புதிய பதிவுகள்
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:55

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:26

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:50

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:31

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:19

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:45

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 19:02

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:53

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:31

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:23

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:58

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 15:56

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:24

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீபச் செல்வன் கவிதைகள் Poll_c10தீபச் செல்வன் கவிதைகள் Poll_m10தீபச் செல்வன் கவிதைகள் Poll_c10 
31 Posts - 42%
heezulia
தீபச் செல்வன் கவிதைகள் Poll_c10தீபச் செல்வன் கவிதைகள் Poll_m10தீபச் செல்வன் கவிதைகள் Poll_c10 
19 Posts - 26%
mohamed nizamudeen
தீபச் செல்வன் கவிதைகள் Poll_c10தீபச் செல்வன் கவிதைகள் Poll_m10தீபச் செல்வன் கவிதைகள் Poll_c10 
6 Posts - 8%
வேல்முருகன் காசி
தீபச் செல்வன் கவிதைகள் Poll_c10தீபச் செல்வன் கவிதைகள் Poll_m10தீபச் செல்வன் கவிதைகள் Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
தீபச் செல்வன் கவிதைகள் Poll_c10தீபச் செல்வன் கவிதைகள் Poll_m10தீபச் செல்வன் கவிதைகள் Poll_c10 
4 Posts - 5%
prajai
தீபச் செல்வன் கவிதைகள் Poll_c10தீபச் செல்வன் கவிதைகள் Poll_m10தீபச் செல்வன் கவிதைகள் Poll_c10 
3 Posts - 4%
Raji@123
தீபச் செல்வன் கவிதைகள் Poll_c10தீபச் செல்வன் கவிதைகள் Poll_m10தீபச் செல்வன் கவிதைகள் Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
தீபச் செல்வன் கவிதைகள் Poll_c10தீபச் செல்வன் கவிதைகள் Poll_m10தீபச் செல்வன் கவிதைகள் Poll_c10 
2 Posts - 3%
M. Priya
தீபச் செல்வன் கவிதைகள் Poll_c10தீபச் செல்வன் கவிதைகள் Poll_m10தீபச் செல்வன் கவிதைகள் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
தீபச் செல்வன் கவிதைகள் Poll_c10தீபச் செல்வன் கவிதைகள் Poll_m10தீபச் செல்வன் கவிதைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தீபச் செல்வன் கவிதைகள் Poll_c10தீபச் செல்வன் கவிதைகள் Poll_m10தீபச் செல்வன் கவிதைகள் Poll_c10 
155 Posts - 41%
ayyasamy ram
தீபச் செல்வன் கவிதைகள் Poll_c10தீபச் செல்வன் கவிதைகள் Poll_m10தீபச் செல்வன் கவிதைகள் Poll_c10 
145 Posts - 38%
Dr.S.Soundarapandian
தீபச் செல்வன் கவிதைகள் Poll_c10தீபச் செல்வன் கவிதைகள் Poll_m10தீபச் செல்வன் கவிதைகள் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
தீபச் செல்வன் கவிதைகள் Poll_c10தீபச் செல்வன் கவிதைகள் Poll_m10தீபச் செல்வன் கவிதைகள் Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
தீபச் செல்வன் கவிதைகள் Poll_c10தீபச் செல்வன் கவிதைகள் Poll_m10தீபச் செல்வன் கவிதைகள் Poll_c10 
8 Posts - 2%
prajai
தீபச் செல்வன் கவிதைகள் Poll_c10தீபச் செல்வன் கவிதைகள் Poll_m10தீபச் செல்வன் கவிதைகள் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
தீபச் செல்வன் கவிதைகள் Poll_c10தீபச் செல்வன் கவிதைகள் Poll_m10தீபச் செல்வன் கவிதைகள் Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
தீபச் செல்வன் கவிதைகள் Poll_c10தீபச் செல்வன் கவிதைகள் Poll_m10தீபச் செல்வன் கவிதைகள் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தீபச் செல்வன் கவிதைகள் Poll_c10தீபச் செல்வன் கவிதைகள் Poll_m10தீபச் செல்வன் கவிதைகள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தீபச் செல்வன் கவிதைகள் Poll_c10தீபச் செல்வன் கவிதைகள் Poll_m10தீபச் செல்வன் கவிதைகள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீபச் செல்வன் கவிதைகள்


   
   
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu 21 Apr 2011 - 16:14

தீபச் செல்வன் கவிதைகள்




போர் நிலம்
வெறும் நிலத்திற்கு பொம்மைகள் திரும்புகின்றன
பிரயாணிப்பவர்கள் எல்லோரது கைகளிலும்
பெருத்த வண்டிகளிலும்
அவர்களிடமுள்ள அகலமான குறுக்குப் பைகளிலும்
நிலத்தை அள்ளிச் செல்லுவதாக
வயது முதிர்ந்தவர்கள் பிதற்றுகிறார்கள்.
தீபச் செல்வன் கவிதைகள் P28போர் நிலத்தில் குழந்தையின் பொம்மை
இறந்து சிதைவுகளுடன் கிடக்கிறது
கொல்லப்பட்டிருக்கிற தாயைக் குறித்தோ
தன் தந்தையைக் குறித்தோ
எதுவும் கேட்காமல் மறந்துபோன குழந்தை
தன் பொம்மை தேடி பாதியாய் மீட்டிருக்கிறது.
தரப்பால் துண்டுகளுடன்
சில பூவரசம் தடிகளையும் எடுத்துக்கொண்டு
பொம்மை வீடுகளைக்
குழந்தைகள் மூட்டிக்கொண்டு அதனுள் இருக்கின்றனர்
சுவர்களோ தடுப்புக்களோ இல்லாத
பொம்மை வீட்டுக்குள்
காற்றும் புழுதியும் வெம்மையும்
நுழைந்து காலச் சித்திரமாய் படிந்திருக்கிறது.
பெருமழையின் ஈரம் ஊறி முட்டிய
நிலத்தில் கைகளால் மண் அணைத்தபடி
சேற்றில் குளிக்கும்
குழந்தைகளின் கைகளிலிருக்கிற பொம்மைகளின்
வீடுகளுக்காகப் போர் தொடங்குகிறது.

யுத்தம் பிடித்து அழிவுகள் நிறைந்துபோய்க் கிடக்கிற
நிலத்தின் வாசனையைக் குழந்தைகள் முகர்கின்றனர்
வெடிபொருட்களின் புகை
இருதயத்தை ஊடறுத்துச் செல்கிறது
நஞ்சூறி நீலமாகிய தண்ணீரைக் குடித்து
குழந்தைகள் பசியாறுகின்றனர்.
தங்களைத் தாங்களே கொலை செய்யும் குழந்தைகளின்
கையில் உடைந்த பொம்மைகளைத் தவிர ஒன்றுமில்லை
போர் தின்று
நஞ்சுண்ட நிலத்தில் குந்தி இருப்பதற்காய் இன்னும் போர் நடக்கிறது.

குருதிக்கடல் நிலத்தின் பெருங்காற்று
பெருநிலத்தின் கடலில் கொட்டிய குருதி
உப்பு வயல்களில் தேங்கிக்கிடக்கிறது
வெடிகள் அதிர்ந்து புகை எழும்பி
உயிர் கரைந்த நாட்களில்
வேழினியின் தந்தை
உப்பு வயல்களில் உயிர் கொட்டி விறைத்திருந்தார்
வேழினியின் கண்களில் நீங்காதிருக்கின்றன
உப்பு வயல்களில் நகர்ந்த
வியர்வைகளும் குருதிகளும்.
நிலத்திற்காய் கொட்டிய குருதி
காயாமல் பிசுபிசுக்கிறது
வேழியின் கண்களை நிலம் கொள்ளையிடும்
கைகள் குத்துகின்றன
அன்றெமது நிலத்திற்காய்
இதே தெருவில் பற்றைகளினூடே
வெடிகளைச் சுமந்து சென்றவர்கள் நகரும் பொழுது
குருதி பெருக்கெடுத்துக் கொட்டியது.
இன்றெம் நிலத்தில்
மிகக் கொடும் கைகள் விளைந்திருக்கின்றன
நிலம் அள்ளும் கைகளின் நகங்கள்
உப்பு வயல் கடல் நிலத்தில்
வளர்ந்து கண்களையும் முகத்தையும் குத்துகின்றன.
அன்றெமது கொடி பறந்த தடிகளில்
நிலத் துயரம் பறக்கிறது
வெடி சுமந்து சென்றவரின்
தாங்கியில் வேறு கதைகள் எழுதப்பட்டுள்ளன
உப்பு வயல்களில் முளைத்து
இன்னும் உயிரோடு கிடந்து
துடிக்கிற வார்த்தைகள் பிடுங்கப்படுகிறது.
நிலம் அள்ளித் தின்ற கைகள்
எப்பொழுதும் தெருவில் செல்பவர்களை மிரட்டுகின்றன
கனவின் குருதி வயல்களில் உயிர்கள் மணக்கின்றன
உப்பு வயல்களில் மீண்டும் மீண்டும்
முளைக்கின்றன வெடி சுமந்தவர்களின் முகங்கள்.
இந்தக் கடல் நிலம் அடிமையாக்கப்பட்டதை
வேழினி தாங்க முடியாது துடிக்கிறாள்
எப்பொழுதும் காதுகளை நிரப்பியபடியிருக்கும்
குருதிக் கடல் நிலத்தின் பெரும் உப்புக் காற்று
வெடி சுமந்தவர்களின் கதைகளைக் கூவியபடியிருக்கிறது!

சிசுக்கள் வேகும் அடுப்பு
செம்புழுதி மூடி வளரும் கூடாரத்தில்
அடுப்புகள் எரியாத ஊரில்
ஏனைய இரண்டு குழந்தைகளும்
உணவுப் பாத்திரங்களை அறியாது அழுதழுது தூங்கினர்
தலைவன் முட்கம்பிகளால்
கட்டப்பட்டு யுத்தப் பாவத்தைத் தின்கிறான்
தலைவி துயரம் துடைக்க முடியாத
பசிக் கூடாரத்தைச் சுமக்கிறாள்
வன்புணர்வுக் கோடுகள் நிரம்பிய சீருடைகளும்
துவக்குகளும்
இரும்புத் தொப்பிகளும் அவளைப் புணர்ந்து
பசி தீர்த்த இரவில்
குழந்தைகள் பசியோடு உறங்கினர்
இரவில் பிறந்த சிசுக்களைக் கொன்று
நெருப்பு தகித்தாறாத
அடுப்பில் புதைத்தாள்
தொப்புள் கொடிகளை அறுத்து
பனிக்குடங்களை உடைத்தாள்
ரத்தம் பெருக்கெடுக்க
அவள் ரத்தக் கூடாரத்துள் கிடந்தாள்
குழந்தைகள் பசியின்றி உறங்கினர்!

நன்றி விகடன்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தீபச் செல்வன் கவிதைகள் 47
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Mon 20 Jun 2011 - 15:26

மகிழ்ச்சி மகிழ்ச்சி



தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக