புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தலித் இந்து ஆன்மிக சங்கத் தலைவருடன் ஒரு பேட்டி Poll_c10தலித் இந்து ஆன்மிக சங்கத் தலைவருடன் ஒரு பேட்டி Poll_m10தலித் இந்து ஆன்மிக சங்கத் தலைவருடன் ஒரு பேட்டி Poll_c10 
6 Posts - 60%
heezulia
தலித் இந்து ஆன்மிக சங்கத் தலைவருடன் ஒரு பேட்டி Poll_c10தலித் இந்து ஆன்மிக சங்கத் தலைவருடன் ஒரு பேட்டி Poll_m10தலித் இந்து ஆன்மிக சங்கத் தலைவருடன் ஒரு பேட்டி Poll_c10 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
தலித் இந்து ஆன்மிக சங்கத் தலைவருடன் ஒரு பேட்டி Poll_c10தலித் இந்து ஆன்மிக சங்கத் தலைவருடன் ஒரு பேட்டி Poll_m10தலித் இந்து ஆன்மிக சங்கத் தலைவருடன் ஒரு பேட்டி Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தலித் இந்து ஆன்மிக சங்கத் தலைவருடன் ஒரு பேட்டி


   
   
avatar
Ramya25
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 01/08/2009

PostRamya25 Sat Sep 12, 2009 10:59 pm

தலித் இந்து ஆன்மிக சங்கத் தலைவருடன் ஒரு பேட்டி

அருட்திரு காளிதாஸ் சுவாமிகள் அகில இந்திய தலித் இந்து மக்கள் ஆன்மிக
சங்கத்தின் தலைவர் இவருடனான பேட்டி Hinduism Today இதழில் அண்மையில்
வெளிவந்தது. அதனைத் தமிழில் தமிழ்இந்து.காம்

தலித்துகள் இன்றைக்கு எதிர்கொள்ளும் சமுதாய விலக்கங்கள் என்ன?
தலித் இந்து ஆன்மிக சங்கத் தலைவருடன் ஒரு பேட்டி Arulthiruswamigalமுதலில்
தலித் எனப்படும் மக்கள் இந்து சமுதாயத்தில் மட்டும் காணப்படும் ஒரு சமூக
நிகழ்வு அல்ல. அனைத்து மதங்களிலும் அனைத்துச் சமுதாயங்களிலும் அனைத்து
இனங்களிலும் வரலாறு முழுவதிலும் தலித்துகளாக்கப்பட்ட சமுதாயங்கள் உள்ளன.
இது ஒரு இந்து சமுதாய நிகழ்வு எனக் கருதுவதே தவறானது. நமது முக்கியமான
பிரச்சனை வறுமையாகும். நமது குழந்தைகளுக்கு இட ஒதுக்கீட்டினாலும் கிடைக்க
வேண்டிய நியாயம் கிடைக்காததற்கு ஒரு முக்கியக் காரணம் கற்க வேண்டிய
வயதிலேயே அவர்கள் வேலைக்கு அனுப்பப் படுகிறார்கள். தண்ணீரும் உணவுமே
வேண்டிய அளவு கிடைக்காத நிலையில் இருக்கும் மக்களுக்கு வேலை வாய்ப்பிலும்
கல்வி நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு இருப்பதால் என்ன பயன்? அடிப்படை
வாழ்வாதாரங்கள் சரியாக்கப் படாதவரையில் இட ஒதுக்கீட்டினால்
ஓரளவுக்குத்தான் பயன் இருக்கும். அத்தகைய வாழ்வாதாரங்களை எங்கள்
சமுதாயத்தில் பெற்றவர்கள் வாழ்க்கையில் வெற்றிகரமாக
முன்னேறியிருக்கிறார்கள்.
ஆனால் இந்து சமுதாயத்தில் 25 விழுக்காடு இருக்கும் எங்களுக்கு இந்தச்
சமுதாயத்தின் பல துறைகளில் பிரதிநிதித்துவம் போதிய அளவுக்கு இல்லை
என்பதுதான் உண்மை. எங்களுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களும்
எங்களிலிருந்து ஆட்கள் வர இயலாமையினால் ஒவ்வொரு ஆண்டும் நிரப்பப்படாமலே
போகின்றன. மத அடிப்படையில் பார்த்தீர்கள் என்றால் தலித்துகளுக்கு
உதவுகிறோம் என்கிற பெயரில் கிறிஸ்தவ, இஸ்லாமிய அமைப்புகள்
வெளிநாடுகளிலிருந்து பெரிய அளவில் பணத்தை இந்த நாட்டுக்குக் கொண்டு
வருகின்றனர். ஆனால் இந்து அமைப்புகளில் அவ்வாறல்ல. இதனால் தலித்
மக்களுக்கு சக இந்துக்கள் தங்களை குறித்து அக்கறை கொள்ளவில்லை என்பது
போன்ற எண்ணத்தைத் தோன்ற வைக்கிறது.
சாதியம் அழிவது எமது சமுதாயம் எதிர்கொள்ளும் பல பிரச்சனைகளைத் தீர்த்து
வைக்கும். ஆனால் அதுவும் கூட எங்களுக்கு வறுமையிலிருந்து மீண்டுவரப்
போதுமானதல்ல. முதலில் உணவும், நீரும் உறையுளும் ஒரு மனிதனுக்குத் தேவை.
அவை இருந்தால்தான் அவன் அடுத்தபடியாகக் கல்வியிலும் சமுதாய மேம்பாட்டிலும்
கவனம் செலுத்த முடியும். எங்களுக்கு மட்டுமல்ல அனைத்துச் சமுதாயத்துக்கும்
பல பிரச்சனைகளுக்கான அருமருந்தாகக் கல்வி அமைகிறது. ஆனால் மிகவும் அறிவுடைய தலித் சிறுவர் சிறுமியருக்கு இன்றைக்கும் கல்வி எட்டாக்கனியாகவே உள்ளது. காரணம், வறுமை மிக்க குடும்பச் சூழல் அவர்களைச் சிறுவயதிலேயே கட்டாய உழைப்புக்குத் தள்ளிவிடுகிறது.

தலித் சமுதாயம் எப்படி உருவானது? சைவத்துறவிகளில் மூன்றில்
ஒருபங்கினர் இன்று தலித்துகள் என பேசப்படும் சமுதாயத்தைச்
சார்ந்தவர்களாகத்தானே இருந்திருக்கின்றனர்?


பண்டைய காலங்களில் சாதி அமைப்பானது அடுக்கு முறையாக அமைந்திடவில்லை.
இதனால் இன்றைக்குத் தாழ்த்தப்பட்டதாகக் கருதப்படும் சமுதாயங்களிலிருந்து
பலர் அன்று மேல்நிலைக்கு வரமுடிந்தது. இதற்குத் தமிழ்
இலக்கியங்களிலிருந்து மட்டுமல்ல பாரதம் முழுதிலிருந்தும் பல பண்டைய
இலக்கியங்களிலிருந்தும் சான்றுகள் அளிக்க முடியும். சாதி அமைப்பு உறைநிலை
அடைந்தது பிற்காலங்களில்தான்.

avatar
Ramya25
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 01/08/2009

PostRamya25 Sat Sep 12, 2009 11:01 pm

ஹிந்து தருமம் என்பது தலித் சமுதாயத்துக்கு எத்தகையதாக உள்ளது?

ஹிந்து தருமம் தலித் சமுதாயத்துக்கு மிகவும் அன்யோன்யமான ஒன்றாக
உள்ளது. கிறிஸ்தவத்துக்கோ இஸ்லாமுக்கோ எம் மக்கள் மதம் மாறினால் கூட
அவற்றை அன்னியமாகத்தான் உணருகிறார்கள். நீங்கள் மசூதிக்கோ சர்ச்சுக்கோ
போகிறீர்கள். ஆனால் சிவபெருமானுடனும் கணபதியுடனும்
முருகப்பெருமானுடனும்தான் வளர்ந்தீர்கள். எனவேதான் மதம் மாறிச் சென்ற பலர்
அங்கே ஒட்டியிருக்க முடியாமல் தாய்மதத்துக்குத் திரும்பிவிடுகின்றனர்.
மேலும் மற்ற மதங்களில் தலித்துகளை நன்றாக நடத்தியதாக இல்லை என்பதும்
தாய்மதம் திரும்ப மற்றொரு காரணம்.

தலித் சமுதாயத்தின் சமயச் சடங்குகள் என்ன? உங்கள் சமுதாயத்துக்கென்று தனிக் கோவில்கள் பூசாரிகள் என உண்டா?

எங்களது வழிபாட்டு முறைகள் இதர ஹிந்துக்களிலிருந்து எவ்விதத்திலும்
மாறுபட்டவை அல்ல. எமது உணவுப் பழக்கங்கள், வழிபாட்டு முறைகள் மற்றும்
கோவில் திருவிழாக்கள் ஆகிய அனைத்துமே இதர ஹிந்துக்களைப் போன்றவைத்தாம்.
எங்கள் சமுதாயத்துக்குள் உள்பிரிவுகள் மிகவும் குறைவாகவே உள்ளன.

தீண்டாமை தீட்டு போன்ற கருத்தமைப்புகளை நீங்கள் எவ்வாறு காண்கிறீர்கள்?

நாங்கள் செய்யும் செயல்களை இதர ஹிந்துக்கள் செய்வதில்லை என்பதால்
நாங்கள் செய்துவரும் தொழில்களை தலித் தொழில்களைத் தீட்டு உண்டாக்குபவை
எனச் சொல்வது மிக அநீதியான, நேர்மையற்ற விஷயமாகும். இத்தகைய முத்திரை
குத்தும் வேலை மனக்கசப்பை உண்டாக்குகின்றது.

தலித் சமுதாயம் மேம்பட்டு வளர என்ன செய்யவேண்டும்?

பல தலித்துகள் முன்னேறியுள்ளனர். ஆனால் அவர்கள் தங்கள் சமுதாயத்தின்
கஷ்டப்படும் இதர சகோதரர்கள் வளர வழி செய்ய வேண்டும். அதனை அவர்கள்
செய்வதில்லை. அதைச் செய்தால் தலித் சமுதாயம் மேம்பட்டு வளர்வது எளிதாகும்.

ஏன் தலித்துகள் கிறிஸ்தவத்துக்கு மாறி, பிறகு தாய்மதம் திரும்புகின்றனர்?

தலித்துகள் கிறிஸ்தவர்கள் தங்களுக்கு உதவுவதாகக் காண்கின்றனர் அத்துடன்
கிறிஸ்தவர்கள் தலித்துகளைக் குறித்து இதர ஹிந்துக்கள் கவலைப்படுவதில்லை
என்னும் பிரச்சாரத்தையும் செய்கின்றனர். இவை இரண்டுமே தவறுதான். பிற
மதங்களுக்கு மாறிய தலித்துகள் எவ்விதத்திலும் நன்மை அடைவதில்லை. எனவே
அண்மைக்காலங்களில் பல தலித்துகள் தாய்மதம் திரும்பியுள்ளனர். எப்படியும்
போராடித்தான் ஆகவேண்டும் என்றால் தாய் மதத்துக்குள்ளேயே, தான் வளர்ந்த
மதத்துக்குள்ளேயே போராடலாமே எனத் திரும்பி வருகின்றனர்.

நன்றி: ஹிந்துயிஸம் டுடே

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sat Sep 12, 2009 11:19 pm

வணக்கம்
சிறப்பான் செய்தியும் சிந்திக்கப் படவேண்டிய விடயங்களும் உள்ளன.
தகவலுக்கு நன்றி
அன்புடன்
நந்திதா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக