ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
கண்டதேவிப் புராணம் - Page 9 Poll_c10கண்டதேவிப் புராணம் - Page 9 Poll_m10கண்டதேவிப் புராணம் - Page 9 Poll_c10 
ayyasamy ram
கண்டதேவிப் புராணம் - Page 9 Poll_c10கண்டதேவிப் புராணம் - Page 9 Poll_m10கண்டதேவிப் புராணம் - Page 9 Poll_c10 
mohamed nizamudeen
கண்டதேவிப் புராணம் - Page 9 Poll_c10கண்டதேவிப் புராணம் - Page 9 Poll_m10கண்டதேவிப் புராணம் - Page 9 Poll_c10 
VENKUSADAS
கண்டதேவிப் புராணம் - Page 9 Poll_c10கண்டதேவிப் புராணம் - Page 9 Poll_m10கண்டதேவிப் புராணம் - Page 9 Poll_c10 

Top posting users this month
heezulia
கண்டதேவிப் புராணம் - Page 9 Poll_c10கண்டதேவிப் புராணம் - Page 9 Poll_m10கண்டதேவிப் புராணம் - Page 9 Poll_c10 
ayyasamy ram
கண்டதேவிப் புராணம் - Page 9 Poll_c10கண்டதேவிப் புராணம் - Page 9 Poll_m10கண்டதேவிப் புராணம் - Page 9 Poll_c10 
mohamed nizamudeen
கண்டதேவிப் புராணம் - Page 9 Poll_c10கண்டதேவிப் புராணம் - Page 9 Poll_m10கண்டதேவிப் புராணம் - Page 9 Poll_c10 
VENKUSADAS
கண்டதேவிப் புராணம் - Page 9 Poll_c10கண்டதேவிப் புராணம் - Page 9 Poll_m10கண்டதேவிப் புராணம் - Page 9 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்டதேவிப் புராணம்

Page 9 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9

Go down

கண்டதேவிப் புராணம் - Page 9 Empty கண்டதேவிப் புராணம்

Post by சிவா Mon Jun 20, 2011 3:03 am

First topic message reminder :

கண்டதேவிப் புராணம்
திரிசிரபுரம் மஹாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் இயற்றியது.



இஃது சிவநேசம் பொருந்திய வெளிமுத்தி வயிரவ ஐயாவவர்கள் அநுமதிப்படி தேவகோட்டை மு.குப்பான் செட்டியாரவர்கள் குமாரர் முத்தரசப்பசெட்டியாரால் சென்னை இலக்ஷ்மீவிலாச அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது.


கடவுள் வாழ்த்து


1 விநாயகர்
பூமேவு பரையொருபாற் பெருமான்பின் பாற்றழுவிப் புணர்ந்தொன் றாய
மாமேவு பெண்பாலாண் பாலொடுமா றுற்றெரிந்து மாறு றாமே
தூமேவு முன்பால்வந் துறத்தழீஇ யொருமருப்பாற் றுணைப்பா லாய
தேமேவு முகமலரும் வலம்புரிக்குஞ் சரத்திருதாள் சேர்ந்து வாழ்வாம் 1

2 சொர்ன்னவருடேசர்
மாமேவு கடவுளருந் தடவுளருஞ் சுரும்பமர்பூ மாலை வேந்துங்
கோமேவு மலரானும் பலரானும் புகழ்திகிரிக் குரிசி றானுந்
தேமேவு பண்ணவரு நண்ணவருள் சுரந்துகண்ட தேவி மேவும்
பாமேவு புகழ்ச்செம்பொன் மாரிபொழிந் தவர்மலர்த்தாள் பரசி வாழ்வாம் 2

3 தேமாரி யமன்பதைக ளுளங்கருதி யன்னையுஞ்சீர் திகழ்பி தாவு
மாமாரி யனுமுலவாப் பெருங்கதியு நீயேயென் றடைந்து போற்றக்
காமாரி யாயிருந்துங் கவுமாரி யொடுங்கலந்த கருணை மூர்த்தி
பூமாரி சுரர்பொழியப் பொன்மாரி பொழிந்தபிரான் பொற்றாள் போற்றி 3

4 பெரியநாயகி
சொற்றபெரும் புவனமெலா மொருங்கீன்ற பெருந்தலைமைத் தோற்றத் தானோ
கொற்றமிகு பெருங்கருணை சுரக்குமிறை மையினானோ குமரி யாயுங்
கற்றமையிப் பெயர்பூண்டா யெனுமருத வாணரெதிர் கனிவா யுள்ளாற்
சற்றமைய முறுவலித்து மகிழ்பெரிய நாயகிதா டலைமேற் கொள்வாம் 4

5 வாய்ந்தபர சத்தியாய் விந்துவாய் மனோன்மணியாய் மகேசை யாய்ச்சீர்
வேய்ந்தவுமை யாய்த்திருவாய்ப் பாரதியா யிவரன்றி வேறா யின்னு
மேய்ந்தசிறை யிலிநாத னெத்திறநிற் பானதனுக் கியைய நின்றே
தோய்ந்தவுயிர்க் கின்புதவும் பெரியநா யகிதுணைத்தா டொழுது வாழ்வாம் 5

6 சபாநாயகர்.
மறையாதியியம்புகுறிகுணங்கடந்தோரைந்தெழுத்தேவடிவமாகி
நிறையாதிபடைப்பாதிதுடியாதியோரைந்துநிகழ்த்தநாளு
மிறையாதிதவிர்ந்திருவர்வியந்தேத்தவுமைதிருக்கண்விழைந்துசாத்த
வறையாதிமணிமன்றுண்டநவிலும்பெருவாழ்வையடுத்துவாழ்வாம் 6

7 சிவகாமியம்மை.
ஆன்றதாயடைந்தசுகங்கருவுமடைதருமாலென்றறைகூற்றிற்கோர்
சான்றதாயெவ்வுயிருமடையின்பந்தானடையுந்தவாலின்பாக
நான்றதாய்மிளிர்சடிலநாதனியற்றானந்தநடனங்காணு
மீன்றதாய்சிவகாமவல்லியிருதாமரைத்தாளிறைஞ்சிவாழ்வாம் 7

8 தட்சணாமூர்த்தி.
வேறு.
ஆய்தருபொருளுமாராய்ந்தடிநிழலடங்குமாண்பும்
வேய்தருமலர்நேரங்கைவிரலிருகூற்றிற்றேற்றித்
தோய்தருமுனிவர்நால்வர்துதித்திடக்கல்லாலென்னும்
பாய்தருவடிவாழ்முக்கட்பரனடிக்கன்புசெய்வாம் 8

9 வயிரவர்.
புகர்படுசெருக்குமேவல்புன்மையென்றெவருந்தேறப்
பகர்மறைகமழாநிற்கும்பரிகலமங்கையேந்தி
நிகரின்மான்முதலோர்மேனிநெய்த்தோர்கொண்டொளிர்பொன்மாரி
நகரினிதமர்ந்துவாழும்வடுகனைநயந்துவாழ்வாம் 9

10 மருதவிருட்சம்.
வேறு.
பரவியநாதமூலமாப்பராரைபணைகிளைகொம்பொடுவளாரும்
விரவியபஞ்சசத்தியாத்தளிர்கள்வேதமாமலர்களாகமமாக்
கரவியலாதவாசமைந்தெழுத்தாக்காமருசுகோதயமதுவா
வுரவியன்ஞானசொரூபமேயாகியொளிர்தருமருதினைத்துதிப்பாம் 10

11 வலம்புரிவிநாயகர்.
வேறு.
ஓங்குபெருந்தனக்கினமாயுற்றமதவாரணங்களொருங்குதேம்பி
யேங்குதிறமுறவருத்திவணக்கிடுமங்குசபாசமென்னுநாமந்
தாங்குபடையிரண்டுமொருதனைவணங்கக்கரத்தேந்தித்தலைமைபூண்டு
தேங்குநெடுங்கருணைபொழிவலம்புரிக்குஞ்சரத்திருதாள்சென்னிசேர்ப்பாம் 11

12 சுப்பிரமணியர்.
வெயிலேறவிரிக்குமுடிவானவர்விண்குடியேறவெள்ளையானை
குயிலேறவரிபிரமர்புள்ளேறவம்மனைவேர்கூடாமாதர்
கயிலேறமிளர்கடக்கையேறமெய்யேறக்கவினார்தன்கை
யயிலேறவமர்ந்துசிறைமயிலேறும்பெருமானையடுத்துவாழ்வாம். 12

13 திருநந்திதேவர்.
வேறு.
வரைபொடிபடுக்கும்வச்சிரப்படையும்வலிசெழுதண்டவெம்படையும்
விரைசெலற்றிறத்தின்மாற்றலர்நடுங்கும்விளங்கொளித்திகிரியம்படையும்
புரையமைசமழ்ப்புப்பொருந்தவில்வீசிப்பொலியும்வேத்திரப்படைதாங்கி
யுரையமைகயிலைகாத்தருணந்தியொருவனைமருவியேத்தெடுப்பாம். 13

14 தமிழாசிரியர்.
வேறு.
பன்னிருதடங்கைச்செம்மல்பாற்சிவஞானம்பெற்றுப்
பன்னிருகதிருமொன்றாம்பான்மையின்விளங்கிநாளும்
பன்னிருதவமாணாக்கர்பழிச்சிடமலையமேவப்
பன்னிருசரணநாளுந்தலைக்கொடுபரவுவோமே. 14

15 திருஞானசம்பந்தசுவாமிகள்.
அறைவடமொழிநவின்றபாணினியகத்துநாண
விறையமர்மயிலைமூதூரிருந்தவோர்தாதுகொண்டே
நிறைதரவொராறுமேலுநிரப்புதென்மொழிநவின்ற
மறையவன்காழிவேந்தன்மலரடிக்கன்புசெய்வாம். 15

16 திருநாவுக்கரசுசுவாமிகள்.
நீற்றுமெய்ச்சிவனேயென்றுமவனினுநிறைந்தாரென்றுஞ்
சாற்றுதற்கியையத்தந்தைதன்பரியாயப்பேரு
ளீற்றுமெய்கெடுத்தொன்றிற்பன்னிரண்டன்மெய்கொடுத்துக்கூறத்
தோற்றுமெய்ப்புகழ்சானாவிற்கரசினைத்தொழுதுவாழ்வாம். 16

17 சுந்தரமூர்த்திசுவாமிகள்.
எண்ணியமறுமைப்பேறுமிம்மையேயுற்றதென்ன
மண்ணியவியங்கும்வெள்ளிமால்வரையெருத்தமேறி
யண்ணியவியங்காவெள்ளிமால்வரையடைந்துவாழும்
புண்ணியமூர்த்திநாவற்புலனைப்போற்றிவாழ்வாம். 17

18 மாணிக்கவாசக சுவாமிகள்.
மாயவனறியாப்பாதமலரவன்மனைவிமேனி
தோயவுமலரோன்காணாச்சுடர்முடியனையானீன்ற
பாயநீருடுத்தமங்கையிவரவுமுருகிப்பாடுந்
தூயவர்கமலபாதத்துணையுளத்திருத்திவாழ்வாம். 18

19 தண்டீசநாயனார்.
மலர்புரைகுடங்கைவெள்வாய்மழுப்படையொன்றுதாங்கி
யலர்பசுவோம்பியின்னுமுண்ணுதலாதியாவும்
பலர்புகழ்தனக்கென்றொன்றும்வேண்டிலாப்பரன்போற்கொண்ட
நலர்செறிசேய்ஞலூர்வாழ்பிள்ளையைநயத்தல்செய்வாம். 19

20 அறுபத்துமூன்றுநாயன்மார்.
வேறு.
பூன்றதன்மையில்புன்மையேநெஞ்சகத்
தேன்றவஞ்சகமாதியிருப்பினுந்
தோன்றவோர்புரஞ்சூழ்ந்துறவாழ்வரா
லான்றமேன்மையறுபத்துமூவரே. 20

21 பஞ்சாக்கரதேசிகர்.
பூதங்கடந்துபொறிகடந்துபுலனுங்கடந்துபுகல்காண
பேதங்கடந்துகாலமுதலனைத்துங்கடந்துபெருவிந்து
நாதங்கடந்துவளர்துறைசைநமச்சிவாயதேசிகன்பொற்
பாதங்கடந்துபற்றறுத்தானினிமேலல்லற்படலிலையே. 21

22 அம்பலவாண்தேசிகர்.
வேறு.
மருடருவினைகடேய்த்தோமாமலக்குறும்புமாய்த்தோ
மிருடருபிறப்பில்வாரோமென்றுமோரியல்பிற்றீரோ
மருடருதுறைசைமேவுமம்பலவாணதேவன்
பொருடருகமலத்தாளெந்தலைமிசைப்புனைந்தபோதே. 22

23 சித்தாந்தசைவர்கள்.
பண்ணியபுறமார்க்கங்கள்பாழ்படவொழித்துமேலாம்
புண்ணியவிபூதியக்கமணியொடைந்தெழுத்தும்போற்றி
யண்ணியசிவானந்தத்தேனிரம்பவுண்டமையாநிற்கும்
தண்ணியகுணசித்தாந்தசைவரைவணக்கஞ்செய்வாம். 23

24 ஆலப்பணிசெய்வோர்கள்.
அரவுநீர்ச்சடையானெங்களம்மையோடகிலமெல்லாம்
பரவுமாறமர்பொன்மாரிப்பதிப்பெருந்தளியிற்றொண்டின்
விரவுநான்மறையோராதியலகிடல்விழைந்தோரீறா
முரவுசேர்தவத்தர்யாருமுவந்தியாந்தொழுந்தேவாவார். 24


கடவுள் வாழ்த்து முற்றிற்று.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


கண்டதேவிப் புராணம் - Page 9 Empty Re: கண்டதேவிப் புராணம்

Post by சிவா Mon Jun 20, 2011 3:44 am

819 இவ்வண்ணமருளிச்செய்தேயிலிங்கத்துண்மறைந்தானெம்மான்
வெவ்வண்ணவேலான்மிக்கவிம்மிதனாகிநின்றான்
செவ்வண்ணப்பெருமான்சொற்றதிருமொழிசென்னிமேற்கொண்
டவ்வண்ணப்புயல்களெல்லாமெழுந்துவானடைந்தமாதோ. 21

820 வானகம்பரந்துநின்றேவளர்கண்டதேவியெல்லை
யானவைங்குரோசமட்டுமமைதரவொருமுகுர்த்த
மீனமில்செம்பொன்மாரியெல்லையில்லாதுபெய்த
தேனகமலர்பூமாரிதேவரும்பொழிந்தாரன்றே. 22

821 புடவிபொன்னிறமேயென்பார்பொன்னெனாதென்னோவென்பா
ரிடவியபுவிமறைத்தவித்துணைச்செம்பொன்முற்றுந்
தடவியெங்கெடுத்துவந்தித்தண்முகில்பொழிந்ததென்பார்
மடவியல்வறுமைசெய்தவற்கடமொழிந்ததென்பார். 23

822 மன்னியபுகழ்க்காங்கேயன்வான்றவம்பெரியதென்பார்
மின்னியவனையானொக்கும்வேந்தருமுளரோவென்பார்
துன்னியவவன்செங்கோலேதூயசெங்கோல்காணென்பார்
பன்னியவவனேதெய்வம்படிக்குவேறில்லையென்பார். 24

823 வையகமாந்தரெல்லாமின்னணமகிழ்ந்துகூறச்
செய்யகோன்மன்னர்மன்னன்சேனையைக்காவலிட்டே
யையபொன்னடங்கவாரியமைந்ததென்மேருவென்ன
வெய்யவற்கடம்போய்நீங்கிவிலகுறக்குவித்துப்பார்த்தான். 25

824 மலையெனக்குவிந்தசெம்பொன்வளமுழுதமையநோக்கி
யிலையெனற்கிசையார்யாருமிரந்திடப்படுவோராகக்
கலையெனப்படுவவெவ்லாங்கற்றுணர்ந்தவருஞ்செல்வ
நிலையெனவாரிவாரிக்கொடுத்தனனிருபர்வேந்தன். 26

825 மிடிகெடமுகந்துசெம்பொன்வேந்தர்கோன்கொடுக்கும்போதே
படிகெடவருத்திநின்றபாவவற்கடகாலத்தின்
குடிகெடவெழுந்துகொண்மூகுரைகடலுண்டுவெய்யோன்
கடிகெடவிசும்புபோர்த்துக்கதிர்த்தவில்லொன்றுவாங்கி. 27

826 மிடிபுரிகாலந்தன்னைவாள்கொடுவெட்டியாங்குக்
கடிபுரிதடித்துவீசிச்சளசளவென்றுகான்ற
படிபுரிகளிநல்யானைப்பரூஉப்புழைக்கானேர்தாரை
வெடிபுரியேரியாதிவெள்ளமாய்முடியமாதோ. 28

827 விரம்புநீரெங்கும்போர்ப்பமென்பணையுழுதலாதி
யரும்புபஃறொழிலுமேன்மேன்மூண்டனவாதலாலே
யிரும்புலமெங்குஞ்செந்நெல்வெண்ணெலாதிகளுமீண்டக்
கரும்புபைங்கதலியாதிகஞலினபாண்டிநாடு. 29

828 உரம்பொலிவறுமைநீங்கியொழிந்துசெல்வஞ்செருக்கி
வரம்பொலிபாண்டிநாடுவாழ்தரக்கண்டமன்ன
னிரம்பொலிநறுநீர்வேணிநின்மலனருளாவலிந்தப்
பரம்பொலிமகிழ்ச்சியெங்கும்பராயதென்றுவகைபூத்தான். 30


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கண்டதேவிப் புராணம் - Page 9 Empty Re: கண்டதேவிப் புராணம்

Post by சிவா Mon Jun 20, 2011 3:45 am

829 சிறுமருதூரின்மேயதெய்வநாயகர்க்குமன்பிற்
பெறுமொளிர்கருணைமேனிப்பெரியநாயகிக்கும்பாசந்
தெறுமொருகுஞ்சிதத்தாட்டிருநடராசருக்கு
மறுதியின்மற்றையோர்க்குமாலயமெடுக்கலுற்றான். 31

830 வானளவோங்குசெம்பொற்கோபுரம்வயங்குநொச்சி
யூனமில்கருவிலத்தமண்டபமுரையாநின்ற
வேனவுஞ்செம்பொனாற்செய்திலங்குபன்மணிகால்யாத்துக்
கூனல்வெஞ்சிலையானன்னாட்கும்பாபிடேகஞ்செய்து. 32

831 குடைகொடிமுதலாயுள்ளவிருதும்பொற்குடமுன்னாக
மிடைபல்பாத்திரமுமோலியாதிவில்வீசுபூணு
மடைதருகனகவாடையாதிவட்டமும்பல்லூரு
முடைமதக்களிறுமாவுமெண்ணிலவுதவினானே. 33

832 நித்தியவிழவுமுன்னாநிகழ்பலவிழவுஞ்செய்து
சத்தியஞானானந்தத்தனிப்பரஞ்சுடர்க்குயாரும்
பொத்தியவொளிர்பொன்மாரிபொழிந்தவரென்னும்பேரிட்
டொத்தியனகர்க்குஞ்செம்பொன்மாரியென்றுரைத்தானாமம். 34

833 பொலிதருசெம்பொன்மாரிபொழிந்தவர்திருமுன்னாக
வொலிதருகழற்கான்மன்னனெஞ்சியவொளிர்பொன்னெல்லா
மலிதரும்படிபுதைத்துவைத்தனன்கணங்கள்காத்து
நலிதருவருத்தமாக்குமாங்குநண்ணுநரையின்னும். 35

834 எண்ணருநாள்களிவ்வாறிருந்தரசாட்சிசெய்து
நண்ணரும்பொன்பொழிந்தகண்ணுதலருளினாலே
நண்ணருஞ்சிவலோகத்தைநண்ணிவீற்றிருந்தான்வானோர்
மண்ணருமகிழ்ச்சிபொங்கமலர்மழைசொரிந்தாரன்றே. 36

835 போற்றுபொன்மாரியூரிற்காங்கேயன்பொலியமுந்நா
ளாற்றுநீர்படிவோர்யாருமரும்பெரும்போகத்தாழ்வார்
நீற்றுமாமுனிவசெம்பொன்பொழிந்தமைநிகழ்த்தினோமேற்
சாற்றுதுங்கேட்டியென்றுதவப்பெருஞ்சூதன்சொல்வான். 37

பொன்மாரிபொழிந்தபடலம் முற்றிற்று.
ஆக படலம்-17-க்கு-திருவிருத்தம்-835


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கண்டதேவிப் புராணம் - Page 9 Empty Re: கண்டதேவிப் புராணம்

Post by சிவா Mon Jun 20, 2011 3:46 am

18. சிலைமான் வதைப்படலம்

836 பஞ்சுசேரடிபங்காருள்செய,
மஞ்சுகான்றகனகத்துண்மன்னவ
னெஞ்சுசெம்பொன்புதைத்திருக்கின்றசொல்,
விஞ்சுமானிலத்தெங்கும்விராயதே 1

837 வடபுலத்தவன்வாய்ந்தபடையினா,
னடல்மிகுத்தவனாழியவாவினான்
மடனுடைச்சிலைமானெனும்பேரினான்,
விடனொருத்தன்விழைந்திதுகேட்டனன் 2

838 கேட்டபோதுகிளர்ந்தெழும்வேட்கையா,
னாட்டமார்கண்டதேவியைநண்ணி
யே, யீட்டரும்பொனெலாங்கவர்வாமெனா,
வோட்டமாய்வருவான்படையோடரோ. 3

839 வலத்துமிக்கவடபுலத்தான்வந்து,
கலக்கும்வார்த்தைமுன்கண்டவர்கூறிடத்
தலத்துமேவியயாருமவன்றனை,
விலக்குமாற்றலிலேமென்றுவெம்பினார். 4

840 என்னசெய்துயினியெனநாடியே,
முன்னவன்றிருக்கோயிலைமுன்னினா
ரன்னமன்னவணங்கொருபாலுடைச்,
சொன்னமாரிபெய்தாரைத்தொழுதனர். 5

841 சம்புசங்கரதற்பரவற்புத,
வெம்புமெங்கண்மெலிவைத்தவர்த்தருள்
வம்புசெய்யும்வடபுலத்தான்வந்துன்,
பம்புசெம்பொன்கொளாவகைபண்ணியே. 6

842 என்றுகூறியிறைஞ்சிமுறையிட,
வன்றுநாயகனாகாயவாணியா
லொன்றுமாறுரைப்பானொன்றுமஞ்சலீர்,
வென்றுமற்றவனாருயிர்வீட்டுவோம். 7

843 பின்னமில்லாப்பெரியசிறையிலி,
சின்னமேயசிறியசிறையிலி
யென்னவாழ்நம்மிடபமிரண்டையு,
முன்னமேவமுடுக்குவிடுமென்றான். 8

844 என்றசொற்செவியேற்றுமகிழ்ந்தனர்,
குன்றநேர்தருகுண்டையிரண்டையு
மன்றவையன்றிருமுன்வரவழைத்,
தொன்றநல்லுபசாரம்புரிவரால். 9

845 ஆட்டிநீரினரியவுணவெலா,
மூட்டியப்பியுவப்புறுசாந்தந்தார்
சூட்டியங்கைதொழுதுபகைவனை,
மாட்டிவம்மினென்றார்தலவாணரே. 10


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கண்டதேவிப் புராணம் - Page 9 Empty Re: கண்டதேவிப் புராணம்

Post by சிவா Mon Jun 20, 2011 3:46 am

846 தலையசைத்துப்பயப்பயத்தாள்பெயர்த்,
திலையப்பிலமாலையிலங்குற
நிலையகாரிருள்கோட்டணிநீக்கிட,
மலைபெயர்ந்தெனச்சென்றனமால்விடை. 11

847 கோடுகொண்டுவன்மீகங்குதர்ந்துநாத்,
தோடுகொண்டிருதுண்டந்துழாவியே
மாடுகொண்டெழுவாஞ்சையனைத்துரீஇ,
நீடுகொண்டகடுப்பொடுநேர்ந்தன. 12

848 காலினாற்சிலர்தம்மைக்கலக்கிடும்,
வாலினாற்சிலராருயிர்மாய்த்திடும்
வேலினாற்பொலிவீரர்தம்முட்சுவைப்,
பாலினாற்பொலிபுல்லங்களென்பவே. 13

849 பூட்டிநாண்விற்பொருகணையேவிட,
வீட்டியன்னவையாவும்விரைந்தெழீஇக்
கோட்டினாற்குத்திச்சாய்த்துக்குளிறிடு,
மீட்டினாற்பொலிபுல்லங்களென்பவே. 14

850 இன்ன வாறுப டையினை யீறுசெய்
தன்ன வெஞ்சிலை மானை யடர்ந்தெழுந்
துன்ன வாமவ னேதி யொருங்குமேற்
றுன்ன வாலின டித்துத் துடைத்தன. 15

851 கல்லி னைப்பொடி கண்டிடு தோளினான்
வில்லி னைப்பொடி காணமி தித்தவன்
மல்லி னைப்பொடி தோற்றி வயங்கிளர்
புல்லி னைப்பொடி பூணி முழங்கின. 16

852 ஆய காலைய வன்சினங் கொண்டுநேர்
பாய வேறுக ளும்மெதிர் பாய்ந்திடத்
தீய மார்பிற் றிணிமருப் பாழ்ந்தன
போய தாலவ னாவிபு லம்பியே. 17

853 மீண்டு நாயகன் கோயிலை மேவின
வாண்டி யாரும திசய மெய்தின
ரீண்டு வான்சிவ கங்கையி ரும்புகழ்
வேண்டு மாநவில் வரமெனுஞ் சூதனே. 18

சிலைமான்வதைப்படலம் முற்றிற்று.
ஆக படலம் - 18 - க்கு - திருவிருத்தம் - 853.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கண்டதேவிப் புராணம் - Page 9 Empty Re: கண்டதேவிப் புராணம்

Post by சிவா Mon Jun 20, 2011 3:47 am

19. சிவகங்கைப் படலம் (854- 868)

854 திருவளர் சிறப்பு வாய்ந்த சிவகங்கை மூழ்கு வோர்க்கு
மருவளர் தரும நல்கும் வளத்தினாற் றரும தீர்த்த
முருவள ரருத்த நல்கு முண்மையா லருத்த தீர்த்தங்
கருவளர் காம நல்கு மேதுவாற் காம தீர்த்தம். 1

855 பெறவரு முத்தி நல்கும் பெற்றியான் முத்தி தீர்த்த
முறலருந் தீர்த்த மெல்லா முறுதலிற் சறுவ தீர்த்த
மறவரு ஞான மேன்மேல் வளர்த்தலான் ஞான தீர்த்தஞ்
செறலரு மிட்ட மெல்லாஞ் செறித்தலி னிட்ட தீர்த்தம். 2

856 குட்டநோய் தொழுநோய் பொல்லாக் குன்மநோய் விழிநோய் வெய்ய
கட்டநோய் நெய்த்தோ ராதி காலுநோ யிரக்க முற்றும்
விட்டநோ யென்று யாரும் விளம்புநோ யனைத்து மாய்ந்து
பட்டநோ யாகு மந்தப் பட்டநீர் மூழ்கு வார்க்கே. 3

857 பெயர்வரி தாய மண்ணை பிரமராக் கதம்வெம் பூத
மயர்வரு மனைய தீர்த்த மாடினோர் தமைவிட் டேகு
முயருறு மனைய தீர்த்தத் தொருநுனி பட்ட போது
மயருறு பாவ மெல்லாம் வயங்கழ லிட்ட பஞ்சாம். 4

858 அன்னமா தீர்த்தக் கோட்டிற் றென்புலத் தவருக் காற்று
நன்னர்வான் செய்கை யெல்லா நயந்தனர் நாடி யாற்று
லென்னபா தகரே யேனு மெய்துவர் சுவர்க்க மாக
தன்னமு மடையா ரெல்லாப் போகமுந் தழுவி வாழ்வார். 5

859 ஆண்டுயர் தோற்ற மாதத் தோற்றமீ ரயனம் யாரும்
வேண்டுமீ ருவாவி யாள மதிகதிர் விழுங்கு கால
மீண்டுநற் சோம வார மிவைமுத லியநா ளன்பு
பூண்டதிற் படிவோ ரெய்தும் புண்ணிய மளவிற் றாமோ. 6

860 அலர்செறிகற்பநாட்டினமர்ந்துசெயரசுவேண்டின்
மலர்மிசையிருக்கைவேண்டின்மூசுணக்கிடக்கைவேண்டி
னுலர்வவென்றிவற்றையெள்ளியுறுபெருவாழ்க்கைவேண்டிற்
பலர்புகழனையதீர்த்தம்படிந்தினிதாடல்வேண்டும். 7

861 அன்னநீரகத்துதித்ததவளைமீனாதியாய
வென்னவுங்கயிலாயத்தையெய்திவீற்றிரந்துபன்னாட்
பின்னரத்தலத்தேவந்தோர்பெறலரும்பிறவியுற்று
நன்னர்மெய்ஞ்ஞானம்பெற்றுநம்பிரான்பதமேசாரும். 8

862 புண்ணியம்பயக்குநாளிற்பொங்குமத்தீர்த்தமூழ்கிக்
கண்ணியமருதவாணர்கழலடிக்கன்பராய
தண்ணியமறையோர்மற்றைச்சாதியோரெவர்க்குங்கையி
னண்ணியசெம்பொனாதிநல்குமாதவத்தின்மிக்கார். 9

863 மனைமகவாதியெல்லாச்சுற்றமுமருவவாழ்ந்து
கனைகடலுலகநீத்துக்கற்பகநாடுபுக்குப்
புனைபெரும்போகமார்ந்துபுண்ணியனருளாலீற்றிற்
றனைநிகர்சிவலோகத்திற்சார்ந்துவாழ்ந்திருப்பரன்றே. 10


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கண்டதேவிப் புராணம் - Page 9 Empty Re: கண்டதேவிப் புராணம்

Post by சிவா Mon Jun 20, 2011 3:48 am

864 விரிதிரைபரப்புங்கங்கைகாளிந்திவிருத்தகங்கை
புரிதருயமுனைகண்ணவேணிபொன்பொலிகாவேரி
யிரிதலில்பொரநையாதியெய்துபுபன்னாண்மூழ்கி
னுரியபேறனையதீர்த்தத்தொருதினம்படியினுண்டாம். 11

865 பற்பலவுரைப்பதென்னைபாரிடத்தெவருஞ்சென்று
சொற்பொலியனையதீர்த்தந்துளைகமுற்றாதேயென்னி
லற்புறவரவழைத்தாவதுபடிதருதல்வேண்டு
மற்பொலியதுவுமுற்றாதென்னின்மற்றுரைப்பக்கேண்மோ. 12

866 சாற்றுமந்நீரிற்றோய்ந்ததவமுடையரைக்கண்டேனும்
போற்றுதல்வேண்டுமன்னாரரியரேற்புகலத்தீர்த்த
மேற்றவழ்காற்றுவந்துமேனியிற்படுமாறேனு
மாற்றுதல்வேண்டும்போகமாதிகள்விரம்பினோரே. 13

867 மன்னியகதிரோன்றீர்த்தமதியவனியற்றுதீர்த்தம்
பன்னியசடாயுதீர்த்தம்பரவுகாங்கேயன்றீர்த்த
மன்னியபிரமனாதிமூவரும்புரிந்ததீர்த்த
நன்னியமத்தமேன்மைநவின்றனமுன்னங்கண்டாய். 14

868 எண்ணரும்புகழ்சாறேவியியற்றியவனையதீர்த்தக்
கண்ணரும்பெருமையாரேகணித்தெடுத்துரைக்கவல்லார்
பண்ணருந்தவத்தினாரேபற்றமத்தலத்தின்மேன்மை
விண்ணருமவாவுநீரதறியெனவிளம்புஞ்சூதன். 15

சிவகங்கைப்படலம் முற்றிற்று.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கண்டதேவிப் புராணம் - Page 9 Empty Re: கண்டதேவிப் புராணம்

Post by சிவா Mon Jun 20, 2011 3:49 am

20. தலவிசேடப் படலம்

869 பார்கெழுகயிலைமேருபருப்பதம்வாரணாசி
சீர்கெழுதிருக்காளத்திதிருவாலங்காடுகாஞ்சி
யேர்கெழுமுதுகுன்றண்ணாமலைகழுகிருக்குங்குன்ற
மார்கெழுதில்லைகாழியணியிடைமருதூராரூர். 1

870 ஆலவாய்திருக்குற்றாலமணியிராமீசமின்ன
சீலமார்தலங்களுள்ளுஞ்சிவபிராற்கினியதாய
மூலமாந்தலமாயெல்லாவளங்களுமுகிழ்ப்பதாயெக்
காலமுமுளதாயோங்குதலங்கண்டதேவியொன்றே. 2

871 புண்ணியமுதல்வியென்னும்புவனங்களீன்றதாயே
நண்ணியவிருப்பின்மேவிநற்றவம்புரிந்தாளென்னி
லெண்ணியவனையதானம்போல்வதொன்றினியுண்டென்று
கண்ணியவமையுங்கொல்லோகரையுமுப்புவனத்துள்ளும். 3

872 உலகெலாமீன்றசெல்வியுறுதவம்புரிந்ததன்றி
யலகிலத்தவத்தின்பேறாவையர்பாலளவிலாது
நிலவுபல்வரமுங்கொண்டுநிரப்பினண்மேலுமென்னிற்
குலவுமத்தலத்துக்கொப்பொன்றுளதெனல்கூடுங்கொல்லோ. 4

873 மிடிதவிர்த்தருளாயென்றுவேண்டிடுமடியார்க்கென்றும்
படியில்பொற்காசுமுன்னாப்பலவளித்திட்டதன்றி
நெடியபொன்மாரிபெய்ததுண்டுகொனெடுநீர்வைப்பி
லொடுவிலத்தலத்திற்கொப்பென்றொருதலஞ்சொல்லப்போமோ. 5

874 அன்னமாதலத்திலாதிசைவர்களமருமாறும்
பன்னகாபரணனன்பிற்பனலர்மற்றுள்ளோராய
வென்னருமமருமாறுமிடஞ்சமைத்துதவுவோரு
நன்னுமற்றவர்க்குவேண்டுமடைமுதல்வழங்குவோரும். 6

875 சத்திரமியற்றியன்னதானஞ்செய்திடுகின்றோரு
மொத்தியன்மடங்களாக்கிமுனிவருக்குதவுவோரு
மெத்தியபொழிலுண்டாக்கிவெள்விடைப்பெருமாற்கென்று
பத்தியினுதவுவோரும்பழனங்கணல்குவோரும். 7

876 திருமுடியாட்டுமாறுதிருந்துபால்பொழியாநிற்கும்
பெருமடித்தலத்தினாக்கள்பேணிநன்குதவுவோரு
மருவியகிலமாயுள்ளமண்டபமதின்முன்னாய
பொருவில்பற்பலவுநன்குபொலிதரப்புதுக்குவோரும். 8

877 திருவிழாச்சிறப்பிப்போரும்பூசையைச்சிறப்பிப்போரு
மருவியவேனிற்காலம்வளங்கெழுதண்ணீர்ப்பந்தர்
பொருவரவைக்கின்றோருநந்தனம்பொலியச்செய்து
திருவமர்பள்ளித்தாமஞ்சாத்திடல்செய்கின்றோரும். 9

878 இன்னவர்பலருமண்ணிலிருங்கிளைசூழவாழ்ந்து
பன்னருஞ்சுவர்க்கமேவிப்பற்பலபோகமார்ந்து
பின்னர்நம்பெருமான்செய்யும்பேரருட்டிறத்தினாலே
யன்னவன்சிவலோகத்தையடைந்துவாழ்ந்திருப்பரன்றே. 10

879 பற்பலவுரைப்பதென்னைபாரிடத்தறஞ்செய்வோர்க
ளற்பதம்பயவாநிற்குமத்தலமடைந்துசெய்யி
னற்பயன்மேருவாகுநவிலணுவளவேயேனுங்
கற்பனையன்றீதுண்மைகரிசறுத்துயர்ந்தமேலோய். 11

880 இத்தகுபுராணத்தாங்காங்கிசைத்தனமனையதானத்
துத்தமவிசேடமெல்லாமுரைத்திடமுற்றுங்கொல்லோ
சத்தறிவின்பரூபத்தனிமுதல்சரணஞ்சார்ந்த
சுத்தமெய்த்தவத்தோயென்றுசொற்றனன்சூதமேலோன். 12

881 சாற்றருமகிழ்ச்சிபொங்கச்சவுநகமுனிமுன்னானோர்
மாற்றருந்தலத்துச்சூதமாமுனிபாதம்போற்றி
யாற்றருமகமுமுற்றியனைவருமெழுந்துபோந்து
சேற்றருநறுநீர்வாவிச்சிறுமருதூரையுற்றார். 13

882 தெளிதருநன்னீராயசிவகங்கையாதித்தீர்த்தங்
களிதருசிறப்பின்மூழ்கிமருதடிகலந்துளானை
நளிதருகருணைவாய்ந்தபெரியநாயகியைப்போற்றி
யளிதருமுவகையோராய்நைமிசமடைந்துவாழ்வார். 14

883 பழுதகல்கண்டதேவிப்புராணத்தைப்படிப்போர்கேட்போ
ரெழுதுவோரெழுதுவிப்போரிரும்பொருளாய்வோர்சொல்வோர்
முழுதமைசெல்வத்தாழ்ந்துமுனிவரும்போகமாந்திப்
பொழுதுபற்பலதீர்ந்தீற்றிற்புண்ணியனடியேசார்வார். 15

884 வேறு.
சீர்பூத்தபொன்மாரிசிறுமருதூரெனுங்கணடதேவிவாழ்க
பார்பூத்தவனையதலபாலனஞ்செய்வணிகரெல்லாம்பரவிவாழ்க
கார்பூத்தகுழற்செவ்வாய்ப்பெரியநாயகியம்மைகருணைவாழ்க
வேர்பூத்தபொன்மழைபெய்தவர்மணிமன்றெடுத்தபொற்றாளென்றும்வாழ்க. 16

தலவிசேடப்படலம் முற்றிற்று.

-----------------------
கண்டதேவிப்புராணம் முற்றிற்று.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கண்டதேவிப் புராணம் - Page 9 Empty Re: கண்டதேவிப் புராணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 9 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum