Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்!
+20
kitcha
ஸ்ரீஜா
உமா
பிளேடு பக்கிரி
கோவை ராம்
மஞ்சுபாஷிணி
சிவா
krishnaamma
பது
ரபீக்
ரேவதி
SK
சோழன்
உதயசுதா
Manik
முரளிராஜா
மாணிக்கம் நடேசன்
றினா
realvampire
thillalangadi
24 posters
Page 10 of 11
Page 10 of 11 • 1, 2, 3 ... , 9, 10, 11
ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்!
First topic message reminder :
ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்!
''ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது!''
''ஜெயலலிதா வெற்றி பெற்று முதல்வரானதன் மூலம் தமிழகம் காப்பாற்றப் பட்டு விட்டது!''
மேற்கண்ட இரண்டையும் சொன்னது வேறு யாருமில்லை, நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான்.
ஒரு ஆட்சியின் அவல நிலையைக் கண்டு அந்த ஆட்சியை விமர்சிப்பதில் தவறில்லை. ஆனால் அது வெளிப் படையாக இருக்க வேண்டுமே தவிர தொழிலுக்கேற்ப நடிப்பாக இருக்கக் கூடாது. தமிழகத்தைக் கருணாநிதி ஆண்ட 5 வருடங்கள் கருணாநிதி கதை வசனம் எழுதிய திரைப் படங்களை அவருடன் கண்டு களித்து தன் காரியங்களைச் சாதித்துக் கொண்ட ரஜினி, தற்போது தமிழகம் காப்பாற்றப் பட்டு விட்டதாக திருவாய் மலர்ந்து இருக்கிறார்.
பாட்சா பட வெற்றி விழாவின் போது அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சி குறித்து "தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் குண்டு வெடிப்புகள்; தமிழகத்தில் அமைதியில்லை" என்று பேசி படத் தயாரிப்பாளரான முன்னாள் அமைச்சர் ஆர்.எம் வீரப்பனின் பதவிக்கு வேட்டு வைத்தவர். இன்று ஜெயலலிதா முதல்வரானதன் மூலம் தமிழகத்தைக் கருணாநிதியிடம் இருந்து காப்பாற்றி விட்டார் என்றும் ஜெயலலிதா முதல்வராகா விட்டால் கருணாநிதி தமிழகத்தை ஒரு வழி பண்ணி இருப்பார் என்றும் சொல்லாமல் சொல்லி இருக்கிறார்.
''என் ஒரு ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக் காசு கொடுப்பது தமிழ் அல்லவா என் உடல் பொருள் அனைத்தையும் தமிழுக்கும் தமிழர்க்கும் கொடுப்பது முறையல்லவா'' என்று பாட்டு பாடும் ரஜினி, தன்னுடைய ரசிகர்களுக்காகவும் தமிழர்களுக்காகவும் என்ன செய்து விட்டார் என்று பட்டியலிடத் தயாரா? குறைந்தப் பட்சம் தன் மனைவி நடத்தும் ஆஸ்ரம் பள்ளியில் தன் ரசிகர்களின் குழந்தைகளுக்கு இலவசக் கல்வியை வழங்குவாரா? காவிரி தண்ணீர் பிரச்னைக்குத் தனியாக உண்ணாவிரதம் இருந்து தமிழர்களின் ஒற்றுமைக்கு வேட்டு வைப்பார். ரஜினிக்கு நிஜமாகவே தமிழர்கள் மீதும் தமிழ்நாட்டின் மீதும் அக்கறை இருந்தால் தேர்தலுக்கு முன்பே தன் நிலையைத் தெளிவாகச் சொல்லி தமிழகம் எப்படி காப்பாற்றப் பட வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தால் இன்று ரஜினி பேசுவதை அவரின் நடிப்பில்லை என்று நாம் நம்பலாம்!
ஒரு வேளை அதிமுக ஆட்சிக்கு வராமல் திமுகவே மீண்டும் ஆட்சி அமைத்து இருந்தால் "தமிழகம் காப்பாற்றப் படவில்லை" என்று ரஜினி தெளிவாக அறிவித்து இருப்பாரா என்ற நியாயமான கேள்விக்கு அவரின் மனசாட்சிதான் பதில் சொல்ல வேண்டும்.
தமக்கு காரியம் ஆக வேண்டும் என்றால், மொழி, இன அடிப்படையில் மக்களிடையே வேற்றுமையை விதைத்து நாட்டு ஒற்றுமைக்கு வேட்டு வைக்கும் பால் தாக்கரே போன்ற மத துவம்சம் பிடித்தவர்களையும் தெய்வம் என்பார். ஐந்து ஆண்டு கால ஆட்சியின் போது கருணாநிதியைப் பற்றியோ கருணாநிதியின் ஆட்சியை பற்றியோ வாய் திறக்காத ரஜினி, தேர்தலில் வாக்களித்த பின்பு மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புவதாகக் கூறினார். தற்போது தமிழகம் காப்பாற்றப் பட்டு விட்டதாகத் தெரிவித்துள்ளார்.
கமல் - ரஜினி இவரில் நடிக்கத் தெரிந்தவர் யாரென்று கேட்டால் பட்டெனப் பதில் வரும் கமல்தான் என்று. ஆனால் உண்மையிலேயே கமலைவிட நடிக்க மட்டுமல்ல, வசனம் பேசவும் தெரிந்தவர் ரஜினிதான் என்பதை அவர் பேசியதாக வெளியான இத்தகவல் மூலம் அறிய முடிகிறது.
"உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்கமாட்டேன்..." என்ற பாடலை அவர் எழுதாவிட்டாலும் அவர் பாடுவது போன்று அமைக்கப்பட்டதால், ரஜினியே சொல்வது போன்றுதான் இன்றும் அவரது ரசிகர்கள் நினைத்துக் கொண்டுள்ளனர். ஆனால், உப்பிட்ட மண்ணை மறந்துவிட்டுத் தன்னுடைய வருமானத்தையெல்லாம் தன் தாய் மண்ணிலே முதலீடு செய்துள்ளார். ஒகனேக்கல் குடிநீர்த் திட்டத்தில் எழுந்த பிரச்னையில் ரஜினி நடித்த திரைப் படங்களை கர்நாடக மாநிலத்தில் திரையிட விட மாட்டோம் என்று கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள் பிரச்னை செய்த போது, உடனே மன்னிப்பு கேட்டு சமாதானம் பேசி, தான் நடித்த குசேலன் திரைப் படத்தை வெளியிட்டார்.
ரஜினிகாந்த் என்று அழைக்கப்படும் ஸிவாஜிராவ் கெய்க்வாட் ஒரு நடிகர்; தேர்ந்த நடிகர். நடிப்பு அவருக்கு வருவாய் ஈட்டும் தொழில். அரிதாரம் பூசி அவர் போடும் வேடங்கள் அவரின் உண்மையான குணாதிசயங்கள் அல்ல. அரிதாரத்தைக் கலைத்த பின் அவர் ஸிவாஜிராவ் கெய்க்வாட் எனும் தனி நபர். இது நடிப்புத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் அனைவருக்கும் பொருந்தும். தமிழ்நாட்டில் நடிகர்களின் ரசிகர்கள், தாம் விரும்பும் நடிகர்கள் திரையில் செய்யும் ஸூப்பர்மேன் சாகசங்களை நிஜ வாழ்விலும் செய்வர் என நம்பிக்கொண்டு அவர்களைத் தங்களுக்குத் தலைவர்களாக வரித்துக் கொண்டு, அவர்களின் கட்அவுட்டுக்கு மாலையிட்டுச் சூடம் கொளுத்திப் பாலாபிஷேகம் செய்கின்றனர்.
ரஜினிக்கு இணையாக சமகால நடிகர்கள் பலர் இருந்தும், ரஜினியைச் சுற்றிலும் ஓர் அரசியல் ஒளிவட்டத்தை ஏற்படுத்தி அதில் பலனடைந்தவர்கள் எல்லோருமே சினிமாத்துறை சார்ந்தவர்களே என்பது வெள்ளிடைமலை! இருப்பினும் 30+ ஆண்டுகள் ஆகியும், இனியும் அவர் நேரடி அரசியலில் ஈடுபட்டு ஒளியேற்றுவார் என்று நம்பும் அப்பாவி ரஜினி ரசிகர்களை நினைக்கும்போது, ரஜினியின் வசனத்தில் "அவர்களை யாராலும் காப்பாற்ற முடியாது" என்றே கருத வேண்டியுள்ளது.
சினிமா வசனகர்த்தா எழுதிக்கொடுத்த அவர் நடித்த படங்களிலுள்ள வசனங்களைக்கூட, அரசியல் கட்சிகளுக்கான மறைமுக எச்சரிக்கை என்று ரசிகர்களை ஏமாற்றியதில் ஊடகங்களின் பங்கும் இருப்பதை மறுப்பதற்கில்லை. சினிமா நடிகர்களில் ரஜினிமீது ஊடகங்கள் காட்டிய கரிசனம், பாரபட்சமானது என்பதையும் வெட்கத்துடன் ஒப்புக்கொள்ள வேண்டும்.
ஆட்சி மாறும்போது ஒரே வாசகங்களை மாற்றி மாற்றிப் போட்டு முதல்வர்களுக்கு பாராட்டு விழா என்ற பெயரில் ஜால்ரா அடித்த திரை உலகினரை நன்றாக புரிந்து வைத்திருந்த ஜெயலலிதா, இம்முறை அது தன்னிடம் நடக்காது என்பதைத் தனிப்பட்ட தொலைப்பேசி உரையாடலில் ரஜினி கூறிய வாசகத்தை அரசு அறிக்கையாக வெளியிட்டு ரஜினிக்கு நாமம் போட்டுக் காட்டியுள்ளார். ஆரம்பத்தில், ஆட்சிப் பொறுப்பேற்றதும் தனக்குப் "பாராட்டு விழா" நடத்த தேதி கேட்டு வந்த திரை உலகத்தினரைத் திருப்பியனுப்பி, இனிமேலும் உங்களின் அரிதார அற்ப ஜால்ரா புகழுரைகள் என்னிடம் பலிக்காது என்று முதல்வர் ஜெயலலிதா சம்மட்டியால் அடித்து விரட்டியது பாராட்டத்தக்கது! இது போன்ற சினிமாத் துறையினரின் சந்தர்ப்பவாத பேச்சுக்களை கருணாநிதி போன்ற அரசியல் சாணக்கியர்கள் இனியாவது புரிந்து கொள்ள வேண்டும்.
நோய் வாய்ப்பட்டுள்ள நிலையில் ரஜினியை இகழ்ந்து பேசுவது நமது நோக்கமல்ல. தமிழகமே அவர் மீது பித்தம் கொண்டது போன்ற தோற்றத்தை உருவாக்கி, அவரது ஒவ்வொரு அசைவையும் செய்திகளாக்கி, காசு பார்க்கும் ஊடக வியாபாரிகளின் பொறுப்பற்றத்தன்மையை வெளிச்சமிட்டுக் காட்டுவதோடு, நேரத்துக்கும் காலத்துக்கும் தகுந்ததுபோல் தன் நிலைபாடுகளை மாற்றி நிஜ வாழ்விலும் சிறந்த நடிகர்களாக வலம்வரும் இவர்களை நம்பியிருந்து தம் வாழ்வைத் தொலைக்காமல் நாட்டுக்கும் வீட்டுக்கும் நலம் பயப்பவர்களாக தம் வாழ்வை இளைஞர்கள் மாற்றியமைத்துக் கொள்ள சுட்டுவதே நம் நோக்கம்!
ரஜினி நலம் பெறட்டும்! தமிழர் தம் நிலை உணரட்டும்!!
இந்நேரம்.காம்
ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்!
''ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது!''
''ஜெயலலிதா வெற்றி பெற்று முதல்வரானதன் மூலம் தமிழகம் காப்பாற்றப் பட்டு விட்டது!''
மேற்கண்ட இரண்டையும் சொன்னது வேறு யாருமில்லை, நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான்.
ஒரு ஆட்சியின் அவல நிலையைக் கண்டு அந்த ஆட்சியை விமர்சிப்பதில் தவறில்லை. ஆனால் அது வெளிப் படையாக இருக்க வேண்டுமே தவிர தொழிலுக்கேற்ப நடிப்பாக இருக்கக் கூடாது. தமிழகத்தைக் கருணாநிதி ஆண்ட 5 வருடங்கள் கருணாநிதி கதை வசனம் எழுதிய திரைப் படங்களை அவருடன் கண்டு களித்து தன் காரியங்களைச் சாதித்துக் கொண்ட ரஜினி, தற்போது தமிழகம் காப்பாற்றப் பட்டு விட்டதாக திருவாய் மலர்ந்து இருக்கிறார்.
பாட்சா பட வெற்றி விழாவின் போது அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சி குறித்து "தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் குண்டு வெடிப்புகள்; தமிழகத்தில் அமைதியில்லை" என்று பேசி படத் தயாரிப்பாளரான முன்னாள் அமைச்சர் ஆர்.எம் வீரப்பனின் பதவிக்கு வேட்டு வைத்தவர். இன்று ஜெயலலிதா முதல்வரானதன் மூலம் தமிழகத்தைக் கருணாநிதியிடம் இருந்து காப்பாற்றி விட்டார் என்றும் ஜெயலலிதா முதல்வராகா விட்டால் கருணாநிதி தமிழகத்தை ஒரு வழி பண்ணி இருப்பார் என்றும் சொல்லாமல் சொல்லி இருக்கிறார்.
''என் ஒரு ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக் காசு கொடுப்பது தமிழ் அல்லவா என் உடல் பொருள் அனைத்தையும் தமிழுக்கும் தமிழர்க்கும் கொடுப்பது முறையல்லவா'' என்று பாட்டு பாடும் ரஜினி, தன்னுடைய ரசிகர்களுக்காகவும் தமிழர்களுக்காகவும் என்ன செய்து விட்டார் என்று பட்டியலிடத் தயாரா? குறைந்தப் பட்சம் தன் மனைவி நடத்தும் ஆஸ்ரம் பள்ளியில் தன் ரசிகர்களின் குழந்தைகளுக்கு இலவசக் கல்வியை வழங்குவாரா? காவிரி தண்ணீர் பிரச்னைக்குத் தனியாக உண்ணாவிரதம் இருந்து தமிழர்களின் ஒற்றுமைக்கு வேட்டு வைப்பார். ரஜினிக்கு நிஜமாகவே தமிழர்கள் மீதும் தமிழ்நாட்டின் மீதும் அக்கறை இருந்தால் தேர்தலுக்கு முன்பே தன் நிலையைத் தெளிவாகச் சொல்லி தமிழகம் எப்படி காப்பாற்றப் பட வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தால் இன்று ரஜினி பேசுவதை அவரின் நடிப்பில்லை என்று நாம் நம்பலாம்!
ஒரு வேளை அதிமுக ஆட்சிக்கு வராமல் திமுகவே மீண்டும் ஆட்சி அமைத்து இருந்தால் "தமிழகம் காப்பாற்றப் படவில்லை" என்று ரஜினி தெளிவாக அறிவித்து இருப்பாரா என்ற நியாயமான கேள்விக்கு அவரின் மனசாட்சிதான் பதில் சொல்ல வேண்டும்.
தமக்கு காரியம் ஆக வேண்டும் என்றால், மொழி, இன அடிப்படையில் மக்களிடையே வேற்றுமையை விதைத்து நாட்டு ஒற்றுமைக்கு வேட்டு வைக்கும் பால் தாக்கரே போன்ற மத துவம்சம் பிடித்தவர்களையும் தெய்வம் என்பார். ஐந்து ஆண்டு கால ஆட்சியின் போது கருணாநிதியைப் பற்றியோ கருணாநிதியின் ஆட்சியை பற்றியோ வாய் திறக்காத ரஜினி, தேர்தலில் வாக்களித்த பின்பு மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புவதாகக் கூறினார். தற்போது தமிழகம் காப்பாற்றப் பட்டு விட்டதாகத் தெரிவித்துள்ளார்.
கமல் - ரஜினி இவரில் நடிக்கத் தெரிந்தவர் யாரென்று கேட்டால் பட்டெனப் பதில் வரும் கமல்தான் என்று. ஆனால் உண்மையிலேயே கமலைவிட நடிக்க மட்டுமல்ல, வசனம் பேசவும் தெரிந்தவர் ரஜினிதான் என்பதை அவர் பேசியதாக வெளியான இத்தகவல் மூலம் அறிய முடிகிறது.
"உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்கமாட்டேன்..." என்ற பாடலை அவர் எழுதாவிட்டாலும் அவர் பாடுவது போன்று அமைக்கப்பட்டதால், ரஜினியே சொல்வது போன்றுதான் இன்றும் அவரது ரசிகர்கள் நினைத்துக் கொண்டுள்ளனர். ஆனால், உப்பிட்ட மண்ணை மறந்துவிட்டுத் தன்னுடைய வருமானத்தையெல்லாம் தன் தாய் மண்ணிலே முதலீடு செய்துள்ளார். ஒகனேக்கல் குடிநீர்த் திட்டத்தில் எழுந்த பிரச்னையில் ரஜினி நடித்த திரைப் படங்களை கர்நாடக மாநிலத்தில் திரையிட விட மாட்டோம் என்று கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள் பிரச்னை செய்த போது, உடனே மன்னிப்பு கேட்டு சமாதானம் பேசி, தான் நடித்த குசேலன் திரைப் படத்தை வெளியிட்டார்.
ரஜினிகாந்த் என்று அழைக்கப்படும் ஸிவாஜிராவ் கெய்க்வாட் ஒரு நடிகர்; தேர்ந்த நடிகர். நடிப்பு அவருக்கு வருவாய் ஈட்டும் தொழில். அரிதாரம் பூசி அவர் போடும் வேடங்கள் அவரின் உண்மையான குணாதிசயங்கள் அல்ல. அரிதாரத்தைக் கலைத்த பின் அவர் ஸிவாஜிராவ் கெய்க்வாட் எனும் தனி நபர். இது நடிப்புத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் அனைவருக்கும் பொருந்தும். தமிழ்நாட்டில் நடிகர்களின் ரசிகர்கள், தாம் விரும்பும் நடிகர்கள் திரையில் செய்யும் ஸூப்பர்மேன் சாகசங்களை நிஜ வாழ்விலும் செய்வர் என நம்பிக்கொண்டு அவர்களைத் தங்களுக்குத் தலைவர்களாக வரித்துக் கொண்டு, அவர்களின் கட்அவுட்டுக்கு மாலையிட்டுச் சூடம் கொளுத்திப் பாலாபிஷேகம் செய்கின்றனர்.
ரஜினிக்கு இணையாக சமகால நடிகர்கள் பலர் இருந்தும், ரஜினியைச் சுற்றிலும் ஓர் அரசியல் ஒளிவட்டத்தை ஏற்படுத்தி அதில் பலனடைந்தவர்கள் எல்லோருமே சினிமாத்துறை சார்ந்தவர்களே என்பது வெள்ளிடைமலை! இருப்பினும் 30+ ஆண்டுகள் ஆகியும், இனியும் அவர் நேரடி அரசியலில் ஈடுபட்டு ஒளியேற்றுவார் என்று நம்பும் அப்பாவி ரஜினி ரசிகர்களை நினைக்கும்போது, ரஜினியின் வசனத்தில் "அவர்களை யாராலும் காப்பாற்ற முடியாது" என்றே கருத வேண்டியுள்ளது.
சினிமா வசனகர்த்தா எழுதிக்கொடுத்த அவர் நடித்த படங்களிலுள்ள வசனங்களைக்கூட, அரசியல் கட்சிகளுக்கான மறைமுக எச்சரிக்கை என்று ரசிகர்களை ஏமாற்றியதில் ஊடகங்களின் பங்கும் இருப்பதை மறுப்பதற்கில்லை. சினிமா நடிகர்களில் ரஜினிமீது ஊடகங்கள் காட்டிய கரிசனம், பாரபட்சமானது என்பதையும் வெட்கத்துடன் ஒப்புக்கொள்ள வேண்டும்.
ஆட்சி மாறும்போது ஒரே வாசகங்களை மாற்றி மாற்றிப் போட்டு முதல்வர்களுக்கு பாராட்டு விழா என்ற பெயரில் ஜால்ரா அடித்த திரை உலகினரை நன்றாக புரிந்து வைத்திருந்த ஜெயலலிதா, இம்முறை அது தன்னிடம் நடக்காது என்பதைத் தனிப்பட்ட தொலைப்பேசி உரையாடலில் ரஜினி கூறிய வாசகத்தை அரசு அறிக்கையாக வெளியிட்டு ரஜினிக்கு நாமம் போட்டுக் காட்டியுள்ளார். ஆரம்பத்தில், ஆட்சிப் பொறுப்பேற்றதும் தனக்குப் "பாராட்டு விழா" நடத்த தேதி கேட்டு வந்த திரை உலகத்தினரைத் திருப்பியனுப்பி, இனிமேலும் உங்களின் அரிதார அற்ப ஜால்ரா புகழுரைகள் என்னிடம் பலிக்காது என்று முதல்வர் ஜெயலலிதா சம்மட்டியால் அடித்து விரட்டியது பாராட்டத்தக்கது! இது போன்ற சினிமாத் துறையினரின் சந்தர்ப்பவாத பேச்சுக்களை கருணாநிதி போன்ற அரசியல் சாணக்கியர்கள் இனியாவது புரிந்து கொள்ள வேண்டும்.
நோய் வாய்ப்பட்டுள்ள நிலையில் ரஜினியை இகழ்ந்து பேசுவது நமது நோக்கமல்ல. தமிழகமே அவர் மீது பித்தம் கொண்டது போன்ற தோற்றத்தை உருவாக்கி, அவரது ஒவ்வொரு அசைவையும் செய்திகளாக்கி, காசு பார்க்கும் ஊடக வியாபாரிகளின் பொறுப்பற்றத்தன்மையை வெளிச்சமிட்டுக் காட்டுவதோடு, நேரத்துக்கும் காலத்துக்கும் தகுந்ததுபோல் தன் நிலைபாடுகளை மாற்றி நிஜ வாழ்விலும் சிறந்த நடிகர்களாக வலம்வரும் இவர்களை நம்பியிருந்து தம் வாழ்வைத் தொலைக்காமல் நாட்டுக்கும் வீட்டுக்கும் நலம் பயப்பவர்களாக தம் வாழ்வை இளைஞர்கள் மாற்றியமைத்துக் கொள்ள சுட்டுவதே நம் நோக்கம்!
ரஜினி நலம் பெறட்டும்! தமிழர் தம் நிலை உணரட்டும்!!
இந்நேரம்.காம்
thillalangadi- பண்பாளர்
- பதிவுகள் : 163
இணைந்தது : 12/02/2011
Re: ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்!
ரஜ்னி உடல் நிலை சரியில்லாமல் இருந்து ,அவரை பற்றி செய்திகள் வராமலிருந்தால் பிரச்சினை இல்லை.ஆனால் ஊடகங்கள் அவரது உடல் நிலையை பற்றி ஒவொரு நிமிடதிற்கும் செய்தி வெளியீட்டு அவர் இல்லை யென்றால் தமில் நாடு இல்லை என்ற அளவுக்கு வெளியிட்டன. அதனால் தான் அவர் தெய்வம் இல்லை, அவர் காசுக்காக கண்டவளோடு கட்டியணைக்கும் ஒரு கூத்தாடி தான் ..அவரைக் கொண்டு நமக்கு என்ன நல்லது நடந்திருக்கிறது என்பதை அனைவரும் உணர வேண்டும் என்பதற்காகத்தான் இது போன்ற செய்திகளும் வெளிவருகிறது.
அவரினால் இன்று எத்தனை பேர் சிகரேட் மற்றும் மது பலகத்திற்கு அடிமையாயிருக்கிறார்கள் .....அவருடய சுய நலதிற்காக எத்தனை ரசிகர்களை அவர் தவறான வலியில் பயன்படுதியிருக்கிறார் என்பதை நாம் உணர வேண்டும்.
அதனால் தலைவர் என்று, சினிக் கூத்தாடிகள் பின் செல்வதால் நம்முடய பணமும் ,நேரமும் வீணாகிறதே தவிர வேறொன்றும் பயனில்லை.
என்னோட முலு சப்போர்ட்டும் ரேவதி அக்காவிற்கு தான்
அவரினால் இன்று எத்தனை பேர் சிகரேட் மற்றும் மது பலகத்திற்கு அடிமையாயிருக்கிறார்கள் .....அவருடய சுய நலதிற்காக எத்தனை ரசிகர்களை அவர் தவறான வலியில் பயன்படுதியிருக்கிறார் என்பதை நாம் உணர வேண்டும்.
அதனால் தலைவர் என்று, சினிக் கூத்தாடிகள் பின் செல்வதால் நம்முடய பணமும் ,நேரமும் வீணாகிறதே தவிர வேறொன்றும் பயனில்லை.
என்னோட முலு சப்போர்ட்டும் ரேவதி அக்காவிற்கு தான்
thillalangadi- பண்பாளர்
- பதிவுகள் : 163
இணைந்தது : 12/02/2011
Re: ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்!
thillalangadi wrote:ரஜ்னி உடல் நிலை சரியில்லாமல் இருந்து ,அவரை பற்றி செய்திகள் வராமலிருந்தால் பிரச்சினை இல்லை.ஆனால் ஊடகங்கள் அவரது உடல் நிலையை பற்றி ஒவொரு நிமிடதிற்கும் செய்தி வெளியீட்டு அவர் இல்லை யென்றால் தமில் நாடு இல்லை என்ற அளவுக்கு வெளியிட்டன. அதனால் தான் அவர் தெய்வம் இல்லை, அவர் காசுக்காக கண்டவளோடு கட்டியணைக்கும் ஒரு கூத்தாடி தான் ..அவரைக் கொண்டு நமக்கு என்ன நல்லது நடந்திருக்கிறது என்பதை அனைவரும் உணர வேண்டும் என்பதற்காகத்தான் இது போன்ற செய்திகளும் வெளிவருகிறது.
அவரினால் இன்று எத்தனை பேர் சிகரேட் மற்றும் மது பலகத்திற்கு அடிமையாயிருக்கிறார்கள் .....அவருடய சுய நலதிற்காக எத்தனை ரசிகர்களை அவர் தவறான வலியில் பயன்படுதியிருக்கிறார் என்பதை நாம் உணர வேண்டும்.
அதனால் தலைவர் என்று, சினிக் கூத்தாடிகள் பின் செல்வதால் நம்முடய பணமும் ,நேரமும் வீணாகிறதே தவிர வேறொன்றும் பயனில்லை.
என்னோட முலு சப்போர்ட்டும் ரேவதி அக்காவிற்கு தான்
நீங்கள் சொல்வது உண்மையாக இருந்து இருந்தால்
1. தமிழ் நாட்டின் முதல் அமைச்சர் ஜயலலிதா ரஜினி மனைவிக்கு போன் செய்து உங்களுக்கு எந்த உதவியும் செய்ய தயார் என்று கூறி இருக்கமாட்டார்
2.முன்னாள் முதல்வர் கருணாநிதி போன் செய்து அவர் மனைவியை விசாரித்து இருக்க மாட்டார்
3.குஜராத் முதல்வர் மோடியும் ,முன்னாள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் வந்து மருத்துவ மனைக்கு வந்து பார்த்து இருக்க மாட்டார்கள்
4.சோனியா காந்தி நலம் விசாரித்து இருக்கமாட்டார்
5.முகேஷ் அம்பானி தான் தனி விமானத்தை அனுப்ப ரெடி என்று கூறி இருக்கமாட்டார்
6.இப்போதைய எதிர்க்கட்சி தலைவர் விஜையகாந்து மருத்துவ மனைக்கு சென்று பார்த்து இருக்கமாட்டார்
7.தமிழக செய்திகளை அநேகமாக புறம் தள்ளும் ஆங்கில சேனல்கள் (என்டிடிவி,சிஎன்என்-ஐபிஎன்,டைம்ஸ் நோவ் ) போன்ற சேனல் கள் அடிக்கடி அவர் உடல் நிலையை தெரிவித்தபடி இருக்காது
8.டைம்ஸ் நாளிதழ் ஆசியாவின் முக்கிய 100 நபர்களில் ஒருவராக ரஜினியை தேர்ந்து எடுத்து இருக்காது
அவர் காசுக்காக கண்டவளோடு கட்டியணைக்கும் ஒரு கூத்தாடி' ஆக இருந்திருந்தால் ரசிகன் வேண்டுமானால் அவர் பினால் போவான் ,ஆனால் இந்தியாவின் மிக்கிய தலைவர்களும் அவர்பினால் செல்வதென்றால் ரஜினியிடம் என்னமோ இருக்கு .அத புரிந்து கொள்ளுங்கள்
ராம்
கோவை ராம்- இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
Re: ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்!
rarara wrote:thillalangadi wrote:ரஜ்னி உடல் நிலை சரியில்லாமல் இருந்து ,அவரை பற்றி செய்திகள் வராமலிருந்தால் பிரச்சினை இல்லை.ஆனால் ஊடகங்கள் அவரது உடல் நிலையை பற்றி ஒவொரு நிமிடதிற்கும் செய்தி வெளியீட்டு அவர் இல்லை யென்றால் தமில் நாடு இல்லை என்ற அளவுக்கு வெளியிட்டன. அதனால் தான் அவர் தெய்வம் இல்லை, அவர் காசுக்காக கண்டவளோடு கட்டியணைக்கும் ஒரு கூத்தாடி தான் ..அவரைக் கொண்டு நமக்கு என்ன நல்லது நடந்திருக்கிறது என்பதை அனைவரும் உணர வேண்டும் என்பதற்காகத்தான் இது போன்ற செய்திகளும் வெளிவருகிறது.
அவரினால் இன்று எத்தனை பேர் சிகரேட் மற்றும் மது பலகத்திற்கு அடிமையாயிருக்கிறார்கள் .....அவருடய சுய நலதிற்காக எத்தனை ரசிகர்களை அவர் தவறான வலியில் பயன்படுதியிருக்கிறார் என்பதை நாம் உணர வேண்டும்.
அதனால் தலைவர் என்று, சினிக் கூத்தாடிகள் பின் செல்வதால் நம்முடய பணமும் ,நேரமும் வீணாகிறதே தவிர வேறொன்றும் பயனில்லை.
என்னோட முலு சப்போர்ட்டும் ரேவதி அக்காவிற்கு தான்
நீங்கள் சொல்வது உண்மையாக இருந்து இருந்தால்
1. தமிழ் நாட்டின் முதல் அமைச்சர் ஜயலலிதா ரஜினி மனைவிக்கு போன் செய்து உங்களுக்கு எந்த உதவியும் செய்ய தயார் என்று கூறி இருக்கமாட்டார்
2.முன்னாள் முதல்வர் கருணாநிதி போன் செய்து அவர் மனைவியை விசாரித்து இருக்க மாட்டார்
3.குஜராத் முதல்வர் மோடியும் ,முன்னாள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் வந்து மருத்துவ மனைக்கு வந்து பார்த்து இருக்க மாட்டார்கள்
4.சோனியா காந்தி நலம் விசாரித்து இருக்கமாட்டார்
5.முகேஷ் அம்பானி தான் தனி விமானத்தை அனுப்ப ரெடி என்று கூறி இருக்கமாட்டார்
6.இப்போதைய எதிர்க்கட்சி தலைவர் விஜையகாந்து மருத்துவ மனைக்கு சென்று பார்த்து இருக்கமாட்டார்
7.தமிழக செய்திகளை அநேகமாக புறம் தள்ளும் ஆங்கில சேனல்கள் (என்டிடிவி,சிஎன்என்-ஐபிஎன்,டைம்ஸ் நோவ் ) போன்ற சேனல் கள் அடிக்கடி அவர் உடல் நிலையை தெரிவித்தபடி இருக்காது
8.டைம்ஸ் நாளிதழ் ஆசியாவின் முக்கிய 100 நபர்களில் ஒருவராக ரஜினியை தேர்ந்து எடுத்து இருக்காது
அவர் காசுக்காக கண்டவளோடு கட்டியணைக்கும் ஒரு கூத்தாடி' ஆக இருந்திருந்தால் ரசிகன் வேண்டுமானால் அவர் பினால் போவான் ,ஆனால் இந்தியாவின் மிக்கிய தலைவர்களும் அவர்பினால் செல்வதென்றால் ரஜினியிடம் என்னமோ இருக்கு .அத புரிந்து கொள்ளுங்கள்
ராம்
சரியா சொன்னீங்க ராம்....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்!
மஞ்சுபாஷிணி wrote:rarara wrote:thillalangadi wrote:ரஜ்னி உடல் நிலை சரியில்லாமல் இருந்து ,அவரை பற்றி செய்திகள் வராமலிருந்தால் பிரச்சினை இல்லை.ஆனால் ஊடகங்கள் அவரது உடல் நிலையை பற்றி ஒவொரு நிமிடதிற்கும் செய்தி வெளியீட்டு அவர் இல்லை யென்றால் தமில் நாடு இல்லை என்ற அளவுக்கு வெளியிட்டன. அதனால் தான் அவர் தெய்வம் இல்லை, அவர் காசுக்காக கண்டவளோடு கட்டியணைக்கும் ஒரு கூத்தாடி தான் ..அவரைக் கொண்டு நமக்கு என்ன நல்லது நடந்திருக்கிறது என்பதை அனைவரும் உணர வேண்டும் என்பதற்காகத்தான் இது போன்ற செய்திகளும் வெளிவருகிறது.
அவரினால் இன்று எத்தனை பேர் சிகரேட் மற்றும் மது பலகத்திற்கு அடிமையாயிருக்கிறார்கள் .....அவருடய சுய நலதிற்காக எத்தனை ரசிகர்களை அவர் தவறான வலியில் பயன்படுதியிருக்கிறார் என்பதை நாம் உணர வேண்டும்.
அதனால் தலைவர் என்று, சினிக் கூத்தாடிகள் பின் செல்வதால் நம்முடய பணமும் ,நேரமும் வீணாகிறதே தவிர வேறொன்றும் பயனில்லை.
என்னோட முலு சப்போர்ட்டும் ரேவதி அக்காவிற்கு தான்
நீங்கள் சொல்வது உண்மையாக இருந்து இருந்தால்
1. தமிழ் நாட்டின் முதல் அமைச்சர் ஜயலலிதா ரஜினி மனைவிக்கு போன் செய்து உங்களுக்கு எந்த உதவியும் செய்ய தயார் என்று கூறி இருக்கமாட்டார்
2.முன்னாள் முதல்வர் கருணாநிதி போன் செய்து அவர் மனைவியை விசாரித்து இருக்க மாட்டார்
3.குஜராத் முதல்வர் மோடியும் ,முன்னாள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் வந்து மருத்துவ மனைக்கு வந்து பார்த்து இருக்க மாட்டார்கள்
4.சோனியா காந்தி நலம் விசாரித்து இருக்கமாட்டார்
5.முகேஷ் அம்பானி தான் தனி விமானத்தை அனுப்ப ரெடி என்று கூறி இருக்கமாட்டார்
6.இப்போதைய எதிர்க்கட்சி தலைவர் விஜையகாந்து மருத்துவ மனைக்கு சென்று பார்த்து இருக்கமாட்டார்
7.தமிழக செய்திகளை அநேகமாக புறம் தள்ளும் ஆங்கில சேனல்கள் (என்டிடிவி,சிஎன்என்-ஐபிஎன்,டைம்ஸ் நோவ் ) போன்ற சேனல் கள் அடிக்கடி அவர் உடல் நிலையை தெரிவித்தபடி இருக்காது
8.டைம்ஸ் நாளிதழ் ஆசியாவின் முக்கிய 100 நபர்களில் ஒருவராக ரஜினியை தேர்ந்து எடுத்து இருக்காது
அவர் காசுக்காக கண்டவளோடு கட்டியணைக்கும் ஒரு கூத்தாடி' ஆக இருந்திருந்தால் ரசிகன் வேண்டுமானால் அவர் பினால் போவான் ,ஆனால் இந்தியாவின் மிக்கிய தலைவர்களும் அவர்பினால் செல்வதென்றால் ரஜினியிடம் என்னமோ இருக்கு .அத புரிந்து கொள்ளுங்கள்
ராம்
சரியா சொன்னீங்க ராம்....
அவர்கள் அனைவர்களும் பின்னால் போவதற்கு காரணம், அவருடைய ஆள் பலமும்,பண பலமும் தான் காரணம். அது அவர்களுடய அரசியல் ஆதாயம் தானே தவிர வேறில்லை
நமது தமிழ் அரசியல்வாதிகளும் சினிக் கூத்தாடிகள் தான் ..அதனால் அவரி ஆதரிப்பதால் வியப்போன்றுமில்லை..
உயிரோடு வாழும் சுதந்திர போராட்ட வீரர்களுக்கு நமது நாட்டில் மதிப்பு இல்லை. ஏனென்றால் அவர்கள் ஒன்றுமில்லாதவர்கள்.
ஆனால் இந்த ரஜ்னி அனைத்தையும் வாங்கும் பண வசதியுள்ளவர்.
அதனால் தான் பணமேன்றாள் பிணமும் வாயை திறக்கும் என்றார்கள்.
thillalangadi- பண்பாளர்
- பதிவுகள் : 163
இணைந்தது : 12/02/2011
Re: ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்!
thillalangadi wrote:மஞ்சுபாஷிணி wrote:rarara wrote:thillalangadi wrote:ரஜ்னி உடல் நிலை சரியில்லாமல் இருந்து ,அவரை பற்றி செய்திகள் வராமலிருந்தால் பிரச்சினை இல்லை.ஆனால் ஊடகங்கள் அவரது உடல் நிலையை பற்றி ஒவொரு நிமிடதிற்கும் செய்தி வெளியீட்டு அவர் இல்லை யென்றால் தமில் நாடு இல்லை என்ற அளவுக்கு வெளியிட்டன. அதனால் தான் அவர் தெய்வம் இல்லை, அவர் காசுக்காக கண்டவளோடு கட்டியணைக்கும் ஒரு கூத்தாடி தான் ..அவரைக் கொண்டு நமக்கு என்ன நல்லது நடந்திருக்கிறது என்பதை அனைவரும் உணர வேண்டும் என்பதற்காகத்தான் இது போன்ற செய்திகளும் வெளிவருகிறது.
அவரினால் இன்று எத்தனை பேர் சிகரேட் மற்றும் மது பலகத்திற்கு அடிமையாயிருக்கிறார்கள் .....அவருடய சுய நலதிற்காக எத்தனை ரசிகர்களை அவர் தவறான வலியில் பயன்படுதியிருக்கிறார் என்பதை நாம் உணர வேண்டும்.
அதனால் தலைவர் என்று, சினிக் கூத்தாடிகள் பின் செல்வதால் நம்முடய பணமும் ,நேரமும் வீணாகிறதே தவிர வேறொன்றும் பயனில்லை.
என்னோட முலு சப்போர்ட்டும் ரேவதி அக்காவிற்கு தான்
நீங்கள் சொல்வது உண்மையாக இருந்து இருந்தால்
1. தமிழ் நாட்டின் முதல் அமைச்சர் ஜயலலிதா ரஜினி மனைவிக்கு போன் செய்து உங்களுக்கு எந்த உதவியும் செய்ய தயார் என்று கூறி இருக்கமாட்டார்
2.முன்னாள் முதல்வர் கருணாநிதி போன் செய்து அவர் மனைவியை விசாரித்து இருக்க மாட்டார்
3.குஜராத் முதல்வர் மோடியும் ,முன்னாள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் வந்து மருத்துவ மனைக்கு வந்து பார்த்து இருக்க மாட்டார்கள்
4.சோனியா காந்தி நலம் விசாரித்து இருக்கமாட்டார்
5.முகேஷ் அம்பானி தான் தனி விமானத்தை அனுப்ப ரெடி என்று கூறி இருக்கமாட்டார்
6.இப்போதைய எதிர்க்கட்சி தலைவர் விஜையகாந்து மருத்துவ மனைக்கு சென்று பார்த்து இருக்கமாட்டார்
7.தமிழக செய்திகளை அநேகமாக புறம் தள்ளும் ஆங்கில சேனல்கள் (என்டிடிவி,சிஎன்என்-ஐபிஎன்,டைம்ஸ் நோவ் ) போன்ற சேனல் கள் அடிக்கடி அவர் உடல் நிலையை தெரிவித்தபடி இருக்காது
8.டைம்ஸ் நாளிதழ் ஆசியாவின் முக்கிய 100 நபர்களில் ஒருவராக ரஜினியை தேர்ந்து எடுத்து இருக்காது
அவர் காசுக்காக கண்டவளோடு கட்டியணைக்கும் ஒரு கூத்தாடி' ஆக இருந்திருந்தால் ரசிகன் வேண்டுமானால் அவர் பினால் போவான் ,ஆனால் இந்தியாவின் மிக்கிய தலைவர்களும் அவர்பினால் செல்வதென்றால் ரஜினியிடம் என்னமோ இருக்கு .அத புரிந்து கொள்ளுங்கள்
ராம்
சரியா சொன்னீங்க ராம்....
அவர்கள் அனைவர்களும் பின்னால் போவதற்கு காரணம், அவருடைய ஆள் பலமும்,பண பலமும் தான் காரணம். அது அவர்களுடய அரசியல் ஆதாயம் தானே தவிர வேறில்லை
நமது தமிழ் அரசியல்வாதிகளும் சினிக் கூத்தாடிகள் தான் ..அதனால் அவரி ஆதரிப்பதால் வியப்போன்றுமில்லை..
உயிரோடு வாழும் சுதந்திர போராட்ட வீரர்களுக்கு நமது நாட்டில் மதிப்பு இல்லை. ஏனென்றால் அவர்கள் ஒன்றுமில்லாதவர்கள்.
ஆனால் இந்த ரஜ்னி அனைத்தையும் வாங்கும் பண வசதியுள்ளவர்.
அதனால் தான் பணமேன்றாள் பிணமும் வாயை திறக்கும் என்றார்கள்.
எனக்கு சப்போர்ட் பனதிற்கு நன்றி
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்!
மஞ்சுபாஷிணி wrote:rarara wrote:thillalangadi wrote:ரஜ்னி உடல் நிலை சரியில்லாமல் இருந்து ,அவரை பற்றி செய்திகள் வராமலிருந்தால் பிரச்சினை இல்லை.ஆனால் ஊடகங்கள் அவரது உடல் நிலையை பற்றி ஒவொரு நிமிடதிற்கும் செய்தி வெளியீட்டு அவர் இல்லை யென்றால் தமில் நாடு இல்லை என்ற அளவுக்கு வெளியிட்டன. அதனால் தான் அவர் தெய்வம் இல்லை, அவர் காசுக்காக கண்டவளோடு கட்டியணைக்கும் ஒரு கூத்தாடி தான் ..அவரைக் கொண்டு நமக்கு என்ன நல்லது நடந்திருக்கிறது என்பதை அனைவரும் உணர வேண்டும் என்பதற்காகத்தான் இது போன்ற செய்திகளும் வெளிவருகிறது.
அவரினால் இன்று எத்தனை பேர் சிகரேட் மற்றும் மது பலகத்திற்கு அடிமையாயிருக்கிறார்கள் .....அவருடய சுய நலதிற்காக எத்தனை ரசிகர்களை அவர் தவறான வலியில் பயன்படுதியிருக்கிறார் என்பதை நாம் உணர வேண்டும்.
அதனால் தலைவர் என்று, சினிக் கூத்தாடிகள் பின் செல்வதால் நம்முடய பணமும் ,நேரமும் வீணாகிறதே தவிர வேறொன்றும் பயனில்லை.
என்னோட முலு சப்போர்ட்டும் ரேவதி அக்காவிற்கு தான்
நீங்கள் சொல்வது உண்மையாக இருந்து இருந்தால்
1. தமிழ் நாட்டின் முதல் அமைச்சர் ஜயலலிதா ரஜினி மனைவிக்கு போன் செய்து உங்களுக்கு எந்த உதவியும் செய்ய தயார் என்று கூறி இருக்கமாட்டார்
2.முன்னாள் முதல்வர் கருணாநிதி போன் செய்து அவர் மனைவியை விசாரித்து இருக்க மாட்டார்
3.குஜராத் முதல்வர் மோடியும் ,முன்னாள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் வந்து மருத்துவ மனைக்கு வந்து பார்த்து இருக்க மாட்டார்கள்
4.சோனியா காந்தி நலம் விசாரித்து இருக்கமாட்டார்
5.முகேஷ் அம்பானி தான் தனி விமானத்தை அனுப்ப ரெடி என்று கூறி இருக்கமாட்டார்
6.இப்போதைய எதிர்க்கட்சி தலைவர் விஜையகாந்து மருத்துவ மனைக்கு சென்று பார்த்து இருக்கமாட்டார்
7.தமிழக செய்திகளை அநேகமாக புறம் தள்ளும் ஆங்கில சேனல்கள் (என்டிடிவி,சிஎன்என்-ஐபிஎன்,டைம்ஸ் நோவ் ) போன்ற சேனல் கள் அடிக்கடி அவர் உடல் நிலையை தெரிவித்தபடி இருக்காது
8.டைம்ஸ் நாளிதழ் ஆசியாவின் முக்கிய 100 நபர்களில் ஒருவராக ரஜினியை தேர்ந்து எடுத்து இருக்காது
அவர் காசுக்காக கண்டவளோடு கட்டியணைக்கும் ஒரு கூத்தாடி' ஆக இருந்திருந்தால் ரசிகன் வேண்டுமானால் அவர் பினால் போவான் ,ஆனால் இந்தியாவின் மிக்கிய தலைவர்களும் அவர்பினால் செல்வதென்றால் ரஜினியிடம் என்னமோ இருக்கு .அத புரிந்து கொள்ளுங்கள்
ராம்
சரியா சொன்னீங்க ராம்....
என்ன சரி நீங்களும் ஏன் அக்கா அவங்களுக்கு சப்போர்ட் பண்றீங்க பணம் இருந்தால் யார் வேணுன்ன யாரையும் நலம் விசாரிபங்க அவருக்கு கிடைதா மரியாதை எல்லாம் அவர் ஒரு நடிகர் என்பதால் மட்டுமா நல்ல மனிதர் என்பதால் அல்ல
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்!
இந்த சண்டையா இதோட நிறுதிக்கலாம் இல்லன ஈகரை நண்பர்கள்ளுக்கு
குள்ள சண்ட வரும் ஓகே..........
சமாதானம் ராம் அண்ணா
குள்ள சண்ட வரும் ஓகே..........
சமாதானம் ராம் அண்ணா
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்!
உலகமே ஒரு நாடக மேடை ரஜினிய மட்டும் குறை சொன்ன எப்படி
gowrisankar- புதியவர்
- பதிவுகள் : 43
இணைந்தது : 25/03/2011
Re: ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்!
ரஜினியை பற்றிய உண்மை கட்டுரையை பகிர்ந்தமைக்கு நன்றி தில்லாலங்கடி.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்!
மகா பிரபு wrote:ரஜினியை பற்றிய உண்மை கட்டுரையை பகிர்ந்தமைக்கு நன்றி தில்லாலங்கடி.
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Page 10 of 11 • 1, 2, 3 ... , 9, 10, 11
Similar topics
» தேசிய விருதுகள் அறிவிப்பு-சிறந்த நடிகர் தனுஷ், சிறந்த நடிகை சரண்யா-தம்பி ராமையா சிறந்த துணை நடிகர்
» விஜய் திரைப்பட விருதுகள் அறிவிப்பு- சிறந்த நடிகர் விக்ரம், சிறந்த வில்லன் ரஜினிகாந்த்
» கேரள மாநில சினிமா விருது அறிவிப்பு: சிறந்த நடிகை பார்வதி- சிறந்த நடிகர் இந்திரான்ஸ்; முழுவிவரம்
» 2018-ம் ஆண்டுக்கான கன்னட திரைப்பட விருதுகள்; சிறந்த நடிகர்-ராகவேந்திரா ராஜ்குமார்; சிறந்த நடிகை-மேகனா ராஜ்
» சிறந்த தந்தையராக அமிதாப் - ரஜினி தேர்வு!
» விஜய் திரைப்பட விருதுகள் அறிவிப்பு- சிறந்த நடிகர் விக்ரம், சிறந்த வில்லன் ரஜினிகாந்த்
» கேரள மாநில சினிமா விருது அறிவிப்பு: சிறந்த நடிகை பார்வதி- சிறந்த நடிகர் இந்திரான்ஸ்; முழுவிவரம்
» 2018-ம் ஆண்டுக்கான கன்னட திரைப்பட விருதுகள்; சிறந்த நடிகர்-ராகவேந்திரா ராஜ்குமார்; சிறந்த நடிகை-மேகனா ராஜ்
» சிறந்த தந்தையராக அமிதாப் - ரஜினி தேர்வு!
Page 10 of 11
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|