண்டுவர தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சேலம் மக்களின் எதிர்பார்ப்பு!
நன்றி விகடன்
சேலம் பரபரப்பு
''பள்ளி மாணவிகள் இருவர் கர்ப்பம் அடைந்து இருக்கிறார்கள்...'' என்கிற பதறவைக்கும் செய்திதான் சேலத்தை இப்போது பரபரப்பு அடையச் செய்துள்ளது!
சேலம், காந்தி ஸ்டேடியம் அருகே உள்ளது, அரசுக்கு சொந்தமான நீச்சல் குளம். இந்தக் குளத்துக்கு நீச்சல் பயிற்சிக்கு வந்த மாணவிகளில் இருவர்தான் கர்ப்பம் அடைந்து விட்டதாகவும், அதற்கு நீச்சல் பயிற்சியாளர் ஞானசேகரன்தான் காரணம் என்றும் பரவி இருந்த தகவலை அடுத்து தீவிர விசாரணையில் இறங்கினோம்.
சிலரிடம் பேசியபோது,
''நீச்சல் பயிற்சிக்காக பள்ளி மாணவிகள் ஏராளமானோர் நீச்சல் குளத்துக்கு வருகிறார் கள். கடந்த இரண்டு மாதத்துக்கு முன்பு தென் மண்டல அளவிலான நீச்சல் போட்டி திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. அந்தப் போட்டிக்காக பயிற்சியாளர் ஞானசேகரன் 15 மாணவிகளை சேலத்துல இருந்து அழைச்சிட்டுப் போனார். சில மாணவிகள் பெற்றோருடனும், சிலர் தனியாகவும் திருவனந்தபுரம் போயிருக்காங்க. அங்கேதான் ஏடாகூடமா நடந்திருக்கணும்.
ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவிகள் இரண்டு பேர், இரண்டு வாரங்களுக்கு முன்பு தொடர்ந்து வாந்தி எடுத்து இருக்காங்க. அந்த மாணவிகளோட பெற்றோர், அவர்களை டாக்டர்கிட்ட அழைச்சிட்டுப் போய் காட்டியபோதுதான் இரண்டு பேருமே கர்ப்பமாக இருப்பது தெரிஞ்சிருக்கு. அந்த மாணவிகளோட பெற்றோர், ரொம்பவும் மனசு உடைஞ்சி போயிட்டாங்க. டாக்டர் அவர் களை சமாதானப்படுத்தி, மாணவி களிடம் விசாரித்தபோது, அந்த நீச்சல் பயிற்சியாளர் பற்றி சொல்லி இருக்காங்க.
டாக்டர்களின் ஆலோசனைப் படி, உடனடியாக மாணவிகளுக்கு கரு கலைப்பு செய்வதற்கான மருந்துகளைக் கொடுத்துட்டாங்க. இந்த விஷயத்தை வெளியில் சொன்னா குழந்தைகளோட எதிர்காலமே பாழாகிவிடும் என்பதால்தான் பெற்றோர்கள் அமைதியாக இருந்துட் டாங்க. ஆனாலும் தங்களோட பெயரைக் குறிப்பிடாம, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்குப் புகார் அனுப்பி இருக்காங்க. அதுக்குப் பிறகுதான் இந்த விஷயம் வெளியே பரவிடுச்சு!'' என்றார் முகம் காட்ட விரும்பாத விளையாட்டு ஆணையத்தில் பணிபுரியும் அலுவலர் ஒருவர்.
சேலம் மாவட்ட விளையாட்டு அலுவலர் பிரதாப்குமாரிடம் இந்த பரபரப்புப் புகார் பற்றி கேட்டபோது, ''மாணவிகளின் பெற்றோர் யாரும் எங்களிடம் புகார் தெரிவிக்கவில்லை. எனவே, அது தொடர்பான விவரங்கள் எதுவுமே எனக்குத் தெரியாது...'' என்று சொன்னார்.
இந்தச் சூழ்நிலையில், கடந்த 17-ம் தேதி நீச்சல் பயிற்சி பெறும் குழந்தைகள் சிலரின் பெற்றோர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர். ''நீச்சல் குளத்தில் பயிற்சி பெற்ற மாணவிகள் இருவர் கர்ப்பம் என தவறான தகவல் பரப்பி இருக்காங்க. எங்க குழந்தைகளும் நீச்சல் பயிற்சிக்கு போயிட்டு இருப்ப தால், எங்களுக்கு மன உளைச்சலாக இருக்கிறது. மாணவிகள் கர்ப்பம் என்பதே தவறான தகவல். அப்படி இருந்தால், யார் என்று வெளிப்படையா சொல்ல வேண்டியதுதானே? மாவட்ட விளையாட்டு அலுவ லருக்கும், நீச்சல் பயிற்சியாளருக்கும் ஏதோ தனிப்பட்ட பிரச்னை இருக்கிறது. அந்த விரோதம் காரணமாகத்தான் இப்படிப் புரளிகளைக் கிளப்பி விடுறாங்களோ என்று எங்களுக்கு சந்தேகமாக இருக்குது. எனவே, மாவட்ட ஆட்சியர் இந்த விஷயத்தை உடனடியாக விசாரித்து, உரிய நடவடிக்கை எடுப்பது அவசரமான விஷயம்!'' என்று மனு கொடுத்து இருக்கிறார்கள்.
கலெக்டர் மகரபூஷணமோ, ''மாணவிகள் கர்ப்பம் அடைந்து விட்டதாக எனக்கு எந்த பெற்றோரும் புகார் செய்யவில்லையே...'' என்று நழுவினார்.
பயிற்சி மையத்தில் இருந்த சிலரிடம் பேசினோம். ''ஞானசேகரன் இங்கே பயிற்சி யாளராக வந்த பிறகுதான் பல போட்டிகள்ல குழந்தைகள் ஜெயிச்சிருக்காங்க. ஞானசேகரனுக்கு பல தரப்புல இருந்தும் பாராட்டுக்கள் வந்துட்டே இருக்கும். மாவட்ட விளையாட்டு அலுவல ரால இதை ஜீரணிக்க முடியல. தன்னையும் தாண்டி ஞானசேகரனுக்கு பாராட்டுக்கள் போவதை தாங்கிக்க முடியாம அவர் மீது பழி போடத்தான் இப்படி ஒரு தகவலை வெளியில பரப்பி விடுறாரு. இது எல்லாத்துக்குமே அவருதான் காரணம். அவரை விசாரிச்சால் உண்மை வெளியில வரும். இந்த விவகாரம் துறை ரீதியிலான விசாரனையில இருக்கிறதால் ஞானசேகரன் உங்களிடம் நேரடியாக பேச முடியாது'' என்று சொல்கிறார்கள்.
தமிழ்நாடு மக்கள் உரிமை இயக்கம், இப்போது இந்த விவகாரத்தைக் கையில் எடுத்து இருக்கிறது. அதன் மாநிலத் தலைவரான பூமொழியிடம் பேசினோம். ''நீச்சல் குளத்தில் குற்ற சம்பவம் நடந்துள்ளது என்பதுதான் எங்களு டைய விசாரணையில் தெளிவாகத் தெரிகிறது. விஷயம் வெளியில் தெரிந்தால், மாவட்ட நிர்வாகத்துக்குக் கெட்ட பெயர் வந்துவிடும் என்ற காரணத்துக்காகவே கலெக்டர் உட்பட ஒட்டுமொத்த அதிகாரிகளும் சேர்ந்து மூடி மறைக்கிறார்கள். இந்த விஷயத்தை பெற்றோர் யாரும் வெளிப்படையாக வந்து சொல்ல மாட் டார்கள் என்பதை சாதகமாக எடுத்துக் கொள்கிறார்கள். தமிழக முதல்வர் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு உண்மையை வெளியே கொண்டுவர உத்தரவிட வேண்டும். இல்லை என்றால் இது தொடர்கதையாகி மேலும் பல மாணவிகள் பாதிக்கப்படலாம். இதுதவிர, சேலம் மாவட்ட விளையாட்டுத் துறையில் ஏகத்துக்கும் ஊழல்கள் நடக்கிறது. அதையும் விசாரிக்க உடனே உத்தரவிடணும்!'' என்று கோரிக்கை வைத்தார்.
நெருப்பில்லாமல் புகையாது என்பதால், இந்த விஷயத்தில் உறங்கும் உண்மைகளை வெளியில் கொண்டுவர தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சேலம் மக்களின் எதிர்பார்ப்பு!
நன்றி விகடன்
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: நீச்சலுக்கு வந்த மாணவிகள் கர்ப்பமா?
நல்ல வேளை இருவர் மட்டுமே வாந்தியெடுத்துள்ளார்கள். மற்றவர்கள் தப்பிவிட்டார்கள் போலும்! இதில் ஞான சேகரனை மட்டும் குறை சொல்லி எந்தப் பலனும் இல்லை! அந்த மாணவிகள் மீதும் தவறுதானே!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நீச்சலுக்கு வந்த மாணவிகள் கர்ப்பமா?
சிவா wrote:நல்ல வேளை இருவர் மட்டுமே வாந்தியெடுத்துள்ளார்கள். மற்றவர்கள் தப்பிவிட்டார்கள் போலும்! இதில் ஞான சேகரனை மட்டும் குறை சொல்லி எந்தப் பலனும் இல்லை! அந்த மாணவிகள் மீதும் தவறுதானே!
ஆம் தல நான் மட்டும் வாத்தியாராக இருந்திருந்தால் இதெல்லாம் நடந்திருக்காது
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: நீச்சலுக்கு வந்த மாணவிகள் கர்ப்பமா?
கொடுமையின் உச்சம் என்ன சொல்வது இப்படி ஒரு நீச்சல் கத்துக்கணுமா பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் பாதுகாப்பில் கவனம் தவறும்போதும் இவ்வாறான தவறுகள் இடம்பெறுகிறது
டினேஜ் வயதுடையவர்களுக்கு இயல்பாகவே ஈர்ப்பு இருப்பது உண்மை இந்த வயதையுடையவர்கள் மீது மிகக்கவனமாக பாதுகாவலர்கள்தான் இருக்க வேண்டும்
பகிர்வுக்கு நன்றி
டினேஜ் வயதுடையவர்களுக்கு இயல்பாகவே ஈர்ப்பு இருப்பது உண்மை இந்த வயதையுடையவர்கள் மீது மிகக்கவனமாக பாதுகாவலர்கள்தான் இருக்க வேண்டும்
பகிர்வுக்கு நன்றி
நேசமுடன் ஹாசிம்
Re: நீச்சலுக்கு வந்த மாணவிகள் கர்ப்பமா?
SK wrote:சிவா wrote:நல்ல வேளை இருவர் மட்டுமே வாந்தியெடுத்துள்ளார்கள். மற்றவர்கள் தப்பிவிட்டார்கள் போலும்! இதில் ஞான சேகரனை மட்டும் குறை சொல்லி எந்தப் பலனும் இல்லை! அந்த மாணவிகள் மீதும் தவறுதானே!
ஆம் தல நான் மட்டும் வாத்தியாராக இருந்திருந்தால் இதெல்லாம் நடந்திருக்காது
எது வாந்தி எடுத்ததா ???
நேசமுடன் ஹாசிம்
Re: நீச்சலுக்கு வந்த மாணவிகள் கர்ப்பமா?
சிவா wrote:நல்ல வேளை இருவர் மட்டுமே வாந்தியெடுத்துள்ளார்கள். மற்றவர்கள் தப்பிவிட்டார்கள் போலும்! இதில் ஞான சேகரனை மட்டும் குறை சொல்லி எந்தப் பலனும் இல்லை! அந்த மாணவிகள் மீதும் தவறுதானே!
இல்ல பாஸ்... ஸ்கூல் மாஸ்டர்ஸ்,P.T டிரைனர் இது போன்று பள்ளி மாணவிகளை
தேர்வு மதிப்பெண் மற்றும் மாநில,தேசிய அளவிலான வாய்ப்பு ஆகிய காரணிகளை வைத்து மிரட்டியோ அல்லது ஏமாற்றியோ சீர்ரழித்து விடுகிறார்கள்...
Re: நீச்சலுக்கு வந்த மாணவிகள் கர்ப்பமா?
ஹாசிம் wrote:கொடுமையின் உச்சம் என்ன சொல்வது இப்படி ஒரு நீச்சல் கத்துக்கணுமா பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் பாதுகாப்பில் கவனம் தவறும்போதும் இவ்வாறான தவறுகள் இடம்பெறுகிறது
டினேஜ் வயதுடையவர்களுக்கு இயல்பாகவே ஈர்ப்பு இருப்பது உண்மை இந்த வயதையுடையவர்கள் மீது மிகக்கவனமாக பாதுகாவலர்கள்தான் இருக்க வேண்டும்
பகிர்வுக்கு நன்றி
நீங்க சொன்னா சரியா இருக்கும்
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Similar topics
» லுங்கி கட்டிக்கொண்டு கல்லூரிக்கு வந்த மாணவிகள்
» மணப்பெண் அலங்காரத்துடன் 3 மாணவிகள் துறவறம்:
» சாகச விளையாட்டால் வந்த விபரீதம்: திருமண நாளை கொண்டாட வந்த இளம்பெண் கணவர் முன் பலி
» கடத்தப்பட்ட மாணவிகள் காயங்களுடன் கண்டுபிடிப்பு
» பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு, 11 மாணவிகள் பலி.
» மணப்பெண் அலங்காரத்துடன் 3 மாணவிகள் துறவறம்:
» சாகச விளையாட்டால் வந்த விபரீதம்: திருமண நாளை கொண்டாட வந்த இளம்பெண் கணவர் முன் பலி
» கடத்தப்பட்ட மாணவிகள் காயங்களுடன் கண்டுபிடிப்பு
» பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு, 11 மாணவிகள் பலி.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|