புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்பிகாவுக்கு எதிராக கொலை மருட்டல், குறுஞ்செய்தி மூலம் பரவிக் கொண்டிருக்கிறது  Poll_c10அம்பிகாவுக்கு எதிராக கொலை மருட்டல், குறுஞ்செய்தி மூலம் பரவிக் கொண்டிருக்கிறது  Poll_m10அம்பிகாவுக்கு எதிராக கொலை மருட்டல், குறுஞ்செய்தி மூலம் பரவிக் கொண்டிருக்கிறது  Poll_c10 
284 Posts - 45%
heezulia
அம்பிகாவுக்கு எதிராக கொலை மருட்டல், குறுஞ்செய்தி மூலம் பரவிக் கொண்டிருக்கிறது  Poll_c10அம்பிகாவுக்கு எதிராக கொலை மருட்டல், குறுஞ்செய்தி மூலம் பரவிக் கொண்டிருக்கிறது  Poll_m10அம்பிகாவுக்கு எதிராக கொலை மருட்டல், குறுஞ்செய்தி மூலம் பரவிக் கொண்டிருக்கிறது  Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
அம்பிகாவுக்கு எதிராக கொலை மருட்டல், குறுஞ்செய்தி மூலம் பரவிக் கொண்டிருக்கிறது  Poll_c10அம்பிகாவுக்கு எதிராக கொலை மருட்டல், குறுஞ்செய்தி மூலம் பரவிக் கொண்டிருக்கிறது  Poll_m10அம்பிகாவுக்கு எதிராக கொலை மருட்டல், குறுஞ்செய்தி மூலம் பரவிக் கொண்டிருக்கிறது  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
அம்பிகாவுக்கு எதிராக கொலை மருட்டல், குறுஞ்செய்தி மூலம் பரவிக் கொண்டிருக்கிறது  Poll_c10அம்பிகாவுக்கு எதிராக கொலை மருட்டல், குறுஞ்செய்தி மூலம் பரவிக் கொண்டிருக்கிறது  Poll_m10அம்பிகாவுக்கு எதிராக கொலை மருட்டல், குறுஞ்செய்தி மூலம் பரவிக் கொண்டிருக்கிறது  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அம்பிகாவுக்கு எதிராக கொலை மருட்டல், குறுஞ்செய்தி மூலம் பரவிக் கொண்டிருக்கிறது  Poll_c10அம்பிகாவுக்கு எதிராக கொலை மருட்டல், குறுஞ்செய்தி மூலம் பரவிக் கொண்டிருக்கிறது  Poll_m10அம்பிகாவுக்கு எதிராக கொலை மருட்டல், குறுஞ்செய்தி மூலம் பரவிக் கொண்டிருக்கிறது  Poll_c10 
19 Posts - 3%
prajai
அம்பிகாவுக்கு எதிராக கொலை மருட்டல், குறுஞ்செய்தி மூலம் பரவிக் கொண்டிருக்கிறது  Poll_c10அம்பிகாவுக்கு எதிராக கொலை மருட்டல், குறுஞ்செய்தி மூலம் பரவிக் கொண்டிருக்கிறது  Poll_m10அம்பிகாவுக்கு எதிராக கொலை மருட்டல், குறுஞ்செய்தி மூலம் பரவிக் கொண்டிருக்கிறது  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அம்பிகாவுக்கு எதிராக கொலை மருட்டல், குறுஞ்செய்தி மூலம் பரவிக் கொண்டிருக்கிறது  Poll_c10அம்பிகாவுக்கு எதிராக கொலை மருட்டல், குறுஞ்செய்தி மூலம் பரவிக் கொண்டிருக்கிறது  Poll_m10அம்பிகாவுக்கு எதிராக கொலை மருட்டல், குறுஞ்செய்தி மூலம் பரவிக் கொண்டிருக்கிறது  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
அம்பிகாவுக்கு எதிராக கொலை மருட்டல், குறுஞ்செய்தி மூலம் பரவிக் கொண்டிருக்கிறது  Poll_c10அம்பிகாவுக்கு எதிராக கொலை மருட்டல், குறுஞ்செய்தி மூலம் பரவிக் கொண்டிருக்கிறது  Poll_m10அம்பிகாவுக்கு எதிராக கொலை மருட்டல், குறுஞ்செய்தி மூலம் பரவிக் கொண்டிருக்கிறது  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
அம்பிகாவுக்கு எதிராக கொலை மருட்டல், குறுஞ்செய்தி மூலம் பரவிக் கொண்டிருக்கிறது  Poll_c10அம்பிகாவுக்கு எதிராக கொலை மருட்டல், குறுஞ்செய்தி மூலம் பரவிக் கொண்டிருக்கிறது  Poll_m10அம்பிகாவுக்கு எதிராக கொலை மருட்டல், குறுஞ்செய்தி மூலம் பரவிக் கொண்டிருக்கிறது  Poll_c10 
7 Posts - 1%
mruthun
அம்பிகாவுக்கு எதிராக கொலை மருட்டல், குறுஞ்செய்தி மூலம் பரவிக் கொண்டிருக்கிறது  Poll_c10அம்பிகாவுக்கு எதிராக கொலை மருட்டல், குறுஞ்செய்தி மூலம் பரவிக் கொண்டிருக்கிறது  Poll_m10அம்பிகாவுக்கு எதிராக கொலை மருட்டல், குறுஞ்செய்தி மூலம் பரவிக் கொண்டிருக்கிறது  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்பிகாவுக்கு எதிராக கொலை மருட்டல், குறுஞ்செய்தி மூலம் பரவிக் கொண்டிருக்கிறது


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 23, 2011 12:44 pm

அம்பிகாவுக்கு எதிராக கொலை மருட்டல், குறுஞ்செய்தி மூலம் பரவிக் கொண்டிருக்கிறது  Ambiga3-150x150 அம்பிகாவுக்கு எதிராக கொலை மருட்டல், குறுஞ்செய்தி மூலம் பரவிக் கொண்டிருக்கிறது  Ambiga-300x175 அம்பிகாவுக்கு எதிராக கொலை மருட்டல், குறுஞ்செய்தி மூலம் பரவிக் கொண்டிருக்கிறது  Ambiga1

பெர்சே அமைப்பைச் சார்ந்த சில உறுப்பினர்களுக்கும் பத்திரிக்கையாளர்களுக்கும் நேற்று பின்னிரவிலும் இன்று காலையிலும் குறுஞ்செய்தி வழி மருட்டல் வந்துள்ளது.

தேர்தல் சீர்திருத்தங்களை வலியுறுத்தி ஜுலை 9ம் தேதி நடத்தபப்படத் திட்டமிடப்பட்டுள்ள பெர்சே பேரணியில் பங்கு கொள்ளும் அதன் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசனுக்கும் பாஸ், பிகேஆர் தலைவர்களுக்கும் கொலை மருட்டல்கள் 601119732179 என்ற தொலைபேசி எண்ணிலிருந்து அனுப்பப்பட்டுள்ளன.

மலேசியாகினி தொடர்பு கொண்ட போது தமக்கு அத்தகைய குறுஞ்செய்தி கிடைத்திருப்பதை அம்பிகா உறுதிப்படுத்தினார்.

“ஆம், எனக்கு அது கிடைத்துள்ளது. போலீசில் புகார் செய்யப் போகிறேன்,”, என்றார் அவர்.

பாஹாசா மலேசியாவில் அனுப்பப்பட்டுள்ள அந்த குறுஞ்செய்தியின் வாசகம் இதுவாகும்: “Korg ni buta hati ke?? buat apa sokong ambiga keling paria haramjadah tu? dia ni kapir laknat. korang tau tak dia ni jadi alat anjing2 politik untuk musnahkan keutuhan melayu. dia kata je nak BERSIH kan SPR. bersih kepala bapak dia.”

“puak2 PAS n PKR pun buta tuli n pekak badak.. kalau SPR tak bersih, boleh ke diorang menang kat Sgor, Kedah, Penang, Kelantan n perak dulu? DAP cina sial tu pulak lagi haram jahanam. dia tengok je melayu bertekak. hujung2 dia perintah negara ni dan kristiankan kita semua. aku nak kasi amaran kat korang semua.”

“kalau perhimpunan ni jadi, aku dan org2 aku akan bunuh ambiga dan korang2 keliling dia satu persatu, termasuklah orang2 politik bangang yg bersekongkol ngan kafir laknat tu.. ini amaran aku. Korang tengokla nanti.”

(உங்களுக்கு அறிவு இருக்கிறதா ? நீங்கள் ஏன் அந்த pariah keling haramjadah அம்பிகாவை ஆதரிக்க வேண்டும்? அவர் வெறுக்கப்பட்ட நாத்திகர். அவர், மலாய்க்காரர்களை அழிக்க புறப்பட்டுள்ள அரசியல் நாய்களின் கருவி என்பது உங்களுக்குத் தெரியாதா? தேர்தல் ஆணையத்தை தூய்மைப்படுத்த விரும்புவதாக அவர் சொல்லிக் கொள்கிறார். அவரது தந்தையின் மூளையை சுத்தம் செய்யுங்கள்.

“அந்த பாஸ், பிகேஆர் உறுப்பினர்கள் செவிடர்கள், ஊமைகள், குருடர்கள், படிப்பறிவு இல்லாதவர்கள். தேர்தல் ஆணையம் தூய்மையானதாக இல்லை என்றால் அவர்கள் எப்படி கிளந்தான், கெடா, பேராக், சிலாங்கூர், பினாங்கு ஆகியவற்றில் வெற்றி பெற்றார்கள்? கண்டிக்கப்பட வேண்டிய சீன டிஎபி அவர்களை விட மோசமானது. மலாய்க்காரர்கள் ஒருவர் மற்றவருடைய குரல்வளையை நெறிப்பதை அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இறுதியில் அவர்கள் இந்த நாட்டை ஆளுவர். நம் அனைவரையும் கிறிஸ்துவர்களாக்கி விடுவர். நான் உங்களை எச்சரிக்கிறேன்.

“அந்தப் பேரணி நடந்தால் நானும் என் மக்களும் வெறுக்கப்படும் அந்த நாத்திகருடன் கை கோர்த்துள்ள அந்த முட்டாள் அரசியல்வாதிகள் உட்பட அம்பிகாவையும் கிளிங்குகளாகிய உங்களையும் ஒருவர் பின் ஒருவராக கொல்வோம்…. இது என்னுடைய எச்சரிக்கை. நீங்கள் பார்த்துக் கொண்டே இருங்கள்.”

புக்கிட் அமான் கூட்டம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை

கடந்த ஞாயிற்றுக்கிழமை மலாய் வலச்சாரி அமைப்பான பெர்க்காசா அம்பிகாவை “இந்து மாது” என அழைத்ததுடன் அவருடைய படங்களுக்கு எரியூட்டியதுடன் மிதிக்கவும் செய்தது.

இதனிடையே கூட்டரசு போலீஸ் தலைமையகம் அமைந்துள்ள புக்கிட் அமானுக்குச் செல்லுமாறு தமக்கு எந்த அறிவிப்பும் கிடைக்கவில்லை என அம்பிகா தெரிவித்துள்ளார்.

ஜுலை 9ம் தேதி தான் நடத்த எண்ணியுள்ள திட்டம் தொடர்பில் புக்கிட் அமானுக்குச் செல்லுமாறு பெர்சேக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக நேற்று உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் அறிவித்தார்.

அதே நாளன்று போட்டி பேரணிகளை நடத்தப் போவதாக அறிவித்துள்ள பெர்க்காசாவும் அம்னோ இளைஞர் பிரிவும் கூட அழைக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

மலேசியாஇன்று



அம்பிகாவுக்கு எதிராக கொலை மருட்டல், குறுஞ்செய்தி மூலம் பரவிக் கொண்டிருக்கிறது  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 23, 2011 12:45 pm

அம்பிகாவுக்கு எதிராக கொலை மருட்டல், குறுஞ்செய்தி மூலம் பரவிக் கொண்டிருக்கிறது  Ambiga2

அம்பிகாவுக்குக் கொலை மருட்டல்: உடனடியான போலீஸ் விசாரணைக்கு ஹிஷாமுடின் உத்தரவிடுகிறார்

பெர்சே 2.0 அமைப்பு ஜுலை 9ம் தேதி நடத்தத் திட்டமிட்டுள்ள பேரணி தொடர்பில் அதன் தலைவர் எஸ் அம்பிகாவுக்கு விடுக்கப்பட்டுள்ள கொலை மருட்டலை உடனடியாக விசாரிக்குமாறு போலீசாருக்கு தாம் ஆணையிடப் போவதாக உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் கூறியிருக்கிறார்.

பல பெர்சே 2.0 உறுப்பினர்களுக்கும் பத்திரிக்கையாளர்களுக்கும் குறுஞ்செய்தி வழி நேற்று பின்னிரவும் இன்று காலையும் அனுப்பப்பட்டுள்ள அந்த மருட்டல் “மிகவும் கடுமையானதாக” கருதப்பட வேண்டும் என அவர் சொன்னார்.

“நான் இதற்குப் பின்னர் உடனடியாக புக்கிட் அமானுக்குச் செல்லவிருக்கிறேன். அந்தக் குறுஞ்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ள மருட்டல் நிகழாதிருப்பதை உறுதி செய்வதுடன் அந்த குறுஞ்செய்தி எங்கிருந்து வந்தது என்பதைக் கண்டு பிடிக்குமாறும் நான் போலீசாரைக் கேட்டுக் கொள்வேன்”, என ஹிஷாமுடின் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் கூறினார்.

601119732179 என்ற தொலைபேசி எண்ணிலிருந்து அனுப்பப்பட்டுள்ள அந்த குறுஞ்செய்தி அம்பிகாவை முக்கிய இலக்காக குறிப்பிட்டுள்ளது. தேர்தல் சீர்திருத்தங்களை வலியுறுத்தி ஜுலை 9ம் தேதி நடத்தப்படும் பெர்சே பேரணியில் பங்கு கொள்ளக் கூடிய மற்ற பாஸ், பிகேஆர் தலைவர்களும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

மலாய் மொழியில் எழுதப்பட்டிருந்த அந்த குறுஞ்செய்தியின் முடிவில் மருட்டல் விடுக்கப்பட்டுள்ளது. பேரணி நடத்தப்பட்டால் அம்பிகாவையும் அவரை சுற்றியுள்ளவர்களையும் ஒருவர் பின் ஒருவராகக் கொல்லப் போவதாகவும் அந்த குறுஞ்செய்தியை அனுப்பியவர் கூறியுள்ளார்.
அம்பிகாவுக்கு எதிராக கொலை மருட்டல், குறுஞ்செய்தி மூலம் பரவிக் கொண்டிருக்கிறது  Hisham3
பிரமுகர்களுக்கு கொலை மருட்டல்கள் வருவது சகஜம் என்று கூறிய ஹிஷாமுடின், தமக்கும் கூட கொலை மருட்டல்கள் வந்திருப்பதாகச் சொன்னார். வழக்கமாக ஆத்திரத்துடன் எழுதப்படும் செய்திகளுக்குக் காட்டப்படும் கவனத்தை விடக் கூடுதலாக அம்பிகாவுக்கு விடுக்கப்பட்ட மருட்டல் மீது செலுத்தப்பட வேண்டும் என்றார் அவர்.

“பெர்சே சூழ்நிலையில் நாம் அதனை சற்று கடுமையாக எடுத்துக் கொள்ள வேண்டும். நான், அந்தக் கொலை மருட்டலை அதுவும் அம்பிகாவைப் பொறுத்த வரையில் மிகவும் கடுமையாக எண்ணுகிறேன். ஏனெனில் நான் வழக்குரைஞர் தொழிலில் ஈடுபட்டிருந்த நாள் தொடக்கம் எனக்கு அவரைத் தெரியும்,” என்றார் ஹிஷாமுடின்.



அம்பிகாவுக்கு எதிராக கொலை மருட்டல், குறுஞ்செய்தி மூலம் பரவிக் கொண்டிருக்கிறது  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Jun 23, 2011 2:13 pm

எங்க அக்காவ யாரும் அசைக்க முடியாது.ஏதோ சில சில்லரைகள் இப்படி விஷமத்தனம் பண்ணிகிட்டு இருக்குங்க. இதையெல்லாம் கண்டு கலங்க மாட்டாங்க எங்க அக்கா அம்பிக சீனிவாசன்.

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jun 23, 2011 2:17 pm

அட நான் கூட அவன் இவன் படத்துல பீடி புடிச்சாங்களே அம்பிகா அதுக்கு தான் கொலைமிரட்டல் விட்ருக்காங்கன்னு பார்த்தால்....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அம்பிகாவுக்கு எதிராக கொலை மருட்டல், குறுஞ்செய்தி மூலம் பரவிக் கொண்டிருக்கிறது  47
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Jun 23, 2011 2:19 pm

மஞ்சுபாஷிணி wrote:அட நான் கூட அவன் இவன் படத்துல பீடி புடிச்சாங்களே அம்பிகா அதுக்கு தான் கொலைமிரட்டல் விட்ருக்காங்கன்னு பார்த்தால்....


நானும் அவங்களுக்குதான்னு நினச்சேன் அம்பிகாவுக்கு எதிராக கொலை மருட்டல், குறுஞ்செய்தி மூலம் பரவிக் கொண்டிருக்கிறது  440806



அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Thu Jun 23, 2011 2:20 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

அம்பிகாவுக்கு எதிராக கொலை மருட்டல், குறுஞ்செய்தி மூலம் பரவிக் கொண்டிருக்கிறது  Aஅம்பிகாவுக்கு எதிராக கொலை மருட்டல், குறுஞ்செய்தி மூலம் பரவிக் கொண்டிருக்கிறது  Bஅம்பிகாவுக்கு எதிராக கொலை மருட்டல், குறுஞ்செய்தி மூலம் பரவிக் கொண்டிருக்கிறது  Dஅம்பிகாவுக்கு எதிராக கொலை மருட்டல், குறுஞ்செய்தி மூலம் பரவிக் கொண்டிருக்கிறது  Uஅம்பிகாவுக்கு எதிராக கொலை மருட்டல், குறுஞ்செய்தி மூலம் பரவிக் கொண்டிருக்கிறது  Lஅம்பிகாவுக்கு எதிராக கொலை மருட்டல், குறுஞ்செய்தி மூலம் பரவிக் கொண்டிருக்கிறது  Lஅம்பிகாவுக்கு எதிராக கொலை மருட்டல், குறுஞ்செய்தி மூலம் பரவிக் கொண்டிருக்கிறது  Aஅம்பிகாவுக்கு எதிராக கொலை மருட்டல், குறுஞ்செய்தி மூலம் பரவிக் கொண்டிருக்கிறது  H
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 24, 2011 7:18 am

பெர்சே: கொலை மருட்டல், கோழைகளின் வேலை

அம்பிகாவுக்கு எதிராக கொலை மருட்டல், குறுஞ்செய்தி மூலம் பரவிக் கொண்டிருக்கிறது  Ambiga4-300x175

பெர்சே 2.0 அமைப்பு ஜுலை 9ம் தேதி நடத்துவதற்கு திட்டமிட்டுள்ள பேரணி தொடர்பில் அதன் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசனை இலக்காகக் கொண்டு குறுஞ்செய்தி வழி அனுப்பப்பட்டுள்ள மருட்டலுக்கு பின்னணியில் உள்ளவர்கள் “கோழைகள்” என அந்த அமைப்பு சாடியுள்ளது.

“அதனை ஏற்றுக் கொள்ள முடியாது. அந்தக் குறுஞ்செய்தி உயிரை மட்டும் மருட்டவில்லை. இனவாதத் தன்மையையும் கொண்டுள்ளது”, என அந்த பெர்சே 2.0 ஏற்பாட்டுக் குழுவின் ஒர் உறுப்பினரான மரியா சின் அப்துல்லா கூறினார்.

“துணிச்சலுடன் வெளியில் வந்து பேச வேண்டும். மருட்டுகின்ற, இனவாத குறுஞ்செய்திகளை அனுப்புகின்ற கோழையாக இருக்க வேண்டாம். நாம் பேசுவோம்”, என மரியா கூறினார்.

கோலாலம்பூரில் உள்ள ஜாலான் டிராவர்ஸ் போலீஸ் நிலையத்தில் இன்று பிற்பகல் புகார் செய்த பின்னர் அவர் நிருபர்களிடம் பேசினார்.

அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவதை நிறுத்திக் கொள்ளுமாறும் அவர் அந்தக் குறுஞ்செய்தியை அனுப்பியவரைக் கேட்டுக் கொண்டார்.

அந்தக் கொலை மருட்டலுக்கு எதிராக ஆறு போலீஸ் புகார்கள் சமர்பிக்கப்பட்டுள்ளன. நேற்று பின்னிரவு தொடக்கம் இன்று காலை வரையில் அந்தக் குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளன.

பெர்சே ஏற்பாட்டுக் குழு உறுப்பினர் வோங் சின் ஹுவாட், பிகேஆர் இளைஞர் பிரிவுத் துணைத் தலைவர் கைருல் அன்வார் அகமட் ஜைனுதீன் அம்பிகா, பிகேஆர் சட்டப்பிரிவுத் தலைவர் லத்தீப்பா கோயா ஆகியோர் அந்தப் புகார்களைக் கொடுத்துள்ளனர்.

அம்பிகா அந்தப் போலீஸ் நிலையத்தில் இன்று பிற்பகல் காணப்பட்டார்.

அம்பிகாவுக்கு எதிராக கொலை மருட்டல், குறுஞ்செய்தி மூலம் பரவிக் கொண்டிருக்கிறது  Ambiga21

“அந்த மருட்டல் பேரணிக்கான எங்கள் திட்டத்தை மாற்றாது,” என அம்பிகா சொன்னார்.

என்றாலும் தாமும் மற்ற உறுப்பினர்களும் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்வர் என்றும் அவர் அறிவித்தார்.

போலீசார் திறமையாக செயல்பட்டால் தம்முடைய பாதுகாப்புக்கு தாம் அஞ்ச வேண்டியதில்லை என்றும் அவர் சொன்னார்.

அந்தக் குறுஞ்செய்தியை போலீசார் விசாரிப்பர் என உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் விடுத்துள்ள அறிக்கையை அம்பிகா வரவேற்றார்.

“அந்தச் செய்திகளை அனுப்பியவர்களைக் கண்டு பிடிப்பதற்குப் போலீசாருக்கு எல்லா வழிகளும் உள்ளன என்றார் அவர்.

கேள்வி ஒன்றுக்குப் பதில் அளித்த அம்பிகா பெர்சே பேரணிக்கு முன்னதாக இனப் பதற்ற நிலை அதிகரித்து வருவதை ஒப்புக் கொண்டார்.

“எங்களைப் பொறுத்த வரையில் நாங்கள் அதனை அமைதியாக செய்யப் போகிறோம். இதில் இனவாதம் ஏதுமில்லை.”

இனவாதத்தையும் மருட்டல்களையும் பயன்படுத்துகின்றவர்கள் மீது சட்டம் அமலாக்கப்படும் எனத் தாம் நம்புவதாகவும் அவர் சொன்னார்.

“யாரும் எனக்கு அறிவுரை சொல்வதில் எந்தப் பலனும் இல்லை” என்பதைப் போல பெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலிக்கு சொல்வதற்கு தம்மிடம் அறிவுரை ஏதுமில்லை என்றார் அம்பிகா.

ஒரே நாளில் பேரணிகளை ஏற்பாடு செய்துள்ள பெர்சே, அம்னோ இளைஞர் பிரிவு, பெர்க்காசா ஆகியவற்றின் தலைவர்களை போலீசார் அழைக்கப் போவதாக கூறப்படுவது பற்றிக் குறிப்பிட்ட் அவர், போலீசார் இன்னும் தம்முடன் தொடர்பு கொள்ளவில்லை என்றார்.

பெர்சே போலீசாருக்கு ஒத்துழைப்பு வழங்கும் எனவும் அம்பிகா சொன்னார்.

“அனுமதி வழங்கப்பட மாட்டாது என ஹிஷாமுடின் கூறியிருப்பதால் நாங்கள் விண்ணப்பிக்க மாட்டோம்,” என்றார் அவர்.

மலேசியாஇன்று



அம்பிகாவுக்கு எதிராக கொலை மருட்டல், குறுஞ்செய்தி மூலம் பரவிக் கொண்டிருக்கிறது  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக