புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Poll_c10பதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Poll_m10பதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Poll_c10 
21 Posts - 70%
heezulia
பதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Poll_c10பதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Poll_m10பதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Poll_c10 
6 Posts - 20%
வேல்முருகன் காசி
பதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Poll_c10பதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Poll_m10பதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Poll_c10 
1 Post - 3%
viyasan
பதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Poll_c10பதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Poll_m10பதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
பதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Poll_c10பதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Poll_m10பதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Poll_c10பதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Poll_m10பதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Poll_c10 
213 Posts - 42%
heezulia
பதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Poll_c10பதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Poll_m10பதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
பதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Poll_c10பதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Poll_m10பதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
பதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Poll_c10பதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Poll_m10பதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Poll_c10 
21 Posts - 4%
prajai
பதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Poll_c10பதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Poll_m10பதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
பதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Poll_c10பதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Poll_m10பதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
பதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Poll_c10பதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Poll_m10பதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Poll_c10 
8 Posts - 2%
Guna.D
பதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Poll_c10பதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Poll_m10பதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Poll_c10பதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Poll_m10பதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Poll_c10 
7 Posts - 1%
mruthun
பதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Poll_c10பதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Poll_m10பதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?...


   
   
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Mon Jun 20, 2011 9:52 am

பத்திரிக்கையாளர்கள் மீதான சமீபத்திய தாக்குதல்களும், பத்திரிக்கையாளர்களின் பாதுகாப்புகள் குறித்த பல்வேறு சர்வே முடிவுகளும் தொடர்ந்து கவலை கொள்ளத்தக்க நிலைமையையே உணர்த்திக் கொண்டிருக்கிறது.

சமீபத்தில் மும்பையில் ஜெ தேய் என்ற மிட்-டே பத்திரிக்கையின் புலனாய்வு நிருபர் சுட்டுக் கொல்லப்பட்டு நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சி அலை உண்டாக்கப்பட்டிருக்கிறது. அதைப் போலவே கேரளாவிலும் மாத்ருபூமி பத்திரிக்கையின் கொல்லம் நிருபர் உன்னிதன் கூலிப்படைகளின் கொலை முயற்சியில் படுகாயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரைக் கொலை செய்ய கூலிப்படைகளை ஏவியதாக கேரளாவின் ஆயுதப்படைப்பிரிவு போலீஸ் டி.எஸ்.பி ஒருவரே கைது செய்யப்பட்டிருப்பது எல்லாவற்றையும் விட அதிர்ச்சியளிக்கும் செய்தியாகும்.

உண்மையிலேயே இந்தியாவில் பத்திரிகையாளர்களின் நிலை என்ன? பத்திரிக்கை சுதந்திரம் நிலை நாட்டப்பட்டுக் கொண்டிருக்கிறதா? இல்லை… எழுத்துரிமை கொஞ்ச கொஞ்சமாய் அடிமைப்படுத்தப்படுமா? பத்திரிக்கை சுதந்திரம் குறித்த சமீபத்திய உலகளாவிய ஆய்வு ஒன்றின் முடிவில் பத்திரிக்கையாளர்களுக்கு பாதுகாப்பில்லாத உலகின் டாப்20 நாடுகளில் இந்தியாவும் இடம் பிடித்திருப்பது உண்மையிலேயே நாமெல்லாம் கவலைப்பட வேண்டிய விஷயமென்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. அதே போன்ற மற்றுமொரு ஆய்வில் தெற்கு ஆசிய பிராந்தியத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு பாதுகாப்பில்லாத நாடுகள் வரிசையில் இந்தியா மூன்றாம் இடம் பிடித்திருப்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய செய்தியாயிருக்கிறது.

எதனால் இந்தியாவில் இது போன்ற சூழ்நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது என்று ஆராயத் தொடங்கினால் கீழ் வரும் காரணங்கள் வெகு எளிதாய் புரிபடத் தொடங்கும்.

# சமீபத்திய ஆண்டுகளில் அரசியல்வாதிகளுக்கு எதிராக பத்திரிக்கையாளர்கள் நடத்திய பல அதிரடி ஸ்பை கேமரா ஆபரேஷன்களால் ஊழல்வாதிகளுக்கு பத்திரிக்கைகள் மீதான கோபமும் வெறுப்பும் அதிகரித்திருக்கிறது.

# அரசியலையும், ஊழல்களையும் அக்கு அக்காய் பிரிக்கும் பல புலனாய்வுப் பத்திரிக்கைகள் மாநிலம் தோறும் உருவாகிக் கொண்டிருப்பது அரசியல்வாதிகளுக்கும் ஊழல்வாதிகளுக்கும் எரிச்சலை உண்டு பண்ணிக்கொண்டிருக்கிறது.

# பத்திரிக்கைகள் முகத்திரைகளைக் கிழிக்க முயன்று மோதுவது அதிகார பலமும் பண பலமும் கொண்ட பல பெரிய கைகளிடம் என்ற காரணமும் பத்திரிக்கையாளர்கள் மீதான தாக்குதலின் அடிப்படையே.

# எந்தவொரு விஷயத்தின் உண்மை முகத்தையும் படித்தவர் முதல் பாமரன் வரை உடனுக்குடன் கொண்டு சேர்த்து விடும் பத்திரிக்கை உலகத்தின் அதிவேக வளர்ச்சியால் பல விஷயங்களை மூடி மறைத்துவிட முடியாமல் திணரும் அதிகாரவர்க்கத்தின் வெறுப்பு.

# மாநில மற்றும் மத்திய அரசை தேர்ந்தெடுக்கும் தேர்தல்களிலும் மக்களின் மனநிலையை மாற்றும் சக்தி கொண்ட அளவுக்கு பத்திரிக்கைகள் வளர்ந்திருப்பது அரசியல்வாதிகளின் கண்களை உறுத்தத் தொடங்கியிருக்கிறது.

# எல்லாவற்றுக்கும் மேலாக தனிமனித ஒழுக்கத்தைப் பேணாத நமது கலாச்சாரமும், கடுமையான தண்டனைகள் இல்லாத, எந்தக் குற்றத்தில் இருந்தும் எளிதில் தப்பித்துக் கொள்ளக்கூடிய நமது சட்டங்களும்கூட பத்திரிக்கையாளர்களின் மீதான தாக்குதல்களுக்கு ஒரு முக்கிய காரணமே.

பத்திரிக்கைகள் போன்றே இந்தியாவில் அதிவேக வளர்ச்சியில் இருக்கும் மற்றொரு விஷயம் இணையதளத்தின் பதிவுலகம். பத்திரிக்கைகளுக்கு கொஞ்சமும் சளைக்காமல் ஆட்சியாளர்களையும், அரசியல்வாதிகளையும் விமர்சிக்கும் பணியை பதிவுலகமும் செய்து வருவதை இப்போதுதான் அரசியல்வாதிகள் உணரத் தொடங்கியிருக்கிறார்கள். அதுவும் பதிவுலகத்தின் வானளாவிய சுதந்திரம் காரணமாக இங்கே ஊழல்வாதிகள் பத்திரிக்கைகளை விட மிக மோசமாய் விமர்சிக்கப்படுகிறார்கள்.

தமிழகத்தின் சமீபத்திய தேர்தல் முடிவுகளுக்கு பதிவுலகமும் ஒரு முக்கிய காரணமென்ற செய்தி மத்திய அரசை எட்டியிருப்பதாய் கேள்வி. ஏற்கனவே நாடு முழுவதும் பதிவுலகத்தை கண்காணிக்கும் பணியை ஆரம்பித்துவிட்ட மத்திய அரசுக்கு இந்தச் செய்தியால் பதிவுலகத்தின் மேலான வெறுப்பு இன்னும் அதிகரித்திருக்கவே செய்திருக்கிறது. பதிவுலகத்தை இந்தியாவில் மொத்தமாய் தடை செய்ய முடியுமா என்று ஏற்கனவே மத்திய அரசின் சட்டவல்லுனர்களைக் கொண்டு ஆராயத் தொடங்கியாகிவிட்டது.

இதில் வேடிக்கை என்னவென்றால் எதிர்க்கட்சி, ஆளும்கட்சி என்ற பாகுபாடுகள் எதுவுமின்றி அரசியல்வாதிகள் அனைவரும் ஒன்று சேர்ந்திருப்பது பதிவுலகத்தை முளையிலேயே கிள்ளியெறியும் முயற்சியில் மட்டுமே. ஏனென்றால் எல்லா அரசியல்வாதிகளுமே நாளை பதிவுலகம் நமக்கும் எதிரிதான் என்பதைப் புரிந்து கொண்டுவிட்டார்கள். எளிதாய்ப் பிடுங்கி வீசலாம் என்று எண்ணிக்கொண்டு வந்தவர்கள் பதிவுலகம் ஆலமரமாகிப் போனதைக் கண்டு இப்போது கோடாலியைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

வெறும் காமெடியும், கவிதைகளும், சினிமா விமர்சனமும், சமையல் குறிப்புகளும் எழுதிக்கொண்டிருக்கும் பதிவர்களுக்கு எந்தவொரு பிரச்சினையும் வரப்போவதில்லை. ஆனால் அரசியல் எழுதும் பதிவர்கள் கவனிக்க வேண்டிய செய்தி ஒன்று இருக்கிறது. இதுவரை பதிவுலகத்தில் நீங்கள் எழுதும் அரசியல் கட்டுரைகள் சம்பந்தப்பட்டவர்களை சென்றடைந்திருக்காது என்று நீங்கள் நம்பினால்…ஸாரி,அது தவறென்பதை புரிந்து கொள்ளுங்கள். ஆங்கிலமானாலும் சரி… மாநில மொழிகளானாலும் சரி… பதிவுலகத்தின் அரசியல் கட்டுரைகள் மத்திய மற்றும் பல்வேறு மாநில அரசுகளால் கண்காணிக்கப்பட்டு வருகிறது என்பதே நிதர்சனமான உண்மை. இப்போதைய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் நீங்கள் என்ன புனைப்பெயரில் எழுதினாலும் அரசு நினைத்தால் ஒரு சில மணித்துளியில் உங்கள் வீட்டு வாசலுக்கு வந்து நிற்கலாம்.

உங்களது கட்டுரைகளால் பாதிக்கப்படும் அதிகாரவர்க்கம் உங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கமுடியாமல் போகும் பட்சத்தில் அவர்களது வழக்கமான பாணியில் உங்களுக்கு பரிசளிக்க முயலுவார்கள். ஏற்கனவே பதிவுலகம் குறிவைக்கப்பட்டுவிட்டதால் இனி வரும் நாட்களில் கவனமாக இல்லாத பதிவர்கள் நிச்சயமாய் பாதிக்கப்படக்கூடும். இது நிச்சயமாய் அரசியல் எழுதும் பதிவர்களை இனி எழுதவேண்டாம் என்று கூறும் செய்தியல்ல. இனி வரும் நாட்களில் கவனமாக இருங்கள் என்பதான வெறும் எச்சரிக்கை செய்தி மட்டுமே. மேலும் மத்திய அரசும் பதிவுலகத்தை தீவிரமாகக் கண்காணித்து வருவதால் அரசியல் எழுதும் ஒவ்வொரு பதிவர்களும் கொஞ்சம் உஷாராய் இருப்பதில் தவறொன்றுமில்லை.

பதிவர்களுக்காக ஒரு சக பதிவராய் எனக்குத் தெரிந்ததைக் கூறியிருக்கிறேன். இதை அக்கறையான எச்சரிக்கையாய் எடுத்துக்கொள்வதும்… இல்லை எள்ளி நகையாடுவதும் அவரவர் விருப்பத்தைச் சார்ந்தது.

ஜாக்கிரதை நண்பர்களே… இனி பதிவர்களும் குறிவைக்கப்படலாம்!
கதம்ப மாலை



பதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Pபதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Oபதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Sபதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Iபதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Tபதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Iபதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Vபதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Eபதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Emptyபதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Kபதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Aபதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Rபதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Tபதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Hபதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Iபதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Cபதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... K
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Jun 20, 2011 10:08 am

பதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... 56667 பதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... 56667

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Jun 20, 2011 10:42 am

எழுத்துரிமை கொஞ்ச கொஞ்சமாய் அடிமைப்படுத்தப்படுமா?
என்ன கொடுமை சார் இது

உண்மையை வெளிக்கொண்டு வருவது பத்திரிக்கை தான் அதுவும் இப்படி அராஜகம் செய்தால்! என்ன கொடுமை சார் இது என்ன செய்வது..

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Mon Jun 20, 2011 12:20 pm

positivekarthick wrote:
................................
பதிவர்களுக்காக ஒரு சக பதிவராய் எனக்குத் தெரிந்ததைக் கூறியிருக்கிறேன். இதை அக்கறையான எச்சரிக்கையாய் எடுத்துக்கொள்வதும்… இல்லை எள்ளி நகையாடுவதும் அவரவர் விருப்பத்தைச் சார்ந்தது.

ஜாக்கிரதை நண்பர்களே… இனி பதிவர்களும் குறிவைக்கப்படலாம்!
கதம்ப மாலை

எனக்குக் கூட எச்சரிக்கை வந்தது நண்பா!

அதற்கு நான், "எது சொல்லுறதா இருந்தாலும் நேருல வாங்க" ன்னு சொன்னேன். அதற்குப் பிறகு எந்தத் தகவலும் வரவில்லை!

நமக்கும் அரசியல், அதிகாரம், மிரட்டல், சட்டம், இதெல்லாம் தெரியும் இல்ல.....





பதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 20, 2011 3:25 pm

ANTHAPPAARVAI wrote:
positivekarthick wrote:
................................
பதிவர்களுக்காக ஒரு சக பதிவராய் எனக்குத் தெரிந்ததைக் கூறியிருக்கிறேன். இதை அக்கறையான எச்சரிக்கையாய் எடுத்துக்கொள்வதும்… இல்லை எள்ளி நகையாடுவதும் அவரவர் விருப்பத்தைச் சார்ந்தது.

ஜாக்கிரதை நண்பர்களே… இனி பதிவர்களும் குறிவைக்கப்படலாம்!
கதம்ப மாலை

எனக்குக் கூட எச்சரிக்கை வந்தது நண்பா!

அதற்கு நான், "எது சொல்லுறதா இருந்தாலும் நேருல வாங்க" ன்னு சொன்னேன். அதற்குப் பிறகு எந்தத் தகவலும் வரவில்லை!

நமக்கும் அரசியல், அதிகாரம், மிரட்டல், சட்டம், இதெல்லாம் தெரியும் இல்ல.....


பதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... 224747944 பதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... 224747944 பதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... 224747944



பதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 20, 2011 3:35 pm

என்ன கொடுமை இது.... பயம்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பதிவர்களுக்கும் குறிவைக்கப்படுகிறதா?... 47
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Mon Jun 20, 2011 5:15 pm

நீங்க பயமுறுதுறீங்களா ? பயம்

அந்த திருடனுக்களு கெல்லாம் கேக்கணும்னு தன்ன இங்க்கா வந்து காதுறது ..

அவங்க கிட்ட நேரடியா கேக்க முடில்லா இப்படி யசு கேபமே .

இங்கயும் வந்து பயம் கடாதீங்க நண்பா



ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Jun 20, 2011 5:18 pm

அதிர்ச்சி



கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Jun 20, 2011 5:37 pm

நாமார்க்கும் குடியல்லோம்
நமனை அஞ்சோம் !




வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக