புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னங்க கலாச்சாரங்களை ஒழித்துவிடலாமா? I_vote_lcapஎன்னங்க கலாச்சாரங்களை ஒழித்துவிடலாமா? I_voting_barஎன்னங்க கலாச்சாரங்களை ஒழித்துவிடலாமா? I_vote_rcap 
6 Posts - 60%
வேல்முருகன் காசி
என்னங்க கலாச்சாரங்களை ஒழித்துவிடலாமா? I_vote_lcapஎன்னங்க கலாச்சாரங்களை ஒழித்துவிடலாமா? I_voting_barஎன்னங்க கலாச்சாரங்களை ஒழித்துவிடலாமா? I_vote_rcap 
2 Posts - 20%
heezulia
என்னங்க கலாச்சாரங்களை ஒழித்துவிடலாமா? I_vote_lcapஎன்னங்க கலாச்சாரங்களை ஒழித்துவிடலாமா? I_voting_barஎன்னங்க கலாச்சாரங்களை ஒழித்துவிடலாமா? I_vote_rcap 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னங்க கலாச்சாரங்களை ஒழித்துவிடலாமா?


   
   
realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Sun Jun 19, 2011 5:12 pm

என்னங்க கலாச்சாரங்களை ஒழித்துவிடலாமா? Untitled
கலாச்சாரம் என்பது ஆங்கிலத்தின் CULTURE என்பதின் திரிபான சொல் அல்லது
சமஸ்கிருதத்தின் கலாச்சார் என்பதில் திர்பான சொல். ஆங்கிலத்தில் CULTURE
என்பது CULTIVATE என்னும் சொல்லில் இருந்து வருகின்றது. அதாது சமூகத்தின்
விளைச்சல் என எடுத்துக் கொள்ளலாம், அல்லது பண்படுதல் என்றும் எடுத்துக்
கொள்ளலாம். தமிழில் இதற்கு பண்பாடு என்று தான் சொல்ல வேண்டும். உலகில்
ஒவ்வொரு இன மக்களுக்கும் ஒருவித பண்பாட்டுக் கூறுக்கள் இருக்கின்றன.அந்த
பண்பாடு என்பது ஒரே இரவில் தோன்றியது அல்ல. மாறாக பல்லாயிரக்கணக்கான
ஆண்டுகள் படி முறை வளர்ச்சியாக கொஞ்சம் கொஞ்சமாக தோன்றியது. பண்பாடு என்பது வளரும் தன்மை உடையது. வளர்ச்சி வீதங்கள் பொருளாதார, மக்கள் வாழ்வு, நாகரிகவளர்ச்சி, நம்பிக்கைகள் என பல்வேறு கூறுகளால் மாறுபாடு அடைகின்றது. இன்று உலகில் இருக்கும் கலாச்சாரங்கள் ஒவ்வொன்றும் வளராமல் தேங்கிய நிலையில் எவையும் இல்லை. எதோ ஒரு வீதத்தில் வளர்ந்துக் கொண்டே தான் இருக்கின்றன.

பண்பாடு என்பதை ஒரு மக்கள் கூட்டம் பின்பற்றுவதே ஆகும். ஒரே மக்கள்
கூட்டத்திலும் கூட பண்பாட்டினை வெவ்வேறு அலகுகளாகவே குடும்பங்கள்
பின்பற்றுக்கின்றன, பொதுப்படையாக ஒருக் கூட்டத்துக்கும் மறுக் கூட்டத்துக்கும் பண்பாட்டுக் கூறுகள் மாறுபடுகின்றன. பண்பாடுகளில் எது உயர்வு தாழ்வு என்பதை நம்மால் நிர்ணயிக்க முடியாது, வேகமாகவும் முன்னோக்கியும் நகரும் பண்பாடுகளை ஒரு அளவுக் கோலாக நாம் எடுத்துக் கொள்கின்றோம். பண்பாடுகள் ஒன்றோடு ஒன்று தொடர்புப் படாத, அல்லது தொடர்புகள் குறைந்தக் காலத்தில் அளவுக் கோல்கள் என்று அவ்வளவாக எதுவும் இருந்திருக்கவில்லை, தான்தோன்றியாகவே அவை வளர்ந்தன. ஆனால் தொடர்புகள் ஏற்பட்ட பின் அளவுகோலின் அடிப்படையில் ஒவ்வொரு பண்பாடும் மாற்றங்களைக்
கொண்டு வரத்தொடங்கின.

பண்பாடு என்பதற்கும் மொழிக் கூட்டத்துக்கும் பெரிதும் சம்பந்தம் இல்லை. ஒரே
பண்பாடு உடையவர்கள் வெவ்வேறு மொழி பேசுபவர்களாகவும், ஒரே மொழி பேசுபவர்களேவெவ்வேறு பண்பாடுகளையும் கூட கொண்டிருக்கின்றனர். சில இடங்களில் ஒரே மொழிக் கூட்டத்துக்கு ஒரே பண்பாடும் உள்ளன. மதங்களுக்கும் பண்பாட்டுக்கும் கூட தொடர்புகள் இருக்கின்றன. ஏனெனில் மதங்கள் பண்பாட்டை உருவாக்குவதில்லை, இருந்தாலும் அந்த மதம் தோன்றிய பண்பாட்டினை மதங்கள் சுவீகரித்துக் கொள்கின்றன.

பிறகு அம்மதங்கள் பரவும் இடங்களில் அந்தப் பண்பாடுகளையும் வெவ்வேறு
கலவைகளில் பரப்பி விடுகின்றன. குறிப்பாக சனாதன தர்மம் எனப்படும் இந்து மதம் தென்னிந்தியாவில் பரவிய போது, பல பண்பாட்டுக் கூறுகளை இங்கே கொண்டு வந்தன.ஆனாலும் தமிழர்கள் தமது மரபை முற்றிலும் விட்டுக் கொடுக்கவில்லை. மரபு என்பது காலம் காலமாகவே ஒரு இடத்தில் ஒரு கூட்டத்தினரால் பின்பற்றப்பட்டு வரும் பழக்க வழக்கங்கள் வாழ்வியல் முறைகளாகும். தமிழர்கள் பௌத்த, சமண மதங்களை தழுவிய போதும் தமது மரபுகளை மாற்றியமைக்கவில்லை. குறிப்பாக சமண சமயம் உள்ளூர் வாசிகளின் மொழிகள், வாழ்வியலில் குற்றமில்லாத போது அவற்றை மாற்ற விரும்பியது இல்லை. தமிழர்களின் பண்பாடு சமணக் காலத்தில் ஒரு உயர்வு நிலைக்கு கொண்டுவரப்பட்டது.சமணம் தமிழர்களின் மரபுகளில் குற்றங்களை கடிந்த
அதே நேரத்தில் மரபுகளின் குற்றமில்லாத வாழ்வியல் முறைகளை ஏற்றுக்கொண்டது.

தொல்காப்பியரும் மரபு திரிதலை மொழிக்கும் - வாழ்வியலுக்கும்
எடுத்துரைக்கிறார். மரபு என்பது திரிந்துவிட்டால் அதன் தனித்தன்மை முற்றிலும் அழிந்துவிடும். அதாவது காலம் காலமாக இருக்கும் பழக்க வழக்கங்களை
மாற்றினால் அதன் தனித்தன்மை மாற வாய்ப்புள்ளது. ஆனால் அதே சமயம் மரபு
அப்படியே இருக்குமாயின், கால வளர்ச்சிக்கு ஏற்றவாறு வளராமல் பிற்போக்குத்
தனமாகவே இருந்து, அழியும் வாய்ப்பும் உள்ளது. அதனால் ஒரு பண்பாட்டில்
உயர்வான கூறுக்களை பேணிக் கொள்ள வேண்டும், அதன் மையக் கரு சிதைவடையக் கூடாது. அதே சமயம் பண்பாட்டில் காலத்துக்கு ஏற்ற வளர்ச்சியும் நாகரிகத்தோடு ஒட்டி ஏற்படுத்துதல் வேண்டும். பண்பாடு என்பது உடனடியாக மாறக் கூடியதே அல்ல, ஆனால் மாற்றமில்லாமலும் இருக்கக் கூடியதும் இல்லை.

நாகரிகம் என்பது கடிகாரத்தின் பெரிய முள் போல வேகமாக சுழலும், ஆனால்
பண்பாடு என்பது சின்ன முள் போல மெதுவாகவே சுழலும். எந்தவொரு கடிகாரத்திலும் சின்ன முள் வேகமாக சுழன்றால் கடிகாரம் தவறான வழிகள் செல்வதாகவே கணிக்க முடியும். ஒவ்வொரு பண்பாடும் உன்னதமானது என்றெல்லாம் இல்லை, மண்ணின் வாசத்துக்கு ஏற்ப மாறுபாடு உடையது. எக்சிமோக்களிடம் போய் சேலை உடுத்து எனக்கூற முடியாது ஏனெனில் அது கடும் பனிப் பிரதேசம் அல்லவா ? அதே போல ஒவ்வொரு மண்ணின் நிலைக்கு ஏற்ப பண்பாடுகள் மாறுபடும்.

என்னங்க கலாச்சாரங்களை ஒழித்துவிடலாமா? Culture
தமிழ்க் கலாச்சாரங்களின் மீது குற்றம் காணும் சிலர், அதனை அடியோடு மாற்றிவிட்டு புதிய கலாச்சாரங்களை இறக்குமதி செய்ய விரும்புகின்றனர். ஆனால் ஐரோப்பிய மிசனரிகள் கூட அப்படியான எண்ணத்திலேயே இங்கு வந்தனர், ஆனால் அவர்கள் நமது கலாச்சாரங்களை முழுமையாக உணர்ந்த பின் இவற்றை முற்றிலும் மாற்றுவது தேவையற்றது என்பதால், இந்தியக் கலாச்சார விழுமியங்களை அவர்கள் ஏற்றுக் கொண்டனர். சிறந்த உதாரணமாக வீரமாமுனிவர் என்ற ஐரோப்பிய பாதிரியைக் குறிப்பிடலாம்.

தமிழ்க் கலாச்சாரம் குற்றமற்றது, உலகிலேயே தலைசிறந்தது எனக் கூறவரவில்லை. ஜரவாக்களுக்கு எப்படி அவர்கள் கலாச்சாரம் உயர்ந்ததோ, அதே போல தமிழர்களுக்கு தமிழ்க் கலாச்சாரம் உயர்வாகத் தான் தெரியும். ஆனால் அதே சமயம் ஏனையக் கலாச்சாரங்கள் தாழ்வானதும் இல்லை. தமிழ்க் கலாச்சாரங்களில் இருக்கும் குற்றங்களைத் குறைக் கூறுபவர்கள், குற்றங்களைத் தான் களையவேண்டுமே ஒழிய முற்றிலுமாக மாற்றியமைப்பது அல்ல.

மதங்களின் போர்வையில் வரும் கலாச்சாரப் படையெடுப்புகளை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். கிறித்த கத்தோலிக்க மதங்கள் செவ்விந்தியக் கலாச்சாரங்களை பூண்டோடு அழித்ததன் விளைவு, அந்த நாடுகள் இன்றளவும் முன்னேறுவதில் தடையாக இருக்கின்றன. ஒரு கலாச்சாரம் அழியத்தொடங்கினால், அந்த மக்களிடம் தாழ்வு மனப்பான்மை தானகவே ஓங்கிவிடும் என்பதே.

முகத்தில் பரு இருப்பதால் முகத்தையே மாற்ற முடியுமா ? மனைவியிடம் சிறுக்
குறை இருப்பதால் மனைவியே மாற்ற முடியுமா என்ன ? உலகம் முழுவதும் அனைத்துக் கலாச்சாரங்களை அழித்து ஒரேக் கலாச்சாரமாக மாற்ற முனைவதும், அனைத்து மொழிகளை அழித்து ஒரே மொழியாக மாற்ற முனைவதும் அனைத்து இனங்களை படுகொலை செய்து ஒரே இனமாக மாற்ற முனைவதும் ஒன்றே தான். அதுவே பாசிச சிந்தனையாகும்.

தமிழ்க் கலாச்சாரங்களில் இருக்கும் குற்றங்களை களைய வேண்டுமாயின் சமூக
விழிப்புணர்வே தேவையாகும். தமிழ்க் கலாச்சாரங்களில் இருந்த பல குற்றங்கள்
காலம் காலமாக மாறுபட்டே வந்துள்ளது, காலப் போக்கில் இப்போதுள்ள
குற்றங்களும் இல்லாமல் போகும் என்பதிலும் ஐயமில்லை. ஆங்காங்கே நடக்கும்
குற்றங்களை களைய நாம் நடவடிக்கை எடுத்தக் தான் வேண்டும். குறிப்பாக பெண்களை சமமாக மதித்தல், வரதட்சணை முறை, சிசுக் கொலை, சாதிய வேறுபாடுகள், என பல்வேறு குற்றங்கள் நமதுக் கலாச்சாரங்களில் இருக்கின்றன. இவற்றை நீக்க மக்கள் விழிப்புணர்வும், போதிய சட்டத் திட்டங்களே உதவ முடியும்.

இவற்றைக் காரணம் காட்டி மத மாற்றங்கள் என்பது ஒரு தீர்வாகவே அமையாது என்பதே எனது வாதம். மதம் மாறுவது சுய விருப்பத்தின் அடிப்படையில் இருக்க வேண்டுமே ஒழிய ! கலாச்சார தாழ்வு மனப்பான்மையை உருவாக்குவதினாலோ அல்லது கலாச்சார குற்றங்களில் இருந்து தப்பிக்கும் வழியாகவோ அல்ல !!! ஏனெனில் இஸ்லாமிய மதத்தில் சேர்வதால் கலாச்சாரங்களின் குற்றங்களை அழித்து வாழலாம் என கருதுகின்றார்கள். ஆனால் அது எந்தளவுக்கு சாத்தியம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

தெற்காசியா என்பது பழமைமிகுந்த பலவேறு சமூக சிக்கல்களைக் கொண்ட நாடு, ஒரு காலக்கட்டத்தில் ஓரே சமயிகளாக இருந்து பின்னர் தத்தமது வழிகளில் வாழ்வியலை அமைத்துக் கொண்ட நாடுகளாகும். குறிப்பாக இஸ்லாம் என்பது இன்று பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தில் இருக்கின்றன. அவை கடந்த 800 ஆண்டுகளுக்கு மேலாக அந்நாடுகளில் வாழும் மக்களால் பின்பற்றப் பட்டு வருகின்றன, அதற்கு முன் இருந்த சமூக சிக்கல்கள் பலவும் மதங்கள் மாற்றமடைந்தாலும் நீக்கப் பட முடியவில்லை என்பது தான் கண்முன்னே விரியும் சாட்சியாகும். சட்டத் திட்டங்கள், இறையாண்மைகள் இல்லாத காலங்களில் மதங்கள் அவ்விடத்தில் இருந்து பரிபாலணை செய்துவந்தன. ஆனால் இன்று தேசங்களும் சட்டங்களும் இறையாண்மைகளும் இருக்கின்றன. இன்றையக் காலக் கட்டத்தில் தேசங்கள் ஊடாகவும், சட்டங்களின் ஊடாகவும், பொதுக் கொள்கை ஒன்றை ஏற்படுத்த விழிப்புணர்வு பிரச்சாரங்கள் ஊடாகவுமே கலாச்சாரத்தில் இருக்கும் ஓட்டைகளை அடைக்க முடியும். ஒருக் கலாச்சாரத்தை அழித்துவிட்டு இன்னொன்றை போட்டு நிரப்புவதால் அல்ல !!! சமூகத்திருத்தங்களால் மட்டுமே மாற்றங்கள் சாத்தியம். மாற்றங்கள் என்பது ஒரே இரவில் வந்தும் விடாது, ஆனால் எவ்வளவே வேகப் படுத்த முடியுமோ அவ்வளவு வேகப்படுத்துதலை சமூக ஆர்வலர்கள் கொண்டு வர வேண்டும் ....

கலாச்சாரங்களில் மதங்கள் குறிப்பிட்ட பங்காற்றுகின்றனவே ஒழிய !
கலாச்சாரங்களையும் மதங்களையும் ஒன்றாக எண்ண வேண்டியது இல்லை. ஏனெனில் மதங்களைத் துறந்தோர் கூட தாம் சார்ந்த பகுதியின் கலாச்சாரங்களை துறக்க முடியாது, ஆனால் மாற்றங்களை நோக்கிய நகர்வுகளில் மதங்கள் போடும்
முட்டுக்கட்டைகளை மதங்களுக்கு வெளியே இருந்து மாற்றியமைக்க இயலும்.

கலாச்சாரங்களை நாம் பேண வேண்டும். அதே சூழலில் கலாச்சாரங்களில் உள்ள பிழைகளை களையறுக்கவும் வேண்டும், புதிய சோதனைகளை ( EXPERIMENTS ) அரங்கேற்றவும் வேண்டும். அதே போல மற்றவரின் கலாச்சாரங்களை தாழ்வாக எண்ணவதையும் நிறுத்துங்கள். அமேசான் பழங்குடிகளின் கலாச்சாரம் நம்மை விட தாழ்வானது ஒன்றுமில்லையே. அவர்கள் வாழ்வியலுக்கு அது உயர்வான ஒன்றே. அதே போல கலாச்சார தாழ்வு மனப்பானமையூட்டலையும் நான் இக்கணத்தில் வன்மையாக கண்டிக்கின்றேன்.


நன்றி:கொடுக்கி.நெட்

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Sun Jun 19, 2011 9:24 pm

அநியாயம் அநியாயம் அநியாயம்



என்னங்க கலாச்சாரங்களை ஒழித்துவிடலாமா? Pஎன்னங்க கலாச்சாரங்களை ஒழித்துவிடலாமா? Oஎன்னங்க கலாச்சாரங்களை ஒழித்துவிடலாமா? Sஎன்னங்க கலாச்சாரங்களை ஒழித்துவிடலாமா? Iஎன்னங்க கலாச்சாரங்களை ஒழித்துவிடலாமா? Tஎன்னங்க கலாச்சாரங்களை ஒழித்துவிடலாமா? Iஎன்னங்க கலாச்சாரங்களை ஒழித்துவிடலாமா? Vஎன்னங்க கலாச்சாரங்களை ஒழித்துவிடலாமா? Eஎன்னங்க கலாச்சாரங்களை ஒழித்துவிடலாமா? Emptyஎன்னங்க கலாச்சாரங்களை ஒழித்துவிடலாமா? Kஎன்னங்க கலாச்சாரங்களை ஒழித்துவிடலாமா? Aஎன்னங்க கலாச்சாரங்களை ஒழித்துவிடலாமா? Rஎன்னங்க கலாச்சாரங்களை ஒழித்துவிடலாமா? Tஎன்னங்க கலாச்சாரங்களை ஒழித்துவிடலாமா? Hஎன்னங்க கலாச்சாரங்களை ஒழித்துவிடலாமா? Iஎன்னங்க கலாச்சாரங்களை ஒழித்துவிடலாமா? Cஎன்னங்க கலாச்சாரங்களை ஒழித்துவிடலாமா? K
realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Mon Jun 20, 2011 1:55 am

என்னங்க கலாச்சாரங்களை ஒழித்துவிடலாமா? 154550 என்னங்க கலாச்சாரங்களை ஒழித்துவிடலாமா? 154550 என்னங்க கலாச்சாரங்களை ஒழித்துவிடலாமா? 154550

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக