ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கச்சத்தீவு அருகே மீன் பிடித்த தமிழக மீனவர்கள் 23 பேர் சிறைபிடிப்பு

2 posters

Go down

கச்சத்தீவு அருகே மீன் பிடித்த தமிழக மீனவர்கள் 23 பேர் சிறைபிடிப்பு Empty கச்சத்தீவு அருகே மீன் பிடித்த தமிழக மீனவர்கள் 23 பேர் சிறைபிடிப்பு

Post by சிவா Wed Jun 22, 2011 6:10 pm

கச்சத்தீவு அருகே மீன் பிடித்த 23 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றுள்ளனர். அவர்களை உடனடியாக மீட்க வேண்டும் என்று பிரதமருக்கு, தமிழக முதல்- அமைச்சர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்து உள்ளார்.

ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் 701 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

கச்சத்தீவு அருகே அவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர். மதியம் 3 மணி அளவில் அங்கு இலங்கை கடற்படையினர் 2 ரோந்துக்கப்பல்களில் அதிவேகமாக அங்கு வந்தனர்.

சிறை பிடிப்பு

இலங்கை கடற்படையை பார்த்ததும் தமிழக மீனவர்கள் அவசரமாக திரும்ப முயன்றனர். அப்போது இலங்கை கடற்படையினர், திடீர் என்று தமிழக மீனவர்களின் 5 படகுகளை சுற்றிவளைத்தனர். அந்த படகுகளில் 23 மீனவர்கள் இருந்தனர்.

எல்லைதாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் 23 பேரையும் சிறை பிடித்தனர்.

அந்த படகுகளில் இருந்த அழகேசன் (வயது 50), கணேசன் (50), முத்துக்காளை (40), ராமகிருஷ்ணன் (45), ராமசாமி (50), விஜயன் (28), ஈசுவரன் (28), செந்தில் (27), அன்பரசன் (50), சேகர் (45), சிந்தாத்துரை (50), செல்வம் (45), பேரின்பம் (26), ஆரோக்கியம் (30), முத்துவீரன் (30), முனியசாமி (27), ராஜ் (45), மலைச்சாமி (55), மனோகரன் (55), முனியசாமி (45), கல்யாணராமன் (40), இசக்கிமுத்து (65), பால்ராஜ் (39) ஆகிய 23 மீனவர்களையும் 5 படகுகளுடன் இலங்கை தலைமன்னாருக்கு இலங்கை கடற்படையினர் கொண்டு சென்றனர். பின்னர் அங்குள்ள போலீஸ் நிலையத்தில் தமிழக மீனவர்களை ஒப்படைத்தனர்.

சிறையில் அடைப்பு

பின்னர் நேற்று மதியம் போலீஸ் நிலையத்தில் இருந்து அழைத்துச்செல்லப்பட்டு மன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை வருகிற 1-ந் தேதி வரை சிறையில் அடைக்கவும், 1-ந் தேதி மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தவும் நீதிபதி உத்தரவிட்டார்.

அதன்பின் மீனவர்கள் 23 பேரும் தலைமன்னாரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டனர்.

இலங்கை கடற்படையினரிடம் இருந்து தப்பிய மற்ற மீனவர்கள் கரைக்கு திரும்பிச்சென்று ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அருண்ராய் மற்றும் மீன்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து கலெக்டர் அருண்ராய் மற்றும் மீன்துறை அதிகாரிகள் மீன்துறை அமைச்சர் மற்றும் தமிழக அரசுக்கு தகவல் தெரிவித்தனர்.

பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

இதைத்தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள ராமேசுவரத்தை சேர்ந்த 23 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங்கை முதல்-அமைச்சர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று கடிதம் அனுப்பியுள்ளார். அதன் விவரம் வருமாறு:-

23 தமிழக மீனவர்கள் கைது

ராமேசுவரம் மீனவர்கள் நேற்று (20-ந் தேதி) கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக திசை தெரியாமல் இலங்கை கடல்பகுதிக்கு சென்றுவிட்டதால், அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து தலைமன்னார் போலீஸ் நிலையத்தில் விசாரணை கைதிகளாக வைத்துள்ளனர்.

கடந்த மே மாதம் எனது அரசு பொறுப்பேற்ற பிறகு, ராமேசுவரம் மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க சென்றபோது, மோசமான வானிலை காரணமாகவும், பலத்த காற்று வீசியதாலும் படகு கவிழ்ந்துவிட்டது. நீண்டநேரம் கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த 4 மீனவர்கள் இலங்கை பகுதியில் கரை ஒதுங்கினார்கள். அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து, காங்கேசன் துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள்.

இதுகுறித்து உங்களுக்கு கடந்த 7-ந் தேதி கடிதம் எழுதினேன். அதற்கு பதில் அளித்து நீங்கள் ஜுன் 15-ந் தேதி அனுப்பிய கடிதத்தில், 4 மீனவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து இலங்கை அரசின் கவனத்திற்கு கொண்டு போயிருப்பதாக தெரிவித்திருந்தீர்கள். அதையடுத்து அந்த மீனவர்கள் கடந்த 17-ந் தேதி விடுவிக்கப்பட்டனர். இந்த விஷயத்தில் நீங்கள் உடனடியாக தலையிட்டு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்ததற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

மிகவும் வேதனை அளிக்கும் விஷயம்

பாக். நீரிணைப்பு பகுதியில் ராமேசுவரம் கடற்கரைக்கு மிக அருகில் சர்வதேச கடல் எல்லை இருப்பதால் தமிழக மீனவர்கள் அந்த எல்லையை தெரியாமல் கடப்பதும் அதனால் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து, சிறையில் அடைக்கும் சம்பவமும் அடிக்கடி நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இது, மிகவும் வேதனை அளிப்பதாக இருக்கிறது என்பதை வலியுறுத்தி கூற விரும்புகிறேன்.

இதுபோன்ற நிகழ்வு, தமிழக மீனவர்கள் மத்தியில் பதற்றத்தையும், அமைதியின்மையும் ஏற்படுத்துகிறது. தங்களை டெல்லியில் கடந்த 14-ந் தேதி நான் சந்தித்தபோது, தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்து விரிவாக விவாதித்தேன்.

இந்த பிரச்சினை குறித்து இரண்டு தடவை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கரமேனனிடமும் விவாதித்துள்ளேன். அவர் கொழும்பு செல்வதற்கு முன்பு கடந்த 9-நë தேதியும், அதன்பிறகு 14-ந் தேதியும் என்னைச் சந்தித்து பேசினார். அப்போது தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்து அவரிடம் ஆலோசனை நடத்தினேன்.

பிரதமர் உடனடியாக தலையிட கோரிக்கை

இந்த நிலையில், ராமேசுவரம் மீனவர்கள் கடந்த 20-ந் தேதி கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக திசை தெரியாமல் இலங்கை கடல் பகுதிக்கு சென்றுவிட்டனர். அந்த 23 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து, அவர்களது 5 படகுகளையும் பறிமுதல் செய்துவிட்டனர். கைது செய்யப்பட்டு விசாரணை கைதிகளாக வைக்கப்பட்டு உள்ள தமிழக மீனவர்கள் 23 பேரையும் உடனடியாக இலங்கை அரசு விடுதலை செய்ய தாங்கள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

தினதந்தி


கச்சத்தீவு அருகே மீன் பிடித்த தமிழக மீனவர்கள் 23 பேர் சிறைபிடிப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கச்சத்தீவு அருகே மீன் பிடித்த தமிழக மீனவர்கள் 23 பேர் சிறைபிடிப்பு Empty Re: கச்சத்தீவு அருகே மீன் பிடித்த தமிழக மீனவர்கள் 23 பேர் சிறைபிடிப்பு

Post by சிவா Wed Jun 22, 2011 6:12 pm

23 மீனவர்களையும் விடுதலை செய்யும் வரை காலவரையற்ற வேலை நிறுத்தம்: ராமேசுவரம் மீனவர்கள் அறிவிப்பு

தொடர் சம்பவம்

ராமேசுவரத்தில் இருந்து கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்துச்செல்லும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அவர்கள் கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்தாலும் எல்லை தாண்டியதாக கூறி கடற்படையினர் பிடித்து விடுகின்றனர். சில நேரங்களில் கடற்படையினரின் தாக்குதலுக்கு மீனவர்கள் பலர் பலியாகியும் உள்ளனர்.

இது போன்ற சம்பவங்களால் ராமேசுவரம் மீனவர்கள் கடலில் சுதந்திரமாக மீன்பிடிக்க முடியாமல் அவர்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாக உள்ளது. எனவே மத்திய-மாநில அரசுகள் இந்த விஷயத்தில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

அவசர கூட்டம்

ராமேசுவரம் மீனவர்கள் 23 பேர் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட சம்பவத்தை கேள்விப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து அனைத்து மீனவர்கள் சங்கங்களின் அவசர கூட்டம் மீன்பிடி டோக்கன் அலுவலகத்தில் நேற்று மதியம் நடந்தது.

கூட்டத்துக்கு யாகப்பா விசைப்படகு மீனவர் சங்கத்தின் தலைவர் பெஞ்சின்கிளாஸ் தலைமை தாங்கினார். இதில் மீனவர் சங்க தலைவர்கள் ஜேசுராஜா, போஸ், தேவதாஸ், அந்தோணி, எவரேட் உள்பட 13 சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

காலவரையற்ற வேலை நிறுத்தம்

இலங்கை கடற்படையால் பிடித்துச்செல்லப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 23 பேரையும், 5 படகுகளையும் விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 23 மீனவர்களையும், 5 படகுகளையும் விடுதலை செய்யும் வரையில் ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்வது என முடிவு செய்யப்படுகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு மீன்பிடிக்க சென்று கடலில் தவறி விழுந்து இறந்துபோன மீனவர் ஜெரோமியன் குடும்பத்திற்கு தமிழக அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


கச்சத்தீவு அருகே மீன் பிடித்த தமிழக மீனவர்கள் 23 பேர் சிறைபிடிப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கச்சத்தீவு அருகே மீன் பிடித்த தமிழக மீனவர்கள் 23 பேர் சிறைபிடிப்பு Empty Re: கச்சத்தீவு அருகே மீன் பிடித்த தமிழக மீனவர்கள் 23 பேர் சிறைபிடிப்பு

Post by சிவா Wed Jun 22, 2011 6:13 pm

23 மீனவர்கள் சிறைபிடிப்பு: மத்திய அரசுக்கு திருமாவளவன் கோரிக்கை


விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த தமிழக மீனவர்கள் 23 பேரை 5 படகுகளுடன் சிங்கள கடற்படையினர் சிறைப்பிடித்துள்ளனர். இவர்களை விடுவிப்பதற்கு அ.தி.மு.க. அரசு உரிய அழுத்தம் கொடுத்து இந்திய அரசை விரைந்து செயல்பட வைக்க ஆவன செய்யவேண்டும். தமிழக மீனவர்களுக்கு நிலையான பாதுகாப்பு கிடைத்திடவும் உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசை விடுதலைசிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறது. அத்துடன் வருகிற 23-ந் தேதி சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் பன்னாட்டு உபயோகப் பொருட்காட்சியில் சிங்களர்களின் உற்பத்தி பொருட்களும் இடம்பெறுகின்றன. சிங்கள அரசு மீது பொருளாதார தடை விதிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிற தமிழக அரசு, இந்த கண்காட்சியில் சிங்களர்களின் உற்பத்திப் பொருட்கள் இடம்பெற அனுமதிக்க கூடாது.

இவ்வாறு தொல்.திருமாவளவன் அறிக்கையில் கூறியுள்ளார்.


கச்சத்தீவு அருகே மீன் பிடித்த தமிழக மீனவர்கள் 23 பேர் சிறைபிடிப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கச்சத்தீவு அருகே மீன் பிடித்த தமிழக மீனவர்கள் 23 பேர் சிறைபிடிப்பு Empty Re: கச்சத்தீவு அருகே மீன் பிடித்த தமிழக மீனவர்கள் 23 பேர் சிறைபிடிப்பு

Post by மஞ்சுபாஷிணி Wed Jun 22, 2011 6:14 pm

சோகம்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கச்சத்தீவு அருகே மீன் பிடித்த தமிழக மீனவர்கள் 23 பேர் சிறைபிடிப்பு 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

கச்சத்தீவு அருகே மீன் பிடித்த தமிழக மீனவர்கள் 23 பேர் சிறைபிடிப்பு Empty Re: கச்சத்தீவு அருகே மீன் பிடித்த தமிழக மீனவர்கள் 23 பேர் சிறைபிடிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நடுக்கடலில் ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு
» நாகை மீனவர்கள் 13 பேர் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்
» கச்சத்தீவு அருகே எண்ணெய் கிணறுகள்; தமிழக மீனவர்களுக்கு மேலும் ஒரு ஷாக்..!
» தனுஷ்கோடி அருகே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் வெறித் தாக்குதல்
» ராமேஸ்வரத்தில் அரிய வகை மீன் டன் கணக்கில் சிக்கியது : மீனவர்கள் மகிழ்ச்சி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum