ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  Empty குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.

Post by இரா.எட்வின் Sun Jun 19, 2011 1:37 am

குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.
"வணக்கம் எட்வின் சார்”

பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் கார்மேகம் அவர்கள் அறைக்குள் நுழைய இருந்த என்னை இந்தக் குரல் கொஞ்சம் பின்னுக்கு இழுத்தது. திரும்பிப் பார்த்தால் பட்டத்திப் பாளையம் சிவமுத்து சார், வழக்கமான புன்னகையோடு நின்றிருந்தார்.

“ வந்த இடத்துல உங்கள சந்திப்பேன்னு கொஞ்சமும் எதிர்பார்க்கல.ரொம்ப சந்தோசமா இருக்குங்க சார்”

பக்கத்தில் ஒரு பதினைந்து அல்லது பதினாறு மதிக்கத் தக்க குழந்தை நின்றிருந்தான்.யாரென்று புரியவே, அவனை அப்படியே இழுத்து அணைத்துக் கொண்டேன்.

நடந்து முடிந்த பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில் ஆயிரத்திப் பதிமூன்று மதிப்பெண்கள் பெற்றிருக்கிறான் என்று தெரியும்.

“என்ன சாமி ஆயிரத்திப் பதி மூன்றா?”

புன்னகையும் வெட்கமும் போட்டிப் போட்டுக் கொண்டு வெளிக் கசிய அப்படியே நெளிந்தான் பிள்ளை.

“ ரொம்ப நல்ல மார்க்குப்பா.மேல என்ன செய்யப் போற,?” என்று அவன் தலையைக் கோதிய வாறே கேட்டேன். அதற்குள் நண்பர் சிவா வந்து விடவே,

“சிவா, இவங்க சிவமுத்து சார். கார்மேகம் சாரோட ஊர். சாருக்கு தம்பி முறை வேண்டும்.சாரோட மனைவிதான் பட்டத்திப் பாளையம் பள்ளியின் தலைமை ஆசிரியை.”

அறிமுகம் செய்து வைத்தேன்.

பட்டத்திப் பாளையம் பள்ளியைப் பற்றி அவரிடம் நிறையவே பெசியிருக்கிறேன்.எனவே இதைக் கேட்ட மாத்திரத்தில் சிவாவின் கண்களில் ஒரு மின்னல் வெட்டிச் சென்றது.

இருவரும் கை குலுக்கிக் கொண்டார்கள்.

அந்தப் பள்ளிக் கூடத்தப் பார்ப்பதற்காகவே உங்க ஊருக்கு வரணும்னு ஆசை சார். ஒரு முறை அவசியம் வரணும். அந்தப் பள்ளிக்கூடத்தப் பத்தி எட்வின் நிறைய சொல்லியிருக்கிறார். உங்களை பார்த்ததுல ரொம்ப சந்தோசம் சார்,” என்றவர் , “ஆமாம் பையன் என்ன படிக்கிறான்?” என்றார்.

”இப்பதான் ப்ளஸ் டூ முடிச்சிருக்கான்”

” மேற்கொண்டு என்ன படிக்கிறதா உத்தேசம்?”

அங்க சுத்தி இங்க சுத்தி நான் கேட்டிருந்த கேள்விக்கு மிக அருகே எங்களைக் கொண்டு வந்து நிறுத்தியவர், ‘சார், W2 ரவிகிட்ட ஒரு சின்ன வேல இருக்கு. போனதும் வந்துடறேன். நீங்க கொஞ்சம் சாரோடப் பேசிட்டு இருங்க.வந்த உடனே சுப. வீ அய்யாவப் பார்க்கப் போயிடலாம்’

அவர் போனதும் சிவசாமி சாரைப் பார்த்தேன்.எனது பார்வை மீண்டும் அதே கேள்வியைக் கேட்கவே,

கோவை PSG யில் பிசிக்ஸ் கிடைச்சிருக்கு. லயோலா கிடைச்சா நல்லா இருக்கும்னு தோனுச்சு. அதான் முயற்சி செய்து பார்க்கலாமேன்னு வந்திருக்கோம்”

“இந்த மார்க்குக்கு கண்டிப்பா கிடைக்கும். ஏன் சார், மெடிக்கல் முயற்சி செய்யலையா?”

“கட் ஆஃப் கொஞ்சம் குறையுதுங்க சார்”

“ நிர்வாகக் கோட்டாவில் முயற்சி செய்யலாமே?”

கோடிக் கணக்கில் சொத்து அவர்களிடம் உண்டு என்பதும், செலவு செய்து படிக்க வைப்பது அவர்களுக்கு ஒரு விஷயமே இல்லை என்பதாலும் அப்படிக் கேட்டேன்.

“பதினஞ்சு நாளா நானும் அவங்க அம்மாவும் கிடந்து உழுந்து புரண்டு பார்த்துட்டோம். கொஞ்சம் கூட இறங்கி வரவோ, இரக்கப் படவோ மாட்டேங்கறான் சார்”

“கார்மேகம் சாரிடம் சொல்லிப் பேசச் சொல்லிப் பார்க்கலாமே?”

“ அவர் வீட்டில்தான் ரெண்டு நாளா தங்கியிருக்கிறோம். அவரும் ஆன மட்டும் தலையால தண்ணிக் குடிச்சுப் பார்த்துட்டாருங்க சார். அசைவனாங்குறான்.”

”என்ன செல்லம், மருத்துவம் எவ்வளவு ஒசத்தியான படிப்பு தெரியுமா?” என்று முடிப்பதற்குள் சிவமுத்து சார், “ நான் கொஞ்சம் ஒதுங்கிகிறேன். ஒங்ககிட்டயாவது கொஞ்சம் மசியறானான்னு பார்ப்போம்” என்றவாறே ஒதுங்கினார்.

அவனை இன்னும் கொஞ்சம் இறுக்கி அனைத்தவாறும்,தலையைக் கோதியபடியுமாய் அருகில் இருந்த இருக்கைகளில் ஒன்றில் அவனை அமரச் செய்து இன்னொன்றில் நான் அமர்ந்து கொண்டேன்.

“ஏம்ப்பா, ஏன் மருத்துவம் வேண்டாங்குற?”

“வேண்டாங்க மாமா”

“மருத்துவம் பிடிக்கலையா?

“அது மேல வெறிகொண்ட ஆசையே உண்டுங்க மாமா”

அப்படியே ஆடிப் போனேன் ஆடி.

“ அப்புறம் என்னாப்பா, இவ்வளவு ஆச இருக்கே. பேசாம நல்ல காலேஜா பார்த்து சேர்ந்துட வேண்டியதுதானே?”

”வேண்டாங்க மாமா”

வேதாளம் இறங்குகிற மாதிரி தெரியவே இல்லை. இருந்தாலும் நம்பிக்கை இழக்காதவனாய்,

“கஷ்டமா இருக்கும்னு பயப்படறியா?”

”அய்யய்யோ, அப்படியெல்லாம் இல்லீங்க மாமா. இன்னும் சொல்லப் போனா பிசிக்ஸவிட மெடிக்கல் கிடச்சா அத ரொம்ப நல்லாவே படிப்பேன்.”

சில நேரங்களில் மன்மோகன் சிங் பேசினாலே புரிகிறது. பிள்ளையோ ஆறேழு மன்மோகன் சிஙுகளாய் குழப்பினான்.

“அப்புறமென்ன?”

”கிடச்சாப் படிக்கலாம்.”

அப்பாடா ஒரு வழியாய் மசிஞ்சானே பிள்ளை என்று நினைத்தவனாய், “கிடைக்கும், நிச்சயம் கிடைக்கும்” என்றேன்.

“ நிச்சயமாய் கிடைக்காதுங்க மாமா”

“ அதுக்கு நாங்களாச்சு. அண்னாமலை போதுமா?, இல்லை வேறு ஏதாவது காலேஜ் வேணும்னாலும் சொல்லு. மத்தத நாங்க பார்த்துக்கறோம்”

“பேமெண்ட் சீட்லயா மாமா?”

“ஆமாம்”

“ அதுதான் வேண்டாங்குறேன்.”

காசு ரொம்ப செலவாயிடுமோன்னு பயப்படுகிறான் போல என்று எண்ணினேன்.

”சொத்து கறைந்துடுமோன்னு பயப்படுறியாப்பா.கவலையேப் படாத. சம்பாரிச்சுக்கலாம்.”

“அப்ப சம்பாரிக்கத்தான் எல்லோரும் என்னை மருத்துவம் படிக்கச் சொல்றீங்களா மாமா?”

என்ன செய்வதென்றே தெரியவில்லை. எல்லாக் கேள்விகளுக்குமான பதிலும், எதற்கான கேள்விகளும் அவனிடம் ஏராளம் இருக்கின்றன. ஏதாவது கேட்டால் நம்மை தற்காத்துக் கொள்ள வேண்டிய நிலைக்குத் தன் கேள்விகளாலும் பதில்களாலும் வளைத்துக் கவ்விப் பிடித்து விடுகிறான் நம்மை.

“ ஆனாலும் மருத்துவம் என்பது சேவை இல்லையா?”

“பிசிக்ஸ்படிச்சுட்டுக் கூட சேவை செய்யலாம் மாமா”

பிடி கொடுக்கவே மறுக்கிறான்.

“ அப்ப மெடிசின் பிடிக்கல, அப்படித்தானே?”

முனை மழுங்கிய மொக்கை என்று தெரிந்தும் வேறு வழி இன்றி கேட்டேன்.

”இல்லீங்க மாமா, நான் எடுத்த மார்க்குக்கு மெடிசன் கிடைத்தால் எல்லோருக்கும் இனிப்பு கொடுத்து சந்தோசமா படிப்பேன். ஆனா தாத்தாவோட காசுக்குத்தான் அது கிடைக்கும்னா வேண்டாங்க மாமா. அம்மாவும் அப்பாவும் உங்களப் பத்தி பெருமையா நிறைய சொல்லியிருக்காங்க. நீங்களே படிப்ப விலைக்கு வாங்க சொல்றதுதான் மனசுக்கு கஷ்டமா இருக்குங்க மாமா”

ஓங்கி அறைந்தது போல் இருந்தது. இழுத்து இன்னும் இறுக்கமாக அவனை அணைத்துக் கொண்டேன். இன்னும் அதிகமான வாஞ்சையோடு அவன் தலையை வருடிக் கொடுத்தேன்.என் கண்கள் சன்னமாய் சுரப்பது மாதிரிப் பட்டது.

“ஏதும் தப்பா பேசிட்டேனா மாமா. அப்படின்னா மன்னிச்சுக்கங்க மாமா.”

“ இல்லப்பா. சத்தியமா இல்ல. நீ நல்லா வருவ”அவன் கன்னத்தைக் கிள்ளிவிட்டு வந்திருந்த சிவக் குமாரோடு புறப்பட்டேன்.

குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.

எப்போதும் சொல்வதைத்தான் இப்போதும் சொல்கிறேன்

“எடுத்துக் கொள்வதற்கு ஏராளமாய் மேன்மைகள் நம் குழந்தைகளிடம் இருக்கின்றன.


”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  38691590

இரா.எட்வின்

குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  9892-41
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்


பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  Empty Re: குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.

Post by உதயசுதா Sun Jun 19, 2011 10:16 am

உண்மைதான் எட்வின்.இன்னிக்கு இருக்கற குழந்தைகள் அதிகமா சிந்திக்கரங்க.படிப்பு ஒண்ணு மட்டும் போதும்ன்னு நினைக்கிறவங்க இல்லை,அதையும் தாண்டி பல விஷயமும் தெரிஞ்சுக்கரங்க,அதை பத்தி யோசிக்கிறாங்க.

சரி எட்வின் ,கிஷோரும் அவர் பிரண்டும் எப்படி இருக்காங்க?


குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  Uகுழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  Dகுழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  Aகுழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  Yகுழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  Aகுழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  Sகுழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  Uகுழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  Dகுழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  Hகுழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  Empty Re: குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.

Post by மஞ்சுபாஷிணி Sun Jun 19, 2011 3:11 pm

கண்கள் கலங்கி விட்டது. பிள்ளைகள் எத்தனை தெளிவாக சிந்திக்கிறார்கள். பேமெண்ட்ல சீட் வேண்டாம், கட் ஆஃப் கம்மியா இருக்கு..... ஆனால் வெறி மெடிசின்ஸ் படிக்கனும்னு.

கண்டிப்பா பிள்ளை தான் கண்ட கனவை சாதித்தே தீருவான், எனக்கு நம்பிக்கை இருக்கு. ஆசிகள் பிள்ளைக்கு.

எதிர்கால இந்தியா நல்முத்து வைரங்களை மட்டுமே உள்ளடக்க போகும் அற்புத பொக்கிஷமா மிளிர போகுது....

அன்பு பிறந்தநாள் வாழ்த்துகள் எட்வின். உங்க தொலைபேசி எண் இருந்தால் கூப்பிட்டு வாழ்த்து சொல்லி இருப்பேன்பா..


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  Empty Re: குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.

Post by realvampire Sun Jun 19, 2011 8:06 pm

""நான் எடுத்த மார்க்குக்கு மெடிசன் கிடைத்தால் எல்லோருக்கும் இனிப்பு
கொடுத்து சந்தோசமா படிப்பேன். ஆனா தாத்தாவோட காசுக்குத்தான் அது
கிடைக்கும்னா வேண்டாங்க""

தீர்க்கமான சிந்தனை..

பதிவை படித்ததும் மனதில் நினைத்தது:

"இந்த மாணவன் பணம் செலவு செய்து மருத்துவம் படித்திருந்தால்..
பல ஏழ்மையில் உள்ள மக்கள் பணம் செலவு இல்லாமல் பயன் பெற்று இருப்பார்களே..."
realvampire
realvampire
தளபதி

தளபதி

பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011

http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  Empty Re: குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.

Post by இரா.எட்வின் Sun Jun 19, 2011 10:58 pm

உதயசுதா wrote:உண்மைதான் எட்வின்.இன்னிக்கு இருக்கற குழந்தைகள் அதிகமா சிந்திக்கரங்க.படிப்பு ஒண்ணு மட்டும் போதும்ன்னு நினைக்கிறவங்க இல்லை,அதையும் தாண்டி பல விஷயமும் தெரிஞ்சுக்கரங்க,அதை பத்தி யோசிக்கிறாங்க.

சரி எட்வின் ,கிஷோரும் அவர் பிரண்டும் எப்படி இருக்காங்க?

மிக்க நன்றி சுதா. கிஷோர் சரியாகி விட்டான் . அவன் தேறி வருகிறான்.


”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  38691590

இரா.எட்வின்

குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  9892-41
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்


பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  Empty Re: குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.

Post by இரா.எட்வின் Sun Jun 19, 2011 10:59 pm

மஞ்சுபாஷிணி wrote:கண்கள் கலங்கி விட்டது. பிள்ளைகள் எத்தனை தெளிவாக சிந்திக்கிறார்கள். பேமெண்ட்ல சீட் வேண்டாம், கட் ஆஃப் கம்மியா இருக்கு..... ஆனால் வெறி மெடிசின்ஸ் படிக்கனும்னு.

கண்டிப்பா பிள்ளை தான் கண்ட கனவை சாதித்தே தீருவான், எனக்கு நம்பிக்கை இருக்கு. ஆசிகள் பிள்ளைக்கு.

எதிர்கால இந்தியா நல்முத்து வைரங்களை மட்டுமே உள்ளடக்க போகும் அற்புத பொக்கிஷமா மிளிர போகுது....

அன்பு பிறந்தநாள் வாழ்த்துகள் எட்வின். உங்க தொலைபேசி எண் இருந்தால் கூப்பிட்டு வாழ்த்து சொல்லி இருப்பேன்பா..

கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி சுபா. எனது எண் தெரியாதா? 9842459759


”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  38691590

இரா.எட்வின்

குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  9892-41
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்


பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  Empty Re: குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.

Post by இரா.எட்வின் Sun Jun 19, 2011 11:01 pm

realvampire wrote:""நான் எடுத்த மார்க்குக்கு மெடிசன் கிடைத்தால் எல்லோருக்கும் இனிப்பு
கொடுத்து சந்தோசமா படிப்பேன். ஆனா தாத்தாவோட காசுக்குத்தான் அது
கிடைக்கும்னா வேண்டாங்க""

தீர்க்கமான சிந்தனை..

பதிவை படித்ததும் மனதில் நினைத்தது:

"இந்த மாணவன் பணம் செலவு செய்து மருத்துவம் படித்திருந்தால்..
பல ஏழ்மையில் உள்ள மக்கள் பணம் செலவு இல்லாமல் பயன் பெற்று இருப்பார்களே..."

மிக்க நன்றி தோழா. நாத்திகரா? அப்ப நம்ம ஜாதி.


”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  38691590

இரா.எட்வின்

குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  9892-41
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்


பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  Empty Re: குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.

Post by மஞ்சுபாஷிணி Mon Jun 20, 2011 1:01 am

இரா.எட்வின் wrote:
மஞ்சுபாஷிணி wrote:கண்கள் கலங்கி விட்டது. பிள்ளைகள் எத்தனை தெளிவாக சிந்திக்கிறார்கள். பேமெண்ட்ல சீட் வேண்டாம், கட் ஆஃப் கம்மியா இருக்கு..... ஆனால் வெறி மெடிசின்ஸ் படிக்கனும்னு.

கண்டிப்பா பிள்ளை தான் கண்ட கனவை சாதித்தே தீருவான், எனக்கு நம்பிக்கை இருக்கு. ஆசிகள் பிள்ளைக்கு.

எதிர்கால இந்தியா நல்முத்து வைரங்களை மட்டுமே உள்ளடக்க போகும் அற்புத பொக்கிஷமா மிளிர போகுது....

அன்பு பிறந்தநாள் வாழ்த்துகள் எட்வின். உங்க தொலைபேசி எண் இருந்தால் கூப்பிட்டு வாழ்த்து சொல்லி இருப்பேன்பா..

கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி சுபா. எனது எண் தெரியாதா? 9842459759

நாளை காலை உங்களை கால் செய்து விஷ் பண்றேன்பா.... திருமணம் நல்லபடி நடந்ததா? உங்க வலைதளம் வந்தேன் திருமண அழைப்பிதழ் பார்த்தேன். எல்லோரும் வீட்டில் சௌக்கியம் தானே எட்வின்?


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  Empty Re: குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.

Post by realvampire Mon Jun 20, 2011 1:41 am

"மிக்க நன்றி தோழா. நாத்திகரா? அப்ப நம்ம ஜாதி."

என்ன சார்?
ஜாதி எல்லாம் இல்ல சார்..
6-அறிவு உயிரினம் அவ்வளவுதான்...
realvampire
realvampire
தளபதி

தளபதி

பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011

http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  Empty Re: குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.

Post by இரா.எட்வின் Mon Jun 20, 2011 8:59 pm

realvampire wrote:"மிக்க நன்றி தோழா. நாத்திகரா? அப்ப நம்ம ஜாதி."

என்ன சார்?
ஜாதி எல்லாம் இல்ல சார்..
6-அறிவு உயிரினம் அவ்வளவுதான்...

ஜாதின்னா வர்க்கம் என்றும் பொருள் கொள்ள வேண்டும் தோழர்


”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  38691590

இரா.எட்வின்

குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  9892-41
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்


பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.  Empty Re: குழந்தைகள் எப்போதும் தவறாய்ப் பேச மாட்டார்கள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum