ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜூன் 21 - உலக இசை தினம்!

Go down

ஜூன் 21 - உலக இசை தினம்! Empty ஜூன் 21 - உலக இசை தினம்!

Post by சிவா Mon Jun 20, 2011 7:02 pm

இசை, மனிதனை மட்டுமல்ல, இறைவனையும் மயக்கும் தன்மை கொண்டது. தேவார மும்மூர்த்திகளின் இசை கேட்க, சிவபெருமான் நடத்திய நாடகங்கள் சுவையானவை... நாகப்பட்டினம் அருகிலுள்ள வேதாரண்யம் சிவாலயம், ஒரு காலத்தில் சில காரணங்களால் மூடப்பட்டது. அவ்வூருக்கு சம்பந்தரும், திருநாவுக்கரசரும் வந்தனர். கதவு அடைக்கப்பட்டிருந்ததால், கோவிலுக்கு பக்கவாட்டு வாசல் வழியாக பக்தர்கள் சென்று வந்ததைக் கண்டு, அவர்கள் வருத்தம் அடைந்தனர். கதவு திறக்க வேண்டுமென சம்பந்தர் ஒரே ஒரு பாட்டைத் தான் பாடினார்; கதவு திறந்தது. மக்கள் மகிழ்ச்சியுடன் உள்ளே சென்று இறைவனை வழிபட்டனர். திறந்த கதவை அடைக்க அவர்களால் முடியவில்லை; எனவே, கதவை மூடுவதற்காக, தொடர்ச்சியாக, 11 பாடல்கள் பாடினார் நாவுக்கரசர்; கதவு மூடிக் கொண்டது.

"சம்பந்தரே... நீங்கள் ஒரே பாட்டில் கதவைத் திறந்து விட்டீர்கள். உங்கள் சக்தியின் முன், நான் மிகச் சாதாரணமானவன் என்பதை நிரூபிக்க நினைத்த சிவன், என்னை, 11 பாடல்கள் பாட வைத்து விட்டான்...' என, தன்னடக்கத்துடன் சொன்னார் நாவுக்கரசர்.

"நாவுக்கரசரே... தாங்கள் நினைப்பது தவறு. என்னுடைய, ஒரு பாட்டே இறைவனுக்கு சலித்து விட்டது போலும்; அதனால், அவன் கதவைத் திறந்து விட்டான். உங்கள் பாடல்களைக் கேட்க, கேட்க தேனாய் தித்தித்ததால் தான், அவன் உங்களை தொடர்ந்து பாட வைத்திருக்கிறான்...' என்றார் சம்பந்தர்.

இப்படி, இசை கேட்க ஆசைப்பட்டு, சிவபெருமான் ஒரு லீலையை நிகழ்த்தினார்; மற்றொரு நிகழ்வும் சுவையானது... சுந்தரர் எனும் வாலிபருக்கு, திருமணம் முடிவானது. மணவறைக்கு வந்து விட்டாள் மணப்பெண். தாலி கட்டும் வேளையில் முதியவர் வேடத்தில் நுழைந்தார் சிவன். திருமணத்தை தடுத்து நிறுத்திய அவர், "இந்த மணமகன் எனக்கு அடிமை என, இவனது முன்னோர் சாசனம் எழுதித் தந்துள்ளனர். இவனோ திருமணம் செய்து, தப்பிக்க எண்ணுகிறான். இவனை என்னுடன் அனுப்புங்கள்...' என்றார்; மறுத்தார் சுந்தரர்.

"இந்தக் கிழவன் ஒரு பித்தன்; அதனால் தான், பைத்தியம் பிடித்து என்னை அடிமை என்கிறான்...' என்று கத்தினார்; ஆனால், முதியவர் தகுந்த ஆதாரங்களைக் காட்டியதால், ஊர்ப் பெரியவர்கள் சுந்தரரை முதியவருடன் அனுப்பி வைத்தனர். திருவெண்ணெய்நல்லூருக்கு அவரை அழைத்துச் சென்று, சிவலிங்கத்துடன் ஐக்கியமாகி விட்டார். இதைக்கண்டு ஆனந்த மடைந்த சுந்தரர், "இறைவா... நீயா என்னை அடிமை கொண்டது...' என மகிழ்ந்தார். அப்போது, சிவன் அவர் முன் தோன்றி, தன்னைப் பாடும்படி, வேண்டினார். எப்படி பாடுவது என சுந்தரர் கேட்கவே, "நீ என்னை பித்தன் என திட்டினாய். அந்த வார்த்தையை முதலாவதாகக் கொண்டே பாடு...' என சொல்லவே, "பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா...' என பிரபலமான பாடலைப் பாடினார். இவரே சிவபெருமானை, "ஏழிசையாய் இசைப்பயனாய் இருப்பவனே...' என்று பாடியுள்ளார்.

தியாகராஜர் எனும் இசைமேதை, ராமபிரானை வாழ்த்திப் பாடிய கீர்த்தனைகள் பேரின்பம் தருபவை. சங்கீத மாணவர்கள் தியாகராஜருக்கு தேன் அபிஷேகம் செய்கின்றனர். இங்கு வந்து அரங்கேற்றம் செய்பவர்கள் ஏராளம். இவரது ஆராதனை விழாவில், பஞ்சரத்ன கீர்த்தனைகளை பிரபல இசைக் கலைஞர்கள் பாடுவர். தியாகராஜர் இந்த கீர்த்தனைகளை பாடிய போதுதான், ராமபிரான் அவருக்கு காட்சி கொடுத்தார். உலக இசை தினத்தன்று, இசையால்

இறைவனைப் பாடிய மாணிக்க வாசகர், அருணகிரியார், நக்கீரர், குமரகுருபரர் உள்ளிட்ட இசைஞானிகளின் பாடல்கள், மழை போல் நம் இல்லங்களை நனைக்கட்டும்.

***

தி. செல்லப்பா


ஜூன் 21 - உலக இசை தினம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum