ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
கண்டதேவிப் புராணம் - Page 2 Poll_c10கண்டதேவிப் புராணம் - Page 2 Poll_m10கண்டதேவிப் புராணம் - Page 2 Poll_c10 
ayyasamy ram
கண்டதேவிப் புராணம் - Page 2 Poll_c10கண்டதேவிப் புராணம் - Page 2 Poll_m10கண்டதேவிப் புராணம் - Page 2 Poll_c10 
mohamed nizamudeen
கண்டதேவிப் புராணம் - Page 2 Poll_c10கண்டதேவிப் புராணம் - Page 2 Poll_m10கண்டதேவிப் புராணம் - Page 2 Poll_c10 
VENKUSADAS
கண்டதேவிப் புராணம் - Page 2 Poll_c10கண்டதேவிப் புராணம் - Page 2 Poll_m10கண்டதேவிப் புராணம் - Page 2 Poll_c10 

Top posting users this month
heezulia
கண்டதேவிப் புராணம் - Page 2 Poll_c10கண்டதேவிப் புராணம் - Page 2 Poll_m10கண்டதேவிப் புராணம் - Page 2 Poll_c10 
ayyasamy ram
கண்டதேவிப் புராணம் - Page 2 Poll_c10கண்டதேவிப் புராணம் - Page 2 Poll_m10கண்டதேவிப் புராணம் - Page 2 Poll_c10 
mohamed nizamudeen
கண்டதேவிப் புராணம் - Page 2 Poll_c10கண்டதேவிப் புராணம் - Page 2 Poll_m10கண்டதேவிப் புராணம் - Page 2 Poll_c10 
VENKUSADAS
கண்டதேவிப் புராணம் - Page 2 Poll_c10கண்டதேவிப் புராணம் - Page 2 Poll_m10கண்டதேவிப் புராணம் - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்டதேவிப் புராணம்

Page 2 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

கண்டதேவிப் புராணம் - Page 2 Empty கண்டதேவிப் புராணம்

Post by சிவா Mon Jun 20, 2011 3:03 am

First topic message reminder :

கண்டதேவிப் புராணம்
திரிசிரபுரம் மஹாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் இயற்றியது.



இஃது சிவநேசம் பொருந்திய வெளிமுத்தி வயிரவ ஐயாவவர்கள் அநுமதிப்படி தேவகோட்டை மு.குப்பான் செட்டியாரவர்கள் குமாரர் முத்தரசப்பசெட்டியாரால் சென்னை இலக்ஷ்மீவிலாச அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது.


கடவுள் வாழ்த்து


1 விநாயகர்
பூமேவு பரையொருபாற் பெருமான்பின் பாற்றழுவிப் புணர்ந்தொன் றாய
மாமேவு பெண்பாலாண் பாலொடுமா றுற்றெரிந்து மாறு றாமே
தூமேவு முன்பால்வந் துறத்தழீஇ யொருமருப்பாற் றுணைப்பா லாய
தேமேவு முகமலரும் வலம்புரிக்குஞ் சரத்திருதாள் சேர்ந்து வாழ்வாம் 1

2 சொர்ன்னவருடேசர்
மாமேவு கடவுளருந் தடவுளருஞ் சுரும்பமர்பூ மாலை வேந்துங்
கோமேவு மலரானும் பலரானும் புகழ்திகிரிக் குரிசி றானுந்
தேமேவு பண்ணவரு நண்ணவருள் சுரந்துகண்ட தேவி மேவும்
பாமேவு புகழ்ச்செம்பொன் மாரிபொழிந் தவர்மலர்த்தாள் பரசி வாழ்வாம் 2

3 தேமாரி யமன்பதைக ளுளங்கருதி யன்னையுஞ்சீர் திகழ்பி தாவு
மாமாரி யனுமுலவாப் பெருங்கதியு நீயேயென் றடைந்து போற்றக்
காமாரி யாயிருந்துங் கவுமாரி யொடுங்கலந்த கருணை மூர்த்தி
பூமாரி சுரர்பொழியப் பொன்மாரி பொழிந்தபிரான் பொற்றாள் போற்றி 3

4 பெரியநாயகி
சொற்றபெரும் புவனமெலா மொருங்கீன்ற பெருந்தலைமைத் தோற்றத் தானோ
கொற்றமிகு பெருங்கருணை சுரக்குமிறை மையினானோ குமரி யாயுங்
கற்றமையிப் பெயர்பூண்டா யெனுமருத வாணரெதிர் கனிவா யுள்ளாற்
சற்றமைய முறுவலித்து மகிழ்பெரிய நாயகிதா டலைமேற் கொள்வாம் 4

5 வாய்ந்தபர சத்தியாய் விந்துவாய் மனோன்மணியாய் மகேசை யாய்ச்சீர்
வேய்ந்தவுமை யாய்த்திருவாய்ப் பாரதியா யிவரன்றி வேறா யின்னு
மேய்ந்தசிறை யிலிநாத னெத்திறநிற் பானதனுக் கியைய நின்றே
தோய்ந்தவுயிர்க் கின்புதவும் பெரியநா யகிதுணைத்தா டொழுது வாழ்வாம் 5

6 சபாநாயகர்.
மறையாதியியம்புகுறிகுணங்கடந்தோரைந்தெழுத்தேவடிவமாகி
நிறையாதிபடைப்பாதிதுடியாதியோரைந்துநிகழ்த்தநாளு
மிறையாதிதவிர்ந்திருவர்வியந்தேத்தவுமைதிருக்கண்விழைந்துசாத்த
வறையாதிமணிமன்றுண்டநவிலும்பெருவாழ்வையடுத்துவாழ்வாம் 6

7 சிவகாமியம்மை.
ஆன்றதாயடைந்தசுகங்கருவுமடைதருமாலென்றறைகூற்றிற்கோர்
சான்றதாயெவ்வுயிருமடையின்பந்தானடையுந்தவாலின்பாக
நான்றதாய்மிளிர்சடிலநாதனியற்றானந்தநடனங்காணு
மீன்றதாய்சிவகாமவல்லியிருதாமரைத்தாளிறைஞ்சிவாழ்வாம் 7

8 தட்சணாமூர்த்தி.
வேறு.
ஆய்தருபொருளுமாராய்ந்தடிநிழலடங்குமாண்பும்
வேய்தருமலர்நேரங்கைவிரலிருகூற்றிற்றேற்றித்
தோய்தருமுனிவர்நால்வர்துதித்திடக்கல்லாலென்னும்
பாய்தருவடிவாழ்முக்கட்பரனடிக்கன்புசெய்வாம் 8

9 வயிரவர்.
புகர்படுசெருக்குமேவல்புன்மையென்றெவருந்தேறப்
பகர்மறைகமழாநிற்கும்பரிகலமங்கையேந்தி
நிகரின்மான்முதலோர்மேனிநெய்த்தோர்கொண்டொளிர்பொன்மாரி
நகரினிதமர்ந்துவாழும்வடுகனைநயந்துவாழ்வாம் 9

10 மருதவிருட்சம்.
வேறு.
பரவியநாதமூலமாப்பராரைபணைகிளைகொம்பொடுவளாரும்
விரவியபஞ்சசத்தியாத்தளிர்கள்வேதமாமலர்களாகமமாக்
கரவியலாதவாசமைந்தெழுத்தாக்காமருசுகோதயமதுவா
வுரவியன்ஞானசொரூபமேயாகியொளிர்தருமருதினைத்துதிப்பாம் 10

11 வலம்புரிவிநாயகர்.
வேறு.
ஓங்குபெருந்தனக்கினமாயுற்றமதவாரணங்களொருங்குதேம்பி
யேங்குதிறமுறவருத்திவணக்கிடுமங்குசபாசமென்னுநாமந்
தாங்குபடையிரண்டுமொருதனைவணங்கக்கரத்தேந்தித்தலைமைபூண்டு
தேங்குநெடுங்கருணைபொழிவலம்புரிக்குஞ்சரத்திருதாள்சென்னிசேர்ப்பாம் 11

12 சுப்பிரமணியர்.
வெயிலேறவிரிக்குமுடிவானவர்விண்குடியேறவெள்ளையானை
குயிலேறவரிபிரமர்புள்ளேறவம்மனைவேர்கூடாமாதர்
கயிலேறமிளர்கடக்கையேறமெய்யேறக்கவினார்தன்கை
யயிலேறவமர்ந்துசிறைமயிலேறும்பெருமானையடுத்துவாழ்வாம். 12

13 திருநந்திதேவர்.
வேறு.
வரைபொடிபடுக்கும்வச்சிரப்படையும்வலிசெழுதண்டவெம்படையும்
விரைசெலற்றிறத்தின்மாற்றலர்நடுங்கும்விளங்கொளித்திகிரியம்படையும்
புரையமைசமழ்ப்புப்பொருந்தவில்வீசிப்பொலியும்வேத்திரப்படைதாங்கி
யுரையமைகயிலைகாத்தருணந்தியொருவனைமருவியேத்தெடுப்பாம். 13

14 தமிழாசிரியர்.
வேறு.
பன்னிருதடங்கைச்செம்மல்பாற்சிவஞானம்பெற்றுப்
பன்னிருகதிருமொன்றாம்பான்மையின்விளங்கிநாளும்
பன்னிருதவமாணாக்கர்பழிச்சிடமலையமேவப்
பன்னிருசரணநாளுந்தலைக்கொடுபரவுவோமே. 14

15 திருஞானசம்பந்தசுவாமிகள்.
அறைவடமொழிநவின்றபாணினியகத்துநாண
விறையமர்மயிலைமூதூரிருந்தவோர்தாதுகொண்டே
நிறைதரவொராறுமேலுநிரப்புதென்மொழிநவின்ற
மறையவன்காழிவேந்தன்மலரடிக்கன்புசெய்வாம். 15

16 திருநாவுக்கரசுசுவாமிகள்.
நீற்றுமெய்ச்சிவனேயென்றுமவனினுநிறைந்தாரென்றுஞ்
சாற்றுதற்கியையத்தந்தைதன்பரியாயப்பேரு
ளீற்றுமெய்கெடுத்தொன்றிற்பன்னிரண்டன்மெய்கொடுத்துக்கூறத்
தோற்றுமெய்ப்புகழ்சானாவிற்கரசினைத்தொழுதுவாழ்வாம். 16

17 சுந்தரமூர்த்திசுவாமிகள்.
எண்ணியமறுமைப்பேறுமிம்மையேயுற்றதென்ன
மண்ணியவியங்கும்வெள்ளிமால்வரையெருத்தமேறி
யண்ணியவியங்காவெள்ளிமால்வரையடைந்துவாழும்
புண்ணியமூர்த்திநாவற்புலனைப்போற்றிவாழ்வாம். 17

18 மாணிக்கவாசக சுவாமிகள்.
மாயவனறியாப்பாதமலரவன்மனைவிமேனி
தோயவுமலரோன்காணாச்சுடர்முடியனையானீன்ற
பாயநீருடுத்தமங்கையிவரவுமுருகிப்பாடுந்
தூயவர்கமலபாதத்துணையுளத்திருத்திவாழ்வாம். 18

19 தண்டீசநாயனார்.
மலர்புரைகுடங்கைவெள்வாய்மழுப்படையொன்றுதாங்கி
யலர்பசுவோம்பியின்னுமுண்ணுதலாதியாவும்
பலர்புகழ்தனக்கென்றொன்றும்வேண்டிலாப்பரன்போற்கொண்ட
நலர்செறிசேய்ஞலூர்வாழ்பிள்ளையைநயத்தல்செய்வாம். 19

20 அறுபத்துமூன்றுநாயன்மார்.
வேறு.
பூன்றதன்மையில்புன்மையேநெஞ்சகத்
தேன்றவஞ்சகமாதியிருப்பினுந்
தோன்றவோர்புரஞ்சூழ்ந்துறவாழ்வரா
லான்றமேன்மையறுபத்துமூவரே. 20

21 பஞ்சாக்கரதேசிகர்.
பூதங்கடந்துபொறிகடந்துபுலனுங்கடந்துபுகல்காண
பேதங்கடந்துகாலமுதலனைத்துங்கடந்துபெருவிந்து
நாதங்கடந்துவளர்துறைசைநமச்சிவாயதேசிகன்பொற்
பாதங்கடந்துபற்றறுத்தானினிமேலல்லற்படலிலையே. 21

22 அம்பலவாண்தேசிகர்.
வேறு.
மருடருவினைகடேய்த்தோமாமலக்குறும்புமாய்த்தோ
மிருடருபிறப்பில்வாரோமென்றுமோரியல்பிற்றீரோ
மருடருதுறைசைமேவுமம்பலவாணதேவன்
பொருடருகமலத்தாளெந்தலைமிசைப்புனைந்தபோதே. 22

23 சித்தாந்தசைவர்கள்.
பண்ணியபுறமார்க்கங்கள்பாழ்படவொழித்துமேலாம்
புண்ணியவிபூதியக்கமணியொடைந்தெழுத்தும்போற்றி
யண்ணியசிவானந்தத்தேனிரம்பவுண்டமையாநிற்கும்
தண்ணியகுணசித்தாந்தசைவரைவணக்கஞ்செய்வாம். 23

24 ஆலப்பணிசெய்வோர்கள்.
அரவுநீர்ச்சடையானெங்களம்மையோடகிலமெல்லாம்
பரவுமாறமர்பொன்மாரிப்பதிப்பெருந்தளியிற்றொண்டின்
விரவுநான்மறையோராதியலகிடல்விழைந்தோரீறா
முரவுசேர்தவத்தர்யாருமுவந்தியாந்தொழுந்தேவாவார். 24


கடவுள் வாழ்த்து முற்றிற்று.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


கண்டதேவிப் புராணம் - Page 2 Empty Re: கண்டதேவிப் புராணம்

Post by சிவா Mon Jun 20, 2011 3:09 am

101 கரும்புமஞ்சளுமிஞ்சியுந்தெங்குமொண்கமுகும்
விரும்புமேனம்பொலிதருமருதத்தின்மேன்மை
யரும்பும்வாஞ்சையிற்சிறிதுரைத்தனஞ்சிறிதறைவாஞ்
சுரும்புசூழ்தருநெய்தல்சார்தொடுகடல்வளமும். 71

நெய்தல்.

102 வேறு.
வருணன்காவலின்வயங்குநெய்தல்வாய்ப்
பொருணன்கீட்டியபோகுதோணியு
மருவிலவல்விரைஇவருபொற்றோணியு
மொருவுறாதொன்றோடொன்றுமுட்டுமே. 72

103 மிக்ககைதையும்விரவுஞாழலுந்
தொக்கபுன்னையுந்தோட்டுநெய்தலு
மொக்கவீசுதோறுற்றவாசனை
புக்குலாவலிற்புலவுமாறுமே. 73

104 கொடியிடைப்பரத்தியர்குழற்கணி
நெடியதாழைவாசனைநிரம்பலாற்
படியின்மற்றவர்பகர்புலாற்கயல்
கடியமீனெனக்களித்துக்கொள்வரால் 74

105 உப்புமீனமுமொன்றுபட்டிட
வப்புநீர்மையினமைத்துணக்குவார்
தப்புறாதுபுள்சாயச்சாடுவார்
பப்புவாள்விழிப்பரத்திமார்களே. 75

106 வலையிழுப்பவர்வயக்குமோதையு
முலைதரத்திமிலுந்துமோதையும்
விலைபடுத்துமீன்விற்குமோதையு
மலைகடற்கெதிராய்முழங்குமே. 76

107 வேறு.
பரவுவாரிசூழ்நிலப்பெருவளமெவர்பகர்வார்
குரவுநெல்லியுமிருப்பையுங்கோங்கமுங்கொண்டு
விரவுநண்புடன்போக்கினர்விரும்புமாறேன்ற
புரவுசெய்திடுபாலையும்பொலியுமாங்காங்கு. 77

108 திணைமயக்கம்.
வரையகம்பொலிகளிறுகைநீட்டிவண்கானத்
தரையகம்பொலியிறுங்குகொள்வதுமொருசாராம்
விரையகம்பொலிகான்குயின்மென்பணையோடை
நிரையகம்பொலிமாந்துணர்கோதலுநிகழும். 78

109 பணைவிராவியவயலைபோய்ப்புன்னைமேற்படாப்
பெணைவிராவியகடற்றுகிர்வஞ்சிமேற்பிறங்கு
மணைவிராவியசங்கினான்பாலோடுதேனு
மிணைவிராவியமாங்கனிச்சாறும்வீழ்ந்தியையும். 79

110 இன்னவாயவைந்திணைவளப்பாண்டிநாட்டியல்பைப்
பன்னகேசனும்பகரமுற்றாதெனப்பகர்வா
னென்னின்யாமெவன்சொற்றனநகரங்களெவைக்கு
முன்னிலாவியகண்டதேவிப்புகழ்மொழிவாம். 80

திருநாட்டுப்படல முற்றிற்று.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கண்டதேவிப் புராணம் - Page 2 Empty Re: கண்டதேவிப் புராணம்

Post by சிவா Mon Jun 20, 2011 3:10 am

2. திருநகரப்படலம். (111- 200 )

111 அண்டருமுனிவருமவாவிச்சூழ்வது
தண்டருமறம் பொருளின் பஞ்சார்ந்தவர்க்
கெண்டரும்படியளித்தெச்சமெய்தவுங்
கண்டருமான்மியக் கண்டதேவியே. 1

112 பூமருவுயிர்த்தெழுபுவனம்போர்க்குங்கா
வாமருவுலகமுமங்கைகூப்பிடப்
பாமருபுண்ணியம்பலவுமாக்கிடுங்
காமருவளத்ததுகண்டதேவியே. 2

113 ஏற்றமார்தனைக்குறித்தெவருமாதவ
மாற்றவாழம்மையேயடைந்துமாதவம்
போற்றவாந்தலமெனிற்புரைவதில்லைதோங்
சாற்றவாமான்மியக்கண்டதேவியே. 3

114 சிறைவலிக்கழுகொன்றுதேடிக்காணுறா
நறைமலர்த்திருமுடிநயந்துகண்டொரு
குறையுடைக்கழுகருள்கூடச்செய்தது
கறையறப்பொலிவளக்கண்டதேவியே. 4

115 பண்ணியமாதவப்பண்பினோர்க்கலா
லண்ணியவேனையோர்க்கமைதராததா
லெண்ணியயாவையுமெளிதினல்கிடுங்
கண்ணியபெருவளக்கண்டதேவியே. 5

116 புறநகர்.
கருங்கடலுவர்ப்பொடுபுலவுங்காற்றுவர்
னொருங்குமுற்றுறவளைந்துறுத்துதித்தெனப்
பெருங்குரற்புட்களின்பெருமுழக்கொடு
மருங்குறச்சூழ்தரும்பசியவான்பொழில். 6

117 அக்கருங்கடலகத்தளாந்துகிர்க்கொடி
யிக்கருஞ்சோலைவாயிளையமாதரா
ரக்கருங்கடலகத்தலங்குநித்தில
மிக்கருஞ்சோலையுளிலங்கரும்பரோ. 7

118 அனையபைங்கடலகத்தாயநுண்மண
லினையபைஞ்சோலைவாயியைந்தபூம்பொடி
யனையபைங்கடலலையெழுந்தவெள்வளை
யினையபைம்பொழனை்மிசையிலங்குவெண்பிறை. 8

119 தலம்புகுநல்லவர்தங்களுக்கிரு
நலம்புகுமன்னவைநல்குமாதரார்
குலம்புகுமாதனங்குழுமியென்னநீர்
நிலம்புகுமோரிருநிறத்தகஞ்சமும். 9

120 ஐயநீர்ப்பெருந்தடம்யாககுண்டமாஞ்
செய்யதாமரையழல்செறியுங்காரளி
வெய்யவாம்புகையழல்வளர்க்கும்வேதியர்
மையறீர்சுற்றெலாம்வயங்குமன்னமே. 10


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கண்டதேவிப் புராணம் - Page 2 Empty Re: கண்டதேவிப் புராணம்

Post by சிவா Mon Jun 20, 2011 3:11 am

121 வானவர்சூழ்தலினவர்மரீஇயமர்
தானமென்றறிதரத்தக்கபன்மல
ரானவைசெறியவண்டளிகண்மொய்த்திட
வீனமினந்தனஞ்சூழுமெங்குமே. 11

122 ஒன்றுநந்தனவனத்தொருங்குகாரளி
சென்றுசென்றுழக்குவபகைவர்சேரிட
மென்றுகண்டசுரர்களெய்திநாடொறு
மன்றுதல்புரிந்தளாயடர்த்தன்மானுமே. 12

123 ஒருகழுகினுக்கருளுதவிக்காத்தவன்
றிருநகராதலிற்சேர்ந்தியாமெலா
மருவிடினக்குமின்னருள்வழங்குமென்
றொருவில்பைம்பொழிலுள்வீயொருங்குவைகுமே. 13

124 நன்மலர்செறிதருநந்தனந்தொறு
மின்மலர்செருந்திகள்வீயுகுப்பன
வன்மலர்களத்தினானருளின்முன்னைநாட்
பொன்மழைபொழிந்ததைப்புதுக்கினாலென. 14

125 தம்முருவெடுத்தவன்றனதுவெம்பகைக்
கம்மவீதினமெனவறிந்தடர்த்தல்போற்
செம்மலிதளர்பலசெறிந்தமாவெலாங்
கொம்மெனமிதித்தளாய்க்குயிலுலாவுமே. 15

126 கதிர்படுசெந்நென்மென்காற்றினாலசைந்
ததிர்வருகரும்படியறைந்துகீறலா
லெதிரறப்பொழிந்தசாறெழுந்துபோயயற்
பிதிர்வறவரம்பைகள்வளர்க்கும்பேணியே. 16

127 நம்மையூருமையயற்றலத்துநன்புலஞ்
செம்மையிற்காத்தலிற்றெவ்வலாமென
வம்மதண்பணைதொறுமளாவிநெற்கதிர்
கொம்மெனப்பசுங்கிளிக்குலங்கொண்டேகுமே. 17

128 பித்தருமிகழ்தராப்பெரியநாயகி
கைத்தலமமர்தலிற்காமர்கிள்ளைக
ளெத்தலத்தெதுகவர்ந்தேகுமாயினுஞ்
சித்தமிக்குவப்பரந்நகரஞ்சேர்ந்துளார். 18

129 மருவலர்முடித்தலைதெங்கங்காயின்வைத்
தொருவறமிதித்தலினுறுசெந்நீரினாற்
கருவுரனிகர்த்தலாற்கறையடிப்பெய
ரிருபொருள்படப்புனைவழுவையெண்ணில. 19

130 உருமுறழ்முழக்கினவூழித்தீயென
வெருவருந்திறலினவீசுவாலின
பொருபிறைக்கோட்டினபுலிங்கக்கண்ணின
வருகளிறுகள்செறிகூடமல்குவ. 20


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கண்டதேவிப் புராணம் - Page 2 Empty Re: கண்டதேவிப் புராணம்

Post by சிவா Mon Jun 20, 2011 3:11 am

131 விழைமதகளிறுகண்மிக்குலாவுவ
தழைகருங்கீழிடந்தயங்குமேலிட
மழைமதச்சுரகரிமகிழ்ந்துலாவுவ
பிழைதபுவாரிகள்பிறங்குமெங்குமே. 21

132 ஒன்னலர்மணிமுடியுருளத்தாவுவ
பன்னருமனத்தினும்பகர்கடுப்பின
வென்னருநடுநடுக்கெய்துந்தோற்றத்த
பொன்னணிமணிவயப்புரவியெண்ணில. 22

133 குலமகளெனத்தலைகவிழுங்கொள்கையி
னிலகுவெம்பரிசெறியிலாயமீமிசை
யுலவதல்வழக்கெனவுவந்துலாவுறு
மலருமப்பெயர்புனைவானமீனரோ. 23

134 ஆருறுகுடத்தினவம்பொற்சுற்றின
பாருறுவன்மையைப்பகிர்ந்துசெல்வன
காருறுவிண்ணையுங்கலக்குஞ்சென்னிய
தேருறுமிருக்கைகள்சிவணும்பற்பல. 24

135 அடித்தலந்தேர்பலவமைத்தகூடத்து
முடித்தலந்தவழுதன்முறைமையாமெனத்
தடித்தலமரவொளிர்பரிதிசாலுந்தேர்
நொடித்தலங்கூர்ந்துசெனோக்கமிக்கதே. 25

136 வாளொடுபரிசையும்வயக்குங்கையினர்
தாளொடுகூடியகழலர்தாங்கிய
கோளொடுகூற்றொடுமலைக்குங்கொள்கையர்
வேளொடுநிகர்த்தமாவீரரெண்ணிலர். 26

137 தெள்ளியவிஞ்சையர்வியக்குஞ்சீர்த்திய
ரெள்ளியபுறக்கொடையென்றுமில்லவர்
நள்ளியவினைத்திறநாளுநாடியாற்
றொள்ளியதாயகல்லூரியும்பல. 27

138 அன்றுவெங்கரிபரியாதிபோலநா
மென்றங்கீழ்நோக்குதலில்லையாலெனா
நன்றுமேனோக்குபுநடக்குமொட்டகங்
கன்றுறாதமர்தருங்கைப்பவாவியே. 28

139 கரிபரிதேர்க்குறுகருவியோடுகால்
வரிகழல்வீரர்கள்வயக்குமேதிகள்
புரிநர்பல்வளத்தொடுபொலியுஞ்சேரியுந்
தெரிதரினளப்பிலசிறந்தவாவயின். 29

140 அறநகரெனப்புகலனையமாநகர்ப்
புறநகர்வளஞ்சிலபுகன்றுளாமினி
துறநகர்பலவுமுள்ளுவக்குஞ்சீரிடைத்
திறநகர்வளஞ்சிலசெப்புவாமரோ. 30


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கண்டதேவிப் புராணம் - Page 2 Empty Re: கண்டதேவிப் புராணம்

Post by சிவா Mon Jun 20, 2011 3:12 am

141 இடைநகர்.
வேறு.
வாவியோடைமலர்ந்தவுய்யானமு
மாவியன்னவணங்கனையாரொடு
மேவிமைந்தர்விராவுசெய்குன்றமு
மோவியம்புனைமாடமுமோங்குவ. 31

142 குழல்கையேந்திக்குறுந்தொடியார்களுங்
கழலினாடவருங்கலந்தாடுவா
ரொழுகுநீர்களிறும்பிடியும்விராய்
முழுகுநீர்கைமுகந்திறைத்தாடல்போல். 32

143 இம்மையேமறுமை்பயனெய்துதல்
செம்மைசாலித்தலத்தின்சிறப்பென
வம்மையூர்மனைமேற்பயிலந்நலார்
கொம்மைவான்றருவின்கனிகூட்டுண்பார். 33

144 ஒண்ணிலாநுதலாரொளிர்மாடமேல்
வெண்ணிலாமுற்றத்தாடவிழுமலர்
கண்ணிலாங்குப்பைகாற்றவுங்கற்பக
மெண்ணிலாமலர்க்குப்பையிறைக்குமே. 34

145 மாடமேனிலைமண்ணுந்தொழிலினர்
பாடமைந்தகளிப்புறப்பான்மதி
கூடவாங்குக்குலவுமக்கல்லற
னீடவாக்கிநிலவுறமண்ணுமே. 35

146 புதுமணத்தமர்பூவையர்நாணுறா
மதுமலர்ப்பந்தின்வண்சுடர்மாற்றலு
முதுமணிக்கலமொய்யொளிவீசலா
லெதுவினிச்செயலென்றுகண்பொத்துவார். 36

147 தோன்றுமாடமிசைத்தொடிக்கையினார்
சான்றவெம்முலைசார்ந்துபவனத்து
ளான்றவொன்றடுப்பக்கண்டவாடவர்
மூன்றுகொங்கைமுகிழ்த்தமையென்னென்பார். 37

148 மன்னுமேனிலைமாடத்தின்மூடிய
மின்னனார்முத்தமாலைகைவீசுபோ
தன்னமாலைசிதறிவிண்ணாழ்ந்தன
வின்னுமோதுவர்தாரகையென்னவே. 38

149 நன்றுநுங்கணலியுமருங்குலவிண்
ணென்றும்வெல்லுமிரண்டுகும்பங்கொளா
வொன்றுகொண்டநலிவில்விண்ணொப்புவ
தன்றுகாணென்றுவப்பிப்பராடவர். 39

150 வளியுலாமதரூடுதன்மாண்கர
மொளிநிலாவுறப்போக்குதலொண்மல
ரளிநிலாங்குழலார்முகத்தாரெழில்
களிநிலாவக்கவர்வதற்கன்றுகொல். 40


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கண்டதேவிப் புராணம் - Page 2 Empty Re: கண்டதேவிப் புராணம்

Post by சிவா Mon Jun 20, 2011 3:12 am

151 மேகந்தாழநிவந்தவெண்மாடமேற்
போகுசூலம்பொலிவுற்றுத்தோன்றிடு
மாகர்போற்றவயங்குகயிலைமே
லேகபாதவுருத்திரனின்றென. 41

152 மாண்டசெம்பொன்வயங்குசெய்குன்றினைக்
காண்டருங்கருமேகம்வளைத்திடல்
பூண்டவந்திநிறத்தொருபுண்ணிய
னீண்டயானைத்தோல்போர்த்தனிகர்க்குமே. 42

153 உள்ளெலாம்வயிரத்தொளியோங்கிட
வெள்ளிநீலம்வெளிவைத்திழைத்தலி
லுள்ளுசத்துவமுட்புறந்தாமதங்
கொள்ளுங்கோலவுருத்திரன்போலுமே. 43

154 நீலவம்மனைகைக்கொடுநேரிழைக்
கோலமங்கையராடக்கொழுநர்தா
மாலநின்றமனத்தொடுதாமரைப்
பாலவீழ்வண்டுபற்பலவென்பரால். 44

155 ஊசலாடுவரொள்ளிழைமாதரார்
காசுலாமவர்காதிற்குழையொடு
மாசிலாதவலியுடையாடவர்
நேசமார்மனமுந்நெகிழ்ந்தாடுமால். 45

156 கொந்துவார்குழற்கோதையர்மேற்றுகில்
சந்துவாண்முலைநீங்கத்தவாதுபொற்
பந்தடிப்பர்பகைக்குத்தெரிவித்தே
யுந்துதண்டமவைக்குறுப்பாரென். 46

157 உன்னுதம்மொழியொப்புமைநோக்கல்போன்
மன்னுமாளிகைமீமிசைமாதரார்
பன்னும்யாழ்கொடுபாடுவர்விஞ்சையர்
துன்னும்வாஞ்சையிற்கேட்டுத்துணிவரே. 47

158 ஊடலோதையுமூடலுணர்த்துபு
கூடலோதையுங்கோலத்திவவுயாழ்
பாடலோதையும்பாடற்சதிதழீஇ
யாடலோதையுமல்குவவாயிடை. 48

159 பூவுஞ்சுண்ணமுஞ்சாந்தும்பொரியும்வின்
மேவுமுத்தமும்வெள்வயிரங்களும்
பாவுசெம்மணியும்பலவாயமற்
றியாவுங்குப்பையிடைநகர்வீதியே. 49

160 அளவிலாவளமாயவிடைநக
ரளவிலாச்சிறப்பாருறைசெய்பவ
ரளவிலாப்பல்குடியமையுண்ணக
ரளவிலாச்சிறப்பிற்சற்றறைகுவாம். 50


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கண்டதேவிப் புராணம் - Page 2 Empty Re: கண்டதேவிப் புராணம்

Post by சிவா Mon Jun 20, 2011 3:12 am

161 உண்ணகர்.
வேறு.
மடலவிழ்துளபத்தண்டார்மாயவனாயமீனம்
படலரும்வலிசார்கூர்மங்கலக்கிடப்படாததாய
கடல்கொலிவ்வகழியென்றுகருதிடப்பரந்துநீண்டு
தொடலரிதென்னவாழ்ந்துசூழ்ந்ததுகிடங்குமாதோ. 51

162 வெள்ளியதரளமொண்பூவிரைகுளிர்புறத்தும்வெம்மை
நள்ளியவன்மீனாதியகத்துங்கொணகுகிடங்கு
வள்ளியபுறத்துச்செம்மையகத்துவன்கொடுமைபூண்ட
தெள்ளியவிலைமின்னாரொத்திருப்பதுதெரியங்காலே. 52

163 அன்றுலகளந்தமாயோன்வளர்ந்ததிவ்வளவையென்ன
நன்றுலகறியத்தேற்றித்தானவர்நடுங்கச்சூழ்ந்து
சென்றுபோர்மலையாவண்ணந்தேவர்வாழ்நகருங்காத்துப்
பொன்றதலறநிற்கும்பாம்புரிவளையகப்பாமாதோ.. 53

164 பொறிபலவடக்கலானுஞ்சலிப்பறுபொலிவினானும்
பறிநிகர்வேணியெங்கள்பரனையுட்கோடலானு
மறிவருமுயற்சியானும்பகையறவயங்கலானு
முறிவருந்தவத்தின்மேலாமுனிவரும்போலுநொச்சி. 54

165 சாற்றுகிர்க்குறிகைகொண்டுதட்டல்பற்குறியணைத்தல்
போற்றுநல்லமுதுதுய்த்தன்முதற்புறக்கரணமோடு
மாற்றகக்கரணமாயகரிகரமாதியாவுந்
தோற்றுவபரத்தைமாதர்சுடர்மனப்புறத்திலோவம். 55

166 பன்னரும்வனப்பினானும்பயின்றபல்விஞ்சையானு
நன்னலக்கண்டதேவிநகரமர்கணிகைமாதர்
பொன்னமர்திருவைவேதன்புணர்மடமாதைவென்றா
ரன்னவரற்றைநாடொட்டலர்மடந்தையரானாரே. 56

167 சுவைநனியுடையவூனும்பிறர்விழிசிறிதுதொட்டா
னவைமிகுமெச்சிலென்றேகழிக்குநன்மறையோர்தாமு
மவையகம்புகுதுநல்லார்பலர்நுகரதரவூறல்
செவையெனக்கொள்வார்தெய்வவலியெனத்தெளிந்தார்போலும். 57

168 அந்தணராதிநால்வரனுலோமராதியாக
வந்தவர்யாவரேனுமறாமலின்பளிக்குநீராற்
சந்தணிகுவவுக்கொங்கைத்தாழ்குழற்பரத்தைமாதர்
செந்துவர்ச்சடிலமோலிச்சிவபிரான்றானோதேறோம். 58

169 கணிகையர்சிறந்தோரென்றுகரைவதற்கையமின்று
மணிகெழுகூந்தலாதிமாந்தளிரடியீறாக
வணிகெழுமைந்தர்தம்மைமயக்குமற்றனையார்நல்கு
பணியுடைகளுமயக்குமவர்மயங்காதபண்பால். 59

170 உருவுடைமைந்தர்யாருமுறுபெருவிரத்தியாரிற்
பருவநன்மனைவியாதிப்பலரையம்வெறத்துமிக்க
பொருண்முதலனைத்துநல்கிப்பணிகளும்புரிவர்ஞானக்
குருவெனக்கொண்டார்போலுமவர்திறங்கூறற்பாற்றோ. 60


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கண்டதேவிப் புராணம் - Page 2 Empty Re: கண்டதேவிப் புராணம்

Post by சிவா Mon Jun 20, 2011 3:12 am

171 விருந்துவந்துண்டாலன்றிமென்மலராதிகொண்டு
திருந்துசுத்திகளோரைந்திற்சிவார்ச்சனைசெய்தாலன்றி
வருந்துதீர்த்திரப்போருள்ளமகிழ்ச்சிசெய்திட்டாலன்றி
யருந்துதல்செய்யார்சாவாவமுதமும்வேளாண்மாக்கள். 61

172 ஒழுக்கமன்பருளாசாரமுறவுபசாரமுற்று
விழுக்குடிப்பிறப்பையோம்பிமேவபிமானம்பூண்டு
மழுக்கலில்சிறப்பில்வாழும்வண்மைசால்வேளாண்மாக்கள்
செழுங்குடிக்கிரகமேயதிருமறுகணிவிண்போலாம். 62

173 மழைகருக்கொண்டதெண்ணீர்முழுவதுமாநீர்ஞாலத்
துழையுறவிழுதலன்றிவிண்முதலுறாமைபோலத்
தழைதருபுவியினாயதவாப்பொருளெலாமந்நாயகர்
விழைதருமாடமன்றிவேறிடம்புகுதாவென்றும். 63

174 புலியதளுடுத்துவானும்பொலந்தருநல்கவாங்கி
மெலுவறவுடுத்துவாருமன்றிவேறிடத்துள்ளாரு
ளொலிபுகழ்க்கண்டதேவிநகருறைவணிகமாக்கண்
மலிநியமத்துளாடைவாங்குவான்புகாரும்யாரே. 64

175 மலைவருமணிகமாக்கண்மருவியநியமமெல்லா
முலைவருகளங்கநீக்கியுவாமதியினைச்சேறாக்கி
நிலையுறப்பூசியன்னசுண்ணவெண்ணிகழ்ச்சியாலே
கலைமகளெனலாம்பற்பல்கலையமைந்திருத்தல்சான்றே. 65

176 கோடுதலின்றிக்கோடிகோடியாக்கொடுக்கவல்லார்
நாடுயரவரேயன்றிஞாலத்துமற்றையார்கா
ணீடுறக்கொள்வானெண்ணியெத்தனைபேர்வந்தாலுங்
கூடுகைசலிப்புறாதுகொடுத்திடுவிரதம்பூண்டார். 66

177 நென்முதலொருபாலாகுநேத்திரமொருபாலாகும்
பன்மணியொருபாலாகும்பரவுபொன்வெள்ளிசெய்பூ
ணென்னவுமொருபாலாகுமிருங்கலையொருபாலாகு
மன்னவர்நியமம்பொற்கோனருங்கருவூலம்போலும். 67

178 வருந்தியெவ்விடத்துஞ்சென்றுமாண்பொருளீட்டல்போலத்
திருந்தியவன்னதானஞ்சிவாலயப்பணிமுன்னான
பொருந்தியபலவுஞ்செய்துபுண்ணியப்பொருளுமீட்டிப்
பெருந்திருவேற்றோர்க்கீய்ந்துபெரும்புகழ்ப்பொருளுங்கொள்வார். 68

179 கரப்பினெஞ்சுடையராகிக்கடனறிவாருமாய்ச்சீர்
பரப்புமவ்வணிகரானோர்பாலிரவாருமில்லை
நிரப்புமற்றவரைக்கண்டநேயத்தோரூருமில்லை
யிரப்புமற்றவரானாளுமிழிவினையடைந்ததில்லை. 69

180 வெள்ளியநீறுபூசிவிளங்குகண்மணிகள்பூண்டு
தெள்ளியவெழுத்தைந்தெண்ணிச்சிவார்ச்சனைவிருப்பினாற்றித்
தள்ளியவினைஞராகித்தழைந்துவாழ்வணிகமாக்க
ளொள்ளியமாடவீதியுரைத்திடமுற்றுங்கொல்லே. 70


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கண்டதேவிப் புராணம் - Page 2 Empty Re: கண்டதேவிப் புராணம்

Post by சிவா Mon Jun 20, 2011 3:13 am

181 வரூபரிதரங்கங்காட்டமதமலைமகரங்காட்டத்
திருவளர்கொடிஞ்சிப்பொற்றேர்செறிதருநாவாய்காட்டப்
பொருபடைக்கலமீன்காட்டப்பொருனர்மீனெறிவார்காட்டக்
கருநிறக்கடலேமானுங்காவலர்மாடவீதி. 71

182 மருவலர்தருமண்கொண்டுவானகமவர்க்குநல்கிப்
பேருமையிலிழிந்ததேற்றுப்பிறங்கிமிக்குயர்ந்ததாய
பொருவருமின்பநலகும்புண்ணியப்பிரானையொத்த
திருவளர்மன்னர்வாழுந்தெருவளஞ்சொல்லப்போமோ. 72

183 பசுவுடம்பழித்துமுக்கட்பதியுடம்போம்பிக்கொள்வார்
வசுவளர்த்ததனுட்சொன்னவள்ளலைத்தரிசிப்பார்பன்
முசுவுகள்சோலைதோறுமொய்த்தவானவரைக்கூவி
யுசுவினூண்மகத்தினூட்டுமொண்மையர்வீதியோர்பால். 73

184 காலையின்முழுகியாப்பிகைக்கொடுபவித்திரஞ்செய்
மாலையினட்டில்புக்குமடையமைத்தேந்தியுச்சி
வேலையினதிதியர்க்குவிருப்புடனூட்டுமஞ்சொற்
சோலையிற்கிளியன்னாராற்றுலங்குவமறையோரில்லம். 74

184 எண்ணில்வேதாகமங்களையமெய்தாமையாய்ந்து
மண்ணிலான்மார்த்தத்தோடுபரார்த்தமும்வயங்கப்பூசித்
தொண்ணிதியருட்பேறெய்தியொழிந்தமும்மலத்தினாராம்
புண்ணியவாதிசைவர்பொலிதிருமறுகுமோர்பால். 75

186 எழுமதமழகுபத்துங்குற்றமீரைந்தும்போகத்
தழுவியொண்கருத்துமுன்னாச்சாற்றியவைந்தனாலுங்
கெழுதகுபிறவாற்றாலுங்கிளரியலுரைக்கவல்ல
முழுதுணர்புலவர்மேயகழகமுமுகிழ்க்குமோர்பால். 76

187 புண்ணியமறையோராதியாவரும்புகுந்துமேலோர்
கண்ணியவுமையோர்பாகக்கண்ணுதற்பெருமான்பொற்றா
ணண்ணியவின்பேயென்றுநயப்புறவின்பமேன்மேற்
பண்ணியதாயதண்ணீர்ப்பந்தரும்பொலியுமோர்பால். 77

188 வேதியராதியோர்கள்விலாப்புடைவீங்கவுண்பான்
கோதியலாதவல்சிகுய்கமழ்கருனைபாகு
மோதியசுவையநெய்பான்முதலியபலவுநல்குந்
தீதியலாதசெல்வத்திருமடங்களுமுண்டோர்பால். 78

189 குலவியதெய்வஞானக்குரவனாரருளினாலே
நிலவியசமயமாதிநிகழொருமூன்றும்பெற்றுக்
கலவியபாசமைந்துங்கழிதரவொன்றியொன்றா
தலவியலாதவின்பமுறுநர்வாழ்மடமுமோர்பால். 79

190 இன்னபன்மறுகுஞ்சூழவெறிகதிர்மதாணிநாப்பண்
மின்னவிர்மணயேபோலவிளக்கமிக்கமைந்துமேவும்
பின்னமில்கருணைத்தாயாம்பெரியநாயகியோடெங்கண்
முன்னவன்மருதவாணன்முனிவறப்பொலியுங்கோயில். 80


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கண்டதேவிப் புராணம் - Page 2 Empty Re: கண்டதேவிப் புராணம்

Post by சிவா Mon Jun 20, 2011 3:13 am

191 உருத்திரப்பெருமான்றீர்த்தமுலகளந்தவன்செய்தீர்த்தந்
திகுத்தகுபிரமதீர்த்தஞ்செறிபுகழ்ச்சடாயுதீர்த்த
மருந்தபன்மலரும்பூத்துவாசமெண்காதம்வீசிக்
கருத்தமைகோயில்சூழ்ந்துகவின்கொடுபொலியாநிற்கும். 81

192 திரிபுரமெரித்தஞான்றுசேணுலகனைத்துந்தாங்கப்
பரிபுரம்புலம்பும்பூந்தாட்பரையொருபாகத்தண்ண
றெரிபுரம்பொலியுமேருவேறொன்றசெறித்ததென்ன
வரிபுரந்தரன்முன்னானோரடைபொற்கோபுரநின்றன்றே. 82

193 பகைத்தமும்மதிலுநீறுபட்டமையுணர்ந்துதீயா
நகைத்தவனருள்கொள்பாக்குநயந்துயரொன்றுமேவி
யுகைத்தவெஞ்சினத்துத்தீயருறாவகையொதுக்கிச்சூழ்ந்து
தகைத்ததுநிற்றல்போலுந்தவாச்சுடர்ச்செம்பொனிஞ்சி. 83

194 ஒருமதிலின்னதாகவொருமதிலுணர்ந்துவல்லே
தருமவெள்விடையினார்க்குத்தவாநிழனாளுஞ்செய்ய
மருமலர்த்தருவொன்றாகிநிழல்செய்துவயங்கிற்றென்னப்
பொருவில்வெண்மருதநாளும்பூத்துறத்தழையாநிற்கும். 84

195 மற்றுமோர்மதிலும்போந்துமண்டபமாதியாய
முற்றுமாய்ப்பொலிந்ததென்னமொய்த்தகால்பத்துநூறு
பற்றுமண்டபமுன்யாவும்பாரிடைக்கருங்கற்போழ்ந்து
செற்றுநன்கமைத்தலாலேகருங்கதிர்திகழவீசும். 85

196 தனைத்தவர்செய்தஞான்றுதனக்கெதிர்முளைத்ததோர்ந்து
நினைத்தபொன்மேருவள்ளனிறையருணிரப்பிக்கொள்ள
முனைத்தபல்விமானமாகிமுகிழ்த்ததென்றெவரும்பேச
வினைத்தெனவறிதராப்பொன்விமானங்களெங்குமோங்கும். 86

197 கூண்டவன்புடையதாயகுட்டிமமுன்றிலெங்கு
நீண்டவன்முதல்வானோருநிறைபெரும்புவியுளார
மாண்டவன்புடையராகிவந்துபொன்மாரிதூர்ப்பா
ராண்டவன்பொழிந்தவாறேயடியரும்பொழிவாரென்ன. 87

198 மழைநிகர்களத்துப்பெம்மான்வண்மைசால்திருமுன்னாகத்
தழைமலர்சிறிதுமின்றிப்பிறதழைமலரேசார
வுழையமாமிசையுமின்றியொருதருநின்றுசூழ்வோர்
விழைதருபலன்களெல்லாங்கொடுத்திடுமேலுமேலும். 88

199 அரகரமுழக்குநால்வரருட்டிருப்பாடலார்ப்பு
முரசதிரொலியும்வீணைமுழவெழுமிசைப்புமம்மான்
பரவுசந்நிதிமுன்னாகப்பணிந்தெழுமடியார்பாவ
வுரவுவெங்களிறுமாய்க்குமரிமுழக்கொத்திசைக்கும். 89

200 கண்ணலங்கனிந்தவன்பிற்கடவுளோர்முதலோரீண்டி
யெண்ணலங்கனிந்தவெல்லாமெய்தியின்படையநல்கிப்
பெண்ணலங்கனிந்ததெய்வப்பேரருட்பெரியாளோடு
மண்ணலங்கனிந்தமேனியமலனக்கோயின்மேவும். 90

திருநகரப்படலம் முற்றிற்று.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கண்டதேவிப் புராணம் - Page 2 Empty Re: கண்டதேவிப் புராணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum